"இருண்ட இரவின் மௌனக் குரல்"
"மூடுபனி படர்ந்த பாதையில்,
நிலவொளி தவழும் மயானத்தில்,
நிசப்தம் சூழ்ந்த இரவில்,
கல்லறைகள் வரிசை கட்டி நிற்க,
காலம் உறைந்ததோர் தோற்றமங்கே"
காலம் உறைந்ததோர் தோற்றமங்கே"
"இருண்ட வானில் வெள்ளித் தட்டுபோல் முழுமதி ஒளிர்ந்திடுதே"
"வானில் கருமை படர்ந்த இருளில் முழு நிலவின் இடையே மேகக் கூட்டங்கள் மெல்ல மெல்ல நகர்ந்திடுதே"
"வானில் வட்டமிடும் வௌவால்கள்"
"வெளவால்களின் சிறகசைக்கும் சத்தம் இரவின் அமைதியை கிழித்திடுதே"
"கல்வெட்டுக்கள் சொல்லும் கதைகள்
காலம் கடந்தும் வாழ்ந்திடுதே"
"அடர்ந்த மரங்களின் கிளைகளும் நிழலில் ஆடுகிறதே"
"பழைய தேவாலயத்தின் கோபுரம்,
கோதிக் கட்டிடக் கலையின் பெருமை
அழிந்த காலத்தின் மர்மமாய் உயர்ந்து நிற்கிறதே"
"கண்களில் மர்மம் மிளிர்ந்திடுதே"
"தனிமையில் அமானுஷ்ய குரல் கேட்கிறதே"
"இதயத்தில் ஓர் அச்சம் பரவுகிறதே"
"இருளின் ஆழத்தில் மறைந்திருக்கும், அறியாத ரகசியங்கள் என்னவோ??"
"கல்லறைக் கற்களின் மீது காலத்தின் சுவடுகள் பதிந்திருக்க"
"கல்லறைத் தோட்டத்தின் நிசப்தத்தில் மரணத்தின் மௌனம் பரவியிருக்க"
"மறைந்த உயிர்களின் கதைகள்
பெருங்கூச்சலாய் காற்றில் ஒலித்திருக்க"
"வெண்புடவை உடுத்திய ஓரு உருவம்
மெல்ல மெல்ல அசைந்து நடக்க"
"நிழல் போல மிதக்கும் அந்த உருவத்தை பார்ப்பவர் நெஞ்சில் ஒரு அச்சம் விதைக்க"
"அந்த அச்சத்தால் மனதிற்குள் ஒரு பதட்டம் முளைக்க"
"அடர்ந்த மரங்கள் கிளைகளை விரித்து மரணத்தின் தழுவலைக் காட்டுமங்கே"
"எந்த சோகத்தின் விளைவோ இது??"
"எந்த உயிரின் துயரமோ அது??"
"ஓலமாய் கதறி அழும் ஆன்மா"
"மூடுபனி மெல்லியதாக தவழும் இரவில், ஒரு மெல்லிய சலசலப்புடன் அது மிதக்கிறதோ??"
"வாழ்வின் ஒளியை இழந்த நொடியில், யாருமின்றி அது வெறுமையில் அலைகிறதோ??"
"உடல் அது மண்ணில் புதைந்தாலும்,
உயிர் அது காற்றினில் கலந்தாலும்,
அந்த ஆன்மா நிம்மதி இல்லாமல், கண்ணீர்த் துளிகளோடு காற்றோடு காற்றாக இந்தத் தனிமையில் அது எதையோ தேடுகிறதோ??"
"அந்த ஆன்மாவின் ஆசைகளும், கனவுகளும் இந்தக் கல்லறைக்குள்லேயே அது புதைந்ததோ??"
"அந்த ஆன்மாவின் நிறைவேறா ஏக்கங்கள் கடந்த கால நினைவுகளில் மோதி அது அழுகிறதோ??"
"அந்த ஆன்மாவின் பாசங்களும், சொந்தங்களும், பந்தங்களும் அனைத்தும் பறிபோனதோ??"
"அந்த ஆன்மாவின் கல்லறைக் கல்லும் பேசாத மௌனம், அதன் கதையின் மீதியைச் சொல்லாமல் போனதே"
"அன்பு, பாசம், காதல் அனைத்தும் வெறும் தூசி படர்ந்த நினைவுகளாய் மாறிப் போனதே"
"இன்று இந்த இருண்ட உலகினில்
அந்த ஆன்மா ஒரு சாபமாய் அலைகிறதே"
"பிரிவின் வலி ஒரு கடலெனப் பெருக,
அதன் ஆழத்தில், பெரும் சோகத்தில் அந்த ஆன்மா மூழ்குகிறதே"
"அவளின் இதயமும் துடித்தது ஒரு காலத்தில் அன்பிற்காக, பாசத்திற்காக ஏங்கியது"
"இன்று அது வெறும் வெற்றிடம்,
வலியும் வேதனையும் மட்டுமே மிஞ்சியது"
"ஒரு காலத்தில் அவளும் பூமியில் உயிர்த்துடிப்புடன் வாழ்ந்தவள்
சிரித்தாள், பேசினாள், காதலும் கொண்டாள்"
"பல கனவுகளுடன் ஒரு பெண்ணாக இருந்தவள்"
"இன்று அவளின் உடல் மண்ணோடு மறைய, நினைவுகளின் சுமையோடு அலைகிறாள்"
"வெண்மையான ஆடை அவளின் அடையாளம்"
"இங்கே அவளின் அழுகையின் துயரத்தைக் கேட்கவும் யாருமில்லை"
"இங்கே அவளிற்கு ஆறுதல் சொல்லவும் யாருமில்லை"
"மின்மினிப் பூச்சியாய் அவளின் ஆசைகள், இருளில் ஒரு வெளிச்சம் தேடுகின்றன"
"ஆனால் அவளின் பாதையோ இருளிலேயே தொடர்கின்றன"
"அவளின் உறவுகளைத் தேடி அவளின் ஆன்மா அலைகிறது"
"ஒருமுறை அவர்களைத் கட்டித் தழுவ வேண்டுமென்று"
"ஒருமுறை பாசத்தை மீண்டும் உணர வேண்டுமென்று"
"இது கடவுள் எழுதி வைத்த விதியோ,
அல்லது இது சூழ்ச்சியால் நேர்ந்த சதியோ"
"இந்தக் கல்லறைத் தோட்டம் அவளின் வீடு, மௌனம் அவளின் மொழி, தனிமை அவளின் துணை"
"அமைதி தேடி அலைகிறாள், விடியலின் ஒளியில் கரைந்திட,
இந்த இருளின் பிடியிலிருந்து விடுபட"
"வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் மரணத்தின் அழியாத சாம்ராஜ்யம், ஒரு துளி கண்ணீருடன் அவளின் மனம் இங்கே அமைதி தேடுகிறதே"
"அவள் ஒரு இறந்த ஆன்மா,
வாழ்வும், மரணமும் அவளின் கதை,
முடிவற்ற இந்தத் தேடலில் அவளின் ஆன்மா சாந்தியை தேடுகிறது"
"இதயத்தில் ஓர் நடுக்கம் பிறக்க,
நினைவுகளின் சுவடுகளைத் தேடும்,
ஓர் ஆன்மாவின் தவிப்பு இதுவோ??"
"மீண்டும் ஒரு நாள் மறுஜென்மம் பெறுவாளோ??"
"அல்லது முடிவில்லா இந்தப் பயணத்தில் இப்படியே மீட்சி தேடி அலைவாளோ??"
"இந்த உலகமே ஒரு நாடக மேடை,
அதில் அவளொரு வேதனையான ஓவியமாய்"
"அவளின் கதை கண்ணீரில் எழுதப்பட்டது, முடிவே இல்லாத ஒரு சோகத்தின் காவியமாய்"
"வலிகளுடன் என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு,
உங்கள் அன்பிற்குரியவன் MISTY SKY 💜💜