Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-054  (Read 1335 times)

May 19, 2025, 06:22:18 pm
Read 1335 times

RiJiA

கவிதையும் கானமும்-054
« on: May 19, 2025, 06:22:18 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-054


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: Today at 02:47:02 pm by RiJiA »

May 20, 2025, 06:36:56 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-054
« Reply #1 on: May 20, 2025, 06:36:56 am »

கண்ணீரும் பரிசாக...




மோதிக்கொண்ட மழைமேகம்
தூறல் போடும் மண்ணில்...

மலர்ந்த பூவும் உதிர்ந்துவிடும்
ஒருநாள் மண்ணில்...

நம் மனதில் துளிர்விட்ட காதலை
கத்தரிகொண்டு வெட்டியது ஏனோ...

உன்னிடம் எனக்கு உரிமை உண்டென...

உரிமை எடுத்துக்கொண்டேன் உன்னிடம்...

எடுத்து கொண்ட உரிமையே எதிரியாக எனக்கு...

நீ அழுதாள் அழுவதற்கும்
சிரித்தாள் சிரிப்பதற்கும்...

உன் வீட்டு கண்ணாடி
மட்டுமல்ல நானும் இருக்கிறேன்...

உன்வீட்டு கண்ணாடி
உரிமைகூட எனக்கில்லை என்று...

நானும் உணர்ந்தேன் உன்னால்...

உரிமை இருக்கும் இடத்தில்
கோபம் சண்டை உருவெடுக்கும்...

உரிமை இல்லாத இடத்தில் கோபம்
சண்டையும் அமைதிகொள்ளும்...

உன்னோடு வாதாட என்னால் முடியவில்லை...

நானும் உரிமை இல்லாதவனாக
விலகியே இருக்கிறேன் உன்னால்....

நான் இறக்கும் வரை உன்னை மட்டுமே...

காதலித்து கொண்டு இருப்பேன்...

உன்னோடு வாழ துடிக்கும் என் இதயத்தை...

நீ புரிந்து கொண்டது அவ்ளோதானா...

காலம் உனக்கு உணர்த்தும் கண்மணி...

விதியிடம் சொல்லி இருக்கிறேன்...

நம் பந்தம் மறுஜென்மமும் தொடரும் என்று...

உன் முகத்தை பார்க்க வேண்டும்...

இனி எப்போது முடியும் என்னுயிரே...

நான் உன்னுடன் கைகோர்த்து செல்லவும்...

உன்னுடன் தினம் தினம் சிரித்து பேசவும்...

எனக்கு துணையாக இருப்பது கனவுகள்தான்...

கனவு என்பது யாருக்கு பொய்யோ
எனக்கு மட்டும் உண்மை...

எங்கிருந்தோ வந்து அன்பை
தந்து சென்றுவிட்டாய் நீ...

கண்ணீரும் பரிசாக இன்று எனக்கு...

உன் காதோர மச்சத்தை...

தொட்டு தொட்டு பார்க்கும் ஜிமிக்கியும்...

எனக்காக நீ உன் கைகளில் வரைந்த என் பெயரின்  வடுவையும்...

இனி நான் எப்போது
பார்ப்பேன் என்னுயிரே...

உடையுண்ட என் இதயத்தை மீண்டும் மீண்டும் கோர்த்து வைத்து துடிக்க வைக்கிறேன் என்றும் உன் நினைவலைகள் என்னை விட்டு செல்லாதிருக்க....

என்றும் உன் நினைவெனும் கனவுகளுடன் நான்..🌹

May 21, 2025, 07:38:13 pm
Reply #2

Neelavaanam

Re: கவிதையும் கானமும்-054
« Reply #2 on: May 21, 2025, 07:38:13 pm »
நாவினாற் சுட்ட வடு

உலகம் முழுவதும் பரவி இருப்பது காதல்
காதல் இல்லாத மனிதன் இல்லை, காதல் இல்லாத விலங்குகளும் இல்லை
இதயத்தின் பரிமாற்றம் காதல், உணர்ச்சிகளின் புரிதல் காதல்
விட்டுக்கொடுத்து வாழ்வது காதல், உறவின் முறையை வலுவாக்குவது காதல்
இன்றுவரை காதலின் சின்னமாக இருப்பது இதயம்தான் 🧡
அந்த இதயம் நொறுங்குவதற்குக் காரணமும் காதல்தான் 💔
பிடித்த பெண் வேண்டாம் என்றதும் அதன் வேதனை இதயத்தை அல்லவா சென்றடைகிறது அதன் வேதனை இதயத்தை அல்லவா சென்றடைகிறது...
நண்பனிடம் நெடுநாள் பழகிப் பிரியும்போது ஏற்படும் வேதனையைத் இந்த லேசான இதயம் எப்படித் தாங்கிக்கொள்கிறது...
நம்மைத் தாலாட்டிச் சீராட்டிக் கடினப்பட்டு வளர்க்கும் பெற்றோர்களின் பிரிவினை இந்த இதயம் இன்னும் துடித்துக்கொண்டே இருக்கிறதே ஆச்சரியம்தான்!
சகோதர சகோதரிகளாகப் பல வருடம் ஒன்றாக வாழ்ந்து திருமணத்தின்போது நம்வீட்டுத் தேவதை நம்மைவிட்டுச்செல்லும்போது வரும் துயரத்தை இ ந்தச் சின்ன இதயம் எப்படித் தாங்குகிறது!
வேறுபட்ட மனிதர்களைச் சந்திக்கிறோம், இனம் மதம் மொழிகள் தாண்டி அனைவரையும் ஒன்று சேர்ப்பது இதயத்தின் உள்ள காதல்தான்
ஏன் நமது GTC யில் கூட அண்ணனாகத் தங்கையாக நண்பர்களாகப் பழகி வருவதற்குக் காரணம்கூட இந்த மென்மையான இதயத்தில் இருக்கும் காதல்தான்
ஒருநாள் காணவில்லை என்றாலும் ஏன் வரவில்லை என்று துடிக்கும் இதயம்...
இந்த இதயம் நொறுங்குவதற்கு முக்கியக் காரணம் அளவுகடந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு...
காதல் தெரியாதவர்களிடம் இதை எதிர்பார்த்து இதயத்தை நாமே உடைக்கிறோம்..
காதலில் இதயங்கள் பரிமாற்றம் நடக்கும். காதல் உடைந்தால் இதயங்களில் மாற்றம் ஏற்படும்
கூரான ஆயுதத்தால் இதயத்தைக் கிழித்தால் கூட அதைச் சரிசெய்ய மருத்துவர்கள் உள்ளனர் இந்த உலகத்தில்
மருத்துவரால் கூட குணப்படுத்த முடியாத  இதயத்தின் காயம் மனிதனின் சொல். மருத்துவரால் கூட குணப்படுத்த முடியாத  இதயத்தின் காயம் மனிதனின் சொல்.
என்ன ஒரு அதிசயம், சிறிய நாக்கிற்கு எத்துணை வலிமை
இதயத்தை அல்லவா தாக்குகின்றது
சிந்திப்போம், நமது இதயத்தின் காதலைச் சிறகடித்துப் பறக்கவிடுவோம்
நமது சொல்லினைக் கட்டுப்படுத்திப் பிறரின் இதயத்தைப் பலவீனப்படுத்தாமல் பார்த்துக்கொள்வோம்
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு."
இதைப் புரிந்து நடந்தால் நண்பா நண்பி புகைப்படத்தில் பார்ப்பதுபோல
இதயத்திற்குக் காயமும் ஏற்படாது, கட்டும் தேவைப்படாது.


நீலவானம்


May 23, 2025, 08:10:18 pm
Reply #3
Re: கவிதையும் கானமும்-054
« Reply #3 on: May 23, 2025, 08:10:18 pm »
இதயம் கொண்ட காதல்

உடைந்து போன இதயத்தில்
உறைந்து போன நினைவுகள் ,
நிறைந்து இருந்த நிம்மதியெல்லாம்
நிமிஷத்தில் நிலையற்று போனதடி....

உன்னை காணாத மனம்
மரணத்தை ருசித்ததடி,
சுற்றி பலர் இருந்தும்
சுயநினைவற்று போனேனடி,
விட்டுச்சென்றவள் உன் நினைவால்
விடையம் அற்றுபோனேனடி...

காதலில் திளைத்த இதயத்தில்
காயங்கள் தந்து போனாயடி,
காலங்கள் கடந்த பின்னும்
கனவுகள் கலைந்த பின்னும்
காத்திருந்தேனடி ...

இரக்கமற்ற காதல் வலி
இதயத்தை உடைத்ததடி,
இருந்தாலும் நான்
இறக்கவில்லை...

உன்னால் உடைந்த இதயம்
வலுவானது,

நீ இல்லா வாழ்கை பழகி
போனது.....

இயல்பு நிலையில் நான்
உணர்தேன் ,வியந்தேன் என் வலுவான
இதாயம் கண்டு,
இரக்கமற்றவளுக்கானது
என்னிதயமல்ல,
எதிர்காலம் உண்டு அதில்
என்வளும் உண்டு அவளுக்கென
உயிர் பெற்றதடி என்னிதயம்....
.......

நன்றி

உங்கள் நண்பன் God_Particle



May 24, 2025, 06:12:09 am
Reply #4
Re: கவிதையும் கானமும்-054
« Reply #4 on: May 24, 2025, 06:12:09 am »
என் வலியின் அடையாளம்
இது ஒரு நிலை காணாத பதிவு…
பிறரை சிரிக்க வைத்த நாட்களில்
நான் அழுத சுவடிதான் இது.

மௌனத்தின் மொழியில் பதிந்த
மனம் கிழிந்த கவிதை…
பார்க்க ஒரு வரி போல் தெரிந்தாலும்,
படிக்க ஒரு வாழ்க்கை போதும்.

Title: காதலின் கானல் நதி

ஏழு ஆண்டுகள் எழுதப்பட்ட ஓர் நூல்,
அது முடிந்தது ஒரு கதையாய்,
ஆனால் பிறந்தது…ஒரு கவிதையாய்.

ஏங்கிய என் விழிகளில் நீர் சுமக்க,
ஏதோ ஒரு கனவில் மட்டும் நீ என் காதலியாக!!!

இங்கே எல்லாம் இருக்கிறது….
இனிமையான வீடு, உயர்ந்த வேலை,
உணவு, உரிமை.
இல்லாதது ஒன்றே ஒன்று….
இரவிலும் பகலிலும்
என் சுவாசத்தின் அரைபாதியாகிய
நீ… நானும்… நாமும்.

நீ பேசிக்கொண்டே இருக்கிறாய்,
தொலைவில் இருந்தும் விசாரிக்கிறாய்,
இருந்தும் நான் உனதில்லை என ஒப்புகொண்டவள் நீ…

ஆனால் ஏன்?

என் பக்கம் நிழலாய் நடக்கிறாய்?

ஏன் இன்னும் கவனிக்கிறாய்?
ஏன் நம் கையில் ஏதுமில்லை எனச் சொல்லிக்கொண்டே,
என் வாழ்க்கையின் துணையாய் நிற்கிறாய்??

நம் கடைசி பயணம்….
பேருந்தின் ஒரு பயணக் காட்சி.
நானோ நின்றேன்…
நீயோ சென்றாய்.

நான் நினைத்தது…
என்னை விட்டு சென்றது
ஒரு பேருந்து மட்டும்தான்…

ஆனால் இல்லை…
அந்த சுழற்சியில் சுழன்றது சக்கரம் மட்டும் அல்ல,
நீயே… என் காதலியான நீயும்
அதோடு சென்றுவிட்டாய்.

நான் சாலையில் நின்றேன்,
உன் திரும்ப வராமையின்
ஒவ்வொரு சத்தத்தையும்
நினைவாய்க் கேட்டுக்கொண்டே…

நீ ஒரு வலி… ஆனாலும் மருந்து.
நீ ஒரு புண்… ஆனாலும் பாசமாய்.
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும்,
நிம்மதி.
அதே நேரம்,
நிம்மதியில்லா ஓர் நிலவை போல் நான்…

“நீ ஏன் இப்படி நடக்கிறாய்?”
எனக்கே தெரியவில்லை…
நிழலாக வாழ,
நேசித்தபடி விலக,
நினைத்தபடி மறக்க,
இது காதலா?

உனக்கு புரியவில்லையா இந்த வேதனை!

நீ நேசிக்கிறாய் இருந்தும் விலகுகிறாய்.
நீ நினைக்கிறாய் இருந்தும் நெருங்க மறுக்கிறாய் .
நீ வாழ்த்துகிறாய் இருந்தும் என்ன பலன்,
கடந்து செல்ல என் பக்கம் பாதை இல்லை.

இதுதானா உன் காதல்.
இருந்தும் இதுதான்,
என் நரகம்.

வெற்றி என் கையிலிருந்தும்
வெறுமையாக உணர்கிறேன்…
நீயின்றி!!

என் எல்லா துன்பங்களிலும்
நீ பின்னால் நின்றாய்…
என் எல்லா தவறுகளிலும்
நீ கண்டிப்பாய் இருந்தாய்!!!

என் எதிர்பார்ப்புகளை நீ தாண்டினாலும்,
நீ என் நிழலுக்கே ஒளியாய் இருக்கிறாய்.
இருக்கட்டும்… பரிதாபம்தான்.
தொலைவில் நீ இருப்பதை தாங்கிக்கொண்டேன்,
என்னால் முடியாதென்றும் தெரிந்தபோதும்
நீயே என் காதலியென்று நம்பிக்கையோடு இருந்தேன்.

நான் விரும்பிய அன்பில்,
நீ சுடர்விட்டு விலகினாய்…
என் உயிரின் ஓரத்தில் நீ இருந்தாலும்,
என் வசமாக இருக்காத கானல் நீர் போல் நீ…

எட்ட முடியாத நிழலாய்,
என் ஆசைகளைக் கரைத்தாய்.

நீ விட்டுப் போனது ஒரு நாள்…
ஆனால் நான்…. நீயில்லாத நாட்களைக் கடக்க
இன்று வரை முயல்கிறேன்.

Always peace ✌️
Harry Potter ❤️
« Last Edit: May 25, 2025, 04:51:01 am by Harry potter »

May 24, 2025, 09:22:09 am
Reply #5
Re: கவிதையும் கானமும்-054
« Reply #5 on: May 24, 2025, 09:22:09 am »
Tittle Card ~கடவுள் அளித்த மறு உயிர்


மாலை நிழல்கள் மெதுவாக வீசும் நேரம் அது,

அந்தச் சாலையிலோ!

மனம் கனிந்த ஐந்தே வயது நிரம்பிய பொன் வண்ணச்சாரம்

பாதையில் ஏதும் கவனிக்காமல் வேகமாக ஓடிக்
ஓடிக்கொண்டிருந்தாள்

ஒரு நிமிடம், ஓரங்கால் மாறிய அந்த நொடியில்,

திடீர் உச்சத்தில் மோதி விழுந்தால் அவள்

வெடிக்கும் சத்தம்,
கண்ணீர் கலந்த கூச்சல்கள்,
அசைவில்லாத கைகளும் கால்களும்,

மருத்துவமனையின் வெறும் வெளிச்சத்தில்,
ஒரு வாழ்க்கை சிதறியதை உணர்ந்தாள் அவள்.,

அவளுடைய சிறிய மார்பு மெதுவாக உயர்த்தி இறக்கின,

வெளிச்சம் மறைந்த அறையின் மடியில்,
மருத்துவர்கள் விரல்களை வெற்றிடத்தில் சுழற்றினார்கள்

கண்கள் தேடியவை நம்பிக்கையின் ஒரு சிறு ஒளி மட்டுமே.!

ஆனால் நிமிடங்கள் ஓடி விட்டன,

சில நேரங்களில்!

விடாமுயற்சி வீழ்ந்துவிடும் மிதமான உவமை போல.

அவளின் விழிகளின் மேல் சாய்ந்தது வெற்றிடம்

அவளது கனவுகள் துளிர் விடுகிறது கனவுகளாய் மட்டுமே..,

அந்தக் கணத்தில் உலகமே சுழன்று கொண்டிருக்கும் பொழுது அவளுடைய உலகம்
மட்டும்,,! சுழலாமல்  நின்று போனது

மனம் கண்ட வெறுமையை அந்த கண்களும் கண்டது
அவளது விழிகள் மூடப்பட்டன

புகும் இருள் சூழ்ந்தது அந்த அறையை! 

இருந்தும்
.........................,,,,,,,..............................,,,,,,,........,,,,,,........,.........
சுழலும் உலகத்தின் கடிகார முட்களின் ஓசை சற்று கேட்கிறது!

ஒரு வண்ணத் தெளிவு போல,
அந்தக் கதிர் அவளுடைய உள்ளம் தீட்டியது,

கரம் ஈட்டிய அந்த கதிர் வெளிச்சம்
அந்த அறையை தத்தெடுத்துக் கொண்டன ,,

அவள் உயிர்த்தெழுந்தார் ஒரு புதிய ஜீவனின் தொடக்கம்,,

ஒரு நிகழ்வின் நிழல் கடந்து பிறந்த மறுஉயிர்!

ஐந்தே வயதை உடைய பொன் வண்ணச்சாரம் மீண்டும் மலர்ந்தது!! (God's Child)


#The_Child_Rises_Started_From_Here❤️⚡️
« Last Edit: May 24, 2025, 10:24:34 am by புகழ் »

May 24, 2025, 11:08:01 am
Reply #6

Misty Sky

Re: கவிதையும் கானமும்-054
« Reply #6 on: May 24, 2025, 11:08:01 am »
"உடைந்த என் இதயம் பேசுகிறேன்"
"கண்ணீரில் கரைகிறேன், கவிதையில் வாழ்கிறேன்,
உடைந்த என் இதயத்தின் வலியை
உரைக்கிறேன்"

"வானவில்லின் வர்ணங்களெல்லாம் கரைந்து போன அந்தக் கணம்,
வசந்த காலத்தின் பசுமையெல்லாம் கருகிச் சாம்பலான அந்தக் கணம்,
என் இதயமெனும் கூட்டில் நான் கட்டியிருந்த வண்ணக் கூடுகள் இடிந்து போன அந்தக் கணம்"

"என் உடைந்த இதயம்,
ஓயாத வலி,
கல்லால் எறிந்தாய்,
சின்னா பின்னமாய்,
வலியில் துடித்தேன்"
"உன் நினைவுகள் மட்டும்,
நீங்காத பொக்கிஷம்,
என் பேசாத மௌனம்,
என் கண்ணீரின் ஈரம்,
என் மனதின் பாரம்"

"நிழலாக நீயும் என் நினைவில் வாழ்கிறாய்,
மறக்க நினைத்தும் என் மனம் கேட்கவில்லை,
காலத்தின் கைகள் ஆறுதல் தரவில்லை"
"என் கண்ணீரின் சுவடுகள் காய்ந்திடவில்லை,
உன் நினைவில்லாமல் ஒரு பொழுதுமில்லை"
"உன் நினைவுகள் நிழலாய் என்னைப் பின் தொடர்கின்றன,
என் ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் அது உன் பெயரை உச்சரிக்கின்றன"

"இரவுகள் நீள்கின்றன,
ஏனோ என் கண்கள் உன்னையே தேடி அலைகின்றன"
"தனிமையின் தாலாட்டில் என் இதயம் உறங்க மறுக்கிறது,
உன் நினைவுகளின் சுழலில் என் இதயம் சிக்கித் தவிக்கிறது"
"என் உயிர் மூச்சிலும்,
என் இதயத் துடிப்பிலும்,
உன் ஞாபகம் நிறைந்திருக்கிறது"
"கண்களில் கண்ணீர், நதியாய் பெருகி என் கன்னங்களில் வழிகிறது,
உடைந்த இதயத்தின் ஓலமாய் என் கண்ணீர் துளிகள் அது மண்ணில் விழுகிறது"

"என் ஒவ்வொரு கண்ணீரின் துளியிலும் ஆயிரமாயிரம் ஏக்கங்கள்,
என் ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் எண்ணிலடங்கா சோகங்கள்"
"காலங்கள் கரைந்தாலும் என் இதயத்திலுள்ள உன் நினைவுகள் அழிவதில்லை,
என் விழிகளுக்குள் சிறைப்பட்ட உன் அழகிய பிம்பம் மங்குவதில்லை"
"நீ என்னை விட்டுப் பிரிந்த போதும், என் இதயம் உன்னைத் தேடும்,
ஒரு ஜென்மம் முழுவதும் இந்த ஏக்கத்தில் என் இதயம் வாடும்"
"இழந்ததை நினைத்து அழுவதில் பயனில்லை என்று என் மனம் சொல்கிறது,
ஆனால், என் இதயமோ அதை ஏற்க மறுக்கிறது"
"நீ இல்லாத வாழ்க்கை ஒரு வெறுமையான பாலைவனம்,
எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை உன் அன்பின் சோலைவனம்"
"ஒருவேளை காலம் மருந்தாகலாம், அல்லது அதுவும் பொய்யாகலாம்"
"காலம் அது ஆறாத ரணமாய் மாறலாம்,
அல்லது மறந்த நினைவாய் கரையலாம்"
"ஆனால், என் நினைவுகளின் ஆழம் மாறாது,
என் உடைந்த இதயத்தின் கதை மறையாது"


"மீண்டெழும் என் ஆன்மா"
"நம்பிக்கையின் ஒளிக்கீற்று,
மௌனத்தின் மொழியில் மனம் பேசிற்று"
"கவிழ்ந்த வானம் ஒருநாள் நிமிரலாம்,
காய்ந்த நிலம் ஒருநாள் துளிர்க்கலாம்"
"இருளின் ஆழத்திலும் ஒரு சிறு ஒளிக்கீற்று தெரிகிறது,
என் உடைந்த இதயத்திலும் ஒரு மெல்லிய நம்பிக்கை துளிர்கிறது"
"எரிந்த சாம்பலிலிருந்து எழுந்த பீனிக்ஸ் பறவையைப் போல்,
என் இதயமும் ஒருநாள் உயிர் பெறும்"
"என் வலிகள் நிரந்தரமில்லை,
கண்ணீர் மட்டும் என் அடையாளமில்லை"

"என் கண்ணீரின் கசப்பு காய்ந்திடலாம் மெல்ல மெல்ல"
"என் இதழில் புன்னகை துளிர்க்கலாம் மெல்ல மெல்ல"
"எனக்குள் மீண்டும் ஒரு காதல் வரலாம்,
காதல் புதிய ரூபம் எடுக்கலாம்,
என் சோகக் கண்ணீரின் நதி ஒருநாள் வறண்டு போகலாம்,
என் நெஞ்சில் புதிய சந்தோஷ நீரூற்றுகள் சுரக்கலாம்,
அல்லது நான் நானாக மலரலாம்,
என் உடைந்த இதயத்தை நானே மெல்ல மெல்லச் சீராக்கலாம்,
புதிய வாழ்க்கையைத் தொடங்க ஒரு தூண்டுகோலாக இருக்கலாம்"
"காலம் பதில் சொல்லும்,
உடைந்த என் இதயம் ஒருநாள் முழுமையாகலாம்"

"புது வசந்தத்தின் மெல்லிய அசைவு,
அறியாத ஒரு திசையிலிருந்து, மெல்லியதாய் ஒரு தென்றல்,
அது உன் வருகையின் முதல் அறிவிப்பாய் உணர்கிறேன்"
"வறண்ட என் வாழ்வில் பெய்த ஒரு மழைத்துளி,
அது என் நெஞ்சில் அழகிய பூவாய் மலரும்,
நம்பிக்கையின் நாற்று ஒன்று என் வாழ்வில் துளிரும்"
"நான் இழந்த நம்பிக்கைகள் மீண்டும் துளிர்விட,
உன் நம்பக வார்த்தைகள் எனக்கு உயிரூட்டிட"
"உன் பார்வை என் பழைய வலிகளைத் துடைத்தது,
உன் குரல் என் சோக ராகத்தை மாற்றியது,
உன் பாசத்தின் அரவணைப்பில் எனக்குள் காதல் மலர்ந்தது,
உன் அன்பின் ஒளியில் என் உலகம் ஒளிர்ந்தது,
உன் கரத்தின் அணைப்பில் யாவும் நிறைந்தது,
உடைந்த என் இதயம் மெல்ல மெல்ல ஒன்றானது"
"என் இதயத்தில் புதிய வசந்தத்தின் பூக்கள் பூத்தன,
நம்பிக்கையின் வழியில் என் இதயம் மீண்டும் உயிர் பெற்றன"

"நம்பிக்கை ஒருபோதும் இறப்பதில்லை நான் உனக்காக முழுமையாய் வாழ்கிறேன்,
உன் அன்பின் அணைப்பில் முழு பாதுகாப்பாய் உணர்கிறேன்"
"ஆம், மீண்டும் ஒருமுறை காதல் என் இதயத்தை வாழ்த்தியது,
உன் வடிவத்தில் எனக்கு ஒரு புதிய விடியலைத் தந்தது,
உன் அன்பு என் ஆன்மாவை முழுமையாக்கியது"
"உடைந்த நான், இப்போது ஒரு புதிய படைப்பு,
பயணம் தொடரும், உன் கையோடு கை கோர்த்து,
காதல் தீராது, காலம் கடந்து நிற்கும்"
"காயம் காய்ந்த இதயம் இப்போது பாடுகிறது,
நம் காதலின் மகிமையை, உலகறியப் பாடுகிறது"
"காதல் மிகவும் மென்மையானது"
"காதல் மிகவும் மென்மையானது"

"நம்பிக்கையோடு என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு,
உங்கள் அன்பிற்குரியவன் MISTY SKY 💜💜
« Last Edit: May 24, 2025, 07:36:02 pm by Misty Sky »

May 24, 2025, 03:34:02 pm
Reply #7

Mansi

Re: கவிதையும் கானமும்-054
« Reply #7 on: May 24, 2025, 03:34:02 pm »
You broke me in the quiet night,
With not a tear, not even a fight.
You walked away, left me to bleed,
And fed your pride on every need.

But no, I won’t return your pain,
I won’t let hate run through my vein.
Revenge is easy, bitter, cold—
But love is fire, fierce and bold.

So I will love you, still and true,
Though you don’t care what I’ve been through.
Each beat of love I give away
Will haunt your soul some distant day.

For you will know, in silent shame,
The one you hurt still spoke your name—
Not in anger, not in spite,
But in a dream of gentler light.

Your punishment is this: I feel,
I love, I break, but I still heal.
And you will watch, but never own,
The heart that once you called your own.


I have 2 translations kindly read which is good translation to the person who translate this thank you so much ungga sevai intha chat ku thevai thank you 🙏

First one
poetic translation of your English lines, preserving the emotional depth and lyrical style: --- நீ உடைத்தாய் அமைதியான இரவில், ஒரு கண்ணீர் இல்லாமல், ஒரு சண்டை கூட இல்லாமல். நீ போனாய், என் உள்ளத்தை காயத்தாய், உன் அகந்தையை என் தேவைகள

நீ உடைத்தாய் அமைதியான இரவில், ஒரு கண்ணீர் இல்லாமல், ஒரு சண்டை கூட இல்லாமல். நீ போனாய், என் உள்ளத்தை காயத்தாய், உன் அகந்தையை என் தேவைகளால் ஊட்டினாய். ஆனால் இல்லை, நான் உன் வேதனையை திருப்பி கொடுக்கமாட்டேன், வெறுப்பை என் ரத்தத்தில் ஓட விட மாட்டேன். பகை

எளிது, கடுமையானது, குளிர்ந்தது— ஆனால் காதல்...

அமைதியான இரவில் என்னை உடைத்தாய், ஒரு கண்ணீரும் இல்லாமல், சண்டையும் இல்லாமல். நீ நடந்தாய் சென்றாய், என்னை ரத்தம் சிந்தவிட்டாய், உன் பெருமைக்கு என் தேவைகளை உணவாக்கினாய்.

ஆனால் இல்லை, உன் வேதனையை நான் திருப்பி தர மாட்டேன், என் இரத்தத்தில் வெறுப்பை ஓட விட மாட்டேன். பகை என்பது எளிது, கடுமை மிக்கது, குளிர்ந்தது— ஆனால் காதல், அது தீ போல, கடுமையானது, துணிச்சலானது.

Second one

கடந்து சென்ற காதல் title

நிசப்தமான இரவில் என் நித்திரையை களைத்து சென்றாய், கண்ணுருடனுமல்ல

கலக்கம் கொள்ளும் சண்டையுமல்ல.

நீயோகடந்து சென்றாய் எனதுள்ளமோ இரத்தம் சிந்தும் வேதனையில்.

உனது தேவைகளே பெருமை கொள்ளும் உனக்கான உணவு,நான் உனக்கு பதிலாக வேதனை தரவிரும்பவில்லை.

எனது இரத்த நாளங்களில்வெறுப்பென்பதும் இல்லை, பழி தீர்பதெளிது கசப்பும் வெறுப்புமாக.

ஆனாலும் காதல் தந்து தீரம் நெருப்பினை சுமக்கவல்லது.

ஆனாலும் காதல் தந்த தீரம் நெருப்பினை சுமக்கவல்லது..

எனினும் காதலிக்கிறேன் உண்மையுடன் இப்பொழுதும், நீ அக்கறையற்ற நிலையிலும் எனது ஒவ்வொரு துடிப்பும் உன்னை சுமக்கின்றது, நீ தூரத்தில் உனது ஆன்மாவில் இன்னும் உறைகிறேன்.

அமைதியாக ஓர் நாள் தலைகுனிவாய், உன்பெயர் சொல்லிய இதயத்தை உணர்ந்து.

இது கோவத்தில் நான் உமிழ்ந்தது அல்ல உன் தண்டனை இது தானா சொல்..

நேசித்தேன் உடைந்து போனேன் , இப்பொழுதும் குணமடைகிறேன் கடந்த நினைவுகள் கொண்டு.

இனி உனது என்ற என்னிதயம் நீ பார்க்க மட்டுமே இயலும், உனதென உணரமுடியாது.

நீ கடந்து சென்ற காதலில் இவ்வுலகை எதிர்கொள்கிறேன் துணிவுடன்.

நன்றி........



Thank you, dear team, for your understanding. I hope my poems carry the weight of my heart, and that the emotions woven within them are truly felt. Thamk you guys ….