Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
Empty Dappa Kavithaigal கொஞ்சம் கொஞ்சமாய்
அன்னியமாகிப் போய்விடும் போது
விரிவடையத் துவங்குகிறது
உன் வானம்

உனக்கான பாடலின் வரிகளை
நீ மறந்திடும் தருணத்தில்
ஈர்ப்பு தொலைத்திட்ட
ஒரு சரணத்தை
முணுமுணுத்துக் கொள்கிறேன்

நீ கேட்காத
கேள்வியொன்றின் பதிலை இன்னதென
நான் பாடமிட்டுக் கொள்ளுகையில் காலாவதியாகிப் போகிறது அக்கேள்வி

வருத்தங்களை கரைத்ததாய் புளங்காகிதப்பட்ட
ஒரு நிகழ்வை
நினைவுகளின் அடுக்கங்களில்
இன்னொரு வருத்தமாய்
பதிவு செய்து வைத்திருக்கிறேன்

கண்ணீர் உலர்ந்திட்ட
ஒரு துயராய்
நான் மாறிடுகையில்
உனக்கான பாடல் வரிகளை
பாடத் துவங்குகிறாய்

மந்தாரப் பனித்திரைகளை கரைக்கும்
மார்கழி வெயிலின் கதகதப்புக்கு
காத்திருந்த ஒர் புலரியில் தான்
உன் பெயர் எழுதப்பட்டிருந்தது

விசிச் சென்ற
பூங்காற்றின் வாசனையில்
இன்னும் நிறைந்திருக்கிறேன்
உயிர்க்கூட்டின் துடிப்பில்
ஒரு இரகசியமாகவே
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
உன் பெயர்

July 05, 2022, 02:06:11 pm
2
வழிபோக்கன் 💐💐 மௌனங்களை நீ உனதாக்குகையில்
ஒரு வழிப்போக்கன் தன் பிரயாணத்தை துவங்குகிறான்

வலிமையான தன் ஆயுதங்களை துறந்திடும் முன்னதாக
நடுங்கும் கரங்களோடு கடைசியாக வாள் வீசிக் கொள்கிறான்

மளுங்கிய அவன் வாளின் முனைகளுக்கு
இலக்குகள் என்று யாதொன்றும் இருப்பதில்லை

கனிவின் மொழிகள் கொண்டு
அவன் பாடித்துவங்கும் ஒரு போர் பரணியில்
புரிபடாத சமிக்ஞைகளையே
நோக்கம் வைக்கிறான்

கேடயங்களின் கனம் கொள்ளாத அவனது வீச்சு
ஏக்கமூறிய ஒரு நினைவு கொள்ளுதல் மட்டுமே

ஊடிக் கதவடைக்கும் வாழ்வின் முடிவிலா பக்கங்களில்
யாரும் கொண்டிட முடியாத ரகசிய அறைகளில்
அவனது ஆயுதங்கள் இனி துருப்பிடித்து நொடியட்டும்

வழிப்போக்கனின் பிரயாணங்களுக்கு தோதாக
சுய தீர்மானம் செய்து நீள்கிறது பாதை...

இரகசிய மொழியில் அவன் பாடும் பாட்டு
மறைவான அலைவரிசைகளில்
ஒலித்துக் கொண்டே இருக்கும்..

Good bye all ❤️❤️❤️

January 03, 2023, 05:34:34 am
1
பெயர்💐 என்னை என்ன செய்து விடும் உன் பெயர்??

மழை, நதி, நிலா என்றும்
இன்னும் பல பிறவென்றும்
உனக்கு பெயரிட்டுக் கொள்கிறேன்

மழையெனும்போது
மனம் நிறைத்துவிடும் மழையாகி விடுகிறாய்

நதியென மொழிகையில்
நினைவுகளில் பெருக்கெடுக்கிறாய்

நிலா என அழைக்கையில்
தனிமைகளை தணிக்கிறாய்

உன் அன்பின் அவதாரங்களை விவரித்திட
தேவதை இராசாத்தி மலர் என நீளும்
இன்னும் பல பெயர்கள் உண்டே உனக்கு

ஆயினும்
உன் பெயர் மொழிகையில்
நான் நிறைவாகிறேன்.

அத்தனையையும்
உள்ளடக்கிய பரிபூரண நிறைதல்
என்னில் உன் பெயர்.

March 09, 2023, 09:11:02 pm
1
வாழ்தலினிது❤️ நான் சேமித்துக் கொண்டு வரும் யாவும்
கடைசியில் எனக்கே
சொந்தமானதாக இராது...!

வெகு இயல்பாய்
கடைசியாகிப் போக வேண்டும்!

எக்காலத்திலும்
யார் வருகைக்காகவும்
காத்துக் கொண்டிராது
நகர்ந்து போகும்,
அமைதியானவொரு நதியினை போல...!

தான் வந்து விட்டுச்சென்ற
தடயத்தை மட்டும்,
மண் வாசனை மூலம்
விட்டுச் செல்லும்,
அப்போது காலாவதியான
பெரும் மழையை போல...!

யார் கால்களை நீட்டினாலும்
பாரபட்சமின்றி
நனைத்துப் பரவசமூட்டும்,
ஆழியின் ஆனந்த அலையை போல...!
அது நிகழ்ந்தேற வேண்டும்.

"எங்கோ ஏதோவொரு கடைசியில்
நானும் மிச்சமிருக்கிறேன்"
எனும் மீட்டல்களை,
எந்த மனதிலாவது
காலம் இருத்தி வைத்தால் மதி.

March 09, 2023, 09:15:19 pm
1
🏵️🏵️🏵️வலி🏵️🏵️🏵️ இந்த பூமிப் பெருவெளியில்
பெருந்துயரோடு,
வலிகளின் விளிம்பில்
உள்ளவனும் நம்மை கடப்பான்.
அதே வலிகளில் விரக்தியுற்று,
அமைதியை தேடியும் ஒருவன் கடப்பான்.

உள்ளே வலிகளின் ரத்தத்தில்
நீந்திக் கரை சேர துடித்து, மூழ்கி,
பரிதாபமாக வாடுபவனும்
நம்மை கடப்பான்.

மானத்தை காத்துக் கொள்ள
சாதுரியமாக வலிகளை மறைத்து,
உன்னை கடப்பவன் ஒருவன்
சில போது,
வாடாத புன்னகையை கூட உதிர்ப்பான்.

உயிரை மாய்த்துக் கொண்டால் என்னவென்று எண்ணி,
வலிகளின் பள்ளத்தாக்கில் சிக்குண்டு
மூச்சித் திணருபவனும் நடப்பான்.

வாழ்க்கைச் சாலை
அப்படி யாரிலிருந்தும்
வலிகளை ஒதுக்கி,
இன்பத்தை மட்டும் நுகர
வழி விடுவதில்லை.

நீ கடக்க வேண்டிய
மொத்த நாட்களின் பாதியையே
விழுங்கித் திண்ணும் அளவுக்கான வலிகளை பெற்றிருந்த போதும்,
அதையும் சுமந்து கொண்டேனும்
நீ நடந்தே தான் தீர வேண்டும்
என்பதுவே வாழ்வின் கட்டளை.

இங்கே நம்மை கடப்பவனுக்கும்
நாம் கடப்பவனுக்கும், நமக்கும்
தேவை ஒன்று தான்.
அப்பிக் கிடக்கும் வலிகளை
உளரிக் கொட்டி விடவும்,
கொட்டித் தீர்த்து விடவும்,
சொல்லிக் கதறி அழவேனும்
ஓர் தயவான, கனிவான
ஆத்மார்த்தமான நேசம் ஒன்று தான்.

வலிகளை பகிர்ந்து கொள்ள
யாரும் இல்லாத போது,
உண்டாகும் வலிகளைப் போன்ற
ஓர் உயிர் கொள்ளும்
அசுர வேதனை வேறேதும் இல்லை.

வலி பெற்றதே...
ஓர் மனிதன் மூலம் தான் என்றாலும்,
அதை இறக்கி வைத்து
தேற்றிக் கொள்ள தேவைப்படுவதும்,
இன்னோர் மனிதனின் தோள்கள் தான் என்பதே
இவ்வாழ்வின் அழகிய விதி.

March 12, 2023, 06:30:39 am
2
ரணம் மிக ஆழமான நேசங்களின் மிச்சங்கள் எப்போதும்
மிக ஆழமான வலிகளையும்
தந்துவிடத்தான் செய்கிறது.
அப்போது மட்டும் அழுவதை தவிரவோ முணங்கிக் கொண்டு
அல்லல் படுவதை தவிரவோ
எதையும் செய்யத் தோன்றுவதில்லை.

எஞ்சிப் போன காலத்திற்காகவும்
சற்று வலிகளை
சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்...!

அன்பெனும் போதைக்கு அடிமையானால் தன்னிலை மறந்து கூட
துயர் பட நேரிடும்.
முதலில் உணர்வுகளின்
அத்தனை பலத்தையும்
மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டு,
நம்மை ஆர்ப்பரிப்பில் ஆழ்த்தி விடும்.
பிறகு மீளவே முடியாத
எல்லைக்குள் நிற்க வைத்து
வதைப்புக்குள் அடக்கி விடும்.

பல போது மிருதுவான
நெஞ்சத்துக்கு அளிக்கப்படும்
அதிகபட்ச ரணமே...!
இந்த நேசத்தின் போதை தரும்
முதல் சொட்டு ஆர்ப்பரிப்புத் தான்.

April 07, 2023, 08:45:50 am
4
சுயம்💐 ஒருத்தவங்கள விரும்புறீங்க
அவங்களுக்காக எல்லாத்தையும் மாத்திட்டு
அவங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கீங்க.
இந்த சூழ்நிலையில அவங்க வெறும் வெறுப்பையும்,
அவமதிப்பையும் மட்டுமே தந்தாங்கன்னா நீங்களே ஒதுங்கீருங்க.

மொத்த சுதந்திரத்தையும் பறி கொடுத்து
ஒரே ஒருத்தருக்கு மட்டுமே புடிச்ச மாதிரி
இருக்க முயற்சி பண்றது முட்டள்த்தனம்.
எல்லா கட்டுப்பாட்டையும் உடைச்சி,
உங்களுக்கு நியாயம்ன்னு பட்டத,
புடிச்சத, எதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு சொன்னாங்களோ,
அதையெல்லாம் செய்ங்க.

அதுக்கு அப்ரம் வெறுப்பு அதிகமாகி
விலகி போனா போகட்டும்
புரிஞ்சி திரும்பி வந்தா வரட்டும்.
எவ்வளவு மெனக்கெட்டாலும்
நம்மல வெறுக்குறவங்கள விரும்ப வைக்க முடியாது.
அப்டியே விரும்புனாலும் அது நிலைக்காது.

பிரியத்தை திணிக்க முடியாது.
அது இயற்கையின் விளைவுகள்
போல தானே நிகழும்! ❣️

April 11, 2023, 09:32:31 pm
2
அன்பின் விதி🩷 மறக்கவியலாத ஒரு தாக்கத்தை
நமக்குத் தந்த
எந்த விஷயத்தையும் நாம வெகு சுலபமா மறந்துட்றது இல்ல!
அதன் Impact உள்ளுக்குள்ள
இருந்துட்டே இருக்கும்.
அது லைப்ல நாம சந்திச்ச வினோதமான மனிதர்களாக இருந்தாலும் சரி!
மனசுக்கு நெருக்கமாக
நாம சேர்த்து, அணச்சி வச்சிக்கிட்ட மனிதர்களாக இருந்தாலும் சரி!

சிலரோடு மட்டும் தான்
பேசிக்கிட்டே இருக்குறதுக்கும்,
எதையாவது ஒன்ன
அவுங்க கூட பரிமாறிட்டே இருக்குறதுக்கும்,
நம்ம மனசு துடிச்சிட்டே இருக்கும்.
அது அவுங்க மேல உள்ள
ஈடுபாட்டின் உயர்நிலை.
அவுங்களோடான உறவு,
ஏதாவது ஒரு வழில
என்னைக்கும் நமக்கு இருந்துட்டே இருக்கனும்ன்ற படபடப்பு,
சில போது பயமா கூட மாறும்.

கொஞ்சம் ச்சில்!
கொஞ்சம் ரிலாக்ஸ்!
இந்த பதட்டம் பயமாகி,
அந்த பயத்துக்கு ஏற்றாற்போல
அவுங்கள தவற விட்ற மாதிரி
ஒரு ஃபீல் மைண்ட்டுக்குள்ள க்ரியேட் ஆகுது.

அப்றம் என்ன?
நீ சரியா பேசல!
சரியா புரிஞ்சிக்கல!
சரியா கவனிக்கல!
நீ முன்ன மாதிரி இல்ல!
போன்ற குறைகள் தான்
நிறைய மனசுல தழும்பி நிற்கும்.

ஒரு கட்டத்துக்கு மேல
எதையெல்லாம்
நம்மளால தாங்கிங்க முடியாம போகுதோ! எதையெல்லாம்
மன முரண்டோடு உள்வாங்கி,
ஏத்துக்க முடியாம திணறுகிறோமோ!
அதை எல்லாம் சர்வ நிச்சயமாய்
சலித்துப் போனவைகளில்,
அல்லது விருப்புக் குறைந்தவைகளில்
நம் மனம் சேர்த்துக் கொள்ளும்.
ஆனா...!
அதுக்கெல்லாம் காலவரையறை இல்ல!
அடுத்த நாளே கூட அந்த சலிப்பு உடையலாம்.
அவுங்க திரும்ப வந்து பேசுற வரை தான் நம்ம கர்வம் எல்லாம் ஒட்டிக்கும்.
அதுவர நாம திட்டலாம், கதறலாம், எல்லாத்தையும் வெறுப்போடு அணுகலாம்.

எதுவுமே பற்றில்லாத போது
மறுபடி இந்த மனசு வேண்டுறது
ஒன்னே ஒன்னு தான்.!
"அவுங்க வந்து பேசினா நல்லாருக்கும்ல"

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்!
புரிதலின் அடிப்படையில்
நம்மளோட யாரெல்லாம்
கருணையோடு கரம் கோர்த்தார்களோ...! அவுங்களுக்கும் கண்டிப்பா
நமக்குள்ள இருக்குற,
அதே Impact இருந்துட்டு தான் இருக்கும்.
அதான் அன்பின் விதி.!

June 22, 2023, 03:39:22 am
3
மழை இந்த மழையிருக்கிறதே

யாரோ ஒருவரின் கரங்களில்
பற்றி கொண்ட கவலை நிரம்பிய
தேநீர் கோப்பைக்கென
விழுந்திருக்க வேண்டும்

யாரோ ஒருவரின் மகளுக்கென்றோ
யாரோ ஒருவரின் மகனுக்கென்றோ விளையாடி தீர்ப்பதற்காக
பெய்திருக்க வேண்டும்

ஏதோவொரு ஜோடிகள்
தந்து கொண்டிருக்கும்
மெல்லிய முத்தங்களுக்கென
சனனித்திருக்க வேண்டும்

எங்கேனும் நடந்து கொண்டிருக்கும்
கல்யாண நிகழ்வுக்கென வாழ்த்தை சொல்லியபடி
மண்ணில் வந்து சேர்ந்திருக்க வேண்டும்

எதாவதொரு இறுதி ஊர்வலத்தின்
தடையேற்படுத்தி விட்டு
தவித்திட வைத்திருக்க வேண்டும்

ஏதேனும் திண்ணையில்
அமர்ந்திருக்கும் முதியவர்களுக்கு
காகிதங்கள் அனைத்தையும்
கப்பலென மாற்றம் செய்து
விளையாடி மகிழ்ந்த பால்ய கால நினைவுகளை கண்முன்னே
நிறுத்தி கொண்டிருக்க வேண்டும்

யாரோ ஒருவரின் இளமைக்கால
பொழுதுகளில் முழுதும் நனைந்து
அம்மாவிடமோ அப்பாவிடமோ
அடிவாங்கிய வலிகளை
உணர்த்தியிருக்க வேண்டும்

இருக்கும் பாத்திரங்களை வைத்து
கிழிந்து போன கோணிகளை வைத்து
பன ஓலையில் வேயப்பட்ட
யாரோ ஒரு ஏழை குடிசையின்
வழியே அத்துமீறி உள்நுழைந்து
இரக்கம் ஏதுமின்றி அன்றைய இரவின் உறக்கம் தொலைத்து
ஓய்ந்து போன இந்த_மழையிருக்கிறதே

என்னைப்போல்
யாரோ ஒருவர் எழுதும்
கவிதைகளில் வெறும் வார்த்தைகளின் கோர்வைகளில்
அழகாய்முடிந்து போயிருக்க வேண்டும்   ...!

                                                       

July 01, 2023, 03:21:11 am
1