Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-055  (Read 200 times)

June 02, 2025, 02:48:14 pm
Read 200 times

RiJiA

கவிதையும் கானமும்-055
« on: June 02, 2025, 02:48:14 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-055


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: June 02, 2025, 08:55:24 pm by RiJiA »

June 04, 2025, 12:25:04 pm
Reply #1

NiLa

Re: கவிதையும் கானமும்-055
« Reply #1 on: June 04, 2025, 12:25:04 pm »
🌙 “நிலவான என் அப்பா” 🌙
நிலா எழுதி நிலவுக்கடியில் நின்று பாடும் கவிதை


இருட்டின் மத்தியில்,
மூச்சு அடங்கும் அமைதியில்,
கல்லறைகள் நடுவே…
நான் என் கால்களை மெதுவாக இழுத்துச் செல்கின்றேன்,
உங்கள் பெயர் பொறிக்கப்பட்ட கல்லை தேடுகிறேன்…
அந்த கடைசி இடம்,
நீங்காத என் நினைவுகளின் தொடக்கம்


இரவின் திசை பார்த்து நான் நடக்கிறேன்,
விண்ணின் மெல்லிய பசுமை காற்றில்
நான் தேடுகிறேன் ஒரு சுவாசத்தை —
அப்பா... உங்கள் வாசனையை…

இங்கே... உங்கள் பெயர் எழுதப்பட்ட கல்லின் முன்
நான் நிற்கிறேன் — ஒரு பிள்ளை,
தன் சிறு வயதின் நிழல்களைத் தூக்கிக்கொண்டு
உங்களை மீண்டும் பார்க்க ஆசைபடுகிறாள்.

நீங்கள் என்னை ‘நிலா’ என்று அழைத்த நாள் முதல்,
நான் நிலவையே என் அப்பா என்று நினைத்தேன்…
அதன் ஒளியில் உங்கள் குரலைக் கேட்டேன்,
அதன் அமைதியில் உங்கள் அடையாளம் கண்டேன்…

“நீ நிலா மாதிரி ஒளிரணும்” என்று சொன்ன நீங்கள்,
போகாதீங்கனு சொல்லக்கூட நான் வளர்ந்துவிட்டேன்.
அப்பா, நான் பெரியவளானாலும்
உங்களுக்குள் குழந்தையாய்தான் இருக்கிறேன்…

இப்போது உங்கள் கல்லறை என் தோளில் சாய்கிறது,
உங்கள் நினைவுகள் என் இதயத்தில் கண்ணீராகிறன.
உங்கள் குரல் இல்லாத இந்த உலகத்தில்,
நான் ஒரு ஓசையில்லா கவிதை...

அப்பா… உங்களால தான் நான் வார்த்தைகள் எழுத ஆரம்பித்தேன்,
நீங்கள் சொல்லிக் கொடுத்த அந்த 'முதல் கவிதை'...
இப்போ ஒவ்வொரு வரியிலும்
உங்கள் சுவாசம் காற்றாகச் சேர்கிறது…

நீங்கள் எனக்கு நிலா என்று பெயர் வைத்தீர்கள்,
ஏனெனில் நிலவைக் காணாமல் தூங்க மாட்டீர்களாம்...
இப்போது நான் நிலவைக் காணும் ஒவ்வொரு இரவும்,
உங்களை நினைக்காமல் தூங்க முடியவில்லை…

முதல்முறை நடக்க கற்றுக் கொடுத்த உங்கள் கை…
இப்போ என் கையில் இல்ல…
ஆனாலும் உங்கள் நிழல் என்னை வழி நடத்துகிறது,
ஒவ்வொரு தடம் போலவே.

உங்களுடன் சேர்ந்து கடல் பார்த்த நினைவுகள்,
நீங்கள் நகைச்சுவை கூறி சிரிக்க வைத்த நேரங்கள்,
நான் விழுந்த போது கையில் எடுத்த நிமிடங்கள் —
அவை எல்லாம் என் கவிதையின் உயிர்…

நீங்கள் இல்லாத இந்த உலகம் வெறுமையா இருக்கிறது,
ஆனால் உங்கள் நினைவுகளால் நான்தான் நிறைந்து நிற்கிறேன்…
நீங்கள் ஓர் அன்பு…
உங்களை மறக்க முடியாத மழை…

நான் இப்போது இந்த நிலவின் கீழ் உங்களிடம் பேசுகிறேன்,
கவிதை எழுதுகிறேன்… கண்ணீர் கலக்குகிறேன்…
ஆனால் இதுதான் என் உயிர் சொல்லும் மொழி,
அப்பா… உங்களுக்கான என் இதய உரை…

நீங்கள் போனாலும்…
உங்கள் கண்களில் எனை பார்க்கிறேன் நான்.
நான் எழுதும் ஒவ்வொரு வரியிலும்
நீங்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறீர்கள்.
Love u appa ❤️

June 05, 2025, 05:46:35 pm
Reply #2

Shruthi

Re: கவிதையும் கானமும்-055
« Reply #2 on: June 05, 2025, 05:46:35 pm »
யார்   இவள்.....?


விடியாத  இரவு...
அங்கே ஓர்  நிலவு மட்டுமல்ல,
இரு நிலவு  காட்சி கொள்கிறது....


சுற்றி இருக்கும் மரங்கள்
அவள் அழகில்  கிசுகிசுக்கின்றன...
வவ்வால்கள் துள்ளி குதித்து றெக்கை
விரிகின்றன....
புதையுண்ட பிணங்களை மீண்டும்
உயிர்த்தெழ வைத்தாள் அவள் பேரழகில்...
யார்  இவள்...?


எடுத்து  வைக்கும்  ஒவ்வொரு அடியும்
அவள் கதை  சொல்கின்றன...
இருந்தும் அவள் பார்வை மட்டும்,
அந்த மாளிகையை  விட்டு அகலவில்லை...

அவள் வருகையை கண்ட  அந்த மாளிகையின்  கதவுகள்  தானாகவே  திறக்கிறன...
இருள் சூழ்ந்த அந்த  அறையில்....
நிலவொளியில்  அவள்  நிழல் மட்டுமே
அவளுக்குத் துணையாக.....யார் இவள்?


அவள் இதழின்  ஓரம் சிறு புன்னகை மலர்கின்றது...
எங்கையோ  எப்பவோ  கேட்ட  ஓர் இசை...
அந்த  இசை ஒலிக்கும் திசையை நோக்கி
விரைந்தது அவள்  கால்கள்...
அறையின் கதவு  தானாகவே திறக்க..
காத்திருந்தது  பேரதிர்ச்சி....

அவள் கண்களையே அவளால்
நம்ப முடியவில்லை...
அருகில் சென்றாள்... வினா
எழுப்பினாள்...
கின்னரப்பெட்டியிலிருந்து
(piano)  ஒலித்த அந்த
இசையை  மீட்டியது  நீயா?  யார்  நீ?
உனக்கு  உனக்கு  எப்படி தெரியும்  இந்த  இசை?  யார்  நீ.....? என்று வினா எழுப்பிக்
கொண்டே  அந்த  முகத்தை பார்க்க
முயல்கிறாள்...
மீண்டும் மீண்டும் பார்க்க முயல்கிறாள்..
இருந்தும் பலனில்லை...
சற்று  அமைதிகொண்டாள்...


மயான  அமைதியில்
ஓர்  கம்பீர குரல் ஒலித்தது...

"இங்க என்ன பண்ற?
"எதுக்கு  இங்க வந்த?
"செஞ்சதுலாம்   போதாதா?

"யார்  நீ  யார்   நீ  என்று கதறுகிறாயே
நீ  யார் என்று  நான்  சொல்லவா...?
சொல்லடி  என்  அழகு  பெண்ணே..
நீ  யார்  என்று  நான்  சொல்லவா... ?


உன் வாழ்க்கை பக்கங்களில் நான்
எழுதப்படாத  கதை....
இன்னும்  சொல்ல  போனால்
என் தலை எழுத்தை கிறுக்கியவள்  நீ...
என்ன  யோசிக்கிற?
உன்னை சுமந்த  இந்த  இதயத்தில் 
இன்னும்  கொஞ்சம்  ஈரம் ஒட்டி  கொண்டுதான்  இருக்கிறது  போ  இங்கிருந்து.....
போயிறு...போயிறு...

ஆனா  போகும்  போது  திரும்பி மட்டும் பார்க்காமல்  போ,,,என்று
சொன்னது  அந்த  ஆன்மா...

அந்த  மாளிகையை விட்டு  பிரிய
மனமில்லாமல்  அழுதபடி
அங்கிருந்து  வெளியேறினாள்.....

ஒலித்த இசை...
பார்த்த உருவம்...
கேட்ட  குரல்...
இவை யாவும்  நிஜம் தானா என்று
யோசிக்க  தொடங்கினாள்...

"ஒருமுறை  அந்த  மாளிகைய  திரும்பி  பார்க்கலாமா?..
இல்ல  வேண்டாம்...
ஒருவேள பார்த்தா  என்ன ஆகும்..?

பார்க்கலாமா...?
வேண்டாமா ...
பார்க்கலாமா...?
வேண்டாமா... ? இல்ல  பார்க்கலாம்..
என்ன  ஆனாலும்  பரவால" என்று  யோசித்த  அவள்,,
இதயம்  வேகமாக  துடிக்க...
சற்று  தயகத்தோடு,,,
திரும்பி  பார்க்கிறாள்..

"இது  முடிவல்ல.......ஆரம்பம்"
« Last Edit: June 05, 2025, 08:42:04 pm by Shruthi »

Today at 02:55:03 am
Reply #3

Misty Sky

Re: கவிதையும் கானமும்-055
« Reply #3 on: Today at 02:55:03 am »
"இருண்ட இரவின் மௌனக் குரல்"
"மூடுபனி படர்ந்த பாதையில்,
நிலவொளி தவழும் மயானத்தில்,
நிசப்தம் சூழ்ந்த இரவில்,
கல்லறைகள் வரிசை கட்டி நிற்க,
காலம் உறைந்ததோர் தோற்றமங்கே"
காலம் உறைந்ததோர் தோற்றமங்கே"

"இருண்ட வானில் வெள்ளித் தட்டுபோல் முழுமதி ஒளிர்ந்திடுதே"
"வானில் கருமை படர்ந்த இருளில் முழு நிலவின் இடையே மேகக் கூட்டங்கள் மெல்ல மெல்ல நகர்ந்திடுதே"
"வானில் வட்டமிடும் வௌவால்கள்"
"வெளவால்களின் சிறகசைக்கும் சத்தம் இரவின் அமைதியை கிழித்திடுதே"
"கல்வெட்டுக்கள் சொல்லும் கதைகள்
காலம் கடந்தும் வாழ்ந்திடுதே"
"அடர்ந்த மரங்களின் கிளைகளும் நிழலில் ஆடுகிறதே"
"பழைய தேவாலயத்தின் கோபுரம்,
கோதிக் கட்டிடக் கலையின் பெருமை
அழிந்த காலத்தின் மர்மமாய் உயர்ந்து நிற்கிறதே"
"கண்களில் மர்மம் மிளிர்ந்திடுதே"
"தனிமையில் அமானுஷ்ய குரல் கேட்கிறதே"
"இதயத்தில் ஓர் அச்சம் பரவுகிறதே"
"இருளின் ஆழத்தில் மறைந்திருக்கும், அறியாத ரகசியங்கள் என்னவோ??"

"கல்லறைக் கற்களின் மீது காலத்தின் சுவடுகள் பதிந்திருக்க"
"கல்லறைத் தோட்டத்தின் நிசப்தத்தில் மரணத்தின் மௌனம் பரவியிருக்க"
"மறைந்த உயிர்களின் கதைகள்
பெருங்கூச்சலாய் காற்றில் ஒலித்திருக்க"
"வெண்புடவை உடுத்திய ஓரு உருவம்
மெல்ல மெல்ல அசைந்து நடக்க"
"நிழல் போல மிதக்கும் அந்த உருவத்தை பார்ப்பவர் நெஞ்சில் ஒரு அச்சம் விதைக்க"
"அந்த அச்சத்தால் மனதிற்குள் ஒரு பதட்டம் முளைக்க"
"அடர்ந்த மரங்கள் கிளைகளை விரித்து மரணத்தின் தழுவலைக் காட்டுமங்கே"
"எந்த சோகத்தின் விளைவோ இது??"
"எந்த உயிரின் துயரமோ அது??"


"ஓலமாய் கதறி அழும் ஆன்மா"
"மூடுபனி மெல்லியதாக தவழும் இரவில், ஒரு மெல்லிய சலசலப்புடன் அது மிதக்கிறதோ??"
"வாழ்வின் ஒளியை இழந்த நொடியில், யாருமின்றி அது வெறுமையில் அலைகிறதோ??"
"உடல் அது மண்ணில் புதைந்தாலும்,
உயிர் அது காற்றினில் கலந்தாலும்,
அந்த ஆன்மா நிம்மதி இல்லாமல், கண்ணீர்த் துளிகளோடு காற்றோடு காற்றாக இந்தத் தனிமையில் அது எதையோ தேடுகிறதோ??"
"அந்த ஆன்மாவின் ஆசைகளும், கனவுகளும் இந்தக் கல்லறைக்குள்லேயே அது புதைந்ததோ??"
"அந்த ஆன்மாவின் நிறைவேறா ஏக்கங்கள் கடந்த கால நினைவுகளில் மோதி அது அழுகிறதோ??"
"அந்த ஆன்மாவின் பாசங்களும், சொந்தங்களும், பந்தங்களும் அனைத்தும் பறிபோனதோ??"

"அந்த ஆன்மாவின் கல்லறைக் கல்லும் பேசாத மௌனம், அதன் கதையின் மீதியைச் சொல்லாமல் போனதே"
"அன்பு, பாசம், காதல் அனைத்தும் வெறும் தூசி படர்ந்த நினைவுகளாய் மாறிப் போனதே"
"இன்று இந்த இருண்ட உலகினில்
அந்த ஆன்மா ஒரு சாபமாய் அலைகிறதே"
"பிரிவின் வலி ஒரு கடலெனப் பெருக,
அதன் ஆழத்தில், பெரும் சோகத்தில் அந்த ஆன்மா  மூழ்குகிறதே"

"அவளின் இதயமும் துடித்தது ஒரு காலத்தில் அன்பிற்காக, பாசத்திற்காக ஏங்கியது"
"இன்று அது வெறும் வெற்றிடம்,
வலியும் வேதனையும் மட்டுமே மிஞ்சியது"
"ஒரு காலத்தில் அவளும் பூமியில் உயிர்த்துடிப்புடன் வாழ்ந்தவள்
சிரித்தாள், பேசினாள், காதலும் கொண்டாள்"
"பல கனவுகளுடன் ஒரு பெண்ணாக இருந்தவள்"
"இன்று அவளின் உடல் மண்ணோடு மறைய, நினைவுகளின் சுமையோடு அலைகிறாள்"
"வெண்மையான ஆடை அவளின் அடையாளம்"
"இங்கே அவளின் அழுகையின் துயரத்தைக் கேட்கவும் யாருமில்லை"
"இங்கே அவளிற்கு ஆறுதல் சொல்லவும் யாருமில்லை"
"மின்மினிப் பூச்சியாய் அவளின் ஆசைகள், இருளில் ஒரு வெளிச்சம் தேடுகின்றன"
"ஆனால் அவளின் பாதையோ இருளிலேயே தொடர்கின்றன"
"அவளின் உறவுகளைத் தேடி அவளின் ஆன்மா அலைகிறது"
"ஒருமுறை அவர்களைத் கட்டித் தழுவ வேண்டுமென்று"
"ஒருமுறை பாசத்தை மீண்டும் உணர வேண்டுமென்று"

"இது கடவுள் எழுதி வைத்த விதியோ,
அல்லது இது சூழ்ச்சியால் நேர்ந்த சதியோ"
"இந்தக் கல்லறைத் தோட்டம் அவளின் வீடு, மௌனம் அவளின் மொழி, தனிமை அவளின் துணை"
"அமைதி தேடி அலைகிறாள், விடியலின் ஒளியில் கரைந்திட,
இந்த இருளின் பிடியிலிருந்து விடுபட"
"வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் மரணத்தின் அழியாத சாம்ராஜ்யம், ஒரு துளி கண்ணீருடன் அவளின் மனம் இங்கே அமைதி தேடுகிறதே"

"அவள் ஒரு இறந்த ஆன்மா,
வாழ்வும், மரணமும் அவளின் கதை,
முடிவற்ற இந்தத் தேடலில் அவளின் ஆன்மா சாந்தியை தேடுகிறது"
"இதயத்தில் ஓர் நடுக்கம் பிறக்க,
நினைவுகளின் சுவடுகளைத் தேடும்,
ஓர் ஆன்மாவின் தவிப்பு இதுவோ??"
"மீண்டும் ஒரு நாள் மறுஜென்மம் பெறுவாளோ??"
"அல்லது முடிவில்லா இந்தப் பயணத்தில் இப்படியே மீட்சி தேடி அலைவாளோ??"
"இந்த உலகமே ஒரு நாடக மேடை,
அதில் அவளொரு வேதனையான ஓவியமாய்"
"அவளின் கதை கண்ணீரில் எழுதப்பட்டது, முடிவே இல்லாத ஒரு சோகத்தின் காவியமாய்"

"வலிகளுடன் என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு,
உங்கள் அன்பிற்குரியவன் MISTY SKY 💜💜
« Last Edit: Today at 05:44:44 am by Misty Sky »

Today at 05:12:59 am
Reply #4

iamcvr

Re: கவிதையும் கானமும்-055
« Reply #4 on: Today at 05:12:59 am »

பயணங்களில் என்றுமே பாதுகாப்பாய் உணர்ந்ததில்லை -
என்றுமே பயம் என் சக பயணி 
எதிர்பாராமல் ஒருநாள் எம்மிருவரையும் ஒரு வாகனம்
உள் இழுத்துக்கொண்டது.
உள்ளே ஐவரை கண்டேன்.

என் சக பயணி அவள் என்னை முந்திக்கொண்டு அவர்களிடம் கெஞ்சினாள்.
ஏன் என்னை கடத்தினீங்க? என்னை எதுவும் செஞ்சிடாதீங்க . . . அண்ணா . . ஐயோ . .
அவளின் குரல் அவர்களால் மெளனிக்க வைக்கப்பட்டது.

போராடிப்பார்க்க மனம் சொல்லியது,
அதற்குள் என்னை கைகளிலும் கால்களிலுமாக ஒவ்வொருவர் பிடித்துக்கொள்ள
துகிலுரிக்க தொடங்கினார்கள்.
உதறிப்பார்த்தேன்; உதைந்து பார்த்தேன்;
முடியவில்லை, இறுக்கிப்பிடித்துக்கொண்டார்கள்.

முழுதாய் நிர்வாணமாக்கிவிட்டு இறுக்கத்தை தளர்த்தினார்கள்,
இயலுமென்றால் தப்பித்துக்கொள்ளச்சொன்னார்கள்,
இப்படியே தப்பித்தால், வசைச்சொற்களாலும்,
வசதிக்கேற்ப மாற்றப்பட்ட கதைகளாலும்,
இச்சமூகமே என்னை வன்புணரும் Leaked videos ஆக. 

இயலாமையில் அங்கேயே இறக்கத்தொடங்கிவிட்டேன்,
மீண்டும் பிடிகள் இறுக்கமாக்கப்பட,
அணுவணுவாய் இரையாகி
அசைவற்றும் இரைமீட்டப்பட்டு
முழுதாய் இறந்து முடிக்க மூன்று நாட்கள் ஆனது.
என் குரல் எவரிற்கும் கேட்கவில்லை, எவரையும் இரங்க வைக்கவுமில்லை.
 
உயிர் ஊசலாடும் உருச்சிதைக்கப்பட்ட உடலாய் தெருவில் எறியப்பட்டுக்கிடந்தேன்.

இப்போது மண்ணிற்குள் நான் - எனை பெற்றவர்கள் 
கதறி அழுவதை மட்டுமே மங்கலாக பார்க்க முடிந்தது.
என் ஆசைகள், கனவுகள், அத்தனையும் அஸ்தமித்தது மட்டும் தெளிவாக தெரிந்தது.
நன்றாய் படித்து முடித்து, நல்ல வேலையோடு அத்தனைக்கும் காரணமான பெற்றவர்களை நன்றாய் பார்த்துக்கொண்டு,
காதலித்து, மனம் பொருந்தி, திருமணம் கண்டு, பிள்ளைகளோடும் வாழ
அனைவரையும் போலவே ஆசைகள் எனக்கும் இருந்தது.
அவை மண்ணோடு மண்ணாகின. 

என்னோடு சேர்த்து என் கனவுகளும் கல்லறைகளாய் நிற்க
என்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை மட்டும் இம் மண் எப்படி சந்தோசமாய் வைத்திருக்கிறது?

தினமும் எனைப்போலவே பல ஆயிரக்கணக்கில் கல்லறைகள் முளைக்கின்றனர்.

நான் ஏன் என்றுமே உயிராய் பார்க்கப்படவில்லை?
அன்று வரை உடலாய், இன்று வெற்று கல்லறையாய்.
கல்லின் ஈரம் யார் உணர்வார்?

இவர்கள் யாரும் பெண்களோடு பிறக்கவில்லையா? இல்லை இவர்களோடு பிறந்தவர்கள்
மட்டும் தான் பெண்கள், ஏனையோர் காம-இச்சை தீர்க்கும் வெற்றுடலைகளா?
இவர்களையும் பெண் தானே பெற்றிருப்பாள்; அவள்
ஏன் எதையுமே இவர்களுக்கு  சொல்லிக்கொடுக்கவில்லை?

பயம் என் சக பயணி, பயம் ஊற்றித்தான் இவ்வுலகம் என்னை வளர்த்தது.
பாடசாலை, வேலை, ஏன் பக்கத்துக்கடைக்கு கூட அவள் கூடவே வரவைக்கப்பட்டாள்.
இன்று என்னாலும் அவள் பல மடங்காகி என் சக பெண்களோடு பயணித்துக்கொண்டிருப்பாள்.

என்று தான் அவள் எங்களை விட்டு நீங்குவாள்?
சட்டம் திறம்பட செயற்பட, சட்டத்தோடு மக்கள் மனமும் தூர்வாரப்பட,
தம் வீட்டு பெண்களுக்கு ஒரு நியாயம் வெளியாருக்கு இன்னொரு நியாயம் என நினைக்கும் ஆண்கள் மனம் மாற,
அனுமதியின்றி எங்களை நெருங்கவே அவர்கள் மனம் சங்கடப்பட, அன்று தான் அவள் எங்களை விட்டு நீங்குவாள்.

என்ன தான் செய்யலாம் எங்களை சீரளிப்பவர்களுக்கு?
எங்களை இழந்த எம் குடும்பத்தின் கைகளிலேயே கொடுத்து விடலாம்.
அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும் என சட்டம் இயற்றி விடுங்கள்.

அனைவரையும் போலவே ஆசைகள் எனக்கும் இருந்தது.
அவை மண்ணோடு மண்ணாகின. 
கடைசி ஆசையேனும் யாரும் கேட்டு நிறைவேற்றுவார்களா?
தெரியவில்லை, இருந்தாலும் கேட்கிறேன்.
மக்களே, அரசாங்கமே எனக்கு நடந்ததை போல்
இனி யாருக்கும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
« Last Edit: Today at 05:31:31 am by iamcvr »