Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-048 தனிமை

சிலர் மட்டுமே தாங்கிகொள்ளும் ஆயுதம்

தனிமை தாக்கி கொள்ளும் ஆயுதமும் கூட

தனிமையில் கடக்கும் நிமிடங்கள்

சிலருக்கு  சிறந்ததோர்  அறிவினை கொடுக்கும்

தனிமை சிலருக்கு  நரகத்தினை காட்டும்

தனிமையில்  சாத்தானும் ஞானம் பெறுகின்றான்

தனிமையில்  புத்தனும் சாத்தான் ஆகின்றான்.!

தனிமை விந்தையானது 

ஆண் பெண் இருவரை இணைப்பதுண்டு 

 தனிமையால்  இரு உறவுகள் பிறிவதும் உண்டு

தனிமை படைப்புகளின் பிறப்பிடம்

தனிமை அழிவின் ஆரம்பமும் கூட..,


இளமையின் தனிமை காதலால் சிலரை மகிழ்விக்கும்.,

தனிமை காதல் பிரிவை தந்தது நிமிடங்களையும்
கசந்திடச்செய்யும்.,

நான் கொண்ட தனிமையில் இக்கவியை படைத்தேன்....

தனிமையை நேசிக்க கற்றுகொண்டேன்

நிழல் பிரிந்தாலும் நான் உன்னை பிரியேன் என

என்னை அணைத்து கொண்டது தனிமை.,

எனக்கும் உன்னை பிரிய மனமில்லை பற்றி

கொண்டேன் உன்னை  என் இனிய தனிமையே..

தனிமை இருள் அல்ல

தனிமையை நேசிக்க கற்றுகொண்டால்


தனிமை இறைவன் தந்த அருள்ளென்பாய்..

தனிமையை கையாள கற்றுக்கொண்டால்

நமனை கண்டாலும் போடா என்பாய்..,

தனிமையில் நொருங்கி போகாதே

தனிமையை உனதாக்கிகொள்

படைத்தவனும் தனிமையில் தானே இருக்கின்றான்


மானிடன் உனக்கு மட்டுமல்ல...கடவுள் கூட

தனிமைவிரும்பியே..




Gtc தோழர் தோழிக்கு இக்கவியை சமர்பிக்கிறேன்


நன்றிகள் பல..!!!!!



உங்கள் நண்பன்


Dan_Bilzerian 😍😍😍🥳🥳🥳🥳















October 01, 2024, 09:04:24 pm
7
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073 வணக்கம் Gtc நண்பர்களே

எனக்கு பிடித்த பாடல்

பனாரஷ் படத்தில் இருந்து 


இலக்கண கவிதை

பாடகர்கள்:
பிரதீப் குமார் & கே.எஸ். சித்ரா

இசை:-
பி. அஜனீஷ் லோக்நாத்


பாடல் வரிகள் நான் ரசித்தது

உனதிரு விழிகள்…
இமைத்திடும் பொழுதில்…
பகலிரவு உறைகிறதே


என்ன ஒரு ரசனை பாடலாசிரியருக்கு

இந்த பாடல் என் அனைத்து நண்பர்களுக்கும்

சமர்ப்பிக்கிறேன் ..💐💐💐😍🎵🎧🎶🎧


சங்கீத மேகங்கள்

இன்னிசையால் உங்களை நனைத்து

மகிழ்விக்கட்டும்....💐💐💐💐😍😍🎶🎶🎶🎶🎶🎧








October 07, 2024, 01:38:58 pm
1
Re: கவிதையும் கானமும்-049 பாடல்


நிசப்தமான இரவினில்
இனிமையான இசையுடன்
இனிமை குரல்களில் ஒலிக்கும்
பாடல்
காதல் கதைகள் கதைக்கும்
பாடல்
கண்களில் கனவுகள் நிறைக்கும்
பாடல்
விழாக்காலம் அதிரும் பாடல்
பக்தியோடு பாடும் பாடல்
பிறப்பு முதல் இறப்பு வரை
தொடரும் பாடல்
கண்ணீரில் கரையும் ஒருவனை
கனிவுடன் தேற்றும் பாடல்
கல்நெஞ்சமும் கசிந்துருக செய்யும்
கவிஞ்சனின் பாடல்
இசை தந்தைக்கும் மொழியெனும் தாய்க்கும்
பிறந்த பிள்ளையின் பெயர் பாடல்

பாடல் பற்றிச்சொல்ல ஆயுளும்
போதுமோ ..?
பிறவிகள் எடுத்து வந்தும்
சொல்லத்தான் இயலுமோ.?
மானுடம் மரபினோடு
கலந்துவிட்ட பாடலை
கவியினில்  விரித்துரைக்க
முடியுமோ...?
இயன்ற வரை சொல்லிபோட்டேன்
இனிய என் மித்திரரே..!
கேளுமின் யான் மொழிந்ததோர் கவியை
கவிதையும் கானமும் தன்னிலே...🥳💐😉✍️




October 15, 2024, 11:50:42 pm
6
Re: கவிதையும் கானமும்-050 காதல் காயம் கவிதை

காதல் பேச்சில் தொடங்கி
மெளனத்தில் பிரசவித்த
பிள்ளை அது..,

காதல் ஓர் அழகிய வன்முறையாளன்

காலம் பார்ப்பதில்லை

கருப்பா சிவப்பா உயர்வா தாழ்வா

பார்ப்பதில்லை ..,

கவர்ந்தவர் மனதை மட்டுமே

பார்க்கும் புரட்சியாளன் காதலே..!

பெண்ணோ ஆணோ யாராகிலும்

காதலை கடந்து செல்லாதவர்

இருப்பாரோ சொள்ளுங்களேன்..!

காதல் இனிமையான பொய்

சாகும் வரை துரத்தும்..,

செத்தே போனாலும் நினைவாகி

கொள்ளும் ..🔪

காதல் தந்த ரணம்  நரகினும்

கொடியது உயிருடனே வதைக்கும்

காதல்  தந்த  நல் நினைவுகள்

சொர்க்கத்தினை உணரச்செய்யும்.,

காதல் தோற்பதும் இல்லை

ஜெயிப்பதும் இல்லை..,

காதல் கொண்ட உள்ளங்களால்

கொலை செய்யப்படுகின்றன..,

நான் நீ என்ற அகந்தையும்

நம்பிக்கையை உடைத்து

ஒளிவும் மறைவுமாய்

மறைத்து வாழ்வதும்

புரிதல் இன்மையும்

காதலை கொளை செய்யும்

 காரணங்கள்.

காதல் பௌர்ணமி இரவில்

ஒளிரும் நிலவை போல

மார்கழி மாதம் புள்ளின் நுனியில்

மிளிரும் பனித்துளி போல

மலை மிது படர்ந்து வரும்

தென்றலை போல

மனதை கவரும்  கள்வனின்

சொற்சுவை போல

உவமைகள் சொல்லி மாளாத

உண்த உணர்வள்ளவோ காதல்..,

கசந்த பின் காதலோ

எரியும்  தனழாக,

கோடையில் சுட்டெரிக்கும்

சூரியனை போல

கடலில் எழும் புயல் போல

கண்ணீரில் வெள்ப்பெருக்கெடுத்தாற் போல

கடினமான இலக்கண பிழை காதல்

சொர்க்கம் நரகமும் சேர்ந்த

சொல்லவே முடியாத இறைவனின்

ஆட்டம் காதல்..,

ஆட்டத்தில் அங்கமாக

பொம்மைகளே ஆணும் பெண்ணும்....








December 15, 2024, 06:38:49 pm
6
Re: கவிதையும் கானமும்-054 இதயம் கொண்ட காதல்

உடைந்து போன இதயத்தில்
உறைந்து போன நினைவுகள் ,
நிறைந்து இருந்த நிம்மதியெல்லாம்
நிமிஷத்தில் நிலையற்று போனதடி....

உன்னை காணாத மனம்
மரணத்தை ருசித்ததடி,
சுற்றி பலர் இருந்தும்
சுயநினைவற்று போனேனடி,
விட்டுச்சென்றவள் உன் நினைவால்
விடையம் அற்றுபோனேனடி...

காதலில் திளைத்த இதயத்தில்
காயங்கள் தந்து போனாயடி,
காலங்கள் கடந்த பின்னும்
கனவுகள் கலைந்த பின்னும்
காத்திருந்தேனடி ...

இரக்கமற்ற காதல் வலி
இதயத்தை உடைத்ததடி,
இருந்தாலும் நான்
இறக்கவில்லை...

உன்னால் உடைந்த இதயம்
வலுவானது,

நீ இல்லா வாழ்கை பழகி
போனது.....

இயல்பு நிலையில் நான்
உணர்தேன் ,வியந்தேன் என் வலுவான
இதாயம் கண்டு,
இரக்கமற்றவளுக்கானது
என்னிதயமல்ல,
எதிர்காலம் உண்டு அதில்
என்வளும் உண்டு அவளுக்கென
உயிர் பெற்றதடி என்னிதயம்....
.......

நன்றி

உங்கள் நண்பன் God_Particle



May 23, 2025, 08:10:18 pm
4
Re: கவிதையும் கானமும்-056 கவிதைகள் சொல்லவா

நித்தம் உன்னை நாட்குறிப்பில்
எழுதாத நாட்கள் இல்லை,
தொலைவில் நிலவினை கண்டபோதும்,
சில்லென் தென்றல் தீண்டும்போதும்,
மனம் கவரும் மலர் வாசம் நெஞ்சை வருடும்போதும்,
மழையில் நான் நனைகின்றபோதும்,
பனித்துளி இலைநுனியில் படரும்போது,
கவிதைகள் கொண்டு அலங்கரித்தேன்
உன்னை...,

இருளும் ஒளியும்,
நிசப்தமும் இசையும்,
சிரிப்பும் கண்ணீரும்,
சோகமும் மகிழ்ச்சியும் ,
உன்னைபற்றி சொல்லும்
எனது நாட்குறிப்பில்...,

சூரியனின் ஒளிகீற்று
தாமரையை தீண்டுவதுபோல
தினமும் என்னை தீண்டுகிறாய்
பெண்ணே உன் நினைவுகளால்...,
இரவில் நான் தூங்கும் முன்னும்
அதிகாலை கண் விழிக்கும் போதும்,
உன்பற்றியே எழுதும் என் பேனா...!
பல தடவைகள் மௌனம் கலைந்து
உன்னிடம் சொல்லா காதல்
எனது நாட்குறிப்பில்
கொட்டிகிடக்கிறது....






July 11, 2025, 11:48:07 pm
7
Re: கவிதையும் கானமும்-057 காதல்

எங்கோ பிறந்த இருவர்
ஈருடல் ஓர் உயிராய்
சங்கமிக்கும் அற்புதம்
காதல்....

எல்லைகள் வகுத்து
எதிர்பார்த்து வருவதில்லை
காதல்....

பேதங்கள் கண்டு
பேதமை கொள்ளாது
காதல்...

உள்ளங்கள் பரிமாற்ற
உறைகின்ற நொடிகள்
உணர்தும் உன்னதம்
காதல்...

கண நேரம் காணாது
காத்திருப்பும் கண்களை
கலங்கடிக்கும்
காதல்...

அவ(னி)ளின் குரலை
கேட்க குழந்தையை
போல் மாற்றிவிடும்
காதல்....

செல்ல சண்டைகள்
ஆயிரம் கோபத்தில்
உதிர்த்த சொற்கள்
ஆயிரம் எதுவும்
அசைப்பதில்லை  அதுவே காதல்....

அவனும் அவளும்
அளவில்லா அன்பினில்
அடைத்து வைக்கும்
இன்பச்சிறையே காதல்.....



அண்டில் பறவைகள்
ஒன்றை விட்டு ஒன்று
இருப்பதில்லை
அதுவேகாதல்....

அவனுடன் அவளும்
அவளுடன் அவனும்
இருப்பதை நேசிப்பர்
இடையினில் எவர்க்கும்
இடமில்லையே
இதுவே காதல்..

சொர்க்கம் நரகம்
ரெண்டும் ஒன்றாய்
போரும் அமைதியும்
ரெண்டும் ஒன்றாய்
இரவும் பகலும்
ரெண்டும் ஒன்றாய்
குளிரும் அனலும்
ரெண்டும் ஒன்றாய்
அன்பும் கோபமும்
ரெண்டும் ஒன்றாய்
அழுகை சிரிப்பும்
ரெண்டும் ஒன்றாய்
ஒருங்க பெற்றது காதல்.....

உண்மை காதல் மரணிப்பதில்லை
மரணம் தாண்டி தொடரும்...
உண்மை காதலில் விருப்பம் உண்டு.
தற்கால காதலில் நம்பிக்கை
இல்லை..

எதிர்பார்ப்புகளும் தேவைகளும்
காதலை தீர்மாப்பதில்லை
அவ்வாரு இருப்பின் அது காதல் இல்லை..

காதல் அவர்களை அவர்களின்
இயல்பில் ஏற்றுக்கொள்ளும்
இயல்பை மாற்ற வந்தால்  அது காதலே இல்லை...

உண்மைகாதலில் சுதந்திரமுண்டு
காட்டாயமும் கட்ப்படுத்தலும் இல்லை..

காதலில் கரைந்துருகிபோவர்
இருவரும் ..


சண்டைகள் கருத்தியல்
வேறுபாடுகள் வந்தாலும்
இருகப்பற்றிகொள்ளும்
உண்மைகாதல்....

என்னவளின் காதலை நானும்
என்காதலை அவளும்
உயிருடன் கலந்து
உணர்வுடன் வளர்க்கிறோம்
குழந்தையை போல
இவ்வாறு நீங்கள் உணர்ந்தால்
உத்தம காதல் அதுவே...

காதல் மாயம் செய்யும்
காயம் செய்யும்
அளவற்ற அன்பினில்
அமிழ்ந்துவிடுங்கள்
காதல் என்றுமே தொடரும்.❣️❣️❣️❣️❣️❣️❣️💗💖💖💗💗💗💗💗💖💖💖💖.. 

August 20, 2025, 09:24:33 pm
2
Re: கவிதையும் கானமும்-058 தந்தை
மண்ணில் உதிக்கும்
போது தாய் பெற்றெடுப்பால்
தினமும் நம்மை சுமப்பவர் தந்தை...
தனது வாழ்கை தம் குடும்பத்திற்கு
தத்தம் செய்தவர் தந்தை..
வாழ்கை இப்படித்தான்
என்று வழிகாட்டும் வழிகாட்டி அவர்..
ஆயிரம் ஆயிரம் பிரச்னை வந்தாலும்
அஞ்சாது எதிர்கொள்ள கற்றுதந்த ஆசான் அவர்..
தம்பிள்ளைக்கொன்று எனில்
தம் கண்ணில் உதிரம் வடிப்பவர்
கலங்காதே நான் உன்னுடன்
இருக்க எதையும் எதிர்கொள்
என்று ஆளுமை கற்பித்த குரு ..
உயர்விலும் தாழ்விலும்
தன்நிலைமாறதே என்றுரைப்பவர்
திருவிழாவில் தெய்வம் காண தம்
தோழில் சுமந்தார்
நான் அன்று பார்த்தது
தெய்வமன்று
என்னை சுமந்ததே அந்த தெய்வம் தான்...
கடினமாக நடந்து கொள்வதால்
தந்தையை வெறுப்பாக பார்கும்
நாம் தந்தையாகும் போது உணர்வோம்
அவர் செய்த நன்மை யாதென..
தந்தை பெண் பிள்ளைகளின்
கதாநாயகன் ..
தந்தை ஆண்பிள்ளைக்கு
அடையாளம் ...
கோடி தெய்வங்கள் நிகரில்லை
எம் தந்தைக்கு ..
அவரின் மகிழ்ச்சி புகழ் பணம்
யாதிலும் இல்லை
தம் பிள்ளைகளின் மடியில்
அவர் துயில் கொள்ளும் தருணத்தில்
வார்தைகளில் அடங்காத மகிழ்ச்சி ...
தனக்கென யாதும் கோராத
தன்னிகரில்லா நிஜ கர்ணன்
தந்தை...
குழந்தை பருவத்தில் குருவாக
குமார பருவத்தில் தோழனாகா
என்றும் என் முன் மாதிரி எம் தந்தை...
வார்த்தைகளில் சொல்ல வரிகள் காணதே
வணங்குகிறேன் உம்மை
எம் தந்தையே எம் தந்தையே...💕💕💕💕❤️😍🥰😘

September 02, 2025, 07:33:08 pm
4
Re: கவிதையும் கானமும்-060 முகதிரை கொண்ட என் கண்மணியே
என்னவளை நான் கண்டுகொண்டேன்
சிரித்த முகக்தின் பின்னே
சிதறிய இதயம் ..
அன்பான அவளிடம் நான்
பேசும்முன்னே அவளின்
மழலை பருவத்தின் இரணங்களறியேன்...
கல்லும் கசிந்துருகும் என் அன்பானவளின்
அரவணைப்பில் ....
ஆனாலும் அவளறியால்
பெற்றவரின் உடன்பிறந்தோரின் அரவணைப்பு..
உருண்டு ஓடும் நாட்களில்
உலகின் வேகத்தில் அவள் பலரை கடந்தாலும்
உதட்டோர புன்சிரிப்பில் மூடி மறைத்தால்
மனம் கொண்ட வலிகளை...
ஆனாலும் அவள் யாருக்கும் மறுக்கவில்லை
அன்பைகொடுப்பதில்..
நான் சிரிக்க மறந்தாலும் என்னை சிரிக்க
வைப்பாள்..
கவலையில் மூழ்கி போனால்
என்னை மீட்டெடுப்பால் தாய்போல
என்னவளின் இனிய இயல்பதுவாம்...
நான் கோவத்தில் இருந்தாலும்
அவள் வெறுப்பை உமிழ்ந்ததில்லை...
மழைக்காலம் வெயிலை அறியுமோ...?
அவளின் சிறு பிராயமுதல்
அவளுணர்ந்த வெறுப்பும் மறுப்பும்
கரைகாணயியலாது...!
நண்பர்கள் உறவினர்கள் அறியாத
அவளின் மறுமுகம் நான் கண்டுகொண்டேன் ..
என்னவளோ அத்தருணமுதல் என் சேயாகி போனல்..
சிலநேரம் குறும்புக்காரி
சிலநேரம்  கோவக்காரி
சிலநேரம்  வழிகாட்டி
சிலநேரம்  கண்டிப்பான அன்னை
சிலநேரம்  தோழியாக
சிலநேரம்  துணையாக
எவ்வாறு இருப்பினும் என்னவள்
என்னிடத்தில் சிறந்தவளே...
அவள்காட்டாத அம்முகத்தின்
அனைத்திலும் நான் இருந்து
அன்பினில் திளைத்திடச்செய்வேன்..
இவ்வுலகில் அவளின் மறுமுகம்
மகிழ்ச்சியில் இருக்க இறைவனை வேண்டுவேன்..
இவ்வுலகமும் இவ்வுலகின் நேரமும்
காணாது, காணாது......
அவளின் ஆயுட்காலம்
கடந்த பின்பும் நித்திய ஆன்மாவாக
அவளை அரவணைத்து கொள்வேன்
என்றும் என்னுடன்.....

(P²)

October 07, 2025, 11:05:57 pm
6