GTC FORUM

Knowledge Based Category => Stories - கதைகள் => Topic started by: AnJaLi on March 21, 2019, 08:37:34 pm

Title: AnJaLi கதைகள்
Post by: AnJaLi on March 21, 2019, 08:37:34 pm
A man stopped at a flower shop to order some flowers to be wired to his mother who lived two hundred miles away. As he got out of his car he noticed a young girl sitting on the curb sobbing. He asked her what was wrong and she replied, “I wanted to buy a red rose for my mother. But I only have seventy-five cents, and a rose costs two dollars.”

The man smiled and said, “Come on in with me. I’ll buy you a rose.” He bought the little girl her rose and ordered his own mother’s flowers. As they were leaving he offered the girl a ride home. She said, “Yes, please! You can take me to my mother.” She directed him to a cemetery, where she placed the rose on a freshly dug grave.

The man returned to the flower shop, canceled the wire order, picked up a bouquet and drove the two hundred miles to his mother’s house.


" Moral : Life is Short. Spend much time as you can loving and caring people who love you. Enjoy each moment with them before it’s too late. There is nothing important than family.


Title: Re: Rose for Mother
Post by: MDU on March 22, 2019, 04:41:35 am
(https://i.pinimg.com/originals/4b/6e/4c/4b6e4c3dfd982f599075793318bd59f3.gif)
Title: சிவகாமியின் சபதம்
Post by: AnJaLi on March 22, 2019, 07:37:03 pm
காஞ்சி  மாநகரம் 

    இன்றைக்கும் பழமை  மாறாம இருக்கற  காஞ்சி மாநகரம்  தாம் பல்லவ  சாம்ராஜ்யத்தின்  தலைமை  இடம்.  சேரரும், சோழரும், பாண்டிய  மன்னர்களும்  ஆண்டு  சிறப்பித்த  தென்னாட்டை  அலங்கரித்த  மற்றும் ஒரு சகாப்தமே  பல்லவ சாம்ராஜ்யம்.
பல்லவ அரசு  தழைத்தோங்கிய  காலத்தில்  சேர  சோழ  மன்னர்களின்  புகழ்  கொஞ்சம்  மங்கி போயிருந்தது... பல்லவ மன்னர்கள்  நீண்ட  வரலாறு படைக்கவில்லை  ஆனாலும் சில அற்புதங்களை  படைத்தனர் . அந்நாளிலே  கல்வியிற்  சிறந்த  நகரமாய்    காஞ்சி முன்னிறுத்தப்பட்டது. கல்வி  மட்டுமல்ல  கலை, இலக்கியம் , நடனம் , நாட்டியம் , சிற்பம் என அனைத்திலும் ...
" காஞ்சி பெண்ணின்  மீது  மோகம"்  கொண்ட மன்னர்களும்  பேரரசர்களும்  ஏராளம்  ....  இங்கு காஞ்சி   பெண் என குறிப்பிட  படுவது  காஞ்சி மாநகரமே....
சங்கம்  வைத்து  தமிழ்  வளர்த்த  மதுரை  மாநகரத்தில்   இருந்து தேடி வந்து  தமிழ் கற்றனராம்  காஞ்சியில் ...
￰இவ்வளவு பெருமைகளை  உள்ளடக்கிய  காஞ்சி இன்னும்  மெருகேற செய்தவர்  காஞ்சி பேரரசர்  "  மகேந்திர  பல்லவர்  "
அடுத்த  பகுதியில்  அவரை  பற்றி  .....

Title: சிறை வாசம்
Post by: AnJaLi on March 22, 2019, 07:38:16 pm
அந்த முகம் தீனதயாளனுக்கு மிகவும் பரிச்சயம் உள்ள முகமாகத் தோன்றியது. ஆனால் சட்டென்று நினைவுக்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. அந்த நபர் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த போது பலர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். அவர் சுமார் ஐந்து நிமிடம் தான் மண்டபத்தில் இருந்திருப்பார். அந்த ஐந்து நிமிடமும் தீனதயாளனின் அண்ணாவின் சம்பந்தி, மணப்பெண்ணின் தந்தை, கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாக அவர் அருகிலேயே நின்றிருந்தார். அந்த நபர் மணமக்களை வாழ்த்தி விட்டு காரேறுகையில் தற்செயலாக தீனதயாளனைப் பார்த்தார். உடனே அந்த நபரின் முகத்தில் தீனதயாளன் யாரென்று அறிந்து கொண்டதன் அறிகுறி ஒரு கணம் தோன்றியது. ஆனால் மறு கணமே அதை மறைத்துக் கொண்டு காரினுள் மறைந்தார். கார் சென்ற பின்பு தான் சம்பந்தியின் கைகள் பிரிந்தன.

   "கூப்பிட்டிருந்தேன். ஆனா இவ்வளவு பெரிய மனுசன் நம்மளையும் மதிச்சு வருவார்னு உறுதியாய் நினைக்கலை. அவர் வந்து ஆசிர்வாதம் செய்ய என் பொண்ணு குடுத்து வச்சிருக்காள்னு தான் சொல்லணும்" என்று பலரிடமும் அவர் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது தீனதயாளன் காதில் விழுந்தது.

   "இப்ப வந்துட்டு போன ஆளை எனக்கு நல்லாவே தெரியும், சாவித்திரி. ஆனா சட்டுன்னு யாருன்னு சொல்ல வரலை" என்று தீனதயாளன் தன் மனைவியிடம் சொன்னார்.

   ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான தன் கணவனை, சாவித்திரி சந்தேகக் கண்ணோடு பார்த்தாள். அவளது அனுபவத்தில் அவர் நினைவில் தங்கும் நபர்கள் பெரும்பாலும் குற்றவாளிகள் மட்டுமே. பல ஆண்டுகள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபரைப் பார்த்து அவளிடம் "யாரிது" என்று கேட்பார். ஆனால் அவர் விசாரணை செய்த சிறு குற்றவாளிகளைக் கூட பல ஆண்டுகள் கழித்தும் அவர் மறந்ததாய் சரித்திரம் இல்லை. சம்பந்தி வீட்டவர்கள் இவ்வளவு மரியாதையைக் காட்டிய ஒருவரைப் பற்றி என்ன இவர் சொல்லப் போகிறாரோ என்று பயந்தாள்.

   "கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருங்கோ" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னாள்.

   அவருக்கு மனைவி ஏன் பல்லைக் கடித்துக் கொண்டு எச்சரிக்கிறாள் என்று புரியவில்லை. அவளைப் பொருட்படுத்தாமல் தானே நேரடியாக அண்ணாவின் புது சம்பந்தியிடம் சென்று, வந்து விட்டுப் போன நபர் யாரென்று விசாரித்தார்.

   "அவர் ஒரு மகாத்மா, சம்பந்தி. கோடிக் கணக்கில் சொத்திருந்தாலும் கொஞ்சம் கூட அகம்பாவம் இல்லாத மனுஷன். இப்ப நீங்களே பார்த்தீங்கள்ள... மனுஷன் ரொம்பவும் சிம்பிள். அவரோட சங்கரா குரூப்ஸ் கம்பெனிகள், இண்டஸ்ட்ரீஸ் எல்லாமாய் சேர்த்து கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் வேலை பார்க்கிறாங்க. எல்லாருக்கும் நல்ல சம்பளம். ஆனா அவரோட வீட்டைப் பார்த்தா நீங்க நம்ப மாட்டீங்க.அவரோட பியூன்கள் கூட அதை விடப் பெரிய வீட்டில் இருக்கிறாங்க. அவ்வளவு சின்ன விட்டில் வேலைக்காரங்க கூட இல்லாம ஒரு சன்னியாசி மாதிரி வாழ்றார்."

   "அவர் பேர் என்ன சம்பந்தி"

   "மாணிக்கம்"

   சொல்லி விட்டு சம்பந்தி நகர்ந்தார். அந்தப் பெயரைக் கேட்டவுடன் எல்லாம் தெளிவாக நினைவுக்கு வர தீனதயாளன் அதிர்ந்து போய் நின்றார்.

   மாணிக்கம் ஒரு காலத்தில் கோயமுத்தூரில் போலீஸ் துறையையே திணறடித்த ஒரு தீவிரவாதி. தீனதயாளன் அப்போது அங்கு டி.எஸ்.பியாக சில காலம் இருந்தார். வெடிகுண்டு தயாரிப்பதில் மாணிக்கம் நிபுணன். ஒரு தீவிரவாதக் கும்பலின் மூளையாக அவனை போலீஸ் கணித்து வைத்திருந்தது. அவனைக் கைது செய்து சிறைக்கு அனுப்ப தீனதயாளனும், அவரது சகாக்களும் நிறையவே முயற்சிகள் எடுத்தார்கள். அவன் சிக்காமலேயே தப்பித்து வந்தான். ஒரு வெடிகுண்டு வெடித்த கேசில் சதாசிவம் என்ற ஒரு போலீஸ் அதிகாரி சாமர்த்தியமாக அவனை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்தார். தீனதயாளன் உட்பட உயர் அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் கோர்ட்டில் சதாசிவம் வேண்டுமென்றே கேசை பலவீனப்படுத்தி அவனைத் தப்ப வைத்தார். மாணிக்கம் விடுதலையாகி புன்னகையுடன் வெளியே வந்த காட்சி இன்னமும் தீனதயாளனுக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.

   சதாசிவத்தை அழைத்து தீனதயாளன் விசாரித்தார். அவரது எல்லாக் கேள்விகளுக்கும் சேர்த்து சதாசிவம் ஒரே பதில் தான் சொன்னார். "எனக்கு என் குடும்பம் முக்கியம் சார்"

   சதாசிவத்தின் வயதுக்கு வந்த மகளைக் கடத்திச் சென்று அவரை அந்தக் கும்பல் மிரட்டிய விஷயம் மெள்ள வெளியே வந்தது. அவன் விடுதலையான பின்பு அந்தப் பெண்ணைப் பத்திரமாக அனுப்பி விட்டார்களாம். கொதித்துப் போனார் தீனதயாளன். அப்பீல் செய்யலாம் என்றும் அவர் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தரும் என்றும் தீனதயாளன் சொல்லிப் பார்த்தார்.

   "எவ்வளவு நாள் பாதுகாப்பு தர முடியும் சார்?"

   கடைசியில் வேறு வழியில்லாமல் அந்தக் கேசைக் கை கழுவ வேண்டி வந்தது. அந்த சமயம் தீனதயாளனுக்கும் வட இந்தியாவிற்கு மாற்றலாகியது. அவர் அங்கு போன பின்பும் ஒரு முறை இங்கு ஒரு வெடிகுண்டு வெடித்து ஒரு ரயில் தடம் புரண்ட செய்தியைக் கேள்விப் பட்டார். அதில் மாணிக்கத்தின் பெயரும் அடிபட்டது. ஆனால் அந்த வழக்கிலும் ஓரிரு சின்னத் தீவிரவாதிகள் கைதாகி தண்டனை பெற்றார்களே தவிர மாணிக்கம் சட்டத்தின் பிடிக்கு வரவில்லை. அதற்குப் பின் மாணிக்கத்தைப் பற்றி ஒரு தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை. இருபத்தைந்து வருடங்கள் கழித்து இப்போது தான் ஒரு கோடீசுவரத் தொழிலதிபராகவும், மகாத்மாவாகவும் அவனைப் பற்றி கேள்விப்படுகிறார்.

   தீனதயாளனுக்கு இதை ஜீரணிக்கவே முடியவில்லை. சட்டத்தின் விசேஷ வலையில் சின்ன மீன்கள் மாட்டிக் கொள்வதும் பெரிய மீன்கள் அனாயாசமாக தப்பித்துக் கொள்வதும் அவரால் இன்னமும் சகிக்க முடியாததாகவே இருந்தது. மாணிக்கத்திடம் பேசிய ஒருசிலரிடம் பேச்சுக் கொடுத்தார். எல்லாரும் அவனைப் பற்றி நல்ல விதமாகவே சொன்னார்கள். அவன் சின்னதாய் அங்கு தொழில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியதாகவும் கோடிக்கணக்கில் தர்ம காரியங்களுக்கு அவன் செலவிடுவதாகவும் தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னதில் ஒரு விஷயம் நெருடியது. மாணிக்கம் வசிக்கும் அந்த சிறிய வீட்டிற்கு அவனது ஓரிரு பழைய சினேகிதர்கள் தவிர யாரும் போனதில்லை. உள்ளே அவன் யாரையும் அனுமதிப்பதும் இல்லை.

   மனைவியிடம் போய் சொன்னார்.

   "நான் அப்பவே நினைச்சேன். உங்களுக்கு ஞாபகம் இருக்குன்னா அது நல்ல ஆளாய் இருக்க முடியாதுன்னு. சரி இன்னும் போய் யார் கிட்டேயும் சொல்லாதீங்க. நமக்கு எதுக்கு வம்பு"

   அவரால் சும்மா இருக்க முடியவில்லை. ஒரு தீவிரவாதி தண்டனைக்குத் தப்பி விட்டு சுதந்திரமாகக் கோடிக் கணக்கில் சொத்து சேர்ப்பதும் மகாத்மாவாக சித்தரிக்கப் படுவதும் அவருக்கு பொறுக்க முடியாத விஷயமாகவே இருந்தது. பழைய கதை தெரிந்த ஒருவன் இருக்கிறான் என்று தெரிவிக்க ஆசைப்பட்டார். மனைவியிடம் சொன்னால் அவள் அனுமதிக்க மாட்டாள் என்று அவளிடம் சொல்லாமல் வெளியே போய் ஒரு போன் செய்தார்.

   மாணிக்கத்தின் செகரட்டரியிடம் பேசினார். "நான் மாணிக்கதோட பழைய சினேகிதன். இங்கே ஒரு கல்யாணத்துக்கு வந்தேன். அவரை சந்திக்க முடியுமா? நான் நாளைக்கு மத்தியானம் கல்யாண பார்ட்டியோட ஊர் திரும்பணும். அதுக்கு முன்னாடி அவரைப் பார்த்துட்டுப் போலாம்னு பார்க்கறேன்"

   "அப்பாயின்மென்ட் இல்லாம பார்க்க முடியாதுங்களே"

   "அவர் கிட்டே எனக்காக கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்"

   "உங்க பெயர்?"

   "தீனதயாளன். முன்பு கோயமுத்தூரில் டி.எஸ்.பி ஆக இருந்திருக்கிறேன்னு சொன்னா அவருக்குத் தெரியும்" சொல்லி விட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். மாணிக்கம் தன்னைச் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஆனாலும் மாணிக்கம் என்ன சொல்வான் என்று அறிய அவருக்கு ஆவலாக இருந்தது.

   "சரி லைனிலேயே இருங்கள்"

   டெலிபோன் சில நிமிடங்கள் மௌனம் சாதித்தது.

   "எம்.டி உங்களை ஏழு மணிக்கு அவர் வீட்டில் வந்து பார்க்கச் சொன்னார். வீட்டு அட்ரஸ் நோட் பண்ணிக்கிறீங்களா?...."

   தீனதயாளன் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி தன்னைச் சந்திப்பதைத் தவிர்ப்பான் என்று நினைத்திருக்கையில், யாரையும் அதிகம் அனுமதிக்காத தனது வீட்டுக்கே வந்து சந்திக்குமாறு மாணிக்கம் சொன்னது இரட்டிப்பு திகைப்பாக இருந்தது. எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தால் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்று யோசித்தார். அந்த வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதாக முன்பே அவர் நினைத்திருந்ததால் வீட்டில் அவனை சந்திப்பதில் அபாயம் இருக்கிறது என்று போலீஸ் புத்தி எச்சரித்தது. ஆனாலும் முன் வைத்த காலைப் பின் வைக்க அவர் மனம் ஒப்பவில்லை.

   மாலையில் எல்லாரும் சுமார் நாற்பது மைல் தூரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலுக்குப் போகப் புறப்பட்டனர். ஏதோ ஒரு காரணம் சொல்லி சாவித்திரியை மட்டும் அவர்களுடன் அனுப்பி வைத்து விட்டு மாணிக்கத்தின் வீட்டுக்குக் கிளம்பினார்.

   மாணிக்கத்தின் வீடு ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அருகில் வீடுகள் இல்லை. சுற்றும் முற்றும் இருந்த இடத்தையெல்லாம் மாணிக்கம் வாங்கி இருப்பதாக கல்யாண மண்டபத்தில் சொல்லியிருந்தார்கள். காலிங் பெல்லை அழுத்தினார். மாணிக்கமே கதவைத் திறந்தான்.

   கிட்டத் தட்ட ஐம்பது வயதைக் கடந்திருந்தாலும் மாணிக்கம் திடகாத்திரமாக இருந்தான். ஒரு கதர் சட்டையும் கதர் வேட்டியும் அணிந்திருந்தான். அடுத்தது அரசியல் பிரவேசம் போலிருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

   "வாங்க டி.எஸ்.பி சார். உட்காருங்க"

   முதல் அறையில் இரண்டு பிரம்பு நாற்காலிகள் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை. ஒரு நாற்காலியில் தீனதயாளன் அமர மற்றதில் மாணிக்கம் அமர்ந்தான். அவன் முகத்தில் தெரிந்த அமைதி அவரை ஆச்சரியப் படுத்தியது. எப்படி தான் முடிகிறதோ?

   "உன்னை இந்த ஒரு நிலையில் நான் எதிர்பார்க்கலை மாணிக்கம்" என்று பொதுவாகச் சொன்னார்.

   "இருபத்தி நாலு வருஷத்துக்கு முன்னால் நான் இப்படியாவேன்னு யாராவது சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன் சார்"
   
   "என்ன செஞ்சே மாணிக்கம், கள்ள நோட்டு அடிச்சியா?" அவர் ஏளனமாகக் கேட்டார்.

   சற்றும் கோபப்படாமல் மாணிக்கம் சொன்னான். "ஒரு ரயிலைக் கவிழ்த்தேன். ஒரு ஆளைப் பார்த்தேன். எல்லாமே என் வாழ்க்கையில் மாறிடுச்சு சார் ...."

   வெடிகுண்டு வைத்து ரயிலைக் கவிழ்க்கும் அந்தத் திட்டத்தில் சிறிய தவறு கூட இல்லாமல் மாணிக்கம் அன்று பார்த்துக் கொண்டான். அவனது திட்டங்களிலேயே இது தான் மிகப் பெரியது. தூரத்தில் ரயில் கவிழ்வதைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது தான் அந்த ஆளைப் பார்த்தான். பரட்டை முடி, கந்தல் உடை, தோளில் ஒரு சாயம் போன ஜோல்னாப் பை, இதற்கெல்லாம் எதிர்மாறாக தீட்சணியமான கண்களுடன் அவன் பின்னால் அந்த வயதான ஆள் நின்றிருந்தார். அவரது கண்கள் அவனது உள் மனதை ஊடுருவிப் பார்த்தன. ஓட யத்தனித்த மாணிக்கத்தை அவரது அமானுஷ்யக் குரல் தடுத்து நிறுத்தியது.

   "நீ முழுசும் பார்க்கலை. முழுசையும் பார்த்துட்டே போ.எதையும் நீயா நேரில் சரியா பார்த்தால் தான் புரியும்" என்று சொன்னவர் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவனையும் அறியாமல் மந்திரத்தால் கட்டுண்டது போல மாணிக்கம் அவரைப் பின் தொடர்ந்தான். எங்கும் பிணங்கள், துண்டிக்கப் பட்ட உறுப்புகள், அழுகுரல்கள், வலி தாளாத ஓலங்கள் இவற்றினூடே இருவரும் நடந்தார்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையிலும் ஒவ்வொரு மனிதனின் சோகத்தை மாணிக்கம் பார்த்தான். ஆட்கள் பல திசைகளிலிருந்தும் விரைந்து வந்து படி இருந்தார்கள்.

   "இது உன் வெற்றியோட ஆரம்பம் தான். இதில் எத்தனையோ பேர் அனாதையாகலாம், பிச்சைக்காரங்களாகலாம், பைத்தியம் புடிச்சு அலையலாம், சில குழந்தைகள் பெத்தவங்க இல்லாம கஷ்டப்பட்டு தீவிரவாதியாகவோ, விபசாரியாகவோ கூட ஆகலாம். இத்தனைக்கும் நீ பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாய். இத்தனை பேரும் உனக்கு என்ன கெடுதல் செய்தாங்கன்னு நீ இப்படி இவங்களை தண்டிச்சிருக்காய்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

   மாணிக்கம் அங்கிருந்து ஓடி விட நினைத்தான். ஆனால் அவரது பார்வை அவனைக் கட்டிப் போட்டிருந்தது. அவனுக்கும் அவனது இயக்கத்துக்கும் பதவியில் இருந்தவர்கள் மீது தான் கோபம், அவர்களுக்குப் பாடம் கற்பிப்பது தான் குறிக்கோள். அதற்காகத் தான் இது போன்ற தீவிரவாதச் செயல்கள். ஆனால் அதைச் சொல்வது அவர் கேள்விக்குப் பதிலாகாது என்பது புரிந்தது. எத்தனையோ காலமாக கொடூரமாகவே வாழ்ந்து விட்ட அவனது மரத்துப் போன மனதில் ஏதோ ஒன்று ஊடுருவி அவனை அசைத்தது. அந்தக் கோரக் காட்சிகளும், பாதிக்கப் பட்டவர்களின் தாங்க முடியாத துயரங்களும் அவனை மிகவும் ஆழமாகப் பாதித்தன. அவர் கேள்வியில் இருந்த நியாயமும், கண்டு கொண்டிருக்கும் காட்சிகளும் சேர்ந்து அவன் மனதை என்னவோ செய்தன. மனசாட்சி உறுத்தியது. நேரம் ஆக ஆக அந்த இடம் அவனைப் பைத்தியமாக்கி விடும் போலத் தோன்றியது.

   தாள முடியாமல், ஆபத்திற்கென்று அவன் வைத்திருந்த சயனைடு கேப்ஸ்யூலை எடுத்தான்.

   "சாகடிக்கிறதும், சாகிறதும் ரெண்டுமே சுலபம் தான். கோழைகள் செய்கிற காரியம்."

   முதல் முறையாக மாணிக்கம் வாயைத
Title: புது சட்டை
Post by: AnJaLi on March 22, 2019, 07:41:24 pm
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. நல்ல மனுசாளுக்கு ஒரு சொல்லு. ஸ்டேன்ட் அப் ஆன் தி பென்ச்.." என்றார் ஆறாம் வகுப்பு ஆசிரியர் தணிகாசலம்.
பாஸ்கர் முணுமுணுத்துக் கொண்டே பெஞ்சின் மீது ஏறி நின்றான்.
பாஸ்கருக்கு இது ஒன்றும் புதிது இல்லை. எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இப்படி ஏறி நிற்பான்.
பாஸ்கர் கொஞ்சம் முரட்டு சுபாவம். மூக்கு நுனியில் கோபம் எப்போதும் உட்கார்ந்திருக்கும். ஒரு நாளைக்கு ஒரு பையனிடமாவது வம்பு வளப்பான்.
இப்போது பாஸ்கரின் கோபம் ராஜூவின் மீது இருந்தது.
ராஜூ கிளாஸ் லீடர். அவன்தான் இவனைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் வகுப்பில் இல்லாத நேரத்தில் அடித்த கொட்டத்திற்கு எப்படி தண்டனை கொடுப்பார்?.
பள்ளிக் கூடம் விடட்டும் என்று காத்திருந்தான் பாஸ்கர். வீட்டுக்கு பெல் அடித்தது. மாணவர்கள் திபுதிபுவென்று வகுப்பிலிருந்து வெளியேறினர்.

பாஸ்கர் மட்டும் ராஜூவின் பின்னாலேயே போனான். ராஜூ பள்ளிக்கூடக் கேட்டைத் தாண்டியதும் அவனைத் தோளைப் பிடித்து இழுத்தான்.
"டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்னே..?" என்று கோபமாய் கேட்டான்.
"நான் ஒண்ணுமே.......... உன்னப்பத்தி சொல்லலடா...." என்றான் அமைதியாக ராஜூ.
அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான். ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
ராஜூ நிலை குலைந்து கீழே விழுந்தான்.
ராஜூவின் கிழிந்த சட்டை பாதிக்குமேல் பாஸ்கரின் கையில் இருந்தது.
அந்த சட்டைக் கந்தலை அவன்மீது தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் அவனைத் தாக்க ஆயத்தமானான்.
பாஸ்கர் எதிர்பார்த்ததைப் போல் இவனைத் திருப்பி அடிக்க முயற்சிக்கவில்லை.
ராஜூவின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன தனது ஒரே சட்டையைப் பற்றியே இருந்தது. நாளைக்கு எப்படி இவன் பள்ளிக்கு வருவான்...? எந்த சட்டையைப் போட்டுக் கொண்டு வருவான்?
ராஜூ செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான்.
மிச்ச கொஞ்சமாய் கிழிந்துபோன சட்டையை கழட்டி எறிந்தான்.
சிதறிக் கிடந்த புத்தகங்களை சேகரித்தான். எழுந்து நடந்தான்.
ராஜூ வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து கொண்டிருந்தது பாஸ்கருக்கு என்னவோ போல் இருந்தது.
பாஸ்கர் வீட்டிற்குத் திரும்பினான். அன்று முழுக்க அவனுக்கு மனசு என்னவோ போல் இருந்தது.
ஒருவாரம் கழிந்தது. ராஜூ பள்ளிக்கு வரவே இல்லை.
ராஜூவின் வீடு ஊர்க்கோடியில் இருந்தது. ஒரு சின்ன குடிசை.
அதில் அவனும், அவன் அம்மாவும் இருந்தனர். பாஸ்கரின் வீட்டு மாட்டுத் தொழுவம் கூட ராஜூவின் வீட்டை விட பத்து மடங்கு பெரியதாக இருக்கும்.
அன்று மாலை பள்ளியிலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தான் பாஸ்கர். சட்டென்று ஒரு இடத்தில் காரை நிறுத்தச் சொன்னான்.
காரை விட்டு இறங்கினான்.
ரோட்டு ஓரத்தில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது.
அங்கு ராஜூ தலையில் செங்கல் சுமந்தபடி சென்று கொண்டிருந்தான்.
பாஸ்கர் மெல்ல வேலை நடக்கும் இடத்திற்குச் சென்றான்.
"என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா....? வேலைக்கு வந்திட்டே..." அந்தப் பக்கமாக வந்த ஒருவர்.
"போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும்." என்றான் ராஜூ.
"ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்பொறமா பள்ளிக்கூடம் போகப் போறீயா?" என்று சிரித்தபடி போனார் அவர்.
"இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்?" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் பாஸ்கர்.
முட்டாள்தனமான கோபம். அவனுக்கே அவன் மீது வெறுப்பாய் இருந்தது.
பாஸ்கர் தனது வீட்டிற்குத் திரும்பி வந்தான். அப்பா தனது பிறந்த நாளுக்காக வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக் கொண்டு ராஜூவின் வீட்டிற்குச் சென்றான்.
"உள்ள வாடா" என்று அன்புடன் அவனை வரவேற்றான் ராஜூ
இவன் தயங்கியபடி உள்ளே போனான். அவனுக்கு டீ போட்டுக் கொடுத்தான்.
"என் மீது உனக்கு கோபம் இல்லையா" என்றான் பாஸ்கர்.
"வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா?" என்றான் ராஜூ.
"கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு" என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான்.
"எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது. உன் அன்புக்கு நன்றி" என்றான் ராஜூ. பாஸ்கர் எவ்வளவோ வற்புறுத்தியும் ராஜூ அதை வாங்கிக் கொள்ளவில்லை.
அடுத்தநாள் புதுச்சட்டையுடன் வகுப்பிற்குள் நுழையும் ராஜூவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.


Title: Re: புது சட்டை
Post by: ரதி on March 22, 2019, 10:40:21 pm
wow super sis
Title: Re: சிறை வாசம்
Post by: ரதி on March 22, 2019, 10:42:49 pm
nice
Title: Re: சிறை வாசம்
Post by: MDU on March 23, 2019, 03:44:25 am
SUPER
Title: Re: புது சட்டை
Post by: MDU on March 23, 2019, 03:46:40 am
SUPER
Title: Re: சிவகாமியின் சபதம்
Post by: MDU on March 23, 2019, 03:48:43 am
SUPER
Title: மரணத்தின் விளிம்பில்....
Post by: AnJaLi on March 23, 2019, 08:41:52 pm
மரணத்தின் விளிம்பில்....

மரணத்தின் விளிம்பில் யாருமே அதிக நேரம் தங்கி விடக் கூடாது என்று அருணாச்சலத்திற்குத் தோன்றுகிறது. ஏனென்றால் வாழ்ந்த விதத்தையும், நடந்து முடிந்தவைகளையும் இந்த நேரத்தில் அசை போட மட்டுமே மனிதனால் முடிகிறது. ஆனால் எதையும் சரி செய்யவோ மாற்றவோ அவகாசம் இல்லை.

"ஆஸ்பத்திரியில் வைத்துப் பயன் இல்லை. வீட்டுக்குக் கொண்டு போய் விடுங்கள்" என்று மருத்துவர்கள் ஆலோசனை சொன்னதால் அவரை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். அதிக பட்சம் மூன்று நாட்கள் இருப்பார் என்று டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் கண்களை மட்டும் திறந்து பார்க்கவும், சுற்றிலும் மற்றவர்கள் பேசவும் கேட்கவும் மட்டுமே முடிந்த ஒருவருக்கு ஒவ்வொரு கணமும் யுகமாகக் கழியும் அந்தக் கொடுமையை அருணாச்சலம் மட்டுமே அறிவார்.

மனைவி, மகன், மகள் மூவருக்கும் அவர் மரணத்தில் துக்கம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அதையும் மீறி உயிலில் என்ன எழுதியிருக்கிறார் என்கிற கவலை மேலோங்கி இருந்தது. ஏகப்பட்ட சொத்தை சுயமாக சம்பாதித்திருந்த அவர் உயிலை அடிக்கடி மாற்றும் பழக்கம் உடையவரானதால் கடைசி உயிலில் தங்கள் நிலை என்ன என்கிற கவலையை அவரருகில் உட்கார்ந்து தாழ்ந்த குரலில் தங்களுக்குள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அது காதில் விழ விழ மனம் ரணமாகிக் கொண்டே இருந்தது. மனிதனை விட பணம் பிரதானமாகும் போது பாசமென்ன, பந்தமென்ன?

"அந்த நாசமாப் போன வக்கீல் இந்த நேரமாய் பார்த்து சிங்கப்பூர் டூர் போயிட்டார். அவர் திங்கள் கிழமை தான் வருவாராம்" -இது மகன். இன்று வியாழக் கிழமை. திங்கட்கிழமை வரை காக்க அவனுக்குப் பொறுமையில்லை.

"அப்பா எனக்கு கண்டிப்பா ஒரு வீடு எழுதி வைப்பார்னு நாங்க ஹவுசிங் லோன் கூட போடாமல் இருக்கோம். உயில்ல என்ன எழுதி இருக்கார்னு உங்கிட்ட ஏதாவது சொல்லியிருக்காராம்மா?" இது மகள்.

"உயிலைப் பத்திக் கேட்கறப்ப எல்லாம் இப்ப எப்படியிருக்காரோ அப்படியே தான் இருப்பார். எந்த முக்கியமான விஷயத்தை என் கிட்ட வாய் விட்டுச் சொல்லியிருக்கார்" - இது மனைவியின் புலம்பல்.

குடும்பம் தான் இப்படி என்றால் வந்து விட்டுப் போன அக்கம் பக்கத்தினர், உறவினர், நண்பர்கள், அவர் கம்பெனி ஊழியர்கள் என எல்லோருமே ஒரு சம்பிரதாயத்திற்கு வந்தது போலத் தான் அவருக்குப் பட்டது. உறவினர்கள் மெல்லிய குரலிலும், சுற்றி வளைத்தும் உயில் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்கள். நண்பர்கள் அனைவரும் தொழில் சம்பந்தப்பட்டவர்கள். ஆகவே அவர்களும், ஊழியர்களும் அவர் கம்பெனி வாரிசான மகனிடம் நல்ல பெயரெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பக்கத்து கோயில் பூசாரி பார்க்க வந்தவர் "விஷ்ணு சஹஸ்ரநாமம் காதில் விழுந்துண்டிருந்தா நேரா வைகுண்டத்துக்கே போவான்னு ஐதீகம். அதனால தெரிஞ்சவா சொல்லுங்கோ, இல்லைன்னா கேசட்டாவது போடுங்கோ" என்று சொல்லி விட்டுப் போனார்.

"ஏண்டா கேசட் இருக்கா?" என்று அவர் மனைவி மகனிடம் கேட்க அவன் இல்லை என்றான். அதோடு அந்த விஷயம் மறக்கப் பட்டது. இல்லாவிட்டால் ஒன்று வாங்கிக் கொண்டாவது வா என்று அவளும் சொல்லவில்லை. வாங்கிக்கொண்டு வர அவனும் முயற்சிக்கவில்லை.

குடும்பத்திற்காக ஏகப்பட்ட சொத்தை சேர்த்து விட்டு விடை பெறப் போகும் இந்தத் தருணத்தில் தன் குடும்பத்திடம் இருந்து அவர் இதை எதிர்பார்க்கவில்லை. பணத்தையும், சொத்துக்களையும் சம்பாதித்தவர் மனிதர்களை சம்பாதித்து வைக்கவில்லை என்பதை உணர்கிறார். சொர்க்கம் நரகம் என்று சொல்லப்படுவதெல்லாம் செத்த பிறகு போகும் இடங்கள் அல்ல, இந்தக் கடைசி கணங்களில் ஒவ்வொருவனும் எல்லாவற்றையும் சீர் தூக்கிப் பார்க்கும் மன நிலையே என்று அவருக்குத் தோன்றுகிறது.

"சார் எப்படியிருக்கார்" என்று அவரது டிரைவரின் குரல் கேட்க கண்களைத் திறந்தார். அவரது டிரைவரின் மகனும் கூட நின்றிருந்தான். நான்கு வருடங்களுக்கு முன்பு ப்ளஸ் டூவில் மாவட்ட முதலிடம் வந்த மாணவன் அவன். அப்போது என்ன படிக்க வைக்கப் போகிறாய் என்று டிரைவரைக் கேட்ட போது "அவன் இன்ஜீனியர் படிக்க ஆசைப் படறான். அதெல்லாம் நமக்கு முடியுமா எசமான். ஏதோ டிகிரி படிக்கட்டும்னு இருக்கேன்" என்று டிரைவர் சொன்னார். அத்தனை நல்ல மார்க் வாங்கிய பையன் ஒரு சாதாரண பட்டப் படிப்பு படிக்கப் போவது பொறுக்காமல் "இன்ஜீனியருக்கே படிக்க வையுப்பா. படிக்கறதுக்கு ஆகற செலவை நான் பார்த்துக்கறேன். அக்கௌண்டண்ட் கிட்டே சொல்லி வைக்கறேன். தேவையானதை சொல்லி வாங்கிக்கோ" என்று சொன்னார். எத்தனையோ செலவாகிறது இது பெரிய விஷயமல்ல என்று அவர் அன்று நினைத்தார்.....

அவர் மனைவி சொன்னாள். "டாக்டர் கையை விரிச்சுட்டார். வீட்டுக்கு எடுத்துகிட்டு போக சொல்லிட்டார்.." அதைக் கேட்ட டிரைவரும், டிரைவரின் மகனும் லேசாகக் கண்கலங்கினார்கள்.

"என் மகனுக்குக் காலேஜ் கேம்பஸ் இண்டர்வ்யூல டாட்டா கம்பெனியில வேலை கிடைச்சுடுச்சும்மா. மாசம் ஆரம்பத்திலயே 25000 சம்பளம். எல்லாம் சார் போட்ட பிச்சை. அதான் சாரு கிட்ட சொல்லி ஆசிர்வாதம் வாங்கிட்டு போக கூட்டிகிட்டு வந்தேன்"

அந்த இளைஞன் அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவன் முகத்தில் நன்றியுணர்வு நிறைந்திருந்தது. டிரைவரும் கண்கலங்க அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டார்.

அருணாச்சலம் அவர்கள் இருவரையும் ஒரு கணம் நிறைந்த மனதுடன் பார்த்தார். அந்த இளைஞனின் வெற்றியும், அவன் நன்றியுணர்வும் அந்தக் கடைசி தருணத்தில் மனதுக்கு இதமாக இருந்தது. அவரும் ஓரிரண்டு மனிதர்களை சம்பாதித்திருக்கிறார். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்த வாழ்க்கையில் செய்த சாதனைகள், சேர்த்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விட அந்த மாணவன் படிக்க அவர் செய்த சிறிய உதவி மட்டுமே அர்த்தமுள்ள செயலாக அவருக்கு அப்போது தோன்றியது. வாழும் போது பெரிதாகப் பட்ட எல்லா விஷயங்களும் மரணத்தின் விளிம்பில் நின்று பார்க்கையில் அற்பமாகத் தெரிந்தது

அந்த இளைஞனைப் பார்த்து அவர் புன்னகைத்தார். அந்தக் கணத்தில் மரணம் அவரை நெருங்க ஆரம்பித்தது. வாழ்க்கையைத் திரும்பவும் வாழ முடிந்திருந்தால் இது போல் மேலும் பல நல்ல காரியங்கள் செய்திருக்கலாம் என்பது தான் அவரது கடைசி நினைவாக இருந்தது.


Title: பாவமன்னிப்பு
Post by: AnJaLi on March 23, 2019, 09:04:55 pm
ஒரு மதகுரு ஆலயத்தில் சொற்பொழிவாற்றினார். "மனிதர்களே நீங்கள் பாவிகளாக இருக்கிறீர்கள். உங்கள் பாவங்களுக்காக இறைவன் நிச்சயம் உங்களை தண்டிப்பான். இறைவனுடைய தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமானால் என்னிடம் ஒரு பாவமன்னிப்பு சீட்டு இருக்கிறது.ஒரு சீட்டு 50 ரூபா தான். அதை வாங்குங்கள்." என்று சொன்னார்.

50 ரூபாவில் பாவமன்னிப்பா? எத்தனை மலிவு?

கூட்டம் முண்டியடித்துக்கொண்டு பாவமன்னிப்பு சீட்டை வாங்கியது.

ஒருவன் மட்டும் இரண்டு சீட்டுக்கள் கேட்டான்.

மதகுரு " ஒரு சீட்டு போதுமே. யார் இந்த மடையன்? எதற்கு இரண்டு சீட்டுக்கள் கேட்கிறான்? நமக்கென்ன, பணம் கொடுக்கிறான்.வாங்கிக்கொள்வோம்" என்று நினைத்த படி அவனுக்கு இரண்டு சீட்டுக்கள் கொடுத்தார். 

நல்ல வியாபாரம். மதகுரு மகிழ்ச்சியுடன் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட்டார், அடுத்த ஊரில் கடை விரிக்க.

வழியில் காடு. திடீரென ஒருவன் கையில் கத்தியுடன் அவர் முன் தோன்றினான்,

"பணமூட்டையை கொடுத்துவிடு, இல்லாவிட்டால் கத்தியால் குத்திவிடுவேன்" என்று பயமுறுத்தினான்.

மதகுரு அதிர்ந்து போனார். "பாவி மதகுருவையே கொள்ளையடிக்கிறாயே இந்த பாவம் உன்னை சும்மாவிடாது"
என்று அலறினார்.

"அதைப்பற்றி நீ கவலைப்படாதே. இந்த பாவம் என்னை ஒன்றும் பண்ணாது" என்றான் அவன்.

அதெப்படி சாத்தியம்? என்று கேட்டார் மதகுரு.

"நான் இதற்காக பாவமன்னிப்பு சீட்டு வாங்கியிருக்கிறேன். அதுவும் உன்னிடமே வாங்கியிருக்கிறேன். ஒருவன் உன்னிடம் இரண்டு சீட்டுகள் வாங்கினானே,னினைவிருக்கிறதா? அது நான் தான். ஒரு சீட்டு செய்த பாவங்களுக்கு. இன்னொன்று செய்யப்போகும் பாவங்களுக்கு." என்றான் அவன்.

மதகுருவால் எதும் பேச முடியவில்லை. உள்ளுக்குள் தன்னையும், அவனையும் சபித்துக்கொண்டு பணமூட்டையை அவனிடம் கொடுத்தார்.


இது ஒரு கற்பனை கதை தான். ஆனால் எதார்த்தமானது.
ஒரு காலத்தில் மதங்கள் பாவம் செய்யாதீர்கள் பாவம் செய்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவீர்கள் என்று எச்சரித்தன. மனிதனும் பாவம் செய்ய பயப்பட்டான். காலம் செல்லச் செல்ல மதங்கள் தங்கள் மதங்களை பரப்புவதற்காக பலப்பல பாவமன்னிப்பு கொள்கைகளை பரப்ப ஆரம்பித்தன.

இதை நம்பு உன் பாவங்கள் பரிசுத்தம் ஆகும். இப்படி செய்தால் பாவங்கள் போய்விடும் என்று சொல்ல ஆரம்பித்தன.

மனிதர்களும் பார்த்தார்கள், காசா பணமா? வெறும் நம்பிக்கை தானே. பாவங்கள் போக எத்தனை இலகுவான வழி என அந்த மதங்களில் சேர ஆரம்பித்தார்கள்.

மதங்களும் பிரபலமடைந்தன. பாவங்களும் பெருக ஆரம்பித்தன.
வெறும் நம்மிக்கை எப்படி பாவங்களை போக்கும்?

சில மதங்கள் இந்த குளத்தில் மூழ்கு பாவம் போகும், இந்த கங்கையில் நீராடு பாவங்கள் சுத்தமாகும் என்று சொல்கிறது.
இது எப்படி சாத்தியமாகும்?

நாம் பாவம் செய்துவிட்டு கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்பதால் பாவங்கள் எப்படி இல்லாமல் போகும்? நாம் யாருக்கு பாவம் செய்தோமோ அவருக்கு பரிகாரம் செய்து அவரிடம் பாவமன்னிப்பு கேட்டால் தானே அந்த பாவதுக்கு பரிகாரம் கிடைக்கும்.

நான் எந்த மதத்தையும் இழிவுபடுத்த இதை கூறவில்லை. இறைவன் நிச்சயம் இருக்கிறான்.அவனை சம்மந்தப்படுத்தி உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளை பின்னற்ற வேண்டாம் என்பதற்கே இதை எழுதுகிறேன்.

Title: அன்பிருக்கும் இடத்தில் எல்லாம் குவியும்
Post by: AnJaLi on March 23, 2019, 09:06:40 pm
ஒரு கிராமத்தில் ஏழை குடியானவன் வீட்டு முன்பு மூன்று முதியவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் வெளியில் வந்து “உங்களைப்பார்த்தால் பசித்திருப்பவர்களைப்போல தெரிகிறது. வீட்டுக்குள் வந்து உணவருந்துங்கள் " என்று அழைத்தாள்.

அதற்கு அந்த பெரியவர்கள் “ வீட்டில் ஆண்கள் யாரேனும் இருக்கின்றனரா?" என்று கேட்டனர்.

இல்லை என்று பதில் கூறிய பெண், “எங்கள் வீட்டு ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருக்கின்றனர். அவர்கள் மாலையில்தான் வருவார்கள் எனவே அதுவரை உங்களால் காத்திருக்க முடியுமா?" என்று கேட்டாள்.

பரவாயில்லை நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறிய மூவரும் வீட்டுத்திண்ணையிலேயே அமர்ந்திருந்தனர்.

மாலையில் கணவன் வீடு திரும்பியதும் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களை பார்த்து நீங்கள் யாரென்று கேட்டான். அதற்கு அவர்கள், எங்களுடைய பெயர் அன்பு, வெற்றி, செல்வம் என்று கூறினர்.

“எங்களில் முதலில் யாரை நீ அழைக்கப்போகிறாய் ?" என்றும் அந்த குடியானவனிடம் கேட்டனர். உடனே குடியானவன் வீட்டிற்குள் சென்று மனைவியிடம் கலந்து ஆலோசனை செய்தான்.

நம்முடைய வீட்டில் செல்வத்திற்கு முதலில் விருந்து வைப்போம். செல்வம் வந்து நம் வீட்டை நிரப்பட்டும் என்று மனைவியிடம் தெரிவித்தான்.

அதைக் கேட்ட மனைவி, வெற்றி மிகவும் முக்கியமானது. எனவே வெற்றியை முதலில் கூப்பிடுங்கள் என்று கூறினாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட மகளோ, “ நீங்கள் இருவரும் அன்பை முதலில் விருந்துக்கு அழையுங்கள் " என்றாள். மகளின் விருப்பத்திற்கு ஏற்ப குடியானவனும் அவனுடைய மனைவியும், அன்பை விருந்துக்கு அழைத்தனர். உடனே அன்பைத் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் வெற்றியும், செல்வமும் பின் தொடர்ந்து வந்தனர்.

இதில் ஆச்சரியமடைந்த குடியானவன், “நான் அன்பை மட்டும் தானே அழைத்தேன் நீங்கள் மூவரும் வருகிறீர்களே?" என்று கேட்டான்.

அதற்கு அவர்கள், “ நீங்கள் செல்வத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால் மற்ற இருவரும் வெளியில் தங்கியிருப்போம். ஆனால் நீங்கள் அன்பைத்தானே அழைத்தீர்கள்.

அன்பு எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கே வெற்றியும், செல்வமும், என்று பின் தொடரும்" என்று பதிலளித்தனர்.

அன்பு நிறைந்திருக்கும் இடத்தில் அனைத்தும் நிறைந்திருக்கும்.
Title: சொல்லாமலே
Post by: AnJaLi on March 24, 2019, 09:33:22 am
அன்னம் ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி ஆப்பரேட்டராகப் பணியாற்றி வந்தாள். அவளுடைய அப்பா பாண்டியன் ஒரு வழக்குரைஞரிடம் கணக்கராக வேலை செய்து வந்தார். அவளுடைய அண்ணன் மாணிக்கம் அரசுப் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அவளுடைய அம்மா இலட்சுமி வீட்டு வேலைகளைக் கவனித்து வந்தாள்.
 
அன்னம் தன்னுடைய வேலையைச் செம்மையாகச் செய்வதில் திறமைமிக்கவளாய்த் திகழ்ந்தாள். அந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இன்று புதிய நிர்வாக அதிகாரி திடீரென்று வருவதாகச் சொல்லியிருந்தார்கள். அன்று தன் இருக்கையில் அமர்ந்து தன்னுடைய வேலையைத் தொடங்கினாள்.
 
அப்பொழுது பியூன் மணி அவளிடம் வந்து, எம்.டி. உங்களைக் கூப்பிடுகிறார் என்றான்.
 
எதற்கு என்றதும், எனக்கென்ன தெரியும்! என்றான்.
 
மேனேஜர் இராமுவைத்தானே கூப்பிடுவார்!என்று அன்னம் தயங்கிக் கூறியதும், அவர் இன்று லீவு என்றான்.
 
அப்படியா!.... இதோ வர்றேன் என்று சொன்ன அன்னம் எம்.டி. அறைக்குச் சென்றாள்.
 
வணக்கம் சார்.
 
அவளை ஒரு ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, வணக்கம் என்றார்.
 
உட்காருங்க... இந்த பைலில் உள்ள கடிதங்கள் அனைத்திலும் ஒவ்வொரு பிரதி எடுத்து வாருங்கள்.
 
சரி சார்... இப்பவே கொண்டு வருகிறேன் என்றாள்.
 
செல்லதுரை அவளின் அழகை ரசித்தான். அடுத்த சிறிது நேரத்தில் அவளிடம் கொடுத்த வேலையை முடித்துக் கொண்டு வந்தாள்.
 
வெரிகுட்.... சீக்கிரம் வேலையை முடித்துவிட்டீர்களே அன்னம் என்றதும் அன்னம் ஒரு புன்னகையை உதிர்த்தாள்.
 
தன்னுடைய இருக்கைக்கு வந்த அன்னம் புது எம்.டி. பரவாயில்லையே, பாராட்டெல்லாம் சொல்லுகிறாரே... என்று நினைத்தாள். மறுநாள் அலுவலகத்திற்கு வந்ததும், செல்லதுரை அன்னத்தை அழைத்து இந்த வேலையை முடித்துவிட்டு வாருங்கள் என்றார். அவளும் கொடுத்த வேலைகளை உடனுக்குடன் முடித்துக் கொடுத்ததனால் அன்னத்தின் மீது செல்லதுரைக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது.
 
ஒரு நாள் கடைவீதியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் அன்னம். அந்தப் பக்கம் மகிழுந்தில் வந்த   செல்லதுரை அன்னத்தின் அருகில் மகிழுந்தை நிறுத்தி, எங்கே இந்தப் பக்கம் என்றார்.
 
வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்க வந்தேன் என்றாள்.
 
நல்லது. வீடு எங்கிருக்கிறது? காரில் ஏறுங்கள்.... நான் கொண்டு வந்து விடுகிறேன் என்றார் செல்லதுரை.
 
தேங்க்ஸ்! சில சாமான்கள் இன்னும் வாங்க வேண்டும் என்ற பதிலைக் கேட்ட செல்லதுரைக்கு, அவள் காரில் வராதது ஏமாற்றமாக இருந்தாலும், காரில் வரமாட்டேன் என்று சொல்லாமல் நாசூக்காகத் தவிர்த்தது மிகவும் பிடித்திருந்தது. மேலும், யாரிடமும் அதிகமாகப் பேசாத தன்மை, வேலையில் காட்டும் வேகம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட செல்லதுரை அன்றுமுதல் அன்னத்தைக் காதலிக்க ஆரம்பித்தார். தன்னுடைய காதலை அவளிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தார். இப்படியே ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. பின் ஒரு சமயத்தில் அவளிடம் தன்னுடைய காதலைக் கூறினார்.
 
அன்னம் சிரித்துக் கொண்டே, தனக்குத் திருமணம் ஆகிவிட்டது எனச் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு உடனே நகர்ந்தாள்.
 
செல்லதுரைக்கு வியப்பாக இருந்தது. திருமணம் ஆனதற்கான அடையாளங்களான கழுத்தில் தாலியோ, காலில் மெட்டியோ காணப்படவில்லை.
 
உடனே அவளிடம் கேட்க நினைத்தபோது அவள் அலுவலகத்தைவிட்டுப் போய்விட்டதாக பியூன் கூறினான். அன்று இரவு முழுவதும் செல்லதுரைக்குத் தூக்கமே வரவில்லை. அன்னத்தின் கணவன் எங்கே? அவள் வாழ்க்கை என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ள மறுநாள் மாலை அன்னத்தின் வீட்டிற்குச் சென்றான்.
 
அன்னத்தின் அப்பா, அம்மா,  அண்ணன் ஆகிய அனைவரும் வீட்டில் இருந்தனர்.  அன்னத்தின் அம்மா, இந்தாங்க அய்யா... பலகாரம் சாப்பிடுங்க என்று கூறி தட்டில் பலகாரமும், குடிக்க டீயும் வைத்தாள். செல்லதுரை டீயை அருந்திவிட்டு, தயங்கியபடி, அன்னத்தின் திருமணம்.... என்று இழுத்தான். அவளின் அண்ணன் மாணிக்கம், எல்லாம் முடிந்துவிட்டது.... என்று சோகத்துடன் கூறினார். இலட்சுமி, அது ஒரு பெரிய கதை... என்று கூறித் தொடர்ந்தாள். அவளுக்குத் திருமணம் ஆகி ஒரு வருடத்திலே விவாகரத்து ஆகிவிட்டது.
 
அவ காதல் கலியாணம் செஞ்சுக்கிட்டா. இப்ப துன்பத்தை அனுபவிக்கிறா... என்றார் மாணிக்கம் வெறுப்புடன்.
 
அதிலென்ன தவறு....
 
அவன் பணத்தாசை பிடித்தவன். எங்கள் யாருக்கும் அவனைப் பிடிக்கவில்லை. அன்னம்தான் விரும்பித் திருமணம் செய்து கொண்டாள். கல்யாணத்திற்குப் பிறகுதான் தெரிந்தது அவனுடைய சுயரூபம். அவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. ஆனால், திருமணம் ஆகாமல் இருந்தால் மட்டுமே அந்த வேலை கிடைக்கும். மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் என்று கூறப்பட்டதால் அவனுக்குக் கட்டினவளைவிட பணம்தான் பெரிசுன்னுட்டான். வெளிநாடும் போயிட்டான். இவளையும் கைகழுவிட்டான். அவன் வேலைக்குப் போகும் கம்பெனியின் விலாசமும் தெரியாது. தெரிஞ்சிருந்தா ஏதாவது செஞ்சிருக்கலாம்.
 
எல்லாவற்றையும் கேட்ட செல்லதுரையின் மனதில் ஓர் இறுக்கம் ஏற்பட்டது. தான் காதலித்த அன்னத்திற்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று எண்ணினார்.
 
இவ்வளவு நடந்துவிட்டதா! சரி... நடந்தது நடந்துவிட்டது. நான் ஒன்று சொல்றேன். அதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்றார்.
 
சொல்லுங்கள் என்றார் மாணிக்கம்.
 
எனக்கு அன்னத்தை ரொம்பப் பிடிச்சிருக்கு. அவளுடைய கடந்தகால வாழ்க்கையினைப் பற்றிக் கவலையில்லை என்றார்.
 
அன்னத்தின் குடும்பத்தாருக்கு முதலில் தயக்கம் இருந்தாலும் செல்லதுரையின் நன்னடத்தையைப் பற்றி அன்னம் கூறியிருந்ததாலும் அன்னத்திற்கு ஒரு வாழ்க்கை கிடைக்கட்டும் என்று எண்ணிச் சம்மதித்தனர். என்னுடைய அப்பா அம்மாவிடம் சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றார் செல்லதுரை.
 
மறுமணம் வேண்டாம் என்று எண்ணியிருந்தாள் அன்னம். ஆனால் செல்லதுரையின் பழக்கவழக்கங்கள், மற்றவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை  அவளுக்குப் பிடித்துப்போனதால் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள். மறுநாள் அலுவலகத்திற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் புதுப்பொலிவுடன் வந்தாள். அலுவலகத்தில் இதைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. ஆனால், அன்று காலை செல்லதுரை அலவலகத்திற்கு வரவில்லை. அன்னம் அவர் ஏன் வரவில்லை என யோசித்தாள்.
 
திருமணத் தேதியுடன் வருவாரென்று அனைவரும் பேசிக் கொண்டனர். அன்று மதியம் செல்லதுரை வந்தார். ஒருவரையும் அழைத்து எந்தப் பணியும் கொடுக்கவில்லை. என்ன ஆயிற்று இவருக்கு என்று தனக்குத்தானே பேசிக் கொண்டான் பியூன் மணி. பிற்பகல்  மூன்று மணி சுமாருக்கு எம்.டி. அழைப்பதாகக் கூறினான் மணி. அன்னத்தின் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்றிருந்தது. ஒரு பூங்காவின் பெயரைச் சொல்லி மாலை அலுவலகம் முடிந்தவுடன் அங்கு வருமாறு கூறிவிட்டு உடனே புறப்பட்டுவிட்டான்.
 
மாலை அய்ந்து மணி எப்போது வரும் என்று காத்திருந்த அன்னம், திருமணத்திற்கு என்ன என்ன பொருட்கள் வாங்கலாம், எப்படித் திருமணத்தை நடத்தலாம் என்று கேட்பார் என நினைத்தாள். அதற்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டும் சென்றாள்.
 
அந்தப் பூங்காவில் புல்தரையில் இருவரும் அமர்ந்திருந்தனர். யார் முதலில் பேசுவது என்ற மனநிலையில் இருவரும் இருந்தனர். ஆனால் செல்லதுரையின் முகம் வாட்டத்துடன் இருப்பதை அறிந்த அன்னம், ஏன் உங்கள் வீட்டில் என்ன சொன்னார்கள்? என்று வினவினாள்.
 
செல்லதுரை ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவனாய், அவர்களிடம் என் விருப்பத்தைக் கூறினேன்.... சரி என்று கூறிவிட்டார்கள்... ஆனால்!....
என்ன ஆனா?
 
அவர்களுக்கு ஒரே ஒரு ஆசை.
 
என்ன அது?
 
நீ எங்கள் மதத்திற்கு மாற வேண்டும் என்பது என்றதும், அன்னம் கோபத்துடன் செல்லதுரையைப் பார்த்தாள்.
 
அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?
 
நான் உன்னிடம் பேசிப் பார்க்கிறேன் என்றேன்.
 
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 
அவர்கள் சொன்னபடி நீ எங்கள் மதத்திற்கு மாறிவிடு.
 
பணத்தாசை பிடித்தவரைக்கூட மன்னித்துவிடலாம். மதவெறி பிடித்தவரை நினைத்துப் பார்க்கவும் கூசிப் போனாள் அன்னம். உடனே அன்னம் தன் கைப்பையில் வைத்திருந்த டைரியிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து ஏதோ எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு எதுவும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தாள். அந்தக் காகிதத்தில் எழுதியிருப்பதைப் படித்தார் செல்லதுரை. அதில்,
 
பெண்கள் கூண்டுக்கிளிகள் அல்லர் -     தந்தை பெரியார்.
 
இதுவே என் கருத்து என்று எழுதப்பட்டிருந்தது.
Title: ராஜுவின் கதை
Post by: AnJaLi on March 24, 2019, 09:37:09 am
சிறு வயது முதலே வாத்தியார் இல்லாமலேயே தனது சொந்த முயற்ச்சியில் பலவித கைவினை பொருட்களை செய்யும் ஆர்வம் மிகுந்து இருந்தது ராஜுவிற்கு, பத்து வயது சிறுவனால் இத்தனை அழகான கைவினை பொருட்களை உருவாக்க இயலுமா என்று வியக்கும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக கைதேர்ந்த கைவினை பொருள் உருவாக்கும் கலைஞரின் கைவண்ணம் போலிருக்கும் ராசுவினால் உருவாக்கப்பட்ட பொருட்கள். இயற்கையாகவே தாய் வழி சொத்தாக கிடைத்த பாடும் குரலும் திறமையும், இருபது வயது மதிக்கத்தக்க வாலிபப்பருவம் அடையும்போது கவிதை கதைகள் எழுதுவதிலும் அந்த திறமை வளர்ந்தது , வசதியான பெற்றோர்களை கொண்ட குடும்பச் சூழல் அடுத்த வேளைச் சோற்றிற்கு சம்பாதிக்க வேண்டுமென்கின்ற கட்டாயத்தை மறக்கச் செய்தது, கலையார்வம் துரத்தியது,

அடுத்தடுத்த தெருக்களில் வசித்து வந்த பிரபலங்கள் ராஜுவின் கலையார்வத்திற்க்கு மிகவும் உருதுணையானார்கள், அதில் ஒரு திரைப்பட பிரபலத்திடம் தினமும் சென்று தனது கலையார்வத்திற்க்கு தீனி போடும் வாய்ப்பும் கிடைத்தது, அங்கு வந்த பல பிரபலங்களின் அறிமுகமும் கிடைத்தது, ராஜுவிற்கு பணத்தின் அருமை தெரியாமல் வளர்ந்ததன் விளைவு, பிரபலங்களின் அறிமுகத்தை கொண்டு தன் கலை வாழ்க்கை உயர்வதற்கு பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல் போனது, அன்றைய கால கட்டத்தில் அரசு வேலை வாய்ப்பாக இருந்தாலும் தனியார் வேலை வாய்ப்பாக இருந்தாலும் தற்காலத்தில் இருப்பது போன்று கடினமாக இருக்கவில்லை என்பதும் மற்றொரு காரணம், ராஜுவின் தாய் மருத்துவர், பிரபல மருத்துவர் ரங்காச்சாரியின் மாணவிகளில் ஒருவர், அவரது அப்பா தென்னக ரயில்வேயின் ஆங்கிலேய மூத்த அதிகாரி, அவரது மூத்தமகள் ராஜுவின் தாய், முதல் பெண்மருத்துவர் முத்துலெட்சுமியாம்மாவிடம் நெருங்கிய தொடர்புடையவர் என்று அடுக்கடுக்காய் பல விதங்களில் செழுமை மிக்கதொரு குடும்ப அடிப்படையின் காரணம், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

ராஜுவின் சகோதரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசுபணியில் பணியாற்றத் தொடங்கிவிட்டனர், ராஜுவிற்கு நண்பர் கூட்டம் அதிகம், ஒவ்வொருவராக வேலைக்குச் செல்ல ஆரம்பித்த போது ராஜுவின் தாயாரும் ராசுவை வேலைக்கு போகச் சொன்னபோது அப்போதைய அரசு தொலைபேசியில் வேலையில் சேர்ந்து ஒழுங்காக வேலைச் செய்ய ஆரம்பித்தார் ராசு. திரைப்படங்களில் அப்போதைய பிரபல வசன கர்த்தாவும் பாடல் ஆசிரியரும் நடிகருமான ராஜப்பா என்பவர் ராஜுவின் கலை ஆசான், அடுத்த தெருவில் வசித்த பிரபலங்களில் ஒருவர், அவரிடம் திரையுலக சம்பந்தமான பலரும் வந்து செல்வது வழக்கம், அதில் ஒருவர் இயக்குநர் கிருஷ்ணன் (பஞ்சு). ராஜப்பாவின் நண்பர், ராசப்பாவின் வீட்டில் முதன் முதலில் ராஜுவிற்கு பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படத் துவங்கியது, அதற்க்கு முன்பே திரு கிருஷ்ணன் அவர்களை சிறுவயது முதலே பார்த்து பழக்கம் இருப்பினும் அதுவரையில் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படாமலிருந்தது, திரு கிருஷ்ணன் அவர்களும் சிறுவயது முதலே அடுத்த தெருவில் வசித்து வந்தவர்.

அந்த கால கட்டத்தில் புரசைவாக்கம் பல பிரமுகர்கள் வாழுகின்ற இடமாக இருந்தது, அங்கேதான் திரு ராஜுவும் ராஜுவின் சகோதரர்களும் பிறந்து படித்து வளர்ந்தது, ராஜப்பாவின் சொந்த ஊர் தஞ்சை, ஐயங்கார் வகுப்பை சார்ந்தவர், திரையுலகில் பணிபுரிவதற்காக சேலம் கோவை போன்ற நகரங்களில் இருந்த பட்சிராஜா பிலிம்ஸ் பணி புரியத் துவங்கிய போது அறிமுகமானவர்களில் திரு கிருஷ்ணனும் ராஜப்பாவும் இன்னும் பல அன்றைய திரையுலக ஜாம்பவான்களும் உண்டு பிறகு சென்னைக்கு திரைப்பட நிறுவனங்கள் ஸ்தாபிக்கபட்ட போது ராஜப்பா புரசைவாக்கத்தில் வந்து குடியேறியதாக கூறப்பட்டது.

திரு சிவாஜிகணேசன் நடித்த பராசக்திக்கு முன்னர் பல திரைப்படங்களை திரு ஏ.வி.எம். தயாரித்தபோது அங்கே எடிட்டராக பணிபுரிந்து கொண்டிருந்த திரு பஞ்சு அவர்களின் நட்பு திரு. கிருஷ்ணன் அவர்களுக்கு சிகரெட் மூலம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது, இருவரும் ஒரே brand என்பதால் கிருஷ்ணன் அவர்களுக்கு சிகரெட் தீர்ந்து போனபோது அருகில் சிகரெட் வாங்குவதற்கு வேலையை விட்டு விட்டு பாதியில் வெளியே சென்று வாங்க இயலாமல் போனதால் அதே brand சிகரெட் திரு பஞ்சு அவர்களும் பிடிக்கும் வழக்கம் இருந்ததாகவும் சிகரெட் கொடுத்ததிலிருந்து நட்பும் தொடர்ந்தது அந்நட்பு தொழிலிலும் தொடர்ந்து பின்னர் இருவரும் உறவினர்களாகியும் விட்டனர். திரு கிருஷ்ணனிடம் நண்பராகவும் தொழிலில் உதவியாகவும் திரு ராசு இணைத்துக் கொள்ளபட்டார். இதனால் அரசு வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஆத்திலே ஒரு கால் சேத்திலே ஒரு கால் என்பது போல காலம் கடந்தது, ராஜுவின் பெற்றோரின் வசதி காரணமாக துவக்க காலங்களில் வாயிற்று பிழைப்பை பற்றிய அக்கறை இருக்கவில்லை ராஜுவின் தாய் அவரது ஐம்பத்து இரண்டாவது வயதிலேயே மரணமடையும் சூழல் உருவானது அதற்க்குக் காரணம் ராஜுவின் மூத்த சகோதரர் இளம் வயதிலேயே திடீரென்று டைபாய்டு (அப்போதெல்லாம் டைபாய்டு நோய்க்கு சரியான மருந்துகள் கிடையாது) ஜுரத்தால் பாதிக்கப்பட்டு இருபது நாட்களிலேயே காலமானதால் அந்த துயரை தாங்கிக்கொள்ள இயலாமல் ராஜுவின் அம்மா குறைந்த வயதிலேயே இறந்து போக நேரிட்டதால் குடும்பத்தில் இருந்த மற்ற அனைவரின் வாழ்க்கையும் கேள்விக் குறியானது. சொத்துக்களை ஏமாற்றி பலர் எடுத்துகொண்டனர், ராஜுவின் அப்பா 'அவளே போய்ட்டா இனிமேல் எனக்கு சொத்து எதுக்குன்னு' சொல்லி உயிருடன் இருந்த மற்ற பிள்ளைகளைப் பற்றி யோசிக்காமலேயே குடும்பம் நசிந்துபோனது
Title: Re: ராஜுவின் கதை
Post by: AnJaLi on March 24, 2019, 09:38:30 am
ராஜுவின் கதை - இறுதி பாகம்


முதல் அண்ணன் காலமாகிவிட மீதம் ராஜுவையும் சேர்த்து நான்கு பேர் சகோதரர்கள் ஒருவருக்கும் அப்போது திருமணமாகவில்லை. அப்போது தொலைபேசி அலுவலகம் தனியார் நிருவனமாக்கப்படவில்லை, ராஜுவின் சகோதரரில் ராஜுவிற்கு மூத்த சகோதரர் சென்னை தொலைபேசி அலுவலகத்தில் அரசு பணியில் இருந்து வந்தார், ராஜுவின் மூத்த சகோதரர் வேலையை விட்டு விடாதே, திரைப்பட தயாரிப்பிலோ இயக்குனராகவோ கிருஷ்ணன் முன்னுக்கு கொண்டு வருவார் என்கின்ற உன் நம்பிக்கையை நம்பி அரசு பணியை விட்டு விடாதே என்று எடுத்துக் கூறியுள்ளார், ராஜுவின் இரண்டு தம்பிகளில் மூத்தவர் ரயில்வேயில் எழுத்தராக பணி செய்து வந்தார், [கடைசி தம்பியும் பிற்காலத்தில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்தார்]. அவருக்கு அப்போதைய தென்னிந்திய ரயில்வேயின் பொதுமேளாளர் மிகவும் நெருக்கம் என்பதால் ரயில்வேயில் பணியமர்த்திவிடுவதாக ராஜுவிடம் பல முறை சொல்லியும் இயக்குநர் கிரிஷ்ணரின் வாக்குறுதியின் மீதிருந்த நம்பிக்கையால் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு மீண்டும் மீண்டும் திரைப்பட மோகத்தினால் இழுக்கப்பட்டு கிருஷ்ணனே கதி என்று நம்பிக்கிடந்தார் ராசு.

ஆனால் நம்பிக்கை எந்த அளவிற்கு உதவி செய்தது, கிருஷ்ணர் தனக்கிருந்த நண்பரும் தொழில் பார்ட்னருமான பஞ்சுவிடம் பீம்சிங்கை அறிமுகப்படுத்தினார், பீம்சிங் எங்கிருந்து திடீரென்று வந்தார், அவரும் அடுத்த தெருவில் வசித்தவர், பீம்சிங் ராசுவைப்போல இல்லை, தொழில் நுணுக்கத்தை பிடித்துக்கொண்டு கிருஷ்ணனின் உதவியுடன் திரைப்பட இயக்குனராகிவிட்டார், இயக்குனராவதற்கு உதவிய கிருஷ்ணன் பீம்சிங்கை தனது தங்கைக்கு திருமணம் முடித்து வைத்து சொந்தமாக்கிவிட்டார். ராஜுவின் நிலை என்ன, கேள்விக்குறிதான். பஞ்சுவும் பீம்சிங்கும் [பீம்சிங்கின் தாயார் தெலுங்கு பிராமணர்] பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள், கிருஷ்ணரின் தகப்பனாரும் பிராமணர், ஆக பிராமணர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு தங்களை முன்னேற்றிக்கொண்டு ஒருவருக்கொருவர் சொந்தமாக மாறிப் போயினர். ராசு அடிப்படையில் கிறிஸ்த்துவர், அவரை உயர்விற்கு கொண்டுவந்து அதனால் அவர்களுக்கு ஆகப்போவது என்ன என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்திருக்கலாம்.

ஏமாளி ராசு, பிழைக்கத்தெரியாதவர், அப்பாவி அப்போதும் இவற்றையெல்லாம் உணரவில்லை, கிருஷ்ணர் தனக்கு நிச்சயம் உதவிவிடுவார் என்று அவரது வாக்கை நம்பி காலமெல்லாம் காத்திருந்தார், திரு வாசு அவர்களால் தயாரிக்கப்போகின்ற திரைப்படம் பெற்றால்தான் பிள்ளையா, அதில் நிச்சயம் நல்ல வசூல் கிடைக்கும் அதன் மூலம் அந்த தயாரிப்பாளரிடம் சொல்லி அடுத்த திரைப்பட வாய்ப்பை பெற்று தருவதாக இறுதியாக வாக்களித்தார் ராஜுவிடம் கிருஷ்ணன், ஆனால் நடந்தது என்ன, யாரும் எதிர்பாராத வகையில் எம்.ஆர்.ராதா அவர்கள் திரு. எம்.ஜி.ஆரை சுட்டுவிட பெற்றால்தான் பிள்ளையா திரைப்படம் நன்றாக ஓடி வசூலைக்கொடுத்தாலும் தயாரிப்பாளர் திரைப்படம் தயாரிக்கும் வாய்ப்பை அத்துடன் இழந்துவிட்டார். இதற்கிடையில் ராசு வேறு அரசுபணிகளில் சேர்ந்தார், ஆனால் ஒவ்வொரு முறை கிருஷ்ணன் ஏதோ ஒருதிரைப்படத்தை இயக்குவதை அறிந்து அந்த வேலையை நிறுத்திவிட்டு கிருஷ்ணன் இயக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார்.

மனிதர்கள் மட்டும் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தாலும் காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, அரசு வேலை கிடைப்பது குதிரை கொம்பானது, சகோதரர்கள் எல்லோரும் குடும்பஸ்த்தர்களாகி விட்டனர், ராஜுவின் நிலைமையைப் கேட்கவா வேண்டும், ராசுவை நம்பி ஒரு பெண் வாழ்க்கை பட்டார், குழந்தையும் ஆனது, காப்பாற்ற இயலாமல் குடும்பத்தில் கஷ்டம், கிருஷ்ணன் என்ன செய்தார், எல்லா பொறுப்பையும் பஞ்சுவின் மேற்பார்வையில் வைத்துக் கொண்டார், கிருஷ்ணரின் குடும்பத்தினரின் பார்வையில் ராசு எடுபிடி, ராசு கிருஷ்ணருக்கு பெண்களைக் கூட கூட்டி வந்து கொடுப்பவன் என்கின்ற எண்ணம். ராஜுவும் கிருஷ்ணரும் சந்திப்பது அவரது (பஞ்சு உட்பட) குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிடிப்பது இல்லை,

ஆனால் நடந்தது என்ன கிருஷ்ணன் தனக்கொரு வைப்பாட்டியை தானே தேடிக்கொண்டார், ஆனால் அவர்கள் நினைத்தது அந்த வைப்பாட்டியையும் ராஜுதான் கூட்டி வைத்தார் என்று, ஆனால் வைப்பாட்டி என்ன செய்தார் அந்த குடும்பம் ராசுவைப்பற்றி என்ன நினைக்கிறது என்பது அறியாதவர், உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு என்பதைப்போல, ராஜுவிற்கு கிருஷ்ணன் செய்யவிருந்த உதவிகளையெல்லாம் தன்வசம் திருப்பிக்கொண்டுவிட்டார், பிழைக்கத் தெரிந்த பெண். அப்போதும் ராஜுவிற்கு கிருஷ்ணரின் மீதிருந்த நம்பிக்கையும் அன்பும் எவ்விதத்திலும் குறையவே இல்லை என்பதுதான் ராஜுவின் குடும்பத்தாற்க்கு ஆச்சரியமான விஷயம், இப்படியும் ஒருவன் உலகில் இருப்பானா, என்று கேட்கின்ற அளவிற்கு உலகின் தில்லு முல்லுகளைப் பற்றி அக்கறை கொள்ளாதவராக இருந்தார் ராசு.

வாழ்க்கையில் கஷ்டங்களின் எல்லைக்கே வந்தாகிவிட்டது, இனியும் படுவதற்கும் சுமப்பதற்கும் உலகில் வேறொரு கஷ்டம் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் ராசு, அவரைப்பற்றி அறிந்தவர்கள் கூறுவது, கலைஞரை உங்களுக்கு தெரியுமே சென்று பாருங்களேன் ஏதாவது உதவி செய்வார், (சிவாஜி) கணேசனை உங்களுக்கு தெரியுமே போய் பார்க்கக் கூடாதா ஏதாவது உதவி செய்வார், இப்படி ராஜுவைப் பற்றி நன்கு அறிந்த அவரது நண்பர்களும் மற்றவர்களும் பலமுறை கூறுவதுண்டு, எத்தனையோ அன்றைய பிரபலங்களை ராஜுவிற்கு தெரிந்திருந்தும் ராசு நம்பியது இயக்குநர் கிருஷ்ணரை மட்டுமே கடைசிவரையில், வாக்குறுதி கொடுப்பவர்கள் மறந்துவிடுவது வாடிக்கைதானே, கிருஷ்ணரும் அப்படித்தானோ அல்லது அவரை சுற்றி இருந்தவர்களின் தந்திரமோ, உண்மைகள் எப்போதும் மவுனம் சாதிக்கும் அல்லவா, ஆனால் கிருஷ்ணர் கடைசிவரையில் தனது வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட தன்னையே நம்பி காலமெல்லாம் காத்துக் கிடந்த ராஜுவிற்கு செய்யவேயில்லை என்பது வேதனை ஏற்ப்படுத்தும் செய்தி. ஆனால் ராஜுவின் நம்பிக்கை மட்டும் சற்றும் குறையவே இல்லை. வறுமை, வியாதி, பசி, பட்டினி, பிச்சை, குடிசை, வயோதிகம், மரணம் இவை எல்லாம் ராஜுவின் வாழ்க்கையை தலை கீழாய் மாற்றி போட்ட போதும் அந்த பாழாய்ப் போன 'நட்பு, நேர்மை, நம்பிக்கை, நண்பர்கள்' என்கின்றவைகளை ராசு கட்டிகாத்தவிதம், மதித்தவிதம் என் கண்களில் என்றும் தீராத கண்ணீரையும் மனதினில் ஆறாத் துயரத்தை கொடுத்துவிட்டது.

ராஜுவிற்கு என் சிரம் தாழ்ந்த அன்பு என் உயிருள்ளவரை என்றென்றும் உண்டு, அவரது நேர்மை பண்பு, வறுமையிலும் உதவி என்று வலியோரை நம்பி போகாமல் வறுமையைக் கூட தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே எண்ணி ஏற்றுக்கொண்டு பொருமையாய் வாழ்ந்த விதம் என் நெஞ்சை விட்டு என்றும் அகலாத ரணங்கள். அன்னாரின் ஆத்மாவிற்கு என் அஞ்சலிகள் என்றும் உரித்தாகுக
Title: வா ...... சுகி !!
Post by: AnJaLi on March 24, 2019, 06:45:53 pm
கருத்து தெரிந்த நாள் முதலாய் சுகம் என்பதற்கு பொருள் சாப்பிட்டு விட்டு பின்னர் நன்றாக உறங்குவது, ஆனால் அதற்கான சந்தர்பங்கள் கிடைப்பது அரிதான விஷயமாக இருந்தது, வாசுகி இளம் வயது படிப்பில் ஆர்வம் இல்லாமல் போனதற்கு காரணம் அவள் தாய்க்கு இளம் வயது முதலே சயரோகம், கவனிப்பாரற்ற நிலையில் வளரவேண்டிய நிர்பந்தகளுக்கு உள்ளானவள். அழகு இருந்த அளவிற்கு திறமைகள் வாசுகியிடம் இல்லாமல் போனது துரதிஷ்டவசமானது. சமையலறை வேலை வீட்டு வேலை என எல்லா வேலைகளையும் பனிரெண்டு வயது முதல் செய்வதற்கு பழக ஆரம்பித்து வயதிற்கு வந்து ஓரிரு வருடங்களில் படிப்பை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விட்டு வீட்டு வேலைகளில் ஐக்கியமானவள், பதினாறு வயதில் அத்தை மகன் சாமாவிற்கு திருமணமும் முடித்து வைத்தனர்,

சாமாவிற்க்கும் வாசுகிக்கும் சரியாக நான்கு வயது வித்தியாசம், கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் சாமாவை அமாஞ்சி என்று கூப்பிடுவது வழக்கம், சிறு வயது முதலே இருவரும் நன்கு பழகி வளர்ந்ததால் கணவன் மனைவி என்ற எண்ணமின்றி திருமணத்தையும் ஒருவித சம்பிரதாயமாகவே நினைத்தனர், குழந்தையின்றி பல வருடங்களாகியும் அதைப் பற்றிய நினைவே இல்லாமல் அல்லது அறியாதவர்களாக வாழ்ந்து வந்தனர், சாமாவின் தாய்க்கு சந்தேகம் ஏற்படத் துவங்கியது, சாடைமாடையாக வாசுகியிடம் இதைப் பற்றி விசாரித்தாலும் வாசுகியிடமிருந்து கிடைத்த பதில்கள் திருப்தியளிக்கவில்லை.

வாசுகி அவளது தாயை கவனித்துக் கொள்வதற்கு அவளது தாய் வீட்டிற்க்குச் சென்று பல மாதங்கள் தங்கி விடுவதும் வழக்கமாகவே இருந்து வந்தது, வாசுகியின் வீட்டிலிருந்த கறவை பசுக்கள் இரண்டை கவனித்துகொள்வதற்க்கு கிராமத்திலிருக்கும் கால்நடை மருத்துவர் அவர்கள் வீட்டிற்கு வந்து போவது வழக்கம், வாசுகியின் இளம் வயதும் அழகும் கால்நடை மருத்துவர் கோபியை கவர்ந்திருந்தது, ஏதாவது காரணங்கள் கற்ப்பித்து வாசுகியை அடிக்கடி அவள் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் சந்திப்பதை வழக்கமாக்கினான் கோபி,

வாசுகியின் தாய்க்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்ததால் அருகிலிருந்த பட்டினத்து மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர், வாசுகி வீட்டிலிருந்த வேலைகளை கவனித்துகொண்டு தனியே இருக்கும் சூழல் அதிகரித்தது, கோபியின் வருகைக்காக வாசுகி காத்திருக்கத் துவங்கினாள், தனது மாற்றத்தின் அர்த்தம் விளங்காமலேயே கோபியிடம் நெருங்கி பழக ஆரம்பித்தாள், இருவரும் உடலுறவுகொள்ளும் அளவிற்கு அவர்களது நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது, வாசுகி கருவுற்றிருப்பதையறிந்த அவளது அத்தைக்கு மிகவும் சந்தோசம், தன் மகன் சாமாவிடம் சொல்லி அடிக்கடி வாசுகியை சென்று பார்த்துவர சொன்னதன் விளைவு தான் வாசுகி கருவுற்றிருக்க காரணம் என்று எண்ணி சந்தோஷமடைந்தாள்.

வாசுகியின் தாய் சிறிது நாட்களில் இறந்துவிட வாசுகி நிரந்தரமாக அவளது வீட்டில் தங்கி விட்டாள், சாமாவும் வாசுகியுடனே அவளது வீட்டில் தங்கிவிட்டான். கோபி வந்து போவதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் வந்து போனான், பிரசவத்திற்கு உதவுவதற்கு சாமாவின் தாய் வாசுகியுடன் வந்து தங்கினாள். அங்கு அடிக்கடி வந்து போகும் கோபியையும் அவனுடன் வாசுகியின் நெருக்கமான நடவடிக்கைகளும் சாமாவின் தாய்க்கு சந்தேகத்தை ஏற்ப்படுத்தியது. சாமாவிடமும் வாசுகியிடமும் இதைப்பற்றி பேசுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள்.

ஒருநாள் கோபி வீட்டிற்கு வந்தபோது சாமாவும் வாசுகியும் மருத்துவரிடம் சென்றிருந்தனர், அப்போது சாமாவின் தாய் கோபியிடம் வாசுகியுடன் அவனது நெருக்கம் தவறானது என்று சொல்லி இனி அவன் அந்த நெருக்கத்தை தவிர்க்க வேண்டும் என்றும் கோபத்துடன் எச்சரிக்கை செய்தாள். ஆனால் கோபி அங்கு வருவதும் வாசுகியும் கோபியும் நெருங்கி பழகுவதிலும் எந்தவித மாற்றமும் காண முடியாமல் சாமாவிடம் இதைப்பற்றி சொல்லி கோபமடைந்தாள், அதை கேட்ட சாமாவிற்கு ஆச்சரியம் ஏற்ப்படவில்லை மாறாக அவன் அதைப் பற்றி தனக்கு முன்பே தெரியும் என்பதை தன் தாயிடம் தெரிவிக்கும் சூழல் ஏற்ப்பட்டது, தனக்கும் வாசுகிக்கும் காம உணர்வுகள் ஏற்படாமல் போனதற்கு காரணம் இருவரும் சிறுவயதிலிருந்து அண்ணன் தங்கையைப்போல பழகியதுதான் காரணம் என்று சொன்னவுடன் அவன் தாய்க்கு இனம் புரியாத துக்கம், அழுதுகொண்டே தனது துணிகளை எடுத்துக்கொண்டு வாசுகியிடம் கூட சொல்லாமல் வீட்டைவிட்டு கிளம்பி தன் வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தாள்.

வாசுகிக்கு வேறு துணையின்றி தனியே இருந்ததால் சாமா அவளுக்கு உதவியாக இருந்து வந்தான், ஆனால் குழந்தைப் பிறந்த சில மாதங்களில் சாமாவும் தன் வீட்டிற்குத் திரும்பியவன் மறுபடியும் வாசுகியை பார்க்க அவளது வீட்டிற்கு செல்வதை நிறுத்தி விட்டான், வாசுகி தன் குழந்தை, கால்நடை மருத்துவர் கோபியுடன் பட்டினத்தில் வாழ்ந்து வந்தாள். சாமாவிற்கு வேறு திருமணம் செய்வித்து தாம்பத்ய நிறைவுடன் வாழ்கிறான்.
Title: இளையத் தலைமுறை
Post by: AnJaLi on March 24, 2019, 06:59:05 pm
காதலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களது படிப்பிற்கும் பெற்றோருக்கும் கொடுக்கத்தவரும் இளைய சமுதாயத்தினர் மீது பேராசிரியர் சுரேஷுக்கு எப்போதுமே தீராத வெறுப்பு, தனது ஒரே மகன் விக்ரமும் அவனுடைய நண்பர்கள் கூட்டமும் கூட இதே வகையைச் சார்ந்தவர்கள் தான், சுரேஷ் எப்போதும் தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை மீண்டும் ஞாபகப்படுத்தி பார்ப்பதுண்டு சுரேஷின் தகப்பனாருக்கு அரிசி மொத்த வியாபாரம், பள்ளி விடுமுறை நாட்களில், சமயம் கிடைக்கும்போதெல்லாம் தனது தகப்பனின் அரிசிமண்டிக்கு சென்று தகப்பனாருக்கு உதவி செய்ய முயலும் போதெல்லாம் அவனது தகப்பனார் 'இந்த வேலையெல்லாம் நீ கத்துகிட்டு வருங்காலத்துல கஷ்ட பட வேண்டாம், நிறைய படிச்சிட்டு பெரிய உத்தியோகம் பார்க்கணும்' என்று சொல்லுவார்.

பள்ளிக் காதலோ கல்லூரிக் காதலோ சுரேஷை பாதிக்கவில்லை, படிப்பில் படுகெட்டிக்காரன், அவனது நண்பன் ஆனந்தும் சுரேஷைப் போன்ற விருப்பு வெறுப்பு என்று எல்லா குணங்களிலும் மிகவும் ஒத்து போகும் நண்பன், இருவரும் சேர்ந்தே பள்ளி கல்லூரி படிப்பை முடித்தனர், வேலை கிடைத்த போது இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் வேலை கிடைத்தது சந்தர்ப்பம் கிடைத்த போது அடிக்கடி சந்தித்தும் வந்தனர், சுரேஷ் வட நாட்டிலிருந்த பல்கலைகழகத்தில் வேலை மாற்றிக்கொண்டு சென்ற பின்னர் இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பது இயலாமல் போனது.

தன் மகனின் நான்கு வருட படிப்பு முடிந்தவுடன் தனது நண்பன் ஆனந்த் பணிபுரியும் கல்லூரிக்கு விண்ணப்பித்து பேராசிரியராக நியமனம் கிடைத்த பின் ஆனந்தை பார்த்து தானும் அதே கல்லூரியில் பணி புரியப் போகும் சந்தோஷத்தை தெரிவிப்பதற்கு நண்பனின் வீட்டிற்கு வந்தான் சுரேஷ். சுரேஷ் ஆனந்தின் வீட்டிற்கு வரும்போது வழியில் அதிக வருடங்கள் கழித்து சந்திக்கப் போகும் தனது உயிர் நண்பன் ஆனந்த் தன்னை கண்டதும் சந்தோஷத்தில் மகிழ்ந்து விடுவான் என்று நினைத்து கொண்டு அவனது வீட்டையடைந்தான், அச்சமயம் ஆனந்த் அவனது தோட்டத்திலிருந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான், ஆனந்தின் முகத்தில் சோக இருள், சற்றும் சிரிப்பே இல்லாத வெளிறிய முகம் கண்ட போது உடல் நலமின்மையால் ஆனந்தின் முகம் மாருபட்டுள்ளதோ என்று நினைத்து உடல் நலமில்லையா என்றான் சுரேஷ். அதற்க்கு பதிலேதும் கூறாத நண்பனின் மௌனம் சுரேஷுக்கு வியப்பை கொடுத்தது.

தோட்டத்திலிருந்த நாற்காலிகளில் அமர்ந்த இருவருக்கும் ஆனந்தின் பழைய சமையற்காரன் முருகன் தேநீர் எடுத்து வந்தான், தேநீரை வைத்த முருகன் சுரேஷைப் பார்த்து 'ஐயா, சொவ்கியங்களா, வீட்ல எல்லாரும் சவுக்கியமா' என்றான், 'நாங்கள் சவுக்கியம் முருகா நீயும் உன் வீட்டாரும் சவுக்கியமா' என்று பதிலுக்கு விசாரித்தான் சுரேஷ். திரும்பிச் செல்ல இருந்த முருகனிடம் 'ஐயாவுக்கும் சேர்த்து இரவு சாப்பாடு தயார் பண்ணிடு முருகா' என்றான் ஆனந்த்.

இடைப்பட்ட காலத்தில் ஆனந்தை சந்திக்க இயலாமல் போனதன் விவரத்தை ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தான் சுரேஷ், இருட்ட ஆரம்பித்தது விளக்குகளை போட்டுவிட்டு இருவரும் வீட்டினுள்ளே சென்றனர், 'ஆமா, நான் வந்ததிலேர்ந்து சிஸ்டரையும் சுபாவையும் காணமே எங்காவது வெளில போயிருக்காங்களா' என்றான் சுரேஷ். 'வா' என்று சுரேஷை பார்த்து சொல்லிவிட்டு வீட்டினுள்ளிருந்த மாடிப்படிகளில் ஆனந்த் ஏற அவனை பின்தொடர்ந்தான் சுரேஷ்,

ஆனந்த் சுரேஷுடன் தனது இளமைக்கால நினைவுகளைப் பற்றி பேசும் போது தன் மனைவி சொரணாவையும் அழைத்து உட்கார வைத்து கேட்கச் சொல்லுவான், ஆனந்தின் மனைவி சொர்ணா நன்கு படித்தவர், தங்களது ஒரே மகள் சுபாவை வளர்ப்பதற்காக வேலைக்கு செல்லாமல் மகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தனர், சுபா படிப்பில் ஆனந்தைப் போலவும் சொர்ணவைப் போலவும் படு கெட்டிக்காரி. சுரேஷுடன் விளையாட்டாக பேசும்போதெல்லாம் 'நம்ம ரெண்டு பேரும் சம்பந்திகளாகிடலாண்டா' என்பான் ஆனந்த். மாடியிலிருந்த ஒரு படுக்கையறை சுபாவினுடையது மற்றது கணவனும் மனைவியும் உபயோகிப்பது, சுபாவின் படுக்கையறையின் கதவு பூட்டபட்டிருந்தது, அடுத்த படுக்கையறையில் ஆனந்தின் மனைவி கட்டிலில் படுத்திருந்தார்,

சுரேஷ் ஆனந்தின் காதுகளுக்கு மட்டும் கேட்க்கும் படி மெல்லிய குரலில் 'சிஸ்டருக்கு உடம்பு சரியில்லையா' என்றான், 'மெதுவா ஏண்டா பேசறே சத்தமா பேசினாக் கூட அவள் எழுந்துக்க மாட்டாடா' என்றான் அழுகையுடன் ஆனந்த், ஆனந்தின் தோள்களை தன் மீது இழுத்து அணைத்துக் கொண்டு ஏண்டா என்னடா ஆச்சு சிஸ்டருக்கு என்றான் சுரேஷ், சுரேஷின் குரலில் தடுமாற்றம். ஆனந்த் பதில் சொல்லவே இயலாமல் குமுறி அழுதான், அவனை மேலும் வருத்தப்பட வைப்பதற்கு பிடிக்காமல் மீண்டும் மாடியை விட்டு இருவரும் கீழே வந்தனர்.

இரவு உணவை முடித்துவிட்டு இருவரும் படுக்கைக்குச் சென்றனர், அடுத்த நாள் காலை எழுந்த போது படுக்கையில் ஆனந்தைக் காணவில்லை, முருகன் ஓடிவந்தான், 'ஐயா டவல் இந்தாங்க சோப்பு குளியலறையில வச்சிருக்கேன்' என்றான், முருகனிடம் 'எங்கே ஆனந்த்' என்று கேட்டான் சுரேஷ், 'ஐயா காலைல நடக்கபோயிட்டு வருவாருங்க ஐயா வர கொஞ்சம் நேரமாகும் குளிச்சிட்டு வந்து நீங்க காலை உணவை சாப்பிடுங்க' என்றான் முருகன். குளித்து வந்த போது மணி எட்டு ஆகிவிட்டிருந்தது, காலையுணவை முடித்து விட்டு 'என்ன முருகா சொர்ணா சிஸ்டருக்கு எப்படி இந்த நிலைமையாச்சு' என்றான்.

ஐயா உங்களுக்கு எதுவுமே சொல்லலையாங்க, நம்ம சின்னம்மா சுபா வெளிநாட்டுக்கு மேல் படிப்புக்கு போனது தெரியுமாங்க என்றான், இல்லை தெரியாதே என்றான் சுரேஷ், சின்னம்மா வெளிநாட்டுக்கு படிக்க போனாங்க அங்கே அவங்க கூட படிச்சுகிட்டிருந்த பையனோட கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு தன்னோட அப்பா அம்மாவுக்கு போன் செய்து தெரிவிச்சாங்க, உடனே இவங்க ரெண்டு பேரும் கெளம்பி சின்னம்மா இருந்த நாட்டுக்கு அந்த பையன் யாரு என்னனு பார்க்கறதுக்கு போனாங்க, அங்கே போனப்போ சின்னம்மாவோட கூட படிச்சிக்கிட்டிருந்த சிலர் கிட்ட விசாரிச்சப்ப சின்னம்மாவும் அந்த பையனோடசேர்ந்து போதை பழக்கத்துக்கு அடிமையாகிடாங்கன்னு தெரிய வந்தது,

உடனே கிளம்பி இந்தியாவுக்கு போயிடலாம்முன்னு சின்னம்மாவை இவங்க ரெண்டு பேரும் வற்புறுத்தி இருக்காங்க, நான் வாழ்த்தாலும் செத்தாலும் அந்த பையனோடத்தான் இருப்பேன்னு சின்னம்மா பிடிவாதமா வெளி நாட்டுலேயே இருந்துட்டாங்க, இவங்க ரெண்டு பேரும் ஊருக்கு திரும்பிட்டாங்க, சில மாசங்களுக்கு அப்புறம் சின்னம்மா போதையில கார் ஓட்டிக்கிட்டு போயி விபத்துல இறந்துட்டாங்கன்னு செய்தி வந்தது, அப்போ அம்மாவுக்கு உடல் நிலை ரொம்ப மோசமா பாதிப்பு அடைஞ்சது, மருத்துவமனையில சேர்த்தாங்க, அங்கே இரண்டு மூணு மாசம் இருந்தாங்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்தப்ப அம்மாவுக்கு நினைவே இல்ல, கோமாவுலேயே படுக்கையா கெடக்குறாங்க, உயிர் மட்டும் இருக்கு, ஐயா உடைஞ்சு போயிட்டாரு .......

தூரத்தில் கேட்டை திறந்து கொண்டு ஆனந்த் வீட்டினுள்ளே வருவது தெரிந்தது, என்ன முருகா ஐயாவுக்கு டிபன் சாப்பிட கொடுத்தியா என்றான் ஆனந்த், சுரேஷைப் பார்த்து நீயும் எங்க கல்லூரியில ஜாயின் பண்ண போறதா கேள்விபட்டேண்டா சுரேஷ், அதைச் சொல்லும் போது ஆனந்தின் கண்களில் லேசாக தெம்பு தெரிந்தது, நான் நெனைச்சது போல நம்ம சம்பதிங்களாக முடியாது உன்னோட பையனையும் மனைவியையும் கூட்டிட்டு அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்துடுடா என்றான் ஆனந்த்.

ஆனந்தின் வீட்டைவிட்டு வெளியேறும் போது சுரேஷின் மனதில் சுமையும் சோகமும் நெஞ்சை நிறைத்திருந்தது
Title: கண்ணன் என் காதலன்
Post by: AnJaLi on March 24, 2019, 07:02:39 pm
ஆனந்திற்கும் உமாவிற்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது, இரண்டு ஆண்டுகள் முடிந்தது போன்று இல்லாமல் மிகவும் நெருக்கத்துடனும் அன்யோன்யத்துடனும் இருந்து வந்தனர், உமாவின் அக்காள் கணவன் சுரேஷ் விற்பனை அதிகாரியாக தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தான், அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம், ஒரு முறை பெங்களுருவிற்கு சென்றிருந்தபோது ஆனந்தை தற்ச்செயலாக ஒரு இளம் பெண்ணுடன் பார்த்தான், பார்த்தவுடன் சந்தேகம் எழவில்லை, அப்படியே சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும் அதை உடனடியாக தனது மனைவியிடம் தெரிவிக்கவேண்டாம் என்ற முடிவில் இருந்தான் சுரேஷ், அதற்க்கு காரணம் தனது மாமனார் உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாலும் ஆனந்திற்கும் உமாவிற்கும் திருமணமாகி ஒருவருடம் மட்டுமே ஆகி இருந்ததால் குடும்பத்தில் கலவரங்களை உண்டாக்க சுரேஷ் விரும்பவில்லை.

ஆனால் இன்னொரு வருடமும் கடந்துவிட்ட நிலையில் மற்றொருநாள் சென்னையில் ஜனத்திரள் நிறைந்து கிடக்கும் ஒரு வீதியில் ஆனந்தையும் அதே இளம் பெண்ணையும் மறுபடியும் சேர்ந்து பார்த்த போது இதைப்பற்றி முதலில் ஆனந்திடம் விசாரிப்பதா தனது மனைவி மூலம் உமாவிற்கு தெரியப்படுத்துவதா என்ற கேள்வி அவனுள் எழுந்தது. சரியான முடிவிற்கு வர இயலாமல் அவர்களை பின் தொடர்வதென முடிவிற்கு வந்தான் சுரேஷ்.

ஆட்டோ ஒன்றில் ஏறிய இருவரையும் மற்றொரு ஆட்டோவில் பின்தொடர்ந்தான், அவர்கள் சென்ற ஆட்டோ அடையாற்றிலுள்ள ஒரு வீதியில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் எதிரில் சென்று நின்றது, வெளியே இறங்கிய இருவரும் ஒன்றாக அடுக்குமாடி குடியிருப்பினுள் சென்று மறைந்தனர். இவர்களை பற்றிய தகவல்களை எப்படி யாரிடம் கேட்டு தெரிந்துகொள்வதென்று தெரியாமல் சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தவன் அந்த அடுக்குமாடியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சற்று வயதான ஆள் ஒருவர் சற்று தொலைவில் நிருத்தபட்டிருக்கும் நடமாடும் துணிகளை சுருக்கம் நீக்கும் இரும்பு பெட்டியுடன் நின்றிருந்த இரண்டு சக்கர வண்டியை வந்தடைந்தார்.

அவரிடம் சென்று அடுக்குமாடியைப் பற்றிய விவரங்களை கேட்டறிய முற்பட்ட போது அந்த ஆள் சற்று கோபமடைந்தவராக சுரேஷை ஏற இறங்க பார்த்தார், சுரேஷுக்கு ஒரு நிமிடம் தனது அவசரத்தின் மீது வெட்கம் ஏற்ப்பட்டது, மறுபடியும் சில துணிகளை எடுத்துக்கொண்டு அந்த ஆள் வேறு ஒரு வீட்டை நோக்கி நடக்கலானார், அந்த இருசக்கர வண்டியின் அருகே உட்கார்ந்திருந்த வயதான பெண் சுரேஷை கவனிக்காதவள் போல் உட்கார்ந்திருந்தாள் அவள் வயதான ஆசாமியின் மனைவியாக இருக்ககூடும் என்று யோசித்த வண்ணம், அம்மா அந்த அப்பார்ட்மென்ட்ல இப்போ உள்ள போனாங்களே அவங்கள பத்தி ஏதாவது தெரிஞ்சா சொல்லமுடியுமா என்றான்.

கிழவி சிறிது நேரத்திற்குப் பின் சுரேஷை நிமிர்ந்து பார்த்துவிட்டு தெரியாது என்றாள். அடுத்தது என்ன செய்வது என யோசிக்க முடியாமல் அன்றைய அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவதற்குள் எப்போதும் போல இரவு மணி பத்தை தாண்டிவிட்டிருந்தது. அவனுக்கு இரவு உணவு பரிமாறுவதற்கு வந்த அவன் மனைவியிடம் ஒரு முக்கிய விஷயம் உன்னிடம் சொல்ல வேண்டும் என்றான். முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம் என்று சொல்லிவிட்டு தானும் தட்டில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் துவங்கினாள் சுரேஷின் மனைவி சாரு.

ஒரு வருடத்திற்கு முன்னர் பெங்களுருவில் தான் பார்த்த அதே பெண்ணுடன் இன்றும் ஆனந்தை சேர்த்து பார்த்தவற்றை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான் சுரேஷ், இதை உமாவிடம் எப்படி சொல்லுவது, ஆனந்தும் உமாவும் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வருவதைப் பற்றி யாவரும் அறிந்திருக்கும் போது இது எப்படி சாத்தியம் என்பது போன்ற விவாதங்கள் இருவருக்கும் ஏற்ப்பட்டது. சுரேஷும் சாருவும் சேர்ந்து ஒரு முடிவிற்கு வந்தனர்.

அன்று ஞாயிற்று கிழமை மணி காலை ஒன்பது, அடையாற்றிலிருந்த அடுக்குமாடியில் எந்த வீட்டில் அந்த பெண் வசிக்கிறாள் அவள் பெயர் என்ன என்பது போன்ற விவரங்கள் ஏதும் தெரியாத நிலையில் ஒவ்வொரு வீடாகச்சென்று அழைப்புமணியை தட்டிவிட்டு வெளியே காத்திருந்தனர், முதல் மாடியில் மூன்றாவது வீட்டில் அதே பெண் கதவை திறந்தாள், லேசாக சாருவிடம் சமிஞை செய்தான் சுரேஷ். குடும்ப அட்டைகளை சரி பார்க்க வந்திருப்பதாக சொல்லிவிட்டு அவளது பெயர் கணவர் அல்லது பாதுகாப்பவர் பெயர் போன்ற விவரங்களை அவளிடம் விசாரித்த போது அந்த பெண் தனக்கு குடும்ப அட்டை பெங்களூருவில் இருப்பதாகவும் அதை முறைப்படி மாற்றிக்கொள்ள தேவைபட்டால் மாற்றிகொள்வதாகவும் தெரிவித்துவிட அவளது பெயரைக் கூட தெரிந்து கொள்வதற்கு இயலாமல் திரும்பிவிட்டனர் சுரேஷும் சாருவும்.

இத்தனை அழகியப் பெண் இவளுடன் ஆனந்திற்கு மறைவான தொடர்பு இருக்க வாய்ப்புகள் உண்டு என்று ஊகித்து வீடு திரும்பும் வழியில் உமாவின் வீட்டிற்கு சென்றனர். சாருவிற்கு உமாவையும் ஆனந்தையும் பார்த்த போது உள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த பெண் விவகாரம் அடிக்கடி நினைவில் வந்து இயல்பாக பேச விடாமல் தடுத்து தடுமாறச் செய்தது. உமா கொடுத்த காப்பியைமட்டும் அருந்திவிட்டு ஆனந்தின் எதிரே உமாவிடம் ரகசியத்தை சொல்ல இயலாமல் வீடு திரும்பினர்.

சுரேஷிற்கு மனதில் குழப்பம் இன்று எப்படியாவது அதை தீர்த்து விடுவது என்ற முடிவில் நேரே அடையாற்றிலிருந்த அடுக்குமாடி வீட்டை சென்றடைந்து மணியை அழுத்திவிட்டு காத்திருந்தான், அதே பெண் வந்து கதவைத் திறந்தாள், உங்களிடம் ஒரு முக்கிய விஷயம் விசாரிக்க வேண்டும் என்றான், உள்ளே வாங்களேன் என்றாள், உள்ளேச் சென்றவன் அதிர்ச்சியில் உறைந்து போனான், சுவற்றில் ஆனந்தும் அந்த பெண்ணும் கணவன் மனைவி போன்று நெருங்கி நிற்கும் புகைப்படங்கள்.

உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா என்றான், எடுத்த எடுப்பிலேயே அவசரம் தொனித்தது சுரேஷின் குரலில், என் பெயர் ஷீலா. திருமணமாகிவிட்டதா, இல்லை, புகைப் படங்களில் உங்களுடன் இருப்பது உங்கள் கணவரா அல்லது, கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம், அதற்க்கு ஷீலா பரவாயில்லை, அவர் எனது நண்பர் என்றாள், உடனே சுரேஷ் புகைப்படத்தைப்பார்த்தால் அப்படித் தெரியவில்லையே என்றான்.

அவள் சற்றும் தாமதிக்காமல் நீங்கள் நினைப்பது போல்தான், அவர் என் காதலனும் கூட என்றாள், அதற்க்கு சுரேஷ் அவருக்கு திருமணமாகி மனைவி இருப்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்றான். தெரியுமே என்றாள் ஷீலா. அவர் மனைவிக்குத் தெரிந்தால் என்னவாகும் என்று தெரியுமா உங்களுக்கு என்றான் சுரேஷ். ஷீலா அதற்க்கு பதிலேதும் பேசவில்லை, கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியே வந்து நேரே ஆனந்தின் அலுவலகம் நோக்கி விரைந்தான்.

ஆனந்தின் அலுவலகத்தை அடைந்த போது ஆனந்த் சுரேஷை வரவேற்க்கதயாராக இருந்ததுபோல் இருந்தான், ஷீலா தொலைபேசியில் ஆனந்திடம் இதைப்பற்றி தெரிவித்திருக்க கூடும் என்று அனுமானித்தான் சுரேஷ். அலுவலகத்தின் வேறு பக்கத்தில் இருந்த விசிட்டர் அறையில் இருவரும் சென்று அமர்ந்தனர், ஷீலாவுடன் ஆனந்தை தான் பார்த்த எல்லா விவரத்தையும் கூறி உமாவின் வாழ்க்கை பிரச்சினையை தட்டி கேட்க தான் இருப்பதாக எச்சரிக்கை செய்தான், ஆனந்த் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அலுவலகத்தில் சொந்த பிரச்சினைகளைப் பற்றி பேச தான் விரும்பவில்லை என்று சொல்லி சுரேஷை திருப்பி அனுப்பி விட்டான்.

தனது மனைவி சாருவிடம் கலந்தாலோசித்து, பிரச்சினையை உமாவிடமே விட்டுவிடுவது நல்லது என்று இருவரும் கைபேசியில் உமாவிடம் நடந்தவற்றைப் பற்றி விவரமாக சொல்லி ஆனந்திடம் பொறுமையாக விசாரிக்கச் சொன்னார்கள். உமாவிற்கு ஆச்சரியம், ஷீலா என்ற பெண்ணுடன் ஆனந்திற்கு உறவு இருப்பதற்கு வாய்ப்பே இருக்க முடியாது என்று உறுதியாக நம்பினாள். ஆனந்த் அன்று வீட்டிற்கு வந்து இரவு சாப்பிட்டு முடித்த பின் ஷீலாவைப்பற்றி விசாரித்தாள் உமா. ஆனந்த் உமாவிடம் தன் மீது சந்தேகம் உள்ளதா தான் அப்படியொரு பெண்ணிடம் பழகும் குணம் உள்ளவனா என்று கேட்டான். இதுவரையில் ஆனந்தை தான் முழுமையாக நம்பி வந்ததாகவும் சொன்னாள் உமா, தனது வாழ்க்கையில் எதையும் உமாவிடம் மறைத்ததே கிடையாது என்று சொன்னான் ஆனந்த்.

அப்படியென்றால் தனது அக்காவும் அவளது கணவனும் பார்த்த ஷீலா என்ற பெண் யார் என்று கேட்டாள் உமா. தன்னுடன் ஒன்றாக படித்த தனது பால்ய வயது முதல் தனக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதன் கண்ணன் என்றான் ஆனந்த்.
Title: சந்தேகம்
Post by: AnJaLi on March 24, 2019, 07:04:25 pm
அமுதாவிற்கு அன்று தூக்கம் பிடிக்கவில்லை, மாடியில் தன் படுக்கையறையில் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள், ஜன்னலிலிருந்து பார்த்தால் அடுத்த வீட்டு மதிர்ச் சுவரும் கேட்டும் தெரிந்தது,

மதிற்சுவர் மீது யாரோ ஒருவன் தொற்றி ஏறி சுவற்றின் மீது கயிற்றின் மீது நடப்பவன் போல மெதுவாக நடந்து வீட்டை நோக்கி செல்வது தெரிந்தது. இரவு மணி பனிரெண்டு ஆக போகிறது இந்த நடு நிசியில் மதிர்ச் சுவற்றின் மீது நடப்பது திருடனாகத்தான் இருக்கும், அடுத்த வீட்டின் தொலைபேசி எண் அமுதாவிற்கு தெரிந்திருக்கவில்லை.

நகர்ப்புற வாழ்க்கை என்பதால் அடுத்த வீட்டுக்காரர்களின் உறவு அவ்வளவாய் இருப்பதில்லை, இந்த நடு இரவில் அவர்களை எப்படி தொடர்பு கொள்வது, உள்ளே போனவன் அதே வழியாகத்தானே திரும்பி வருவான், வரட்டும் உற்று பார்க்கலாம், உள்ளே போனவன் திரும்ப வரவே இல்லை, மணி இரவு ஒன்றாகி விட்டது, உறக்கம் வரவே அமுதா தூங்கி விட்டாள்.

அடுத்த நாள் மாலை அடுத்த வீட்டிலிருந்து யாராவது வெளியில் வந்தால் தான் பார்த்ததை அவர்களிடம் சொல்லலாம் என்று ஜன்னல் வழியே அடுத்த வீட்டையே பார்த்து கொண்டிருந்தவள், அங்கே வேலைக்காரி வீட்டின் வாசலை துடப்பத்தால் சுத்தம் செய்து கோலம் போட்டு முடிக்கும் வரை மதிர்ச் சுவற்றின் அருகில் சென்று காத்திருந்தாள்.

அம்மா..... அம்மா ...

அமுதாவை நிமிர்ந்து பார்த்த அடுத்த வீட்டு வேலைக்காரி அவளை நோக்கி வந்தாள்.

'என்ன' என்று கேட்ப்பது போல அமுதாவை பார்த்தாள்.

இந்த வீட்டுகாரம்மா வீட்டுல இப்போ இருக்காங்களா

இருக்காங்கம்மா

நாயெல்லாம் கட்டி போட்டுத்தானே இருக்கு

ஆமாம்மா

சரி நானும் உன்னோடயே வரேன் நீ அங்கேயே இரு

அடுத்த வீட்டின் அம்மாவிடம் தான் நேற்று இரவு பார்த்ததை சொல்லும் போது அந்த அம்மாவின் முகத்தில் ஒரு வித கலவரம் தெரிந்தது. நாற்காலியை விட்டு எழுந்து ' அப்போ நான் வரேன்..... என்று சொல்லிக்கொண்டே எழுந்தாள் அமுதா.

இருங்க காப்பி சாப்பிட்டுட்டு போகலாம்.......என்றார் அடுத்த வீட்டு அம்மா.

இல்லம்மா , இன்னொரு நாள் நான் வரேன்

போலீசுக்குத்தான் புகார் குடுக்கணும்......என்று சொல்லிக்கொண்டே அந்த அம்மா அமுதாவுடன் நடந்து வீட்டின் கேட்டுவரை வந்து, ' சமயம் கிடைக்கும் போது எங்க வீட்டுக்கு வாங்கோ' என்று சொல்லிவிட்டு அமுதா அவள் வீட்டிற்குள் போகும் வரை கேட்டினருகே நின்றிருந்து வழியனுப்பியபின் அடுத்தவீட்டு அம்மா அவர்கள் வீட்டிற்குள் சென்று விட்டார்.

* * * * *

அடுத்த நாள் மாலை அடுத்த வீட்டு வேலைக்காரி அமுதாவின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தாள். கதவை திறந்த அமுதா

என்னம்மா

அம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணம்

சொல்லு

நேத்து நீங்க எங்க வீட்டு எசமானி அம்மா கிட்ட பேசினதை கேட்டுட்டு இருந்தேன், எனக்கு நீங்க இத பத்தி பேசத்தான் எங்க வீட்டு எசமானி அம்மாவை பார்க்க வரீங்கன்னு தெரியாம போச்சு

.............................

அது வந்துங்க, வேலைகாரிகளை சிபாரிசு செய்யற கம்பனியில இருந்து என்னை கூட்டிட்டு வந்து இருகாங்க, கம்பனி ஒப்பந்தப்படி வேலைக்கு வரவுங்களுக்கு உடம்புக்கு சர்க்கரை இரத்த அழுத்த நோயெல்லாம் இருந்தா வேலைக்கு சிபாரிசு செய்யறதில்லைங்க, அது மட்டுமில்ல, வேலை செய்யறவங்க வீட்டுக்கு தேடிக்கிட்டு சொந்தகாரங்க யாரும் வரக்கூடாது,

.............................

எனக்கு ஐம்பத்து வயசாகுதுங்க, இரத்த கொதிப்பு சர்க்கர நோய் எல்லாமே இருக்கு, அதனால என்னோட மகன் மாசத்துல ஒரு தரம் மாத்திரை வாங்கிட்டு வந்து எனக்கு குடுத்திட்டு போவான், நான் ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் என்னோட கல்யாணம் ஆன மகளை போயி பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு டாக்டர பார்த்துட்டு வருவேனுங்க

.............................

வீட்டுல எல்லாரும் தூங்கிட்ட அப்புறம் என்னோட மகன் மதில் சுவத்து மேல ஏறி வந்து மாத்திரையை என் கிட்ட குடுத்துட்டு போவான். இந்த வீட்டுல நிறைய நாய்கள வேற வளக்குறாங்க, அவனுக்கு நாய் பயம் .......அத தான் நீங்க பார்த்து இருக்கீங்க.


அப்படின்னா வீட்டுக்குள்ள வந்த அவன் ஏன் திரும்பி வெளியே போகல

அவன் போகும் போது சில சமயம் வீட்டுக்கு பின்னால இருக்கிற சுவத்து மேல போயி பக்கத்துக்கு தெருவுக்கு போயிடுவாங்க.......சுவத்து மேல நடக்குறத யாராவது பார்த்துட்டா பிரச்சினை ஆயிடக்கூடாதுன்னு

...............................

எங்க வீட்டு எசமானியம்மா பார்த்துட போறாங்கன்னு பயந்து பயந்து மெதுவா வருவாங்க

இப்போ நான் என்ன பண்ணனும்ன்னு சொல்லு

என்னோட மகன் வருவது அவங்களுக்கு தெரிஞ்சிட கூடாதுங்க

ம்.....ம்ம்.....

உன்னோட மகன் திரும்பவும் என்னைக்கு வருவான்?

வர பதினைஞ்சாம் தேதி வருவானுங்க

சரி நான் காத்திருந்து அவனை பார்த்து விவரத்தை அவன் கிட்ட சொல்லி உனக்கு வாங்கிட்டு வர மாத்திரைகளை வாங்கி வைக்கிறேன்............நீ வந்து வாங்கிட்டு போ

அம்மா......நான் அக்கம்பக்கத்து வீட்டுகாரங்க கிட்ட பேசுறது எங்க எசமானி அம்மாவுக்கு பிடிக்காதுங்க

சரி...........நான் அவங்க கிட்ட எதையும் சொல்ல மாட்டேன்.......நீ வெளியில வரும் போது வந்து வாங்கிட்டு போ

* * * * *

வேலைக்காரியின் மகனை அன்று இரவு பன்னிரண்டு மணிவரை காத்திருந்து மதில் சுவர் ஏறுவதற்கு முன் கையும் மெய்யுமாய் பிடித்து அவனிடம் நடந்ததை விவரமாய் சொல்லி மாத்திரைகளை வாங்கி கொண்டு வீட்டிற்குள் வந்த போது அமுதாவின் கணவன் கதவு திறக்கும் சப்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டான், இந்த அர்த்த ராத்திரியில் இவள் எங்கே வெளியில் போயிட்டு வருகிறாள் என்று யோசித்து கொண்டு அவள் படுக்கை அறைக்குள் வரும் வரை காத்திருந்தான்.

வீட்டினுள் வந்த அமுதா கதவை அடைத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் வந்ததும் அவள் கணவன் தூங்குவதைப் போல விழித்துக் கொண்டிருந்தான், அவனுக்கு தூக்கம் கெட்டது, நாளைக்கு பார்க்கலாம் இதைப் பற்றி ஏதாவது சொல்கிறாளா என்று காத்திருந்தான்.

நாட்கள் ஓடின, ஒரு நாள் அமுதாவின் கணவன் வீட்டில் இருந்த நேரம் வேலைக்காரியின் மகன் வந்து காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தான். வெளியில் நின்றிருந்த பையன் கையிலிருந்த மாத்திரை பொட்டலத்தை அவனிடம் நீட்டியபடி,

அம்மா இல்லீங்களா

யாரு நீ............எந்த அம்மாவ கேட்கிற

இந்த வீட்டுல இருப்பாங்களே .....அவுங்களத்தாங்க

நீ யாரு

நான் பக்கத்து வீட்டுல வேலை பாக்கற வேலைக்காரியோட மகனுங்க.......அம்மா கிட்ட இந்த மாத்திரை பொட்டலத்த குடுத்தா எங்க அம்மா கிட்ட குடுத்துடுவாங்க

நீயே கொண்டு போயி குடுக்க வேண்டியது தானே........எதுக்கு இங்க வந்து குடுக்கற

நடந்த கதையை முதலில் இருந்து வேலைக்காரியின் மகன் சொல்ல, மாத்திரை பொட்டலத்தை வாங்கி கொண்ட அமுதாவின் கணவன், மனதில் இருந்த சந்தேகத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தது நல்லதாக போனது என்று நினைத்துக் கொண்டான்.
Title: சோழியன் குடுமி சும்மா ஆடாது !!!!!!!
Post by: AnJaLi on March 25, 2019, 10:05:26 am
எருதூரில் வாழ்ந்து வந்த சோழியன் என்பவன் அதிகம் படிப்பறிவு இல்லாதவனாக இருந்தாலும் எதை செய்தாலும் அதற்க்கு ஒரு காரணம் இல்லாமல் செய்யமாட்டான் என்று அந்த ஊரில் உள்ள அனைவரும் நம்பினர். இதனால் அவனிடம் அந்த ஊரில் உள்ள பல படித்தவர்கள் உள்பட அனைவரும் அவனது செய்கைகளை கவனித்து வந்ததுடன், அந்த செய்கைகளுக்கு பெரிதும் மதிப்பளித்தும் வந்தனர்.

அந்த காலத்தில் எல்லோருமே குடுமி வைத்திருந்தனர், யாரோ ஒரு சிலர் மட்டுமே சதுரவட்டை என்று சொல்லக்கூடிய முடித்திருத்தம் செய்வது வழக்கம், சோழியனுக்கும் அவனது தந்தையை போலவே குடுமிதான். சோழியனுக்கு ஐந்து வயதிருக்கும் போது அவன் பெற்றோர் அவனை கூத்துப்பட்டறையில் சேர்த்து விட்டனர், இதற்க்கு காரணம் இவனது இரண்டு அக்காள்களும் நாட்டியம் பயின்று வந்ததுடன், அந்த காலத்து திண்ணைபள்ளிக்கூடம் சென்று வந்தனர், அவர்களிருவரும் திறைமைசாலிகள் என்றும் பெயரெடுத்து வந்தனர்.

சோழியனை திண்ணை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிய போது அவன் அங்கே படிக்காமல் விளையாடுவதும் சுட்டித்தனங்கள் செய்வதுமாக இருந்து வந்ததால் திண்ணை பள்ளிக்கூட வாத்தியார் அவனது பெற்றோரை வரச் சொல்லி, இவனுக்கு படிப்பில் ஆர்வமில்லை, அவன் மற்ற மாணவர்களையும் படிக்க விடாமல் குறும்புத்தனம் செய்கிறான், கண்டித்தாலும் செவி கொடுப்பதில்லை இதனால் அவனுக்கு வேறு எதில் ஆர்வமிருக்கிறதோ அதில் சேர்த்து விடுமாறு சொல்லி இனி திண்ணை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேண்டாம் என்றும் கூறி அனுப்பிவிட்டனர்.

அடுத்த ஊரிலிருந்த கூத்துப்பட்டறைக்கு சிறுவர்களை சேர்த்துகொள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோழியனை அங்கே சேர்த்துவிட்டனர். சோழியனுக்கு வேறு வழியில்லாமல் போகவே கூத்துப்பட்டறையில் சேர்ந்து காலம் ஓட்டி வந்தான், சோழியனை கூத்தில் சாமரம் வீசுவது இன்னும் பல வசனம் பேசாத வேடங்களில் நிற்க வைத்தனர், ஒருநாள் பாட்டு பாடும் சிறுவன் ஒருவனுக்கு காய்ச்சல் என்பதால் அந்த சிறுவனுக்கு பதில் அரிச்சந்திரன் கூத்தில் அச்சிறுவனின் வேடத்தில் இவனை நிறுத்திவிட்டு பின்னாலிருந்து இவனுக்கு பதில் வேறொரு பெரியவர் வசனம் பேசி சோழியனை அந்த பையனுடைய வேடத்தில் நிற்க வைத்து அன்றைய கூத்தை முடிக்க வேண்டியதாகிவிட்டது.

அந்த கூத்தை சோழியனின் ஊர் மக்களில் சிலரும் சோழியனின் பெற்றோரும் பார்த்ததிலிருந்து சோழியன் ஒரு நடிகனாகிவிட்டது போன்ற பரவசமடைந்தனர். சோழியன் வளர வளர, சிறு சிறு வேடங்கள் கொடுத்து கூத்து நடத்தி வந்தனர். சோழியனின் அம்மாவிற்கு உடல் நலம் சரியின்றி போனதாலும் சோழியனின் தமக்கைகள் இருவருக்கும் திருமணமாகி அவர்கள் கணவன் வீட்டிற்கு சென்றுவிட்டதால் வீட்டில் துணைக்கு வேறு ஆள் இல்லை என்ற காரணமும் சோழியனை நிரந்தரமாக கூத்து பட்டறையிலிருந்து கூட்டி வந்து வீட்டில் அவனுடைய பெற்றோர் அவனை தங்களுடனேயே வைத்துக்கொண்டனர்.

சோழியன் ஆற்றிலோ குளத்திலோ கிணற்றிலோ குளித்து முடித்து விட்டு தன்தலை முடியை உலர்த்தி கொண்டு நின்று கொண்டிருக்கும் சமயங்களிலும், மற்ற பல சமயங்களிலும் தான் கற்றுக்கொண்ட கூத்தை நினைவு படுத்திகொள்வான், தன்னை மறந்து அந்த கூத்தின் கதாபாத்திரங்களின் நினைவில் ஒன்றி விடுவான், அப்போது அவன் தனது தலையை ஆட்டி ஆட்டி வசனங்களையும் பாடல்களையும் தனக்குத் தானே சொல்லி கொள்வான், அப்போது அவனது தலைகுடுமி ஆடி கொண்டே இருக்கும், அவனிடம் அவனது குடுமி ஆடுவதற்கு காரணம் கேட்ட சிலரிடம் ' நான் கூத்துப் பட்டறையில் கற்றுக்கொண்ட முழுவதும் உங்களுக்கு சொல்லி விளக்க முடியாது, அதனால் என் குடுமி ஆடினால் அதற்க்கு ஒரு காரணமிருக்கும்' என்பானாம். சோழியனின் குடுமி ஆடினால் கிராம மக்கள் சோழியன் எதைசெய்தாலும் அதற்க்கு ஒரு காரணம் இருக்கும் அவனது குடுமி ஆடினால் கூட அதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்து கொள்வார்களாம்,

அதனால் சோழியனின் குடுமி காற்றில் ஆடினால் கூட நிச்சயம் அதற்கொரு காரணமிருக்கும் என்று ' சோழியன் குடுமி சும்மா ஆடாது 'என்ற வழக்கு வந்ததாக கதை.

Title: தத்ரூபம்
Post by: AnJaLi on March 25, 2019, 10:07:14 am
மோகனும் மீனாவும் திருமணமாகிய புதிய தம்பதிகள் ஆனால் மோகனுக்கு முடித்து கொடுக்கவேண்டிய வேலைகள் நிமித்தமாக இரவு பகலென்று பாராமல் உழைத்தாக வேண்டியிருந்தது, வெளிநாட்டு நிறுவனத்தில் வேலையென்பதால் பெரும்பாலும் மோகனுக்கு இரவு நேர வேலைகள் இருப்பது வழக்கம். மோகனின் மனைவி மீனா, இளம் வயது, நல்ல நிறம், காண்போரைக் கவரும் கவர்ச்சி, பேசும் கண்கள், மிதமான உயரம், மெல்லிய உடல் வாகு, கல்லூரியில் பொறியல் படித்து முடித்தவுடன் திருமணமும் முடிந்தது.

மீனாவை பார்ப்பவர்கள் கண்களை அகற்ற சிறிது அவகாசம் தேவைப்படும். மீனாவுடன் படித்த குமரனுக்கு மீனாவை அடையாமல் விட மனதில்லை, யாரிடமும் சிக்காமல் கல்லூரியை முடித்து வந்துவிட்டாலும் குமரன் அவளை துரத்துவது தொடர்கதையாகி வந்தது, மீனாவின் புகுந்த வீட்டின் விலாசத்தை எப்படியோ அறிந்து கொண்டு தவறாமல் தொலைபேசியில் பயமுறுத்துவது வாடிக்கையாகிப் போனது, அன்றும் அப்படித்தான் அவன் தொலைபேசியில் மீனாவிடம் 'உன் புருஷன் இன்னைக்கு இரவு வேலைக்குச் சென்றுவிட்டான், சரியாக இரவு பத்துமணிக்கு உன் வீட்டு வாசலில் வந்து கதவை தட்டுவேன், நீ திறந்தாகவேண்டும் திறக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை ஏற்க்கனவே சொல்லிவிட்டேன், நினைவில் வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

இரவு மணி பத்து, இடி மின்னல் பெருமழை ஓயாமல் அடித்துக்கொண்டிருந்தது, தெருவில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது, சொன்னபடி மீனாவின் வீட்டின் வாயிலில் வந்து நின்ற குமரன் கால்களிலிருந்த செருப்பை கழற்றிவிட்டு கதவை லேசாக தட்டுவதற்கு கதவில் கையை வைத்தவுடன் கதவு திறந்து கிடப்பதை கவனித்தான் மீனாவின் புத்திசாலித்தனத்தை நினைத்து அவனுக்கு சிரிப்பு வந்தது, கதவை திறந்து ஒரு அடி உள்ளே வைத்தவன் திடுக்கிட்டு அங்கேயே நின்றுவிட்டான், லேசாக கைகள் இரண்டும் அவனையறியாமல் நடுங்கியது.

ரத்தவெள்ளத்தில் உயிரற்ற உடலாக கிடந்தாள் மீனா, அங்கே நின்று நேரம் கடத்துவது ஆபத்து என அவன் மனம் எச்சரித்தது, தனது கை ரேகைகள் எங்காவது எதிலாவது படிந்துவிடக் கூடும் என்ற பயத்தில், திரும்பி பார்க்காமல் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாய் அந்த வீட்டைவிட்டு வெளியேறினான், யாரேனும் தன்னை கவனித்தார்களா என்று ஒருமுறை சுற்றிலும் பார்த்தபோது மழை வெள்ளம் கால்வாய்களில் ஓடிக்கொண்டிருந்தது, வீதியில் யாரும் தென்படவில்லை.

முழுமூச்சாக ஓடி தெருவிலே வந்தபோது அவனை உரசிக்கொண்டு வந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டு ரயில் நிலையத்தை வந்தடைந்து தான் செல்ல வேண்டிய ரயில் தயாராக நின்றிருக்கவில்லை என்றாலும் தயாராக நின்றிருந்த ரயிலுக்கு சீட்டு வாங்கிக்கொண்டு வண்டியில் ஏறி உட்கார்ந்த பின்னர் பத்து நிமிட நேரம் கழித்து ரயில் கிளம்பியது, ரயிலில் உட்கார்ந்திருந்த பத்து நிமிடங்களும் உள்ளத்தினுள் படபடப்பு.

ஒருவழியாக ரயில் கிளம்பிய பின்னர் தான் அந்த ரயில் ஏதோ ஊருக்குப் போவதை அவனால் உணர முடிந்தது. கண்ணிலிருந்து நீங்காத மீனாவின் அந்த கரு விழிகள் அவனை மீண்டும் மீண்டும் நினைவில் வந்து பயமுறுத்தியது. யாரோ தனக்கு முன்னர் வந்து எதற்காகவோ மீனாவை குத்தி கொன்று போட்டுவிட்டு போயிருப்பதை நினைத்தாலே தப்பித்தோம் பிழைத்தோம் என்றாகிவிட்டது குமரனுக்கு.

கடியாரத்தில் மணி பத்து அறைக்கு ஒரு மணி அடித்தவுடன் மீனா மெதுவாக எழுந்தாள், அவள் திட்டமிட்டபடியே சிகப்பு பேனாவிற்கு உபயோகிக்கும் மையை தன் மீதும் தரையிலே சிறிதும் ஊற்றி கொண்ட பின் கதவை லேசாக திறந்து வைத்துவிட்டு குமரன் அங்கு வந்து போகும் வரை அசையாமல் பிணம் போல கிடந்து, பார்ப்பவரை சிந்தனை செய்யவிடாமல் துரத்தியடிக்க அவள் போட்ட திட்டம் வெற்றிகரமாக முடிந்தது, இனி குமரன் என்ற காமுகனின் போராட்டம் நீங்கியது என்ற நிம்மதி அடைந்தாள் மீனா.
Title: குண்டக்கா மண்டக்கா
Post by: AnJaLi on March 25, 2019, 10:08:56 am
பரம்பரை சொத்து ஓடு வேய்ந்த நாலுகட்டு வீடு, தோட்டத்தில் தென்னை மரங்கள் சுமார் பத்து தேறும், முருங்கைமரம் கொய்யாமரம் மாமரம் என்று மனிதனுக்குத் தேவையான அத்தனை மரம் செடி கொடிகளும் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் உண்டு, தினம் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை பயிரிட்டுகொள்வதுடன் விவசாயம் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தத் தேவையான பத்து ஏக்கர் விளைநிலமும் நீர் பாய்ச்சலுக்கு குறைவில்லாத கிணறும் மாடசாமிக்கு உண்டு. மாடசாமியுடன் பிறந்த சகோதரி ஒருத்தியை அடுத்திருந்த கிராமத்தில் பள்ளிக்கூட வாத்தியாருக்கு சிறிய வயதிலேயே திருமணம் செய்வித்தனர் அவரது பெற்றோர், திருமணமாகிய அடுத்த வருடத்தில் பதினான்கே வயதான மாடசாமியின் தமக்கை ஒரு பெண் குழந்தையை பெற்ற பின் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத கிராமம் என்பதால் ஜன்னி ஏற்ப்பட்டு இறந்து போனாள். தமக்கை இறந்த பின்னர் அவள் பெற்றெடுத்தப் பெண் குழந்தை அவர்களது வீட்டிலேயே வளர்ந்து வந்தது, அவளது பெயர் துளசி.

துளசி வயதிற்கு வந்தவுடன் மாடசாமிக்கு திருமணம் செய்து தங்கள் வீட்டோடு வைத்துக் கொண்டனர் மாடசாமியின் பெற்றோர். சிறிய வயதிலேயே திருமணம் நடந்தி வைத்ததால் மாடசாமிக்கும் துளசிக்கும் வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது, ஒவ்வொரு பிரசவத்தின் போதும் நகரத்திலிருந்த தனியார் பிரசவ மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பிரசவம் பார்த்துவந்தனர், ஆறாவது வருடமும் துளசிக்கு பெண் குழந்தையே பிறந்த போது மருத்துவர் இனிமேல் துளசியின் உடல் நிலை பிரசவத்தை தாங்காது என்று கூறிவிட்டனர். ஒரே ஒரு ஆண் குழந்தை வேண்டும் பிறகு குழந்தை வேண்டாம் என்று நினைத்து பல தெய்வங்களை வேண்டிக் கொண்ட பின் ஏழாவது பிரசவத்தில் ஒரு மகன் பிறந்தது ஆனால் துளசியை பறி கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

குழந்தைகளை வளர்க்கும் பொருப்பு மாடசாமியின் பெற்றோருக்கு இருந்து வந்தது, சில வருடங்களில் மாடசாமியின் முதல் பெண் பனிரெண்டு வயதுடையவளான போது மற்ற குழந்தைகளின் சில வேலைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை அவளிடம் கொடுத்தனர், மாடசாமியின் மகனுக்கு அவனது மனைவியின் நினைவாக துளசிராம் என்று பெயரிட்டனர். துளசிராமிற்கு ஓரளவு கருத்து தெரிய ஆரம்பித்த போது அவனது ஆறு அக்காள்களும் அவனை மிகவும் அன்புடனும் ஆசையுடனும் பாதுகாத்து வந்தனர்,

தனது அக்காள்களை அக்காள் என்று ஒருவரைக் கூப்பிட்டால் எல்லோரும் ஓடி வருவார்கள், இதை கவனித்த துளசியின் தாத்தா ஒவ்வொருவரது பெயரிலிருக்கும் முதல் எழுத்தைச் சொல்லி அதனுடன் அக்காவையும் சேர்த்து கூப்பிடச் சொல்லி கொடுத்தார், அதன்படி ஒவ்வொரு அக்காளையும் அவர்களது பெயரில் வருகின்ற முதல் எழுத்துடன் அக்காவை சேர்த்து கூப்பிட்டு வந்தனர். துளசியும் அவனது அக்காள்களும் பள்ளிக்குச் செல்லும் போதும் விளையாடுமிடங்களிலும் கூட அதே போன்று சொல்லி கூப்பிடுவது வழக்கமாகியது.

'கு'னாக்கா, 'மா'னாக்கா என்று குழந்தைகள் ஒருவரையொருவர் அழைத்ததை கண்ட அந்த கிராமத்து மக்கள் இதென்ன 'குனாக்கா' மானாக்கா' என்று கூப்பிடுகின்றீர்களே என்று சொல்லி கேலி செய்தனர். இச்சொல்லானது அந்த கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு வார்த்தையை சொல்லுமிடத்தில் வேறு வார்த்தைகளை மாற்றி குறிப்பிட்டு பேசும் போது அதைச் சுட்டி காண்பிப்பதற்கு 'குனக்க மானக்க என்று பேசாதே' என்று சொல்லி வந்தனர், பிறகு அச்சொல் மருவி நாளடைவில் 'குண்டக்க' மண்டக்க' என்று மாற்றி சொல்லப்பட்டது. இதன் உண்மை காரணத்தை அறியாவர்களும் இந்த சொல்லை உபயோகிக்க ஆரம்பித்த போது 'குண்டக்கா மண்டக்கா' என்று மாறிபோயிற்று.
Title: நகை
Post by: AnJaLi on March 25, 2019, 10:10:19 am
கார் வேகமாக சென்று கொண்டிருந்தது, வெயலின் தாக்கத்தினால் தண்ணீர் குடித்தும் தாகம் தீராமல் மீண்டும் மீண்டும் தாகம் எடுத்துகொண்டிருந்தது தேவகிக்கு, சாலையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெட்டவெளி, அங்காங்கே ஒரு சில பனை மரங்களும் வேறு மரங்களும் மின்சார கம்பங்களும் வேகமாக பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஏதாவது சிறிய குக்கிராமங்கள் வந்த போது சிறிய தேநீர் கடைகளும் இன்னும் சிறிய கடைகளும் தென்பட்டது, ஓட்டுனர் பரமேஸ்வரன் வேலையில் சேர்ந்தபின்னர் முதல் முதலாக அவனுடன் சேர்ந்து மைசூரில் தங்கி படிக்கும் ஒரே மகளை பார்க்க சென்று கொண்டிருந்தாள் தேவகி, மாதம் ஒரு முறை தேவகி தனது மகளை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.

தேவகியின் பெயரில் பல சொந்த தொழில்கள் நடத்தி வந்தார் அவளது கணவர், கொள்ளை லாபம், சீக்கிரத்திலேயே அவர்களது அந்தஸ்த்து கோடீஸ்வரர்களாக மாற்றிவிட்டது, தேவகி சாதாரணமாக அணியும் மொத்த தங்க நகைகளின் மதிப்பு மட்டுமே சில பல கோடிகள் தேறும், அடிக்கடி கார் ஓட்டுனர்களை மாற்றிக்கொண்டு இருப்பது கணவன் மனைவியின் வழக்கம், அதிக பட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு ஓட்டுனர் என்கின்ற கணக்கில் இதுவரையில் தேவகி மற்றும் அவளது கணவருக்கு ஓட்டுனர்களாக வேலை செய்தவர்களின் பட்டியல் மிகவும் நீண்டது.

தேவகி பரமேஸ்வரனை கூப்பிட்டு வழியில் இளநீர் விற்பவரை பார்த்தால் வண்டியை நிறுத்திவிட்டு குடிப்பதற்கு இளநீர் வாங்க சொல்லி கட்டளை இட்டாள். பெங்களூருவை கார் நெருங்குகையில் நடுத்தர வயதில் ஒரு ஆண் இளநீர் விற்றுக் கொண்டிருந்தான், சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு இளநீர் வாங்கி வந்து தேவகியிடம் கொடுத்தான் பரமேஸ்வரன். ஓட்டுனர் தனது இருக்கையின் கீழே இருந்த தண்ணீர் நிரம்பிய குப்பியை எடுத்து குடித்தார். கைப்பையிலிருந்த நோட்டை எடுத்து இளநீருக்குக் பணத்தை கொடுத்துவிட்டு சில்லறையை வாங்கி கைப்பைக்குள் போட்ட பின்னர் கார் மறுபடியும் ஓடத் துவங்கியது.

பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் கார் ஓடிக்கொண்டிருந்தபோது சிறிது தொலைவில் வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தது காரை விட்டு இறங்கிய பரமேஸ்வரன் முன்னால் நின்றிருந்த கார் ஓட்டுனரிடம் எதனால் அந்த தேக்கநிலை என்பதை கேட்டறிந்தார், முன்னே சென்ற டாங்கர் லாரியும் சரக்கு எடுத்துச் சென்ற லாரியும் மோதிக்கொண்டதால் விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது, மைசூருக்கு காரில் செல்வதற்கு வேற்று சாலை வழியை கேட்டறிந்து மாற்றுப்பாதையில் காரை ஓட்டிக்கொண்டிருந்த போது அந்த சாலை தார் போடாமல் யாரும் புழங்காமல் இருந்ததால் வண்டி துக்கியடித்துக்கொண்டு போனபோது திடீரென்று காரின் முன் சக்கரம் பழுதடைந்தது, ஓட்டுனர் பரமேஸ்வரன் காரைவிட்டு இறங்கி வேறு சக்கரத்தை மாற்றி போடுவதற்குள் முழுவதுமாக இருட்டி விட்டது.

திடீரென்று காரின் முன்புறம் வந்து நின்ற சிலர் கையசைத்து காரை நிற்க்கச் சொன்னதும் நிறுத்திய ஓட்டுனரிடம் கதவைத் திறக்கச் சொல்லி முரட்டுக் குரல்கள் ஓலமிட்டது, என்ன செய்வதென்று விளங்காத ஓட்டுனர் விழித்துகொண்டிருந்த போது காரின் முன் விளக்கை தட்டி உடைக்க முற்ப்பட்டனர் அந்த முரடர்கள், ஓட்டுனர் கதவைத் திறந்தவுடன் இரண்டு பேர் ஓட்டுனரின் கை கால்களை கயிறுகளால் கட்டி போட்டுவிட்டு பின்னால் உட்கார்ந்திருந்த தேவகியின் நகைகளை பணத்தை கேட்டனர், அவர்களிடம் கூரிய ஆயுதங்கள் இருப்பதை காரின் முன் விளக்கில் கண்ட தேவகி கொடுக்காவிட்டால் கொன்றுவிட்டு நகை பணத்தை எடுத்து போவார்கள் என்பதை அறிந்து எல்லா நகைகளையும் பணத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டாள்.

அடுத்தநாள் காலை பொழுது விடியும் சமயம் அரைகுறை வெளிச்சத்தில் பரமேஸ்வரனின் கைகால் கட்டுகளை அவிழ்த்துவிட்டு மீண்டும் காரை ஒட்டிக்கொண்டு மைசூர் வந்து சேர்ந்தனர். பரமேஸ்வரன் தேவகியிடம் அங்கிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்கலாம் என்று சொன்ன போது தேவகி வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். மகளை பார்த்த பின் மறுபடியும் காரில் வீட்டை வந்தடைந்தாள் தேவகி. பரமேஸ்வரன் தேவகியின் வீட்டில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது.

ஒருநாள் காரின் உட்புறம் சுத்தம் செய்துக் கொண்டிருந்த பரமேஸ்வரன் கண்ணில் நல்ல கனமான தங்க நகை தென்பட்டது, இதை கொண்டுசென்று தேவகியிடம் கொடுப்பதா அல்லது அவர்களாகவே வந்து தேடும்போது கொடுப்பதா என்று யோசித்தபோது, அளவிற்கு அதிகமாக அவர்களிடம் இருப்பதால் தானோ நகையை கேழே விழும் அளவிற்கு அலட்சியமாக வைத்திருக்கின்றனர் என்று தோன்றியது, அதனால் அந்த நகையை திரும்ப கொடுக்காமலேயே பரமேஸ்வரன் தன்னிடமே வைத்துக் கொண்டார்.

தேவகியின் வீட்டின் ஓட்டுனர் வேலையிலிருந்து பரமேஸ்வரனை நீக்கி விட்டனர், பணத்திற்கு மிகவும் கஷ்டம் ஏற்படத் துவங்கியது, தேவகி வீட்டில் வேலை செய்தபோது கிடைத்த நகையின் நினைவு வந்தது. கடைக்கு எடுத்துச் சென்று அதன் எடையை அறிந்து விற்று பணமாக்க கடைக்காரரிடம் கொடுத்தபோது நகை வியாபாரி அந்த நகை தங்கமல்ல என்று கூறி திருப்பிக் கொடுத்துவிட்டார். அப்போதுதான் பரமேஸ்வரனுக்குப் புரிந்தது தேவகி திருடுபோன நகைகளையோ காணாமல் போன நகைகளையோ தேடுவதே கிடையாது ஏன் என்பது
Title: ரகசியம்
Post by: AnJaLi on March 25, 2019, 10:12:15 am
புதிய தனி வீடு என்பது சுகந்திக்கு கனவாகவே இருந்து வந்தது, முப்பது வருட தாம்பத்யத்திற்க்குப் பின் கனவு இல்லம் உண்மையாகியத்தில் அவளுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சியை குலைத்து விடுவது போன்ற செயல் ஒன்று நடந்து முடிந்தது, வீட்டை பூட்டிவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து திரும்பி வந்து பூட்டைத் திறக்க இருந்த போது கதவிலிருந்த பூட்டைக் காணவில்லை தாழ்ப்பாள் உருகுலைந்து காணப்பட்டது, ஏதோ விபரீதம் நடந்திருப்பதை அறிந்து வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையிலிருந்த பீரோ திறந்து கிடக்க அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகள் சிதறிக்கிடந்தது.

காவல்துறையில் உயர்ந்த பதவியிலிருக்கும் அவளது கணவனுக்கு கைபேசியில் அழைத்து நடந்தவற்றை சொன்னபோது, சுகந்தியின் குரலில் நடுக்கம், படபடப்பு. அவள் கணவன், பீரோவில் விலையுயர்ந்த பொருள், பணமும் ஒன்றும் வீட்டில் வைப்பதில்லையே பிறகு ஏன் இத்தனை பதட்டப்படுகிறாய் முதலில் அசுவாசப்படுத்திக்கொள் என்றார். இல்லை உடனே இதை பதிவு செய்து கைரேகை எடுக்கவும் மோப்ப நாய் அனுப்பவும் ஏற்பாடு செய்யுங்கள் என்றாள் சுகந்தி. பீரோவில் என்ன பொருள் காணாமல் போனது என்று கேட்டால் என்ன சொல்ல முடியும், முதலில் நீ உன்னை அசுவாசப்படுத்திக் கொள் என்றார்.

என்னை என்னால் அசுவாசப்படுத்திக் கொள்வதற்கு முடியவில்லை உடனே ஆட்களை அனுப்புங்கள், என் தலையே வெடித்துச் சிதறிவிடும் போல இருக்கிறது என்றாள் சுகந்தி பிடிவாதமாக. ஆட்களை அனுப்புவது என்பதைவிட அவர்களிடம் என்னவென்று புகார் கொடுக்கப் போகிறோம் என்பதையும் நாம் தயாராக வைத்திருக்கவேண்டும் அல்லவா என்றார், என்னோட செயின் அழகிய டாலருடன் வைத்திருந்தது காணவில்லை, அதனுடன் அந்த சிறிய ஆர் என்கிற ஆங்கில எழுத்து போட்டிருந்த மோதிரமும் காணவில்லை. இதற்க்கு போலீசை அங்கே அனுப்பினால் என் மானம் தான் போகும் பேசாமல் இரு, ஒரு புகார் மனு எழுதி கொடுத்து வைக்கிறேன், வேறு இடங்களில் திருடு போன நகைகளை கைப்பற்றும் போது இந்த இரண்டும் கிடைத்தால் அப்போது நமக்குத் திரும்ப கிடைக்க அங்குள்ள காவல்துறையின் அதிகாரியிடம் நான் சொல்லிவைக்கிறேன், முதலில் உன்னை அசுவாசப்படுத்திக்கொள் என்றார் அவள் கணவர்.

நகைத் திருடர்கள் பிடிபடும்போது கிடைக்கும் நகைகளில் அந்த செயினும் மோதிரமும் கிடைக்கவில்லை, வருடங்கள் கடந்தது, சுகந்தி எப்போதும் அவள் கணவனை நச்சரித்துக் கொண்டிருந்தாள், வீட்டிற்கு வந்து செல்கின்ற காவல்துறையைச் சார்ந்த நண்பர்கள் ஒருவர் விடாமல் காணாமல் போன செயினையும் மோதிரத்தையும் பற்றி சொல்லிக்கொண்டிருப்பது வழக்கமாகி போனது, ஒருமுறை விஷச் சாராயம் காய்ச்சி விற்ற கும்பலை பிடித்துவந்து காவலில் வைத்திருந்தனர், காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவன் கழுத்தில் அதே சங்கிலி இருப்பதை கவனித்ததாக ஒரு போலீஸ்காரர் சுகந்தியின் கணவருக்கு தகவல் தெரிவிக்க அங்குவந்த சுகந்தியின் கணவருக்கு அந்த செயின் காண்பிக்கப்பட்டது, அதே செயின்,

செயினை அணிந்திருந்தவனை அழைத்து வரச் சொல்லி அந்த செயின் எங்கே எப்படிக் கிடைத்தது என்று விசாரணை செய்தபோது, கள்ளச் சாராயம் விற்றபோது காசு கொடுக்காமல் குடித்துவிட்டு தப்பிக்க முயன்ற ஒருவனிடமிருந்து கிடைத்ததாக சொன்னான், அவனிடமிருந்து செயினை வாங்கிச் சென்று மனைவி சுகந்தியிடம் கொடுத்தபோது அவளுக்கு சந்தோசம் பெருகவில்லை, ஆர் என்ற ஆங்கில எழுத்துப் பதித்த மோதிரம் இன்னும் கிடைக்கவில்லையே என்ற குறைதான். மோதிரத்தை எங்கே போய் தேட என்று அலுத்துக் கொண்டார் அவள் கணவர்.

ஆனால் கோவில் உண்டியலை உடைத்து திருடிய திருடனை பிடித்த போது அந்த உண்டியலில் இருந்த ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டது அத்துடன் அந்த ஆங்கில ஆர் எழுத்து பொறித்திருந்த மோதிரமும் கிடைத்துவிட்டது, மோதிரத்தை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்துச் சென்றார் காவலாளர். செயினை அடையாளம் காட்டிய போலீஸ்காரர் மோதிரம் கண்டு பிடித்த போலீஸ்காரரிடம் அந்த செயினு தங்கமில்லையாம் அவனுக்கு தெரியாமல் அதை வைக்க மார்வாடி கடைக்கு கொண்டு போனபோதுதான் அந்த செயினு ஐம்பொன்னுல செய்ததுன்னு தெரிஞ்சுச்சாம், அந்த கள்ளச் சாராயம் வித்தவன் சொன்னான் என்றார், மோதிரத்தை கண்டு பிடித்துக் கொடுத்த போலீஸ்காரர் பதிலுக்கு கோவில் உண்டியலத் திருடியவனும் அதத்தான் சொன்னான் என்றார்.
மோதிரமும் செயினும் கிடைத்த மகிழ்ச்சி சுகந்திக்கு, பள்ளியிறுதி ஆண்டில் பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்த போது பள்ளியில் பணி புரிந்த அவளது கணக்கு வாத்தியார் அவளுக்கு கொடுத்த நினைவுப் பரிசு ஆர் மோதிரம், இளங்கலை படித்தப் பின் காவல்துறையில் பணி செய்ய வேண்டுமென்று விரும்பி பரீட்சை எழுதி வெற்றிபெற்று அதிகாரியாக பணி நியமனம் கிடைத்ததற்கு அதே வாத்தியார் கொடுத்த இரண்டாவது பரிசு செயின், நமது திருமண நிச்சயதார்த்ததிற்க்குதான் உனக்கு தங்கத்தில் போடுவேன் என்று சுகந்தியிடம் சொன்ன அந்த ராசா என்கிற ராஜராஜன் வாத்தியார் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் காலமான விவரங்கள் சுகந்தியைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Title: ஆயிரம் ரூபாய்
Post by: AnJaLi on March 25, 2019, 10:13:50 am
அந்த ரூபாய் தாளின் வெண்ணிறப் பகுதியில் அடர்த்தியான பேனாவினால் ஐ லவ் யு என்று எழுதி அதன் கீழே மனோ ரம்யா என்ற பெயர்களுடன் காதலர் தினத் தேதியுடன் அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த ஆயிரம் ரூபாய் நோட்டு, அன்று காலை வங்கியிலிருந்து முக்கிய செலவுகளுக்காக எடுத்து வரபட்ட ரூபாய் நோட்டுக்களுடன் இருந்தது, மஞ்சுவிற்கு ஏனோ அந்த ரூபாய் தாளை செலவழிக்க தோன்றவில்லை, மஞ்சுவின் கணவன் அலுவலக வேலையாக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம், சில வித்தியாசமான நம்பிக்கைகளை கொன்டவன், தன் மனைவியை திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் தனக்கு அதிஷ்டம் ஆரம்பித்தது என்பதும், மனைவியின் கையில் பணம் பெற்றுச்சென்றால் செல்லுமிடத்திலிருந்தும் வரவேண்டிய அல்லது கிடைக்கவேண்டிய பணம் எவ்வித தடையுமில்லாமல் கைக்கு வந்துசேரும் என்பதும் மஞ்சுவின் கணவன் சசிக்கு நம்பிக்கை.

அன்று அலுவலகத்திலிருந்து டெல்லிக்கு செல்லவிருந்த கம்பெனியின் பொது மேலாளர் திடீரென்று உடல்நலமின்றி விடுப்பு எடுத்துவிட்டதால் சசிதரனை டெல்லிக்கு போக சொன்னார்கள், அதிலும் அந்த டெண்டர் மட்டும் இவர்களது கம்பெனிக்கு கிடைத்துவிட்டால் சசிக்கு நிச்சயம் பதவி உயர்வும் மற்றும் பலவிதமான வசதிகளையும் நிர்வாகம் கொடுத்து விடுவது நிச்சயம், வீட்டிற்கு வந்து உடனே விமானநிலையத்திற்கு புறப்படும் நேரத்தில் மனைவி மஞ்சுவிடமிருந்து பணம் கேட்டு வாங்கிச்செல்ல வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது, கைபேசியில் மஞ்சுவை தொடர்பு கொண்டபோது கதவின் சாவியை அடுத்த வீட்டில் கொடுத்துவிட்டு சென்றிருப்பதாகவும் அதை வாங்கி திறந்து பணம் எடுத்து செல்லச் சொன்னாள்.

மஞ்சுவின் கையில் வாங்கிச் சென்றால்தான் காரியம் நல்லபடியாக நடக்கும் என்ற தனது நம்பிக்கைப் பற்றி எப்போதுமே மஞ்சுவிடம் சசி தெரிவித்தது கிடையாது என்பதால் அடுத்த வீட்டிலிருந்து சாவியை பெற்று கதவை அவசரமாகத் திறந்து மஞ்சுவின் கைப்பையிலிருந்து அந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான், ஆனாலும் அவன் மனதில் மஞ்சுவின் கையில் அந்த பணத்தை வாங்க இயலாமல் போனது குறித்து லேசான அதிருப்தி ஏற்பட்டிருந்தது. டெல்லி சென்று அங்கிருந்து வாடகைக்கார் ஒன்றை பதிவு செய்து டெண்டர் ஏலம் விடப்படும் இடத்திற்கு சரியான நேரத்தில் சென்றடைந்து ஏலத்தில் தனது நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைத்ததில் மனதிற்கு மிகவும் நிம்மதி ஏற்பட்டது.

சசி எதிர்பார்த்தபடி உத்தியோக உயர்வு மற்ற வசதிகளையும் கொடுத்தது நிறுவனம், அந்த ஆயிரம் ரூபாய் தாளை சசி எடுத்துக்கொண்டு போய் இருப்பதை கவனித்த மஞ்சுவிற்க்குச் சற்றே ஏமாற்றம், சசி ஊரிலிருந்து வந்த பின் அவன் எடுத்துச் சென்ற ஆயிரம் ரூபாய் தாளைப்பற்றி கேட்டு அதை அவன் செலவழிக்காமலேயே திரும்பவும் கொண்டு வந்து இருப்பதையறிந்து சந்தோஷத்துடன் வாங்கி மறுபடியும் தனது கைப்பைக்குள் வைத்துக்கொண்டாள். சசியிடம் அதில் எழுதப்பட்டிருந்தவற்றைக் காண்பித்து யாரோ காதலர்கள் அந்த ரூபாயை நினைவுச் சின்னமாக்கி இருப்பதையும் ஏனோ அந்த ரூபாய் நோட்டை தனக்கு செலவழிக்கவே தோன்றவில்லை என காரணமும் கூறினாள்.

அந்த ரூபாய் நோட்டு மஞ்சுவின் கையில் கிடைத்த ஒருவாரத்திற்குப் பின்னர் தொலைக்காட்சியில் அன்றைய செய்தியில் 'கடற்கரையோரத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காதலர்கள் இருவரை கத்தியை காண்பித்து மிரட்டி பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலி பணம் முதலியவற்றை எடுத்துக்கொண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இருகொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற இருவரையும் கத்தியால் குத்திகொலை செய்துவிட்டு ரவுடிகள் தப்பியோட்டம், அந்த இளம் காதலர்களை இதுவரையில் யாரும் தேடி வராததால் பிணங்களை காவல்துறை கைப்பற்றி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது, இளம் பெண்ணிடமிருந்த கைபையில் கிடைத்த குறிப்புகளிலிருந்தும் இருசக்கர வாகனத்தின் ஓட்டுனர் உரிமத்திலிருந்த பெயர்களில் கொலைசெய்யபட்டுக் இறந்தவர்கள் மனோ,ரம்யாவாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. கொயாளிகளை பிடிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Title: விரித்த சிறைப்பறவை
Post by: AnJaLi on March 25, 2019, 10:21:52 am
மக்களுக்குத் தொண்டு செய்வதற்காகவே திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பெருமை பேசுபவர்களுக்கிடையில், குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டு குடும்பத்தைப்-பற்றிக் கவலைப்படாமல் குடும்பப் பாசத்தை, நாட்டு மக்களின் நலனுக்காகத் தியாகம் செய்திருப்பவரே 65 வயதாகும் ஆங் சான் சூகி.

1947 இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மியான்மருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த பெருமைக்குரியவர் இவரது தந்தை ஆங் சான். அதே ஆண்டிலேயே ராணுவ அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர். மியான்மரின் தேசத் தந்தை என்று மக்களால் அன்புடன் அழைக்கப்-படுகிறார்.
 

பள்ளிப் படிப்பை யாங்கூனில் முடித்த சூகி, 1960 இல் இந்தியாவுக்கான மியான்மர் தூதராகச் செயல்பட்டார். அப்போது, டில்லியிலுள்ள லேடி சிறீராம் கல்லூரியில் அரசியலில் பி.ஏ.-பட்டம் பெற்றார். 1969 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்-கழகத்தில் தத்துவம், அரசியல் பொருளா-தாரத்தில் பட்டம் பெற்று அமெரிக்கா-வின் நியூயார்க் நகரில் குடியேறி, 3 ஆண்டுகள் அய்.நா.சபையில் பணியாற்றினார்.
 

1972 இல் பிரிட்டனைச் சேர்ந்த மைக்கேல் ஆரிஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, லண்டனில் வசித்த இவர், இரு குழந்தைகளுக்குத் தாயாகி, லண்டன் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றார். இந்தியா வந்த சூகி, சிம்லாவில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் ஆராய்ச்சிப் பேராசிரியையாகப் பணியாற்றினார்.
 

1988 இல் உடல் நலம் பாதித்த தன் தாயைப் பார்க்க மியான்மர் வந்தபோது, அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அரசியல் ஈடுபாடு அமைந்தது.
 

ராணுவ ஆட்சியின் கொடுமையைப் பார்த்த சூகி உள்ளங் கொதித்தார். மக்களைக் காப்பாற்ற நினைத்தார். விளைவு, 1988 செப் 27 இல் தேசிய ஜனநாயக லீக் என்ற கட்சியைத் தொடங்கி அகிம்சை வழியில் போராடினார்.
 

சூகியின் அரசியல் ஆர்வத்தையும் வளர்ச்-சியையும் கவனித்த ராணுவம் 1989 ஜூலை 20இல் வீட்டுக்காவலில் சிறைவைத்தது. சிறையிலிருந்த-போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் (1990) சூகியின் கட்சி 59 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது. ராணுவம் தேர்தலை ரத்து செய்த--தோடு, சூகியைத் தொடர்ந்து வீட்டுக்-காவலில் வைத்தது.
 

சூகி மக்களுக்குச் செய்யும் தொண்டிற்காக, 1990 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அதிலிருந்து கிடைத்த பணத்தில் மியான்மர் மக்களின் சுகாதாரத்திற்கான அறக்கட்டளையை ஆரம்பித்தார். 1996 இல் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்-காவலில் வைக்கப்பட்டார்.
 

1999 இல் லண்டனில் சூகியின் கணவர் உயிருக்குப் போராடியபோது, சூகியைப் பார்க்க விரும்பினார். இரக்கமற்ற ராணுவம், அவரது கணவர் மியான்மர் வர விசா கொடுக்க மறுத்த-தோடு, சூகி லண்டன் சென்றால் திரும்ப மியான்-மருக்கு வரக்கூடாது என்ற நிபந்தனை விதித்தது. கணவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளக்-கூட அனுமதி கிடைக்கவில்லை. 10 ஆண்டு-களுக்குப் பிறகு, தற்போதுதான் தனது இளய மகனைப் பார்த்துள்ளார். பேரக் குழந்தைகளைப் பார்த்ததே இல்லையாம்.
 

அய்.நா. சபையின் முயற்சியால் 2002 இல் விடுவிக்கப்பட்டு, மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். விடுதலை பெற்றாலும், வீட்டுக் காவல் இவரை விரட்டிப் பின்தொடர, மக்களுக்-காகத் தன்னை அர்ப்பணித்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலை அனுபவித்-துள்ளார். சென்ற ஆண்டு விடுதலை பெற-வேண்டிய நேரத்தில், சட்டத்திற்குப் புறம்பாக நுழைந்த அமெரிக்கர் ஒருவரைத் தனது வீட்டுக்குள் அனுமதித்தமைக்காகத் தொடரப்-பட்ட வழக்கில் 18 மாதங்கள் வீட்டுக்காவல் அதிகமாக்கப்பட்டது. சூகியை விடுதலை செய்ய அமெரிக்கா உள்பட பல நாடுகள் வலியுறுத்தியும் செவிமடுக்காத ராணுவ அரசு 13.11.2010இல் இவரது வீட்டுக்காவல் முடிவடைந்தநிலையில், விடுதலை செய்வதற்கான உத்தரவில் ராணுவ ஜெனரல்கள் 12.11.2010 இல் கையெழுத்திட்டனர்.
 

ராணுவ ஆட்சியின்கீழ் சமீபத்தில் நடந்த தேர்தல் குறித்து எந்த வழக்கும் தொடரக் கூடாது என ராணுவ ஆட்சியாளர்கள் கெடுபிடி விதித்துள்ளனர். வழக்குத் தொடர்பவர்களுக்குத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும்வகையில் தேர்தல் கமிசன் விதிகளில் திருத்தம் செய்துள்ளனர்.
 எனினும், வீட்டுக்காவலிலிருந்து வெளியில் வந்த சூகி, தன்னுடன் பேச்சு வார்த்தை நடத்த வாருங்கள் என்று ராணுவ ஆட்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், வீட்டுச் சிறையி-லிருந்தாலும் தான் தினமும் 6 மணி நேரம் தொலைக்காட்சி பார்த்ததால் மக்களின் தேவை என்ன என்பதைப் புரிந்துள்ளதாகவும், மியான்மரில் ஜனநாயகம் செழித்தோங்க நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தன்னுடைய ஆதரவாளர்கள் விடுதலை பெறாத நிலையில் தான் விடுதலை பெற்றதாகக் கருத-முடியாது என்றும் கூறியுள்ளார்.
 

பர்மா மக்கள் விதியை நம்பிச் செயல்-படுகின்றனர். மக்கள் ஒன்றுபட்டுச் செயல்-படவேண்டும். நம்பிக்கையைத் தளரவிடக் கூடாது என்கிறார் இந்தத் தன்னம்பிக்கைச் சுடரொளி. உலக வரலாற்றில் நெல்சன் மண்டேலாவுக்குப் பின்பு அதிக ஆண்டுகள் ஜனநாயகத்துக்காக _ அரசியலுக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்த ஒரே தலைவர் சூகிதான்.
 

தன்னலம் கருதாத இந்தச் சிறைப்பறவை இன்னுமுள்ள தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திரப் பறவையாகப் பறந்து மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதே மியான்மர் மக்களின் _ உலக மக்களின் எதிர்பார்ப்பாகும்.
 

சூகியின் ஒவ்வொரு வார்த்தைக்காகவும் மியான்மர் மக்கள் மட்டுமல்ல, இந்த உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!
 

தனிமைப்படுத்தி _ கொடுமைப்படுத்திச் சித்தர-வதை செய்த ராணுவ அரசால், சூகி மீது மக்கள் வைத்திருந்த அன்பை _ மதிப்பை _ செல்-வாக்கைச் சிறிதளவுகூட அசைத்துப் பார்க்க முடியவில்லை.
 

காற்றைப் பூட்டி அடைக்க முடியுமோ?
Title: பக்தன்
Post by: AnJaLi on March 25, 2019, 10:22:32 am
மாலை நேரம் இரண்டு வாழைப்பழங்கள் வாங்குவதற்காக அந்தச் சிறிய பெட்டிக்கடைக்குச் சென்றேன். பெட்டிக் கடையின் முன்பகுதியை முழுவதும் மறைத்தபடி காவி வேட்டியுடன் கையில் சிகரெட் புகை, வாயில் பான்பராக்கைக் குதப்பியபடி கழுத்தில் ருத்ராட்ச மாலை, சாம்பல் பூசிய நெற்றியோடு பக்திமான் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
 
அவர், பக்தி எப்படி இருக்க வேண்டும், எப்படி கடவுளைத் தொழுவது, மூலக்கடவுள் விநாயகர் துதி எப்படி உச்சரிக்க வேண்டும் என அந்தப் பெட்டிக்கடைக்காரருக்கு விளக்கிக் கொண்டிருந்தார். பெட்டிக்கடைக்காரரோ கைகட்டி அவரோடு அய்க்கியமாகி அவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நின்று கொண்டிருந்தார்.
 
எனக்குப் பின்னேயும் ஒருவர் பொருட்கள் வாங்குவதற்காக காத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.
 
இரண்டு வாழைப்பழம் என்றேன். கடைக்காரரின் கவனம் முழுவதும் பக்தனின் பேச்சாற்றலுக்குக் கட்டுப்பட்டிருந்தது. ஆனால், பக்திமான் என்னைச் சற்று திரும்பிப் பார்த்து முறைத்த பார்வையை வீசிவிட்டு பிரசங்கத்தைத் தொடர்ந்தார்.
மூலவர் விநாயகர் என் சொல்லுக்குக் கட்டுப்படுவார் என்றவர் தன் கழுத்தில் கிடந்த ருத்ராட்ச மாலையுடன் கூடிய விநாயகர் டாலரை எடுத்துக்காட்டி முதல் மூலக்கடவுள் இவர்தான். பார்த்தீர்களா எலி வாகனத்தில் அமர்ந்தபடி முக்தியளிப்பதை என்றார்.
 
பொறுமை இழந்த நான் சற்று உரத்தகுரலில் இரண்டு வாழைப்பழத்தைக் கொடுத்துவிட்டுப் பேசுங்க என்றேன்.
 
அந்த பக்திமான் சற்று திரும்பிய நிலையில் நிமிர்ந்து என்னைப் பார்த்து கோபமாக ஒருகாலைப் பின்வைத்து மறுகாலை பெட்டிக்கடைப் பெட்டியின்  கீழே கொடுத்துத் திரும்பினார் பெட்டிக்கடையின் உள்ளே திரிந்த எலி வாலை மிதித்தபடி. கோபம் வந்த எலி பக்தனின் கால் கட்டைவிரலைக் கடித்துக் குதறியது.
 
நிலைகுலைந்த பக்திமான் கூக்குரலிட்டு அம்மா எனக் கத்தினார். இரத்தம் பெருக்கெடுத்து ஓட அப்படியே என் காலின் கீழே மயங்கிய நிலையில் சரிந்து உட்கார்ந்தார். பெட்டிக்கடைக்காரரால் எட்டி எட்டிப் பார்க்கத்தான் முடிந்ததே தவிர அவருக்கு உதவ முன்வர முடியவில்லை.
 
என் கையிலிருந்த கைக்குட்டையை எடுத்து தண்ணீரில் நனைத்து எலி கடித்த விரலைச்சுற்றி இரத்தம் வராமல் இறுக்கமாகக் கட்டினேன். 108க்கு போன்செய்து அவருடன் 108இல் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ உதவிகளைச் செய்து அவரைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தேன்.
 
பக்திமான் ருத்ராட்ச மாலையையும் எலி டாலரையும் அறுத்துக் கீழே போட்டுவிட்டு என்னைக் கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்தார்.
Title: Re: பக்தன்
Post by: EWA on March 27, 2019, 05:09:23 pm
(https://media.giphy.com/media/9w9Bpoiddg72U/giphy.gif)


Thanks&Regards:

EWA
Title: 10 Success Stories That Started With Failure
Post by: AnJaLi on April 18, 2019, 05:30:36 am
There are a number of really successful individuals in the world who did not always have things easy. Some of them had to walk through fire and overcome hardship to get to the point where they were recognized for their work and their contribution to the society. Here are ten success stories that started with failure, but the individual involved did not give up till they reached their goal.





1. Abraham Lincoln failed in almost every venture he tried before he became the President of the U.S.A. in 1860. In 1832, he lost his job and then ran for state legislature in 1832 and was defeated, He lost his job again, his fiancee died, and he had a nervous breakdown. Then he won the presidency in 1860.

(https://i.postimg.cc/y8rZZcCj/Abraham-Lincoln-e1498577998717.jpg) (https://postimages.org/)


Abraham Lincoln was a partner at a store in New Salem that failed in 1833, and he spent many years paying off the store’s debt. His fiancee Ann Rutledge died in 1835. In 1838, he ran for a local government seat and was defeated and also lost when he ran for Congress in 1843. He later got married to Mary Todd in 1842, but they lost three of their four children to different illnesses. The loss of their children affected them and Lincoln suffered from clinical depression.

He went on to be elected to Congress in 1846 but then lost renomination in 1848. In 1849, he was rejected for the position of land officer. Then between 1854 to 1858, he was defeated running for the U.S. Senate twice and also failed to get the nomination of vice president. He tried one more time and won the presidency in 1860. He was assassinated on April 15, 1865.


Title: Re: 10 Success Stories That Started With Failure
Post by: AnJaLi on April 18, 2019, 05:33:26 am
2. J.K Rowling, the author of the best-selling book Harry Potter was kicked out by her husband after the birth of her daughter, became jobless and survived on welfare. Her first Harry Potter book was turned down by 12 publishing houses. Today, she is worth millions of dollars.

(https://i.postimg.cc/vZ1mCKC7/J-K-Rowling-2010-e1498577558242.jpg) (https://postimages.org/)

At the age of 28, J.K Rowling was thrown out by her husband two months after the birth of their daughter. Even though she graduated from the University of Exeter, she ended up jobless seven years after graduation. With a dependent daughter and no source of income, she became clinically depressed and contemplated suicide after her marriage ended in 1993.

The idea for the Harry Potter books came to her while she was working as a secretary for Amnesty International. She eventually lost that job because she spent most of her time daydreaming and writing stories. At one point, she depended on welfare to survive and went most nights without eating so her daughter could eat. The first Harry Potter book was turned down by 12 publishers before it was bought by Bloomsbury Publishing in August 1996. Things became better after she received her first check of Ł2,500 for the first Harry Potter book. Today, the author is worth millions.

Title: Re: 10 Success Stories That Started With Failure
Post by: AnJaLi on April 18, 2019, 06:20:33 am
3. Steven Spielberg has dyslexia and was bullied in school for being unable to read properly. His dyslexia was not diagnosed until he was in his 60s. His application to the University of Southern California School of Cinematic Arts was rejected three times. Spielberg is worth billions of dollars today.

(https://i.postimg.cc/sfc1W7pW/Stephen-Spielberg-e1498582439151.jpg) (https://postimages.org/)

Dyslexia was not a condition that was diagnosed during the 1950s when Steven Spielberg was a child. His inability to read properly made him a target for bullies in school.

Steven Spielberg’s teachers thought he was a lazy student who did not do the work required of him. They did not recognize that there was a problem with his reading. He moved on and developed a love for filmmaking. Spielberg applied to the University of Southern California School of Cinematic Arts but was rejected because his grades were too low. He refused to give up and tried two more times to get in, but he was still rejected.

The filmmaker is now worth over a billion dollars with successful movies under his belt like E.T.: The Extra-Terrestrial, Indiana Jones, and more.


Title: Re: 10 Success Stories That Started With Failure
Post by: AnJaLi on April 18, 2019, 06:23:00 am
4. Soichiro Honda was rejected by Toyota the first time he presented them with his piston ring sample. He faced ridicule from his peers for the piston design. His factory was destroyed three times, but he rebuilt it every time it got destroyed. Honda Corporation has over 10,000 employees today.

(https://i.postimg.cc/PxHrp5JK/Soichiro-Honda-e1498587649614.jpg) (https://postimages.org/)

Soichiro Honda started a small workshop in 1938 and created a design for the piston ring. He presented the working sample to Toyota, but it was rejected because it did not meet their standards. He did not give up but went back to school. After two years of redesigning, he finally won a contract with Toyota.

Soichiro built a factory to fulfill his contract with Toyota, but it was destroyed by bombs twice during the war. He rebuilt his manufacturing factory, but it was once again destroyed by an earthquake. There was a shortage of gasoline after the war which led to people walking or using bicycles. He invented a small engine for his bicycle but was unable to meet the demands for more by his neighbors due to the shortage of materials.

He wrote letters to 18,000 bicycle shop owners asking for help, and he got help from 5,000 of them. Soichiro continued to work on the bicycle engines until the “Super Cub” became successful. Now. the Honda Corporation has over 10,000 employees in Japan and USA.


Title: Re: 10 Success Stories That Started With Failure
Post by: AnJaLi on April 18, 2019, 06:24:19 am
5. Walt Disney was fired from his job at a newspaper for not being creative enough. He lost his first company, which he created in 1921, to bankruptcy. His idea for Mickey Mouse was rejected by MGM as a talking mouse was thought to be too scary.

(https://i.postimg.cc/1zw33qmf/Walt-Disney-e1498588864639.jpg) (https://postimages.org/)

Walt Disney created his first animation company in 1921 but it went bankrupt, and at one point, he was unable to pay his rent. In 1926, he went ahead to create a cartoon character called “Oswald the Rabbit.” He tried to get Universal Studios to pay better rates for it, but they hired the Disney artists out from under him. They also bought the ownership to the character

In 1927, he was told by MGM that his idea for Mickey Mouse would never work as the idea of a talking mouse was scary. In 1933, the Three Little Pigs was rejected by distributors who felt it did not have enough characters. The cartoon later became successful. The well-known cartoon, Pinocchio, lost almost a million dollars in its first release.


Title: Re: 10 Success Stories That Started With Failure
Post by: AnJaLi on April 18, 2019, 06:26:38 am
6. Vincent Van Gogh was depressed and mentally ill and he spent some time in psychiatric hospitals. He committed suicide believing he was a failure. The artist was considered a failure while he was alive. His art is worth millions in present times.

(https://i.postimg.cc/k4yMxPtC/Vincent-Van-Gogh-e1498589798365.jpg) (https://postimages.org/)

Vincent Van Gogh was considered a madman during his lifetime. He was prone to psychotic episodes and delusions. He was born into an upper-middle-class family and worked as an art dealer in his youth. He started painting in 1881 and was financially supported by his younger brother.

The artist spent some time in psychiatric hospitals and once cut off part of his left ear in a rage. His depression grew, and on the 27th of July, 1890, he shot himself in the chest and died two days later

Van Gogh was considered a failure in his time and only became famous after his suicide. His paintings are currently worth millions of dollars.


Title: Re: 10 Success Stories That Started With Failure
Post by: AnJaLi on April 18, 2019, 06:30:04 am
7. Jim Carrey was born into a poor home. He worked at a factory as a teenager to provide support for his family. He was also an undiagnosed dyslexic who struggled with school and did not have a lot of friends.


(https://i.postimg.cc/rFwsNsJP/Jim-Carrey-e1498590937232.jpg) (https://postimages.org/)


Hollywood actor Jim Carrey came from a poor family. As a teenager, he had to work eight-hour shifts at a factory to support his family. He left school at the age of 16 as he found it difficult to cope with school and his job at the factory.

Carrey started performing stand-up comedy at the age of 15 and was encouraged by his father not to give up on his gift. He once gave himself a post-dated check for $10 million. He got his big break with the movie Dumb and Dumber and was finally able to cash it. Jim Carrey became the face of comedy in Hollywood and even became the highest paid actor, earning over $20 million per movie.




Title: Re: 10 Success Stories That Started With Failure
Post by: AnJaLi on April 18, 2019, 06:32:12 am
8. Colonel Sanders went broke at the age of 65 when his restaurant started losing business and he had to sell it. He slept in his car for two years and was rejected by restaurant owners 1,009 times when he tried selling his chicken recipe.


(https://i.postimg.cc/fyBLhQwC/Colonel-Sanders-e1498592314982.jpg) (https://postimages.org/)


Colonel Sanders had a fairly successful life. He had a very successful restaurant business, but it took a blow once the Interstate 75 was built. The road took traffic off Route 25 where his business was situated. Once Colonel Sanders noticed his business was going downhill, he sold the restaurant at an auction and used the money to pay his debts.

At the age of 65, after he received his first social security check of $105, he started looking for restaurants to which he could sell his chicken recipe. Colonel Sanders got rejected 1,009 times and slept in his car for two years before he found a restaurant owner who bought his recipe.

Nine years later, his chicken was sold at 600 restaurants in Canada and the USA. He sold Kentucky Fried Chicken for $2 million.

Title: Re: 10 Success Stories That Started With Failure
Post by: AnJaLi on April 18, 2019, 06:34:25 am
9. Ferdinand Alexander Porsche was kicked out of industrial design school for not being talented enough. The design director of Porsche rejected his ideas and he had to outsource it to an external contractor to build his design.

(https://i.postimg.cc/T3ZPx9Xz/Butzi-Porsche-e1498594182195.jpg) (https://postimages.org/)

Ferdinand Alexander Porsche decided not to follow the steps of his engineering father and grandfather. He chose to study design instead of engineering. The designer of the Porsche 911 was kicked out of industrial design school in his first year as his talent was not recognized. He went on to work for his father at Porsche.

The design director of the company rejected his design ideas also, so he went to an external contractor and had the prototype of the Porsche 911 built. The car is still a bestseller today.


Title: Re: 10 Success Stories That Started With Failure
Post by: AnJaLi on April 18, 2019, 06:41:20 am
10. Oprah Winfrey grew up in poverty, was raped at age nine and thirteen, ran away from home and gave birth at 14 to a son who died soon after. She still went on to become the world’s first African-American billionaires.

(https://i.postimg.cc/9FgM82gF/Oprah-Winfrey-e1498594819423.jpg) (https://postimages.org/)

Oprah Winfrey was born into a poor home in Mississippi to a single teenage mother. She was raped at the age of nine when she left her grandmother’s home to live with her mother. The sexual abuse did not stop and continued through the ages of ten through fourteen.

Her mother sent her out of the house at fourteen and she went to live with her father. It was at this point that she realized she was pregnant. She lost her son two weeks after delivery. Oprah and her father turned the experience around, and he made sure she became an excellent student.

After moving to Chicago to become a talk show host, she was told she could not compete with talk show host, Phil Donahue. But she proved her supervisors wrong and she surpassed him in ratings.



Title: முட்டாளும் புத்திசாலியும்
Post by: AnJaLi on April 28, 2019, 03:55:45 pm
மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.

அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. 'நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. 'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.

'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை.
'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு' என்றது ஏரித் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.
அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.
முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.


Title: சிறை வாசம்
Post by: AnJaLi on April 28, 2019, 03:57:34 pm
அந்த முகம் தீனதயாளனுக்கு மிகவும் பரிச்சயம் உள்ள முகமாகத் தோன்றியது. ஆனால் சட்டென்று நினைவுக்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. அந்த நபர் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த போது பலர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். அவர் சுமார் ஐந்து நிமிடம் தான் மண்டபத்தில் இருந்திருப்பார். அந்த ஐந்து நிமிடமும் தீனதயாளனின் அண்ணாவின் சம்பந்தி, மணப்பெண்ணின் தந்தை, கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாக அவர் அருகிலேயே நின்றிருந்தார். அந்த நபர் மணமக்களை வாழ்த்தி விட்டு காரேறுகையில் தற்செயலாக தீனதயாளனைப் பார்த்தார். உடனே அந்த நபரின் முகத்தில் தீனதயாளன் யாரென்று அறிந்து கொண்டதன் அறிகுறி ஒரு கணம் தோன்றியது. ஆனால் மறு கணமே அதை மறைத்துக் கொண்டு காரினுள் மறைந்தார். கார் சென்ற பின்பு தான் சம்பந்தியின் கைகள் பிரிந்தன.

   "கூப்பிட்டிருந்தேன். ஆனா இவ்வளவு பெரிய மனுசன் நம்மளையும் மதிச்சு வருவார்னு உறுதியாய் நினைக்கலை. அவர் வந்து ஆசிர்வாதம் செய்ய என் பொண்ணு குடுத்து வச்சிருக்காள்னு தான் சொல்லணும்" என்று பலரிடமும் அவர் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது தீனதயாளன் காதில் விழுந்தது.

   "இப்ப வந்துட்டு போன ஆளை எனக்கு நல்லாவே தெரியும், சாவித்திரி. ஆனா சட்டுன்னு யாருன்னு சொல்ல வரலை" என்று தீனதயாளன் தன் மனைவியிடம் சொன்னார்.

   ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான தன் கணவனை, சாவித்திரி சந்தேகக் கண்ணோடு பார்த்தாள். அவளது அனுபவத்தில் அவர் நினைவில் தங்கும் நபர்கள் பெரும்பாலும் குற்றவாளிகள் மட்டுமே. பல ஆண்டுகள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபரைப் பார்த்து அவளிடம் "யாரிது" என்று கேட்பார். ஆனால் அவர் விசாரணை செய்த சிறு குற்றவாளிகளைக் கூட பல ஆண்டுகள் கழித்தும் அவர் மறந்ததாய் சரித்திரம் இல்லை. சம்பந்தி வீட்டவர்கள் இவ்வளவு மரியாதையைக் காட்டிய ஒருவரைப் பற்றி என்ன இவர் சொல்லப் போகிறாரோ என்று பயந்தாள்.

   "கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருங்கோ" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னாள்.

   அவருக்கு மனைவி ஏன் பல்லைக் கடித்துக் கொண்டு எச்சரிக்கிறாள் என்று புரியவில்லை. அவளைப் பொருட்படுத்தாமல் தானே நேரடியாக அண்ணாவின் புது சம்பந்தியிடம் சென்று, வந்து விட்டுப் போன நபர் யாரென்று விசாரித்தார்.

   "அவர் ஒரு மகாத்மா, சம்பந்தி. கோடிக் கணக்கில் சொத்திருந்தாலும் கொஞ்சம் கூட அகம்பாவம் இல்லாத மனுஷன். இப்ப நீங்களே பார்த்தீங்கள்ள... மனுஷன் ரொம்பவும் சிம்பிள். அவரோட சங்கரா குரூப்ஸ் கம்பெனிகள், இண்டஸ்ட்ரீஸ் எல்லாமாய் சேர்த்து கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் வேலை பார்க்கிறாங்க. எல்லாருக்கும் நல்ல சம்பளம். ஆனா அவரோட வீட்டைப் பார்த்தா நீங்க நம்ப மாட்டீங்க.அவரோட பியூன்கள் கூட அதை விடப் பெரிய வீட்டில் இருக்கிறாங்க. அவ்வளவு சின்ன விட்டில் வேலைக்காரங்க கூட இல்லாம ஒரு சன்னியாசி மாதிரி வாழ்றார்."

   "அவர் பேர் என்ன சம்பந்தி"

   "மாணிக்கம்"

   சொல்லி விட்டு சம்பந்தி நகர்ந்தார். அந்தப் பெயரைக் கேட்டவுடன் எல்லாம் தெளிவாக நினைவுக்கு வர தீனதயாளன் அதிர்ந்து போய் நின்றார்.

   மாணிக்கம் ஒரு காலத்தில் கோயமுத்தூரில் போலீஸ் துறையையே திணறடித்த ஒரு தீவிரவாதி. தீனதயாளன் அப்போது அங்கு டி.எஸ்.பியாக சில காலம் இருந்தார். வெடிகுண்டு தயாரிப்பதில் மாணிக்கம் நிபுணன். ஒரு தீவிரவாதக் கும்பலின் மூளையாக அவனை போலீஸ் கணித்து வைத்திருந்தது. அவனைக் கைது செய்து சிறைக்கு அனுப்ப தீனதயாளனும், அவரது சகாக்களும் நிறையவே முயற்சிகள் எடுத்தார்கள். அவன் சிக்காமலேயே தப்பித்து வந்தான். ஒரு வெடிகுண்டு வெடித்த கேசில் சதாசிவம் என்ற ஒரு போலீஸ் அதிகாரி சாமர்த்தியமாக அவனை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்தார். தீனதயாளன் உட்பட உயர் அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் கோர்ட்டில் சதாசிவம் வேண்டுமென்றே கேசை பலவீனப்படுத்தி அவனைத் தப்ப வைத்தார். மாணிக்கம் விடுதலையாகி புன்னகையுடன் வெளியே வந்த காட்சி இன்னமும் தீனதயாளனுக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.

   சதாசிவத்தை அழைத்து தீனதயாளன் விசாரித்தார். அவரது எல்லாக் கேள்விகளுக்கும் சேர்த்து சதாசிவம் ஒரே பதில் தான் சொன்னார். "எனக்கு என் குடும்பம் முக்கியம் சார்"

   சதாசிவத்தின் வயதுக்கு வந்த மகளைக் கடத்திச் சென்று அவரை அந்தக் கும்பல் மிரட்டிய விஷயம் மெள்ள வெளியே வந்தது. அவன் விடுதலையான பின்பு அந்தப் பெண்ணைப் பத்திரமாக அனுப்பி விட்டார்களாம். கொதித்துப் போனார் தீனதயாளன். அப்பீல் செய்யலாம் என்றும் அவர் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தரும் என்றும் தீனதயாளன் சொல்லிப் பார்த்தார்.

   "எவ்வளவு நாள் பாதுகாப்பு தர முடியும் சார்?"

   கடைசியில் வேறு வழியில்லாமல் அந்தக் கேசைக் கை கழுவ வேண்டி வந்தது. அந்த சமயம் தீனதயாளனுக்கும் வட இந்தியாவிற்கு மாற்றலாகியது. அவர் அங்கு போன பின்பும் ஒரு முறை இங்கு ஒரு வெடிகுண்டு வெடித்து ஒரு ரயில் தடம் புரண்ட செய்தியைக் கேள்விப் பட்டார். அதில் மாணிக்கத்தின் பெயரும் அடிபட்டது. ஆனால் அந்த வழக்கிலும் ஓரிரு சின்னத் தீவிரவாதிகள் கைதாகி தண்டனை பெற்றார்களே தவிர மாணிக்கம் சட்டத்தின் பிடிக்கு வரவில்லை. அதற்குப் பின் மாணிக்கத்தைப் பற்றி ஒரு தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை. இருபத்தைந்து வருடங்கள் கழித்து இப்போது தான் ஒரு கோடீசுவரத் தொழிலதிபராகவும், மகாத்மாவாகவும் அவனைப் பற்றி கேள்விப்படுகிறார்.

   தீனதயாளனுக்கு இதை ஜீரணிக்கவே முடியவில்லை. சட்டத்தின் விசேஷ வலையில் சின்ன மீன்கள் மாட்டிக் கொள்வதும் பெரிய மீன்கள் அனாயாசமாக தப்பித்துக் கொள்வதும் அவரால் இன்னமும் சகிக்க முடியாததாகவே இருந்தது. மாணிக்கத்திடம் பேசிய ஒருசிலரிடம் பேச்சுக் கொடுத்தார். எல்லாரும் அவனைப் பற்றி நல்ல விதமாகவே சொன்னார்கள். அவன் சின்னதாய் அங்கு தொழில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியதாகவும் கோடிக்கணக்கில் தர்ம காரியங்களுக்கு அவன் செலவிடுவதாகவும் தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னதில் ஒரு விஷயம் நெருடியது. மாணிக்கம் வசிக்கும் அந்த சிறிய வீட்டிற்கு அவனது ஓரிரு பழைய சினேகிதர்கள் தவிர யாரும் போனதில்லை. உள்ளே அவன் யாரையும் அனுமதிப்பதும் இல்லை.

   மனைவியிடம் போய் சொன்னார்.

   "நான் அப்பவே நினைச்சேன். உங்களுக்கு ஞாபகம் இருக்குன்னா அது நல்ல ஆளாய் இருக்க முடியாதுன்னு. சரி இன்னும் போய் யார் கிட்டேயும் சொல்லாதீங்க. நமக்கு எதுக்கு வம்பு"

   அவரால் சும்மா இருக்க முடியவில்லை. ஒரு தீவிரவாதி தண்டனைக்குத் தப்பி விட்டு சுதந்திரமாகக் கோடிக் கணக்கில் சொத்து சேர்ப்பதும் மகாத்மாவாக சித்தரிக்கப் படுவதும் அவருக்கு பொறுக்க முடியாத விஷயமாகவே இருந்தது. பழைய கதை தெரிந்த ஒருவன் இருக்கிறான் என்று தெரிவிக்க ஆசைப்பட்டார். மனைவியிடம் சொன்னால் அவள் அனுமதிக்க மாட்டாள் என்று அவளிடம் சொல்லாமல் வெளியே போய் ஒரு போன் செய்தார்.

   மாணிக்கத்தின் செகரட்டரியிடம் பேசினார். "நான் மாணிக்கதோட பழைய சினேகிதன். இங்கே ஒரு கல்யாணத்துக்கு வந்தேன். அவரை சந்திக்க முடியுமா? நான் நாளைக்கு மத்தியானம் கல்யாண பார்ட்டியோட ஊர் திரும்பணும். அதுக்கு முன்னாடி அவரைப் பார்த்துட்டுப் போலாம்னு பார்க்கறேன்"

   "அப்பாயின்மென்ட் இல்லாம பார்க்க முடியாதுங்களே"

   "அவர் கிட்டே எனக்காக கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்"

   "உங்க பெயர்?"

   "தீனதயாளன். முன்பு கோயமுத்தூரில் டி.எஸ்.பி ஆக இருந்திருக்கிறேன்னு சொன்னா அவருக்குத் தெரியும்" சொல்லி விட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். மாணிக்கம் தன்னைச் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஆனாலும் மாணிக்கம் என்ன சொல்வான் என்று அறிய அவருக்கு ஆவலாக இருந்தது.

   "சரி லைனிலேயே இருங்கள்"

   டெலிபோன் சில நிமிடங்கள் மௌனம் சாதித்தது.

   "எம்.டி உங்களை ஏழு மணிக்கு அவர் வீட்டில் வந்து பார்க்கச் சொன்னார். வீட்டு அட்ரஸ் நோட் பண்ணிக்கிறீங்களா?...."

   தீனதயாளன் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி தன்னைச் சந்திப்பதைத் தவிர்ப்பான் என்று நினைத்திருக்கையில், யாரையும் அதிகம் அனுமதிக்காத தனது வீட்டுக்கே வந்து சந்திக்குமாறு மாணிக்கம் சொன்னது இரட்டிப்பு திகைப்பாக இருந்தது. எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தால் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்று யோசித்தார். அந்த வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதாக முன்பே அவர் நினைத்திருந்ததால் வீட்டில் அவனை சந்திப்பதில் அபாயம் இருக்கிறது என்று போலீஸ் புத்தி எச்சரித்தது. ஆனாலும் முன் வைத்த காலைப் பின் வைக்க அவர் மனம் ஒப்பவில்லை.

   மாலையில் எல்லாரும் சுமார் நாற்பது மைல் தூரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலுக்குப் போகப் புறப்பட்டனர். ஏதோ ஒரு காரணம் சொல்லி சாவித்திரியை மட்டும் அவர்களுடன் அனுப்பி வைத்து விட்டு மாணிக்கத்தின் வீட்டுக்குக் கிளம்பினார்.

   மாணிக்கத்தின் வீடு ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அருகில் வீடுகள் இல்லை. சுற்றும் முற்றும் இருந்த இடத்தையெல்லாம் மாணிக்கம் வாங்கி இருப்பதாக கல்யாண மண்டபத்தில் சொல்லியிருந்தார்கள். காலிங் பெல்லை அழுத்தினார். மாணிக்கமே கதவைத் திறந்தான்.

   கிட்டத் தட்ட ஐம்பது வயதைக் கடந்திருந்தாலும் மாணிக்கம் திடகாத்திரமாக இருந்தான். ஒரு கதர் சட்டையும் கதர் வேட்டியும் அணிந்திருந்தான். அடுத்தது அரசியல் பிரவேசம் போலிருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

   "வாங்க டி.எஸ்.பி சார். உட்காருங்க"

   முதல் அறையில் இரண்டு பிரம்பு நாற்காலிகள் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை. ஒரு நாற்காலியில் தீனதயாளன் அமர மற்றதில் மாணிக்கம் அமர்ந்தான். அவன் முகத்தில் தெரிந்த அமைதி அவரை ஆச்சரியப் படுத்தியது. எப்படி தான் முடிகிறதோ?

   "உன்னை இந்த ஒரு நிலையில் நான் எதிர்பார்க்கலை மாணிக்கம்" என்று பொதுவாகச் சொன்னார்.

   "இருபத்தி நாலு வருஷத்துக்கு முன்னால் நான் இப்படியாவேன்னு யாராவது சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன் சார்"
   
   "என்ன செஞ்சே மாணிக்கம், கள்ள நோட்டு அடிச்சியா?" அவர் ஏளனமாகக் கேட்டார்.

   சற்றும் கோபப்படாமல் மாணிக்கம் சொன்னான். "ஒரு ரயிலைக் கவிழ்த்தேன். ஒரு ஆளைப் பார்த்தேன். எல்லாமே என் வாழ்க்கையில் மாறிடுச்சு சார் ...."

   வெடிகுண்டு வைத்து ரயிலைக் கவிழ்க்கும் அந்தத் திட்டத்தில் சிறிய தவறு கூட இல்லாமல் மாணிக்கம் அன்று பார்த்துக் கொண்டான். அவனது திட்டங்களிலேயே இது தான் மிகப் பெரியது. தூரத்தில் ரயில் கவிழ்வதைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது தான் அந்த ஆளைப் பார்த்தான். பரட்டை முடி, கந்தல் உடை, தோளில் ஒரு சாயம் போன ஜோல்னாப் பை, இதற்கெல்லாம் எதிர்மாறாக தீட்சணியமான கண்களுடன் அவன் பின்னால் அந்த வயதான ஆள் நின்றிருந்தார். அவரது கண்கள் அவனது உள் மனதை ஊடுருவிப் பார்த்தன. ஓட யத்தனித்த மாணிக்கத்தை அவரது அமானுஷ்யக் குரல் தடுத்து நிறுத்தியது.

   "நீ முழுசும் பார்க்கலை. முழுசையும் பார்த்துட்டே போ.எதையும் நீயா நேரில் சரியா பார்த்தால் தான் புரியும்" என்று சொன்னவர் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவனையும் அறியாமல் மந்திரத்தால் கட்டுண்டது போல மாணிக்கம் அவரைப் பின் தொடர்ந்தான். எங்கும் பிணங்கள், துண்டிக்கப் பட்ட உறுப்புகள், அழுகுரல்கள், வலி தாளாத ஓலங்கள் இவற்றினூடே இருவரும் நடந்தார்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையிலும் ஒவ்வொரு மனிதனின் சோகத்தை மாணிக்கம் பார்த்தான். ஆட்கள் பல திசைகளிலிருந்தும் விரைந்து வந்து படி இருந்தார்கள்.

   "இது உன் வெற்றியோட ஆரம்பம் தான். இதில் எத்தனையோ பேர் அனாதையாகலாம், பிச்சைக்காரங்களாகலாம், பைத்தியம் புடிச்சு அலையலாம், சில குழந்தைகள் பெத்தவங்க இல்லாம கஷ்டப்பட்டு தீவிரவாதியாகவோ, விபசாரியாகவோ கூட ஆகலாம். இத்தனைக்கும் நீ பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாய். இத்தனை பேரும் உனக்கு என்ன கெடுதல் செய்தாங்கன்னு நீ இப்படி இவங்களை தண்டிச்சிருக்காய்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

   மாணிக்கம் அங்கிருந்து ஓடி விட நினைத்தான். ஆனால் அவரது பார்வை அவனைக் கட்டிப் போட்டிருந்தது. அவனுக்கும் அவனது இயக்கத்துக்கும் பதவியில் இருந்தவர்கள் மீது தான் கோபம், அவர்களுக்குப் பாடம் கற்பிப்பது தான் குறிக்கோள். அதற்காகத் தான் இது போன்ற தீவிரவாதச் செயல்கள். ஆனால் அதைச் சொல்வது அவர் கேள்விக்குப் பதிலாகாது என்பது புரிந்தது. எத்தனையோ காலமாக கொடூரமாகவே வாழ்ந்து விட்ட அவனது மரத்துப் போன மனதில் ஏதோ ஒன்று ஊடுருவி அவனை அசைத்தது. அந்தக் கோரக் காட்சிகளும், பாதிக்கப் பட்டவர்களின் தாங்க முடியாத துயரங்களும் அவனை மிகவும் ஆழமாகப் பாதித்தன. அவர் கேள்வியில் இருந்த நியாயமும், கண்டு கொண்டிருக்கும் காட்சிகளும் சேர்ந்து அவன் மனதை என்னவோ செய்தன. மனசாட்சி உறுத்தியது. நேரம் ஆக ஆக அந்த இடம் அவனைப் பைத்தியமாக்கி விடும் போலத் தோன்றியது.

   தாள முடியாமல், ஆபத்திற்கென்று அவன் வைத்திருந்த சயனைடு கேப்ஸ்யூலை எடுத்தான்.

   "சாகடிக்கிறதும், சாகிறதும் ரெண்டுமே சுலபம் தான். கோழைகள் செய்கிற காரியம்."

   முதல் முறையாக மாணிக்கம் வாய&#
Title: Re: சிறை வாசம்
Post by: Arrow on April 29, 2019, 03:04:30 pm
super Basha movie patha pola iruku :D

Second half ku waiting  :) :) :)
Title: வரையப்படாத கடவுள்
Post by: AnJaLi on April 30, 2019, 08:04:12 pm
"என்னால முடியும்னு நிஜமாவே நினைக்கிறீங்களா"- நூறாவது முறையாக சின்னசாமி கேட்டான்.

   "கண்டிப்பா முடியும்" அஸ்வின் பழைய பதிலையே சிறிதும் பொறுமை இழக்காது சொன்னான். இந்த சாருக்கு உண்மையில் பைத்தியம் தான் பிடித்து விட்டதோ என்ற சின்னசாமியின் சந்தேகம் மேலும் வலுத்தது.

   "சாப்பாட்டை டைனிங் டேபிளில் வெச்சிருக்கேன். நேத்து மாதிரி மறந்துடாதீங்க. வரட்டுமா"

   அவன் போய் விட்டான். சின்னசாமிக்கு நடப்பதெல்லாம் கனவு போலவே இன்னமும் தோன்றியது. அந்த பிளாட்பார ஏழை ஓவியன் இந்த சொகுசு பங்களாவுக்கு வந்து ராஜ வாழ்க்கை வாழ ஆரம்பித்து சரியாக பதினான்கு நாட்கள் ஆகி விட்டது. நாளை மாலை அவன் திரும்பத் தனது சேரிக்கே போய் விடுவான். பழையபடி தரித்திரம், குடிசை, பிளாட்பாரம் என்று வாழ்க்கை சுழல ஆரம்பித்து விடும். இந்தப் பதினைந்து நாட்களையும், அஸ்வினையும் ஒரு பொக்கிஷமாக தனது மனதின் ஒரு மூலையில் வைத்து என்றுமே பாதுகாப்பான். எல்லாமே ஒரு வெள்ளிக் கிழமை அஸ்வின் அவனைப் பார்த்ததில் இருந்து ஆரம்பித்தது...

   அன்று துர்க்கை பேரழகுடன் அந்தப் பிளாட்பாரத்தில் பிரத்தியட்சமாகிக் கொண்டிருந்தாள். இந்த உலகையே மறந்து தன் படைப்பிலேயே லயித்துப் போயிருந்த அந்தத் தெருவோர ஓவியனை அஸ்வின் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கால்களை ஊனமாக்கிய கடவுள் அத்ற்குப் பிராயச்சித்தமாக கைகளுக்கு ஓவியக்கலையைத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டானோ என்று அஸ்வினுக்குத் தோன்றியது. அனாயாசமாக வரைந்து முடித்த பின்பு தான் அமர்ந்திருந்த சக்கரங்கள் பொருத்திய பலகையை ஓரமாக நகர்த்தி சுவரில் சாய்ந்து கொண்டான் அந்தப் படைப்பாளி. பலரும் நாணயங்களை வீசி விட்டுச் சென்றார்கள். அஸ்வின் மட்டும் உன்னிப்பாக துர்க்கையையே பார்த்துக் கொண்டிருந்தான். பல நிமிடங்கள் கழிந்த பின்பு பாராட்டினான். "நல்லா வரைஞ்சிருக்கீங்க".

   நிறைய நேரம் நின்று கவனிப்பதும், அவனையும் ஒரு பொருட்டாக நினைத்துப் பாராட்டுவதும் அந்தக் கலைஞனுக்குப் புதிய அனுபவம். அவனுக்குத் தெரிந்து மேல் மட்ட மனிதர்கள் காசிலாவது தாராளமாக இருப்பதுண்டு. ஆனால் அவனைப் போன்ற ஒரு பரம தரித்திரனை ஒருவன் கவனித்து, மதித்து மனதாரப் பாராட்டுவது அதிசயமாயிருந்ததது.

  "என் பெயர் அஸ்வின். உங்க பெயர்..."

   "சின்னசாமிங்க"

    அஸ்வின் நிறைய நேரம் நின்று சின்னசாமியுடன் பேசினான். அவனைப்பற்றிய தகவல்கள் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டான். சின்னசாமிக்கு உறவு என்று தற்போது யாருமில்லை என்பதையும், சிறு வயதில் போலியோவால் இப்படி ஆகி விட்டது என்பதையும் கேட்டு இரக்கம் காண்பித்து அவனைப் புண்படுத்தவில்லை. சேரியில் வசிக்கும் அவனிடம் சரிசமமாகப் பேசி விட்டு நாளை அவன் எங்கு வரைவான் என்பதையும் தெரிந்து கொண்டு போனான்.

   மறு நாள் மாலையும் அஸ்வின் சின்னசாமியைத் தேடி வந்தான். காரைத் தெருவின் எதிர்புறம் நிறுத்தி விட்டு வந்து அவன் வரைந்திருந்த சிவனை நிறைய ரசித்தான். "சிலர் வரையறதில் அழகு இருக்கும், உயிர் இருக்காது. நீங்க வரையறதில் ரெண்டும் இருக்கு."

   "அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க, சார். ஏதோ வரைவேன். அவ்வளவு தான்"

   அஸ்வின் புன்னகைத்தான். "நீங்க கேன்வாசில் எல்லாம் வரைவீங்களா?"

   "அப்படீன்னா..."

   "துணியில், பெரிய வெள்ளைப் பேப்பரில் எல்லாம் வரைவீங்களா"

   பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்றீங்க. அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். நானே வயத்துப் பொழப்புக்கு வரையறவன். அதெல்லாம் எனக்கு வராதுங்க"

   அவனது வார்த்தைகளில் இருந்த யதார்த்த உண்மை அஸ்வினுக்கு உறைத்தது. ஓவியங்களைப் பற்றி சிறிது பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பும் முன் மறு நாள் எங்கு வரைவான் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்பினான். தான் வரைவதைப் பார்ப்பதற்காகவே அவன் வருவது சின்னசாமிக்கு பெருமையாக இருந்தது. 'நான் நிஜமாவே அவ்வளவு நல்லா வறையறேனா".

   மறுநாள் அஸ்வின் வருவான் என்றே வழக்கத்தை விட அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு வரைந்தான். மனதில் இதுவரை இல்லாத உற்சாகம் இருந்தது. அதைக் கெடுக்கும் விதமாக சில இளைஞர்கள் குடித்து விட்டு தள்ளாடியபடி வந்தார்கள்.

   "மாம்ஸ். இது ராமர் படமா, க்ரிஷ்ணர் படமா"

   "எவனாயிருந்தா எனக்கென்னடா"

   "எனக்கும் ஒண்ணும் இல்லை. சும்மா கேட்டேன். ஏம்ப்பா, உன் பேரென்ன?"

   "சின்னசாமிங்க"

   "ஓ. ஸ்மால் காட்"

   "என்ன சொன்னீங்க"

   "உன் பேரை இங்கிலீஷில் சொன்னேன். வரையற படம் மட்டுமல்ல வரையற ஆளும் சாமிதாம்ப்போய்"

   "இனி எத்தனை காலத்துக்கு இந்த சாமி படமே வரைவீங்கப்பா. ஒரு அழகான பொண்ணு படம் வரையேன்"

   "அதுவும் நிர்வாணமா வரைஞ்சா நோட்டு மழையா கொட்ட நாங்க ரெடி. நீ ரெடியா"

   "நீங்க எல்லாம் படிச்சவங்க தானா. இவ்வளவு மட்டமா பேசறீங்களே"

  "உன் உயரத்துக்குத் தகுந்த மாதிரி தான் பேசினோம்." என்ற ஒருவன் அவனது கலர் சாக்பீசுகளைத் தள்ளி விட்டான்.

   "நீயே பிச்சைக்காரன். பெரிய மனுசன் மாதிரி ஏண்டா பேசறே" என்று இன்னொருவன் சாயங்கள் இருந்த கிண்ணங்களைத் தட்டி விட்டான்.

   சின்னசாமிக்கு இரத்தம் கொதித்தது. ".....ப்பசங்களா" என்று கத்த மாணவர்கள் மூர்க்கமாய் தாக்க ஆரம்பித்தார்கள். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லாதிருந்தது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. அவன் மயங்கி விழுந்தவுடன் ஓடி விட்டார்கள். இந்த சமயம் அந்தப் பக்கம் வந்த ஒருவன் அசுர வேகத்தில் ஓவியத்தின் மேல் இருந்த காசுகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தான்.
எதிர்பாராது கிடைத்த திடீர் சந்தர்ப்பங்களை உடனடியாக முதலாக்கிக் கொள்ளும் மனிதர்கள் என்றுமே இருக்கிறார்கள்.

   அஸ்வின் அங்கு வந்த போது சின்னசாமியை ஒரு நாய் மட்டும் விசாரித்துக் கொண்டிருந்தது. பதைத்துப் போய் "சின்னசாமி...... சின்னசாமி" என்று அழைத்தான். சின்னசாமி அசையவில்லை. தூரத்தில் நின்றிருந்த ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்த ஆட்டோக்காரனை உதவிக்கு அழைத்து சின்னசாமியைத் தூக்கித் தன் காரில் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.

   சின்னசாமி கண் விழித்த போது அஸ்வின் அருகில் இருந்தான். "எப்படி இருக்கு சின்னசாமி"

  "பரவாயில்லைங்க"

  "என்ன ஆச்சு"

   சின்னசாமி சொன்னான்.

   "கொஞ்சமும் மனிதாபிமானமில்லாமல் சிலர் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாய் நடந்துக்கறாங்களே" அஸ்வின் அங்கலாய்த்தான்.

   "சில பசங்களுக்கு ஜாலியாய் இருக்கிறதுக்கும் அடுத்தவங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாதுங்க. இதெல்லாம் எனக்குப் பழக்கமானது தான். பொதுவா கோபப்பட மாட்டேங்க. ஆனா சில சமயம் என்னையும் மீறி கோபம் வந்துடுதுங்க. நானும் மனுசன் தானே"

   அவன் வார்த்தைகள் அஸ்வினின் மனதைத் தொட்டன. "போலிசுக்குப் புகார் தரணும் சின்னசாமி"

   "ஐயோ அதெல்லாம் வேண்டாம் சார். அவங்க உபத்திரவம் இன்னும் அதிகமாகும். வந்து வரைஞ்சது மேலே தண்ணி கொட்டுவான். போலிசுக்குக் காசு கொடுத்து ட்ராபிக்குக்கு இடைஞ்சல்னு விரட்ட வைப்பான். இப்படி ஏழைக்குத் தொந்தரவு தர அவங்களுக்கு எத்தனையோ வழி இருக்குங்க. எதிர்த்து நின்னா என் பொழப்பு நடக்காது. மழைக்காலம் வரதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் சம்பாதிச்சா தான் அப்புறம் ரெண்டு மூணு மாசம் என் வயத்தை நிரப்ப முடியும்".
   
  "சரி விடுங்க. டாக்டர் பெரிசா எதுவுமில்லை, இன்னைக்கே வீட்டுக்குப் போகலாம்னு சொல்லிட்டார். இங்கிருந்து போகறதுக்கு முன்னாடி உங்க கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்"

   "சொல்லுங்க சார்"

   " உங்க கிட்ட பிரமாதமான திறமை இருக்கு. அது பிளாட்பாரத்தோட நின்னுடக்கூடாது. இன்னும் பதினைந்து நாளில் இந்த ஊரில் ஒரு பெரிய ஓவியப் போட்டி நடக்கப் போகுது. இது ஒரு அகில இந்தியப் போட்டி. இதுல நீங்க கலந்துக்கப் போறீங்க. என்ன சொல்றீங்க"

   "சார். நீங்க நல்லவங்க. ஆனா நீங்க நினைக்கிற அளவு திறமை எல்லாம் எனக்கு கிடையாது. இந்தப் போட்டி ஒரு ப்ளாட்பாரத்தில் நடக்கிற சாக்பீசுல வரையற போட்டியில்ல. எனக்கு பிரஷ் பிடிக்கக் கூடத் தெரியாது".

   "அதையும் வேற சில நுணுக்கங்களையும் நான் சொல்லித்தர்றேன். பதினைந்து நாளில் நீங்க எல்லாமே கத்துக்க முடியும்"

   "சார் நீங்க தப்பா நினைக்கக்கூடாது. உங்களுக்குப் பைத்தியம் இல்லையே"

   அஸ்வின் வாய் விட்டுச் சிரித்தான். "பைத்தியம் தான். கலைப் பைத்தியம். திறமை எங்க வீணாப் போனாலும் தாங்க முடியாத பைத்தியம். சரின்னு சொல்லுங்க சின்னசாமி. என் கூட என் வீட்டுக்கு வந்துடுங்க. எண்ணி பதினைந்து நாள் இருங்க. இந்தப் பதினைந்து நாளில் நீங்க எவ்வளவு சம்பாதிப்பீங்களோ அதை நான் தர்றேன். சரியா"

   "என்ன மனிதனிவன் " என்று சின்னசாமி வியந்தான். ஏளனம், அவமானம், சில சமயங்களில் இரக்கம் இதை மட்டுமே மற்றவர்கள் அவனுக்குத் தந்திருக்கிறார்கள். இப்படி ஒரு முக்கியத்துவமும், அன்பும் இது வரை யாருமே அவனுக்குத் தந்ததில்லை. என்னென்னவோ சொல்லிப் பார்த்தான். அஸ்வின் அதற்கெல்லாம் மசியவில்லை. அவனுக்கு எல்லாமே கனவில் நடப்பது போல இருந்தது. கடைசியில் சரியென்றான்.

   அஸ்வின் ஒரு பெரிய கம்பெனியில் கம்ப்யூட்டர் இஞ்சீனியர் என்றும் திருமணமாகவில்லை என்றும் பெற்றோர் இருவரும் உயர்ந்த அரசாங்கப் பதவிகளில் பெங்களூரில் இருக்கிறார்கள் என்றும் சின்னசாமி தெரிந்து கொண்டான். அவன் வீட்டுக்குள் நுழையவே சின்னசாமி சங்கடப்பட்டான். சேரிக்கே பொருத்தமான தன் உருவம் இந்தப் பணக்கார வீட்டில் சிறிதும் பொருத்தமில்லாமல் இருப்பதாக அவனுக்குப் பட்டது. தயக்கத்துடன் நுழைந்தான்.

   அன்றே அஸ்வின் ஏகப்பட்ட உபகரணங்களை அவனுக்கு அறிமுகப்படுத்தினான். உபயோகப்படுத்தும் முறைகளை மிகவும் பொறுமையோடு சொல்லிக் கொடுத்தான். சிறிது நேரத்தில் சின்னசாமி ஒரு குழந்தையின் உற்சாகதோடும் பிரமிப்போடும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஆரம்பித்தான்.

   "சார் நீங்களும் வரைவீங்களா"

   "ம்.வரைவேன்" என்று சுருக்கமாகச் சொல்லி அஸ்வின் பேச்சை மாற்றினான்.

   மூன்று நாட்கள் லீவு போட்டு அவனுடனேயே இருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தான். அவனுக்கு உணவு, உடை எல்லாம் கொடுத்தான். தொடர்ந்த நாட்களில் சின்னசாமி நேரம், காலம் எல்லாவற்றையும் மறந்தான். வரையும் போது எத்தனையோ முறை அஸ்வின் வந்து நின்று பார்ப்பான். பல சமயங்களில் அவன் வந்தது, நின்றது, போனது எதுவுமே சின்னசாமிக்குத் தெரிந்ததில்லை. பல சமயம் வைத்த காபி, சாப்பாடு எல்லாம் வைத்த இடத்திலேயே இருக்கும். அஸ்வின் பல முறை நினைவு படுத்த வேண்டி இருக்கும். லீவு முடிந்து கம்பெனிக்குப் போக ஆரம்பித்த பின்னும் சின்னசாமிக்கு மதியம் சாப்பிடத் தேவையானவற்றைத் தயார் செய்து வைத்து விட்டுப் போவான். ஆரம்பத்தில் சின்னசாமிக்கு அது மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. "சார் இதெல்லாம் வேண்டாங்க" என்று சொல்லிப் பார்த்தான். "இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. வரையறதைத் தவிர வேற எல்லாத்தையும் நீங்க மறந்துடுங்க சின்னசாமி" என்று வாயடைத்தான். அவன் சொன்னது போலவே சின்னசாமி எல்லாவற்றையும் மறந்து தான் வரைந்து கொண்டிருந்தான். போட்டிக்கு முந்தைய நாளான இன்று தான் மனம் ஏனோ பழையதை அசை போடுகிறது.

   அன்று மாலை அஸ்வின் வந்தவுடன் சின்னசாமி கேட்டான். "இப்ப இதில் நான் நல்லா வரையறேனா சார்"

   "ஜமாய்க்கிறீங்க. முதல் பரிசு எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சமும் ஒரு கப்பும். போட்டியில் ஒரே ஒரு முக்கியமான விஷயம். அதில் மட்டும் நீங்க தேர்ந்தெடுக்கிறது சிறப்பாய் இருந்தால் பரிசு நிச்சயம்."

  "என்ன சார் அது"

  "ஒரு தலைப்பு தருவாங்க. அதற்குப் பொருத்தமான ஓவியத்தை நீங்க உங்க கற்பனையில் தேர்ந்தெடுக்கணும். அதுக்கு மட்டும் நான் உங்களைத் தயார் செய்ய முடியாது".

   சின்னசாமியின் உற்சாகமெல்லாம் வடிந்து போனது. "சார் அதெல்லாம் என் தலைக்கு எட்டுங்களா"

   "எல்லாம் எட்டும். எத்தனை அனுபவங்கள் எத்தனை காட்சிகள் நீங்கள் பார்த்திருப்பீங்க. அதில் எதாவது அந்தத் தலைப்புக்குப் பொருந்தும். அதை வரைஞ்சிடுங்க" என்று சின்னசாமிக்கு தைரியம் சொன்னாலும் அந்த விஷயத்தில் அஸ்வினுக்கே சந்தேகம் இருந்தது. இதை வரை என்றால் சின்னசாமி சிறப்பாய் வரைவது நிச்சயம். ஆனால் பெரும்பாலும் வித்தியாசமான தலைப்புகளே தரப்படும். சென்ற வருடம் டில்லியில் போட்டி நடந்த போது "சாரி ஜஹாங் சே அச்சா" என்ற தலைப்பு தந்து எல்லா இந்திய மொழிகளிலும் தலைப்பை மொழிபெயர்த்தும் கொடுத்தார்கள். இப்படி கவிதைத் தலைப்பாய் தந்தால் அதற்குப் பொருத்தமாய் சின்னசாமிக்கு வரைவதைத் தேர்ந்தெடுக்க முடியுமா என்று தான் யோசனையாய் இருந்தது.

   போட்டி நாள் அன்று இரண்டு செட் உபகரணங்களை எடுத்து வைப்பதைக் கண்ட சின்னசாமி "எதுக்குங்க ரெண்டு செட்"

  "எனக்கும் உங்களுக்கும்" என்று அஸ்வின் புன்னகையோடு சொன்னான்.

   தனக்குச் சொல்லிக்கொடுக்கும் அளவு ஞானம் உள்ளவன், இந்தக் கலையில் இவ்வளவு ஆர்வம் உள்ளவன் போட்டியில் கலந்து கொள்வான் என்று தனக்கு உறைக்காதது ஏன் என்று சின்னசாமி தன்னையே கேட்டுக் கொண்டான். ஆனால் தனக்குப் போட்டியாக தானே ஒருவனை வலுக்கட்டாயமாக உருவாக்க
Title: வாழ்க்கைப் பாடம்
Post by: AnJaLi on April 30, 2019, 08:06:51 pm
அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

   அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

   அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

   உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

   மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

   பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”

   அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”

   ”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

   “அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”

   “தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

   அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.

   ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.


Title: "அம்மா நான் பாசாயிட்டேன்"
Post by: AnJaLi on April 30, 2019, 08:12:07 pm
குமாருக்கு இதய துடிப்பு அதிகரித்துகொண்டே இருந்தது. அவனுடைய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளிவருகின்றன.

இது அவனுடைய வாழ்கையின் போக்கையே மாற்றப்போகும் தினம் என்பது தெளிவாக உணர்ந்திருந்தன். அவனுடன் படித்த நண்பர்கள் வசதியில் உயர்ந்தவர்களாகவும், இன்று தோற்றால் மறுபடி பரீட்சை எழுதி வெற்றி பெற பண பலமும், சுற்றத்தார் உதவியும் நிறைந்தவர்கள். குமாருக்கு அப்படி இல்லை. அவன் வீட்டுக்கு ஒரே பையன், அவன் அப்பாவும் அம்மாவும் அந்த சிறிய கிராமத்தில் விவசாய கூலிகளாக வேலை செய்கிறார்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் மகனை படிக்க வைக்க முயற்சித்து பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர். அதுவும் பள்ளி கட்டணம், புத்தகம் எல்லாம் இலவசமாக கிடைப்பதால் ஏதும் பிரச்சினை இல்லாமல் இருந்தது.

ஆனால் விதி ஊரை ஒட்டிய நெடுஞ்சாலையில் புதியதாக திறந்திருக்கும் பெட்ரோல் பங்கினால் வந்தது. அந்த பங்கின் முதலாளி குமார் அப்பா வேலை செய்யும் பண்ணையாருடையது. அவர் உரிமையோடு குமாரின் அப்பாவை கூப்பிட்டு "என்னப்பா உன் பையன் பத்தாவது பரீட்சை எழுதி இருக்கானாமே, எப்படி, தேறுவானா மாட்டானா, எப்படி இருந்தாலும் பரவாயில்லை உன் பையனை என்னோட பெட்ரோல் பங்குல கேசியர் வேலைக்கு போடறேன், உடனே அவன வேலையில போய் சேர சொல்லு" என்றார். குமாரின் அப்பாவுக்கோ அவரின் கட்டளையை மீற முடியாத தர்மசங்கடமான நிலை. குமாரின் அம்மாவிடம் இதை பற்றி விவாதித்து கொண்டிருக்கும் போது குமார் வீட்டினுள் நுழைந்தான். "இங்க பாருங்க, அவன படிக்க வைக்க நாம இது வர ஒன்னும் பெரிய செலவு ஒன்னும் பண்ணதில்ல, அவன் படிக்கணும் என்று ஆசை  படறான், அவன் படிச்சு முன்னேறினா நமக்கு தானுங்க பெரும, அதனால அவன் தொடர்ந்து படிக்கட்டும்" என்றார். குமாரின் அப்பாவும் இதற்க்கு ஒத்து கொண்டார் ஒரு நிபந்தனையோடு, பாஸாயிட்டா  தொடர்ந்து படிக்கலாம், ஆனா பெயிலாயிட்டா பெட்ரோல் பங்க் வேலைக்கு போகணும் என்று.   நண்பன் பேப்பரை கொடுத்து பரீட்சை நம்பரை பார்க்க சொன்னான். "அம்மா நான் பாசாயிட்டேன்" "அம்மா நான் பாசாயிட்டேன்"

டேய் குமார், குமார் என்னடா பகல் கனவு, கஸ்டமர் வந்து இருக்காங்க பாரு, போய் பில்லு போடற வழியை பாரு என்றபடி கல்லாவில் உட்கார்ந்தார் பண்ணையார்.


Title: கவலைப்படாதே சகோதரா!
Post by: AnJaLi on April 30, 2019, 08:13:09 pm
காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.
"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.
அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.
அதைப்பார்த்த சிங்கம், "ஏய்........ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.
அதற்கு யானை, "இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்.........."என்றது.
அது கேட்டு சிங்கம் யோசித்தது. "இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!
கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!" என்று அது புரிந்து கொண்டது.
அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது!
Title: Re: வாழ்க்கைப் பாடம்
Post by: MDU on May 06, 2019, 09:58:49 am
(http://img.over-blog-kiwi.com/0/98/03/83/20160317/ob_9d35a0_mdg-3454-8547-1.gif)
Title: Re: சிறை வாசம்
Post by: MDU on May 06, 2019, 10:00:33 am
(http://img.over-blog-kiwi.com/0/98/03/83/20160317/ob_9d35a0_mdg-3454-8547-1.gif)

ARUMAI
Title: Re: சொல்லாமலே
Post by: RaDha on March 06, 2022, 01:54:58 pm
wow