See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: காதலே
உன் முகம் பார்த்து நான் நலமாக இல்லை.. நாட்கள் நகராமல் நின்று விடவில்லை.. எண்ணங்கள் தேங்கி போய் விடவில்லை.. முகவரியை தொலைத்து தேடி அலைய வில்லை.. என்றெல்லாம் பேச விரும்பவில்லை.. எங்கே உன்னை தேடுவதாக நினைத்து கொள்வாயோ... உன் ஆறுதலுக்கும், அன்பிற்கும் அடிமை என்றெண்ணி விடுவாயோயோ.. என்று மனம் பதபதைக்கிறது.. ஒருவர் மட்டுமே தான் வாழ்க்கையா என்ன..? முடிந்து போன வாழ்விற்கு முதலுதவி எதற்கு?? நான் ஒன்றும் கடந்து செல்ல முடியாத அளவு அன்பை வைத்து விடவில்லை உன்மேல்.. என் மகிழ்ச்சியான முகமே நீ காணும் என் நிரந்தர முகமாக இருக்கும்.. June 06, 2023, 11:58:08 pm |
1 |
Re: காதலே
நிஜமான காதலே.. பக்கம் பக்கமாக கவிதை வேண்டாம்.. பாசமான பேச்சு வேண்டாம் .. காதலில் கரைய வேண்டாம்.. கனவுகளில் வரவே வேண்டாம் .. என் குறுஞ்செய்தி ஒன்றை கண்டு, உன் முகத்தில் பூக்கும் சிறு புன்னகை போதுமடா.. அதிகமான அன்பில் மனம் உன்னையே தேடுவதும்... பிறகு பேசிக் கொள்ளலாம் என தள்ளி போட்ட கதைகள் பல உள்ளதும்.. சரி என்ற வார்த்தைக்கு பின் சரளமாக பேச நினைத்து பேசாமல் நிற்பதும்.. பேசும் போது அமைதியாக இருந்துவிட்டு பேசாத போது உன்னையே தேடுவதும்.. விசித்திரமாய் இருக்கிறதே.. காரணங்கள் புரிய மறுக்கிறதே.. இறங்கி வருவதில் இரக்கம் காட்டினால் இடைவெளிகள் குறையுமடா.. எல்லைகள் இல்லையென்று தொல்லை தர முடிவெடடா.. நீதான் என் நிஜமான காதலே.. June 08, 2023, 10:56:27 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-026
காதல் மங்கை.. தன் மும்தாஜ்காக அவன் எழுதிய வரிகளிங்கே... அந்தி சாயும் நேரம்.. அழகான ஆக்ரா நதியோரம்.. நித்தம் விழும் நின் நிழல் ஒன்றே.. நீங்காத என் நிஜ தரிசனம்... மெய் நிகர் அழகே.. நீ என் மேல்.. மெல்ல விழும் மழையே.. பொய்யொன்று உரைக்கையிலே.. முகம் பொலிவிழக்க காண்கின்றேன்.. நினைவுக்குள் வருகின்றாய்.. நீங்காத ஏக்கம் தருகின்றாய்.. முகிலாடை அணிகின்றாய்.. முழுமதி முகம் மறைக்கின்றாய்.. காற்புள்ளியிட்டு உன்னை தொடர.. விழிகளாலே போரிட்டு எனை வெல்கின்றாய்... வெண்புரவியின் மேலமர்ந்து.. வெண்ணிலாவை உனை தரிசிப்பேன்.. வெட்கப்படும் உன் முகத்தை.. வெண்மையாக வரைந்தெடுப்பேன்.. தூரிகையால் மடல் எழுதி.. மாதே உனை கவர்ந்தெடுப்பேன்.. பேரெழில், பெருஞ் சீற்றம்.. பேச்சினாலே சரி செய்வேன்.. உன்னிதழ் உதிர்க்கும்... ஒருகோடி வார்த்தைகளால்.. உள்ளூர உருகிப் போவேன்.. பக்கம் நின்று பார்க்கையிலே.. பளிங்கு சிலை போலிருப்பாய்.. யுகயுகமாய் தொடருந்து வந்து.. யுத்தமிட துணிய வைப்பாய்.. கொண்ட கடன் காதல் ஒன்றே... நான் கொண்ட காதலுக்கு.. கட்டிடங்கள் நிகரில்லை.. எதிர்ப்புகளற்ற காதலில் இல்லை எதுவும்.. எதிர்ப்புகள் பல கடந்த காதல் காவியமாகி ததும்பும்.. அளவில்லா நேசத்தை, ஆழிக் குமிழ் போல் மறைக்காமல்... உலகுக்கே தெரிய வைத்து உள்ளத்திலே உயிர் கொடுப்பேன்... கொள்ளையடித்த உன் மனதால்.. காதல் சிறையில் எனை அடைத்தாலும்.. உன்னத தாஜ்மஹாலை.. உனக்காக நானும் எழுப்புவேன்.. June 13, 2023, 01:49:59 pm |
6 |