அறிவாளியையும் வென்றிடு. 🤗
முட்டாளாய் நடி, அறிவாளியை வென்றிடு, விழாமல் ஓட வேண்டும் என்றால், விழுந்து விழுந்து எழ வேண்டும், காயங்கள் இன்றி, தடைகள் இன்றி,
தோல்விகள் இன்றி,
வலிகள் இன்றி, எதுவும் கிடைத்து விட போவதுமில்லை,
அப்படி கிடைக்கும் எதுவும் நிறந்தரமும் இல்லை,
கீழே விழுந்து விடுவாய் ஓடாதே என்று கூற பல பேர் உண்டு, ஆனால் விழுந்தாலும் பரவாயில்லை மீண்டும் எழுந்து ஓடு என்று சொல்ல சிலர் உம் உண்டு, முயற்சி இல்லாமல் பயிற்சி இல்லை, பயிற்சி இல்லாமல் இலட்சியம் இல்லை,
உன்னால் முடியாது என்று கூறியவனின் முன்னாள் ஓடு..
உன்னை குறை கூறியவனுக்கு முன்பு ஓடு..
உன்னை மட்டம் தட்டியவனின் முன்பு ஓடு...
ஒருநாள் இவர்கள் யாரும் உன்னை பார்த்து கைத்தட்டும் சத்தம் கேட்கும் வரை ஓடு...
உனக்கான அந்த பொன்னான நாளை நீயே அடையும் நாள் வரும்... தடைகளை உடைத்து சாதனை படைக்க ஓடு ஓடிக்கொண்டே இரு.
குறை கூற இருப்பவர்கள் இருந்து கொண்டு தானே இருப்பார்கள் சாக்கடை நீரை போல அதையே நாம் நின்று கேட்டு கொண்டிருந்தால், உன் வாழ்வில் மாற்றம் எங்கிருந்து வருமோ,
ஓடும் ஆற்றினை பார் தினமும் புதியதாய் ஓடிக்கொண்டே இருக்கின்றது. அதன் இலக்கு கடலை சென்றடையும் வரை அது தன் பயணத்தை இடைநிறுத்துவதில்லை, ஆற்றை போல நீயும் ஓடிக்கொண்டே இரு, உன் இலக்கு வரும் வரை ஓடு...
நம்பிக்கையை விதை , அதுவே மரமாகி உனக்கு நிழல் கொடுக்கும்,
ஒரு விதையை விதைத்து, அதற்கு நீரூற்றி, அது மண்ணில் இருந்து செடியாய் தலைகாட்ட ஆரம்பித்த வுடன் உரங்கள் இட்டு, மேலும் மேலும் தேவையான நீரை ஊற்றி அந்த செடி மரமாகி அதில் இருந்து பழங்களும், பூக்களும் கிடைக்க வேண்டும் என்று அவன் விதையில் இருந்தே காட்டிய அக்கறையும் கவனமும் மரமாய் வளர்ந்து இன்பத்தை
அளிக்கின்றது, முயற்சி இல்லாமால் எதுவும் இல்லை. அந்த விதையின் மீது நம்பிக்கை வைக்கவில்லை, உன் முயற்சியில் தான் அது மரமாகியது,
தட்டி கொடுக்க கைகள் இருந்தாலும், உன்னை தட்டி வீழ்த்தி விடவும் கைகள் உண்டு, உன் நம்பிக்கை என்ற மூன்றாவது கை கொண்டு முயற்சிக்க தவறாதே!
நம்பிக்கை இருக்கும் இடத்தில் தான் முயற்சி வரும், முயற்சி இருக்கும் இடத்தில் பயிற்சி வரும் பயிற்சி இருக்கும் இடத்தில் தான் வெற்றி வரும், வெற்றி வந்த பின்பே எல்லாமே தானாய் வரும்,
கல்லடி பட்டு காயங்கள் கண்டு, சில மனிதர்களின் சொல்லடி பட்டு, கண்கலங்கி நின்றாலும் கிழக்கு சூரியனை போல இரவு கடந்து காலையில் வரும் பல கை கொண்டு உலகிற்கே வெளிச்சம் கொடுக்கும்,
உன் விடா முயற்சியும், உன் ஆர்வமும், உன் வலியும் உன்னை வீழ்த்த என்று நினைக்காதே, உன்னை வடிவமைக்கும் கருவிகள் என்று நினைத்து நம்பிக்கையோடு முன் செல்ல ஏமாற்றத்தையும்,
அவமானத்தையும், ஊக்குவிக்கும் ஆயுதாமாய் கையில் எடு!
இன்று என் நம்பிக்கையில் நான் எழுதிய இந்த கவிதை என் முயற்சி, உங்கள் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என நம்புகின்றேன், இன்றும் என்றும் என் முயற்சியில் ஒரு கவிதை உங்களுக்காக....😊