46
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-031
« on: September 18, 2023, 10:51:11 am »பேசும் கண்கள்
கண்ணனுக்கு மை அழகு ஆனால் அவளுக்கோ அவள் கண் தான் அழகு!
ஆயிரம் சக்திகள் இருந்தலும் அவளின் கண்ணில் இருக்கும் சக்திக்கு நிகர் ஏதும் இல்லை !
காந்த சக்தியோ இரும்பை இர்க்கும் அவளின் கண்ணில் இருக்கும் காந்தம் எனது இதயத்தை ஈர்த்தது !
இடி இடுத்து மின்னல் வரும் உனது கண்ணின் மின்னலிலே எனது இதயம் சுக்குநூறாய் உடைந்தது
பெண்ணே!
நீ ஓரக்கண்ணால் பார்க்கும் பொழுது எனது இதயத்தின் ஓரத்தில் மற்றொரு இதய துடிப்பு
இன்னும் கூடியது ஒரு ஆயுட் காலம் !
உனது கண்ணின் கருப்பு வைரம் என்ன நோக்கி தோட்டாக்கள் பல பாய்கின்றன பெண்ணே !
பெண்ணே வெண்திரையை கண்ணுக்குள் வைத்து உனது நினைவை எனது நெஞ்சுக்குள் வர செய்தாயே!
கண்கள் கூட பேசுவதை உனது கண்களை கண்டுதான் புரிந்துகொண்டேன் பெண்ணே !
அன்போடு என்னை பார்க்கும் காதல் பார்வை! என்னை காணவில்லை என்றால் ஏக்கமான பார்வை ! நான்
பெண்களோடு பேசும்போது ஓர பார்வை! என் மீது கோவம் கொண்டு உனது கையில் சிவத்த மருதாணியை
போல கோவத்தில் பார்வை! கோவத்தில் நீ இருக்க நான் அளித்த பரிசில் நீ பார்க்கும் வெட்க்க பார்வை!
உனது கண்ணில் கடலைப்போல நீரை காண ஆசை இல்லைபெண்ணே ஆனந்த கண்ணீரையே காணவேண்டும் ..!!!
அடடா உலகத்தில் இருக்கு மொழிகளைவிட உனது கண்ணுக்கு இருக்கு மொழிகள் அதிகம் போல !
இந்த அழகிய கண்னில் மயங்கிய நான் இப்பொழுது நிமிர்கிறேன் பெண்ணே உனது நெத்தி போட்டில் !
அடிப்பெண்ணே உனது கண்ணின் அழகில் மயங்கியத்தை வாய் இருந்த நான் சொல்லிவிட்டேன்
உனது அருகில் இருக்கும் இலைகள் எப்படி சொல்லும் அது பார்த்து கொண்டிருக்கும் நான் பார்க்காத முகத்தின் அழகை !
மென்மையான காற்றின் மூலம் தெரிவிக்கும் உன்மீது பட்டு !!!
நீல வானம்