"நிலவொளி காவியம்
வானத்தின் நடுவே நீயொரு ஓவியம்"
"நிலா இரவின் மடியில் ஒளிரும் முத்து,
வான்வெளியில் நீ ஒரு அழகிய சொத்து"
"நிலா இரவின் ராணி நீயே,
வான்வெளியில் ஒளிரும் பேரழகே!!!
இருள் சூழ்ந்த இரவில் ஒளி தரும் தேவதையே!!!
குளிர்ந்த உன் ஒளி வீசும் அழகிய வேளையிலே,
மனம் அமைதி கொள்ளும் பொன் மாலையிலே!!!
"வெண்ணிலவே, உன் அமைதியின் ஒளியில்,
உலகம் உறங்கும் அமைதியின் வழியில்"
"நிலா பௌர்ணமி இரவில் உன் முழு வடிவம்,
அழகின் உச்சம், அது அமைதியின் பிம்பம்!!!
பௌர்ணமி இரவில் உன் முழு ஒளி வீசும்,
உன் ஒளியில் நான் கண்ட கனவுகள் அனைத்தும் எழ,
உன் அழகில் நான் தொலைத்த என் கவலைகள் பல"
"நிலா என் தனிமைக்கு அழகு சேர்க்கும் ஒற்றை அழகு நிலா"
"நிலா மின்சாரம் இல்லா வானில் இரவில் என் தனிமையைப் போக்க எனக்குத் துணையாய், ஒளி விளக்காய் வந்த ஒற்றை அழகு நிலா"
"நிலா நிழல் விரிக்கும் இரவினிலே,
வான்வெளியில் ஒளி வீசுடும் என்
வெண்ணிலவே"
"நீயே என் தனிமையின் தோழியே"
"நீயே என் தனிமையின் தோழியே"
"நிலா அமைதியின் அழகிய வடிவம் நீ!!!
கடல் அலைகள் உன் ஒளியில் நடனமாட,
மரங்கள் உன் நிழலில் உறங்க,
பறவைகளும் உன் ஒளியில் கூடு திரும்ப,
பூக்களும் உன் ஒளியில் புன்னகை விரிய,
குழந்தைகளின் கனவில் நீ மிதக்க,
காதலர்களின் இதயத்தில் காதல் மலர,
காதலர்களின் இதயத்தில் நீ கவிதை ஒளியாய் ஒளிர்கிறாய்
காதலர்களின் இதயத்தில் நீ கவிதை ஒளியாய் ஒளிர்கிறாய்"
"நிலா உன் குளிர்ந்த கதிர்கள் என் மனதை அமைதிப்படுத்த,
உன் மென்மையும், வெண்மையும் என் தனிமையின் துயரத்தை மறக்கச் செய்ய,
நிலா உன் மென்மையின் ஒளி பட்டால் என் மனமும் அடையுமே அமைதி,
உன் வெண்மையின் ஒளி கண்டால் என் கண்களுக்குக் கிடைக்குமே வெகுமதி!!!
உன் அழகில் என் எண்ணங்கள் உன்னில் கரைந்து போக,
உன் அழகிய தோற்றம் என் மனதை ஈர்க்க,
உன் அமைதியான ஒளி என் மனதை ஆட்கொள்ள!!!
நீ மட்டும் போதும் இந்த இரவில்
என் தனிமைக்கு நீ துணை நிற்க
என் தனிமைக்கு நீ துணை நிற்க"
"நிலா வானத்தில் என்றும் நீ ஒரு வரைந்த ஓவியமாய் இருக்க,
என் மனதில் என்றும் நீ ஒரு ஒன்றைக் காவியமாய் நிற்க,
காலம் கடந்தும் என்றும் நீ ஒரு மாறாத அதிசயமாய் உன்னைப் பார்க்க,
வெண்ணிலவே, உன் அழகு என்றும் நிலைக்கும்,
வெண்ணிலவே, உன் அழகிலே என்
மனம் மயங்கி நின்றேனே!!!
"என் இதயத்தில் நீ என்றும் ஒளிர்வாய்"
"என் இதயத்தில் நீ என்றும் ஒளிர்வாய்"
"நிலா வானில் நீ மறைந்தாலும், உன் நினைவுகள் மறையாது,
என் காதல் உன்னில் என்றும் குறையாது!!!
உன் வருகைக்காக என் கண்கள் ஏங்கி தவிக்கும்,
என் இதயம் உன்னை மட்டும் தாங்கி துடிக்கும்!!!
என் காதல் நிலவே, நீயே என் துணை,
உன் ஒளியில் நான் கண்டேன் என் வாழ்வின் இணை!!!
உன் நினைவில் என் காதல் என்றும் நிலைக்கும்,
உன் ஒளியில் என் இதயம் என்றும் துடிக்கும்"
"இருண்ட வானில் தனித்து ஓடும் எரி நட்சத்திரம் போல,
"யாரும் அறியா என் மனதின் ஆழத்தில், வேதனையின் சுமை, கடலெனப் புரள்கிறது"
"என் மனதின் வலியை யார் அறிவார்?
"என் கண்ணீரின் கதையை யார் கேட்பார்?
"யாருமில்லா இந்த பாதையில்,
நான் மட்டும் தனியே நடக்கிறேன் என் விதி வழியில்,
"என் நிழல் கூட என்னை விட்டு விலகுகிறது,
"நினைவுகளின் சுமை என் மனதை வாட்டுகிறது,
"கண்ணீரின் துளிகள் என் கண்களை மூடுகிறது,
"என் மௌனத்தின் வலி,
"என் இதயத்தின் அழுகையின் ஓலம்,
"யாரும் அறியா என் தனிமையின் வேதனை,
"இந்த இருளிலும் ஒரு ஒளியாய், எனக்கு வழித் துணையாய் வந்த "அழகிய என் பொன் நிலவே"
"அழகிய என் பொன் நிலவே"
உனக்காய் வாழ்கிறேன்!!!
உன்னுள் வாழ்கிறேன்!!!
உன்னுள் ரசிக்கிறேன்!!!
உன்னுள் மகிழ்கிறேன்!!!
என்றும் உன்னுடன் நான்!!!
என்றும் அன்புடன் நான்!!!
"இயற்கையின் கோடிக்கணக்கான படைப்புகள் ஒவ்வொன்றும் அழகு,
இதற்கு ஈடாகுமோ செயற்கை படைப்பு"
"இயற்கையின் எழில், என்றும் மாறாதது"
"என்றும் மறையாதது இயற்கையின் மேல் நான் வைத்த நேசம்"
"இயற்கையை நேசித்து, இயற்கையை சுவாசித்து
இயற்கையோடு நாம் இணைவோமே
இன்பமுடன் இனிதாய் வாழ்வோமே
இன்பமுடன் இனிதாய் வாழ்வோமே"
"சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு
உங்கள் MISTY SKY 💙💙