Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-052  (Read 773 times)

March 10, 2025, 02:51:12 pm
Read 773 times

RiJiA

கவிதையும் கானமும்-052
« on: March 10, 2025, 02:51:12 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-052


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.




மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: March 10, 2025, 07:22:06 pm by RiJiA »

March 11, 2025, 08:29:33 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-052
« Reply #1 on: March 11, 2025, 08:29:33 am »

என் அம்முவின் மனதை அறிந்த நான்
அவளின் மௌன மொழியுடன் எனது கவிதை வரிகளும் சேர்ந்து சமர்பிக்கிறோம் நமது GTC யின் கவிதையும் காணமும் நிகழ்ச்சிற்க்காக..


                           நிலவாகியவனே...


வான கருங்கடலில் நீந்திக்கொண்டிருக்கும்
மேகமீன்கள் ...
அதில்
முத்தென முளைத்திருக்கும் நட்சத்திரத்தை ...
தென்றலோடு கோர்த்து மாலையாக்கினேன்
நிலவே உனக்காக அணிவிக்க...
முழுதாய் முகத்தை கண்டதும்
முழுநிலா கரைய தொடங்கியது...
என்னுள்  தொலைய தொடங்கியது ...

மதியின் மனம் யார் அறிவது?
அதன் தனிமை யார் உணர்வது ?

நிலவுக்கு என் பெயரா.?
எனக்கு நிலவின் பெயரா.?

நிலவுக்கு தனிமை கற்றுக்கொடுத்தது நானா.?
என் காவலன் நிலவா.?
இருவரில் யார் அழகு.?
இருவரின் காத்திருப்பு
யார் வருகைக்கு.?

பகலில் நான் எதிரில்
நிலாவே நீ மறைவில்...
இரவில் நிலவே நீ வானில்
நானோ கனவில்...

என் கோபக்கனலை அணைக்கும் குளிர்தன்மையன் என் மாமனே..

என் தனிமை போக்க நிலவாக என்னுடனே பயணிக்கின்றானோ என் மாமன்..

எனை அழகாக்க தன்னொளியில் என்
மேனியில் நட்சத்திரங்களை பதித்தவன்..

இரவெல்லாம் எனக்காக விழித்திருப்பவன்
என்னறையில் ஊடுருவல் புரிந்த வெண்கதிரோன்..

என் அந்திகாவலன்...
என் ஆருயிர் மாமனே..

March 11, 2025, 12:31:30 pm
Reply #2

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-052
« Reply #2 on: March 11, 2025, 12:31:30 pm »
நிலவின் பிரதிபலிப்பில் அவள்

அழகிய இரவில் நிலவின் ஒளியில்
அமர்ந்து நிலவை ரசிக்கும் மறு நிலா!

கருநீல வானத்தில் ஒளிரும் வட்ட நிலா
வானத்தை இரவில் ஒளிரச் செய்கிறது.

அவள் வந்ததும் எனது வாழ்க்கை ஒளிர்ந்தது போல
அவள் வந்ததும் வசந்தம் எனது வாழ்வில் நட்சத்திரமாய் மின்னியது.

பாலை போல இருக்கும் நிலவே
இரவையும் பகல் போல ஆக்குகிறாய்!

எனது வாழ்க்கையில் அவள் மாற்றியது போல …

நிலவின் மகளே  எனது மனதை கொள்ளையடித்த என்னவளே
உன்னையும் நிலவையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

எனக்கு ஒரு சந்தோகம்: நீ நிலவை ரசிக்கிறாயா?
இல்லை, நிலவு உன்னை ரசிக்கிறதா?

அழகின் அரசியே, உன் முகத்தில் நான் கண்டா
முகப்பரு அப்பொழுதுதான் புரிந்தது நிலவுக்கும் பாரு உண்டு என்று...

மின்னும் நட்சத்திரங்கள் இரவுக்காக காத்திருக்கும் நிலவை காண அல்ல,
நிலவை காணவரும் என்னவளை காண என்று !

இரவில் வரும் நிலவுக்கு வெளிச்சம் தருவது சூரியன் என்று நினைத்தேன்,
ஆனால் இன்றுதான் புரிந்தது என்னவளின் முகத்தின் ஒளி என்று!

தேய்பிறையும் வளர்பிறையும் இல்லாத நிலவின் மகளே,
நிலவும் பொறாமைப்படும் உனது அழகினை கண்டு…

உன்னை ரசிப்பது நிலவு மட்டும் அல்ல, நீ
அமர்ந்திருக்கும் இருக்கையும் தான்…

ஒரு சில நொடி உன்னை சுமக்கும் இருகைக்கு,
எவ்வளவு ஆனந்தம் என்றால்,

வாழ்நாளெல்லாம் உன்னை சுமக்கும் எனது
ஆனந்தத்தை சொல்ல வார்த்தை இல்லை, பெண்ணே...

இரவுக்கு நிலவழகு எனக்கு அவள் அழகு.
 


நீலவானம்

March 14, 2025, 10:21:52 pm
Reply #3

Wings

Re: கவிதையும் கானமும்-052
« Reply #3 on: March 14, 2025, 10:21:52 pm »
அமைதியான இரவு நேர வேளை

என் குழம்பிய மனநிலையோடு நிலவை நோக்கி புன்னகைக்க

நிலவும் என்னை நோக்கி    பதிலளித்தது அதன் புன்னகையோடு

அட பேதையே
இங்கே நீ தனியே இல்லை

நீயும் நானும் ஒரே ஜாதி தான் என்று
 
பின் நான் நிலவை நோக்கும் போது அதில் என்னை கண்டேன்

அழகிய காடுகளைப் போன்ற நிலவு   காட்சி அளித்தது

மனிதனுக்கு அது தரும் வெளிச்சம் பிரதிபலன் பாராதது

நிலவு மின்னும் மின்மினிகள் நடுவே நிற்கிறது அதன் ஒளியால்

நிலவும் நானும் ஒன்று

தேய்கிறேன் என் கவலையில்
ஒளிற்கிறேன் என் புன்னகையில்

நான் நிலவிடம் கேட்டேன்

சூரியனுடனான உன் பிரியமான காதல் எவ்வாறென்று

இருவரும் சந்திக்கும் நேரம் வேறு
ஏன் சந்திப்பு ஒரே நேரமில்லை என்று

அதற்கு நிலவு சொன்னது

அவன் மயக்கும் பார்வையை சந்திக்கும் துணிவின்றி நான் மறைகிறேன் என்று

நான் மட்டுமல்ல
 
அவனும் அவ்வாறே

என் வெண்ணிற அழகினை அவன் வெப்பம் சுட்டுவிடும் என்று மறைகிறான் எனக்காக

நான் சிந்தித்தேன் எவ்வாறு நானும் நிலவும் ஒன்று என்று

பிறகு என் சிந்தையில் எட்டியது

அவன் இருக்கும் இடத்தில் நான் இருந்தால் போதும்
அவன் மனதை வெல்ல ஆசை இல்லை

என் காதலை எண்ணியே ஆனந்தம் அடைகிறேன்

நிலவும் நானும் ஒன்று என்று


அந்த இருண்ட இரவில் நான் ஒரு நண்பனை கண்டேன்

என் இதயத்தின் ஒரு துண்டை பிடித்து வைத்திருந்த நிலவாகிய அவளை.

நிலவும் நானும்

பூமியிலிருந்து வானத்தை நோக்கி,
முடிவில்லாத ஒரு கதை.

March 18, 2025, 09:19:26 pm
Reply #4

Isha003

Re: கவிதையும் கானமும்-052
« Reply #4 on: March 18, 2025, 09:19:26 pm »
என்னவனே !
என் இனிய காதலனே !
ஒரு தசாப்த காதலை சில வரிகளில் சொல்ல துணிந்தேன் !
சார் இல் அறிமுகம் ஆகி
என் அத்தனையும் ஆன அழகனே !
நிலவின் துணையோடு நாம் செய்த நடை பயணங்கள்
அர்த்தமின்றி நாம் செய்த தர்க்கங்களை எனக்கு
இன்னும் மிச்சமின்றி நினைவூட்டுகிறது !
ஒரு முழு நிலா நாளில்
திடீரென நீ உரைத்த காதலை
உணர முடியாமல் அடைந்த திகைப்பை இந்த நிலா எனக்கு நினைவூட்டுகிறது!
என்ன பேச என தெரியாமல்
மொட்டை மாடியில் நிலவின் துணையோடு உன் இருப்பை உணர்ந்த நிமிடங்கள் எனக்கு இன்னும் சிலிர்ப்பூட்டுகிறது!
பேசாமலே நிலவை பார்த்து ரசித்த மௌனங்கள் கொள்ளை அழகானது !
எப்படி இத்தனை காதல் என யோசிக்க யோசிக்க ஒன்றும் புரியவில்லை எனக்கு!
கரம் கோர்த்த நாளில்  மூன்றாம் பிறை என இருந்த  காதல்
எப்போது முழு நிலவாய் முழுமை பெற்றது என இன்னும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன் !

தாயென நீ தாங்கிய தருணங்களில் கொஞ்சம் !
தந்தை என அரவணைத்த அணைப்பில் கொஞ்சம் என நான் நினைக்க ?
என் மொத்தமும் நீயென எப்போது ஆனாய் குமரனே!

சிறு வயதில் சிறு காயத்துக்கும் கூட அம்மாவிடம் சொல்லி  ஆறுதல் தேடும் என்னை!
எப்போது  மாற்றினாய்  என்  பெரு வலியிலும் உன்  ஒற்றை பார்வை கூறும் சமாதானத்துக்கு !

ஒவ்வொரு சண்டையிலும் தேய்பிறை நிலவென உன்னை நான் நினைக்க !
என்றும் மாறா முழு நிலவென நீ எப்போதும் துணை நிற்கிறாய் என்னுடன்!
உயர்வும் தாழ்வும் வலியும் இன்பமும்
வாழ்வின்  தவிர்க்க இயலாத அம்சங்கள் என்று
நம் காதலுக்கு சாட்சியான
நிலவின் தேய்வும் வளர்பிறையும்
எனக்கு பாடமாக  உணர்த்த !
பௌர்ணமி நிலவை காணும்  கணமெல்லாம் என் வாழ்நாள் பௌர்ணமியான உன்னை கண்டு மகிழ்கிறேன்  !


« Last Edit: March 18, 2025, 09:32:52 pm by Isha003 »