Advanced Search

Author Topic: Empty Dappa Kavithaigal  (Read 13552 times)

December 01, 2022, 05:40:50 pm
Reply #15
சமன்💗
« Reply #15 on: December 01, 2022, 05:40:50 pm »
போக்குவரத்து நெரிசலில் தவற விட்ட என் செருப்பை
என்னிடம் கொடுக்க கையில் தூக்கிக் கொண்டு
ஓடி வருகிறார் ஒருவர்.

செருப்பு விழுந்த பதட்டத்தில்
சட்டென வண்டியை நிறுத்தியதற்கு
அசிங்கமாய் ஏசுகிறார் பின்னாலொருவர்.

சமன் செய்ய ஒருவருக்கு மன்னிப்பும்,
இன்னொருவருக்கு அன்பும் தர வேண்டியதாகி விட்டது

மதிய உணவிற்கு காசில்லாத போது என்னிடம்
இந்த இரண்டு விசயங்கள் இருந்ததே தெரியாமல்,
நம்மிடம் எதுவுமே இல்லை போல என்று
வருத்தப்பட்டு கொண்டிருந்தேன்

உலகம் பணத்தால் அளவிடப்படுகிறது
மனிதர்களால் ஆசிர்வதிக்கப்படுகிறது
அன்பால் இயங்குகிறது

December 06, 2022, 05:28:26 am
Reply #16
அடர் அன்பி 🖤
« Reply #16 on: December 06, 2022, 05:28:26 am »
நீ அழகாயிருக்கிறாய் என்பேன்வெட்கப்படுவாள்
அதே நேரம் சந்தேகப்படுவாள்.நம்ப மறுப்பாள்.
நான் அழகாயிருக்கிறேன் என்பேன்.
சிரிப்பாள். ரசிப்பாள். நம்பவும் செய்வாள். பாவக்காரி.

பெரும்பாலும் மட்டம் தட்டப்படும்
என் முகவாகை கொஞ்சும் மனிதி. அடிக்கடி நீ அழகு.
உன்னில் எல்லாமே அழகு என்று
புத்துணர்ச்சிக்குள் தள்ளிக் கொண்டேயிருப்பாள்.

புதிது புதிதாய் எப்படி கவர்கவதென்று
அவளிடம் கற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு முறை அவள் கடந்த பின்னும்
மீண்டும் மீண்டும் புதிதாக்கிக் கொள்கிறாள் அவள் காதலை.

நிறைய கவிதை சொல்வாள்.
அது அவள் பேச்சிலேயே எதார்த்தாமாக வரும்.
உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா என்று கொண்டாடுவாள்.
எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா என்று வாதாடுவாள்.

அவள் வாக்கியத்தின்
ஒவ்வொரு வார்த்தையின்
ஒவ்வொரு ஆயுத எழுத்தின் மீதும்
ஆயிரம் புள்ளிகள் வைத்தது போல்
அவ்வளவு அழுத்தமாயிருக்கும் அவள் சொல்வது.

யாரோவொருவனாக எங்களை நானே தூரத்தில்
இருந்து பார்ப்பதாய் நினைத்திருக்கிறேன்.
சத்தமாய் சிரித்து நானே கேளி செய்யுமளவுக்கு தான்
அது இருக்கும்.

காதலிப்பவர்களின் சம்பாஷணைகள் எதுவுமின்றி
அவளை எளிமையாக கையாள முடியும்.
காதல் பைத்தியக்காரத்தனம் என்பதை மட்டும்
அவள் குணாதிசயங்கள் அவ்வப்போது நினைவு படுத்தும்.

மற்றபடி பெண்ணை பிரம்மிப்பாகவே
பார்த்துப் பழகிப்போன எனக்கு
இயல்பான மற்றும் கேளித்தனமான
அதே நேரம் ஆச்சரியமான விசயம்தான்
பெண்ணென்று தெரிந்தது உன்னால்தான்.

என்னால் உன்னை தாண்டியும், உன்னிலிருந்தும்,
உன்னை கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்க முடிகிறது.
மன்னித்துக் கொள்.
நீ கொட்டிச் சென்ற காதலின் அடர்த்திக்கு
என் ஆயுள் போதாது.

December 06, 2022, 08:55:07 pm
Reply #17
வாழ்வின் ரசிகன்….
« Reply #17 on: December 06, 2022, 08:55:07 pm »
வேகமா நகர்ந்துட்டிருக்கோம்.
நேர்மையா சொன்னா நிக்காம ஓடிட்டிருக்கோம்.
சலிப்பாவே தான் நாள் கடத்துறோம்.
ஒவ்வொரு நாளோட இறுதியிலும்
இந்த நாள் இன்னும் நல்லதா அமைஞ்சிருக்கலாம்ன்னு தான் தோனுது.

நின்னு நிதானமா ஒரு நிமிஷம் யோசிச்சி பாத்தா
நாம தொடங்குன இடம் இத விட ஏதோவொரு வகையில
அழகா தெரியும்அங்கயே இருந்திருக்கலாம்ன்னு தோனும்.
ஆனா, நாம தொடங்குனப்ப அதுதான் மோசமான இடம்.

அந்த முந்தைய நாள்ல
நாம அன்றைய நாள குறை சொல்லிட்டோ,
வெறுத்துட்டோ, வேண்டா வெறுப்பா
வாழ்ந்து தொலைச்சிட்டோ தான் வந்து சேர்ந்திருப்போம்.
இன்னக்கி அது பேரழகா தெரியிது.
அந்த நாள்ல வாழ ஆசையா இருக்குது.

அன்றைக்கும் சரி. இன்றைக்கும் சரி.
பிரச்சனையும், வருத்தமும்,
ஏக்கமும், தேடலும்,
கோபமும், வலியும்,
வேதனையும் இருந்துட்டே தான் இருக்கு.
வெவ்வேற வகையா இருக்குமே
தவிற இதெல்லாம் இல்லாத ஒருத்தன பாக்க முடியாது.

இன்னக்கி நாம வாழுறது
நாளையில் இருந்து பாக்குற நமக்கு,
நேற்றைய நாள் தந்த ஏக்கத்தையே திரும்ப தரலாம்.
ரொம்பவே அழகா தெரியலாம்.
அப்ரம் ஏன் இன்றைக்கு இந்த சலிப்பெல்லாம்.

சரி முழுக்கவே பிரச்சனையா இருக்குங்குன்னு வச்சிப்போம்.
சரி பண்ண தான் பயணப்படுறோம்.
அதுக்காக தான் உழைக்கிறோம்,
ஓடுறோம். அந்த ஓட்டத்துல
நாம வருத்தத்த ஏன் காட்டிட்டே ஓடனும்.

தேவையோ, ஆசையோ, கனவோ, லட்சியமோ.
அதுக்காக போற பாதைய எவ்ளோ அழகா வச்சிக்க முடியிதோ,
அதேயளவு அழகா இந்த நாள கடத்திரலாம்.
வலி இல்லாத ஆளே கிடையாதுதான்.
அதுக்கான மருந்தாதான் ஒவ்வொரு நாளும் அமையனும்.

வாழ்க்கைங்குற வண்டி பஞ்சராயிருச்சுன்னா
அத பஞ்சர் கடை வரைக்கும் சிரிச்சிட்டே தள்ளுறோமா,
பஞ்சராயிருச்சேன்னு வருத்தப்பட்டு
அழுதுட்டே தள்றோமாங்குறது தான் விசயமே.
எப்டி தள்ளுனாலும் வண்டிய நாமதான் தள்ளனும்.

நாம ஆச தீர வாழ்ந்து சாக பிறந்தவர்கள்.
அலுப்பாய் சாக அல்ல.
ஒவ்வொரு நாளும் மேலும் உன்னை மெருகூட்டுகிறது மனிதா.
நீ வாழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் இன்னொருவரின் பேராசை.

"போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்"

December 09, 2022, 05:12:10 am
Reply #18
நீ எனக்கு ❤️‍🔥
« Reply #18 on: December 09, 2022, 05:12:10 am »
நீ எனக்கு எவ்வளவு நிம்மதியென்று விளக்கச் சொன்னால்,
நான் தூங்கினால் எழுப்பாமல்
நானே விழிக்கும் வரை தொல்லை
அகற்றி காப்பவளைப் போல….

நீ எனக்கு எவ்வளவு நெருக்கமென்று விளக்கச் சொன்னால்,
என் நகம் கடிப்பதற்கும்,
தலை கோதுவதற்கும் அனுமதி கேட்கத்
தேவையில்லாத உரிமையானவள் போல….

நீ எனக்கு எவ்வளவு தேடலென்று விளக்கச் சொன்னால்,
சிறைக் கைதியின் கம்பிக்கு வெளியேயான
வாழ்வின் ஏக்கம் போல!

நீ எனக்கு எவ்வளவு ஆசை என்று விளக்கச் சொன்னால்,
நெடுநாள் பசியின் முன்னே வீற்றிருக்கும்
அறுசுவை விருந்தைப் போல!…

நீ எனக்கு எவ்வளவு பிடிக்குமென்று விளக்கச் சொன்னால்,
பிறவியிலிருந்தே பிடித்துப் போயிருந்த
பால்ய காலத்து தேன் மிட்டாய் போல!

நீ எனக்கு எவ்வளவு ஆசிர்வாதமென்று விளக்கச் சொன்னால்,
ஒரேயொரு ஒளியில் மிளிரும்
அறையின் வெயிலில் தெரியும்
நுண் துகள் போல!

நீ எனக்கு எவ்வளவு அச்சமென்று விளக்கச் சொன்னால்,
வாழத் துடித்து ஏங்கிக் கிடப்பவன்
கண் முன்னே சந்திக்கும் சாவைப் போல!

நீ எனக்கு எவ்வளவு தொலைவென்று விளக்கச் சொன்னால்,
அழுத்தமான அன்னை முத்தத்தின்
இதழுக்கும் நெற்றிக்கும்
இடையேயான இடைவெளி போல!

நீ எனக்கு எவ்வளவு அமைதியென்று விளக்கச் சொன்னால்,
பசியாறி அயர்ந்துறங்கும் சஞ்சலமில்லா
குழந்தையின் ஆழ்மனம் போல!

நீ எனக்கு எவ்வளவு முக்கியமென்று விளக்கச் சொன்னால்,
என்னை மறந்து நேசித்துக் கிடக்கும்
நானே கண்டுகொள்ளப் படாத என் காதல் போல! ❣️

December 12, 2022, 05:17:16 am
Reply #19
நடைபாதை மனிதர்கள்
« Reply #19 on: December 12, 2022, 05:17:16 am »
மூடப்பட்ட ஒவ்வொரு கடையின் வாசலிலும்
தயங்கிக் கொண்டே ஒதுங்கிக் கிடக்கின்றன சில உயிர்கள்.

பிணியும், வலியும் பெரிதாய் தாக்காமல்
பார்த்துக் கொள்கிறது அவர்களது பசி.

காமமும், காதலும் நடைபாதை
செருப்புத் தடங்கள் மேலேயே
அட்டைப் பெட்டிகள் விரித்து அரங்கேற்றப்படுகிறது.

ஆம்புலன்ஸ் முதல் அரசாங்க வாகனம் வரை
அனைத்தையும் காவலர் ஊர்திதான் என்று
பதட்டத்துடனே கையாள்கிறது காதுகள்.

ஒவ்வொரு செருப்புச் சத்தம் கடந்து சென்ற பின்னும்
எழுந்து பார்த்து பிள்ளைகளை கணக்கிட்டுக் கொள்கிறார் தந்தை.

காணமல் போன பிள்ளையை கனவில் கண்டு
அவ்வப்போது பதறி எழுகிறாள் அம்மா.

வாகன விளக்கை பார்த்து சுதாரித்து
பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது சில முத்தங்கள்.

போர்வை போர்த்தி பச்சிளங்குழந்தையை
பசியாற்றிக் கொண்டிருக்கிறாள் தாயொருத்தி.

யாரையும் கண்டு கொள்ளாதது போல்
கடந்து கொண்டிருந்தாலும்
எனக்குள் ஓர் ஆசை மட்டும்தான்.

பகலில் மட்டுமே மழை பொழியும் என்றிருந்தால்,
எவ்வளவு நிம்மதியாய் இருந்திருக்கும்!

December 14, 2022, 02:21:48 am
Reply #20

SuNshiNe

Re: வாழ்வின் ரசிகன்….
« Reply #20 on: December 14, 2022, 02:21:48 am »
Nice thoughts ..
Aikk kinda motivational too

**Podaaa varuvathu varatum ** - 😎😎

Arumaiyaana kavithaigal
Thodarchiyaana pathivugal
Mikka magilchii ...

Waiting for more !!  😊

Endrum yaengi kondirukum

~ Ungal pena rasigai 🖋️
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

December 14, 2022, 09:58:05 pm
Reply #21
வலிமை
« Reply #21 on: December 14, 2022, 09:58:05 pm »
நினைவுகளை மட்டும்
துணை வைத்துக் கொண்டு
வாழ்ந்து விட வேண்டும்.
போதும்...!
நினைவுகளை விட்டுச் சென்றவர்கள் கூட
அருகிருக்கத் தேவையில்லை.

ஆனால்...!
இங்கே அந்நினைவுகளே
வதைக்கும் போது
எங்கிருந்து துயரற்று வாழ்வது.

மெல்ல மெதுவாய்
பிரமிப்புக்கள் குறைந்து கொண்டு வந்து,
உயிராய் உரைந்த நேசத்தில்
ஓர் விலகல்...!
முன்னுரை எழுதி வைக்கையில் தான் தொடங்குகிறது...,
ஆரம்ப நாட்களில்
கொண்டாடித் தீர்த்த
நினைவுச் சுகங்களின் எண்ணங்கள்.

நேற்றைகளில் பற்றிப் பிடித்துக் கொண்டு,
தாங்கித் தாங்கி ஆர்ப்பாட்டமாய்
சுமந்து கொண்டு திறிந்த அன்பெல்லாம்,
இன்றைக்கு என்னவாயிற்று?
என்ற ஒற்றைக் கேள்வியை
தனக்குள் கேட்டுக் கொள்ளும் படியான
ஓர் நிலை உண்டாவதானது,
நமது நாளைகளின்
முழு இன்பங்களையும்
கொன்று விடக் கூடும்.

புறக்கணிக்கப்படுகிறோமோ என்ற மாயையான ஓர் கேள்வி
சிந்தையில் நச்சரிப்பது எப்போதெனில்...!
நம் இருப்பை தக்க வைப்பதற்காய்
செய்த மெனக்கெடல் எல்லாமே, புறந்தள்ளப்படுகிறதே
என்ற உணர்வு சலனமாடுவதால் தான்.

பல போது
பேரன்பின்
அதிகப்படியான முடிவுரைகள்
எழுதப்படுவதெல்லாம்...!
நேர்த்தியான பெருந்துயர்களை
தொட்டுத்தான்.
அதன் பிறகான நகர்வுகளை கடப்பதெற்கெல்லாம்
அலாதியான வலிமை தேவைப்படலாம்.

December 16, 2022, 10:45:13 pm
Reply #22
Everything ❤️
« Reply #22 on: December 16, 2022, 10:45:13 pm »
உண்மையிலேயே
Everything என்பது,
நிறைவு என்று பொருள்படுகின்ற
ழுழு உணர்வை சுமந்து நிற்பது.

அத்துனை பூரண புரிந்துணர்வை கண்டுகொள்கின்ற உறவொன்றில்,
காதல் முதன்மை பெறுகிறது.
எதிலும் காதலே வியாபித்துக் கிடக்கிறது.
வற்றாத ஜீவநதி போல ஆன்மாவுக்குள் இருந்தே ஊற்றெடுத்து,
ஓட ஆரம்பிக்கின்றது.
அதனினும் சிறந்தவொன்றை
சிலாகித்துப் பேசிவிட இயலாதவாறு,
அந்தக் காதல் தன்னகத்தே
சொற்களில் வறட்சியை
உணர ஆரம்பிக்கின்றது.
அப்போதெல்லாம் பரிபூரணத்தன்மையை மாத்திரம்தான்
காதலால் உணர முடிகிறது.

இதைத்தான்...!
"உன்னை பிடிக்கின்ற அளவை
சொல்லத் தெரியாது! அல்லது,
சொல்ல இயலவில்லை!
வார்த்தைகள் வசப்படவில்லை!
ப்ளா, ப்ளா, ப்ளா,...!
என்று மனிதன் சொற்களை தேடி
தாகித்துத் தவிக்கும் உணர்ச்சிப்பூர்வமான நிமிடம்.
தன்னுடைய காதலின் அதீதத்தை, தன்னகத்தே மட்டும்
கொண்டாடி, இன்புற்றுக் கொள்ள
வாய்க்கும் மனதின் மகத்துவ நிலை.

காதலின் அழகு,
அதன் வலி,
அதன் சுகம்,
அதன் இனிமை,
அதன் மேன்மை,
அதன் பரிபூரணம்,
அதனால் ஏற்படுகின்ற சுகந்தமான காமம்,
அதன் உச்சத் தன்மையில்
உடலில் படருகின்ற பிரத்தியேக அமைதி,
காதல் தருகின்ற அடர்த்தியான இனிமை,
அதனை விடுவித்துப் பிரிகின்ற போது
ஏற்படுகின்ற அதன் தனிமை போன்ற,
காதலின் ஆழமான அனைத்து வடிவங்களையும்
Everything என்ற சொற்பதம் சற்றும் மிகையின்றி
உணரச்செய்து கொண்டே இருக்கும்.
அப்படித்தான்!
சிலவற்றை உணர்வதில் உள்ள
beauty சொல்வதில் ஈடாவதில்லை.

மனதளவில் உணர்ச்சிப்பூர்வமாக எழுகின்ற அனைத்தையும்,
அதன் எல்லை வரை சென்று அனுபவித்துவிட்டு வந்த
நிரப்பத்தை தருகின்ற ஒன்றுக்கு மட்டுமே
எவ்ரிதிங் பொருந்திப் போகிறது.
கதியென வீட்டிருப்பதும்
அதனில் மட்டுமே சாத்தியப்பாடுகிறது….



December 16, 2022, 11:40:04 pm
Reply #23

RiJiA

Re: Everything ❤️
« Reply #23 on: December 16, 2022, 11:40:04 pm »
Hi, Unge Kavithaile Vare EVERYTHING  Its BEAUTY 👏

December 17, 2022, 09:58:58 pm
Reply #24

SuNshiNe

Re: Everything ❤️
« Reply #24 on: December 17, 2022, 09:58:58 pm »
EVERYTHING 😊

Unga kavithaigalil intha kavithai oru Nalla  different approach

Topic selection ... Really a unique one kavingare  :)

Go ahead !!

Kavithai malaiyil nenaiya thayaar 😉😉

~Pena Rasigai 🖋️  
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

December 18, 2022, 05:49:12 am
Reply #25
சுயபலி❤️‍🩹
« Reply #25 on: December 18, 2022, 05:49:12 am »
உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல?
உன்ன இனியும் கஷ்டப்படுத்த விரும்பல!
என்னாலதான் உனக்கு அதிக கஷ்டம்!

அன்பின் இப்படியான சுயபலிக்கு
சற்றும் நெருடலின்றி தன்னை
உற்பத்திக் கொண்டு,
உங்களை நேசித்துவிடுகின்றவர்கள் கிடைத்தால்
இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்.!
அவர்களின் அன்பானது,
உங்கள் அளவில் விசாலமானது.
இது இயலாமையில் நேர்வதல்ல.
வேறு எவரிடமும் தன்னை இப்படியாய்
குற்றப்படுத்திக் கொண்டு நிற்காத அவர்கள்,
உங்களிடம் நிற்கிறார்கள் எனில்!
நீங்கள் அவர்களுக்கு அத்துனை முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.
வேறு யாருக்கும் இச்சந்தர்ப்பத்தை அவ்வளவு
எளிதில் வழங்கியிருக்க மாட்டார்கள்.
முரண்டோடு தர்க்கம் செய்து,
"நீ என்ன ரொம்ப காயப்படுத்துற"
அப்டின்னு சொல்ல முடியுமான நிலைல கூட,
"நான் உன்ன ரொம்ப காயப்படுத்துறேன்ல" அப்டிங்குற வார்த்தைல கிடைக்குற,
அன்பின் பெறுமானம் அளவற்றது.

நாமே தவறுகள் இழைத்தாலும்
அதனை பெரிதுபடுத்திக் கொண்டிராமல்,
முந்திக் கொண்டு வந்து,
சுயமரியாதை அத்தனையையும் விட்டு,
இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்..!
அவர்கள் உலகுக்குள் உங்களின் வருகையை
எப்போதும் அனுமதிக்கக் காத்திருப்பவர்கள்.
காரணமேயின்றி உங்களை
மன்னித்துக் கொண்டேயிருக்க விரும்புபவர்கள்.
உங்களின் அத்துனை பலகீனத்தையும் ஏற்றுக்கொள்ள காத்திருப்பவர்கள்.
வேறு எவருக்கும் வழங்காத நியாயங்களை,
உங்கள் விடயத்தில் மட்டும் சரியெனவே கருதுபவர்கள்.
உச்சநிலை குருட்டுத்தனத்தோடு
உங்களை அங்கீகரிப்பவர்கள்.

இப்டில்லாம் பண்ற ஒருத்தர்
நமக்கு வாய்த்தும், நாம அவுங்கள
தவற விட்றோம்னா!?
இந்த வாழ்க்கையை கொண்டாடத் தெரியாத துர்ப்பாக்கியவான் நம்மளவிட
வேற யாரும் இல்ல.
இதுக்கு மிச்சம் லைப்ல ஒன்னுமே பெருசா இன்பமா இருக்கப்போறதில்ல.

சிலர் எங்களுக்கு எவ்ளோ பெரிய அங்கீகாரத்தை
வழங்கிட்டு இருந்திருக்காங்கன்னு,
அவுங்கள தொலைச்சப்றம் தான்
வாழ்க்கை நமக்கு சில நேரம் கற்றுத் தரும்.
நம்ம மனச புரிஞ்சிக்கிட்ட யாரையும்
மிஸ் பண்ணிடாதீங்க!
மேற்கொண்டு அந்த இடத்துக்கு தகுதியான எவரும்
வாழ்க்கைல வராமலே கூட போகலாம்! சொல்றதிக்கில்ல……


December 18, 2022, 02:39:21 pm
Reply #26

RiJiA

Re: சுயபலி❤️‍🩹
« Reply #26 on: December 18, 2022, 02:39:21 pm »
ரொம்ப  நல்ல  இருக்கு கவிதை👏👏


எனக்கு  பிடித்த  வரிகள்📜,

⭐சிலர் எங்களுக்கு எவ்ளோ பெரிய அங்கீகாரத்தை
வழங்கிட்டு இருந்திருக்காங்கன்னு,
அவுங்கள தொலைச்சப்றம் தான்
வாழ்க்கை நமக்கு சில நேரம் கற்றுத் தரும்.
நம்ம மனச புரிஞ்சிக்கிட்ட யாரையும்
மிஸ் பண்ணிடாதீங்க!
மேற்கொண்டு அந்த இடத்துக்கு தகுதியான எவரும்
வாழ்க்கைல வராமலே கூட போகலாம்! சொல்றதிக்கில்⭐
« Last Edit: December 18, 2022, 03:16:19 pm by RiJiA »

December 18, 2022, 08:13:37 pm
Reply #27

SuNshiNe

Re: சுயபலி❤️‍🩹
« Reply #27 on: December 18, 2022, 08:13:37 pm »







❤️‍🩹








ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

December 19, 2022, 04:45:50 pm
Reply #28
கிரெடிட்கள்🫠
« Reply #28 on: December 19, 2022, 04:45:50 pm »
ஒருத்தர் ஒங்களுக்கு தர்ற கேரக்டர் ரீதியான
கிரடிட்டுகளை நம்பி அதுதான் ஒங்களோட
கேரக்டர்னுல்லாம்ந ம்பிக்கிட்டிருக்காதீங்க. . .
ஏன்னா.!
காலம் கடந்த பெறகு செலநேரம்
அதே நபர்களால அந்த கிரடிட்டுகள் பறிக்கப்படலாம்!
கொறச்சி மதிப்பிடப்பலாம்!
தூற்றுதலுக்கு கூட நீங்க ஆளாகலாம்!
அவங்கவங்களுக்குன்னு
நியாயங்கள் மார்ற நேரம்,
மனநில வேறுபட்ற நேரம்,
எதிர்படுகின்ற மனுஷங்களோட இயல்புகள்
மேலதான் மொதல்ல கைவைப்பாங்க.

உன்ன மாதிரி என்னய புரிஞ்சிக்கிட்ட
யாரும் இல்லன்னு சொன்னவங்க,
நீ புரிஞ்சி கிழிச்சது போதும்னு சொல்லி அழவச்சதில்லயா?
உன்னயப்போல ஒருத்தர பார்த்ததே
இல்லன்னு வியந்து பேசினவங்க,
உன்னய எல்லாம் சந்திச்சதே
என் சாபம்னு முகத்துக்கு நேரே திட்னதில்லயா?

எத்தனை காலம் ஆனாலும்
நீ இப்டியே இருன்னு நம் இயல்பை
ஆரம்பத்துல அங்கீகரிச்சவங்க,
ஏன்தானோ தெரில நீ இப்டி இருக்கன்னு
எரிச்சலோடு கேட்டு சோகப்படுத்தினதில்லயா?
ஒருகாலத்துல மனசுக்கு அவ்ளோக்கு
நெருக்கமாக இருந்த மனுஷங்க,
இன்னிக்கு "ஏனென" கேக்கக் கூட
நேரம் ஒதுக்க முடியாதவர்களாக
மாறிப் போகலயா.?

எப்பவுமே எந்த உறவின் ஆரம்பத்துலயும்
அவுங்கள சீக்கிரம் கவர்ந்துடனும்,
அவுங்களோட துரிதமா நெருங்கிடனும்,
என்ற காரணத்துக்காக எல்லாம்
அதிகம் மெனக்கெட்டு உங்களோட
மொத்த நல்ல பக்கங்களை மட்டுமே வெளிப்படுத்தாதீங்க!
அப்றம் அந்த பாசிடிவ்களை
அன்றாடம் நிறுவ முயற்சி செஞ்சிட்டே இருக்கனும்.
திட்டுவேன்! கோவப்படுவேன்! எரிச்சலடைவேன்!
சிலதை தாங்கிங்க மாட்டேன்!
போன்ற Opesit எண்ணங்களை
திடீர்னு ஒருநாள் வெளிப்படுத்துறப்ப,
உங்களுக்கு ஏலவே தரப்பட்ட கிரெடிட்கள்
எல்லாம் வீணாப்போகும்.
அழும் அளவுக்கு
கேள்விகள் கேக்குறது கூட பரவால.
ஆனா! ஏற்கனவே உயர்த்திப்பேசிய விஷயங்களை,
தாழ்வுபடுத்தி பேசறப்ப
"இவ்ளோதானா இவ்ளோ காலம்
நம்ம மேல உள்ள அபிப்பிராயங்கள்"
அப்டின்னு மனுஷன் நொந்து உடஞ்சிட்றான்…..

December 21, 2022, 01:33:09 am
Reply #29
விடியல் நீ
« Reply #29 on: December 21, 2022, 01:33:09 am »
எங்கிருக்கிறாய்?
எப்படி இருக்கிறாய்?
அப்படியே தான் இருக்கிறாயா?

என் காதல் உன்னிடம்
இன்னும் நலமாய் இருப்பதாக
நான் நம்பலாமா?
இந்தக் கேள்வியை மட்டும்
தவிர்த்து விடுகிறேன்.
காலத்தால் மாறாத மனிதர்களா?
எனும் பயம் அப்பிக் கொள்கிறது.

நீ சொல்லிச் சென்ற காரணிகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாயா?
அவ்வப்போது என்னை
மீட்டிப் பார்ப்பதற்கான
ஏதோவொன்றை கையில் ஏந்தி
என்னைக் கொஞ்சம்
உன்னோடு சேர்த்து
முகர்ந்து பார்த்துக் கொள்கிறாயா?
என் நியாபகத்தை
ஏற்படுத்தித்தரும் அளவுக்கு
என்னை உன் வசம் வைத்திருக்கிறாயா?

என்னை நீங்கிப் போனதன் பிற்பாடு அசாதாரண நிலையை உணர்ந்திருக்கிறாயா?
என்னாயிற்று உனக்கென
பிறர் கேட்கும் கேள்விகளை
சாதாரண புன்னகையோடு கடக்க முயன்றிருக்கிறாயா?
உறங்கவே பிடிக்காத
தலைவலி கொண்ட ஜாமங்களை நிர்ப்பந்தத்தோடு சகித்திருக்கிறாயா? கத்திக்கதறி அழ வேண்டும் போலிருப்பதை சொல்லி அழக்கூட,
நாதியற்ற தனிமைகளில் உழன்றிருக்கிறாயா?

இந்த அழைப்பேசி அழைப்பாவது
நீயாக இருந்திடக் கூடாதா? என்று, அவசரகதியில் உன் குரல் கேட்க ஓடோடி வந்து பார்த்து விட்டு...!
நீயில்லை என, நானேமாந்ததை
உறுதி செய்த பிற்பாடு,
வெறுப்பின் உச்சத்தை அடைந்து திரும்பியிருக்கிறாயா?

இத்துனை கேள்விகளுக்குமாக சேர்த்து
"ஆம்"
என மட்டும் சொல்லிவிட்டுத் திரும்பவாவது, நீ என்றாவது மறுபடி
என் முன் நிற்க வேண்டும்!

நீ வந்த வாசத்தின் தடத்தினை
இன்னும் ஒரே ஒரு முறை
பரிசளித்துவிடேன்!
மீதி சில ஆண்டுகளையும்
உன் காதலோடு கரைத்து,
காலமாகிப் போவதற்கு!

காண்பதிலெல்லாம்
உன் பிம்பங்களை நிரப்பிப் பார்த்து
ரசித்து விட்டு,
அதையள்ளி முகர்ந்து கொண்டே
உன்னோடு நகலொன்றில்
வாழ்கிற வாழ்க்கையை எண்ணி...!
"எத்துனை மதி மயங்கிய நிலையில் நானிருக்கிறேன்"
என நினைக்கையில்,
கண்ணீர் நிரம்பி வழியும்.
அப்போதும் கூட...!
"அழாதே நானிருக்கிறேன்"
என்ற உன் பழைய குரலைத்தான்
என் உணர்வுகள் தேடி அலைகிறது.

ஒரு தருணம்
எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்