Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: 1 [2] 3 4
Post info No. of Likes
Re: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி ரமண மகரிஷி
March 25, 2023, 08:42:21 am
1
Re: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி வெங்காயம்
March 28, 2023, 07:02:38 pm
1
Re: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி அரவிந்தர்
March 28, 2023, 07:42:43 pm
1
Re: கவிதையும் கானமும்-021
பத்திரிக்கையில், பெயர் பொறித்த நாளோடு!
பரிதவிப்பு பற்றிக்கொண்டு, பாடாய் படுத்துதடா!
கல்யாண தேதி, பக்கத்திலே இல்லையடா!
புகலிடமாய் உன் மடி சேர, ஆவலும் கூடுதடா!

அலாதியான ஆவலுடன், மங்கையென்னை திருமதியாக்க, மன்னன் அவன் வருவானே!
ஒப்பான கனவினிலே, ஓயாமல் வந்தவனே, என்னுள்ளே ஓருயிராய் இணைவானே!

கண்கவர்ந்த கண்ணாளா!
மனம் நிறைந்த மணவாளா!
சிந்தையிலே நித்தம் வந்து!
நிஜமாகும் நாளும் வந்து!

அகத்தினுள்ளே கொண்டாடி!
முகத்தினிலே புன்முறுவல் பூத்து!
நாணத்திலே கன்னம் சிவந்து!
தனி உலகில் நானிருக்க!

கை, கால்கள் பதட்டத்துடன்,
தலை கவிழ்ந்து நான் நடக்க!
பொன்நகைகள் மினுமினுக்க!
பொலிவான ஒப்பனையும்,
கூந்தலில் சூடிய மல்லிகையும்,
கை நிறைந்த மருதாணியும்,
காஞ்சிப் பட்டில் களஞ்சியமாய்,
காண்போர் கண்ணுக்கு அழகு சிலையாய்,

மஞ்சளும், குங்குமமும் சூடிக்கொண்டு,
சுற்றத்தார்கள் சூழ்ந்து நிற்க!
சொல்லில் அடங்கா வார்த்தைகளும் உதடு தாண்டி வர மறுக்க!

நாதஸ்வர இசையுடனே,
அன்பை கொண்டாடும் நாளாக!
அடக்க ஒடுக்கமாய் நானிங்கே!
அவன் வருகைக்காக காத்திருக்க!

காட்சி பிழையா, இல்லை காதல் பிழையா இது ?

மொத்த அழகும், அவன் முகத்தினிலே குதூகலிக்க, கம்பீரமாய் வந்து நின்றான்!
வந்திறங்கிய கணமதிலே, கண்ணோடு கண் பார்த்து, வெட்கத்திலே தலை குனிய வைத்தான்!
நெருங்கி வந்து, ரகசியமாய்
கண்ணடித்தான்!

தோழிகளின் சிரிப்பொலியும்,
சொந்தங்களின் கேலி பேச்சும்,
திரையிட்டு மறைத்ததே, வார்த்தையதை!
ஆற்ற முடியா நாணத்துடன், கைகளும் முகத்தை மூடியதே..!
வெட்கத்தையும் படம் பிடித்து பரிசாக தருவானோ?

நகை புதிது,
உடை புதிது,
நாணம் புதிது,
எண்ணம் புதிது,
என்னவனை சேரும் நாளும் புதிது,

கரம் கோர்த்து, மாலை சூடி, கட்டிய மாங்கல்யத்துடன் அவன் வசமாகும் நாளிதுவே!
தந்தை, தாய் ஆசிர்வாத அட்சதை தூவி, நம்மை வாழ்த்தி வழியனுப்பும் நாளுமிதுவே !

என்னவன் கையில் தஞ்சமடைந்த என் கைகளும் நடுங்கியதே .. ?
சேர்ந்த நம் மணநாளை கொண்டாடவா ?
ஆனந்த கண்ணீரில் மிதக்கும், என் அன்னையவள் அன்பை, விட்டு பிரிய மனமின்றி, தந்தையின் தோள் சாயாவா?

புது உறவை ஏற்றுக் கொண்டு,
புகுந்த வீட்டில் பக்குவமாய் வாழ,
பாசத்துடன் ஆசிர்வதித்து,
பெருமித சிரிப்பொன்றை முகத்தில் காட்டி,
அன்புடன் அரவணைத்த,
பெற்றோரின் ஆசைகளும்,
நிறைவேறும் நாளும் வரும்.

வாழ்த்தொலிகள் விண்ணை முட்ட, இருமனம் இணைந்த நாளை,
கலப்படமில்லா கவிதையாக,
திகட்டாத இனிப்பாக,
தெள்ளுதமிழ் பாட்டாக,
கனிவான வாழ்வாக,
ஊர் மெச்ச, மங்காத தமிழாக, வாழ்வோம் நாமே!.



April 05, 2023, 04:03:08 pm
2
Re: என் கவிதை முகமூடி மனிதன்

கருமேகம் போல் அடர்ந்த தலை முடியும் மழை தருமோ?
சிவந்த கண்களும் சீற்றங் கொண்ட பார்வையும் சொல்ல விழைவது என்னவோ?

முகம் மறைப்பதா?
முகமூடி அணிவதா?

மங்கை மனதால் மையல் கொள்ள மயங்க வைக்கும் மான்விழியான்.
மறைமுகமாய் ஒலிக்கும் புன்னகையின் சத்தத்தினை ஒழித்து வைக்கும் ஓர வஞ்சனையான்.

முகத் திரையை விலக்கி முழுமதியை முகத்தில் காட்ட மறுப்பானா?
சுவாரசியமான பக்கத்தில் பத்திரமாய் ஒளிந்து கொண்ட காரணமற்ற வரிகளாவானா?

முழுவதுமாக காட்டி விடும் உணர்ச்சிகளை மூடி மறைக்க போட்டுக் கொண்ட முகமூடியோ?
களங்கமற்ற மனதினிலே காலம் கட்டமைத்த கழற்றி எறிய மறுத்த முகமூடியோ?

நல்ல பெயரை எடுக்க நாளும் அணியும் முகமூடி.
உண்மையற்ற மனிதனிடத்தில் உற்சாகமாய் ஏறிக் கொள்ளும் முகமூடி.
நகலற்று நீயாக நீ இருந்தால் சுதந்திரமற்று சுற்றலில் விடும் முகமூடி.

 மூகமூடியற்று வாழ்ந்து விடும் மனிதனிங்கு எவனுமில்லை.
 
நிஜத்தின் சாயம் அங்கங்கே ஒட்டிக் கொள்ள கழற்ற நினைக்கும் முகத்திரையும் விலக மறுத்து தானே மூடிக் கொள்ளும் காலமிது.

April 15, 2023, 04:13:47 pm
2
Re: என் கவிதை காய்ச்சல்

தொட்டு பார்க்கும் அன்னையின் கரம் போல காலை கண்விழிப்பில் கதகதப்பு தாண்டி ஒரு உஷ்ணம் என்னை தொட்டு செல்கிறது.

தேநீருடன் தொடங்கும் நாளின்று நா வரண்டு சுவை உணர்வுகள் கசந்து கிடக்கிறது.

சோர்ந்து போன கண்களும் தூங்க மனமின்றி வெறுமனே கண்களை மூடிக் கொண்டது.

சுறுசுறுப்பாக காற்றில் பறக்கும் கால்களும் சுமையாக சுருண்டு கிடக்கிறது.

நிழலாக பின்தொடரும் அம்மா கூட கஞ்சியும், காய்ந்து போன ரொட்டியையும் கையில் வைத்து காத்திருக்கிறாள்.

மாத்திரையின் வாசம் நினைக்கும் போதே குமட்டல் வந்து ஓட வைக்கிறது.

சக்கரம் ஓயாமல் ஓடிக் கொண்டிருந்தால் என்றோ ஒருநாள் அச்சாணி முறிந்து அதன் அஸ்திவாரம் அசைந்து போகும்.

மனித வாழ்க்கையிலும் ஓய்வாக காய்ச்சல் வந்ததாக எண்ணி ஓட்டத்திற்கு இடைவெளி கொடுப்போம்.

April 15, 2023, 04:20:05 pm
2
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 Hi
April 16, 2023, 09:08:39 pm
3
Re: காதலே இது போதும்

சுயம் மறந்து வந்த சுவடுகள் மறந்து, வெறுமனே உன் பின்னால் தொடரும், கால்களும் பின்வாங்கியது.!

சொன்னதை கேட்டு கடற்கரையில் பிடி மண்ணின், எண்ணிக்கையை அறிய முயலும் மடமையை, நானே கடிந்து கொண்டேன்.!

தலையணை தரும் தஞ்சமதை, உன் மடி தரும் என்றெண்ணி, ஏமாந்த வலி தந்த உணர்வு முள்ளாக இதயம் வலிக்கிறது !

எட்டி உதைத்தும் எழுந்து நின்றேன், எட்டாக் கனியாக போக நினைந்தேன்!

போக வேண்டும் என்ற முடிவிருந்தால், கொட்டும் மழையிலும் குடையின்றி வேகமாக நடந்து செல்வேன்.!

April 17, 2023, 07:52:58 am
1
Re: HAPPY BIRTHDAY CUTE & BULLETT Happy Birthday Cute Sis💝
April 20, 2023, 10:03:49 am
2
Re: HAPPY BIRTHDAY CUTE & BULLETT Happy Birthday Bullet 💐🎁
April 20, 2023, 10:04:39 am
2