Advanced Search

Author Topic: வான்முகிலின் கவிதை சுவடுகள்....  (Read 384 times)

March 08, 2023, 06:38:40 pm
Reply #15

Barbie Doll

  • Winner

  • ***

  • 351
    Posts

  • Daddy's Girl

    • View Profile
மழலையின் மகத்துவம்.......

அழகு மழலையே !!!

பெண்மையின் கர்ப்பத்தில் செதுக்கிய உயிரே......

உந்தன் அழகுக்கு இவ்வுலகில் மயங்கா மானிடன் உண்டோ ?

உந்தன் மழலை பேச்சிற்கு பலரும் மெய் மறந்து கிடக்கிறோம்....

உந்தன் புன்னகைக்கு இவ்வுலகம் அடிமையே.....

உந்தன் விரல் தீண்டினால் தேகம் சிலிர்க்குமே.....

உந்தன் விழி பார்த்தால் ஆணவமும் அகலுமே.....

உந்தன் துயில் கண்டு சிந்தனையில் ஆழ்த்துமே.....

தத்தி தவழும் கணமே,
பூமியாய் மாறிட வானமும் ஏங்குமே!!!

அச்சமின்றி பாதம் பதிய வைக்கும் அழகு மழலையே
அரவணைத்து கொஞ்ச எண்ணும் உந்தன் அழகிலே....

எத்தனை அழகு உன்னிடம் ?
எண்ணி சொல்ல போதவில்லையே என்னிடம்.....

மழலையே உந்தன் மகத்துவம் கண்டு,
பெண்மையை இவ்வுலகம் வணங்குமே......


பெண்மையின் கர்ப்பத்தில் செதுக்கிய உயிரே......

உந்தன் அழகுக்கு இவ்வுலகில் மயங்கா மானிடன் உண்டோ ?

உந்தன் மழலை பேச்சிற்கு பலரும் மெய் மறந்து கிடக்கிறோம்....

உந்தன் புன்னகைக்கு இவ்வுலகம் அடிமையே
Beautiful lines sisy vaanmugil 💞

March 08, 2023, 09:01:20 pm
Reply #16

Vaanmugil

  • Newbie

  • *

  • 33
    Posts

    • View Profile






Tnq Barbie Sis💞💞
« Last Edit: March 08, 2023, 09:04:34 pm by Vaanmugil »

March 08, 2023, 09:45:19 pm
Reply #17

RiJiA

  • Forum VIP

  • **

  • 1082
    Posts

    • View Profile
போர் வீரன் காதல்....

களம் இறங்கி வாள் வீசி,
வகை சூடிய போர் வீரன் நான்....
அவள் பார்வை பட்ட கணம் முதல்
சிக்கி தவிக்கின்றேன்......

எதிர் நாட்டின் வீழ்ச்சியை
சில நொடியில் வீழ்த்தியவன் நான்.....
அவள் எதிரில் என் வீழ்ச்சியை
உணர்கின்றேன்.....

போரில் வாள் வீசி வேல் எய்து
வெற்றி வீரன் என்று
பேர் சூட்டப்பட்டவன் நான்......
இன்று அவள் விழியில்
நான் தோற்று சரணடைகிறேன்.....

போர்களம் சென்று
குருதியில் நீந்தியவன் நான்.....
அவள் சிரிப்பினில் செத்து பிழைக்கிறேனே....
என் காதலே....



SUPERB  LINES SISS 👏👏

March 10, 2023, 05:23:01 pm
Reply #18

Vaanmugil

  • Newbie

  • *

  • 33
    Posts

    • View Profile
TNQ SIS RIJIA :-*

March 10, 2023, 07:35:46 pm
Reply #19

Vaanmugil

  • Newbie

  • *

  • 33
    Posts

    • View Profile
காத்திருப்பு (ஏக்கத்தின் வெளிப்பாடு)


என்னவனே....
என் உயிரில் கலந்தவனே......

உன்னை நினைத்த போதெல்லாம்
கண்ணீருடன் காத்திருக்கிறேனடா.....
உன் வரவை எண்ணி......

கனவில் உன்னை பார்த்தபோதெல்லாம்
நிஜம் என்ற ஒன்று
என்று என எண்ணி காத்திருக்கிறேனடா.....

தனிமையில்,
நம் காதலை நினைவில் வைத்து
தவிப்பில் காத்திருக்கிறேனடா.....

நீ என்னை சேரும் நாள் வரும் வரை
காத்திருக்கிறேனடா.....

என் உயிர் இம்மண்ணில்
வாழும் வரை காத்திருக்கிறேனடா.....
உனக்காய் காத்திருப்பேனடா....

காத்திருப்பில் சுகம் அல்ல,
அது சுமை என்றும் அறிந்தேனடா....
மரண வலி என்பதையும் உணர்ந்தேனடா....


March 19, 2023, 12:02:26 am
Reply #20

Vaanmugil

  • Newbie

  • *

  • 33
    Posts

    • View Profile
தயக்கம்....

உன் தினசரி நினைவுகளை
தினமொரு கடிதம் எழுதி
உன் வரவை எதிர் பார்த்தே
என் நாட்கள் நகர்கிறது....

உன்னை காணவே
என் கண்கள் ரெண்டும்
அங்கும் இங்கும் அலை பாய்ந்து
தினமும் உன்னை உளவு பார்க்க செல்லுது....

உன்னை பார்த்த கணம்
என்னவோ !
என் இதய துடிப்பு அதி வேகமாய்
சந்தோஷத்தில்  பட படக்கிறதே.....

உன் அருகில் வர துடிக்குது மனம்
ஆனாலும்,
பதபதைத்து தவிக்குது ஏனோ....
இப்படியே பல வருடம் கடந்து விட்டேன்
என் காதலை சொல்லாமலே
தினம் தயங்கியே தவிப்பில் வாழ்கிறேன் நான்.....






« Last Edit: March 19, 2023, 12:22:32 am by Vaanmugil »

March 19, 2023, 12:20:51 am
Reply #21

Vaanmugil

  • Newbie

  • *

  • 33
    Posts

    • View Profile
அவனும் நானும்.....

அந்தி சாயும் நேரம்
யாரும் இல்லா சாலையோரம்
அவன் கை இடுக்குகளில் என் கை கோர்த்து
கால்கள் போகும் தூரம் கடந்து செல்கிறோம்....
இது என்னவனோடு செல்லும்
புது பயணமோ, புது உலகமோ...
இயற்கையின் வரவழைப்பும்,
சாலையோர பூக்களும்,
மரங்களும் சாய்ந்து கொண்டு
ஏதோ சலசலப்பு உரையாடுகிறதே....
இவனோடு போகும் நேரம்
இன்னும் நீள ஏக்கம்தான் கூடுகிறதே....
எனக்குள் ஏனோ நாணம்தான் தேங்குகிறதே.....