மௌனத்தில் நனைந்த நினைவுகள்
எழுத்து பிறக்காத விரல்களில்,
மெதுவாய் தொட்ட ஒரு தொடுதல்—
அந்த நொடியே
என் வாழ்வின் முதல் நினைவாய் நின்றது…
அந்த தொடுதல் போயினாலும்,
அதன் வெப்பம் மட்டும்
இன்னும் உள்ளத்தில் கரைகிறது…
பேசாத சொற்கள் கூட,
ஒரு சிரிப்பின் ஒளியில்
உயிர் பெற்ற நாட்கள்…
அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும்,
என்னுள் ஒரு உலகம் கட்டியது…
தொலைவில் நின்ற ஒவ்வொரு தருணமும்,
அந்த உலகத்தை மெதுவாக உடைத்தது…
புரியாத பாடங்கள் கூட,
ஒரு குரலில் தெளிந்தது…
இன்று அந்த குரல் மட்டும் இல்லை…
விழுந்த தருணங்களில்,
எழுப்பிய கரம் நினைவில் இருந்தாலும்,
அந்த கரம் இனி இல்லை என்பதே வலி…
பேருந்து பயணங்களில்,
நெருக்கமாக இருந்த அமைதி—
பேசாமல் கூட பல உணர்வுகள் சொன்னது…
பக்கவாட்டில் திரும்பிப் பார்த்த பார்வைகள்,
இன்று நினைவாக மட்டுமே மீண்டும் வருகிறது…
தொடர்வண்டி பயணங்களில்,
கூட்டத்தின் நடுவிலும்
ஒரே உருவம் தான் தெரிந்தது…
இன்று அதே கூட்டத்தில் நின்றாலும்,
கண்கள் தேடும் உருவம் இல்லை…
அருகில் இருந்த நேரம் நின்றது,
இன்று நேரம் மட்டும் ஓடுகிறது…
நிலையம் தோறும் பிரிந்த தருணங்கள்,
இன்று முடிவில்லா வெறுமை…
சொல்லப்படாத காதல்,
மௌனத்தில் மறைந்தாலும்—
இதயம் அதை மறக்கவில்லை…
நினைவுகள் மட்டும் மீதமாய்,
மெதுவாய் கண்ணீராக மாறுகிறது…
காதல் என்றால்—
பிரிந்த பின்பும்
உள்ளத்தில் உயிரோடு இருப்பதே… ✨