Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-022 ★உழைத்து உழைத்து
நித்தமும் உழைத்து
ஓய்ந்து விடாமல்... சோர்ந்து விடாமல் உழைத்து சிந்தும் வியர்வையில் வாழ்வை கரைத்து.... உயிர் போகும் நொடி வரை உழைக்கும் நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள் இதோ....~~~

உழைக்கும் கரங்காலாய் நீ இருக்க சொல்லில் சொல்ல முடியாது உழைப்பாளியின் மகிமையை.....
படிப்பு மாறலாம் ...
துறைகள் மாறலாம்...
சேவைகள் மாறலாம்....
ஆனால் உழைப்பு மட்டும் மாறதே....

விழிகளில் தூக்கம் தொலைத்து கைகள் சிவக்க, கால்கள் கடுக்க.... வீட்டிற்காய், வூறுக்காய், நாட்டிற்காய் உழைத்து மடியும் உமக்கு நன்றி சொல்ல இந்த நாள்....

வறுமைபட்டு, கஷ்டப்பட்டு,காயப்பட்டு
இஷ்டப்பட்டு கஷ்டப்படும் தொழிலாளிகளே  உம்மை மறந்தவர்களுக்கு நினைவூட்டும் அந்த இனிய நாள் இன்று...

தொழிலாளிகள் இல்லாவிடின் முதலாளி ஏது... முதலாளியின் கெளரவம் தொழிலாளி கொடுத்த  வியர்வை முத்துக்கள்... வியர்வை முத்துக்களாய் சிந்தியதால் பவளமாய் மின்னுகின்றனர் முதலாளிகள்.... உமக்கு நன்றி சொல்லவே இந்த நாள்....

 இலட்சியங்கள் ஏதுமில்லை.... உழைப்பை இலட்சியமாய் கொண்டு பூமியில் எங்கும் பூக்களாய் பூத்து குலுங்கும்  உழைப்பாளிகளே உமக்கு நன்றி சொல்ல இந்த நாள்....

வஞ்சனை செய்யா நெஞ்சத்தோடு....சிவந்த கரம் நீட்டி உழைக்கும் உங்கள் கரம் பற்றி பிடித்து சொல்லுகின்றேன்... உடல் அளவில் நீங்கள் காயாப்பட்டாலும் மனதளவில் நீங்கள் நிம்மதியாய் வாழ்வீர்கள்... முதலாளிகளை உருவாக்கும் தொழிலாளிகளே... உம்மை மறக்க நினைக்கவில்லை...
உங்கள்  உழைப்பால் எங்களை உயர செய்த எங்கள் சொந்தகாரர் நீங்கள்...(முதலாளிகளை உருவாக்கும் தொழிலாளிகளே... உம்மை மறக்க நினைக்கவில்லை... உங்கள்  உழைப்பால் எங்களை உயர செய்த எங்கள் சொந்தகாரர் நீங்கள்...

மீண்டும் ஒரு முறை உம் சிவந்த கரம் தொட்டு உமக்கு இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்களை சொல்ல கடமை பற்றியிருக்கின்றேன் நான்....

April 30, 2023, 11:32:02 am
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 My NNR
29.05

May 24, 2023, 01:54:38 pm
1