Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1] 2
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-021 வெட்கம் :

பெண்மைக்கு உரித்தானது வெட்கம்..
பெண்ணின் அழகு  வெட்கம்...

வார்த்தை ஊமை ஆகும் அழகிய மொழி வெட்கம்...

தன்அவனை பார்த்து வந்து
தன்அவனை பார்த்து வந்து

  ஆயிரம் வார்த்தைகள் மனதுக்குள்
 ஒளிந்து கிடக்க 
 
 அவனை அரை நொடி கூட கண்நோடு கண் பார்க்கமுடியாமல் தவிக்கும் அந்த அழகிய நேரம்
 
 முகத்தை மூடி
 காதலை
 
 ஆம் காதலை
 
தன் உணர்வை வார்த்தையால்       உணர்த்த முடியாமல்

  என் அவனே பாரடா
  என் அவனே பாரடா
 
என்னை ஆளும் மன்னவனே நீ தான் என்று
தன் அழகிய

 பெண்மையால் சொல்லும் அந்த
 
  அழகிய தருணம்
 
தன் அவனை எண்ணி இருக்க
தன் அவனை எண்ணி இருக்க

தோழியர் கேலி செய்ய
காதல்ஓடு இனம் புரியாத
ஒரு புது இன்பத்தால் ஆட்கொள்ளும்

அழகிய தருணம்

முதல் முறையாக தன்னை
பெண்ணாக உணர வைக்கும்

அழகிய தருணம்

உலகமே கண் முன் நின்றால் கூட
உன்னால் புது உலகம் கண்டு தன்னை

 மறந்து
 
 நானா இது
 நானா இது
 
என்று கண்ணை மூடுகிறாள்
தன் புது மொழியால்......




April 06, 2023, 05:11:36 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 My place 18.04.2023
April 17, 2023, 10:14:00 am
2
Re: HAPPY BIRTHDAY CUTE & BULLETT Happy birthday bullett 🎉🎉🎉🎉🎉💐💐😊
April 20, 2023, 09:44:52 am
2
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#025 Hai Sm Team ku enoda panivana mudhal vannakam solikolvathu ungal kathija
Gtc friends ellarukum vannakam vechikiren ...ethu than enoda first time
nan song request pandren ...seri nama karutha solvom naan ena solavarugiren
endral ...thangal naan kedukum padal ondru podavendum endru ungalidam nan
vendukol veikren ...

Movie Name : Jeans
Song       :Anbe Anbe kollathe

Inthaa song la enaku romba pidicha lines

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்…
நீதான் நீதான் அழகியடி…
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து…
என்னை வதைப்பது கொடுமையடி…

entha padalil varum anaithu varigalum megavum azhaga erukum
nan entha padalai enaku vara pogum ENNAVAN kaga dedicate pandren

Chamutha Songs pota sm team ku enoda nandrigal......

April 23, 2023, 07:57:32 pm
2
Re: கவிதையும் கானமும்-022 தந்தையின் உழைப்பு:

Gtc  உறவுகள் அனைவருக்கும் என்னுடைய இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்.

உழைப்பு என்றால் என் கண் முன்னே தோன்றும் தெய்வம் என் தந்தை, ஆம் என் தந்தையின் உழைப்பு பற்றிய ஒரு கவிதை.

உழைப்பின் உன்னதம் தந்தை

தன்னை வருத்தி
தன்னை வருத்தி

தன் மகளின் புன்னகைக்காக
வாழும் தெய்வம்

ஆயுள் முழுவதும் உழைத்து

தன் தேவதையை
தன் சின்ன தேவதையை

நாளும் உயர்த்தும் ஒரு கடவுள்

நாள் முழுவதும் உழைத்த களைப்பிருந்தும்
நாள் முழுவதும் உழைத்த களைப்பிருந்தும்

தன் குட்டி மகளின் புன்னகையில்
தன் குட்டி மகளின் புன்னகையில்

உலகின் மொத்த இன்பம்
பெரும் உழைப்பாளி

மொத்த குடும்ப பாரம்
தோள் மேல் இருக்க

மழலை மொழி கேட்டு
மழலை மொழி கேட்டு

சொர்க்கதின் பயனை
அடையும் உழைப்பாளி

நான் துன்ப முகம் காணமல்
நான் துன்ப முகம் காணமல்

நாளும் இன்பமுகமாய்
தன் வலியை மறைத்த

என் தந்தை

ஆம்
என் தந்தை

உழைப்பின் தெய்வம்

என்னை உயர்த்த உன்னை
வருத்திய தெய்வமே
என்னை உயர்த்த உன்னை
வருத்திய தெய்வமே

கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன் இந்த கவிதையை உன் உழைப்புக்கு.

தெய்வங்கள் எல்லாம் thotre போகும் song dedicate பண்றேன் என் தந்தைக்கு.


April 26, 2023, 03:22:41 pm
1
Re: Happy Birthday DEMON Wish u many more happy returns of the day demon
May 07, 2023, 10:57:04 am
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#027 Hi sm team. Lovely and vaanmugil ku என்னுடைய vaanakkam
Enaku piditha padal
un kaigal korthu unnodu poga
Movie : Vanakkam Chennai
Singers: Vishal Dadlani
Music: Anirudh
Lyrics: Na.Muthukumar

piditha varigal-ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
இந்த நதி வந்து கடல் சேருதே
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே
அது உனைச் சேர ஒளி வீசுதே

அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே
வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே
Vaanmugil and lovely
2 alagikalukum என்னுடைய.oru  kavithai

Alaguke alagu serukum Penn Inam nee
பெண்ணே பெண்ணே
unaku oru Tani alagum vendumo

2 perum nala panringa da pgm ❤️❤️❤️❤️

May 07, 2023, 07:50:12 pm
1
Re: Happy Birthday EAGLE13 Happy birthday eagle kaka💐💐💐🎂🎂🎂
May 13, 2023, 11:26:37 am
1
Re: கவிதையும் கானமும்-024 என் அன்பு சகோதரி RiJiA வுக்கு 😍😍😍
என்னுடைய காதலுடன்❤️❤️❤️ தொடங்குகிறேன்
என் கவிதையை ❤️❤️❤️

காதலின் கோபம்:

காதலின் கோபம் கூட ஒரு அழகு
உன்னை நான் பார்க்க
 
என்னை நீ பார்ப்பாயா
என்னை நீ பார்ப்பாயா
அட என்னை நீ பார்ப்பாயா

 என்பதில்
 தோன்றும் அந்த இனம் புரியாதா
 உணர்வு
 
இருவருக்குள்ளும் உருவாக      தொடங்குகிறது காதல் அரும்பு

நாட்கள் ஒவ்வொன்றாய் நகர பார்க்கவில்லை என்பதில் தொடங்குகிறது

அந்த செல்ல கோபம்
அந்த
செல்ல கோபம்

ஒரு தருணத்தில் இருவர் மனமும் திறக்க காதல் வெளிப்படும் நேரம்

உலகின் அனைத்து இன்பமும்
ஒரு சேர பெற்ற உணர்வு

உன்னில் நான்
உன்னில் நான்

என்னில் நீ
என்னில்  நீ மட்டும்தானடா என்று
தோன்றும்

உலகமே அழகாய் தெரியும் தினம் பார்த்த விஷயங்களும் புதிதாய் தோன்றும்

தன் ஆனந்தம் மொத்தம் ஆனவன்
தன் ஆனந்தம் மொத்தம் ஆனவன்

 தன்னில் புதைந்தவள்
தன்னில் புதைந்தவள்

என்று ஒருவருக்கொருவர்
எண்ண அலைகளில்
தன் அவர்களை புகுத்த

மற்றொருவர் தன் அவர்களிடம் உரையாடும் பொழுது

தோன்றும் கோபம் அதுவே தொடக்கம் ஆகிறது

காரணம்
பொறாமை அல்ல

அது காதலின் உச்சம்
அது காதலின் உச்சம்

யாருக்கும் விட்டு கொடுக்க மனமின்றி
எப்படி வெளிப்படுத்துவது என்று புரியாமல்

நான் சரியாக நினைக்கிறேனா
நான் சரியாக தான் நினைக்கிறேனா

என்று மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் தொடர

சரியா தவறா என்று மனதுக்கும் எண்ணக்துக்கும்  இடையில் போராட்டம் முடிவதற்குள்ளாகவே

வெளிப்பட்டு விடுகிறது கோபம்


கோபம் அது அன்பின் எதிரி
உறவின் பிரிவு
மகிழ்ச்சியின் தடை

காதலே காதலே என்று உருகிய
நெஞ்சம்

கோபம் ஒன்றை நாளும்
 ஏந்தி ஏந்தி

வெறுப்பின் உச்சம் ஆகிறது


பார்க்க முடியுமா என்று உதித்தது மறைந்து

ஏன் பார்த்தோம்
ஏன் பார்த்தோம்
ஏன் தான் பார்த்தோம் 

என்று தோன்றுகிறது


மனித மனம் தான் எத்தனை விந்தையடா


இருவரும் எதிரியை போல் அமர் கின்றனர்

ஒரு ஒரு புறம்

தேவையற்றதை மனதில் ஏத்தி உழன்று கொண்டிருக்கிறது

இன்றைய நிலையில் இந்த எண்ணம்தான் நீடிக்கிறது

பிரிந்த பின் வருந்தி பயன் இல்லை


தன்னவர்கள்  தன்னை விட்டு
போவதில்லை

தன்னை எண்ணி தான் இப்படி
என்று மனதில் ஏற்றுங்கள்


கோபம் காதலின் கொலைகாரன்


தான் நேசித்த நெஞ்சை தானே புன் படுத்து வதா

ஓ மனமே உன்னில் அன்பை என்றும் நிறுத்தி


உன் உறவை வலுப்படுத்து

உன்னவர்கள் உன்னில்
 உன்னவர்கள் உன்னில்


கோபம் வேண்டாம் நெஞ்சே💕💕💕💕💕💕

May 23, 2023, 09:02:28 am
4
Re: கவிதையும் கானமும்-025 வெற்றியின் படிக்கட்டுகள் :

இங்கு கொடுக்க பட்டிருக்கும் படம் தோல்வி - வெற்றி,இருந்த போதிலும் என் கண் முன்னே  எதிர்மறையான எண்ணம் மறைந்து வெல்வோம் என்ற எண்ணம் மேல்லோங்கியதால் எனது கவிதைக்கு வெற்றியின் படிக்கட்டுகள் என தலைப்பிட்டுள்ளேன்.



வெற்றியின் முதல் படி தோல்வி
வெற்றியின் முதல் படி தோல்வி


முதல் படியிலே நின்று நாம்
எப்படி போவது என்று நினைப்பவரே
இங்கு அதிகம்


தூரம் அதிகம்
திரும்பி விடலாம்

தூரம் அதிகம்
திரும்பி விடலாம்

என்று செல்பவர்கள் இன்னும் சில

முயற்சிப்போம் என்று
சிறிது தூரம் சென்றதும்

திரும்புபவர் பலர்

என்னதான் இருக்கிரது அதில்
முயற்சிப்பவர்களே

வெற்றிக் கனியை பெருகின்றனர்

அவ்வளவு எளிதாக கிடைத்து
விடுமா கனி

அவ்வளவு எளிதாக கிடைத்து
விடுமா கனி

மரத்தின் விதையானது
பல போராட்டங்களை
கண்டே

கனி என்னும் இறுதி பருவத்தை அடைகிறது

அது போலவே வெற்றியை
அடைய நம் மனத்திற்கு
கடிவாளம் இட வேண்டும்

தோல்வியின்  ஒரு ஒரு
கண்ணீர் துளியும்

நாம் அடைய போகும்
ஆனந்தத்தின் தண்ணீர்

 நாம் அடைய போகும்
ஆனந்தத்தின் தண்ணீர்

கண்ணீர் என்னும் தண்ணீரை
ஊற்ற ஊற்ற வெற்றி என்னும்
மரம் வளரும்

மரம் விருட்சமாகும் நேரம்
கண்ணீர் எல்லாம்
 பொன் நீர் ஆகும்

கண்ணீர் எல்லாம்
 பொன் நீர் ஆகும்

நினைத்தும் கிடைத்து விட்டால்
அதற்கு பயன் ஏது

தோல்வி நம்மை தழுவும் போது
எல்லாம்
மனமே இது அதற்கான
வழி இல்லை

ஓ மனமே நிச்சயம் இது அதற்கான
வழி இல்லை

என்று மனதை
அமைதி படுத்து

இருட்டு என்று நினைத்தால்
பயம் தோன்றும்

அதை எதிர்த்து நடந்தால்

இருள் விலகும்
மாயா இருள் விலகும்

பாதை புலப்படும்

அறியாமையால் எழும்
பயம் என்னும் பகைவனை
எதிர்த்து நில்லுங்கள்

முடியாது என்று நினைத்தால்
பாதை அனைத்தும் மறையும்

முடியும் என்று நினைத்து
உன் அடியை எடுத்து வை

நீ போகும் பாதை எங்கும்
வழி தோன்றும்


நம் மனம் ஒன்றை உறுதியாக
ஏன் இறுதியாக நம்பும் போது
அந்த எண்ணமே அவனை
உயர்த்தும்


வழியில் தோன்றும்
களைகளை தூக்கி
வீசி நம்பிகையோடு
நடை போடுங்கள்



இன்றில்லை யென்றாலும்
என்றாவது ஒரு நாள்
உன் வெற்றி உன்னை பற்றும்


வெற்றியின் முத்தம் விலைமதிப்பற்றது

அதை பெற உன்னை
செதுக்கும் உளி
தான் உன் தோல்வி

பட்ட கஷ்டம் என்றும்
வீண் போவதில்லை

கஷ்டப்படாமல் இஷ்டபடு
கஷ்டப்படாமல் இஷ்டபடு

அந்த கஷ்டம் கூட
உன்னிடம் இரக்கம் காட்டும்

பாதை கடினமாக கடினமாக
உன் வெற்றி பக்கம் வரும்

கலங்காதே மனமே
முடியாதது எதுவும்

இவ் உலகிலே இல்லை

முடியும் என்று சொல்பவனை
இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாது

முடித்து காட்டுபவனையே
கொண்டாடும்

உன்னால் அனை‌த்து‌ம்
முடியும்
நம்பிகையோடு
எதிர்த்து நில்

வெற்றி என்னும் கனியை
பற்றும் வரை

இந்த வாய்ப்பளித்த என் சகோதரிக்கு
என் நன்றி

💕💕💕💕💕

May 29, 2023, 02:51:01 pm
1