Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Eagle 13

Pages: [1] 2 3 4
1
எங்க வீட்டு புளியமரம்:

நாள் முழுக்க
கால்வலிக்க ஓடி ,
பகல் முழுவதும் மட்டை பந்து
ஆட நிழல் தந்தாய்
அன்று,
மழலை முதல் இளமை வரை
உன் கிளைகளில்
ஊஞ்சல் ஆடி
பெற்ற இன்பங்கள்
கோடி,
கோடையில் வெயில் விரட்டும்
பொழுது செல்ல செல்ல அனல் மிரட்டும்,
அப்பொழுது அந்த நிழலில் அனைவரும்
ஒன்று கூடி,
பேசுவோமே குடும்ப கதைகள்
தேடி தேடி,
'பள்ளி விடுமுறை நாட்களில்,
கபடி, கோலி மற்றும் கில்லி
விளையாடுமே, வெற்றி எனது
என்று அடித்து சொல்லி!
தரையில் பாயிட்டு அமர்ந்தாலும்,
தாயம், பரம்பபதம்!
ஒவ்வொரு நாளும் விளையாடுவோம்,
ஒவ்வொரு விதம்!
மாத்தில் பழல் வந்தால்,
பழத்தை அணில் கொஞ்சும்!
குரங்கு கூட்டம் வந்தால்
மனம் அஞ்சும்!
பறவை இனங்களுக்கு அதுவே
தஞ்சம்!
பழ அறுவடை நேரத்தில்
மரத்தின் மீது ஏறி பார்த்தால்,
கொக்கு, நாரைகளின் செ
எச்சம்!
அதை கண்டபின் மரத்தின் மீது
மீண்டும் ஏற கூச்சம்!
தலைமுறைகளை கண்ட மரத்தை
தலை வீதி எங்கு விட்டது,
திடீரன அடித்த புயலில் அருகில்
இருந்த வேப்பமரம் பக்கத்து
வீட்டின் மீது மாய்ந்தது!
அதன் அச்சதால் புளியமரத்தை
வெட்டவும் நேர்ந்தது!
அதன் பின் எங்களை விட்டு
நிழலும் சென்றது!
உணவிற்காக புளியும்
வேண்டி
தினமும்
மளிகை கடையை
நாடவும்
உள்ளது!.

2
ழகரத்தை கொண்டு சிகரத்தை வென்றோம்!
தடைபெற்று நின்ற போதும்,
தமிழர் யார் என்று
போர்களம் கண்டோம் ,
வாடிவாசல் வேண்டி,
வீடு வாசல் விட்டு சென்றோம்!
கோடி மக்கள் ஒன்று கூடி,
தெருக்களில் நின்று நீதி தேடி,
உலகிற்கே முரசொலித்தோம்,
புரட்சி என்னவென்று காட்டி
இந்த தலைமுறைக்கும்
பரிசளித்தோம்!.
தெற்கு வங்கக்கரை வசனம் பாடியது,
தமிழர்க்கு குரல் கொடுக்க உலகே
ஒன்று கூடியது!
தொன்று தொட்ட காலம் முதல்
 தமிழர்களின் அடையாளமாம் ஏறு தழுவுதல்!
பொங்கல் வந்ததும் விழாக்கோலம் நிலவுதல்!
கடந்த காலங்களில் நாட்டு காளைகளின்
வகைகள் எண்பத்தி ஏழாம்(87)!
ஆனால்,
இன்றோ ! அதில் பல வகைகள் மாயம்!
இதெல்லாம்,
எந்த விதத்தில் நியாயம்!
இதற்கெல்லாம் காரணம்,
மனிதன் மரபுகளை மீறியது'
என்று வரலாறு கூறுகிறது!
ஆதியில்
ஆயர்க்குலத்தோர் மங்கைகள்
ஆளுக்கோர் காளை கன்றுகளை
வளர்த்து,
தன் திருமண பருவத்தில்
அதை அடக்குபவரை மணமுடிக்க
உருவானதாம் இந்த சல்லிக்கட்டு!
இது இனி எந்தப்பொழுதும் விட்டுச்செல்லாது
தமிழன் இலக்கம் விட்டு|!.

4
கல்வி கற்கும் வயதில் கல் உடைக்கிறாய்!.
ஓடி விளையாடும் வயதில் ஓடுகளை அடுக்குகிறாய்!
வறுமையினால் வயதை தொலைக்கிறாய்!
பசி மற்றும் பட்டினியால் பறித்தவிக்கிறாய்!.

அனைவருக்கும் தேநீர்
கொடுங்கள்!
கார்ல் மார்க்ஸ்!

அதை ஒரே மாதிரியான கோப்பையில்
கொடுங்கள்!

டாக்டர் B.R.அம்பேத்கர்!

அதை ஒரே அளவில் கொடுங்கள்!

தந்தை பெரியார்!.

அதை பசியில் இருப்பவருக்கு முதலில் தாருங்கள்!.
புரட்சி கலைஞர் விஜயகாந்த்!.


வெயிலோடு நீ விளையாடவில்லை!
மழையில் நீ காகித கப்பல் விடவில்லை!
பட்டாம்பூச்சியும் நீ பிடிக்கவில்லை!
கொட்டாங்குச்சியில் கூட உன்னிடம்
பொம்மைகள் இல்லை!
தட்டான் பிடிக்கும் வயதில் எச்சில் தட்டை
கழுவுகிறாய்!
இரக்கமற்ற உலகில் நல்ல உள்ளம்
கொண்ட இதயத்தை தேடுகிறாய்
!
நீ பட்டமும் விடவில்லை - உன் வாழ்வில்
பட்டமும் பெறபோவதில்லை!
இளமையில்,
ஏட்டுக்கல்வி கிடைக்காவிட்டால்,
எட்டாக்கனி ஆகிவிடும் உன் வாழ்க்கை!
வறுமையில் வாடிவிட்ட உனக்கு எப்படி
அமையுமோ?
எதிர்கால சேர்க்கை!.
குழந்தை தொழிலாளர்களை போக்க
அரசு,
இலவசகல்வி மதிய உணவு போன்ற
திட்டங்களை கொண்டு வந்தது!.
அதை கண்டு கொள்ள கூட்டம்
இன்றுவரை, எங்குதான் சென்றதோ?

கம்யூனிசம் பற்றி கேட்டால்,
முதலாளித்துவ கைக்கூலிகள்,
கடவுள் உண்டா? இல்லையா?,
எனக் கதைக்கிறார்கள்!
இன்றளவும்,
அனைவருக்கும் அனைவரும் சமம்
என்ற உரிமையை தர மறுக்கிறார்கள்!.

6
இது ஓவியமா இல்லை
மொழியின்றி பேசும் காவியமா?
ஒன்றும் புரியவில்லை?
சுவற்றில் கிறுக்கிய கிறுக்கல்களை
உயிரின் பந்தமாய் நினைத்து
 வியக்கிறாய்!
அந்த நிலையை கடந்து
செல்ல
தெரியமல் தவிக்கிறாய்!
ஏனோ ஒரு சிலருக்கு மட்டும் இப்படி
அமைகிறது  வாழ்க்கை!
அதனால் அவர்கள் மனம் கடந்த
செல்ல முடியாமல் தவிக்கிறது உலகை!

சுவற்றில் அதை தீட்டியது ஒரு சிறுவன்
அல்லது சிறுமியாக கூட இருக்கலாம்!
ஆனால்,
நீயோ?
அதை மனதில் வேதனை தூண்டும்
கிருமியாக நினைத்து தவிக்கிறாய்!
ஒரு ஓவியமே!
ஒரு சிறுவனுக்கு  ஏக்கம், தவிப்பு,
சோகம் மற்றும் தேடல் தருமானால்,
இந்த உலகம் அவனுக்கு என்ன என்ன
தருமோ!
இனியாவது,
நாம் அனைவரும் ஒற்றுமையாய்
இணைந்து வாழ்வோம்!
உலகில் யாரும் தனித்த மனிதன் இல்லை
என்று
குரல் கொடுப்போம்!,
மனிதநேயத்தோடு!.

Pages: [1] 2 3 4