Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-053  (Read 1310 times)

April 14, 2025, 04:57:10 pm
Read 1310 times

RiJiA

கவிதையும் கானமும்-053
« on: April 14, 2025, 04:57:10 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-053


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: April 14, 2025, 07:37:28 pm by RiJiA »

April 14, 2025, 10:06:51 pm
Reply #1
Re: கவிதையும் கானமும்-053
« Reply #1 on: April 14, 2025, 10:06:51 pm »
 
TITTLE CARD - - >  ஒரு சிறுமி

இது ஒரு போர் களம் அல்ல,
இது ஒரு கனவின் உடைந்த சுவர்,
ஒரு குட்டிச் சிரிப்பு சிதறிய காட்சி.

கையில் மெத்தமான பழைய பொம்மை.

அவள் பேசவில்லை,
அவளது பார்வை பேசுகிறது.

அவளின் கண்கள் நிஜத்துக்கும், கனவுக்கும் இடையே ஒரு பாலம் போடுகின்றன.
அவள் கண்கள் எங்கும் தேடுகின்றன.

கண்ணுக்கு எட்டிய வரை காற்றின் சத்தமே
காற்று ஒரு கதை சொல்வது போல வீசுகிறது,

அவளது முடி சுழல்கிறது,
கண்கள் ஓரம் வெறுமை,
இதழோரம் முணுமுணுக்கும் வார்த்தைகள்,

"சட்டென அந்த காற்று அவளது அமைதியை தத்தெடுத்துக் கொண்டன"

மேகம் தாக்கும் சத்தம் கேட்கிறது

மழை பெய்யத் தொடங்குகிறது.

சிறுமி தன்னிடமிருக்கும் குட்டி பொம்மையால்  தலையை மறைக்க முயல்கிறாள்.

பின்புறம் நகர்கிறாள்

ஒரு வட்டத் தோணியில் தண்ணீர் தேங்கி இருக்க,

இருந்தது ஒரு அழகியல்
தெரிந்தது ஒரு மெய்யியல்

அந்த நீரின் எதிரொளிப்பில்

அம்மாவின் கை..
அப்பாவின் கரம்...
அவ்ளோ நடுவில் தவழ்கிறாள்

சொட்டு சொட்டாக விழும் மழை நீரும் அந்த அழகியலை அழிக்க முடியவில்லை

மழையின் மொழியை  புரிந்த அந்த சிறுமி பேசுகிறாள்,

"மழை என் மேல் விழும் ஒவ்வொரு துளியும்,
என் வாழ்க்கையின் பக்கங்களை வாசிக்கிறது போல இருக்கிறது.

சில பக்கங்கள் அழிந்து விட்டன,

சில இன்னும் வாசிக்கப்படவில்லை…

அம்மா... நீ சொன்னது போல, மழை வரும்போது
துயரம் கழுவிக் கொண்டு விடுமா?


நான் கண்ணீரை மறைக்கிற மழையாய் வாழ்ந்து விட்டேன்.

அப்பா சொன்னாரு,

கனவு காண் அது புதுமையானது

இப்ப கனவே வாழ்க்கையானது"

ஒரு கனவு சிதைந்தது,
ஒரு நிழல் கரைந்தது.
வழி தெரியாத சாலையில்,
வாசல் தெரியாத வீடு போல.


அவள் கையை நீட்டி
நீரில் கையை பதித்து
பொம்மையை மெதுவாக தண்ணீரில் விடுகிறாள்.

அது மிதக்கிறது... மெல்ல மாறுகிறது...
பொம்மை அல்ல...
அவளே...

கனவு ஒரு தடமாக மாற,
நிழல் தான் நிஜமாய் மாற,
சுழலும் உலகம் சொல்லுதே...
சிறுமி," நீ தான் நாளைய ஒளி"
« Last Edit: April 14, 2025, 10:19:49 pm by புகழ் »

April 16, 2025, 02:29:14 pm
Reply #2

Limat

Re: கவிதையும் கானமும்-053
« Reply #2 on: April 16, 2025, 02:29:14 pm »


என் மீதான உங்கள் அன்பு தீர்ந்துவிட்டதோ...


விதியின் விளையாட்டால் ஒற்றை பூ மரமாய் தனித்து நிற்கிறேன்...

நிழலில் இளைப்பாற கிளிகள்
கூட வரவில்லை துணையென...

ஆகாயம் பார்த்த
பூமியாய் வளர்ந்து நிற்க...

இன்னல்கள் ஆயிரம் கண் முன்னே தோன்றி மறைய....

துணையென நான் இருக்கிறேன்
என்று ஒற்றை பொம்மை மட்டுமே என் கையில்....

என் விழியோரம் வழிந்த கண்ணீர்
குளத்தில் பிம்பமொன்று தோன்றியது....

அதில் என் தாய் தந்தையின் கரங்களுக்கு நடுவே நான் நடை பழகிய காட்சி....

அது ஒன்று மட்டுமே இவ்வுலகில் நான் பிறந்ததற்கான சாட்சி....

தென்றல் சில நேரம்
சூறாவளி சில நேரம்...

மாறி மாறி வீசி கொண்டு
இருந்த என் வாழ்வில்...

மேக மோதலில் மின்னி
மறையும் மின்னலை போல...

இன்று என்னைவிட்டு
பிரிந்துவிட்டார்கள் எனது பெற்றோர்கள்..

மேகத்தில் ஒளிந்திருக்கும்
மழைத்துளி போல...

நீங்கள் என்னுடன் என்றும் இருப்பீர்கள்
என்று நம்பினேன்...

நீங்கள் பிரிவது
முன்பே தெரிந்திருந்தால்...

பிறக்கவே
யோசித்திருப்பேன் கொஞ்சம்...

இமைக்கும் விழிகளின்
முன்னே நீங்கள் வராததால்...

நான் உங்களை மறப்பேன்
என்று நினைத்தீர்களோ...

விழிகளின்
பார்வைக்குத்தானே விருந்தில்லை...

உங்கள் நினைவுகள் பதிந்த
என் இதயத்தில் என்றும் விருந்துதான்...

ஆயிரம் கனவுகள்
எனக்கு தந்துவிட்டு...

நீங்கள் பிரிந்து சென்ற
மாயம்தான் என்னவோ...

என்மீதான உங்கள்
அன்பு தீர்ந்துவிட்டதோ...

கன்னத்தின் வழியே
வடிந்து செல்லும்...

என் கண்ணீர் மட்டும்
இன்னும் தீரவில்லை எனக்கு....

என்றும் உங்கள் நட்பின் பிம்பமாய் நான் உங்கள் தமிழ்......

April 19, 2025, 06:47:58 am
Reply #3
Re: கவிதையும் கானமும்-053
« Reply #3 on: April 19, 2025, 06:47:58 am »
Title : எஞ்சிய நம்பிக்கை 💫


வானம் கருகிச் சிவந்த நேரம்,
புகை மண்டலம் சூழ்ந்த ஊரின் ஓரம்.
அழிவின் தாண்டவம் ஆடி ஓய்ந்த பின்னும்,
எஞ்சிய மௌனம் ஒரு பெரும் சோகம்.

உடைந்த சுவர்கள், கூரையிழந்த வீடுகள்,
காலத்தின் கோரப் பற்கள் பதித்த தழும்புகள்.
ஒரு காலத்தில் சிரிப்பும் கும்மாளமும் ஒலித்த இடம்,
இன்று கண்ணீரும் பெருமூச்சும் கேட்கும் களம்.

அந்தப் பாழடைந்த தெருவின் நடுவே,
சிறுமி ஒருத்தி தனித்து நிற்கிறாள் இடுவே.
தோளில் ஒரு கந்தல் பொம்மை சாய்ந்திருக்க,
விழிகளில் இழந்த காலத்தின் நிழல் படர்ந்திருக்க.

அவள் பாதங்களின் கீழே தேங்கி நின்ற நீர்,
கடந்த காலத்தின் கண்ணீர்த் துளிகளின் எதிர்.
அதில் தெரியும் தலைகீழ் உருவங்கள் மூன்றும்,
அவள் இழந்த உறவுகளின் மௌனமான கூக்குரல் போலும்.

அந்த உருவங்களின் கைகள் ஒன்றோடொன்று பின்னி,
ஒரு காலத்தில் இருந்த அன்பின் பிணைப்பைச் சொல்லி.
இப்போது அந்தப் பிணைப்பு அறுந்து போன சோகம்,
சிறு நெஞ்சில் ஒரு ஆறாத ரணமாக ஊறும்.

வானில் இன்னும் கரிய மேகங்கள் திரண்டு,
அச்சத்தின் நிழலை நீட்டிப் பயமுறுத்தக் கூடும்.
சுற்றியுள்ள தீயின் எச்சங்கள் இன்னும் கனன்று,
நினைவுகளின் வலியை அவ்வப்போது உயிர்ப்பிக்கலாம்.

ஆனால் அந்தச் சிறுமியின் கண்களில் ஒரு ஒளி,
தோல்வியடையாத மன உறுதியின் தெளிவு.
இடிபாடுகளின் ஊடே மெல்ல முளைக்கும் புல் போல்,
மீண்டும் ஒரு வாழ்வு மலரும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை போல்.

அவள் சின்னஞ்சிறு கைகள் இன்னும் திறந்தே,
அன்பையும் அரவணைப்பையும் ஏந்தத் துடிக்கலாம்.
உடைந்த உலகைச் சேர்த்து மீண்டும் கட்டும் கனவு,
அவள் தூய மனதில் ஆழப்பதிந்து இருக்கலாம்.

இந்தக் கோரமான அழிவின் சாட்சியாய் நிற்கும் அவள்,
வெறும் குழந்தை மட்டுமல்ல, ஒரு வலிமையின் கவிதை.
நாளை விடியும், புதிய உலகம் பிறக்கும் என்ற
உறுதியான நம்பிக்கையின் உயிருள்ள சாவி.

The end 💫

Moral of the kavithai

முடிவில், இந்த கவிதை வெறும் சோகத்தின் பதிவல்ல, மாறாக அந்தச் சிறுமியின் கண்களில் மின்னும் நம்பிக்கையின் கீதம். அவளே புதிய உலகத்திற்கான விடியலின் அடையாளம், இருளுக்குப் பின் ஒளி வரும் என்ற உறுதியின் சின்னம்.

Focus on hope…always peace ✌️
Harry Potter ❤️


April 20, 2025, 10:15:07 am
Reply #4

iamcvr

Re: கவிதையும் கானமும்-053
« Reply #4 on: April 20, 2025, 10:15:07 am »
தரையில் என் கால் பெரிதாய் தொட்டதில்லை
அம்மாவின் மடியிலோ,
அப்பாவின் தோளிலோ தான்,
மாறி மாறி கிடந்திருக்கிறேன்.

இப்போது
நான் தரை தொட்டு நிற்கிறேன்.
அம்மாவின் மடியும், அப்பாவின் தோளும் என
என் உலகத்தை தொலைத்து விட்டு
வேறேதோ உலகத்தில்
தரை தொட்டு நிற்கிறேன்,
தனியாய் நிற்கிறேன்.

என் உலகத்தை பறிக்க இவ்வுலகத்தாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
அம்மா சொல்லியிருக்கிறார், யாரோ கடவுளாம், கஸ்டம் வந்தால் பார்த்துக்கொள்ளுவாராம்.
நானும் தேடிக் களைத்துவிட்டேன்
காணவில்லை.

என் முன் பற்றி எரிகிறது உலகம்,
என்னோடு ஒளித்து பிடித்து விளையாடும் என் நண்பர்கள், கடைசியாக ஒளித்தவர்கள் தான், காணவில்லை.
ஊரெல்லாம் எனைத்தூக்கி திரிந்த என் உறவினர்கள்,
இப்போது அவர்களை யாரோ தூக்கிச் செல்கிறார்கள்.

யார் யாரோ சண்டைக்கு
என் வாழ்வை அழிக்கிறார்கள்.
ஓரிரு தலைவர்களுக்குள்
சண்டையென்றால்
அவர்களே முட்டி, மோதி, பலியானாலும் பரவாயில்லை, தீர்வு காணக்கூடாதா?

இங்கே அவர்களெல்லாம்
உயர் பாதுகாப்பில்
இருக்க என்னை போன்றவர்கள் உயிர் மட்டும்
உத்தரவாதம் இல்லாமல் அலைகிறதே

அம்மா சொன்ன கடவுளைப்பற்றி
இங்கு ஒருவரிடம் கேட்டேன்.
அளவிலா சக்தி கொண்டவராம்,
வேண்டியதெல்லாம் கொடுப்பாராம்,
அவரை காணமுடியாதாம்,
உணரமட்டும் தான் முடியுமாம்.

அவராலும் எங்களை காணமுடியாதா?
உணர முடியாதா?
யார் யாரோ தலைவர்களை போல
அவரும் உயர் பாதுகாப்பில்
உறங்கிக்கொண்டிருக்கிறாரோ?

வாழ்ந்த விதத்தை வைத்து
இறப்பின் பின் நல்லவர்களுக்கு சொர்க்கம், கெட்டவர்களுக்கு நரகம் எல்லாம் கொடுப்பாராம்.
வாழும் போதே அதை கொடுக்கலாமே, வக்கற்ற கடவுள் போலும்.

அவரால் இயலாதென்றால், 
அவ் அனைத்து சக்திகளையும் என்னிடம் கொடுக்க சொல்லுங்கள்.
நான் மக்களோடு மக்களாய் நின்று பார்த்துக்கொள்கிறேன், 
வாழும் போதே சொர்க்கத்தையும்
நகரத்தையும் தருகிறேன்.
அவர் உறங்கட்டும்.

April 26, 2025, 08:51:49 am
Reply #5

Eagle 13

Re: கவிதையும் கானமும்-053
« Reply #5 on: April 26, 2025, 08:51:49 am »
வெள்ளைப்பூக்களை தேடும்
வெள்ளந்தியான
மனம்!
உயிரோடு இருந்தும் நானோ
 இங்கு நடமாடும்
பிணம்!
காலம், ஏனோ?
என் மேல் கொண்டது
சினம்!
உறவுகளை தேடும் என் வாழ்வில்
ஒவ்வொரு நொடியும் நெஞ்சில்
பெருங்கணம்!
என் உரிமைகளை பரித்ததற்கு
யார் தருவார் அதை மீண்டும் பெறும்
வரம்!
ஏன் இங்கு போர் மூண்டது?
என் வாழ்க்கை இப்படியாகும் என
யார் கண்டது.
பண்ணாட்டு தலைவர்கள்
பலகாலமாக போரடியும்
என் நிலைநாட்ட முடியவில்லை
உலக அமைதி?
பன்னாட்டு குழு அமைந்தும்
பண்பாடுகள் பல நிறைந்தும்
இன்றும் போர் தோன்றினால்
என்னதான் மக்களின் கதி?
இன்றளவில்,
உலகில் பெரும்பாலும் நாடுகளில்
நடப்பது மக்களாட்சி!
இப்படி நடந்தால் அதற்கு என்ன தான்
சாட்சி!
அடிக்கடி நாம் காண்கிறோம்
வலிகளுடனான காட்சி!
பட்டும் புரியவில்லை போரின்
விளைவுகள்!
மக்களின் பாதுகாப்பிற்கு இன்னும்
எத்தனை தொலைவுகள்?.
விடை தெரியாமல்!.

May 05, 2025, 11:09:06 am
Reply #6

Misty Sky

Re: கவிதையும் கானமும்-053
« Reply #6 on: May 05, 2025, 11:09:06 am »
"போர் - ஈரெழுத்தில் கோரமான ஒரு சொல்"
"போர், போர் என்பது வெறும் ஈரெழுத்து சொற்கள் அல்ல, அது ஆயிரமாயிரம் குடும்பங்களின் இதயத்தை துளைத்து,
அவர்களின் சந்தோஷத்தையும், எதிர்காலத்தையும் சிதைத்து, பல அப்பாவி உயிர்களை விழுங்கும் ஒரு கோர நிகழ்வு"
"போரின் கொடிய கோரப்பிடியில் சிக்கி உயிர் நீத்த பல்லாயிரக் கணக்கான அப்பாவி உயிர்களுக்கு என் மனதின் கனத்த வலியின் சுமையோடு இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்"

"யுகம் யுகமாய் போர், யுத்தத்தின் நிழல் நீள்கிறது"
"குருதியில் கண்ணீரின் துளிகள் வழிகிறது"
"குருதி தோய்ந்த மண்
கதறி அழும் வானம்
வெட்டுண்ட உடல்கள்
சாம்பலான கனவுகள்"

"போர் என்றால் இழப்பு,
அப்பாவி மனித உயிர்களைப் பறிக்கும் கொடிய பிடிப்பு"
"போர் வன்முறையின் உச்சம்,
குருதி தெறிக்கும் யுத்தம்,
பல உயிர்களை விழுங்கும் அச்சம்"
"காலம் கரைந்த போர், மக்களின் கதறல் ஓலம்,
"அன்பான கரங்கள் துண்டான கோலம்"

"போர்க்களம் இரக்கமும், கருணையும் இல்லாத ஒரு மனசாட்சியற்ற கொலைகளம்"
"அங்கே எத்தனை உயிர்களின் பலி,
" அங்கே எத்தனை குடும்பங்களின் சிதைவு"
"அமைதி தொலைந்தது அங்கே
போரின் கூச்சல் மட்டும் அங்கே
இதில் மக்களின் அமைதி நிலை எங்கே?"
"அமைதியின் கீதம், போர் முரசின் ஒலியில் மறைந்தது"
"அன்பின் மொழிகள், ஆயுதங்களின் இரைச்சலில் அழிந்தது"

"சரித்திரப் பக்கங்கள், செங்குருதி கதைகள் பேசும்"
"செங்குருதி ஆறுகளும்,
செதுக்கிய வேதனைச் சாலைகளும்"
"தலைமுறை தலைமுறையாய் தொடரும் சாபத்தின் நிழல்,
"நீண்ட போரின் வடு, நெஞ்சில் ஆறாத காயம்,
"தலைமுறை தாண்டியும், தொடரும் துயர மாயம்"
"மண்மேல் விழுந்த குருதி துளிகள் விண்ணை எட்டும் கண்ணீர் துளிகள்"
"குருதி தோய்ந்த போர்க்களத்தின் காட்சி இது,
"மனிதாபிமானம் தொலைந்த கொடுமையின் சாட்சி இது"

"வெடித்த குண்டுகளின் பேரிரைச்சல் காதைப் பிளக்கிறது,
"அன்னையின் அலறலும், சேயின் அழுகையும் மனதை உலுக்குகிறது"
"வெடித்த குண்டுகளின் தீயில் கருகும் தேகம்,
"துண்டான அங்கங்கள், மரணத்தின் கோர வேகம்"
"வெடித்த குண்டுகளின் ஓசை ஓய்ந்தாலும், அழுகையின் எதிரொலி மட்டும் ஓயவில்லை"

"எரிந்த நிலங்களும், இடிந்த வீடுகளும் சாட்சி,
"மௌனத்தின் மொழியில், மரணத்தின் ஓலம் காட்சி"
"கிராமங்களும், வயல்வெளிகளும் எரிந்தன"
"நகரங்களும், கோட்டைகளும் சரிந்தன"
"பல உயிர்கள் மண்ணுக்குள் புதைந்தன"
"வாழ்வுகள் தொலைந்தன"
"கனவுகள் அழிந்தன"
"மனிதனின் வாழ்க்கை இருளில் சிதைந்தன"
"அன்னையின் மடியில் உயிர்கள் உதிர்ந்தன"
"இதயத்தின் ஆழத்தில் ஆறாத ரணங்கள் எழுந்தன"
"தந்தையின் மனதில் தாங்காத துயரத்தின் வலி"
"குழந்தைகளின் கண்களில் மரணத்தின் பயம்,
"குழந்தைகளின் கண்கள், கேள்விகள் கேட்கின்றன,
"ஏன் இந்த போர்? ஏன் இந்த அழிவு?என்றே கேட்கின்றன"
"குழந்தைகளின் விழிகளில், கேள்விக்குறிகளின் கூட்டம்,
எப்போது முடியும் இந்த ஓட்டம்?"
"குழந்தைகளின் விழிகள், தொலைந்த சிரிப்பைத் தேடும்"
"அன்னையின் கரங்கள், அணைக்க யாருமின்றி வாடும்"
"தந்தையின் மனதில், தாங்க முடியாத பாரம்"
"எதிர்காலக் கனவுகள், உடைந்த கண்ணாடிச் சாரம்"
"கோட்டைகள் மாறலாம், கொடும் வலி மாறாது"
"தாயின் கண்ணீரும், தந்தையின் சாபமும் தீராது"

"எப்போது இந்த வேதனை தீரும்?"
"எப்போது கருணையின் கரம் நீளும்?"
"இந்தக் கோரமான கோலம் என்றும் மாறாதா?"
"அன்பும் கருணையும் மீண்டும் துளிர்க்காதா?"
"போரின் வெறி அடங்கி அமைதி நிலவுமா?"
"துண்டான கரங்கள் மீண்டும் இணையுமா?"
"குருதி தோய்ந்த பூமியில் அமைதி மலருமா?"
"வெறுப்பின் சுவர்கள் இடிந்து விழுமா?"
"அன்பின் கரம் கோர்க்கும் காலம் வருமா?"

"தலைமுறைகள் கடந்தும், தழும்புகள் ஆறவில்லை"
"போரின் பேய் நிழல், பூமியை விட்டு அகலவில்லை"
"எரிந்த சாம்பல் மேடுகளும்,
சரிந்த கோட்டைகளும் என்றும் மறப்பதில்லை"
"இன்னும் கேட்கிறது, இதயத்தின் ஆழத்தில் ஒரு குரல்,
"அமைதி வேண்டும், அன்பின் அரவணைப்பில் ஒரு புது விடியல் வேண்டும்"
"ஆனாலும், அன்பெனும் ஒரு தீபம், அணையாமல் எரிகிறது"
"அமைதியின் நம்பிக்கை இதயத்தில் துடிக்கிறது"
"அமைதிக்கான ஏக்கம், இதயத்தில் ஆழமாய்ப் பாய்கிறது"
"நம்பிக்கையெனும் ஒரு மெல்லிய கீற்று, இருளில் ஒளிரும்"
"அமைதிக்கான ஒரு மெல்லிய ஆசை, நெஞ்சில் துளிரும்"
"ஒரு புதிய விடியல், அன்பின் கதிர்களுடன் வரும்,
"அன்பின் கரங்கள் நீட்டுவோம்"
"புதிய உலகை அன்பால் படைப்போம்"
"குருதி தோய்ந்த பூமியைத் துடைப்போம்"
"கண்ணீரைத் துடைத்து புன்னகை பூப்போம்"

"போரின் சூழல் உடையட்டும், சமாதானம் மலரட்டும்"
"சமாதானத்தின் வெள்ளைக்கொடி பறக்கட்டும்"
"வெறுப்பின் கார்மேகம் விலகட்டும்"
"மனிதநேயம் வெல்லட்டும், மனங்கள் மாறட்டும்"
"அன்பின் கரம் நீளட்டும், வெறுப்பின் சுவர் உடையட்டும்"
"அன்பும், கருணையும் உலகை ஆளட்டும்"
"போரின் கொடுமை ஒரு கனவாக மாறட்டும்"
"நீண்ட போரின் வடு, மெல்ல மெல்ல மறையட்டும்"
"யுகம் யுகமாய் அமைதி, பூமியில் தங்கட்டும்"
"அமைதியின் கீதம் ஒலிக்கட்டும், புதிய விடியல் பிறக்கட்டும்"
"அமைதியின் ராகம் இசைகட்டும், உடைந்த மனதை இணைக்கட்டும்"
"மனிதனின் மனதில் சந்தோஷம் என்றும் நிலைக்கட்டும்"
"இறந்தவர்களின் நினைவில் கண்ணீர் துடைப்போம்"
"அன்பால் அமைதியான புது உலகை உருவாக்குவோம்"

"உலகெங்கிலும் போர்கள் ஒழிந்தட வேண்டும்"
"மனிதகுலம் மகிழ்ச்சியாய் வாழ்ந்திட வேண்டும்"
"அன்பும், கருணையும் உலகெங்கும் ஒளிர்ந்திட வேண்டும்"
"புதியதாய் ஒரு புது விடியல் பிறந்திட வேண்டும்"

"நம்பிக்கையோடு என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு
உங்கள் MISTY SKY 💙💙
« Last Edit: May 07, 2025, 01:45:54 am by Misty Sky »

May 05, 2025, 03:05:54 pm
Reply #7

Thendral

Re: கவிதையும் கானமும்-053
« Reply #7 on: May 05, 2025, 03:05:54 pm »
கனவும்.. வருங்காலமும்.. நானும் ...

சிறு கிள்ளையாய் நானும் ...கையில் என் பொம்மையும் ...
வழி தவிறிய கனவின் கொடூர வீதியிலே ...
இது கனவாய் இராதோ ...
பதறி எழுகிறேன் ஒவ்வொருநாளும் ...
அய்யோ இக்கனவு தான் கலையாதோ ....!!!

இறையே உன் செவிகளில் விழாதோ ....என் கூக்குரல்
கொடிய கனவில் திடுக்குற்று தனியே நான் ...
இல்லை இல்லை கையில் என்னுடன் என் பொம்மையும் கூடவே ...
அய்யோ இக்கனவு தான் கலையாதோ ....!!!

நிஜத்தில் என்னை உயிர்பித்தவர்களும்...
 கனவில் இப்புகை மண்டலமும் -நித்தமும்
என்னை இருவேறு உலகில் நான் காண ...
அய்யோ இக்கனவு தான் கலையாதோ ....!!!

 ஆயிரம் ஆசைகளுடன் அன்னை தந்தையின் கரம் பற்றி...நான் !!
 நாளைய உலகில் சாதனை பல படைக்க... என் உளியானவர்கள் !!
கற்பனைக்கடங்கா வன்முறையின் உலகின் மிச்சமாய் இதோ நான் ...!!
அய்யோ இக்கனவு தான் கலையாதோ ....!!!

கனவாய் ஆகாதோ மீண்டும் உறங்கி எழ முயல்கிறேன் நான் ..
அய்யோ இக்கனவு தான் கலையாதோ ....!!!

வன்முறை ..வெடிகுண்டின் புகையாய் என் ஒரு கண்ணில்...
 பயம் ...பரிதவிப்பின் பிம்பமாய் என் மறு கண்ணில் ...
கைகளும் தேடுதே பற்றியிருந்த என் பெற்றோரின் கரத்தை ..!!!
அய்யோ இக்கனவு தான் கலையாதோ ...!!!

கண்முன்னே பற்றியெரியும் போரின் கொடிய கோரப்பற்கள்...
 வழி தவறிய புள்ளிமானாய் கண்ணீர் வற்றிய என்கண்கள்...
 அன்னையின் அணைப்பில் தந்தையின் நிழலாய்...நினைவுகள்
 போகும் பாதை.. பார்க்கும் தூரம் வரை அச்சுறுத்தும் ஆகாயம்...
அய்யோ இக்கனவு தான் கலையாதோ ...!!!

தொலைந்தது நானா..
 தொலைத்தது என் வரும்காலமதையா...
 அய்யோ இக்கனவு தான் கலையாதோ...!!!

கடக்கும் ஒவ்வொரு நொடியின் கனமும்
தாங்க இயலாத பச்சிளம் பிள்ளையாய்.. வழியறியா.. நான் ..
என் கண்ணில் தங்கள் கனவை கண்ட ...என் பெற்றோர் எங்கே ...??
இந்த புகை மண்டலமால் என் கண்ணீரில் கரைந்து தான் போனார்களோ ...
அய்யோ இக்கனவு தான் கலையாதோ...!!!

 வருங்காலம் நான் காணும் முன்னே
இத்தேசம் சாம்பலாகிடுமோ...???
 இத்தேசம் எனக்கானதும் தானே ...
இந்த பூமி நமக்கானதும் தானே...
அய்யோ இக்கனவு தான் கலையாதோ...!!!

 மனிதம் போற்றி .. நம் வாழ்வு சிறக்க
 மனமில்லா இதயங்களின் ...கொடூரத்தின்
 மிச்சமாய் இதோ... நான்
அய்யோ இக்கனவு தான் கலையாதோ...!!!!

அழகிய இந்த பூமி எனக்கானதே...ஆம் நமக்கானதே ....
இப்பூமியை பேணி ...பாதுகாப்பாய்... நாம் வாழ
வன்முறை ஒழிய ...வாழும் வழி தெரிய ...கனவு மெய்ப்பட
மனிதம் போற்றி... அன்பால் புதிய உலகு செய்வோம்...👍

 வா இவ்வுலகம் என்னுடையது....
 வா இவ்வுலகம் நம்முடையது....
 வன்முறையில்லா... போட்டியில்லயா... வஞ்சனையில்லா ...
அழகிய பூமி...💕
 நம் தாய் பூமி...💕
 நம் பூமி ...💕

என்றும் மனிதம் காப்போம்💝

இப்படிக்கு என்றும்... தென்றலாகிய💕 நான்💕 ...