Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: 1 [2] 3 4 ... 7
Post info No. of Likes
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... மழலையின் மகத்துவம்.......

அழகு மழலையே !!!

பெண்மையின் கர்ப்பத்தில் செதுக்கிய உயிரே......

உந்தன் அழகுக்கு இவ்வுலகில் மயங்கா மானிடன் உண்டோ ?

உந்தன் மழலை பேச்சிற்கு பலரும் மெய் மறந்து கிடக்கிறோம்....

உந்தன் புன்னகைக்கு இவ்வுலகம் அடிமையே.....

உந்தன் விரல் தீண்டினால் தேகம் சிலிர்க்குமே.....

உந்தன் விழி பார்த்தால் ஆணவமும் அகலுமே.....

உந்தன் துயில் கண்டு சிந்தனையில் ஆழ்த்துமே.....

தத்தி தவழும் கணமே,
பூமியாய் மாறிட வானமும் ஏங்குமே!!!

அச்சமின்றி பாதம் பதிய வைக்கும் அழகு மழலையே
அரவணைத்து கொஞ்ச எண்ணும் உந்தன் அழகிலே....

எத்தனை அழகு உன்னிடம் ?
எண்ணி சொல்ல போதவில்லையே என்னிடம்.....

மழலையே உந்தன் மகத்துவம் கண்டு,
பெண்மையை இவ்வுலகம் வணங்குமே......

March 08, 2023, 04:15:01 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... காத்திருப்பு (ஏக்கத்தின் வெளிப்பாடு)


என்னவனே....
என் உயிரில் கலந்தவனே......

உன்னை நினைத்த போதெல்லாம்
கண்ணீருடன் காத்திருக்கிறேனடா.....
உன் வரவை எண்ணி......

கனவில் உன்னை பார்த்தபோதெல்லாம்
நிஜம் என்ற ஒன்று
என்று என எண்ணி காத்திருக்கிறேனடா.....

தனிமையில்,
நம் காதலை நினைவில் வைத்து
தவிப்பில் காத்திருக்கிறேனடா.....

நீ என்னை சேரும் நாள் வரும் வரை
காத்திருக்கிறேனடா.....

என் உயிர் இம்மண்ணில்
வாழும் வரை காத்திருக்கிறேனடா.....
உனக்காய் காத்திருப்பேனடா....

காத்திருப்பில் சுகம் அல்ல,
அது சுமை என்றும் அறிந்தேனடா....
மரண வலி என்பதையும் உணர்ந்தேனடா....


March 10, 2023, 07:35:46 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... தயக்கம்....

உன் தினசரி நினைவுகளை
தினமொரு கடிதம் எழுதி
உன் வரவை எதிர் பார்த்தே
என் நாட்கள் நகர்கிறது....

உன்னை காணவே
என் கண்கள் ரெண்டும்
அங்கும் இங்கும் அலை பாய்ந்து
தினமும் உன்னை உளவு பார்க்க செல்லுது....

உன்னை பார்த்த கணம்
என்னவோ !
என் இதய துடிப்பு அதி வேகமாய்
சந்தோஷத்தில்  பட படக்கிறதே.....

உன் அருகில் வர துடிக்குது மனம்
ஆனாலும்,
பதபதைத்து தவிக்குது ஏனோ....
இப்படியே பல வருடம் கடந்து விட்டேன்
என் காதலை சொல்லாமலே
தினம் தயங்கியே தவிப்பில் வாழ்கிறேன் நான்.....







March 19, 2023, 12:02:26 am
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... அவனும் நானும்.....

அந்தி சாயும் நேரம்
யாரும் இல்லா சாலையோரம்
அவன் கை இடுக்குகளில் என் கை கோர்த்து
கால்கள் போகும் தூரம் கடந்து செல்கிறோம்....
இது என்னவனோடு செல்லும்
புது பயணமோ, புது உலகமோ...
இயற்கையின் வரவழைப்பும்,
சாலையோர பூக்களும்,
மரங்களும் சாய்ந்து கொண்டு
ஏதோ சலசலப்பு உரையாடுகிறதே....
இவனோடு போகும் நேரம்
இன்னும் நீள ஏக்கம்தான் கூடுகிறதே....
எனக்குள் ஏனோ நாணம்தான் தேங்குகிறதே.....




March 19, 2023, 12:20:51 am
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... மறந்து போன ஞாபகம் நான்...

நீ மறந்து போன உன் ஞாபகம் நான்....
என்னை மறந்தாயா?
இல்லை,  உன் மனதில் நான் இல்லை என்பதை
மறைத்து வாழ்கிறாயா?
உணர்வில்லாமல் உடல் மட்டும் இங்கே, 
உன் ஞாபகத்தில் உறைந்து கிடக்கிறேன், 
பிரிந்த போதெல்லாம்
உன் ஒற்றை குறுஞ்செய்திகாக
காத்திருப்பேன் என்று அறிந்தும்,
இன்று கவனிப்பில் இல்லாமல்
மனம் கல்லாய் மாறியது ஏனோ?....
என்னோடு தினம் உரையாடிய
நாட்கள் எல்லாம் இன்று வீனோ?
என் தினசரி பொழுதும் கண்ணீரில்,
உன்னோடு கடந்த நாட்களை
எண்ணி எண்ணியே
என் மீதி ஜென்ம வாழ்வை கடக்கிறேன்,
கண்களில் கண்ணீர் தீரும் முன்னே
உன் ஞாபகத்தில் என்னை வைத்து
என்னை சேர்வாய் என்ற எண்ணத்தில்
காத்திருக்கேன் என் காதலே....

March 27, 2023, 11:01:25 am
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... கைதி ஆனேன்....

மனம் களவு போன
கணம் அறியவில்லை,
காத்திருந்து களவாடிய
கள்வன் அவன் என்று கூற முடியவில்லை...

கைதி ஆகினேன்....
கள்வனின் மனதில் அடைப்பட்டு,
அவன் தந்த அன்பினால்,
ஆயுள் கைதி என அகப்பட்டேன்....

அவன் அகத்தினுள்
அன்பின் எல்லை கண்டு
அவனையும் மீள முன் வாராமல்
அவனோடு ஓர் பந்தம் உருவாக்கப்பட்டேன்...

புது வரவாய் புதுப்பித்து கொண்ட உறவில்
புது உலகம் காண முற்பட்டேன்...
புத்தி கொண்டு மறுத்த போது
மத்தியில் அகம் கூறும் ஆணையை மறுக்க முடியவில்லையே....

மானிடன் எவர் ஆகினும்...
மர்மமாய் வந்த காதல்
மதி இழந்தவரையும் மானிடனாக்குமே,
யான் மட்டும் என்ன இவ்வுலகில் விதி விலக்கோ?...

விருப்பத்தின் எல்லையை
முட்டுக்கட்டை போட்டு மூடி வைத்தாலும்
மனதை களவு செய்த கள்வனை
மூடி மறைக்க முடியவில்லையே....

என் மூச்சிலும் கலந்த கள்வனை,
என் மூச்சு முடியும் வரை,
முடிவில் மணம் இல்லை என்றாலும்,
மனதினுள் வாழ்வின் எல்லை வரை
சுமந்தே வாழ்வேனே.....


April 03, 2023, 01:23:56 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 May 16th MY PLACE
April 16, 2023, 09:23:10 pm
2
Re: NILA HERE Nilaa chella kutty wc wc semma intro da :-* :-*
April 16, 2023, 09:44:14 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... அன்புள்ள அப்பா.....

தாயின் பாதி தந்தையே.....
கர்ப்பத்தில் சுமகிறாள் அவள்.
வாழ்வின் எல்லை வரை,
மார்பிலும், மனதிலும் சுமக்கிறாய் நீயே....

பூமிக்கு வந்தவுடன்
பூவாய் தாங்குகிறாய்....
உன் முதல் பார்வை புன்னகை கண்ணீரில்
என்னை ஏந்துகிறாய் நீயே....

நான் காணும் முதல் உறவு !
என் புது உறவு என் தந்தை  நீயே....
பசி என்று அழுதால் அணைப்பாள் அவள்,
என் பசி அறிந்தும், தன் பசி மறந்து
தாலாட்டில் துயில வைப்பாய் நீயே....

தத்தித் தவழும் வேளையில்,
என்னை  போல் அங்கு  நீயும்
சிறு குழந்தை ஆகிறாய் என் தந்தையே.....

பாகன் போல் நானும் மாற
நீ அந்நேரம் மண்டியிட்டு
மகிழ வைப்பாய் தந்தையே......

என் பிஞ்சு விரல் பிடித்து
உன் பாதம் தொடர
சிறந்த வழிகாட்டியும் நீயே.....

பருவம் வந்தாலும், 
உன் மடியில் துயிலும்
இன்பம் வேறில்லை தந்தையே.....

அன்றும் என்றும்
சிறு குழந்தை போல என்று
எண்ணுகின்ற என் தந்தையே.....

புது உறவு புகுந்த வீடு என்று
அழைப்பில் காத்திருக்க
ஊரார் உறவினர் கூடியிருக்க
கட்டியணைத்து கண்ணீர் மல்க
முத்தமிட்டு துன்பம் காணும் 
என் அன்புள்ள அப்பவே....

இவ்வுலகில் மிகவும்
அரிதான, அழகான, ஆழமான உறவு
என் தந்தை நீ என்பதும்,
உன் மகள் நான் என்பதுமே.....

I love you DAD.....



April 19, 2023, 08:01:15 pm
1
Re: HAPPY BIRTHDAY CUTE & BULLETT   Happy birthday my bullet bro and my sweet cute sis 💐🎂🎂🎂🎂🎂,💞🎊🎉
April 20, 2023, 10:54:42 am
2