22
« on: August 18, 2023, 10:54:48 am »
அது ஒரு அடைமழைக்காலம் வீதிகள் தோறும் மழைவெள்ளம் உலா போகும்!
பருவமழை தொடங்கியது, மக்கள் கூட்டம் வீதியிலே அடங்கியது!
எங்கள் பள்ளி பருவத்தில்,
தொடர்மழை வந்தால் பள்ளி விடுமுறை!
விடுமுறை விட்டநாள்
வெயில் காய்வதே அன்றைக்கு நடைமுறை!
மழையில் விளையாடி தாயிடம்
திட்டுவாங்குவோம் பல முறை!
மழைநீர் செல்லும்,
கால்வாயில் காகித கப்பல் விடுவதும்!
வீட்டுக்குள் தாயம் விளையாடுவதும்,
அன்றைக்கு எங்கள் செயல்முறை.
அந்நேரத்தில்,
எங்களுக்கு சிற்றுண்டி வறுத்த நிலக்கடலையும்
புளியங்கொட்டையும்!
காலங்கடத்துவது கிழிந்த
காலண்டர் அட்டையும்,
தாயக்கட்டையும்!
வீதிகளில் நீர் வழிந்தால் அது நீர்நிலைகளை
அடையும்!
நீர் நிலைகள் நிரம்பி வழிந்தால் கரைகளில்
மீன்கள் மடியும்!
விளைநிலங்களில் நண்டு, நத்தைகள் மேயும்!
அதை பிடிக்க குடைகளுடன் எங்கள்
கைகள் பாயும்!
மழையில் நனைந்தால் உடல்
காய்ச்சல் படும்!
இரவுகளில் தவளைகள் கூச்சலிடும்!
இந்த பூமிக்கு மழை ஒரு வரம்!
அது இல்லை என்றால், பூமியில் எந்த உயிரும்
வாழ முடியுமா?
இந்த கணம்?!.