Advanced Search

Author Topic: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி-1  (Read 1677 times)

February 08, 2025, 01:39:25 pm
Read 1677 times

Administrator

காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி-1

காதலர் தினத்தை முன்னிட்டு காதல் சம்பந்தமான கவிதைகளை பதிவிடலாம்.

காதல் பிரிவு
காதலில் ஊடல்
காதலில் விழுதல்
முதற் காதல்


 இது போன்ற ஏதேனும் ஒரு கருவை மையமாக கொண்ட கவிதைகளை பதிவிடலாம்.




விதிமுறைகள்:

1.கவிதைகள் சொந்த கவிதைகளாக அமைந்திருத்தல் வேண்டும்.

2 குறைந்த பட்சம் 20 வரிகளும் , அதிகபட்சமாக 50 வரிகளுக்குள் அமைந்திருக்க வேண்டும்

3 பிப்ரவரி  11 தேதிக்கு முன்பு கவிதைகளை பதிவிட வேண்டும். 


« Last Edit: February 08, 2025, 01:54:30 pm by Administrator »

February 08, 2025, 06:19:38 pm
Reply #1

Thendral

முதற்காதல் ....

என் முதற்காதல் ....ஒளியாய் உருவமாய் -ஆம்
அவனாய் எனக்கே எனக்கானவனாய்!!!

என்னுள் பூத்த முதற்பூ !!!
விதைவிட்ட நேரம் நான் அறியேன்!!!
வேர்விட்ட கணம் நான் உணரேன்!!!

 பூவின் முதல் வாசம் -என்மனம்
 அவன் வசம் சாயும் அத்தருணம் !!!

என் தாயின் கருவறை கதகதப்பை -மீண்டும்
உணர்தேன்... அவன் நேசத்தில்!!!

அவன் கரம் பற்றிய அக்கணமே- உணர்ந்தேன்
அவனை ...என்தந்தையுமாய்!!!
 
என்னுள் நான் கண்ட முதற்கனவு
என் முதற்காதல்...
 
 உணர்ந்தேன் என் கனவு நேசனை
என்னவனின் இனிய உருவில்...

உணர்ந்தேன் என் வாழ்வின் அர்த்தமதை
என் காதலனின் அன்பதனில் ...

உணர்க்கிறேன் என் தாயாய் தந்தையாய்
என் எல்லாமுமாய் அவன் நேசமதில்...
 
வேறென்ன வேண்டும் இனி எனக்கு
அவனன்றி ....என் வாழ்வதனில் !!!

முதற்காதல் ...என்னுள் பூத்த  முதற்ப்பூவாய்....
என்னவனுக்கு சூட ...என் சொற்களுடன் தொடுத்து ...
பூங்கொத்தாய் ...இன்றும் என்றும்...!!!

உங்கள் நான்....
❣️தென்றல்❣️
« Last Edit: February 09, 2025, 07:22:46 am by Thendral »

February 08, 2025, 07:21:44 pm
Reply #2

kathija

காதலில் விழுந்தேன்:

உன் முதல் பார்வை மொழியில்
கண்டேண் ஒரு புது உணர்வை
அது என்ன நிலை என்று அன்று அறியேன்!

யார்? இவன் என்று என்னுள் ஒரு கேள்வி எள!
யார்? இவன் என்று என்னுள் ஒரு கேள்வி எள!

நாட்கள் நகர்ந்தது

மீண்டும் அதே பிம்பம் கண் முன்  தோன்ற

மீண்டும் அந்த கேள்வி

யார்? இவன்!
யார்? இவன்! என்று

தற்போது அந்த நிலையில் ஒரு மாற்றம்

அந்த மாற்றம் தடுமாற்றமாய் 🤭🤭
ஆனது என்னுள்

என் இதயமும் ❤️❤️
புது வித

ஒலியை எழுப்பியது 😌😌😌

நாணம் கலந்த புன்னகையாய் 🤭🤭

என் பெண் தன்மை
வெளிப்பட்டது 😌😌

என்னுள் எழும் இந்த
நிலை கண்டு

எனக்குள்ளே ஒரு வித
ஆனந்தம் 😍
நாணம் 😌
படபடப்பு 😔

என காலநிலை மாற்றமாய்
மாறி போனது என் மனம் 🤫🤫

நான் மற்றும் தனியே அனுபவிக்க 😔

நீயே என்னை வந்து
சந்திக்க😌😌

என்னவளே 😍😍
உன்னை

பார்த்த நாள் முதல் அலைந்தேன் பித்தனை போல் அலைந்தேன்

இன்று என் அவளின்
வதனம் கண்டு
முக்தி அடைந்தேன் ❤️❤️

என்று உன் பூ மொழிகண்டு

விழுந்தேன் அடா
உன் காதலில் 😍😍😍

அன்று விழுந்தவள்
இன்றும் எளவில்லை 🤭🤭🤭

உன்னில் உன்னில் விழுந்தேன்

என்னவனின் இதய கூட்டில் வாழ்வேன்
என்றும் உன்னவளாய் ❤️❤️❤️❤️❤️

Iniya kadhalar thina nalvalthukal kadhalargale😍😍😍♥️♥️♥️

February 08, 2025, 10:33:07 pm
Reply #3

RiJiA

காதலில்...காதலில்...

சந்தோஷம்!!!... பூத்துக் குலுங்க வேண்டும்...
சந்தேகம்!!!...  பட்டு போக வேண்டும்...

அன்பை!!!...  அள்ளி அள்ளி  பருக வேண்டும்...
ஆணவம்!!!...  கிள்ளி  எரிய வேண்டும்....

கண்டிப்பு!!!...  கணிசமாக இருக்க வேண்டும்....
கட்டாயம்!!!...  கசிந்து போக  வேண்டும்....

விருப்பம்!!!...  வேரூன்றி   முளைக்க  வேண்டும்....
வெறுப்பு!!!...  தூசி போல  தட்டி விட வேண்டும்...

நம்பிக்கை!!!... மேலோங்கி இருக்க வேண்டும்....
நடிப்பு!!!...  செல்லா காசாக வேண்டும்....

உண்மை!!!... தலைக்கு மேல் இருக்க வேண்டும்...
பொய் !!!...  காலின் கீழ் மிதிபட வேண்டும் ...

இவ்வளவு வசனம் பேசிய என்னை  உனக்கு  பிடிக்கவில்லை....
யோசித்து  பார்த்தால்  காரணம் புரியவில்லை.....

உலகமே  கொண்டாடுது இன்று  காதலர் தினம்....
நானோ  கண்களை மூடிக்கொண்டேன் 
எனக்கு இன்று கருப்பு தினம்.....

ஒவ்வொரு நாளும்.....
ஒவ்வொரு  நிமிடமும் ....
ஒவ்வொரு நொடியும்....
உன்  குறுஞ்செய்திகாக காத்திருந்தேன்...

இனி அதற்கு   பயனில்லை என்று தெரிந்தபின்...
இனி அதற்கு   பயனில்லை என்று தெரிந்தபின்...

அடுத்த நொடி இறந்தேன்....
மறக்க இயலாத உன்னை மறப்பதற்கு
இதைவிட வேறு வழி எனக்கு தெரியவில்லை என்பதனால்....
« Last Edit: February 08, 2025, 10:46:31 pm by RiJiA »

February 09, 2025, 05:59:59 pm
Reply #4
தங்கமான பொண்ணு
தள்ளி நின்னு பேசும் அவளோட  கண்ணு !

அவளோ ஆளு கொஞ்சம் உயரம்தா !
அழகுல அவ சிகரம்தா !

வாய் திறந்து பேசுறதில  அவளோ கஞ்சம் !
சேய் அவளளோட  சிரிப்புல என்னைக்குமே இருந்தது இல்ல பஞ்சம் !

பள்ளி சீருடையிலும் பளிச்சுன்னு தெரிவா !
வெள்ளி கொலுசு பூட்டி வெள்ளந்தியா திரிவா !

அவளோட கீழ் உதட்டோரம் ஒரு மச்சம்
அது தான் அவ அழகோட உச்சம் !

அவ  என்னவோ தல குனிஞ்சு தா இருந்தா
ஆனா என்னோட தலைக்குள்ள எப்படியோ புகுந்தா !

தாவணியில அவள பார்க்கையிலே
 நா தலை சுத்தி போனேன்  !

தரிகிடதோமென தனி நடனம் அவ ஆடயிலே நா தறிகெட்டு போனேன் !
 
பள்ளி நாளெல்லாம் துள்ளி குதிக்கும் என்னுள்ளம் !
பாழாய் போன சனி ஞாயிறுகளில் பரிதவிக்கும் என்னுள்ளம் !

பாதி நேரம் பாதகத்தி அவ நினைப்பு !
அதனால
பத்தாவது வகுப்போ  எனக்கு பகுதி நேர படிப்பு  !

உள்ளத்திலே ஏதோ சிலிர்ப்பு
ஒரு நாளும் அவ மேல வந்ததே இல்ல எனக்கு சலிப்பு !

கன்னி அவ மேல எனக்கு காதலாச்சு
அது சொல்ல ஏனோ காலமாச்சு ! 

அவகிட்ட நா காதல சொல்லி பழகவும் இல்ல!
அவள காணாம விலகவும் இல்ல !

அவளோட கைபிடிச்சு  நா நடந்ததும் இல்ல !
அவளோட கண் பார்வைய நா கடந்ததும் இல்ல !

விடை பெறும் நாளும் வந்தது
என் விழியிலே வெள்ளம் சூழ்ந்தது !

ஒதுங்கியே நின்னேன் நா !
இல்ல இல்ல அவகிட்ட என் காதல சொல்லாம பதுங்கியே நின்னேன் நா !

எப்போவோ அவகிட்ட  சொல்லாத காதலை
ஒரு வழியா சொல்லிட்டேன் .
இப்போ கவிதையில கிறுக்கி தள்ளிட்டேன் !

எண்ணத்துக்கு சக்தி இருந்தா எடுத்துகிட்டு போகட்டும்
அவளோட  தான் என் முதல் காதல்ன்னு அவகிட்ட சொல்லட்டும் !

அவளின் அந்த சிரிப்பை மட்டும் பதிலுக்கு என்னோட  காதல் பரிசா வாங்கி வரட்டும் !
« Last Edit: February 09, 2025, 06:14:57 pm by Sivarudran »

February 10, 2025, 09:54:43 am
Reply #5

Limat


கண் மலராய்..!


எந்தன் தூக்கம் மறந்து
உன்னை நினைத்து தூக்கம் வராமல் தவித்து

கண்கள் விழித்து விழித்து
மல்லி பூ பூத்தது போல் கண்கள் பூத்து
செய்ய வேண்டும் ஒரு மாலை
என் கண்களை வைத்து

கண்ணால் செய்த மாலையை அணிய ஆசைப்படுகிறாயோ என் காதலே..!

அதனால் என் தூக்கத்தை கலைக்கிறாயோ என் காதலே..!

தோட்டத்தில் பூக்காத பூக்களை
பூ மார்க்கெட்டில் கிடைக்காத பூக்களாய்

நீ விரும்பி விட்டாய் என்றதனால்

விழித்திருப்பேன் என் கண்கள் பூத்துக் கொண்டிருக்கும் வரை..!

உன் தலையில் அமரும் காலம் வரும் வரை கண் மலராய்..!

February 10, 2025, 06:05:53 pm
Reply #6

iamcvr

என் வாழ்வு எனக்கானதாய்

விளம்பரத்தில் ஒன்றாய்
நிஜத்தில் வேறொன்றாய் விளங்கும்
அத்தனை விற்பனை பொருட்களை போலவே
நானும் இருப்பேனென்று இல்லை.
ஏனென்றால் நான் விற்பனைக்கு இல்லை.

முழுமை எனும் போலி முகமூடி - என்
முகம் மறைக்க தேவையில்லை

நான் எதிலும் முழுமையாய் இல்லை
முழுமையாக போவதும் இல்லை
நேற்றிலும் இன்று முன்னேற்றமாக இருக்க யோசிக்கும் சாதாரண மானிடனே

எல்லோரையும் திருப்தி செய்ய
என் மனசாட்சி விடுவதில்லை
தேவைக்கேற்ப மாறும்
தேவை முடிய மாறும் சில மானிடரிற்கும்
நல்லவனாய் இருந்து நான் என்ன செய்ய போகிறேன்.

இறுதிவரை யாரும் உடனிருக்க போவதில்லை
உடனிருந்தாலும் எனை உணர்ந்திருக்க போவதில்லை

எனை உணர்ந்து உடனிருக்கும் ஓருயிர்
எனைத்தவிர வேறு யார்?

முழுமையிலா என்னை தராசிலேற்றாது
முழுதாய் ஏற்பது
எனைத்தவிர வேறு யார்?

அப்படிப்பட்ட என்னை நான்
நம்பி, ஏற்று, அக்கறைப்பட்டு, நேசித்து, முக்கியத்துவம் கொடுத்து வாழ
சந்தோசமும் நிம்மதியும் தேடப்படுவதாய் இல்லாமல்
என்னால் உருவாக்கப்படுவதாய் இருக்கும்.

என் வாழ்வு எனக்கானதாய் மீளத்தொடங்கும்.

February 10, 2025, 11:13:08 pm
Reply #7

Wings

காதல் வலியும் இன்பம் :

என்னாளும் என்னை ஆளும் என் காதலன் அவன்

அவர் என்னை கடந்து சென்ற போதும்
என் வழியில் நான் பயணித்தேன்
அமைதியாய்

அவன் ஒற்றை விழி பார்வையில்
ஆயிரம் பட்டாம்பூச்சிகளை
கண்டேன்

அவன் குரலில் என்னுள் ஏனோ
புது மயக்கம்

மீண்டும் மீண்டும் என்னை
உயிர் பித்த குரல் அது

அவன் புன்னகை என்னை அன்பால் தாக்கும் ஆயுதம்

நான் அமைதியை நாடும் போது
என் வாழ்வின் விளிம்பில் இருந்த போது

என்னை தாங்கும் கைகளாய்
அவன் வந்த போது
அவனிடம் புதைந்தேன்

அவன் மந்திர புன்னகையும்
அவன் மயக்கும் வார்த்தை மொழிகளும்
என் வலிமையை
குறைத்தன

உன்னில் நான்
என்னில் நீ
வேறில்லை என்றாய்

என்னை சுற்றிய உன்
நினைவு ஒன்றே
என்றானது

நீ மறைத்து வைத்த
எல்லாம்
நானறிவேன்

இன்று ஏனோ எல்லா நிலையும் மாறியது

என்னை மறந்தது ஏனோ

என்னை நீ வெறுக்கலாம்

அனைத்தையும் மறக்கலாம்

ஆனால்

நீ இன்றி நானில்லை
உன் நினைவின்றி
என் வாழ்வும் இல்லை

உன்னை ரசித்தேன்
உன்னால் ரசித்தேன்

நீ என்னை 1000 முறை காயப்படுத்தினாலும்

என்னை உன் நினைவிலிருந்து அகற்றினாலும்

என் காதல் உண்மை
என்றும்
மறையாது
நீ கொடுத்த அன்பும்
வலியும்

நீ என்னிடம் கூறிய அந்த வரிகள் இன்னும் என் நெஞ்சை துளைக்கிறது

சூரிய ஒளியின் பிரகாசம் உள்ளவரை
உன்னோடு இருப்பேன் என்றாய்

அந்த வானம் நீ
இந்த பூமி நீ என்றாய்

என் பெயரை நீ கூறும் போதெல்லாம்
என் முகம் நாணத்தில் சிவந்தது

அனைத்தும் பொய் என அறிந்தும்
உன்னை காதலித்தேன்
பித்தனை போல்

நீ பேசிய
வார்த்தைகள்
உனக்கு அசாத்தியம்
எனக்கு அது அதிசயம்

பேதையாய் இருத்ததால்
ஏனோ என்னை வருத்தி‌னாய்

இத்தனை அறிந்தும்
அது காத‌ல் என நினைக்கிறேன்
இன்னும் பேதையாய்

February 11, 2025, 12:01:11 am
Reply #8

Adita Karikalan

  • Newbie

  • *

  • 1
    Posts
  • Total likes: 4

  • Gender: Male

  • சோழ இளவரசன் ❤️‍🔥

    • View Profile
காதலில் விழுந்திடாத காதலனின் காதல் கவிதை:
 

உன் பார்வை மழையில் நனையும் போது,
என் இதயம் கவிதை பாடும் தேன்,
நீ அருகில் இல்லாத நேரங்களிலும்,
நான் உன்னில் தேங்கி நிற்கும் பேன்.


உன் பெயரை என் மூச்சில் சொல்ல,
மௌனம் கூட மழை பாடும்,
உன் காதலில் நான் அழுகையில்,
வானமும் கூட கண் நீர் விடும்.


மழை துளி விழும் தருணத்திலே,
உன் நினைவு எனை நனைக்கும்,
நீயின்றி வாழ முடியாதே,
என் உயிரே உன்னில் நிறையும்.


நீ சிரிக்கையில் மலர்கள் பூக்கும்,
நீ பேசுகையில் வானம் தூறும்,
உன் மௌனம் கூட இனிமை தரும்,
உன்னுடன் வாழ்வதே எனது கனவு.


உன் இதயத்தின் தாளமெங்கும்,
என் பெயரை எழுதி வைக்கிறாயா?
நான் உறங்கும் கனவுகளிலும்,
உன் நினைவுகள் கனிவாய் விரியும்.


சூரியன் மடியும் நேரத்தில்,
உன் நினைவு நட்சத்திரமாகும்,
நிலா வெளியில் உன் சாயலில்,
என் கனவுகள் மலராகும்.


நான் சொல்வதற்கு முன்னரே,
நீ எனது மனதைப் புரிந்து கொள்கிறாய்,
இதுவே நம் காதலின் மெய்யுரை,
நாம் இணைந்ததே ஏற்கனவே.


காற்றில் கூட உன் வாசனை,
காதலில் ஒரு மாயம் உணர்த்த,
உன் வரவு எனக்கொரு வெற்றியின்,
பொன்மழை பெய்யச் செய்யும்.


நீ எனக்குள் விழுந்தாயோ?
நான் உனக்குள் கரைந்தேனோ?
இது ஒரு கனவா? இல்லை,
கண்கள் மூடி உணர்ந்த உண்மை.


உன் கைபிடிக்கையில் உலகமே,
நான் அறியாத கோட்பாடாகும்,
உன்னுடன் இணைவதே என் உயிரின்,
இனிய தருணமாகும்.

- சோழ இளரசன் : ஆதித்த கரிகாலன் ❤️‍
« Last Edit: February 11, 2025, 12:11:23 am by Adita Karikalan »
Adita Karikalan ❤️‍🔥
சோழ இளவரசன்

February 13, 2025, 01:09:34 pm
Reply #9

Passing Clouds

காதலுக்கு கவிதை

"காதலித்துப் பார் முகத்தில் ஒளிவட்டம் தோன்றும்" என்று
கூறினார் கவிஞர் வைரமுத்து.
ஒளிவட்டம் இல்லாத முகத்திலும்கூட காதல் தோன்றும்
என்பது எனது கூற்று...

காதல் ஒருவகைப் போதை,
அது பேதையைப் பொறுத்து!
காதல் ஊடுருவாத மனமும் இல்லை,
காதலில் விழாத மனிதர்களும் குறைவு.

பள்ளிப் பருவத்தில் காதல்,
அனைத்துப் பெண்களும் அழகாகத் தெரியும்.
ஆனால் பொழுதுபோக்கான காதல் நீடிக்காது.
கல்லூரிகளின் காதல்,
நேரம் செலவிடும் கதைகள் பேசிடும்.
புதுப் பெண்கள் வந்தால்,
காதல் பழையதாகிவிடும்.

வேலையின் போது காதல்,
தனது பளுவை மறைக்க,
கவலை மறக்க நம்மை,
நாம் ஏமாற்றிக்கொள்வது.

இவை அனைத்தையும் கடந்து,
வருவதுதான் காதல்!!!
ஒரே மனமாகக் கலப்பது,
ஒரே உணர்வாக இருப்பது.
விட்டுக்கொடுக்காமல் வாழ்வது,
மனதில் ஒருவரை மட்டும் வைத்திருப்பது.

ஒரு சிலர் மட்டுமே இதைக் கடைபிடிப்பார்,
மற்றவர்களோ பொழுதுபோக்குக் காதலர்கள்.
மாறிவரும் சமுதாயம்,
மனிதரையும் மாற்றுகிறது.

காதலின் நினைவாகக் காட்டிய தாஜ்மஹாள் கூட,
தனது இரண்டாம் காதலிக்காகத் தானே!
காதல் நிரந்தரமானது,
ஆனால் மனிதனின் மனமோ நிரந்தரமில்லாதது.

காதலைக் கொலை செய்யாமல் காதல் செய்வோம்,
காதலை வாழவைப்போம்.

அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐


நீல வானம்