Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Vaanmugil

Pages: [1]
1
பிரியன் என்பவரின் கவிதை :

தாய் பாசம்

பட்டு சட்ட போட்டுக்கிட்டு
துட்டு கொஞ்சம் வாங்கிகிட்டு
சிட்டு போல பொம்பளைய
கட்டிக்கிட்டு வந்தானே!

பெத்தமனம் படபடக்க
வளத்தமனம் துடிதுடிக்க
கல்யாணம் கட்டி வந்து
கண்கலங்க வச்சானே!

என்னடான்னு கேட்டாக்கா
"நடந்தது நடந்திருச்சு
நடக்குறத பாரு"ன்னு
நாசூக்கா சொன்னானே!

நாவச்ச பூச்செடிதான்
நாளபின்ன பூக்குமின்னு
கண்ணுறக்கம் கேட்டு போயி
காத்துதான் கெடந்தேனே!

நேத்து வந்த புயல் காத்து
பூச்செடிய தின்னுபுட்டு
எம்முன்னே ஏப்பம்விட்டு
போகுதறக் கண்டேனே!

பொண்டாட்டி பேச்சையே
பொன்னு போல நினைச்சு
சொத்தெல்லாம் எழுதி வாங்கி
சோகத்துல விட்டானே

ஏ ஆத்தா ஏ ஆத்தான்னு
தலைமேல வச்ச மகன்
போ ஆத்தா போ ஆத்தான்னு
சொல்லாம சொன்னானே

ரெண்டு மூன பெத்திருந்தா
வண்டுபோல வாழ்ந்திருப்பேன்
சாகபோற காலத்திலாவது
சந்தோசமா இருந்திருப்பேன்!

பொத்திவச்ச பத்திரமா
ஒத்தமகன பெத்ததால
போக்கிடமே இல்லாம
புகழுகேட்டு நிக்கிறேனே!

மத்தியான நேரத்துல
காலக்கஞ்சி கேட்டதுக்கு
எப்பவுமே சோறான்னு
எடுத்தெறிஞ்சு சொன்னானே!

பத்து முழம் மல்லி வாங்கி
பக்குவமா வச்சுவிட்டு
பக்கத்துல வாடின்னு
பொஞ்சாதிய கொஞ்சினானே!

பட்டணப் பொடி வாங்க
பைசான்னு கேட்டாக்கா
வெட்டி செலவு எதுக்குன்னு
வெறுங்கைய விரிச்சானே!

அவளோட பேச்ச கேட்டு
உறவெல்லாம் அத்துக்கிட்டு
ஆத்தான்னு பாக்காம
அனாதிபோல வச்சானே!

நடக்கவும் தெம்பில்ல
பார்க்கவும் கண்ணில்ல
தலையில மயிரில்ல
ஒடம்புல முழுசா உயிரில்லா

அரளிகொட்ட அரச்சு வச்சு
கஞ்சிகூட கலந்து வச்சு
வம்படியா சாகவக்கல
வக்கணையான எம்புள்ள!

காசு கொஞ்சம் செலவழிச்சு
ஆசிரமம் அனுப்பிவிட்ட
எம்புள்ள ராசாதான்!
நாவளத்த ரோசாதான்!



2
வணக்கம் அனைவருக்கும்.....

எல்லாரும் எப்படி இருக்கீங்க  FRIENDS ,

என்னடா சம்பந்தமே இல்லாம இங்க வந்து கேட்டுட்டு இருக்கேன் நினைக்குறைங்களா.... ஒன்னும் இல்ல FRIENDS புதுசா நாமளும் நம்ம FORUM ல சில கருத்துகளையும், அவரவர் தரப்பு வாதங்களையும்,
கொஞ்சம் பதிவிடுவோம் FRIENDS.

குறிப்பாக இங்கே பதிவிடும் பதிவுகள் அனைத்தும் யார் மனதையும் புண்படுத்தாமல் நகைசுவையாக மட்டும் கருத்தில் கொண்டு பதிவிடுங்க FRIENDS.


வாங்க FRIENDS வாங்க கலந்துரையாடுவோம்......

முதலாவது தலைப்பாக :

காதல் திருமணம் சிறந்ததா? இல்லை பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் சிறந்ததா?


நண்பர்களே உங்களது கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன......பதிவிடுங்கள் நகைச்சுவையாகவும், நட்பாகவும் உரையாடுவும்.....

3
Iru Mugan - Kannai Vittu Kannam Pattu




My fav Lines :

தனி உலகினில்
உனக்கென நானும்
ஓா் உறவென எனக்கென நீயும்
அழகாய் பூத்திடும்
என் வானமாய் நீயே தொிந்தாயே

உன் விழி இனி எனதெனக் கண்டேன்
என் உயிா் இனி நீ எனக் கொண்டேன்
நான் கண் இமைக்கும்
நொடியினில் பிாிந்தாயே
பிணமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி
நீ கொன்றாய் அன்பே

4
எனக்கெனவே நீ......

நீ என் நிஜம் என்பதா? - இல்லை
என்னை தொடரும்
என் நிழல் என்பதா?

நீ என் உயிர் என்பதா? - இல்லை
என்னுள் இருக்கும்
என் சுவாசகாற்று என்பதா?

நீ என் இமை என்பதா? - இல்லை
எனக்குள் நுழைந்து
கலைந்து செல்லும் கனவென்பதா?

நீ என் அகிலம் என்பதா - இல்லை
என்னுள் வசிக்கும்
முகில் என்பதா?

அன்பே. நீ  நான் செய்த தவமல்லவா?
என் வாழ்வில் கிடைத்த வரம்மல்லவா?
அன்பே. என்றும் எனக்கெனவே நீ,
எனக்கு மட்டுமே நீ......

Pages: [1]