GTC FORUM

POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: Empty Dappa on July 05, 2022, 02:06:11 pm

Title: Empty Dappa Kavithaigal
Post by: Empty Dappa on July 05, 2022, 02:06:11 pm
கொஞ்சம் கொஞ்சமாய்
அன்னியமாகிப் போய்விடும் போது
விரிவடையத் துவங்குகிறது
உன் வானம்

உனக்கான பாடலின் வரிகளை
நீ மறந்திடும் தருணத்தில்
ஈர்ப்பு தொலைத்திட்ட
ஒரு சரணத்தை
முணுமுணுத்துக் கொள்கிறேன்

நீ கேட்காத
கேள்வியொன்றின் பதிலை இன்னதென
நான் பாடமிட்டுக் கொள்ளுகையில் காலாவதியாகிப் போகிறது அக்கேள்வி

வருத்தங்களை கரைத்ததாய் புளங்காகிதப்பட்ட
ஒரு நிகழ்வை
நினைவுகளின் அடுக்கங்களில்
இன்னொரு வருத்தமாய்
பதிவு செய்து வைத்திருக்கிறேன்

கண்ணீர் உலர்ந்திட்ட
ஒரு துயராய்
நான் மாறிடுகையில்
உனக்கான பாடல் வரிகளை
பாடத் துவங்குகிறாய்

மந்தாரப் பனித்திரைகளை கரைக்கும்
மார்கழி வெயிலின் கதகதப்புக்கு
காத்திருந்த ஒர் புலரியில் தான்
உன் பெயர் எழுதப்பட்டிருந்தது

விசிச் சென்ற
பூங்காற்றின் வாசனையில்
இன்னும் நிறைந்திருக்கிறேன்
உயிர்க்கூட்டின் துடிப்பில்
ஒரு இரகசியமாகவே
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
உன் பெயர்
Title: ....
Post by: Empty Dappa on July 19, 2022, 01:18:35 am
ஒரு அழகிய கவிதையை
எதிர்க்கொள்ளுகையில்
காதலாய் உயிர்ப்பெறுகிறாய் நீ

முன்னெப்போதோ நான் எழுதிய கவிதை
இன்னும் உன் புன்னகை மலரின் வாசனையையே
கொண்டிருக்கிறது

மனம் கவர்ந்த ஒரு இரவல் கவிதைக்கு பின்னாக
நீ தொலைத்த உன்னை
தேடித் தொடங்குகிறேன்

விரலுரசி முகரும் உயர்தர அத்தரின்
நறுமணமாய் நாசியில் பரவுகிறாய்

புலன்சிலிர்க்க வைக்கும்
இன்னொரு கவிதைக்காகவே
காத்திருக்கலாம் உனக்கான காதல்.
Title: நேசித்தே இரு...
Post by: Empty Dappa on July 20, 2022, 11:55:54 pm
மறுதலித்து திரும்பையிலும்,
கன்னங்களில் வழிந்திடும்
அனுமதியின்றி
விழிகள் விழுங்கிட்ட
உன் கண்ணீர் துளிகள்
மனக்கதுப்புகளில் வழிந்திருந்தை
அறிந்திருக்கிறேன்

காயங்களுக்கே பழக்கப்பட்ட
மனமொன்றை
நிலுவையில் நீ வைத்திருப்பதை
பரஸ்பரம் அறிந்தே இருக்கிறோம்

வேண்டல்களை புறந்தள்ளி
நீ கடக்குகையிலும்
உனைத் தாங்கிட காத்திருக்கும்
இரு கரங்கள் குறித்து ஒருபோதும்
உனக்கு மாற்றுக் கருத்தேதும் இருப்பதில்லை

நேசம் தவிர்த்த உன் வார்த்தைகளில்
நிஜங்களிருக்கும் சாத்தியக்கூறுகள்
அறவே இருந்ததில்லை என்பதையும்
உறுதிசெய்யப்பட்ட சோதனையொன்றின் முடிவாய்
என்னில் எங்கோ பதித்து வைத்திருக்கிறது
இந்நேசம்

கண்கள் உலர அழுது தீர்த்தும்
குருதி உறைய காயம் செய்தும்
தீர்ந்திடாத ஈரமாகவே
சுரந்து கசிகிறது காதல்

ததும்ப ததும்ப நேசித்துருகும்
உன்னை நான் கடிந்தோதுவது
எப்படிச் சாத்தியம்

நேசத்தின் போதாமைகளில்
குறைசொல்லும் அவகாசங்கள் தான் நமக்கேது

என்னை நேசித்திருப்பதை
தவிர்த்து உனக்கும் வழியேதுமில்லை
கண்மணி

இப்பிறவி தீர்ந்தும் என்னை நேசித்தே இரு...
Title: பாதை....
Post by: Empty Dappa on September 15, 2022, 10:38:37 am
பாதைகள் தடங்கல்களற்றதாக
மாறியிருக்கிறது

இலக்குகளற்ற பயணம்
என்பது போய்
குதுகூலமற்றதாக மாறி
வெளிறத் துவங்குகிறது இலக்குகள்

யாரையெல்லாம் விழிகள்
விரிய விரிய பார்த்து மலர்ந்ததோ
அவர்களை தூரமாய் பார்த்தும்
பாராமுகமாகிறேன்

தாடைகள் அகன்றிடும்
போலியான ஒரு புன்னகை போர்த்தும்
அசௌகரியங்களை விட
பரிச்சயமில்லாத இந்த பதுங்கல்கள்
பாதகமில்லை என்ற சமாதானங்களை
சாக்காக்கிக் கொள்ளலாம்

காரணம் சொல்லிக் கொள்ளும்
தேவைகள் இல்லை
என்பது கூட காரணமாகி இருக்கலாம்

வழிதூரத்தில் எங்கோ
என் பாதைகளைத் தொலைத்திருக்கிறேன் 

உண்ணவும் குடிக்கவுமான இடைநிற்றல்களும்
இளைப்பாறல்களும்
தவிர்த்து
இடற்பாடுகள் ஏதுமற்ற
வேறு யாரோ ஒருவரின்
வழித்தடத்திலேயே
நோக்கங்கள் ஏதுமின்றி
ஒரு பிரயாணம் மேற்கொண்டிருக்கிறேன்.

இன்னும் கொஞ்சம் நேரத்தில்
இலக்கு வந்துவிடும்
நான் போகவேண்டியபாதைகள் தடங்கல்களற்றதாக மாறியிருக்கிறது

இலக்குகளற்ற பயணம்
என்பது போய்
குதுகூலமற்றதாக மாறி
வெளிறத் துவங்குகிறது இலக்குகள்

யாரையெல்லாம் விழிகள் விரிய விரிய பார்த்து மலர்ந்ததோ
அவர்களை தூரமாய் பார்த்தும்
பாராமுகமாகிறேன்

தாடைகள் அகன்றிடும்
போலியான ஒரு புன்னகை போர்த்தும்
அசௌகரியங்களை விட
பரிச்சயமில்லாத இந்த பதுங்கல்கள்
பாதகமில்லை என்ற சமாதானங்களை சாக்காக்கிக் கொள்ளலாம்

காரணம் சொல்லிக் கொள்ளும்
தேவைகள் இல்லை
என்பது கூட காரணமாகி இருக்கலாம்

வழிதூரத்தில் எங்கோ
என் பாதைகளைத் தொலைத்திருக்கிறேன் 

உண்ணவும் குடிக்கவுமான இடைநிற்றல்களும்
இளைப்பாறல்களும்
தவிர்த்து
இடற்பாடுகள் ஏதுமற்ற
வேறு யாரோ ஒருவரின்
வழித்தடத்திலேயே
நோக்கங்கள் ஏதுமின்றி
ஒரு பிரயாணம் மேற்கொண்டிருக்கிறேன்.

இன்னும் கொஞ்சம் நேரத்தில் இலக்கு வந்துவிடும்
நான் போகவேண்டிய பாதைகளை
இனி எங்கே தேடுவது?பாதைகளை
இனி எங்கே தேடுவது?
Title: Re: பாதை....
Post by: SuNshiNe on September 16, 2022, 02:28:58 am
நன்று  ⭐

but seems like repeated
Title: காதலித்து மடி💜
Post by: Empty Dappa on September 18, 2022, 07:43:06 am
நீ...♥

என் தற்காலிகப் புன்னகைகளின் உருவாக்கம்.
நிரந்தர மகிழ்வின் நீட்சி.
சொற்ப கால சுதந்திரம்.
என் வாழ்நாளின் பலன்.

தொலை தூர பயணத்தின் கடைசி நிறுத்தத் துணை.
அருகே அமர்ந்த குழந்தை.
தோல் சாய்ந்த உறக்கம்.
ஏதோவோர் சங்கீதம்.

நன்னாளின் புத்தாடை.
நிறைவான நல் விருந்து.
என் காதலின் கிடாவெட்டு.
இரட்டைப் பக்க ஒரே இலை.
பந்தியில் எனக்கு மட்டும் தனிப் படையல்.

முந்நூறு கண் சிமிட்டல்கள்.
மூவாயிரம் முத்தங்கள்.
முப்பதாயிரம் தேநீர்.
மூன்று நாளைய போதை.
மொத்தமான என் கதி.

விடியலின் மொத்த விருட்சம்.
நள்ளிரவிலும் விலகாத வெளிச்சம்.
என் மழைக்கோர் குடை.
பனிக்கோர் போர்வை.
இடர்க்கோர் தீர்வு.

எனதான ஓர் பத்திரம்.
என் மெத்தையின் சோடித் தலையணை.
எனதென்று கைக்காட்ட ஓர் சொத்து.
நீயன்றி ஏதுமில்லை என்றான நியாபகம்.
Title: Re: காதலித்து மடி💜
Post by: SuNshiNe on September 19, 2022, 05:41:34 pm
மிக அருமையான கவிதை ♥️♥️
Title: Re: காதலித்து மடி💜
Post by: RajuRaju on October 12, 2022, 12:54:37 am
என் மனதை மிகவும் பாதித்தது உங்கள் கவிதை மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க வளமுடன்
Title: Re: பாதை....
Post by: RajuRaju on October 12, 2022, 03:50:59 am
Nice one I like ur story
Title: இரவின் கருணையில்✍️
Post by: Empty Dappa on November 05, 2022, 12:36:26 am
உனக்கு முன்னால்
உடைந்து அழுதிடவும் முடியும்
என்பதை விடவா
வேறொரு இயல்பாயிருத்தல்
சாத்தியப்பட்டுவிட முடியும்

காயப்பட்ட ஒரு அப்பிராணி விலங்கின் மீது
காட்டிடும் காருண்யம் போன்றல்லாத
ஒரு அக்கறையையே எதிர்நோக்குகிறேன்

உன்னை காயப்படுத்தக்கூடும்
எதிர்ப்பார்பின் இன்னொரு எதிர்வினையை
என் அன்பு நிகழ்த்திப் போகுகையில்
எதிர்கொண்டிடும் கையாலாகாத்தனங்களால்
கைசேதப்பட்ட படியே
இல்லா வைராக்கியம் ஒன்றின்
கூடுகளுக்குள்ளே நுழைந்து
நீறுகிறேன்

இயல்பாயிருத்தலும் இயல்புதொலைத்தலும்
இல்லாத ஒரு நிலையினில்
எதைக்கேட்பது என்றறியாத
அழுது ஓய்ந்த ஒரு குழந்தையின் அமைதியை தேர்கிறது
இரைச்சல்களின் சலசலப்புகள் அடங்கிடாத மனம்

பனிபடர்ந்த சருகுகளின் மீதாக
தன் அடர்வை போர்த்திக் கொள்கிறது இருள்

விடியலுக்கு முன்னாக உதிரக்கூடும்
இலைகளுக்கு மேலாகவே படரட்டும்
விடியலின் வெளிச்சக் கதிர்கள்

இந்த ஈரம் உலர்ந்திடும் சாத்தியங்களில்லை

இயல்பாயிருக்கவே விழைகிறேன்
இரவின் கருணையை வேண்டியபடி...
Title: பாரிய பிரிவுகள்
Post by: Empty Dappa on November 08, 2022, 01:57:40 am
இப்போதெல்லாம் ஒரு பிரிவினை
அத்துனை சுலபமாக,
இதோ! பரிசெனக் கையளிக்கிறார்கள்.
அதனை நாம்
ஒப்புக் கொண்டுத்தான் ஏற்கிறோமா, என்பதைப் பற்றிய
கரிசனையாவது இருப்பதில்லை.

எப்போதோ துயருறும் போது
துணை நின்றவர்கள் தான்,
இப்போது துவழ்கையில்
துரதிர்ஷ்டவசமாய்
இல்லாமல் போயிருக்கிறார்கள்.

அவர்கள் அறிவார்களா!?
"இனி இல்லை"
என்ற வார்த்தைக்குப் பின்னால்,
தனியாய் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் தனிமையைப் பற்றி?
இன்மை என்பதன் பின்னால்
பதற்றத்தோடு மறைந்திருக்கும் ஆற்றுப்படுத்தவியலாத
ஆதங்கங்கள் பற்றி?

அவர்களுக்குத் தெரியவில்லை!
பிடித்தமான ஒருவரின்
குரல் கேட்பது நின்று விட்டால்,
மனதுக்கு நெருக்கமான அத்துனையும் பிடிக்காத பட்டியலில்
சேர்ந்து விடுகிறதென்பது!

மேலும்!
குறுஞ்செய்திகளை
அத்துனை இயல்பாய்
நிறுத்திக் கொள்கிறார்கள்.
அவர்கள் அறியமாட்டார்கள்! அவையெல்லாம் வெறும்
எழுத்துக்கள் அல்ல!
விரும்பிப் படித்துப் படித்தழும்
ஆசையாய் சேகரிக்கப்படும்
உணர்வுக் குவிப்புக்கள் என்று.

"காலம் மாற்றி விடும்!
இயல்பாய் இருக்கப் பழகிக் கொள்"!
எனச் சொல்லித் திரும்புகிறார்கள்.
அவர்களுக்கு எப்படிப் புரியும்?
கடலும், காற்றும்,
வானும், மண்ணும்,
நிலையாய்
இருப்பு பெற்றிருப்பது போலத்தான்
அவர்களின் இருப்புமென்பது.

அவர்கள் அறிவார்களா?
எத்தனை முகங்களோடு
உறவாடி, உரையாடினாலும்,
அவர்களை, அவர்களின் பிரதியினை,
பிற ஒருவரிடம்
தேடியடைந்து கொள்ள முயற்சித்த பிரயத்தனங்கள் எல்லாம்,
பரிதாபமாய் தோற்றுப் போனதை.?

Title: Re: பாரிய பிரிவுகள்
Post by: SuNshiNe on November 08, 2022, 06:52:44 pm
உங்கள் கவிதை  பிரிவின் துயரத்தின் 💔அருமையான வெளிப்பாடு
நுணுக்கமான உணர்வுகள்

உங்கள்  படைப்பு மிகவும் நன்று ...

வாசித்த பின் என் மனதில் தோன்றியதோ கீழே கூறியுள்ளேன் ....




அந்த அறியாதவர்களுள்
என்னையும் அறியாமல்  அடங்கி இருப்பதை அறிந்தேன்
எனக்கு  பிடித்த  நபர்  அந்த அறியாதவர் ஆகுகையில் ....
இனி அறியாமலும் அந்த அகராதியில்  இல்லேன்
ஆகையில்,
கண்ணாடி  உணர்வுகள்  உடைய உறவுகளுக்கு
பரிசாக பிரியா  என் அன்பும்  புன்னகையும்




💔பிரிவுகள்
Title: புனிதர்கள்❤️
Post by: Empty Dappa on November 10, 2022, 06:29:21 am
நீ நலமாய் இருப்பாய்!
நீ ஆரோக்கியமாய் இருக்க வேண்டும்!
நீ மனமுடையாது தைரியமாய் இரு!
நீ மகிழ்ச்சியாய் இருந்தாலே போதும்!
உன் நல் எண்ணங்கள் நிறைவேறும்!
உன் துன்பங்கள் நீங்கும்!
முடிந்தால் என்னோடு அவைகளை
பகிர்ந்து கொள்!
அப்போதாவது மனம் சற்று ஆறும்!
உனக்காக எப்போதும் பிரார்த்திக்கிறேன்!
நீ நலமோடு இரு!

இவ்வாறு எல்லாம் கூறிக் கொண்டு,
அவ்வளவாய் நமக்கு பரீட்சியம் இல்லாத
மனிதர்கள் நிறைய,
வாழ்வில் வந்து போகிறார்கள்.
அவர்கள் கூறுவதால்
எம் பிரச்சனைகளும், துயரங்களும்,
தீர்ந்து விடாது தான்.
ஆனால்...!
அவை எல்லாம்
அவ்வப்போது தடுமாறும் மனதுக்கு இதமளிக்கிறது.

ஏனெனில்!
இங்கேயே தான்
நமக்கு மிகவும் பரீட்சியமான
பல மனிதர்கள்
கண்டும் காணாதது போல நகர்கிறார்கள்.
இங்கேயே தான்
நம்மை தெரியாத மனிதர்கள் போல,
அவர்கள் பாசாங்கு செய்து
ஒளிந்து கொள்கிறார்கள்.
நாம் இத்துனை
பழக்கம் வாய்ந்தவராய் இருந்தும்,
நம் துன்பங்களின் போது
தூரமாய் தொலைந்திருக்கிறார்கள்.

அப்படிப் பார்க்கையில்...!
அவ்வப்போது வரும்
பரீட்சியம் இல்லாத
இம்மனிதர்கள் எல்லோருமே,
நியாபகத்தில்
நிறுத்தி வைக்கப்பட வேண்டியவர்கள்.
இவர்கள் எல்லாம்
அத்துனை முக்கியமானவர்கள்.

"மன்னித்துக் கொள்" என,
பின்னொரு நாளில்
எதற்குமே உபயோகமற்ற
மன்னிப்புக் கோரல்கள்
கூறிக் கொண்டு வருபவர்களை விட,
தக்க தருணத்தில்
ஆற்றுப்படுத்தல்களோடு
வந்து சேரும் மனிதர்கள்
மிகப் புனிதமானவர்கள்
Title: வரம்❤️
Post by: Empty Dappa on November 14, 2022, 02:16:07 pm

கனம் கூடிய மனநிலையின் முற்றிய நிலையில்
உடைந்தழுகையில் கிடைக்கும் மடியில் கிடக்கும் போது
கிடைக்கும் தழுவலுக்கு நிகரான ஓர் நம்பிக்கையூட்டும்
செயலென்பது அசாத்தியமானது.

தவம் முடித்து விழித்ததைப் போன்ற அதிகாலை
விழிப்பிதுக்கத்தில் கிடைக்கும் தலைக்கோதுதலுக்கு
நிகரான ஒரு ஊக்குவிப்புச் செயலென்பது
எத்தகு வியப்புக்குரியதாய் இருக்கும் என்று
அன்று முழுதும் இருக்கும் புத்துணர்ச்சியேப் பதில் சொல்லும்.

அதிகமான சந்தோஷத்திலோ,
அடக்கி வைக்க முடியாதப் பேரின்ப நிகழ்விலோக் கிடைக்கும்
ஒரு தழுவலுக்கு நிகரான எந்தவொரு பக்குவப்படுத்தும்
அறிவுரையும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறலாம்.

ஆடிப்பாடி வெறும் களைப்பொன்றின் மட்டுமேக் காரணங்கொண்டு
கட்டிலில் மடிந்து விழுந்துக் கிடக்கையில் கிடைக்கும்
அந்த ஒரு தழுவலென்பதற்கு நிகரானதொரு நிதானமூட்டும் பண்பு
எந்த பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் இருந்திடுவதில்லை.

எதாவதொரு அதிகப்படியானத் தனிமையை உணர்ந்து
யாருமில்லாத நிலை என்ற முட்டாள்த்தனப் புலம்பல்களுக்கு
இடையில் கிடைக்கப் பெறும் திடீர் அணைப்பிற்கு நிகராக
எந்தவொரு ஆறுதல் வார்த்தையும் இருந்து விட முடியாது.

இவையெல்லாம் கிடைக்கப் பெறுவதென்பதுதான் வரம்.
இந்தத் தழுவல்களெல்லாம் படிநிலைகளுக்கு உயர்த்திச் செல்லும்.
முன்னேற்றும். நடத்தி முடிக்கும் நம்மையே, நம்மின் இயக்கத்தையே.
ஆகையால், இது போன்ற ஒன்றிரண்டுத் தழுவல்களுக்குதான்
இந்த மனம் ஏங்கி நிற்கிறது.

மனிதர்களுக்கான தேவையே சக மனிதர்கள்தான்.
வலியானவர்களை அணைப்பதும்,
பிணியானவரை பேணுவதும்
இயற்கையாகவே இயன்றதுதானே.
ஏந்திக் கொள்வோம்.!

"கண்ணீரை துடைக்கும் விரலுக்கு, மனம் ஏங்கி கிடக்குது"
Title: சர்வம் துற!
Post by: Empty Dappa on November 15, 2022, 07:06:13 am
யாரையும் புதிதாய் அறிமுகப்படுத்துவதில்லை.
யாரிடமும் என்னையும் அறிமுகப் படுத்திக் கொள்வதில்லை.
யாரிடமும் நலம் விசாரிப்பதில்லை.
யாரிடமும் சுக, துக்கங்களை விழுங்காமல் சொல்ல முடிவதில்லை.

யாரிடமும் என் சார்ந்த எதற்கும் அனுமதி கேட்பதில்லை.
யாரிடமும் ஒரு வரிக்கு மேல் வாதாடுவதில்லை.
யாரையும் பகிரங்கமாக கத்தி கூப்பிட பிடிக்கவில்லை.
யாரைப் பற்றியும் புகாரிட விரும்பவில்லை.

பிடித்தவர், பிடிக்காதவரென்ற
எந்தவொரு வரைமுறையும் சுற்றத்தாரை வைப்பதில்லை.
பிறப்பு, இறப்பென்று
எந்த சுக துக்கங்களையும் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை.
உரிமை கொண்டாட பிடிக்கவில்லை.

உறவு முறை, நட்பு முறை பாராட்ட பிடிப்பில்லை.
இதுதானென்ற நியாய, அநியாய கோட்பாடுகளை ஏற்க விருப்பமில்லை.
யாரும் கை பிடித்து அழைத்து செல்ல விரும்பவில்லை.

யார் பணமும், யார் குரலும்
இப்போதைக்கு என் தைரியமாயில்லை.
அலுப்பில்லாமல் சாப்பிட, தூங்க உடலும் விரும்பவில்லை.
மெய்வருத்த மனதும் தயங்கவில்லை.

கூடென்று ஏதுமில்லை.
சுதந்திரப் பறத்தலுக்கு சிறகுமில்லை.
கவிதை, கதை ஏதுமில்லை.
காதலுமில்லை.
கருணையுமில்லை, என்னிடத்தில் கண்ணீருமில்லை.
கடைசியில் உண்மையுமில்லை.

அன்பின் சல்லாபங்கள் வாழ்வின் எல்லை சேரும் வரை
தன்னை நிராயுதபாணியாய் பாவித்து நம்ப வைத்து
பயணப்படுத்தும் போது உடனான அத்தனையும் சலிப்புக்குள்ளாகிறது.

ஏதுமில்லை என்றானபின் வரும்
எண்ணவோட்டம் நதி போன்றது ……
Title: சமன்💗
Post by: Empty Dappa on December 01, 2022, 05:40:50 pm
போக்குவரத்து நெரிசலில் தவற விட்ட என் செருப்பை
என்னிடம் கொடுக்க கையில் தூக்கிக் கொண்டு
ஓடி வருகிறார் ஒருவர்.

செருப்பு விழுந்த பதட்டத்தில்
சட்டென வண்டியை நிறுத்தியதற்கு
அசிங்கமாய் ஏசுகிறார் பின்னாலொருவர்.

சமன் செய்ய ஒருவருக்கு மன்னிப்பும்,
இன்னொருவருக்கு அன்பும் தர வேண்டியதாகி விட்டது

மதிய உணவிற்கு காசில்லாத போது என்னிடம்
இந்த இரண்டு விசயங்கள் இருந்ததே தெரியாமல்,
நம்மிடம் எதுவுமே இல்லை போல என்று
வருத்தப்பட்டு கொண்டிருந்தேன்

உலகம் பணத்தால் அளவிடப்படுகிறது
மனிதர்களால் ஆசிர்வதிக்கப்படுகிறது
அன்பால் இயங்குகிறது
Title: அடர் அன்பி 🖤
Post by: Empty Dappa on December 06, 2022, 05:28:26 am
நீ அழகாயிருக்கிறாய் என்பேன்வெட்கப்படுவாள்
அதே நேரம் சந்தேகப்படுவாள்.நம்ப மறுப்பாள்.
நான் அழகாயிருக்கிறேன் என்பேன்.
சிரிப்பாள். ரசிப்பாள். நம்பவும் செய்வாள். பாவக்காரி.

பெரும்பாலும் மட்டம் தட்டப்படும்
என் முகவாகை கொஞ்சும் மனிதி. அடிக்கடி நீ அழகு.
உன்னில் எல்லாமே அழகு என்று
புத்துணர்ச்சிக்குள் தள்ளிக் கொண்டேயிருப்பாள்.

புதிது புதிதாய் எப்படி கவர்கவதென்று
அவளிடம் கற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு முறை அவள் கடந்த பின்னும்
மீண்டும் மீண்டும் புதிதாக்கிக் கொள்கிறாள் அவள் காதலை.

நிறைய கவிதை சொல்வாள்.
அது அவள் பேச்சிலேயே எதார்த்தாமாக வரும்.
உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா என்று கொண்டாடுவாள்.
எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா என்று வாதாடுவாள்.

அவள் வாக்கியத்தின்
ஒவ்வொரு வார்த்தையின்
ஒவ்வொரு ஆயுத எழுத்தின் மீதும்
ஆயிரம் புள்ளிகள் வைத்தது போல்
அவ்வளவு அழுத்தமாயிருக்கும் அவள் சொல்வது.

யாரோவொருவனாக எங்களை நானே தூரத்தில்
இருந்து பார்ப்பதாய் நினைத்திருக்கிறேன்.
சத்தமாய் சிரித்து நானே கேளி செய்யுமளவுக்கு தான்
அது இருக்கும்.

காதலிப்பவர்களின் சம்பாஷணைகள் எதுவுமின்றி
அவளை எளிமையாக கையாள முடியும்.
காதல் பைத்தியக்காரத்தனம் என்பதை மட்டும்
அவள் குணாதிசயங்கள் அவ்வப்போது நினைவு படுத்தும்.

மற்றபடி பெண்ணை பிரம்மிப்பாகவே
பார்த்துப் பழகிப்போன எனக்கு
இயல்பான மற்றும் கேளித்தனமான
அதே நேரம் ஆச்சரியமான விசயம்தான்
பெண்ணென்று தெரிந்தது உன்னால்தான்.

என்னால் உன்னை தாண்டியும், உன்னிலிருந்தும்,
உன்னை கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்க முடிகிறது.
மன்னித்துக் கொள்.
நீ கொட்டிச் சென்ற காதலின் அடர்த்திக்கு
என் ஆயுள் போதாது.
Title: வாழ்வின் ரசிகன்….
Post by: Empty Dappa on December 06, 2022, 08:55:07 pm
வேகமா நகர்ந்துட்டிருக்கோம்.
நேர்மையா சொன்னா நிக்காம ஓடிட்டிருக்கோம்.
சலிப்பாவே தான் நாள் கடத்துறோம்.
ஒவ்வொரு நாளோட இறுதியிலும்
இந்த நாள் இன்னும் நல்லதா அமைஞ்சிருக்கலாம்ன்னு தான் தோனுது.

நின்னு நிதானமா ஒரு நிமிஷம் யோசிச்சி பாத்தா
நாம தொடங்குன இடம் இத விட ஏதோவொரு வகையில
அழகா தெரியும்அங்கயே இருந்திருக்கலாம்ன்னு தோனும்.
ஆனா, நாம தொடங்குனப்ப அதுதான் மோசமான இடம்.

அந்த முந்தைய நாள்ல
நாம அன்றைய நாள குறை சொல்லிட்டோ,
வெறுத்துட்டோ, வேண்டா வெறுப்பா
வாழ்ந்து தொலைச்சிட்டோ தான் வந்து சேர்ந்திருப்போம்.
இன்னக்கி அது பேரழகா தெரியிது.
அந்த நாள்ல வாழ ஆசையா இருக்குது.

அன்றைக்கும் சரி. இன்றைக்கும் சரி.
பிரச்சனையும், வருத்தமும்,
ஏக்கமும், தேடலும்,
கோபமும், வலியும்,
வேதனையும் இருந்துட்டே தான் இருக்கு.
வெவ்வேற வகையா இருக்குமே
தவிற இதெல்லாம் இல்லாத ஒருத்தன பாக்க முடியாது.

இன்னக்கி நாம வாழுறது
நாளையில் இருந்து பாக்குற நமக்கு,
நேற்றைய நாள் தந்த ஏக்கத்தையே திரும்ப தரலாம்.
ரொம்பவே அழகா தெரியலாம்.
அப்ரம் ஏன் இன்றைக்கு இந்த சலிப்பெல்லாம்.

சரி முழுக்கவே பிரச்சனையா இருக்குங்குன்னு வச்சிப்போம்.
சரி பண்ண தான் பயணப்படுறோம்.
அதுக்காக தான் உழைக்கிறோம்,
ஓடுறோம். அந்த ஓட்டத்துல
நாம வருத்தத்த ஏன் காட்டிட்டே ஓடனும்.

தேவையோ, ஆசையோ, கனவோ, லட்சியமோ.
அதுக்காக போற பாதைய எவ்ளோ அழகா வச்சிக்க முடியிதோ,
அதேயளவு அழகா இந்த நாள கடத்திரலாம்.
வலி இல்லாத ஆளே கிடையாதுதான்.
அதுக்கான மருந்தாதான் ஒவ்வொரு நாளும் அமையனும்.

வாழ்க்கைங்குற வண்டி பஞ்சராயிருச்சுன்னா
அத பஞ்சர் கடை வரைக்கும் சிரிச்சிட்டே தள்ளுறோமா,
பஞ்சராயிருச்சேன்னு வருத்தப்பட்டு
அழுதுட்டே தள்றோமாங்குறது தான் விசயமே.
எப்டி தள்ளுனாலும் வண்டிய நாமதான் தள்ளனும்.

நாம ஆச தீர வாழ்ந்து சாக பிறந்தவர்கள்.
அலுப்பாய் சாக அல்ல.
ஒவ்வொரு நாளும் மேலும் உன்னை மெருகூட்டுகிறது மனிதா.
நீ வாழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் இன்னொருவரின் பேராசை.

"போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்"
Title: நீ எனக்கு ❤️‍🔥
Post by: Empty Dappa on December 09, 2022, 05:12:10 am
நீ எனக்கு எவ்வளவு நிம்மதியென்று விளக்கச் சொன்னால்,
நான் தூங்கினால் எழுப்பாமல்
நானே விழிக்கும் வரை தொல்லை
அகற்றி காப்பவளைப் போல….

நீ எனக்கு எவ்வளவு நெருக்கமென்று விளக்கச் சொன்னால்,
என் நகம் கடிப்பதற்கும்,
தலை கோதுவதற்கும் அனுமதி கேட்கத்
தேவையில்லாத உரிமையானவள் போல….

நீ எனக்கு எவ்வளவு தேடலென்று விளக்கச் சொன்னால்,
சிறைக் கைதியின் கம்பிக்கு வெளியேயான
வாழ்வின் ஏக்கம் போல!

நீ எனக்கு எவ்வளவு ஆசை என்று விளக்கச் சொன்னால்,
நெடுநாள் பசியின் முன்னே வீற்றிருக்கும்
அறுசுவை விருந்தைப் போல!…

நீ எனக்கு எவ்வளவு பிடிக்குமென்று விளக்கச் சொன்னால்,
பிறவியிலிருந்தே பிடித்துப் போயிருந்த
பால்ய காலத்து தேன் மிட்டாய் போல!

நீ எனக்கு எவ்வளவு ஆசிர்வாதமென்று விளக்கச் சொன்னால்,
ஒரேயொரு ஒளியில் மிளிரும்
அறையின் வெயிலில் தெரியும்
நுண் துகள் போல!

நீ எனக்கு எவ்வளவு அச்சமென்று விளக்கச் சொன்னால்,
வாழத் துடித்து ஏங்கிக் கிடப்பவன்
கண் முன்னே சந்திக்கும் சாவைப் போல!

நீ எனக்கு எவ்வளவு தொலைவென்று விளக்கச் சொன்னால்,
அழுத்தமான அன்னை முத்தத்தின்
இதழுக்கும் நெற்றிக்கும்
இடையேயான இடைவெளி போல!

நீ எனக்கு எவ்வளவு அமைதியென்று விளக்கச் சொன்னால்,
பசியாறி அயர்ந்துறங்கும் சஞ்சலமில்லா
குழந்தையின் ஆழ்மனம் போல!

நீ எனக்கு எவ்வளவு முக்கியமென்று விளக்கச் சொன்னால்,
என்னை மறந்து நேசித்துக் கிடக்கும்
நானே கண்டுகொள்ளப் படாத என் காதல் போல! ❣️
Title: நடைபாதை மனிதர்கள்
Post by: Empty Dappa on December 12, 2022, 05:17:16 am
மூடப்பட்ட ஒவ்வொரு கடையின் வாசலிலும்
தயங்கிக் கொண்டே ஒதுங்கிக் கிடக்கின்றன சில உயிர்கள்.

பிணியும், வலியும் பெரிதாய் தாக்காமல்
பார்த்துக் கொள்கிறது அவர்களது பசி.

காமமும், காதலும் நடைபாதை
செருப்புத் தடங்கள் மேலேயே
அட்டைப் பெட்டிகள் விரித்து அரங்கேற்றப்படுகிறது.

ஆம்புலன்ஸ் முதல் அரசாங்க வாகனம் வரை
அனைத்தையும் காவலர் ஊர்திதான் என்று
பதட்டத்துடனே கையாள்கிறது காதுகள்.

ஒவ்வொரு செருப்புச் சத்தம் கடந்து சென்ற பின்னும்
எழுந்து பார்த்து பிள்ளைகளை கணக்கிட்டுக் கொள்கிறார் தந்தை.

காணமல் போன பிள்ளையை கனவில் கண்டு
அவ்வப்போது பதறி எழுகிறாள் அம்மா.

வாகன விளக்கை பார்த்து சுதாரித்து
பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது சில முத்தங்கள்.

போர்வை போர்த்தி பச்சிளங்குழந்தையை
பசியாற்றிக் கொண்டிருக்கிறாள் தாயொருத்தி.

யாரையும் கண்டு கொள்ளாதது போல்
கடந்து கொண்டிருந்தாலும்
எனக்குள் ஓர் ஆசை மட்டும்தான்.

பகலில் மட்டுமே மழை பொழியும் என்றிருந்தால்,
எவ்வளவு நிம்மதியாய் இருந்திருக்கும்!
Title: Re: வாழ்வின் ரசிகன்….
Post by: SuNshiNe on December 14, 2022, 02:21:48 am
Nice thoughts ..
Aikk kinda motivational too

**Podaaa varuvathu varatum ** - 😎😎

Arumaiyaana kavithaigal
Thodarchiyaana pathivugal
Mikka magilchii ...

Waiting for more !!  😊

Endrum yaengi kondirukum

~ Ungal pena rasigai 🖋️
Title: வலிமை
Post by: Empty Dappa on December 14, 2022, 09:58:05 pm
நினைவுகளை மட்டும்
துணை வைத்துக் கொண்டு
வாழ்ந்து விட வேண்டும்.
போதும்...!
நினைவுகளை விட்டுச் சென்றவர்கள் கூட
அருகிருக்கத் தேவையில்லை.

ஆனால்...!
இங்கே அந்நினைவுகளே
வதைக்கும் போது
எங்கிருந்து துயரற்று வாழ்வது.

மெல்ல மெதுவாய்
பிரமிப்புக்கள் குறைந்து கொண்டு வந்து,
உயிராய் உரைந்த நேசத்தில்
ஓர் விலகல்...!
முன்னுரை எழுதி வைக்கையில் தான் தொடங்குகிறது...,
ஆரம்ப நாட்களில்
கொண்டாடித் தீர்த்த
நினைவுச் சுகங்களின் எண்ணங்கள்.

நேற்றைகளில் பற்றிப் பிடித்துக் கொண்டு,
தாங்கித் தாங்கி ஆர்ப்பாட்டமாய்
சுமந்து கொண்டு திறிந்த அன்பெல்லாம்,
இன்றைக்கு என்னவாயிற்று?
என்ற ஒற்றைக் கேள்வியை
தனக்குள் கேட்டுக் கொள்ளும் படியான
ஓர் நிலை உண்டாவதானது,
நமது நாளைகளின்
முழு இன்பங்களையும்
கொன்று விடக் கூடும்.

புறக்கணிக்கப்படுகிறோமோ என்ற மாயையான ஓர் கேள்வி
சிந்தையில் நச்சரிப்பது எப்போதெனில்...!
நம் இருப்பை தக்க வைப்பதற்காய்
செய்த மெனக்கெடல் எல்லாமே, புறந்தள்ளப்படுகிறதே
என்ற உணர்வு சலனமாடுவதால் தான்.

பல போது
பேரன்பின்
அதிகப்படியான முடிவுரைகள்
எழுதப்படுவதெல்லாம்...!
நேர்த்தியான பெருந்துயர்களை
தொட்டுத்தான்.
அதன் பிறகான நகர்வுகளை கடப்பதெற்கெல்லாம்
அலாதியான வலிமை தேவைப்படலாம்.
Title: Everything ❤️
Post by: Empty Dappa on December 16, 2022, 10:45:13 pm
உண்மையிலேயே
Everything என்பது,
நிறைவு என்று பொருள்படுகின்ற
ழுழு உணர்வை சுமந்து நிற்பது.

அத்துனை பூரண புரிந்துணர்வை கண்டுகொள்கின்ற உறவொன்றில்,
காதல் முதன்மை பெறுகிறது.
எதிலும் காதலே வியாபித்துக் கிடக்கிறது.
வற்றாத ஜீவநதி போல ஆன்மாவுக்குள் இருந்தே ஊற்றெடுத்து,
ஓட ஆரம்பிக்கின்றது.
அதனினும் சிறந்தவொன்றை
சிலாகித்துப் பேசிவிட இயலாதவாறு,
அந்தக் காதல் தன்னகத்தே
சொற்களில் வறட்சியை
உணர ஆரம்பிக்கின்றது.
அப்போதெல்லாம் பரிபூரணத்தன்மையை மாத்திரம்தான்
காதலால் உணர முடிகிறது.

இதைத்தான்...!
"உன்னை பிடிக்கின்ற அளவை
சொல்லத் தெரியாது! அல்லது,
சொல்ல இயலவில்லை!
வார்த்தைகள் வசப்படவில்லை!
ப்ளா, ப்ளா, ப்ளா,...!
என்று மனிதன் சொற்களை தேடி
தாகித்துத் தவிக்கும் உணர்ச்சிப்பூர்வமான நிமிடம்.
தன்னுடைய காதலின் அதீதத்தை, தன்னகத்தே மட்டும்
கொண்டாடி, இன்புற்றுக் கொள்ள
வாய்க்கும் மனதின் மகத்துவ நிலை.

காதலின் அழகு,
அதன் வலி,
அதன் சுகம்,
அதன் இனிமை,
அதன் மேன்மை,
அதன் பரிபூரணம்,
அதனால் ஏற்படுகின்ற சுகந்தமான காமம்,
அதன் உச்சத் தன்மையில்
உடலில் படருகின்ற பிரத்தியேக அமைதி,
காதல் தருகின்ற அடர்த்தியான இனிமை,
அதனை விடுவித்துப் பிரிகின்ற போது
ஏற்படுகின்ற அதன் தனிமை போன்ற,
காதலின் ஆழமான அனைத்து வடிவங்களையும்
Everything என்ற சொற்பதம் சற்றும் மிகையின்றி
உணரச்செய்து கொண்டே இருக்கும்.
அப்படித்தான்!
சிலவற்றை உணர்வதில் உள்ள
beauty சொல்வதில் ஈடாவதில்லை.

மனதளவில் உணர்ச்சிப்பூர்வமாக எழுகின்ற அனைத்தையும்,
அதன் எல்லை வரை சென்று அனுபவித்துவிட்டு வந்த
நிரப்பத்தை தருகின்ற ஒன்றுக்கு மட்டுமே
எவ்ரிதிங் பொருந்திப் போகிறது.
கதியென வீட்டிருப்பதும்
அதனில் மட்டுமே சாத்தியப்பாடுகிறது….


Title: Re: Everything ❤️
Post by: RiJiA on December 16, 2022, 11:40:04 pm
Hi, Unge Kavithaile Vare EVERYTHING  Its BEAUTY 👏
Title: Re: Everything ❤️
Post by: SuNshiNe on December 17, 2022, 09:58:58 pm
EVERYTHING 😊

Unga kavithaigalil intha kavithai oru Nalla  different approach

Topic selection ... Really a unique one kavingare  :)

Go ahead !!

Kavithai malaiyil nenaiya thayaar 😉😉

~Pena Rasigai 🖋️  
Title: சுயபலி❤️‍🩹
Post by: Empty Dappa on December 18, 2022, 05:49:12 am
உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல?
உன்ன இனியும் கஷ்டப்படுத்த விரும்பல!
என்னாலதான் உனக்கு அதிக கஷ்டம்!

அன்பின் இப்படியான சுயபலிக்கு
சற்றும் நெருடலின்றி தன்னை
உற்பத்திக் கொண்டு,
உங்களை நேசித்துவிடுகின்றவர்கள் கிடைத்தால்
இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்.!
அவர்களின் அன்பானது,
உங்கள் அளவில் விசாலமானது.
இது இயலாமையில் நேர்வதல்ல.
வேறு எவரிடமும் தன்னை இப்படியாய்
குற்றப்படுத்திக் கொண்டு நிற்காத அவர்கள்,
உங்களிடம் நிற்கிறார்கள் எனில்!
நீங்கள் அவர்களுக்கு அத்துனை முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.
வேறு யாருக்கும் இச்சந்தர்ப்பத்தை அவ்வளவு
எளிதில் வழங்கியிருக்க மாட்டார்கள்.
முரண்டோடு தர்க்கம் செய்து,
"நீ என்ன ரொம்ப காயப்படுத்துற"
அப்டின்னு சொல்ல முடியுமான நிலைல கூட,
"நான் உன்ன ரொம்ப காயப்படுத்துறேன்ல" அப்டிங்குற வார்த்தைல கிடைக்குற,
அன்பின் பெறுமானம் அளவற்றது.

நாமே தவறுகள் இழைத்தாலும்
அதனை பெரிதுபடுத்திக் கொண்டிராமல்,
முந்திக் கொண்டு வந்து,
சுயமரியாதை அத்தனையையும் விட்டு,
இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்..!
அவர்கள் உலகுக்குள் உங்களின் வருகையை
எப்போதும் அனுமதிக்கக் காத்திருப்பவர்கள்.
காரணமேயின்றி உங்களை
மன்னித்துக் கொண்டேயிருக்க விரும்புபவர்கள்.
உங்களின் அத்துனை பலகீனத்தையும் ஏற்றுக்கொள்ள காத்திருப்பவர்கள்.
வேறு எவருக்கும் வழங்காத நியாயங்களை,
உங்கள் விடயத்தில் மட்டும் சரியெனவே கருதுபவர்கள்.
உச்சநிலை குருட்டுத்தனத்தோடு
உங்களை அங்கீகரிப்பவர்கள்.

இப்டில்லாம் பண்ற ஒருத்தர்
நமக்கு வாய்த்தும், நாம அவுங்கள
தவற விட்றோம்னா!?
இந்த வாழ்க்கையை கொண்டாடத் தெரியாத துர்ப்பாக்கியவான் நம்மளவிட
வேற யாரும் இல்ல.
இதுக்கு மிச்சம் லைப்ல ஒன்னுமே பெருசா இன்பமா இருக்கப்போறதில்ல.

சிலர் எங்களுக்கு எவ்ளோ பெரிய அங்கீகாரத்தை
வழங்கிட்டு இருந்திருக்காங்கன்னு,
அவுங்கள தொலைச்சப்றம் தான்
வாழ்க்கை நமக்கு சில நேரம் கற்றுத் தரும்.
நம்ம மனச புரிஞ்சிக்கிட்ட யாரையும்
மிஸ் பண்ணிடாதீங்க!
மேற்கொண்டு அந்த இடத்துக்கு தகுதியான எவரும்
வாழ்க்கைல வராமலே கூட போகலாம்! சொல்றதிக்கில்ல……

Title: Re: சுயபலி❤️‍🩹
Post by: RiJiA on December 18, 2022, 02:39:21 pm
ரொம்ப  நல்ல  இருக்கு கவிதை👏👏


எனக்கு  பிடித்த  வரிகள்📜,

⭐சிலர் எங்களுக்கு எவ்ளோ பெரிய அங்கீகாரத்தை
வழங்கிட்டு இருந்திருக்காங்கன்னு,
அவுங்கள தொலைச்சப்றம் தான்
வாழ்க்கை நமக்கு சில நேரம் கற்றுத் தரும்.
நம்ம மனச புரிஞ்சிக்கிட்ட யாரையும்
மிஸ் பண்ணிடாதீங்க!
மேற்கொண்டு அந்த இடத்துக்கு தகுதியான எவரும்
வாழ்க்கைல வராமலே கூட போகலாம்! சொல்றதிக்கில்⭐
Title: Re: சுயபலி❤️‍🩹
Post by: SuNshiNe on December 18, 2022, 08:13:37 pm







❤️‍🩹








Title: கிரெடிட்கள்🫠
Post by: Empty Dappa on December 19, 2022, 04:45:50 pm
ஒருத்தர் ஒங்களுக்கு தர்ற கேரக்டர் ரீதியான
கிரடிட்டுகளை நம்பி அதுதான் ஒங்களோட
கேரக்டர்னுல்லாம்ந ம்பிக்கிட்டிருக்காதீங்க. . .
ஏன்னா.!
காலம் கடந்த பெறகு செலநேரம்
அதே நபர்களால அந்த கிரடிட்டுகள் பறிக்கப்படலாம்!
கொறச்சி மதிப்பிடப்பலாம்!
தூற்றுதலுக்கு கூட நீங்க ஆளாகலாம்!
அவங்கவங்களுக்குன்னு
நியாயங்கள் மார்ற நேரம்,
மனநில வேறுபட்ற நேரம்,
எதிர்படுகின்ற மனுஷங்களோட இயல்புகள்
மேலதான் மொதல்ல கைவைப்பாங்க.

உன்ன மாதிரி என்னய புரிஞ்சிக்கிட்ட
யாரும் இல்லன்னு சொன்னவங்க,
நீ புரிஞ்சி கிழிச்சது போதும்னு சொல்லி அழவச்சதில்லயா?
உன்னயப்போல ஒருத்தர பார்த்ததே
இல்லன்னு வியந்து பேசினவங்க,
உன்னய எல்லாம் சந்திச்சதே
என் சாபம்னு முகத்துக்கு நேரே திட்னதில்லயா?

எத்தனை காலம் ஆனாலும்
நீ இப்டியே இருன்னு நம் இயல்பை
ஆரம்பத்துல அங்கீகரிச்சவங்க,
ஏன்தானோ தெரில நீ இப்டி இருக்கன்னு
எரிச்சலோடு கேட்டு சோகப்படுத்தினதில்லயா?
ஒருகாலத்துல மனசுக்கு அவ்ளோக்கு
நெருக்கமாக இருந்த மனுஷங்க,
இன்னிக்கு "ஏனென" கேக்கக் கூட
நேரம் ஒதுக்க முடியாதவர்களாக
மாறிப் போகலயா.?

எப்பவுமே எந்த உறவின் ஆரம்பத்துலயும்
அவுங்கள சீக்கிரம் கவர்ந்துடனும்,
அவுங்களோட துரிதமா நெருங்கிடனும்,
என்ற காரணத்துக்காக எல்லாம்
அதிகம் மெனக்கெட்டு உங்களோட
மொத்த நல்ல பக்கங்களை மட்டுமே வெளிப்படுத்தாதீங்க!
அப்றம் அந்த பாசிடிவ்களை
அன்றாடம் நிறுவ முயற்சி செஞ்சிட்டே இருக்கனும்.
திட்டுவேன்! கோவப்படுவேன்! எரிச்சலடைவேன்!
சிலதை தாங்கிங்க மாட்டேன்!
போன்ற Opesit எண்ணங்களை
திடீர்னு ஒருநாள் வெளிப்படுத்துறப்ப,
உங்களுக்கு ஏலவே தரப்பட்ட கிரெடிட்கள்
எல்லாம் வீணாப்போகும்.
அழும் அளவுக்கு
கேள்விகள் கேக்குறது கூட பரவால.
ஆனா! ஏற்கனவே உயர்த்திப்பேசிய விஷயங்களை,
தாழ்வுபடுத்தி பேசறப்ப
"இவ்ளோதானா இவ்ளோ காலம்
நம்ம மேல உள்ள அபிப்பிராயங்கள்"
அப்டின்னு மனுஷன் நொந்து உடஞ்சிட்றான்…..
Title: விடியல் நீ
Post by: Empty Dappa on December 21, 2022, 01:33:09 am
எங்கிருக்கிறாய்?
எப்படி இருக்கிறாய்?
அப்படியே தான் இருக்கிறாயா?

என் காதல் உன்னிடம்
இன்னும் நலமாய் இருப்பதாக
நான் நம்பலாமா?
இந்தக் கேள்வியை மட்டும்
தவிர்த்து விடுகிறேன்.
காலத்தால் மாறாத மனிதர்களா?
எனும் பயம் அப்பிக் கொள்கிறது.

நீ சொல்லிச் சென்ற காரணிகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாயா?
அவ்வப்போது என்னை
மீட்டிப் பார்ப்பதற்கான
ஏதோவொன்றை கையில் ஏந்தி
என்னைக் கொஞ்சம்
உன்னோடு சேர்த்து
முகர்ந்து பார்த்துக் கொள்கிறாயா?
என் நியாபகத்தை
ஏற்படுத்தித்தரும் அளவுக்கு
என்னை உன் வசம் வைத்திருக்கிறாயா?

என்னை நீங்கிப் போனதன் பிற்பாடு அசாதாரண நிலையை உணர்ந்திருக்கிறாயா?
என்னாயிற்று உனக்கென
பிறர் கேட்கும் கேள்விகளை
சாதாரண புன்னகையோடு கடக்க முயன்றிருக்கிறாயா?
உறங்கவே பிடிக்காத
தலைவலி கொண்ட ஜாமங்களை நிர்ப்பந்தத்தோடு சகித்திருக்கிறாயா? கத்திக்கதறி அழ வேண்டும் போலிருப்பதை சொல்லி அழக்கூட,
நாதியற்ற தனிமைகளில் உழன்றிருக்கிறாயா?

இந்த அழைப்பேசி அழைப்பாவது
நீயாக இருந்திடக் கூடாதா? என்று, அவசரகதியில் உன் குரல் கேட்க ஓடோடி வந்து பார்த்து விட்டு...!
நீயில்லை என, நானேமாந்ததை
உறுதி செய்த பிற்பாடு,
வெறுப்பின் உச்சத்தை அடைந்து திரும்பியிருக்கிறாயா?

இத்துனை கேள்விகளுக்குமாக சேர்த்து
"ஆம்"
என மட்டும் சொல்லிவிட்டுத் திரும்பவாவது, நீ என்றாவது மறுபடி
என் முன் நிற்க வேண்டும்!

நீ வந்த வாசத்தின் தடத்தினை
இன்னும் ஒரே ஒரு முறை
பரிசளித்துவிடேன்!
மீதி சில ஆண்டுகளையும்
உன் காதலோடு கரைத்து,
காலமாகிப் போவதற்கு!

காண்பதிலெல்லாம்
உன் பிம்பங்களை நிரப்பிப் பார்த்து
ரசித்து விட்டு,
அதையள்ளி முகர்ந்து கொண்டே
உன்னோடு நகலொன்றில்
வாழ்கிற வாழ்க்கையை எண்ணி...!
"எத்துனை மதி மயங்கிய நிலையில் நானிருக்கிறேன்"
என நினைக்கையில்,
கண்ணீர் நிரம்பி வழியும்.
அப்போதும் கூட...!
"அழாதே நானிருக்கிறேன்"
என்ற உன் பழைய குரலைத்தான்
என் உணர்வுகள் தேடி அலைகிறது.

ஒரு தருணம்
எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்

Title: அதன் பிறகு❤️💛💚
Post by: Empty Dappa on December 21, 2022, 10:46:06 pm
அதன் பிறகு
கடந்து விட்ட மொத்த விசயங்களையும்
ஏதோ ஒன்றின் நிகழ்வாகவோ,
பொழுதுபோகாத பூமியின் தற்செயலாகவோ
பாவிக்கத் துவங்கியிருப்போம்.

அதன் பிறகு
அதீத அன்பு, ஆத்ம திருப்தி, கடுங்கோபம், பெருந்துயர்
என்று எதிலும் ஆட்படாத் தன்மையில் தனித்திருக்கவோ,
தியானித்திருக்கவோ தயாராயிருப்போம்.

அதன் பிறகு
முக்கியஸ்தர்களுக்கும், மரியாதைக்குரிய
பெரிய மனிதர்களென்ற சிலருக்கும்
சாதாரணர்கள் என்ற தோரணையிலான
பார்வையைக் கொடுத்திருப்போம்.

அதன் பிறகு
பெயர், புகழென்று ஓடித் திரியும்
வெண் சட்டைக் கார யோக்கியஸ்தர்களுடனான
சிறு விலகலை அத்தியாவசியமாக கடைபிடித்திருப்போம்.

அதன் பிறகு
எது எவ்வளவு பாதித்தாலும் வலிக்காமலோ,
அல்லது வலிப்பதை வெளிக் காட்டாமலோ
முடிந்தளவு அகக் கூறாய்வின் பக்குவத்திற்கு
அதனை இரையாக்கியிருப்போம்.

அதன் பிறகு
பணமென்று ஓடித் திரிந்த மனநிலை சாந்த மடைந்திருக்கும்
அல்லது அதுவே போதையாகி வெறியேறி பணத்தீயில்
விளையாட ஆசை வந்திருக்கும்.

அதன் பிறகு
முரட்டுத் தோள்களும், மிரட்டும் பாவணையும்
சற்றே கீழிறங்கி யாரென்றே தெரியாத ஏதோவொரு
குழந்தையின் அழுகையை நிறுத்த சிரிக்கத் தயாராயிருப்போம்.

அதன் பிறகு
சிலர் சாக நினைப்பார்கள்.
சிலர் சலிக்க சலிக்க வாழ்ந்து
செத்து விட நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
சிலர் வாழ்ந்து விட நினைப்பார்கள்.

அதன் பிறகென்பது
வாழ்வில் எதன் பிறகாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால்,
வாழ்வையே இரண்டாய் பிளக்கும்
பிரளயம் எல்லோர் வாழ்விலும் சாதாரணமான
அதிசயமாய் நிகழ்ந்து விடுகிறது.

அதன் பிறகு எல்லாம் மாறும் ❣️
Title: வாழ்🎭
Post by: Empty Dappa on December 23, 2022, 05:24:35 am
நான் இவ்வாழ்வின்
அகன்ற விதிகளுக்குள் இருந்து
அகப்படாதவாறு நகர்ந்திட, எத்தனிப்பதில்லை.
அதன் ஓட்டத்தில்
ஓர் அங்கமாகவே இருந்துவிட்டுப் போகத்தான்
பழகிக் கொள்கிறேன்.

என்னை தாங்கிக் கொள்வதற்கான கரங்களை
எப்போதும் நான் எதிர்ப்பார்த்ததில்லை.
எனக்குத் தெரியும்...!
எப்போதும் அவர்கள்
நான் நினைக்கின்ற போதெல்லாம் அருகிருந்து என்னை
அள்ளிக் கொள்ளப் போவதில்லை.

என் சுமைகளை
நீங்கள் கொஞ்சம்
சுமந்து கொள்ளுங்கள் என்றெண்ணி...!
பகிர்ந்தளித்து ஆறுதல் பெற்றதில்லை.
அவைகளை நான் மட்டும்தான்
சரி செய்ய வேண்டும்
என்பதற்காகத்தான்,
வாழ்வு என்மேல்
அவைகளை சுமத்தி இருக்கிறது.

இயல்புகளிலிருந்தோ
நியதிகளிலிருந்தோ
விலகிச் செயல்பட்டு,
செயற்கைகளுக்குள்
என்னை நானாகவே
திணித்துக் கொண்டதில்லை.
எனக்கு ஊர்ஜிதமாகத் தெரியும்...,
எத்துனைதான் பலத்த நடிப்புக்களை அரங்கேற்றினாலும்,
அதன் எல்லையில்
என் அடிப்படைக் குணங்களைத்தான்
இவ்வாழ்வு என்னிடம் வேண்டி நிற்கும்.

அனுதாபங்களை
பெற்றுக் கொள்வதில் எல்லாம்
எனக்கு சற்றும் உடன்பாடில்லை.
அவர்களுக்கும் அதே அனுதாபத்தை
அளிக்க நேர்கையில்...!
நான் அதில் தவறிழைத்து விட்டால்,
என்மீதான அபிப்பிராயத்தில்
சலனம் சற்றேனும் உண்டாகிவிடும்.

இதற்காகத்தான் சொல்கிறேன்...!
வாழ்வின் அவ்வப்போதைய
நிகழ்வுகளோடு, யதார்த்தத்தை ஏற்று,
ஓர் பாலைவனப் பயணியாய்
நடை போடுங்கள்.
ஏனெனில்...!
வாழ்வின் உபசரிப்பு
மிக வித்தியாசமானவை,
விநோதமானவை.
இடர்களின் நடுவே
பயணிக்கத்தான் அதிகம் நேரும்..

புன்னகை செய்!
ஏனெனில் உன் கவலைகளைக் கொண்டு
இந்த உலகினை மாற்றிவிட இயலாது்….
என்ற கலீல் ஜிப்ரானின் வரியொன்றில்,
எப்போதும் நான்துல்லியமாய் லயித்துக் கிடக்கிறேன்…..
Title: நீயென் அமைதி💚
Post by: Empty Dappa on December 23, 2022, 09:14:19 pm
நிறைய ரகசியங்கள் உள்ளது.
நிறைய கவிதைகள் உள்ளது.
மறைக்கப்பட்ட நிறைய அன்புகள் என்னுள் உள்ளது.
மறுக்கப்பட்ட நிறைய நியாயங்கள் என்னுள் உள்ளது.
மறக்க முடியாத நிறைய நினைவுகள் என்னுள் உள்ளது.
என்னோடு இன்னும் எத்தனையோ அபூர்வங்கள் நிறைந்துள்ளது.

உங்களுக்குத் தெரியாத, புரிந்து கொள்ள முடியாத
எத்தனையோ வித்தியாசமானவை
என்னுள் என்னை சிதைத்துக் கொண்டிருக்கிறது.
நீங்கள் தெரிந்து வைத்திருப்பவை போல் எத்தனையோ மடங்கு
என்னுள் தேக்கி வைக்கப் பட்டிருக்கிறது….

ஓர் வெள்ளம் கடந்த படகாய்,
புயல் கடந்த மரமாய், பேரலை கடந்த தீவாய்,
பேரிடர் கடந்த நிலமாய், என் இடர் கடந்த மனம்
கரை சேர்ந்திடும் மடி அங்கேதான்.
நீயென்ற ஓர் சாயலைத் தான் இங்கே
ஆசீர்வாதமாய் தரச் சொல்லி கேட்டிருந்தேன்.

நான் மீண்டும் சொல்லிச் சிரித்து விட்டு
இதையெல்லாம் கடந்து ஏதோவொரு
கடல் நோக்கி பயணிக்கத் துவங்கி விடுகிறேன்.
ஏதோவொரு புன்னகை முகத்திற்காக ஓடத் துவங்கி விடுகிறேன்.

ஏதோவொரு சிரிப்புச் சத்தத்திற்காக நடக்கத் துவங்கி விடுகிறேன்.
ஏதோவொரு பாடல் குரலுக்காக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடுகிறேன்.
என் தேங்கிப் போன எத்தனையோ இடுக்குகளை மறக்கடித்து வாழ வைக்க
எப்போதும் ஓர் அலாதியான காதல் உள்ளது.
அதுபோதுமென்று உன்னை நினைத்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு முறையும் உன் நியாபகத் தீவில்
நான் தனியே உலவி நிதானமடைவதை விட
பெரிய நிம்மதியைத் தேடித் தேடித்
தொலைந்து கொண்டே தான் இருக்கிறேன்.

நீயென் அமைதிக்கான இடம் ♥
Title: நலம்
Post by: Empty Dappa on December 24, 2022, 05:54:36 am
மனிதர்களை விட்டு வெகு தொலைவாகி விட்டதாக ஒரு எண்ணம்.
காதல், அன்பு, பரிமாற்றம் எதன் மீதுமே பிடிப்பில்லாத நிலைக்கு
மனம் தள்ளப்பட்டிருக்கிறது.

அதிகம் நேசித்த இன்னமும் நேசித்துக் கொண்டிருக்கிற
எத்தனையோ பேருக்கு இன்று நான் எங்கே இருக்கிறேன்,
என்ன செய்கிறேன் என்று கூட தெரியாது.

ஒரு விசயம் தெரியுமா மனிதா.
நாம் எந்தளவு ஒவ்வொரு மனிதனையும்
நேர்மறை எண்ணங்களைக் கொண்டு மதிப்பிட முயல்கிறோமோ,
அதேயளவு எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் அவர்கள்.

எல்லா மனிதருக்குள்ளும் இருக்கும் ஒரு மிருகம்
என்றேனும் வெளிப்பட்டு சாந்தமடையும்.
நாம் அடைக்கலம் கொண்டிருக்கும் ஒரு கூட்டில்
ஒருநாள் மழை பெய்யும், மறுநாள் வெயிலடிக்கும்.

எனக்கென்று யாருமில்லை என்று வருந்துவதை விட,
யாருக்கும் நான் பாரமாயில்லை
நானே என்னை பார்த்துக் கொள்கிறேன்
என்று பெருமையோடு தட்டிக் கொடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

நாம் மனிதர்களை நேசிக்காமலோ,
பிடிப்பில்லாமலோ ஆராய்வதில் துளியளவும் பயனில்லை.
இதில் எல்லாமவருக்கும் கைசேதம் தான் மிஞ்சும்.
சட்டென பிடித்து விடுங்கள். தொலைவாகி விட்டாலும் பரவாயில்லை.

இருக்கும் இறுக்கமான சூழ்நிலைகளுக்கு மத்தியில்
மனிதர்களுடனான விருப்பு, வெறுப்பு, ஆசைகளோடு
வாழ்வதை விட அவர்களுடனான நினைவுகளோடு வாழ்வது
கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்.
Title: நான்…..🖋️
Post by: Empty Dappa on December 27, 2022, 06:10:43 am
பின்னாட்களில்
இடைவெளி விட்டுச் சென்றது
உணர்த்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே...!
இப்போதெல்லாம்
இடைவெளிகளோடு
உரையாட ஆரம்பித்து விட்டேன்.

விலகலுக்கு ஒப்பான
கடினமொன்று இங்கே இருந்ததில்லை, என்பதை துள்ளியமாய்
அறிந்து கொண்டதனாலேயே...!
சற்று அந்நியமாய்
இருந்துவிட முயற்சிக்கிறேன்.

சொற்களற்ற தனிமைக்குள்
மிகுதியாய் தள்ளப்பட்டு,
குரலற்ற மெளன சம்பாஷணைகளோடு எனக்குள் நானே உளருவதை
உணர்வுகள் காட்டித் தந்த போது...!
உண்டான அழுத்தத்தை
இனி பெற்று விடக் கூடாது
என்பதாலேயே
விலகியிருக்க கற்றுக் கொண்டேன்.

நியாபகங்களின்
மிச்சத் துகள்களை வைத்துக் கொண்டு அவதிப்படும் நிலையொன்று
கிடைப்பது போதுமென
கண்ட பிறகே...!
நேசித்தலில் நியாபகத்தை
நிறுத்தி விடாதபடியாக
சட்டென நகர்ந்து செல்கிறேன்.

மரித்துப்போன இதயத்தின் மேலே மீண்டுமொறுமுறை
அன்பெனும் அமிலத்தை,
யாரும் தெளித்து விடக் கூடாது
என்பதில் கவனமாக இருக்கிறேன்.
இங்கே அருகாமையில்
ஏலவே ஓர் குமியல் வெறுமை
செத்துக் கிடக்கிறது.

மூச்சுக்குழல் அடைத்துப் போகும்
அளவுக்கு அளிக்கப்படும்
அபரிமித நேசப் பரிமாற்றங்களில் இருந்து
வெகு தொலைவில்
தொலைந்திருக்கவே
மனதை திடப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
Title: ஆழி
Post by: Empty Dappa on December 28, 2022, 06:10:11 am
மிக ஆழமான நேசங்களின் மிச்சங்கள் எப்போதும்
மிக ஆழமான வலிகளையும்
தந்துவிடத்தான் செய்கிறது.
அப்போது மட்டும் அழுவதை தவிரவோ முணங்கிக் கொண்டு
அல்லல் படுவதை தவிரவோ
எதையும் செய்யத் தோன்றுவதில்லை.

எஞ்சிப் போன காலத்திற்காகவும்
சற்று வலிகளை
சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்...!

அன்பெனும் போதைக்கு அடிமையானால்
தன்னிலை மறந்து கூட
துயர் பட நேரிடும்.
முதலில் உணர்வுகளின்
அத்தனை பலத்தையும்
மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டு,
நம்மை ஆர்ப்பரிப்பில் ஆழ்த்தி விடும்.
பிறகு மீளவே முடியாத
எல்லைக்குள் நிற்க வைத்து
வதைப்புக்குள் அடக்கி விடும்.

பல போது மிருதுவான
நெஞ்சத்துக்கு அளிக்கப்படும்
அதிகபட்ச ரணமே...!
இந்த நேசத்தின் போதை தரும்
முதல் சொட்டு ஆர்ப்பரிப்புத் தான்.
Title: தனிமை
Post by: Empty Dappa on December 29, 2022, 05:32:37 am
தனியா இருக்கேன், எனக்கு யாருமே இல்ல,
எனக்கு நா மட்டுந்தான் துணைன்னு
பொதுவா சொல்லிக்கலாம்.
உண்மையில இங்க யாருமே தனியா விடப்படுறதில்ல.
ஒரு பக்கமிருந்து இன்னொரு பக்கம்
திசை மாற்றப்படுதுன்னு வேணா சொல்லிக்கலாம்.

தனின்னு உலகத்துல யார சொல்லீற முடியும்.
வேணான்னு சொன்னாலும் யாரோவொருத்தர்
நம்மல அரவணைக்குறாங்க, நேசிக்கிறாங்க,
அன்ப தர்ராங்க, நம்ம நல்லாருக்கனும்ன்னு நினைக்கிறாங்க.

கூட்டமா ஒருத்தன கொன்னாலும்
அவனுக்காக அழுக ஆயிரம் கண்கள் இருக்கத்தான் செய்யும்.
எல்லாரும் என்னய வெறுக்குறாங்கன்னு
சொல்ற ஒருத்தனுக்காகவும் அழுது பிரார்த்திக்க
ஒரு உயிர் இருக்கும்.

அவ்ளோதான்.
இன்னமும் குழப்பாமாவே இருந்தா சிம்பிளா ஒன்னுதான்.
நமக்கு யார் இருக்கான்னு பாக்குறத விட்டுட்டு,
நம்மலாள முடிஞ்ச அளவு நாம யார் யாருக்கு
துணையா இருக்கோம்ன்னு யோசிக்கலாம்
நல்லாருக்கும்ல..!

"உலகத்தில் எவரும் தனிச்சி இல்லையே.
குழலில் ராகம், மலரில் வாசம் சேர்ந்தது போல!"
Title: Re: தனிமை
Post by: SuNshiNe on December 29, 2022, 10:03:01 am
There is many positivity hidden inside a negativity la

Antha positivity ya unga kavithai alaga veli kondu varuthu

Always manam yaarukaagavaachum yaengi kondu than iruku

Meendum oru arumaaiyana kavithai
Nandru



~ Pena rasigai
Title: முப்பெரும் வாழ்கை 🩸
Post by: Empty Dappa on December 30, 2022, 01:56:17 am
🍂

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கைகள் உண்டு.

தனிப்பட்ட சொந்த வாழ்க்கை,
பொது வாழ்க்கை,
மற்றும் அவரே அறியும் ரகசியமான வாழ்க்கை.

--மார்க்வெஸ்--

உண்மைதான் இல்லியா?
மூன்றாவது சொல்லப்பட்ட இந்த ரகசியமான வாழ்க்கையின்
சந்தோஷங்கள், துயரங்கள், கொண்டாட்டங்கள், சின்னச் சின்ன அச்சங்கள்,
அளவற்ற மகிழ்ச்சி போன்ற அனைத்துமே,
அவரவர் மனங்களுக்கு மட்டுமே சொந்தமானது.
எதுவொன்றின் பொருட்டும் அவைகளை
மனிதன் பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை.
ஏதோவொரு உந்துதலில்,
எப்போதாவது மட்டும் அதனைப்பற்றி,
தான் நம்புகின்ற ஒரு சிலரிடம் பேசக்கூடும்.

மனதிற்குள் தன்னந்தனியே நகர்ந்து கொண்டிருக்கும்
அந்த ரகசியமான வாழ்வு, அவரவரின் மன உலகுக்குள் மட்டுமே
எப்போதும் பயணிக்கிறது,
நினைத்துச் சிரிக்கிறது,
பரிதவித்து அழுகிறது, மீண்டெழுகிறது…..

Title: பகிர்தல்🥰
Post by: Empty Dappa on December 30, 2022, 10:47:57 pm
உன்னோடு பகிர்கையில் இலகுவாகிறேன்...

அளவீடுகளும் மதிப்பீடுகளும் செய்யாதவை
உன் செவியேற்றல்கள்

உன் செவிகளுக்கு இதயமுண்டு
சில நேரம் தோளும்...
கரங்களையும் அவ்வப்போது
நீட்டிக்கொள்ளும் அது

ஆதரவாய் தலைகோதவும் செய்யும்
அதன் கரங்கள்
என் வலி தீர்க்க வேண்டிவரின்
ஆயுதம் பூண்டு சமர் செய்யவும் தயாராகும்...

பகிர்தல்கள் இதமூட்டுபவை
யாரோடும் பகிரலாம் தான்..

மகிழ்வொன்றின் பகிர்தல்
சுயபுராணமாய் தெரியக்கூடும்
இல்லை பொறாமையின்
பொறியொன்றை மூட்டிப் போகலாம்

கேட்பவரின் பலவீனமான பொழுதில்
அவரை காயப்படுத்திடவும் செய்யலாம்...

வலியின் பகிர்தல்கள் புலம்பல்களாக படலாம்
சிலநேரம் சலிப்பாகலாம் இல்லை
அழுத்தமுடைக்கும் ஒரு பணிவிடையெனக் கருதி
அமைதியாக செவியுறலாம்
அல்லையேல் செயற்கையான
ஒரு புன்னகை கொண்டு சகித்தும் போகலாம்

அன்றியும் பெரும்பான்மை பொழுதுகளில்
அலைவரிசைகளின் பொருந்தா நிலைகளில்
எல்லோரின் வெளிப்பாடுகளோடும்
ஒன்றிப் போய்விடவும் முடிந்திடுவதில்லை

உனக்கப்படியல்ல

எனக்கு சரிப்படும் ஏதோ ஒன்றை
அநிச்சையாகவே செய்து கடக்கும் உன் வெளிப்பாடு

அதை உன் நுட்பத்தில் சேர்ப்பதா
இல்லை உன் நேசத்தில் சேர்ப்பதா என்பதைத் தவிர்த்து
உன்னோடு பகிர்தலில் வேறு கேள்விகளும் இல்லை எனக்கு

உன்னோடு பகிர்கையில் இலகுவாகிப் போகிறேன்.
Title: இசை🎧
Post by: Empty Dappa on January 01, 2023, 11:09:10 am
என் மனதை ஆக்கிரமிப்புச் செய்யவென்றே
சில பாடல் வரிகளை
நான் நெஞ்சோடு சேமித்து
வைத்துக் கொள்வேன்.
அவை மனிதர்களைப் போல
பல நேரம் ஏமாற்றம் தராதவை
எதிர்ப்பார்ப்புகளை தகர்க்காதவை.

என் மனம் அமைதி நாடும் போதெல்லாம்
மனதிற்கு நெருக்கத்தை ஏற்படுத்துபவை.
என் மனம் மடி நாடும் போதெல்லாம்
உறங்கிக் கொள்ள அனுமதி தருபவை
அவைகளிடம் சிறையாகும் போதெல்லாம்
நான் சுதந்திரமாய் திரிகிறேன்.

என் உணர்வுகளை
அத்துனை நேர்த்தியாய்
வெளிக்கொணர உதவுபவை.
நான் அதிகம் உரையாடல் செய்யும்
என் ரகசிய சகா!

நான் சிறகுலர்த்தி
பறக்கத் தேவைப்படும் போதெல்லாம்,
என் வானமாய்
அந்த இசை விரிந்து கொடுக்கும்.
நான் தனித்து நிற்க
நாடும் போதெல்லாம்
சிறையாய் மாறி
எனை கைது செய்து கொள்ளும்.
என் கண்ணீரை என்னிடமிருந்து
அவ்வப்போது கொஞ்சம்
வாடகைக்கு  வாங்கிச் செல்லும்.
துயரங்களை துடைத்து விடும்
கரங்களாய் மாறி நிற்கும்.
வெறுமைகளில்
மிக அன்னியோன்யமாய்
மனதோடு நெருங்கிப் பேசும்.
என் பல வன்மையான இரவுகளில்
மிக நீண்ட பேச்சுத் தோழனாக
கூடவே அமர்ந்திருக்கும்.

அவை மனிதர்களைப் போல
அவ்வப்போது
அந்நியப்பட்டுப் போவதில்லை.
மழை தூவிக் கொண்டிருப்பதை
என் சாளரத்தின் வழியே
எந்த படபடப்புமில்லாமல்
நான் ரசிக்கும் நள்ளிரவுகளில்,
என் மனதுக்கு ஒத்ததாகவே
அவை இருந்திருக்கிறது.
என் காது வழியே சென்று
என் மனதின் உயிர்ப்பை தட்டியெழுப்பி,
என் ஆன்மாவின் ஆசைகளை
அந்த மழையில் நனையச் செய்திருக்கிறது.
காலம் சென்ற என் நினைவுகளையும்,
காலாவதியான சில உறவுகளையும்,
அவ்வப்போது நினைவூட்டியிருக்கிறது.
சூழ்ந்து கிடந்த என் பயங்களுக்கு அபயமளித்திருக்கிறது.

பாறைகளின் ஈரத்திற்கும்,
பெருமழையின் உற்சவத்திற்கும்,
ஆழியின் ஆழத்திற்கும்,
ராத்திரியின் ரசனைகளுக்கும்,
நதிக்கரை கொண்ட நகரங்களுக்கும்,
என்னை கூட்டிச் சென்றிருக்கிறது.
நடைபாதை
அதிசயங்களையும்,
இரயில் பாதை
இடுக்குகளில் பூத்திருக்கும்
வெள்ளை மலர்களையும்,
இப்பிரபஞ்சத்தில்
காதல் வாழும் முடுக்குகளுக்கும்,
என்னை அழைத்துச் சென்று காட்டியிருக்கிறது.

Music_Is_The_Healing

Title: Re: இசை🎧
Post by: Sanjana on January 02, 2023, 04:31:07 am
VERY NICE POEM ;D
Title: Re: பகிர்தல்🥰
Post by: Sanjana on January 02, 2023, 04:31:26 am
NICE KAVITHAI.....
Title: Re: முப்பெரும் வாழ்கை 🩸
Post by: Sanjana on January 02, 2023, 04:32:00 am
GOOD ONE....
Title: Re: Empty Dappa Kavithaigal
Post by: Sanjana on January 02, 2023, 04:33:03 am
IVALAWU KAVITHAI PODITUKINKA...NAAN PADIKA MISS PANNIDEN.INIKU PADICHE....SUPER....KEEP GOING....
Title: Re: நான்…..🖋️
Post by: Sanjana on January 02, 2023, 04:35:05 am
AMAZING ONE....
Title: ❄️அவள்கள்❄️
Post by: Empty Dappa on January 02, 2023, 06:55:13 am
தன்னந்தனியே
அழுதழுது கூட
தீர்ந்து விடாத சோகங்களில்,
உழன்று கொண்டிருக்கும் ஒருத்தியின்
ஆகச் சிறந்த வேண்டுதல் ஒன்றுமில்லை.
அவள் உள்ளக்குமுறலில்
பாதியை சுமப்பதற்கான,
இன்னோர் உறவின்
தாங்குதலைத் தவிர.

சொல்லிவிடத் தெரியாத ஏக்கத்தை தன்னகத்தே
நிரப்பி வைத்துக் கொண்டு,
இறக்கி வைத்து விட
ஏங்கிக் கிடக்கும் ஒருத்தியின்
வலிகளுக்குத் தேவை ஒன்றுமில்லை.
தொண்டக்குள்சிக்கிக் கொண்டு தவிக்கும்
வார்த்தைகளை செவிமடுப்பதற்கான, இன்னோர் நிகரற்ற
துணையைத் தவிர.

புறக்கணித்து,
ஓரமாய் தள்ளி வைத்து,
நா பேசக்கூட
இடமளிக்கப்படாத,
ஒடுக்கி வைக்கப்பட்டவளின்
அரண்ட தனிமைக்கு
வேறொன்றும் தேவையில்லை.
ஆறுதல் உணர்த்திடத் தெரிந்த
சில மனிதர்களையும்,
விம்முதல்களை
தணித்து விடத் தயாராய் உள்ள
உறவொன்றின்
அளவற்ற நேசத்தையும் தவிர.

யாருமே புரிந்து கொள்ளவில்லையே? என்பதாய் எண்ணி,
தனக்குள்ளேயே
விசும்பிக் கொண்டிருப்பவளுக்கு...! நினைப்பதை
பேசி விடத் தேவையான,
ஓர் சில மணித்துளிகள்
போதுமாய் உள்ளது.
முழு வீச்சுடன் தன் பாரங்கள்
குறைக்கப்பட்டதாய் அவள் உணர்வதற்கு.

அலுத்துப் போய்,
விரக்தியின் எல்லைகளில்
நின்று கொண்டு,
இவ்வாழ்வு நமக்கும் ஏதோவோர்
விடுதலை மிச்சத்தை,
எப்போதாவது வழங்கி விடாதா என்று, குமுறிக் கொண்டிருக்கும்
ஒருத்தியின் கடைசி நிலைப்பாட்டுக்கு, வைத்தியமாய் எதுவுமில்லை.
அவளைச் சுற்றி உள்ள
அனைத்தும்
அன்பினால் நிரப்பப்படுவதை தவிர.

அவள்களை
அவள்களுக்கான சின்ன உலகத்தில், பிரம்மாண்டங்களாய்
உணர்த்தி விடுதலை தவிர,
அவள்களுக்குள்
அவ்வளவு பெரிதான
வேண்டுதல்கள் எதுவும் இருப்பதில்லை. அவ்வளவே தான்...!
படபடப்பில்லாமல்
வாழ்வை நகர்த்துவாள்
Title: மெய்கண்😇
Post by: Empty Dappa on January 03, 2023, 04:57:28 am
சிரிப்பை பரிசளிக்காத,
புன்னகை செய்யாத,
ஆரத்தழுவி அன்பு பாராட்டாத மனிதர்களை
ஒரு நேரத்தில் நான் நெருங்கவே அச்சப்படுவேன்
அவர்களை பயத்தின் வடிவமாகப் பார்ப்பேன்.
இனிக்க இனிக்க பேசுபவர்களை
அப்படியே நம்புவேன்.
ஏற்றும் கொள்வேன்.

குறிப்பிட்ட சில மனிதர்களுக்கான
காலத்திற்குப் பின் இனிக்கப் பேசுபவர்களை,
அசட்டுத் தனமாக புகழ்பவர்களை
சந்தேகப்படத் தொடங்கினேன்.
அவர்கள் என்னைத் தாண்டி,
என்னை பற்றி சொல்பவைகளை அறிய ஆவலானேன்.
அப்போதுதான் புகழும் வாயின் புண்களைக் கண்டேன்.

எப்போதாவது வரம்பு மீறி நம்மை பாராட்டுபவர்களை
நினைத்து நாம் அச்சப்படுவோம் அல்லவா.
கிட்டத்தட்ட அப்படிதான்.

என் தவறை சுட்டிக்காட்டி,
அறைந்து விட்டு அதே நேரம் யாரிடமும்
என்னை விட்டுக் கொடுக்காதவர்களை கண்டறிந்தேன்.
ஏன் இவ்வளவு நன்மனிதர்களை
இத்தனை புறந்தள்ளி நிறுத்தியிருக்கிறேன் என்று வருத்தமும் பட்டேன்.

இப்போதெல்லாம் எடுத்த எடுப்பில்
என் குற்றங்களை என்னிடம் சுட்டுபவரையும்,
என்றோவொரு நாள் சுட்டிக் காட்டியவரையும்
பிடிக்கத் துவங்கியிருக்கிறது.
நான் அழகாய் ஆக அவர்கள் கண்களின் வழியே
என்னைப் பார்க்க நினைக்கிறேன்……

❣️
Title: அன்பின் விருப்பம் 🥰
Post by: Empty Dappa on January 03, 2023, 05:08:54 am
கடுமையான அலுப்புக்குப்
பின் என்ன யோசிப்போம்.
கொஞ்ச நேரம் படுப்போம்.
தூங்குவோம்.
இல்லைன்னா சும்மாவாச்சும்
சுவர்ல சாஞ்சி கெடப்போம்ன்னு யோசிப்போம்ல.

கை, காலெல்லாம் நரநரத்துப் போற அளவுக்கு
வேல முடிச்சி படுத்தா அசந்து தூங்க போற நேரத்துல
தூக்கத்துக்கும், விழிப்புக்கும் நடுவுல வால் விண்மீன் மாதிரி
ஒரு சின்ன முகம் நம்ம நெனப்புல சிரிச்சிட்டே போகும்.

அது ஒரு குழந்தையோ,
அம்மாவோ,
காதலோவா கூட இருக்கலாம்.
அந்த முகத்தோட மொத்த அன்பின் பாதிப்புதான்
இந்த எல்லா அலுப்பையும் கொஞ்ச நேரம்
தள்ளி வச்சிட்டு நம்மல நாமலே அழகா,
நிம்மதியா, சந்தோஷமா உணரச் செய்யிது.

அழகான ஏதோவொன்னு தான்னு கிடையாது.
ஆத்மார்த்தமான எதுவா வேணா இருக்கலாம்.
புன்னகைக்க நினைக்கும் அந்த ஒரு நொடி,
நம்முடைய அந்த புன்னகைய பரிசளிக்க
நாம தேடுற முகம்தான் அழகானது.
அழகென்பது அன்பின் விருப்பம்.

❣️
Title: அன்புக்குரிய💞
Post by: Empty Dappa on January 03, 2023, 05:13:40 am
ஒரு கட்டத்துல
நாம எந்தவொரு அன்புக்கும் தகுதியில்லாத ஆளுன்னு
சிலருக்கு தோன வச்சிரும் வாழ்க்கை.
நாம விரும்புறத இழக்கும் போதோ,
இழந்துருவோம்ன்னு தெரிஞ்சே விரும்பும் போதோ
இப்டி தோனலாம்.

இல்லைன்னா அதற்கான தகுதியோ,
அந்த தகுதியை உருவாக்கிக்கிறதுக்கான
உடல், மன, பண வலிமையோ நம்மகிட்ட
இல்லாத இயலாமை அதை தோன வச்சிரும்.
யாருடைய அன்புக்கும் ஆளாகாத மனிதராக
யாராலயும் இருக்க முடியாதுதான்.

கண்டிப்பா யாரோவொருத்தர் நம்மல நேரடியாவோ,
மறைமுகமாவோ நேசிச்சிட்டுதான் இருப்பாங்க.
அது யாரா வேணா இருக்கலாம்.
கண்டிப்பா ஒரு மனிதனுக்குன்னு
ஒருத்தராவது அழ ஆள் இருப்பாங்க.

ஆனா, மனிதனோட முரணான இயல்பே
அவன விரும்புறத அவன் விரும்புறதில்ல
அல்லது
அவன் கண்ணுக்கே எட்டாத தூரத்துல இருக்குற
எதையோ நினைச்சி அவன் கைக்கு பக்கத்துல இருக்குற
எல்லாத்தையும் மறந்துர்ரது.

சுத்தி சாதாரண வாழ்க்கைய
ரொம்ப எளிமையா வாழ்ந்துட்டு போற
மனுஷங்களுக்கு மத்தியில,
அதே சாதாரண வாழ்க்கைய ரொம்ப போராடியும்
ஏன் இதெல்லாம் எனக்கு
இவ்ளோ கஷ்டப்பட்டுதான் கிடைக்கனுமான்னு
ஒரு வெறுப்பு வரும்ல.

அப்போதான் அவன் முடிவு பண்ணி
தனக்கு பிரியமான எல்லார்கிட்ட இருந்தும்
விலக தொடங்கி ஒரு விசயத்த அவனே உறுதிப்படுத்தி நம்பத் துவங்குறான்.
அன்புக்கு தகுதியானவன் யாரா வேணா இருக்கலாம்ன்னு
அந்த அன்ப கொடுக்குற நாமதான் முடிவு பண்ணனும்.

அதுக்கும் வரையறை,
பணம், பக்க பலமெல்லாம் பாத்தா
ஒரு உளவியல் சிக்கலான மனநிலைய
ஒருத்தனுக்குள்ள நாமலே விதைக்கிறோம்ன்னு அர்த்தம்.
பாகுபாடு இல்லாமல் ஏந்திக் கொள்ள தான் கைகள் வேண்டும்.
பிரித்தறிய அல்ல!

Title: Re: Empty Dappa Kavithaigal
Post by: Sanjana on January 18, 2023, 05:22:35 am
AGAIN A SUPERB POEM.....ROMBA NALA ITUKU....