Advanced Search

Author Topic: Empty Dappa Kavithaigal  (Read 11367 times)

July 05, 2022, 02:06:11 pm
Read 11367 times
Empty Dappa Kavithaigal
« on: July 05, 2022, 02:06:11 pm »
கொஞ்சம் கொஞ்சமாய்
அன்னியமாகிப் போய்விடும் போது
விரிவடையத் துவங்குகிறது
உன் வானம்

உனக்கான பாடலின் வரிகளை
நீ மறந்திடும் தருணத்தில்
ஈர்ப்பு தொலைத்திட்ட
ஒரு சரணத்தை
முணுமுணுத்துக் கொள்கிறேன்

நீ கேட்காத
கேள்வியொன்றின் பதிலை இன்னதென
நான் பாடமிட்டுக் கொள்ளுகையில் காலாவதியாகிப் போகிறது அக்கேள்வி

வருத்தங்களை கரைத்ததாய் புளங்காகிதப்பட்ட
ஒரு நிகழ்வை
நினைவுகளின் அடுக்கங்களில்
இன்னொரு வருத்தமாய்
பதிவு செய்து வைத்திருக்கிறேன்

கண்ணீர் உலர்ந்திட்ட
ஒரு துயராய்
நான் மாறிடுகையில்
உனக்கான பாடல் வரிகளை
பாடத் துவங்குகிறாய்

மந்தாரப் பனித்திரைகளை கரைக்கும்
மார்கழி வெயிலின் கதகதப்புக்கு
காத்திருந்த ஒர் புலரியில் தான்
உன் பெயர் எழுதப்பட்டிருந்தது

விசிச் சென்ற
பூங்காற்றின் வாசனையில்
இன்னும் நிறைந்திருக்கிறேன்
உயிர்க்கூட்டின் துடிப்பில்
ஒரு இரகசியமாகவே
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
உன் பெயர்

July 19, 2022, 01:18:35 am
Reply #1
....
« Reply #1 on: July 19, 2022, 01:18:35 am »
ஒரு அழகிய கவிதையை
எதிர்க்கொள்ளுகையில்
காதலாய் உயிர்ப்பெறுகிறாய் நீ

முன்னெப்போதோ நான் எழுதிய கவிதை
இன்னும் உன் புன்னகை மலரின் வாசனையையே
கொண்டிருக்கிறது

மனம் கவர்ந்த ஒரு இரவல் கவிதைக்கு பின்னாக
நீ தொலைத்த உன்னை
தேடித் தொடங்குகிறேன்

விரலுரசி முகரும் உயர்தர அத்தரின்
நறுமணமாய் நாசியில் பரவுகிறாய்

புலன்சிலிர்க்க வைக்கும்
இன்னொரு கவிதைக்காகவே
காத்திருக்கலாம் உனக்கான காதல்.

July 20, 2022, 11:55:54 pm
Reply #2
நேசித்தே இரு...
« Reply #2 on: July 20, 2022, 11:55:54 pm »
மறுதலித்து திரும்பையிலும்,
கன்னங்களில் வழிந்திடும்
அனுமதியின்றி
விழிகள் விழுங்கிட்ட
உன் கண்ணீர் துளிகள்
மனக்கதுப்புகளில் வழிந்திருந்தை
அறிந்திருக்கிறேன்

காயங்களுக்கே பழக்கப்பட்ட
மனமொன்றை
நிலுவையில் நீ வைத்திருப்பதை
பரஸ்பரம் அறிந்தே இருக்கிறோம்

வேண்டல்களை புறந்தள்ளி
நீ கடக்குகையிலும்
உனைத் தாங்கிட காத்திருக்கும்
இரு கரங்கள் குறித்து ஒருபோதும்
உனக்கு மாற்றுக் கருத்தேதும் இருப்பதில்லை

நேசம் தவிர்த்த உன் வார்த்தைகளில்
நிஜங்களிருக்கும் சாத்தியக்கூறுகள்
அறவே இருந்ததில்லை என்பதையும்
உறுதிசெய்யப்பட்ட சோதனையொன்றின் முடிவாய்
என்னில் எங்கோ பதித்து வைத்திருக்கிறது
இந்நேசம்

கண்கள் உலர அழுது தீர்த்தும்
குருதி உறைய காயம் செய்தும்
தீர்ந்திடாத ஈரமாகவே
சுரந்து கசிகிறது காதல்

ததும்ப ததும்ப நேசித்துருகும்
உன்னை நான் கடிந்தோதுவது
எப்படிச் சாத்தியம்

நேசத்தின் போதாமைகளில்
குறைசொல்லும் அவகாசங்கள் தான் நமக்கேது

என்னை நேசித்திருப்பதை
தவிர்த்து உனக்கும் வழியேதுமில்லை
கண்மணி

இப்பிறவி தீர்ந்தும் என்னை நேசித்தே இரு...

September 15, 2022, 10:38:37 am
Reply #3
பாதை....
« Reply #3 on: September 15, 2022, 10:38:37 am »
பாதைகள் தடங்கல்களற்றதாக
மாறியிருக்கிறது

இலக்குகளற்ற பயணம்
என்பது போய்
குதுகூலமற்றதாக மாறி
வெளிறத் துவங்குகிறது இலக்குகள்

யாரையெல்லாம் விழிகள்
விரிய விரிய பார்த்து மலர்ந்ததோ
அவர்களை தூரமாய் பார்த்தும்
பாராமுகமாகிறேன்

தாடைகள் அகன்றிடும்
போலியான ஒரு புன்னகை போர்த்தும்
அசௌகரியங்களை விட
பரிச்சயமில்லாத இந்த பதுங்கல்கள்
பாதகமில்லை என்ற சமாதானங்களை
சாக்காக்கிக் கொள்ளலாம்

காரணம் சொல்லிக் கொள்ளும்
தேவைகள் இல்லை
என்பது கூட காரணமாகி இருக்கலாம்

வழிதூரத்தில் எங்கோ
என் பாதைகளைத் தொலைத்திருக்கிறேன் 

உண்ணவும் குடிக்கவுமான இடைநிற்றல்களும்
இளைப்பாறல்களும்
தவிர்த்து
இடற்பாடுகள் ஏதுமற்ற
வேறு யாரோ ஒருவரின்
வழித்தடத்திலேயே
நோக்கங்கள் ஏதுமின்றி
ஒரு பிரயாணம் மேற்கொண்டிருக்கிறேன்.

இன்னும் கொஞ்சம் நேரத்தில்
இலக்கு வந்துவிடும்
நான் போகவேண்டியபாதைகள் தடங்கல்களற்றதாக மாறியிருக்கிறது

இலக்குகளற்ற பயணம்
என்பது போய்
குதுகூலமற்றதாக மாறி
வெளிறத் துவங்குகிறது இலக்குகள்

யாரையெல்லாம் விழிகள் விரிய விரிய பார்த்து மலர்ந்ததோ
அவர்களை தூரமாய் பார்த்தும்
பாராமுகமாகிறேன்

தாடைகள் அகன்றிடும்
போலியான ஒரு புன்னகை போர்த்தும்
அசௌகரியங்களை விட
பரிச்சயமில்லாத இந்த பதுங்கல்கள்
பாதகமில்லை என்ற சமாதானங்களை சாக்காக்கிக் கொள்ளலாம்

காரணம் சொல்லிக் கொள்ளும்
தேவைகள் இல்லை
என்பது கூட காரணமாகி இருக்கலாம்

வழிதூரத்தில் எங்கோ
என் பாதைகளைத் தொலைத்திருக்கிறேன் 

உண்ணவும் குடிக்கவுமான இடைநிற்றல்களும்
இளைப்பாறல்களும்
தவிர்த்து
இடற்பாடுகள் ஏதுமற்ற
வேறு யாரோ ஒருவரின்
வழித்தடத்திலேயே
நோக்கங்கள் ஏதுமின்றி
ஒரு பிரயாணம் மேற்கொண்டிருக்கிறேன்.

இன்னும் கொஞ்சம் நேரத்தில் இலக்கு வந்துவிடும்
நான் போகவேண்டிய பாதைகளை
இனி எங்கே தேடுவது?பாதைகளை
இனி எங்கே தேடுவது?

September 16, 2022, 02:28:58 am
Reply #4

SuNshiNe

Re: பாதை....
« Reply #4 on: September 16, 2022, 02:28:58 am »
நன்று  ⭐

but seems like repeated
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

September 18, 2022, 07:43:06 am
Reply #5
காதலித்து மடி💜
« Reply #5 on: September 18, 2022, 07:43:06 am »
நீ...♥

என் தற்காலிகப் புன்னகைகளின் உருவாக்கம்.
நிரந்தர மகிழ்வின் நீட்சி.
சொற்ப கால சுதந்திரம்.
என் வாழ்நாளின் பலன்.

தொலை தூர பயணத்தின் கடைசி நிறுத்தத் துணை.
அருகே அமர்ந்த குழந்தை.
தோல் சாய்ந்த உறக்கம்.
ஏதோவோர் சங்கீதம்.

நன்னாளின் புத்தாடை.
நிறைவான நல் விருந்து.
என் காதலின் கிடாவெட்டு.
இரட்டைப் பக்க ஒரே இலை.
பந்தியில் எனக்கு மட்டும் தனிப் படையல்.

முந்நூறு கண் சிமிட்டல்கள்.
மூவாயிரம் முத்தங்கள்.
முப்பதாயிரம் தேநீர்.
மூன்று நாளைய போதை.
மொத்தமான என் கதி.

விடியலின் மொத்த விருட்சம்.
நள்ளிரவிலும் விலகாத வெளிச்சம்.
என் மழைக்கோர் குடை.
பனிக்கோர் போர்வை.
இடர்க்கோர் தீர்வு.

எனதான ஓர் பத்திரம்.
என் மெத்தையின் சோடித் தலையணை.
எனதென்று கைக்காட்ட ஓர் சொத்து.
நீயன்றி ஏதுமில்லை என்றான நியாபகம்.

September 19, 2022, 05:41:34 pm
Reply #6

SuNshiNe

Re: காதலித்து மடி💜
« Reply #6 on: September 19, 2022, 05:41:34 pm »
மிக அருமையான கவிதை ♥️♥️
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 12, 2022, 12:54:37 am
Reply #7

RajuRaju

Re: காதலித்து மடி💜
« Reply #7 on: October 12, 2022, 12:54:37 am »
என் மனதை மிகவும் பாதித்தது உங்கள் கவிதை மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க வளமுடன்

October 12, 2022, 03:50:59 am
Reply #8

RajuRaju

Re: பாதை....
« Reply #8 on: October 12, 2022, 03:50:59 am »
Nice one I like ur story
« Last Edit: October 12, 2022, 03:53:00 am by RajuRaju »

November 05, 2022, 12:36:26 am
Reply #9
இரவின் கருணையில்✍️
« Reply #9 on: November 05, 2022, 12:36:26 am »
உனக்கு முன்னால்
உடைந்து அழுதிடவும் முடியும்
என்பதை விடவா
வேறொரு இயல்பாயிருத்தல்
சாத்தியப்பட்டுவிட முடியும்

காயப்பட்ட ஒரு அப்பிராணி விலங்கின் மீது
காட்டிடும் காருண்யம் போன்றல்லாத
ஒரு அக்கறையையே எதிர்நோக்குகிறேன்

உன்னை காயப்படுத்தக்கூடும்
எதிர்ப்பார்பின் இன்னொரு எதிர்வினையை
என் அன்பு நிகழ்த்திப் போகுகையில்
எதிர்கொண்டிடும் கையாலாகாத்தனங்களால்
கைசேதப்பட்ட படியே
இல்லா வைராக்கியம் ஒன்றின்
கூடுகளுக்குள்ளே நுழைந்து
நீறுகிறேன்

இயல்பாயிருத்தலும் இயல்புதொலைத்தலும்
இல்லாத ஒரு நிலையினில்
எதைக்கேட்பது என்றறியாத
அழுது ஓய்ந்த ஒரு குழந்தையின் அமைதியை தேர்கிறது
இரைச்சல்களின் சலசலப்புகள் அடங்கிடாத மனம்

பனிபடர்ந்த சருகுகளின் மீதாக
தன் அடர்வை போர்த்திக் கொள்கிறது இருள்

விடியலுக்கு முன்னாக உதிரக்கூடும்
இலைகளுக்கு மேலாகவே படரட்டும்
விடியலின் வெளிச்சக் கதிர்கள்

இந்த ஈரம் உலர்ந்திடும் சாத்தியங்களில்லை

இயல்பாயிருக்கவே விழைகிறேன்
இரவின் கருணையை வேண்டியபடி...

November 08, 2022, 01:57:40 am
Reply #10
பாரிய பிரிவுகள்
« Reply #10 on: November 08, 2022, 01:57:40 am »
இப்போதெல்லாம் ஒரு பிரிவினை
அத்துனை சுலபமாக,
இதோ! பரிசெனக் கையளிக்கிறார்கள்.
அதனை நாம்
ஒப்புக் கொண்டுத்தான் ஏற்கிறோமா, என்பதைப் பற்றிய
கரிசனையாவது இருப்பதில்லை.

எப்போதோ துயருறும் போது
துணை நின்றவர்கள் தான்,
இப்போது துவழ்கையில்
துரதிர்ஷ்டவசமாய்
இல்லாமல் போயிருக்கிறார்கள்.

அவர்கள் அறிவார்களா!?
"இனி இல்லை"
என்ற வார்த்தைக்குப் பின்னால்,
தனியாய் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் தனிமையைப் பற்றி?
இன்மை என்பதன் பின்னால்
பதற்றத்தோடு மறைந்திருக்கும் ஆற்றுப்படுத்தவியலாத
ஆதங்கங்கள் பற்றி?

அவர்களுக்குத் தெரியவில்லை!
பிடித்தமான ஒருவரின்
குரல் கேட்பது நின்று விட்டால்,
மனதுக்கு நெருக்கமான அத்துனையும் பிடிக்காத பட்டியலில்
சேர்ந்து விடுகிறதென்பது!

மேலும்!
குறுஞ்செய்திகளை
அத்துனை இயல்பாய்
நிறுத்திக் கொள்கிறார்கள்.
அவர்கள் அறியமாட்டார்கள்! அவையெல்லாம் வெறும்
எழுத்துக்கள் அல்ல!
விரும்பிப் படித்துப் படித்தழும்
ஆசையாய் சேகரிக்கப்படும்
உணர்வுக் குவிப்புக்கள் என்று.

"காலம் மாற்றி விடும்!
இயல்பாய் இருக்கப் பழகிக் கொள்"!
எனச் சொல்லித் திரும்புகிறார்கள்.
அவர்களுக்கு எப்படிப் புரியும்?
கடலும், காற்றும்,
வானும், மண்ணும்,
நிலையாய்
இருப்பு பெற்றிருப்பது போலத்தான்
அவர்களின் இருப்புமென்பது.

அவர்கள் அறிவார்களா?
எத்தனை முகங்களோடு
உறவாடி, உரையாடினாலும்,
அவர்களை, அவர்களின் பிரதியினை,
பிற ஒருவரிடம்
தேடியடைந்து கொள்ள முயற்சித்த பிரயத்தனங்கள் எல்லாம்,
பரிதாபமாய் தோற்றுப் போனதை.?


November 08, 2022, 06:52:44 pm
Reply #11

SuNshiNe

Re: பாரிய பிரிவுகள்
« Reply #11 on: November 08, 2022, 06:52:44 pm »
உங்கள் கவிதை  பிரிவின் துயரத்தின் 💔அருமையான வெளிப்பாடு
நுணுக்கமான உணர்வுகள்

உங்கள்  படைப்பு மிகவும் நன்று ...

வாசித்த பின் என் மனதில் தோன்றியதோ கீழே கூறியுள்ளேன் ....




அந்த அறியாதவர்களுள்
என்னையும் அறியாமல்  அடங்கி இருப்பதை அறிந்தேன்
எனக்கு  பிடித்த  நபர்  அந்த அறியாதவர் ஆகுகையில் ....
இனி அறியாமலும் அந்த அகராதியில்  இல்லேன்
ஆகையில்,
கண்ணாடி  உணர்வுகள்  உடைய உறவுகளுக்கு
பரிசாக பிரியா  என் அன்பும்  புன்னகையும்




💔பிரிவுகள்
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

November 10, 2022, 06:29:21 am
Reply #12
புனிதர்கள்❤️
« Reply #12 on: November 10, 2022, 06:29:21 am »
நீ நலமாய் இருப்பாய்!
நீ ஆரோக்கியமாய் இருக்க வேண்டும்!
நீ மனமுடையாது தைரியமாய் இரு!
நீ மகிழ்ச்சியாய் இருந்தாலே போதும்!
உன் நல் எண்ணங்கள் நிறைவேறும்!
உன் துன்பங்கள் நீங்கும்!
முடிந்தால் என்னோடு அவைகளை
பகிர்ந்து கொள்!
அப்போதாவது மனம் சற்று ஆறும்!
உனக்காக எப்போதும் பிரார்த்திக்கிறேன்!
நீ நலமோடு இரு!

இவ்வாறு எல்லாம் கூறிக் கொண்டு,
அவ்வளவாய் நமக்கு பரீட்சியம் இல்லாத
மனிதர்கள் நிறைய,
வாழ்வில் வந்து போகிறார்கள்.
அவர்கள் கூறுவதால்
எம் பிரச்சனைகளும், துயரங்களும்,
தீர்ந்து விடாது தான்.
ஆனால்...!
அவை எல்லாம்
அவ்வப்போது தடுமாறும் மனதுக்கு இதமளிக்கிறது.

ஏனெனில்!
இங்கேயே தான்
நமக்கு மிகவும் பரீட்சியமான
பல மனிதர்கள்
கண்டும் காணாதது போல நகர்கிறார்கள்.
இங்கேயே தான்
நம்மை தெரியாத மனிதர்கள் போல,
அவர்கள் பாசாங்கு செய்து
ஒளிந்து கொள்கிறார்கள்.
நாம் இத்துனை
பழக்கம் வாய்ந்தவராய் இருந்தும்,
நம் துன்பங்களின் போது
தூரமாய் தொலைந்திருக்கிறார்கள்.

அப்படிப் பார்க்கையில்...!
அவ்வப்போது வரும்
பரீட்சியம் இல்லாத
இம்மனிதர்கள் எல்லோருமே,
நியாபகத்தில்
நிறுத்தி வைக்கப்பட வேண்டியவர்கள்.
இவர்கள் எல்லாம்
அத்துனை முக்கியமானவர்கள்.

"மன்னித்துக் கொள்" என,
பின்னொரு நாளில்
எதற்குமே உபயோகமற்ற
மன்னிப்புக் கோரல்கள்
கூறிக் கொண்டு வருபவர்களை விட,
தக்க தருணத்தில்
ஆற்றுப்படுத்தல்களோடு
வந்து சேரும் மனிதர்கள்
மிகப் புனிதமானவர்கள்

November 14, 2022, 02:16:07 pm
Reply #13
வரம்❤️
« Reply #13 on: November 14, 2022, 02:16:07 pm »

கனம் கூடிய மனநிலையின் முற்றிய நிலையில்
உடைந்தழுகையில் கிடைக்கும் மடியில் கிடக்கும் போது
கிடைக்கும் தழுவலுக்கு நிகரான ஓர் நம்பிக்கையூட்டும்
செயலென்பது அசாத்தியமானது.

தவம் முடித்து விழித்ததைப் போன்ற அதிகாலை
விழிப்பிதுக்கத்தில் கிடைக்கும் தலைக்கோதுதலுக்கு
நிகரான ஒரு ஊக்குவிப்புச் செயலென்பது
எத்தகு வியப்புக்குரியதாய் இருக்கும் என்று
அன்று முழுதும் இருக்கும் புத்துணர்ச்சியேப் பதில் சொல்லும்.

அதிகமான சந்தோஷத்திலோ,
அடக்கி வைக்க முடியாதப் பேரின்ப நிகழ்விலோக் கிடைக்கும்
ஒரு தழுவலுக்கு நிகரான எந்தவொரு பக்குவப்படுத்தும்
அறிவுரையும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறலாம்.

ஆடிப்பாடி வெறும் களைப்பொன்றின் மட்டுமேக் காரணங்கொண்டு
கட்டிலில் மடிந்து விழுந்துக் கிடக்கையில் கிடைக்கும்
அந்த ஒரு தழுவலென்பதற்கு நிகரானதொரு நிதானமூட்டும் பண்பு
எந்த பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் இருந்திடுவதில்லை.

எதாவதொரு அதிகப்படியானத் தனிமையை உணர்ந்து
யாருமில்லாத நிலை என்ற முட்டாள்த்தனப் புலம்பல்களுக்கு
இடையில் கிடைக்கப் பெறும் திடீர் அணைப்பிற்கு நிகராக
எந்தவொரு ஆறுதல் வார்த்தையும் இருந்து விட முடியாது.

இவையெல்லாம் கிடைக்கப் பெறுவதென்பதுதான் வரம்.
இந்தத் தழுவல்களெல்லாம் படிநிலைகளுக்கு உயர்த்திச் செல்லும்.
முன்னேற்றும். நடத்தி முடிக்கும் நம்மையே, நம்மின் இயக்கத்தையே.
ஆகையால், இது போன்ற ஒன்றிரண்டுத் தழுவல்களுக்குதான்
இந்த மனம் ஏங்கி நிற்கிறது.

மனிதர்களுக்கான தேவையே சக மனிதர்கள்தான்.
வலியானவர்களை அணைப்பதும்,
பிணியானவரை பேணுவதும்
இயற்கையாகவே இயன்றதுதானே.
ஏந்திக் கொள்வோம்.!

"கண்ணீரை துடைக்கும் விரலுக்கு, மனம் ஏங்கி கிடக்குது"

November 15, 2022, 07:06:13 am
Reply #14
சர்வம் துற!
« Reply #14 on: November 15, 2022, 07:06:13 am »
யாரையும் புதிதாய் அறிமுகப்படுத்துவதில்லை.
யாரிடமும் என்னையும் அறிமுகப் படுத்திக் கொள்வதில்லை.
யாரிடமும் நலம் விசாரிப்பதில்லை.
யாரிடமும் சுக, துக்கங்களை விழுங்காமல் சொல்ல முடிவதில்லை.

யாரிடமும் என் சார்ந்த எதற்கும் அனுமதி கேட்பதில்லை.
யாரிடமும் ஒரு வரிக்கு மேல் வாதாடுவதில்லை.
யாரையும் பகிரங்கமாக கத்தி கூப்பிட பிடிக்கவில்லை.
யாரைப் பற்றியும் புகாரிட விரும்பவில்லை.

பிடித்தவர், பிடிக்காதவரென்ற
எந்தவொரு வரைமுறையும் சுற்றத்தாரை வைப்பதில்லை.
பிறப்பு, இறப்பென்று
எந்த சுக துக்கங்களையும் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை.
உரிமை கொண்டாட பிடிக்கவில்லை.

உறவு முறை, நட்பு முறை பாராட்ட பிடிப்பில்லை.
இதுதானென்ற நியாய, அநியாய கோட்பாடுகளை ஏற்க விருப்பமில்லை.
யாரும் கை பிடித்து அழைத்து செல்ல விரும்பவில்லை.

யார் பணமும், யார் குரலும்
இப்போதைக்கு என் தைரியமாயில்லை.
அலுப்பில்லாமல் சாப்பிட, தூங்க உடலும் விரும்பவில்லை.
மெய்வருத்த மனதும் தயங்கவில்லை.

கூடென்று ஏதுமில்லை.
சுதந்திரப் பறத்தலுக்கு சிறகுமில்லை.
கவிதை, கதை ஏதுமில்லை.
காதலுமில்லை.
கருணையுமில்லை, என்னிடத்தில் கண்ணீருமில்லை.
கடைசியில் உண்மையுமில்லை.

அன்பின் சல்லாபங்கள் வாழ்வின் எல்லை சேரும் வரை
தன்னை நிராயுதபாணியாய் பாவித்து நம்ப வைத்து
பயணப்படுத்தும் போது உடனான அத்தனையும் சலிப்புக்குள்ளாகிறது.

ஏதுமில்லை என்றானபின் வரும்
எண்ணவோட்டம் நதி போன்றது ……