நிலவின் பிரதிபலிப்பில் அவள்
அழகிய இரவில் நிலவின் ஒளியில்
அமர்ந்து நிலவை ரசிக்கும் மறு நிலா!
கருநீல வானத்தில் ஒளிரும் வட்ட நிலா
வானத்தை இரவில் ஒளிரச் செய்கிறது.
அவள் வந்ததும் எனது வாழ்க்கை ஒளிர்ந்தது போல
அவள் வந்ததும் வசந்தம் எனது வாழ்வில் நட்சத்திரமாய் மின்னியது.
பாலை போல இருக்கும் நிலவே
இரவையும் பகல் போல ஆக்குகிறாய்!
எனது வாழ்க்கையில் அவள் மாற்றியது போல …
நிலவின் மகளே எனது மனதை கொள்ளையடித்த என்னவளே
உன்னையும் நிலவையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
எனக்கு ஒரு சந்தோகம்: நீ நிலவை ரசிக்கிறாயா?
இல்லை, நிலவு உன்னை ரசிக்கிறதா?
அழகின் அரசியே, உன் முகத்தில் நான் கண்டா
முகப்பரு அப்பொழுதுதான் புரிந்தது நிலவுக்கும் பாரு உண்டு என்று...
மின்னும் நட்சத்திரங்கள் இரவுக்காக காத்திருக்கும் நிலவை காண அல்ல,
நிலவை காணவரும் என்னவளை காண என்று !
இரவில் வரும் நிலவுக்கு வெளிச்சம் தருவது சூரியன் என்று நினைத்தேன்,
ஆனால் இன்றுதான் புரிந்தது என்னவளின் முகத்தின் ஒளி என்று!
தேய்பிறையும் வளர்பிறையும் இல்லாத நிலவின் மகளே,
நிலவும் பொறாமைப்படும் உனது அழகினை கண்டு…
உன்னை ரசிப்பது நிலவு மட்டும் அல்ல, நீ
அமர்ந்திருக்கும் இருக்கையும் தான்…
ஒரு சில நொடி உன்னை சுமக்கும் இருகைக்கு,
எவ்வளவு ஆனந்தம் என்றால்,
வாழ்நாளெல்லாம் உன்னை சுமக்கும் எனது
ஆனந்தத்தை சொல்ல வார்த்தை இல்லை, பெண்ணே...
இரவுக்கு நிலவழகு எனக்கு அவள் அழகு.
நீலவானம்