Advanced Search

Author Topic: AnJaLi கதைகள்  (Read 66601 times)

March 21, 2019, 08:37:34 pm
Read 66601 times

AnJaLi

AnJaLi கதைகள்
« on: March 21, 2019, 08:37:34 pm »
A man stopped at a flower shop to order some flowers to be wired to his mother who lived two hundred miles away. As he got out of his car he noticed a young girl sitting on the curb sobbing. He asked her what was wrong and she replied, “I wanted to buy a red rose for my mother. But I only have seventy-five cents, and a rose costs two dollars.”

The man smiled and said, “Come on in with me. I’ll buy you a rose.” He bought the little girl her rose and ordered his own mother’s flowers. As they were leaving he offered the girl a ride home. She said, “Yes, please! You can take me to my mother.” She directed him to a cemetery, where she placed the rose on a freshly dug grave.

The man returned to the flower shop, canceled the wire order, picked up a bouquet and drove the two hundred miles to his mother’s house.


" Moral : Life is Short. Spend much time as you can loving and caring people who love you. Enjoy each moment with them before it’s too late. There is nothing important than family.



March 22, 2019, 04:41:35 am
Reply #1

MDU

Re: Rose for Mother
« Reply #1 on: March 22, 2019, 04:41:35 am »

March 22, 2019, 07:37:03 pm
Reply #2

AnJaLi

சிவகாமியின் சபதம்
« Reply #2 on: March 22, 2019, 07:37:03 pm »
காஞ்சி  மாநகரம் 

    இன்றைக்கும் பழமை  மாறாம இருக்கற  காஞ்சி மாநகரம்  தாம் பல்லவ  சாம்ராஜ்யத்தின்  தலைமை  இடம்.  சேரரும், சோழரும், பாண்டிய  மன்னர்களும்  ஆண்டு  சிறப்பித்த  தென்னாட்டை  அலங்கரித்த  மற்றும் ஒரு சகாப்தமே  பல்லவ சாம்ராஜ்யம்.
பல்லவ அரசு  தழைத்தோங்கிய  காலத்தில்  சேர  சோழ  மன்னர்களின்  புகழ்  கொஞ்சம்  மங்கி போயிருந்தது... பல்லவ மன்னர்கள்  நீண்ட  வரலாறு படைக்கவில்லை  ஆனாலும் சில அற்புதங்களை  படைத்தனர் . அந்நாளிலே  கல்வியிற்  சிறந்த  நகரமாய்    காஞ்சி முன்னிறுத்தப்பட்டது. கல்வி  மட்டுமல்ல  கலை, இலக்கியம் , நடனம் , நாட்டியம் , சிற்பம் என அனைத்திலும் ...
" காஞ்சி பெண்ணின்  மீது  மோகம"்  கொண்ட மன்னர்களும்  பேரரசர்களும்  ஏராளம்  ....  இங்கு காஞ்சி   பெண் என குறிப்பிட  படுவது  காஞ்சி மாநகரமே....
சங்கம்  வைத்து  தமிழ்  வளர்த்த  மதுரை  மாநகரத்தில்   இருந்து தேடி வந்து  தமிழ் கற்றனராம்  காஞ்சியில் ...
￰இவ்வளவு பெருமைகளை  உள்ளடக்கிய  காஞ்சி இன்னும்  மெருகேற செய்தவர்  காஞ்சி பேரரசர்  "  மகேந்திர  பல்லவர்  "
அடுத்த  பகுதியில்  அவரை  பற்றி  .....


March 22, 2019, 07:38:16 pm
Reply #3

AnJaLi

சிறை வாசம்
« Reply #3 on: March 22, 2019, 07:38:16 pm »
அந்த முகம் தீனதயாளனுக்கு மிகவும் பரிச்சயம் உள்ள முகமாகத் தோன்றியது. ஆனால் சட்டென்று நினைவுக்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. அந்த நபர் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த போது பலர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். அவர் சுமார் ஐந்து நிமிடம் தான் மண்டபத்தில் இருந்திருப்பார். அந்த ஐந்து நிமிடமும் தீனதயாளனின் அண்ணாவின் சம்பந்தி, மணப்பெண்ணின் தந்தை, கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாக அவர் அருகிலேயே நின்றிருந்தார். அந்த நபர் மணமக்களை வாழ்த்தி விட்டு காரேறுகையில் தற்செயலாக தீனதயாளனைப் பார்த்தார். உடனே அந்த நபரின் முகத்தில் தீனதயாளன் யாரென்று அறிந்து கொண்டதன் அறிகுறி ஒரு கணம் தோன்றியது. ஆனால் மறு கணமே அதை மறைத்துக் கொண்டு காரினுள் மறைந்தார். கார் சென்ற பின்பு தான் சம்பந்தியின் கைகள் பிரிந்தன.

   "கூப்பிட்டிருந்தேன். ஆனா இவ்வளவு பெரிய மனுசன் நம்மளையும் மதிச்சு வருவார்னு உறுதியாய் நினைக்கலை. அவர் வந்து ஆசிர்வாதம் செய்ய என் பொண்ணு குடுத்து வச்சிருக்காள்னு தான் சொல்லணும்" என்று பலரிடமும் அவர் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது தீனதயாளன் காதில் விழுந்தது.

   "இப்ப வந்துட்டு போன ஆளை எனக்கு நல்லாவே தெரியும், சாவித்திரி. ஆனா சட்டுன்னு யாருன்னு சொல்ல வரலை" என்று தீனதயாளன் தன் மனைவியிடம் சொன்னார்.

   ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான தன் கணவனை, சாவித்திரி சந்தேகக் கண்ணோடு பார்த்தாள். அவளது அனுபவத்தில் அவர் நினைவில் தங்கும் நபர்கள் பெரும்பாலும் குற்றவாளிகள் மட்டுமே. பல ஆண்டுகள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபரைப் பார்த்து அவளிடம் "யாரிது" என்று கேட்பார். ஆனால் அவர் விசாரணை செய்த சிறு குற்றவாளிகளைக் கூட பல ஆண்டுகள் கழித்தும் அவர் மறந்ததாய் சரித்திரம் இல்லை. சம்பந்தி வீட்டவர்கள் இவ்வளவு மரியாதையைக் காட்டிய ஒருவரைப் பற்றி என்ன இவர் சொல்லப் போகிறாரோ என்று பயந்தாள்.

   "கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருங்கோ" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னாள்.

   அவருக்கு மனைவி ஏன் பல்லைக் கடித்துக் கொண்டு எச்சரிக்கிறாள் என்று புரியவில்லை. அவளைப் பொருட்படுத்தாமல் தானே நேரடியாக அண்ணாவின் புது சம்பந்தியிடம் சென்று, வந்து விட்டுப் போன நபர் யாரென்று விசாரித்தார்.

   "அவர் ஒரு மகாத்மா, சம்பந்தி. கோடிக் கணக்கில் சொத்திருந்தாலும் கொஞ்சம் கூட அகம்பாவம் இல்லாத மனுஷன். இப்ப நீங்களே பார்த்தீங்கள்ள... மனுஷன் ரொம்பவும் சிம்பிள். அவரோட சங்கரா குரூப்ஸ் கம்பெனிகள், இண்டஸ்ட்ரீஸ் எல்லாமாய் சேர்த்து கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் வேலை பார்க்கிறாங்க. எல்லாருக்கும் நல்ல சம்பளம். ஆனா அவரோட வீட்டைப் பார்த்தா நீங்க நம்ப மாட்டீங்க.அவரோட பியூன்கள் கூட அதை விடப் பெரிய வீட்டில் இருக்கிறாங்க. அவ்வளவு சின்ன விட்டில் வேலைக்காரங்க கூட இல்லாம ஒரு சன்னியாசி மாதிரி வாழ்றார்."

   "அவர் பேர் என்ன சம்பந்தி"

   "மாணிக்கம்"

   சொல்லி விட்டு சம்பந்தி நகர்ந்தார். அந்தப் பெயரைக் கேட்டவுடன் எல்லாம் தெளிவாக நினைவுக்கு வர தீனதயாளன் அதிர்ந்து போய் நின்றார்.

   மாணிக்கம் ஒரு காலத்தில் கோயமுத்தூரில் போலீஸ் துறையையே திணறடித்த ஒரு தீவிரவாதி. தீனதயாளன் அப்போது அங்கு டி.எஸ்.பியாக சில காலம் இருந்தார். வெடிகுண்டு தயாரிப்பதில் மாணிக்கம் நிபுணன். ஒரு தீவிரவாதக் கும்பலின் மூளையாக அவனை போலீஸ் கணித்து வைத்திருந்தது. அவனைக் கைது செய்து சிறைக்கு அனுப்ப தீனதயாளனும், அவரது சகாக்களும் நிறையவே முயற்சிகள் எடுத்தார்கள். அவன் சிக்காமலேயே தப்பித்து வந்தான். ஒரு வெடிகுண்டு வெடித்த கேசில் சதாசிவம் என்ற ஒரு போலீஸ் அதிகாரி சாமர்த்தியமாக அவனை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்தார். தீனதயாளன் உட்பட உயர் அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் கோர்ட்டில் சதாசிவம் வேண்டுமென்றே கேசை பலவீனப்படுத்தி அவனைத் தப்ப வைத்தார். மாணிக்கம் விடுதலையாகி புன்னகையுடன் வெளியே வந்த காட்சி இன்னமும் தீனதயாளனுக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.

   சதாசிவத்தை அழைத்து தீனதயாளன் விசாரித்தார். அவரது எல்லாக் கேள்விகளுக்கும் சேர்த்து சதாசிவம் ஒரே பதில் தான் சொன்னார். "எனக்கு என் குடும்பம் முக்கியம் சார்"

   சதாசிவத்தின் வயதுக்கு வந்த மகளைக் கடத்திச் சென்று அவரை அந்தக் கும்பல் மிரட்டிய விஷயம் மெள்ள வெளியே வந்தது. அவன் விடுதலையான பின்பு அந்தப் பெண்ணைப் பத்திரமாக அனுப்பி விட்டார்களாம். கொதித்துப் போனார் தீனதயாளன். அப்பீல் செய்யலாம் என்றும் அவர் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தரும் என்றும் தீனதயாளன் சொல்லிப் பார்த்தார்.

   "எவ்வளவு நாள் பாதுகாப்பு தர முடியும் சார்?"

   கடைசியில் வேறு வழியில்லாமல் அந்தக் கேசைக் கை கழுவ வேண்டி வந்தது. அந்த சமயம் தீனதயாளனுக்கும் வட இந்தியாவிற்கு மாற்றலாகியது. அவர் அங்கு போன பின்பும் ஒரு முறை இங்கு ஒரு வெடிகுண்டு வெடித்து ஒரு ரயில் தடம் புரண்ட செய்தியைக் கேள்விப் பட்டார். அதில் மாணிக்கத்தின் பெயரும் அடிபட்டது. ஆனால் அந்த வழக்கிலும் ஓரிரு சின்னத் தீவிரவாதிகள் கைதாகி தண்டனை பெற்றார்களே தவிர மாணிக்கம் சட்டத்தின் பிடிக்கு வரவில்லை. அதற்குப் பின் மாணிக்கத்தைப் பற்றி ஒரு தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை. இருபத்தைந்து வருடங்கள் கழித்து இப்போது தான் ஒரு கோடீசுவரத் தொழிலதிபராகவும், மகாத்மாவாகவும் அவனைப் பற்றி கேள்விப்படுகிறார்.

   தீனதயாளனுக்கு இதை ஜீரணிக்கவே முடியவில்லை. சட்டத்தின் விசேஷ வலையில் சின்ன மீன்கள் மாட்டிக் கொள்வதும் பெரிய மீன்கள் அனாயாசமாக தப்பித்துக் கொள்வதும் அவரால் இன்னமும் சகிக்க முடியாததாகவே இருந்தது. மாணிக்கத்திடம் பேசிய ஒருசிலரிடம் பேச்சுக் கொடுத்தார். எல்லாரும் அவனைப் பற்றி நல்ல விதமாகவே சொன்னார்கள். அவன் சின்னதாய் அங்கு தொழில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியதாகவும் கோடிக்கணக்கில் தர்ம காரியங்களுக்கு அவன் செலவிடுவதாகவும் தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னதில் ஒரு விஷயம் நெருடியது. மாணிக்கம் வசிக்கும் அந்த சிறிய வீட்டிற்கு அவனது ஓரிரு பழைய சினேகிதர்கள் தவிர யாரும் போனதில்லை. உள்ளே அவன் யாரையும் அனுமதிப்பதும் இல்லை.

   மனைவியிடம் போய் சொன்னார்.

   "நான் அப்பவே நினைச்சேன். உங்களுக்கு ஞாபகம் இருக்குன்னா அது நல்ல ஆளாய் இருக்க முடியாதுன்னு. சரி இன்னும் போய் யார் கிட்டேயும் சொல்லாதீங்க. நமக்கு எதுக்கு வம்பு"

   அவரால் சும்மா இருக்க முடியவில்லை. ஒரு தீவிரவாதி தண்டனைக்குத் தப்பி விட்டு சுதந்திரமாகக் கோடிக் கணக்கில் சொத்து சேர்ப்பதும் மகாத்மாவாக சித்தரிக்கப் படுவதும் அவருக்கு பொறுக்க முடியாத விஷயமாகவே இருந்தது. பழைய கதை தெரிந்த ஒருவன் இருக்கிறான் என்று தெரிவிக்க ஆசைப்பட்டார். மனைவியிடம் சொன்னால் அவள் அனுமதிக்க மாட்டாள் என்று அவளிடம் சொல்லாமல் வெளியே போய் ஒரு போன் செய்தார்.

   மாணிக்கத்தின் செகரட்டரியிடம் பேசினார். "நான் மாணிக்கதோட பழைய சினேகிதன். இங்கே ஒரு கல்யாணத்துக்கு வந்தேன். அவரை சந்திக்க முடியுமா? நான் நாளைக்கு மத்தியானம் கல்யாண பார்ட்டியோட ஊர் திரும்பணும். அதுக்கு முன்னாடி அவரைப் பார்த்துட்டுப் போலாம்னு பார்க்கறேன்"

   "அப்பாயின்மென்ட் இல்லாம பார்க்க முடியாதுங்களே"

   "அவர் கிட்டே எனக்காக கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்"

   "உங்க பெயர்?"

   "தீனதயாளன். முன்பு கோயமுத்தூரில் டி.எஸ்.பி ஆக இருந்திருக்கிறேன்னு சொன்னா அவருக்குத் தெரியும்" சொல்லி விட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். மாணிக்கம் தன்னைச் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஆனாலும் மாணிக்கம் என்ன சொல்வான் என்று அறிய அவருக்கு ஆவலாக இருந்தது.

   "சரி லைனிலேயே இருங்கள்"

   டெலிபோன் சில நிமிடங்கள் மௌனம் சாதித்தது.

   "எம்.டி உங்களை ஏழு மணிக்கு அவர் வீட்டில் வந்து பார்க்கச் சொன்னார். வீட்டு அட்ரஸ் நோட் பண்ணிக்கிறீங்களா?...."

   தீனதயாளன் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி தன்னைச் சந்திப்பதைத் தவிர்ப்பான் என்று நினைத்திருக்கையில், யாரையும் அதிகம் அனுமதிக்காத தனது வீட்டுக்கே வந்து சந்திக்குமாறு மாணிக்கம் சொன்னது இரட்டிப்பு திகைப்பாக இருந்தது. எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தால் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்று யோசித்தார். அந்த வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதாக முன்பே அவர் நினைத்திருந்ததால் வீட்டில் அவனை சந்திப்பதில் அபாயம் இருக்கிறது என்று போலீஸ் புத்தி எச்சரித்தது. ஆனாலும் முன் வைத்த காலைப் பின் வைக்க அவர் மனம் ஒப்பவில்லை.

   மாலையில் எல்லாரும் சுமார் நாற்பது மைல் தூரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலுக்குப் போகப் புறப்பட்டனர். ஏதோ ஒரு காரணம் சொல்லி சாவித்திரியை மட்டும் அவர்களுடன் அனுப்பி வைத்து விட்டு மாணிக்கத்தின் வீட்டுக்குக் கிளம்பினார்.

   மாணிக்கத்தின் வீடு ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அருகில் வீடுகள் இல்லை. சுற்றும் முற்றும் இருந்த இடத்தையெல்லாம் மாணிக்கம் வாங்கி இருப்பதாக கல்யாண மண்டபத்தில் சொல்லியிருந்தார்கள். காலிங் பெல்லை அழுத்தினார். மாணிக்கமே கதவைத் திறந்தான்.

   கிட்டத் தட்ட ஐம்பது வயதைக் கடந்திருந்தாலும் மாணிக்கம் திடகாத்திரமாக இருந்தான். ஒரு கதர் சட்டையும் கதர் வேட்டியும் அணிந்திருந்தான். அடுத்தது அரசியல் பிரவேசம் போலிருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

   "வாங்க டி.எஸ்.பி சார். உட்காருங்க"

   முதல் அறையில் இரண்டு பிரம்பு நாற்காலிகள் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை. ஒரு நாற்காலியில் தீனதயாளன் அமர மற்றதில் மாணிக்கம் அமர்ந்தான். அவன் முகத்தில் தெரிந்த அமைதி அவரை ஆச்சரியப் படுத்தியது. எப்படி தான் முடிகிறதோ?

   "உன்னை இந்த ஒரு நிலையில் நான் எதிர்பார்க்கலை மாணிக்கம்" என்று பொதுவாகச் சொன்னார்.

   "இருபத்தி நாலு வருஷத்துக்கு முன்னால் நான் இப்படியாவேன்னு யாராவது சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன் சார்"
   
   "என்ன செஞ்சே மாணிக்கம், கள்ள நோட்டு அடிச்சியா?" அவர் ஏளனமாகக் கேட்டார்.

   சற்றும் கோபப்படாமல் மாணிக்கம் சொன்னான். "ஒரு ரயிலைக் கவிழ்த்தேன். ஒரு ஆளைப் பார்த்தேன். எல்லாமே என் வாழ்க்கையில் மாறிடுச்சு சார் ...."

   வெடிகுண்டு வைத்து ரயிலைக் கவிழ்க்கும் அந்தத் திட்டத்தில் சிறிய தவறு கூட இல்லாமல் மாணிக்கம் அன்று பார்த்துக் கொண்டான். அவனது திட்டங்களிலேயே இது தான் மிகப் பெரியது. தூரத்தில் ரயில் கவிழ்வதைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது தான் அந்த ஆளைப் பார்த்தான். பரட்டை முடி, கந்தல் உடை, தோளில் ஒரு சாயம் போன ஜோல்னாப் பை, இதற்கெல்லாம் எதிர்மாறாக தீட்சணியமான கண்களுடன் அவன் பின்னால் அந்த வயதான ஆள் நின்றிருந்தார். அவரது கண்கள் அவனது உள் மனதை ஊடுருவிப் பார்த்தன. ஓட யத்தனித்த மாணிக்கத்தை அவரது அமானுஷ்யக் குரல் தடுத்து நிறுத்தியது.

   "நீ முழுசும் பார்க்கலை. முழுசையும் பார்த்துட்டே போ.எதையும் நீயா நேரில் சரியா பார்த்தால் தான் புரியும்" என்று சொன்னவர் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவனையும் அறியாமல் மந்திரத்தால் கட்டுண்டது போல மாணிக்கம் அவரைப் பின் தொடர்ந்தான். எங்கும் பிணங்கள், துண்டிக்கப் பட்ட உறுப்புகள், அழுகுரல்கள், வலி தாளாத ஓலங்கள் இவற்றினூடே இருவரும் நடந்தார்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையிலும் ஒவ்வொரு மனிதனின் சோகத்தை மாணிக்கம் பார்த்தான். ஆட்கள் பல திசைகளிலிருந்தும் விரைந்து வந்து படி இருந்தார்கள்.

   "இது உன் வெற்றியோட ஆரம்பம் தான். இதில் எத்தனையோ பேர் அனாதையாகலாம், பிச்சைக்காரங்களாகலாம், பைத்தியம் புடிச்சு அலையலாம், சில குழந்தைகள் பெத்தவங்க இல்லாம கஷ்டப்பட்டு தீவிரவாதியாகவோ, விபசாரியாகவோ கூட ஆகலாம். இத்தனைக்கும் நீ பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாய். இத்தனை பேரும் உனக்கு என்ன கெடுதல் செய்தாங்கன்னு நீ இப்படி இவங்களை தண்டிச்சிருக்காய்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

   மாணிக்கம் அங்கிருந்து ஓடி விட நினைத்தான். ஆனால் அவரது பார்வை அவனைக் கட்டிப் போட்டிருந்தது. அவனுக்கும் அவனது இயக்கத்துக்கும் பதவியில் இருந்தவர்கள் மீது தான் கோபம், அவர்களுக்குப் பாடம் கற்பிப்பது தான் குறிக்கோள். அதற்காகத் தான் இது போன்ற தீவிரவாதச் செயல்கள். ஆனால் அதைச் சொல்வது அவர் கேள்விக்குப் பதிலாகாது என்பது புரிந்தது. எத்தனையோ காலமாக கொடூரமாகவே வாழ்ந்து விட்ட அவனது மரத்துப் போன மனதில் ஏதோ ஒன்று ஊடுருவி அவனை அசைத்தது. அந்தக் கோரக் காட்சிகளும், பாதிக்கப் பட்டவர்களின் தாங்க முடியாத துயரங்களும் அவனை மிகவும் ஆழமாகப் பாதித்தன. அவர் கேள்வியில் இருந்த நியாயமும், கண்டு கொண்டிருக்கும் காட்சிகளும் சேர்ந்து அவன் மனதை என்னவோ செய்தன. மனசாட்சி உறுத்தியது. நேரம் ஆக ஆக அந்த இடம் அவனைப் பைத்தியமாக்கி விடும் போலத் தோன்றியது.

   தாள முடியாமல், ஆபத்திற்கென்று அவன் வைத்திருந்த சயனைடு கேப்ஸ்யூலை எடுத்தான்.

   "சாகடிக்கிறதும், சாகிறதும் ரெண்டுமே சுலபம் தான். கோழைகள் செய்கிற காரியம்."

   முதல் முறையாக மாணிக்கம் வாயைத

March 22, 2019, 07:41:24 pm
Reply #4

AnJaLi

புது சட்டை
« Reply #4 on: March 22, 2019, 07:41:24 pm »
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. நல்ல மனுசாளுக்கு ஒரு சொல்லு. ஸ்டேன்ட் அப் ஆன் தி பென்ச்.." என்றார் ஆறாம் வகுப்பு ஆசிரியர் தணிகாசலம்.
பாஸ்கர் முணுமுணுத்துக் கொண்டே பெஞ்சின் மீது ஏறி நின்றான்.
பாஸ்கருக்கு இது ஒன்றும் புதிது இல்லை. எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இப்படி ஏறி நிற்பான்.
பாஸ்கர் கொஞ்சம் முரட்டு சுபாவம். மூக்கு நுனியில் கோபம் எப்போதும் உட்கார்ந்திருக்கும். ஒரு நாளைக்கு ஒரு பையனிடமாவது வம்பு வளப்பான்.
இப்போது பாஸ்கரின் கோபம் ராஜூவின் மீது இருந்தது.
ராஜூ கிளாஸ் லீடர். அவன்தான் இவனைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் வகுப்பில் இல்லாத நேரத்தில் அடித்த கொட்டத்திற்கு எப்படி தண்டனை கொடுப்பார்?.
பள்ளிக் கூடம் விடட்டும் என்று காத்திருந்தான் பாஸ்கர். வீட்டுக்கு பெல் அடித்தது. மாணவர்கள் திபுதிபுவென்று வகுப்பிலிருந்து வெளியேறினர்.

பாஸ்கர் மட்டும் ராஜூவின் பின்னாலேயே போனான். ராஜூ பள்ளிக்கூடக் கேட்டைத் தாண்டியதும் அவனைத் தோளைப் பிடித்து இழுத்தான்.
"டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்னே..?" என்று கோபமாய் கேட்டான்.
"நான் ஒண்ணுமே.......... உன்னப்பத்தி சொல்லலடா...." என்றான் அமைதியாக ராஜூ.
அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான். ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
ராஜூ நிலை குலைந்து கீழே விழுந்தான்.
ராஜூவின் கிழிந்த சட்டை பாதிக்குமேல் பாஸ்கரின் கையில் இருந்தது.
அந்த சட்டைக் கந்தலை அவன்மீது தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் அவனைத் தாக்க ஆயத்தமானான்.
பாஸ்கர் எதிர்பார்த்ததைப் போல் இவனைத் திருப்பி அடிக்க முயற்சிக்கவில்லை.
ராஜூவின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன தனது ஒரே சட்டையைப் பற்றியே இருந்தது. நாளைக்கு எப்படி இவன் பள்ளிக்கு வருவான்...? எந்த சட்டையைப் போட்டுக் கொண்டு வருவான்?
ராஜூ செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான்.
மிச்ச கொஞ்சமாய் கிழிந்துபோன சட்டையை கழட்டி எறிந்தான்.
சிதறிக் கிடந்த புத்தகங்களை சேகரித்தான். எழுந்து நடந்தான்.
ராஜூ வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து கொண்டிருந்தது பாஸ்கருக்கு என்னவோ போல் இருந்தது.
பாஸ்கர் வீட்டிற்குத் திரும்பினான். அன்று முழுக்க அவனுக்கு மனசு என்னவோ போல் இருந்தது.
ஒருவாரம் கழிந்தது. ராஜூ பள்ளிக்கு வரவே இல்லை.
ராஜூவின் வீடு ஊர்க்கோடியில் இருந்தது. ஒரு சின்ன குடிசை.
அதில் அவனும், அவன் அம்மாவும் இருந்தனர். பாஸ்கரின் வீட்டு மாட்டுத் தொழுவம் கூட ராஜூவின் வீட்டை விட பத்து மடங்கு பெரியதாக இருக்கும்.
அன்று மாலை பள்ளியிலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தான் பாஸ்கர். சட்டென்று ஒரு இடத்தில் காரை நிறுத்தச் சொன்னான்.
காரை விட்டு இறங்கினான்.
ரோட்டு ஓரத்தில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது.
அங்கு ராஜூ தலையில் செங்கல் சுமந்தபடி சென்று கொண்டிருந்தான்.
பாஸ்கர் மெல்ல வேலை நடக்கும் இடத்திற்குச் சென்றான்.
"என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா....? வேலைக்கு வந்திட்டே..." அந்தப் பக்கமாக வந்த ஒருவர்.
"போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும்." என்றான் ராஜூ.
"ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்பொறமா பள்ளிக்கூடம் போகப் போறீயா?" என்று சிரித்தபடி போனார் அவர்.
"இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்?" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் பாஸ்கர்.
முட்டாள்தனமான கோபம். அவனுக்கே அவன் மீது வெறுப்பாய் இருந்தது.
பாஸ்கர் தனது வீட்டிற்குத் திரும்பி வந்தான். அப்பா தனது பிறந்த நாளுக்காக வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக் கொண்டு ராஜூவின் வீட்டிற்குச் சென்றான்.
"உள்ள வாடா" என்று அன்புடன் அவனை வரவேற்றான் ராஜூ
இவன் தயங்கியபடி உள்ளே போனான். அவனுக்கு டீ போட்டுக் கொடுத்தான்.
"என் மீது உனக்கு கோபம் இல்லையா" என்றான் பாஸ்கர்.
"வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா?" என்றான் ராஜூ.
"கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு" என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான்.
"எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது. உன் அன்புக்கு நன்றி" என்றான் ராஜூ. பாஸ்கர் எவ்வளவோ வற்புறுத்தியும் ராஜூ அதை வாங்கிக் கொள்ளவில்லை.
அடுத்தநாள் புதுச்சட்டையுடன் வகுப்பிற்குள் நுழையும் ராஜூவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.



March 22, 2019, 10:40:21 pm
Reply #5

ரதி

Re: புது சட்டை
« Reply #5 on: March 22, 2019, 10:40:21 pm »
wow super sis

March 22, 2019, 10:42:49 pm
Reply #6

ரதி

Re: சிறை வாசம்
« Reply #6 on: March 22, 2019, 10:42:49 pm »
nice

March 23, 2019, 03:44:25 am
Reply #7

MDU

Re: சிறை வாசம்
« Reply #7 on: March 23, 2019, 03:44:25 am »
SUPER

March 23, 2019, 03:46:40 am
Reply #8

MDU

Re: புது சட்டை
« Reply #8 on: March 23, 2019, 03:46:40 am »
SUPER
« Last Edit: March 23, 2019, 03:49:41 am by MDU »

March 23, 2019, 03:48:43 am
Reply #9

MDU

Re: சிவகாமியின் சபதம்
« Reply #9 on: March 23, 2019, 03:48:43 am »
SUPER

March 23, 2019, 08:41:52 pm
Reply #10

AnJaLi

மரணத்தின் விளிம்பில்....
« Reply #10 on: March 23, 2019, 08:41:52 pm »
மரணத்தின் விளிம்பில்....

மரணத்தின் விளிம்பில் யாருமே அதிக நேரம் தங்கி விடக் கூடாது என்று அருணாச்சலத்திற்குத் தோன்றுகிறது. ஏனென்றால் வாழ்ந்த விதத்தையும், நடந்து முடிந்தவைகளையும் இந்த நேரத்தில் அசை போட மட்டுமே மனிதனால் முடிகிறது. ஆனால் எதையும் சரி செய்யவோ மாற்றவோ அவகாசம் இல்லை.

"ஆஸ்பத்திரியில் வைத்துப் பயன் இல்லை. வீட்டுக்குக் கொண்டு போய் விடுங்கள்" என்று மருத்துவர்கள் ஆலோசனை சொன்னதால் அவரை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். அதிக பட்சம் மூன்று நாட்கள் இருப்பார் என்று டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் கண்களை மட்டும் திறந்து பார்க்கவும், சுற்றிலும் மற்றவர்கள் பேசவும் கேட்கவும் மட்டுமே முடிந்த ஒருவருக்கு ஒவ்வொரு கணமும் யுகமாகக் கழியும் அந்தக் கொடுமையை அருணாச்சலம் மட்டுமே அறிவார்.

மனைவி, மகன், மகள் மூவருக்கும் அவர் மரணத்தில் துக்கம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அதையும் மீறி உயிலில் என்ன எழுதியிருக்கிறார் என்கிற கவலை மேலோங்கி இருந்தது. ஏகப்பட்ட சொத்தை சுயமாக சம்பாதித்திருந்த அவர் உயிலை அடிக்கடி மாற்றும் பழக்கம் உடையவரானதால் கடைசி உயிலில் தங்கள் நிலை என்ன என்கிற கவலையை அவரருகில் உட்கார்ந்து தாழ்ந்த குரலில் தங்களுக்குள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அது காதில் விழ விழ மனம் ரணமாகிக் கொண்டே இருந்தது. மனிதனை விட பணம் பிரதானமாகும் போது பாசமென்ன, பந்தமென்ன?

"அந்த நாசமாப் போன வக்கீல் இந்த நேரமாய் பார்த்து சிங்கப்பூர் டூர் போயிட்டார். அவர் திங்கள் கிழமை தான் வருவாராம்" -இது மகன். இன்று வியாழக் கிழமை. திங்கட்கிழமை வரை காக்க அவனுக்குப் பொறுமையில்லை.

"அப்பா எனக்கு கண்டிப்பா ஒரு வீடு எழுதி வைப்பார்னு நாங்க ஹவுசிங் லோன் கூட போடாமல் இருக்கோம். உயில்ல என்ன எழுதி இருக்கார்னு உங்கிட்ட ஏதாவது சொல்லியிருக்காராம்மா?" இது மகள்.

"உயிலைப் பத்திக் கேட்கறப்ப எல்லாம் இப்ப எப்படியிருக்காரோ அப்படியே தான் இருப்பார். எந்த முக்கியமான விஷயத்தை என் கிட்ட வாய் விட்டுச் சொல்லியிருக்கார்" - இது மனைவியின் புலம்பல்.

குடும்பம் தான் இப்படி என்றால் வந்து விட்டுப் போன அக்கம் பக்கத்தினர், உறவினர், நண்பர்கள், அவர் கம்பெனி ஊழியர்கள் என எல்லோருமே ஒரு சம்பிரதாயத்திற்கு வந்தது போலத் தான் அவருக்குப் பட்டது. உறவினர்கள் மெல்லிய குரலிலும், சுற்றி வளைத்தும் உயில் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்கள். நண்பர்கள் அனைவரும் தொழில் சம்பந்தப்பட்டவர்கள். ஆகவே அவர்களும், ஊழியர்களும் அவர் கம்பெனி வாரிசான மகனிடம் நல்ல பெயரெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பக்கத்து கோயில் பூசாரி பார்க்க வந்தவர் "விஷ்ணு சஹஸ்ரநாமம் காதில் விழுந்துண்டிருந்தா நேரா வைகுண்டத்துக்கே போவான்னு ஐதீகம். அதனால தெரிஞ்சவா சொல்லுங்கோ, இல்லைன்னா கேசட்டாவது போடுங்கோ" என்று சொல்லி விட்டுப் போனார்.

"ஏண்டா கேசட் இருக்கா?" என்று அவர் மனைவி மகனிடம் கேட்க அவன் இல்லை என்றான். அதோடு அந்த விஷயம் மறக்கப் பட்டது. இல்லாவிட்டால் ஒன்று வாங்கிக் கொண்டாவது வா என்று அவளும் சொல்லவில்லை. வாங்கிக்கொண்டு வர அவனும் முயற்சிக்கவில்லை.

குடும்பத்திற்காக ஏகப்பட்ட சொத்தை சேர்த்து விட்டு விடை பெறப் போகும் இந்தத் தருணத்தில் தன் குடும்பத்திடம் இருந்து அவர் இதை எதிர்பார்க்கவில்லை. பணத்தையும், சொத்துக்களையும் சம்பாதித்தவர் மனிதர்களை சம்பாதித்து வைக்கவில்லை என்பதை உணர்கிறார். சொர்க்கம் நரகம் என்று சொல்லப்படுவதெல்லாம் செத்த பிறகு போகும் இடங்கள் அல்ல, இந்தக் கடைசி கணங்களில் ஒவ்வொருவனும் எல்லாவற்றையும் சீர் தூக்கிப் பார்க்கும் மன நிலையே என்று அவருக்குத் தோன்றுகிறது.

"சார் எப்படியிருக்கார்" என்று அவரது டிரைவரின் குரல் கேட்க கண்களைத் திறந்தார். அவரது டிரைவரின் மகனும் கூட நின்றிருந்தான். நான்கு வருடங்களுக்கு முன்பு ப்ளஸ் டூவில் மாவட்ட முதலிடம் வந்த மாணவன் அவன். அப்போது என்ன படிக்க வைக்கப் போகிறாய் என்று டிரைவரைக் கேட்ட போது "அவன் இன்ஜீனியர் படிக்க ஆசைப் படறான். அதெல்லாம் நமக்கு முடியுமா எசமான். ஏதோ டிகிரி படிக்கட்டும்னு இருக்கேன்" என்று டிரைவர் சொன்னார். அத்தனை நல்ல மார்க் வாங்கிய பையன் ஒரு சாதாரண பட்டப் படிப்பு படிக்கப் போவது பொறுக்காமல் "இன்ஜீனியருக்கே படிக்க வையுப்பா. படிக்கறதுக்கு ஆகற செலவை நான் பார்த்துக்கறேன். அக்கௌண்டண்ட் கிட்டே சொல்லி வைக்கறேன். தேவையானதை சொல்லி வாங்கிக்கோ" என்று சொன்னார். எத்தனையோ செலவாகிறது இது பெரிய விஷயமல்ல என்று அவர் அன்று நினைத்தார்.....

அவர் மனைவி சொன்னாள். "டாக்டர் கையை விரிச்சுட்டார். வீட்டுக்கு எடுத்துகிட்டு போக சொல்லிட்டார்.." அதைக் கேட்ட டிரைவரும், டிரைவரின் மகனும் லேசாகக் கண்கலங்கினார்கள்.

"என் மகனுக்குக் காலேஜ் கேம்பஸ் இண்டர்வ்யூல டாட்டா கம்பெனியில வேலை கிடைச்சுடுச்சும்மா. மாசம் ஆரம்பத்திலயே 25000 சம்பளம். எல்லாம் சார் போட்ட பிச்சை. அதான் சாரு கிட்ட சொல்லி ஆசிர்வாதம் வாங்கிட்டு போக கூட்டிகிட்டு வந்தேன்"

அந்த இளைஞன் அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவன் முகத்தில் நன்றியுணர்வு நிறைந்திருந்தது. டிரைவரும் கண்கலங்க அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டார்.

அருணாச்சலம் அவர்கள் இருவரையும் ஒரு கணம் நிறைந்த மனதுடன் பார்த்தார். அந்த இளைஞனின் வெற்றியும், அவன் நன்றியுணர்வும் அந்தக் கடைசி தருணத்தில் மனதுக்கு இதமாக இருந்தது. அவரும் ஓரிரண்டு மனிதர்களை சம்பாதித்திருக்கிறார். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்த வாழ்க்கையில் செய்த சாதனைகள், சேர்த்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விட அந்த மாணவன் படிக்க அவர் செய்த சிறிய உதவி மட்டுமே அர்த்தமுள்ள செயலாக அவருக்கு அப்போது தோன்றியது. வாழும் போது பெரிதாகப் பட்ட எல்லா விஷயங்களும் மரணத்தின் விளிம்பில் நின்று பார்க்கையில் அற்பமாகத் தெரிந்தது

அந்த இளைஞனைப் பார்த்து அவர் புன்னகைத்தார். அந்தக் கணத்தில் மரணம் அவரை நெருங்க ஆரம்பித்தது. வாழ்க்கையைத் திரும்பவும் வாழ முடிந்திருந்தால் இது போல் மேலும் பல நல்ல காரியங்கள் செய்திருக்கலாம் என்பது தான் அவரது கடைசி நினைவாக இருந்தது.



March 23, 2019, 09:04:55 pm
Reply #11

AnJaLi

பாவமன்னிப்பு
« Reply #11 on: March 23, 2019, 09:04:55 pm »
ஒரு மதகுரு ஆலயத்தில் சொற்பொழிவாற்றினார். "மனிதர்களே நீங்கள் பாவிகளாக இருக்கிறீர்கள். உங்கள் பாவங்களுக்காக இறைவன் நிச்சயம் உங்களை தண்டிப்பான். இறைவனுடைய தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமானால் என்னிடம் ஒரு பாவமன்னிப்பு சீட்டு இருக்கிறது.ஒரு சீட்டு 50 ரூபா தான். அதை வாங்குங்கள்." என்று சொன்னார்.

50 ரூபாவில் பாவமன்னிப்பா? எத்தனை மலிவு?

கூட்டம் முண்டியடித்துக்கொண்டு பாவமன்னிப்பு சீட்டை வாங்கியது.

ஒருவன் மட்டும் இரண்டு சீட்டுக்கள் கேட்டான்.

மதகுரு " ஒரு சீட்டு போதுமே. யார் இந்த மடையன்? எதற்கு இரண்டு சீட்டுக்கள் கேட்கிறான்? நமக்கென்ன, பணம் கொடுக்கிறான்.வாங்கிக்கொள்வோம்" என்று நினைத்த படி அவனுக்கு இரண்டு சீட்டுக்கள் கொடுத்தார். 

நல்ல வியாபாரம். மதகுரு மகிழ்ச்சியுடன் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட்டார், அடுத்த ஊரில் கடை விரிக்க.

வழியில் காடு. திடீரென ஒருவன் கையில் கத்தியுடன் அவர் முன் தோன்றினான்,

"பணமூட்டையை கொடுத்துவிடு, இல்லாவிட்டால் கத்தியால் குத்திவிடுவேன்" என்று பயமுறுத்தினான்.

மதகுரு அதிர்ந்து போனார். "பாவி மதகுருவையே கொள்ளையடிக்கிறாயே இந்த பாவம் உன்னை சும்மாவிடாது"
என்று அலறினார்.

"அதைப்பற்றி நீ கவலைப்படாதே. இந்த பாவம் என்னை ஒன்றும் பண்ணாது" என்றான் அவன்.

அதெப்படி சாத்தியம்? என்று கேட்டார் மதகுரு.

"நான் இதற்காக பாவமன்னிப்பு சீட்டு வாங்கியிருக்கிறேன். அதுவும் உன்னிடமே வாங்கியிருக்கிறேன். ஒருவன் உன்னிடம் இரண்டு சீட்டுகள் வாங்கினானே,னினைவிருக்கிறதா? அது நான் தான். ஒரு சீட்டு செய்த பாவங்களுக்கு. இன்னொன்று செய்யப்போகும் பாவங்களுக்கு." என்றான் அவன்.

மதகுருவால் எதும் பேச முடியவில்லை. உள்ளுக்குள் தன்னையும், அவனையும் சபித்துக்கொண்டு பணமூட்டையை அவனிடம் கொடுத்தார்.


இது ஒரு கற்பனை கதை தான். ஆனால் எதார்த்தமானது.
ஒரு காலத்தில் மதங்கள் பாவம் செய்யாதீர்கள் பாவம் செய்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவீர்கள் என்று எச்சரித்தன. மனிதனும் பாவம் செய்ய பயப்பட்டான். காலம் செல்லச் செல்ல மதங்கள் தங்கள் மதங்களை பரப்புவதற்காக பலப்பல பாவமன்னிப்பு கொள்கைகளை பரப்ப ஆரம்பித்தன.

இதை நம்பு உன் பாவங்கள் பரிசுத்தம் ஆகும். இப்படி செய்தால் பாவங்கள் போய்விடும் என்று சொல்ல ஆரம்பித்தன.

மனிதர்களும் பார்த்தார்கள், காசா பணமா? வெறும் நம்பிக்கை தானே. பாவங்கள் போக எத்தனை இலகுவான வழி என அந்த மதங்களில் சேர ஆரம்பித்தார்கள்.

மதங்களும் பிரபலமடைந்தன. பாவங்களும் பெருக ஆரம்பித்தன.
வெறும் நம்மிக்கை எப்படி பாவங்களை போக்கும்?

சில மதங்கள் இந்த குளத்தில் மூழ்கு பாவம் போகும், இந்த கங்கையில் நீராடு பாவங்கள் சுத்தமாகும் என்று சொல்கிறது.
இது எப்படி சாத்தியமாகும்?

நாம் பாவம் செய்துவிட்டு கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்பதால் பாவங்கள் எப்படி இல்லாமல் போகும்? நாம் யாருக்கு பாவம் செய்தோமோ அவருக்கு பரிகாரம் செய்து அவரிடம் பாவமன்னிப்பு கேட்டால் தானே அந்த பாவதுக்கு பரிகாரம் கிடைக்கும்.

நான் எந்த மதத்தையும் இழிவுபடுத்த இதை கூறவில்லை. இறைவன் நிச்சயம் இருக்கிறான்.அவனை சம்மந்தப்படுத்தி உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளை பின்னற்ற வேண்டாம் என்பதற்கே இதை எழுதுகிறேன்.


March 23, 2019, 09:06:40 pm
Reply #12

AnJaLi

ஒரு கிராமத்தில் ஏழை குடியானவன் வீட்டு முன்பு மூன்று முதியவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் வெளியில் வந்து “உங்களைப்பார்த்தால் பசித்திருப்பவர்களைப்போல தெரிகிறது. வீட்டுக்குள் வந்து உணவருந்துங்கள் " என்று அழைத்தாள்.

அதற்கு அந்த பெரியவர்கள் “ வீட்டில் ஆண்கள் யாரேனும் இருக்கின்றனரா?" என்று கேட்டனர்.

இல்லை என்று பதில் கூறிய பெண், “எங்கள் வீட்டு ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருக்கின்றனர். அவர்கள் மாலையில்தான் வருவார்கள் எனவே அதுவரை உங்களால் காத்திருக்க முடியுமா?" என்று கேட்டாள்.

பரவாயில்லை நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறிய மூவரும் வீட்டுத்திண்ணையிலேயே அமர்ந்திருந்தனர்.

மாலையில் கணவன் வீடு திரும்பியதும் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களை பார்த்து நீங்கள் யாரென்று கேட்டான். அதற்கு அவர்கள், எங்களுடைய பெயர் அன்பு, வெற்றி, செல்வம் என்று கூறினர்.

“எங்களில் முதலில் யாரை நீ அழைக்கப்போகிறாய் ?" என்றும் அந்த குடியானவனிடம் கேட்டனர். உடனே குடியானவன் வீட்டிற்குள் சென்று மனைவியிடம் கலந்து ஆலோசனை செய்தான்.

நம்முடைய வீட்டில் செல்வத்திற்கு முதலில் விருந்து வைப்போம். செல்வம் வந்து நம் வீட்டை நிரப்பட்டும் என்று மனைவியிடம் தெரிவித்தான்.

அதைக் கேட்ட மனைவி, வெற்றி மிகவும் முக்கியமானது. எனவே வெற்றியை முதலில் கூப்பிடுங்கள் என்று கூறினாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட மகளோ, “ நீங்கள் இருவரும் அன்பை முதலில் விருந்துக்கு அழையுங்கள் " என்றாள். மகளின் விருப்பத்திற்கு ஏற்ப குடியானவனும் அவனுடைய மனைவியும், அன்பை விருந்துக்கு அழைத்தனர். உடனே அன்பைத் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் வெற்றியும், செல்வமும் பின் தொடர்ந்து வந்தனர்.

இதில் ஆச்சரியமடைந்த குடியானவன், “நான் அன்பை மட்டும் தானே அழைத்தேன் நீங்கள் மூவரும் வருகிறீர்களே?" என்று கேட்டான்.

அதற்கு அவர்கள், “ நீங்கள் செல்வத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால் மற்ற இருவரும் வெளியில் தங்கியிருப்போம். ஆனால் நீங்கள் அன்பைத்தானே அழைத்தீர்கள்.

அன்பு எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கே வெற்றியும், செல்வமும், என்று பின் தொடரும்" என்று பதிலளித்தனர்.

அன்பு நிறைந்திருக்கும் இடத்தில் அனைத்தும் நிறைந்திருக்கும்.

March 24, 2019, 09:33:22 am
Reply #13

AnJaLi

சொல்லாமலே
« Reply #13 on: March 24, 2019, 09:33:22 am »
அன்னம் ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி ஆப்பரேட்டராகப் பணியாற்றி வந்தாள். அவளுடைய அப்பா பாண்டியன் ஒரு வழக்குரைஞரிடம் கணக்கராக வேலை செய்து வந்தார். அவளுடைய அண்ணன் மாணிக்கம் அரசுப் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அவளுடைய அம்மா இலட்சுமி வீட்டு வேலைகளைக் கவனித்து வந்தாள்.
 
அன்னம் தன்னுடைய வேலையைச் செம்மையாகச் செய்வதில் திறமைமிக்கவளாய்த் திகழ்ந்தாள். அந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இன்று புதிய நிர்வாக அதிகாரி திடீரென்று வருவதாகச் சொல்லியிருந்தார்கள். அன்று தன் இருக்கையில் அமர்ந்து தன்னுடைய வேலையைத் தொடங்கினாள்.
 
அப்பொழுது பியூன் மணி அவளிடம் வந்து, எம்.டி. உங்களைக் கூப்பிடுகிறார் என்றான்.
 
எதற்கு என்றதும், எனக்கென்ன தெரியும்! என்றான்.
 
மேனேஜர் இராமுவைத்தானே கூப்பிடுவார்!என்று அன்னம் தயங்கிக் கூறியதும், அவர் இன்று லீவு என்றான்.
 
அப்படியா!.... இதோ வர்றேன் என்று சொன்ன அன்னம் எம்.டி. அறைக்குச் சென்றாள்.
 
வணக்கம் சார்.
 
அவளை ஒரு ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, வணக்கம் என்றார்.
 
உட்காருங்க... இந்த பைலில் உள்ள கடிதங்கள் அனைத்திலும் ஒவ்வொரு பிரதி எடுத்து வாருங்கள்.
 
சரி சார்... இப்பவே கொண்டு வருகிறேன் என்றாள்.
 
செல்லதுரை அவளின் அழகை ரசித்தான். அடுத்த சிறிது நேரத்தில் அவளிடம் கொடுத்த வேலையை முடித்துக் கொண்டு வந்தாள்.
 
வெரிகுட்.... சீக்கிரம் வேலையை முடித்துவிட்டீர்களே அன்னம் என்றதும் அன்னம் ஒரு புன்னகையை உதிர்த்தாள்.
 
தன்னுடைய இருக்கைக்கு வந்த அன்னம் புது எம்.டி. பரவாயில்லையே, பாராட்டெல்லாம் சொல்லுகிறாரே... என்று நினைத்தாள். மறுநாள் அலுவலகத்திற்கு வந்ததும், செல்லதுரை அன்னத்தை அழைத்து இந்த வேலையை முடித்துவிட்டு வாருங்கள் என்றார். அவளும் கொடுத்த வேலைகளை உடனுக்குடன் முடித்துக் கொடுத்ததனால் அன்னத்தின் மீது செல்லதுரைக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது.
 
ஒரு நாள் கடைவீதியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் அன்னம். அந்தப் பக்கம் மகிழுந்தில் வந்த   செல்லதுரை அன்னத்தின் அருகில் மகிழுந்தை நிறுத்தி, எங்கே இந்தப் பக்கம் என்றார்.
 
வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்க வந்தேன் என்றாள்.
 
நல்லது. வீடு எங்கிருக்கிறது? காரில் ஏறுங்கள்.... நான் கொண்டு வந்து விடுகிறேன் என்றார் செல்லதுரை.
 
தேங்க்ஸ்! சில சாமான்கள் இன்னும் வாங்க வேண்டும் என்ற பதிலைக் கேட்ட செல்லதுரைக்கு, அவள் காரில் வராதது ஏமாற்றமாக இருந்தாலும், காரில் வரமாட்டேன் என்று சொல்லாமல் நாசூக்காகத் தவிர்த்தது மிகவும் பிடித்திருந்தது. மேலும், யாரிடமும் அதிகமாகப் பேசாத தன்மை, வேலையில் காட்டும் வேகம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட செல்லதுரை அன்றுமுதல் அன்னத்தைக் காதலிக்க ஆரம்பித்தார். தன்னுடைய காதலை அவளிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தார். இப்படியே ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. பின் ஒரு சமயத்தில் அவளிடம் தன்னுடைய காதலைக் கூறினார்.
 
அன்னம் சிரித்துக் கொண்டே, தனக்குத் திருமணம் ஆகிவிட்டது எனச் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு உடனே நகர்ந்தாள்.
 
செல்லதுரைக்கு வியப்பாக இருந்தது. திருமணம் ஆனதற்கான அடையாளங்களான கழுத்தில் தாலியோ, காலில் மெட்டியோ காணப்படவில்லை.
 
உடனே அவளிடம் கேட்க நினைத்தபோது அவள் அலுவலகத்தைவிட்டுப் போய்விட்டதாக பியூன் கூறினான். அன்று இரவு முழுவதும் செல்லதுரைக்குத் தூக்கமே வரவில்லை. அன்னத்தின் கணவன் எங்கே? அவள் வாழ்க்கை என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ள மறுநாள் மாலை அன்னத்தின் வீட்டிற்குச் சென்றான்.
 
அன்னத்தின் அப்பா, அம்மா,  அண்ணன் ஆகிய அனைவரும் வீட்டில் இருந்தனர்.  அன்னத்தின் அம்மா, இந்தாங்க அய்யா... பலகாரம் சாப்பிடுங்க என்று கூறி தட்டில் பலகாரமும், குடிக்க டீயும் வைத்தாள். செல்லதுரை டீயை அருந்திவிட்டு, தயங்கியபடி, அன்னத்தின் திருமணம்.... என்று இழுத்தான். அவளின் அண்ணன் மாணிக்கம், எல்லாம் முடிந்துவிட்டது.... என்று சோகத்துடன் கூறினார். இலட்சுமி, அது ஒரு பெரிய கதை... என்று கூறித் தொடர்ந்தாள். அவளுக்குத் திருமணம் ஆகி ஒரு வருடத்திலே விவாகரத்து ஆகிவிட்டது.
 
அவ காதல் கலியாணம் செஞ்சுக்கிட்டா. இப்ப துன்பத்தை அனுபவிக்கிறா... என்றார் மாணிக்கம் வெறுப்புடன்.
 
அதிலென்ன தவறு....
 
அவன் பணத்தாசை பிடித்தவன். எங்கள் யாருக்கும் அவனைப் பிடிக்கவில்லை. அன்னம்தான் விரும்பித் திருமணம் செய்து கொண்டாள். கல்யாணத்திற்குப் பிறகுதான் தெரிந்தது அவனுடைய சுயரூபம். அவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. ஆனால், திருமணம் ஆகாமல் இருந்தால் மட்டுமே அந்த வேலை கிடைக்கும். மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் என்று கூறப்பட்டதால் அவனுக்குக் கட்டினவளைவிட பணம்தான் பெரிசுன்னுட்டான். வெளிநாடும் போயிட்டான். இவளையும் கைகழுவிட்டான். அவன் வேலைக்குப் போகும் கம்பெனியின் விலாசமும் தெரியாது. தெரிஞ்சிருந்தா ஏதாவது செஞ்சிருக்கலாம்.
 
எல்லாவற்றையும் கேட்ட செல்லதுரையின் மனதில் ஓர் இறுக்கம் ஏற்பட்டது. தான் காதலித்த அன்னத்திற்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று எண்ணினார்.
 
இவ்வளவு நடந்துவிட்டதா! சரி... நடந்தது நடந்துவிட்டது. நான் ஒன்று சொல்றேன். அதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்றார்.
 
சொல்லுங்கள் என்றார் மாணிக்கம்.
 
எனக்கு அன்னத்தை ரொம்பப் பிடிச்சிருக்கு. அவளுடைய கடந்தகால வாழ்க்கையினைப் பற்றிக் கவலையில்லை என்றார்.
 
அன்னத்தின் குடும்பத்தாருக்கு முதலில் தயக்கம் இருந்தாலும் செல்லதுரையின் நன்னடத்தையைப் பற்றி அன்னம் கூறியிருந்ததாலும் அன்னத்திற்கு ஒரு வாழ்க்கை கிடைக்கட்டும் என்று எண்ணிச் சம்மதித்தனர். என்னுடைய அப்பா அம்மாவிடம் சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றார் செல்லதுரை.
 
மறுமணம் வேண்டாம் என்று எண்ணியிருந்தாள் அன்னம். ஆனால் செல்லதுரையின் பழக்கவழக்கங்கள், மற்றவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை  அவளுக்குப் பிடித்துப்போனதால் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள். மறுநாள் அலுவலகத்திற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் புதுப்பொலிவுடன் வந்தாள். அலுவலகத்தில் இதைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. ஆனால், அன்று காலை செல்லதுரை அலவலகத்திற்கு வரவில்லை. அன்னம் அவர் ஏன் வரவில்லை என யோசித்தாள்.
 
திருமணத் தேதியுடன் வருவாரென்று அனைவரும் பேசிக் கொண்டனர். அன்று மதியம் செல்லதுரை வந்தார். ஒருவரையும் அழைத்து எந்தப் பணியும் கொடுக்கவில்லை. என்ன ஆயிற்று இவருக்கு என்று தனக்குத்தானே பேசிக் கொண்டான் பியூன் மணி. பிற்பகல்  மூன்று மணி சுமாருக்கு எம்.டி. அழைப்பதாகக் கூறினான் மணி. அன்னத்தின் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்றிருந்தது. ஒரு பூங்காவின் பெயரைச் சொல்லி மாலை அலுவலகம் முடிந்தவுடன் அங்கு வருமாறு கூறிவிட்டு உடனே புறப்பட்டுவிட்டான்.
 
மாலை அய்ந்து மணி எப்போது வரும் என்று காத்திருந்த அன்னம், திருமணத்திற்கு என்ன என்ன பொருட்கள் வாங்கலாம், எப்படித் திருமணத்தை நடத்தலாம் என்று கேட்பார் என நினைத்தாள். அதற்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டும் சென்றாள்.
 
அந்தப் பூங்காவில் புல்தரையில் இருவரும் அமர்ந்திருந்தனர். யார் முதலில் பேசுவது என்ற மனநிலையில் இருவரும் இருந்தனர். ஆனால் செல்லதுரையின் முகம் வாட்டத்துடன் இருப்பதை அறிந்த அன்னம், ஏன் உங்கள் வீட்டில் என்ன சொன்னார்கள்? என்று வினவினாள்.
 
செல்லதுரை ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவனாய், அவர்களிடம் என் விருப்பத்தைக் கூறினேன்.... சரி என்று கூறிவிட்டார்கள்... ஆனால்!....
என்ன ஆனா?
 
அவர்களுக்கு ஒரே ஒரு ஆசை.
 
என்ன அது?
 
நீ எங்கள் மதத்திற்கு மாற வேண்டும் என்பது என்றதும், அன்னம் கோபத்துடன் செல்லதுரையைப் பார்த்தாள்.
 
அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?
 
நான் உன்னிடம் பேசிப் பார்க்கிறேன் என்றேன்.
 
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 
அவர்கள் சொன்னபடி நீ எங்கள் மதத்திற்கு மாறிவிடு.
 
பணத்தாசை பிடித்தவரைக்கூட மன்னித்துவிடலாம். மதவெறி பிடித்தவரை நினைத்துப் பார்க்கவும் கூசிப் போனாள் அன்னம். உடனே அன்னம் தன் கைப்பையில் வைத்திருந்த டைரியிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து ஏதோ எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு எதுவும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தாள். அந்தக் காகிதத்தில் எழுதியிருப்பதைப் படித்தார் செல்லதுரை. அதில்,
 
பெண்கள் கூண்டுக்கிளிகள் அல்லர் -     தந்தை பெரியார்.
 
இதுவே என் கருத்து என்று எழுதப்பட்டிருந்தது.

March 24, 2019, 09:37:09 am
Reply #14

AnJaLi

ராஜுவின் கதை
« Reply #14 on: March 24, 2019, 09:37:09 am »
சிறு வயது முதலே வாத்தியார் இல்லாமலேயே தனது சொந்த முயற்ச்சியில் பலவித கைவினை பொருட்களை செய்யும் ஆர்வம் மிகுந்து இருந்தது ராஜுவிற்கு, பத்து வயது சிறுவனால் இத்தனை அழகான கைவினை பொருட்களை உருவாக்க இயலுமா என்று வியக்கும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக கைதேர்ந்த கைவினை பொருள் உருவாக்கும் கலைஞரின் கைவண்ணம் போலிருக்கும் ராசுவினால் உருவாக்கப்பட்ட பொருட்கள். இயற்கையாகவே தாய் வழி சொத்தாக கிடைத்த பாடும் குரலும் திறமையும், இருபது வயது மதிக்கத்தக்க வாலிபப்பருவம் அடையும்போது கவிதை கதைகள் எழுதுவதிலும் அந்த திறமை வளர்ந்தது , வசதியான பெற்றோர்களை கொண்ட குடும்பச் சூழல் அடுத்த வேளைச் சோற்றிற்கு சம்பாதிக்க வேண்டுமென்கின்ற கட்டாயத்தை மறக்கச் செய்தது, கலையார்வம் துரத்தியது,

அடுத்தடுத்த தெருக்களில் வசித்து வந்த பிரபலங்கள் ராஜுவின் கலையார்வத்திற்க்கு மிகவும் உருதுணையானார்கள், அதில் ஒரு திரைப்பட பிரபலத்திடம் தினமும் சென்று தனது கலையார்வத்திற்க்கு தீனி போடும் வாய்ப்பும் கிடைத்தது, அங்கு வந்த பல பிரபலங்களின் அறிமுகமும் கிடைத்தது, ராஜுவிற்கு பணத்தின் அருமை தெரியாமல் வளர்ந்ததன் விளைவு, பிரபலங்களின் அறிமுகத்தை கொண்டு தன் கலை வாழ்க்கை உயர்வதற்கு பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல் போனது, அன்றைய கால கட்டத்தில் அரசு வேலை வாய்ப்பாக இருந்தாலும் தனியார் வேலை வாய்ப்பாக இருந்தாலும் தற்காலத்தில் இருப்பது போன்று கடினமாக இருக்கவில்லை என்பதும் மற்றொரு காரணம், ராஜுவின் தாய் மருத்துவர், பிரபல மருத்துவர் ரங்காச்சாரியின் மாணவிகளில் ஒருவர், அவரது அப்பா தென்னக ரயில்வேயின் ஆங்கிலேய மூத்த அதிகாரி, அவரது மூத்தமகள் ராஜுவின் தாய், முதல் பெண்மருத்துவர் முத்துலெட்சுமியாம்மாவிடம் நெருங்கிய தொடர்புடையவர் என்று அடுக்கடுக்காய் பல விதங்களில் செழுமை மிக்கதொரு குடும்ப அடிப்படையின் காரணம், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

ராஜுவின் சகோதரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசுபணியில் பணியாற்றத் தொடங்கிவிட்டனர், ராஜுவிற்கு நண்பர் கூட்டம் அதிகம், ஒவ்வொருவராக வேலைக்குச் செல்ல ஆரம்பித்த போது ராஜுவின் தாயாரும் ராசுவை வேலைக்கு போகச் சொன்னபோது அப்போதைய அரசு தொலைபேசியில் வேலையில் சேர்ந்து ஒழுங்காக வேலைச் செய்ய ஆரம்பித்தார் ராசு. திரைப்படங்களில் அப்போதைய பிரபல வசன கர்த்தாவும் பாடல் ஆசிரியரும் நடிகருமான ராஜப்பா என்பவர் ராஜுவின் கலை ஆசான், அடுத்த தெருவில் வசித்த பிரபலங்களில் ஒருவர், அவரிடம் திரையுலக சம்பந்தமான பலரும் வந்து செல்வது வழக்கம், அதில் ஒருவர் இயக்குநர் கிருஷ்ணன் (பஞ்சு). ராஜப்பாவின் நண்பர், ராசப்பாவின் வீட்டில் முதன் முதலில் ராஜுவிற்கு பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படத் துவங்கியது, அதற்க்கு முன்பே திரு கிருஷ்ணன் அவர்களை சிறுவயது முதலே பார்த்து பழக்கம் இருப்பினும் அதுவரையில் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படாமலிருந்தது, திரு கிருஷ்ணன் அவர்களும் சிறுவயது முதலே அடுத்த தெருவில் வசித்து வந்தவர்.

அந்த கால கட்டத்தில் புரசைவாக்கம் பல பிரமுகர்கள் வாழுகின்ற இடமாக இருந்தது, அங்கேதான் திரு ராஜுவும் ராஜுவின் சகோதரர்களும் பிறந்து படித்து வளர்ந்தது, ராஜப்பாவின் சொந்த ஊர் தஞ்சை, ஐயங்கார் வகுப்பை சார்ந்தவர், திரையுலகில் பணிபுரிவதற்காக சேலம் கோவை போன்ற நகரங்களில் இருந்த பட்சிராஜா பிலிம்ஸ் பணி புரியத் துவங்கிய போது அறிமுகமானவர்களில் திரு கிருஷ்ணனும் ராஜப்பாவும் இன்னும் பல அன்றைய திரையுலக ஜாம்பவான்களும் உண்டு பிறகு சென்னைக்கு திரைப்பட நிறுவனங்கள் ஸ்தாபிக்கபட்ட போது ராஜப்பா புரசைவாக்கத்தில் வந்து குடியேறியதாக கூறப்பட்டது.

திரு சிவாஜிகணேசன் நடித்த பராசக்திக்கு முன்னர் பல திரைப்படங்களை திரு ஏ.வி.எம். தயாரித்தபோது அங்கே எடிட்டராக பணிபுரிந்து கொண்டிருந்த திரு பஞ்சு அவர்களின் நட்பு திரு. கிருஷ்ணன் அவர்களுக்கு சிகரெட் மூலம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது, இருவரும் ஒரே brand என்பதால் கிருஷ்ணன் அவர்களுக்கு சிகரெட் தீர்ந்து போனபோது அருகில் சிகரெட் வாங்குவதற்கு வேலையை விட்டு விட்டு பாதியில் வெளியே சென்று வாங்க இயலாமல் போனதால் அதே brand சிகரெட் திரு பஞ்சு அவர்களும் பிடிக்கும் வழக்கம் இருந்ததாகவும் சிகரெட் கொடுத்ததிலிருந்து நட்பும் தொடர்ந்தது அந்நட்பு தொழிலிலும் தொடர்ந்து பின்னர் இருவரும் உறவினர்களாகியும் விட்டனர். திரு கிருஷ்ணனிடம் நண்பராகவும் தொழிலில் உதவியாகவும் திரு ராசு இணைத்துக் கொள்ளபட்டார். இதனால் அரசு வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஆத்திலே ஒரு கால் சேத்திலே ஒரு கால் என்பது போல காலம் கடந்தது, ராஜுவின் பெற்றோரின் வசதி காரணமாக துவக்க காலங்களில் வாயிற்று பிழைப்பை பற்றிய அக்கறை இருக்கவில்லை ராஜுவின் தாய் அவரது ஐம்பத்து இரண்டாவது வயதிலேயே மரணமடையும் சூழல் உருவானது அதற்க்குக் காரணம் ராஜுவின் மூத்த சகோதரர் இளம் வயதிலேயே திடீரென்று டைபாய்டு (அப்போதெல்லாம் டைபாய்டு நோய்க்கு சரியான மருந்துகள் கிடையாது) ஜுரத்தால் பாதிக்கப்பட்டு இருபது நாட்களிலேயே காலமானதால் அந்த துயரை தாங்கிக்கொள்ள இயலாமல் ராஜுவின் அம்மா குறைந்த வயதிலேயே இறந்து போக நேரிட்டதால் குடும்பத்தில் இருந்த மற்ற அனைவரின் வாழ்க்கையும் கேள்விக் குறியானது. சொத்துக்களை ஏமாற்றி பலர் எடுத்துகொண்டனர், ராஜுவின் அப்பா 'அவளே போய்ட்டா இனிமேல் எனக்கு சொத்து எதுக்குன்னு' சொல்லி உயிருடன் இருந்த மற்ற பிள்ளைகளைப் பற்றி யோசிக்காமலேயே குடும்பம் நசிந்துபோனது