Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Passing Clouds

Pages: [1] 2 3 4
1
மாற்றம் ஒன்றே மாறாதது (ஏ)மாற்றம் ஒன்றே மாறாதது



5 வருடத்திற்க்கு ஒரு முறை கையில் போடும் அடையாளம்
அடுத்த 5 வருடத்திற்ககான மக்களின் வாழ்விற்கான அடையாளம்

18 வயது வந்ததும் வருகிறது ஓட்டுப்போடும் உரிமை
போட்டபின்பு மக்கள் இருப்பதோ தனிமை

ஆட்சியை மாற்றவேண்டும் என்பதர்க்காக அல்ல இந்த தேர்தல்
நம்மை ஆட்சி செய்பவரினை நாமே தேர்ந்தெடுப்பதே இந்த தேர்தல்

விரலில் மை வைப்பார் ஓட்டுப்போடதருக்கு அடையாளமாய்
அந்த மை மறைவதற்குள் சொன்ன வாக்கு போய்விடும் மாயமாய்

அனைத்திலும் கலப்படம் நாடாகும் இ ந்த உலகத்தில்
ஓட்டுப்போடும் போது நடக்காத இந்த நகரத்தில்

காச வாங்கிட்டு போடுறியே ஓட்ட ,காச வாங்கிட்டு போடுறியே ஓட்ட
உனையலாம் நடுரோட்டுல வச்சிஅடிக்க வாங்கணும்டா சாட்ட ....

தேர்தலில் வெற்றியடைந்தால் தருவாங்கப்ப இலவசம்
இவங்கதான் மக்களை சோம்பேறியாகும் வேஷம்
இவங்கதான் மக்களை சோம்பேறியாகும் வேஷம்

ஒரு விரல் புரட்சின்னு ஊருப்பூர கத்துறோம்
தேர்தல் முடிஞ்சா வாயதானே பொத்துறோம்
ஏதும் கேட்காம நாம  வாயதானே பொத்துறோம்

கள்ள  ஓட்ட போடுற குடிமகன்
நல்ல ஓட்ட போடமா வீட்டுல இருக்க குடிமாகான்

எந்த வேலையும் செய்யாம சம்பளம் வரும் அரசியல் வாதிக்கு
அட வேலையை செஞ்சு கொடுத்த கிம்பளம் கிடைக்கும் அரசியல் வாதிக்கு

நண்பா நண்பி நா வரேன் டா அரசியலுக்கு
சரி அந்த கத நமக்கு எதுக்கு அதுக்கு இன்னும் காலம் இருக்கு


பெரிசு சிறுசு எல்லாமே அரசியல் பத்தி பேசி துள்ளுது
மச்சி அரசியல மாற்றம் ஒன்றே மாறாதது
ஏமாற்றம் ஒன்றே மாறாதது


நீலவானம்

2
விலைமதிமற்ற அன்பு

நீளவானத்தை விட நீண்டந்து  அன்பு எங்கள் அன்பு ...

பறந்துகிடக்கும் கடலின் ஆழத்தைவிட ஆழமானது எங்கள் அன்பு ....

அரைக்கால் சட்டை போடு ஊர் சுற்றுவோம் காற்றைப்போல ...

சட்டைகளில் ஆயிரம் கரை இருக்கலாம் ஆனால் எங்கள் உள்ளங்கள்
தூய்மைக்கு மறுபெயர் …

நாம் உயிர்வாழும் காற்றில் கூட  கலப்படம் உள்ளது, 
கலப்படம் அற்றது எங்கள்  அன்பு

சந்தோஷத்தில் நாங்கள் துள்ளிக்குதித்து ஆடும்போது
பூக்கள் கூட பூத்துக்குலுங்கும் இன்பத்தில்

எங்கள் துக்கங்களை எங்களோடு  கண்ணீராக பகிர்ந்துகொள்ளும் மழைகள் ...

இயற்கையின் வரப்பிரசாதங்கள் அனைத்தும் எங்கள் அன்பிற்கு  கிடைத்த பரிசு ...


ஆம் , ஒரு அண்ணனின் அன்பை பற்றிய கவிதைதான் இது ....

வாடாத மலரைப்போல் என்னை வாடாமல் பார்ப்பவன்

என்னக்கு ஒன்று என்றல் இதயத்தில் இருந்து துடிப்பவன்

தனக்காக எதையும் எண்ணாதவன்

தன்  கரங்களில் என்னை சுமப்பவன்

கடவுள்கூட தம்பியாக இருக்க ஆசைப்படுவார்  இவனிடம் ….

எத்தனை அன்பு காட்டுகிறாய் என்னிடம் …

அண்ணா என்று கூப்பிடுவதைவிட அம்மா என்று கூப்பிடுவது பிடித்தது எனக்கு

இப்படிபோல ஒரு அம்மா ஆனா அண்ணா உண்ட உனக்கு ??




நீலவானம்

4
அம்பை  தாங்கும் அன்னை


தனது உயிரை கொண்டு பிள்ளைகளை காப்பது அன்னையின் அன்புமட்டுமே .....

இந்த உலகத்தில் வாழ்வதற்கு இன்றியமையாதது பணம்

பாசத்தை பணம்கொடுத்து வாங்கும் உலகில் நாம் வாழ்த்து கொண்டிருக்கிறோம்

சுயநலத்தின் பிடியில் பூமிக்கு அடியில் செல்வோம் என்று தெரிந்தும்  மற்றவரிடம் நடந்து கொள்கிறோம்...

விலைமதிக்க முடியாத கரந்த பாலினை  போல சற்றும் சுயநலம் கிடையாதா அன்பு
தாயின் அன்பு மட்டுமே இந்த உலகத்தில் ....

இதை அன்னையோடு இருந்து உணராதவர் பலர்  அன்னையை இழந்து உணர்ந்தவர்கள் சிலர்...

சராசரி அன்னையின் ஆதங்கம் பிள்ளையின் எதிர்கால வாழ்கை அவனது அல்லது அவளது
பெயருக்கு பின் படிப்பின் அடையாளம் ...

எத்தனை இன்னல்கள் இந்த உலகில் ஒருவனுக்கு  கல்வி கற்க

எத்துணை இன்னல்கள் இருந்தாலும் அத்தனை அம்புகளையும் தனக்குள் வாங்கி
பிள்ளைகளை கரைசேர்ப்பது அன்னை மட்டுமே ....

பணத்தினால் வரும் அம்பு தனது சொந்தத்தினால் வரும் அம்பு  ஆசிரியரினால் வரும் அம்பு கணவர்முலமாகவரும் அம்பு  அனைத்தையும் தங்கினால் குழந்தைக்காக....

படிப்பின் அருமை தெரியாதவர் பலர் , வேலைசெய்யும் இடத்தில் கூட
படித்தவரின் நிலை ஒருபடி உயர்ந்ததும் , படிக்காதவர் வேலை  தெரிந்தும் கீழே உள்ளார் தொழிலாளியாக...

அன்னையின் கனவு மகனோ மகளோ நல்ல நிலைக்கு வரவென்றும் என்று
அதற்காக எதையும் தங்குவாள்  அன்னை

கர்ப்பத்தின் வழியை தாங்கியவளுக்கு, ஒரு பிறவியில் இரண்டாம் ஜென்மம் எடுப்பவளுக்கு ,
இந்த வலியெல்லாம் தூசிக்கு சமம் ...

மனிதனை படைத்த கடவுள் ஓய்வு பெறவே அன்னையர்களை படைத்துவிடான் போல
கடவுளின் வேளை அன்னையிடம்... படைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு பிள்ளை பிறப்பது ...

படத்தை குழந்தையினை பேணி காத்து .. பராமரித்து ..பாலூட்டி ...சீராட்டி ...தனது எல்லையற்ற அன்பினை
கொடுத்து ... படிக்க வைத்து நேரம் தவறாமல் சமைத்து புடித்த உணவு கொடுத்து... திருமணம் ஆகும் வரை
அணைத்து அம்புககளையும் சுமப்பவள் அன்னை...

எத்தனை பாசம் காட்டினாலும் வளந்த பிறகு காதல் எனும் இன்பத்தால் அன்னையை விட்டு சென்று
அவளது முதுகில் குத்துகிறார் ...

வேலைகிடைத்ததும் ஆணவம்  கொண்டு அன்னையை மதிக்காமல் அவளது முதுகில் குத்துகிறார்

திருமணம் ஆனதும் தனிக்குடித்தனம் சென்று பாலூட்டிய அன்னையை முதுகில் குத்துகிறார்

வயதான தாயை பார்க்கமுடியாமல் அவருக்கு உபசரிக்க நேரம் தராமுடியாமல்  முதியோர் இல்லத்தில்
சேர்த்துவிட்டு  அன்னையின் இதயத்தில் குத்துகிறார்



நாம் எத்துனை கஷ்டம் வேதனை இன்னல்கள் அன்னைக்கு கொடுத்தாலும்
நம்மை பார்க்கும் பொது கேட்கும் ஒரே வார்த்தை சாப்டியா  பா !!! என்றுதான்


தன்னை பெற்ற அன்னைக்கே இந்த நிலையென்றால் மற்றவருக்கு கேள்விக்குறிதான் ??


வாழும் தெய்வத்தை காப்போம் மற்றும் மனிதநேயத்தை வளர்ப்போம் நமக்காக அம்பை சுமத்தவளை
வாழ்நாளெல்லாம் சுமப்போம் அதுவும் ஒரு சுகம் தன தோழா




என்றும் உணர்ச்சிமிக்க (சென்சிடிவ் )

நீலவானம்
[/size]


5
Song -Mootu Ondru Malarnthida Marukum

Movie -Kushi




காதல் விதை
போல மௌனம் மண்
போல முளைகாதா
மண்ணை துளைகாதா

7

மௌனம் எனும் மொழியால்

மழையின் அரவணைப்பில் ஆனால்  இருவரும் தூரத்தில் !!

நனைந்தது தேகம் மட்டும் அல்ல
 மனமும், தான் சோகத்தில்!!!

மழையின் சத்தத்தில் மௌனம் எனும் மொழியில் இருவர் !!

 வலி தோன்றுவது கண்ணில் நீர்த்துளியாக ..
அடை  மழையோ அதை போக்கிவிட்டது !!!

உன்னிடம் பேசத்தான் நினைக்கிறேன் பெண்ணே
எனது கைகள்கூட தடுக்கிறது  காத்திரு என்று !!!

நம்மை சுற்றி  தண்ணிர்  சூழ்ந்திருந்தாலும்
உன்னை அரவணைக்கவே நான்  காத்திருக்கிறேன் !!!


என்னவளை. எனது சோகத்தினால் காயப்படுத்த வேண்டாம் என்று
என்னை நனைத்து  மனதின்   சோகத்தை  மாற்றினாயே !!

பெண்ணே நீ என்னை விட்டு விலகி விலகி சென்றாலும் அந்த
குடைபோல உன்னோடு நான் இருப்பேன் !!

எங்கும் உள்ள காற்றைப்போல  உனது மூச்சுக்காற்றில் வசிப்பேன்
நீ என்னை வெளியேற்றினாலும் சுவாசிக்கும்போது உனக்குள் புகுவேன்  !!

எத்தனை   காயங்கள்  எற்படுத்தினாலும்
நான் உன்மீது வைத்திருக்கும் அன்பு அனைத்தையும் உடைத்தெறியும் பெண்ணே !!

உன்மேல் வைத்த அன்புக்கு
 அந்த வானம் சாட்சி
அந்த காற்றும்  சாட்சி
 நான் போகும் வரை அந்த நிலம் கூட சாட்சி !!

எனது மூளை கூட  சொல்கிறது உன்மீது சினத்தை காட்ட ..
கர்வம் தலைக்கேராதவரை காதலும் கை பிள்ளைதான் !

கண்மணியே நீயே எனது முதல் பிள்ளை உன்னை
காலமெல்லாம் காப்பேனடி பெண்ணே கண்ணுக்குள் கருவிழியாக !!

பெண்ணே வீண் பிடிவாதம் எதற்கு! மழையில் கலைந்தது
உனது முகச்சாயம் மட்டும் அல்ல

உனது மனதில் நீ என்மீது வைத்திருந்த காதலும்தான்

என்றும் காதலுடன்


💜💜💜நீலவானம் 💜💜💜


8
பூவே வாய்
பேசும்போது காற்றே
ஓடாதே நில்லு

From 12B

Most lovable Lines

உன் சுவாச
பாதையில் நான் சுற்றி
திருகுவேன்

நேசத்தினால்
என்னை கொன்றிவிடு
உன் நெஞ்சுக்குள்ளே
என்னை புதைத்துவிடு


Thnaks

Neelavaanam

9
💕💕💕காதலின் சின்னம் கைகளில் 💕💕💕

வானின் தூரம்போல, காற்று படர்ந்திருப்பதைப் போல
கடலின் ஆழம்போல, சூரியனின் வெப்பத்தை போல
காதலும் உள்ளது இந்த உலகத்தில்.

நீ கையால் காதலின் சின்னம் காட்டுகிறாய்
ஆனால் உனது முகத்தை மறைத்துக் கொண்டு

சிந்தேன் ஏன் என்று என்னையே கேட்டுக்கொண்ட தருணம்

உனது வெட்க்கம் கண்டு சூரியன் உறைந்து போய்விடும்  என்றா?
இல்லை காற்று தன் பாதையை மாற்றி உன்னையே சுற்றும் என்றா?

நீ வெட்க்கப்பட்டு ஒளிந்தது  பட்டுப்போன மரம், என்ன ஒரு மாயம்
துளிர் விடுகிறது பெண்ணே!!!

என்ன ஒரு அதிசயம் இயற்கையின் இன்னிசை நிகழ்ச்சி நீ வெட்க்கபட்டதால் அரங்கேரியது
காற்று இன்னிசை அமைக்க மரங்கள் அனைத்தும் ஆனந்தத்தோடு ஆடுகின்றதே  பெண்ணே !!!

உன்னைப் பூவோடு ஒப்பிடமாட்டேன் ஒருநாள் பூ உதிர்ந்துவிடும்
உன்னை நிலவென்று சொல்லமாட்டேன் ஒரு நாள் முழுவதும் இருக்கமாட்டாய்
உன்னை எனது நிழல் என்று சொல்லமாட்டேன் ஒளி இல்லையென்றால் பிரிந்துவிடுவாய்
பெண்ணே நீ எனது இதயத்தின் ஓசை நான்  இரு(ற)க்கும் வரை என்னோடு இருப்பாய் !!!

உனது இதயத்தைக் கைகளில் காட்டி எனது இதயத்தை உன்னோடு  சேர்த்தாயே பெண்ணே
கத்தியின்றி இரத்தமின்றி பரிமாறப்பட்ட இதயம் காதல் எனும் அறுவைசிகிசையில் !!!

மீண்டும் பிறந்தோம் காதளர் என்னும் குழந்தையாக உனக்கு நான் எனக்கு நீ என்று !!!

ஒளிந்து கொண்டது போதும் பெண்ணே இயற்கை ரசித்த உனது வெட்கத்தை
நானும் ருசிக்க ஆசைப்படுகிறேன்!!!

இன்றுமட்டும் அல்ல வாழ்நாள்முழுவதும் ❤❤❤



என்றும் காதலுடன்

💙💙💙நீல வானம் 💙💙💙


10
ஏறு தழுவல்

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்


ஜனவரி மாதம் என்றால் நினைவுக்கு வருவது ஒன்று பொங்கல்
மற்றொன்று ஜல்லிக்கட்டு

துள்ளிப்பாய்த்து வரும் காளைகளை அடக்கும் வீரனுக்கு
வாரி வாரி வழங்குவார்கள் பரிசு

தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு

அதில் துள்ளி விளையாடும் காளைகள் கம்பிரம் உடையவை

காளைகளைத் தன்  சொந்த பிள்ளைகளைப் போல வளர்ப்பவர்களுக்கு உண்டு

ஜல்லிக்கட்டில் தோற்று போனால் அதை மண்ணில் புதைப்பவர்களும் உண்டு

இப்படி புதைத்துத்தான் தொண்ணூற்றி இரண்டு வகையாக இருந்த காளைகள்

இப்பொழுது கைவிட்டு என்னும் வகைதான் என்ன ஒரு பரிதாப நிலை !!!

தமிழரின் பண்பாடு எப்படி மண்ணோடு போனதே காரணம் இயலாமைய்யா ?

இல்லை தொழில்நுட்ப வளர்ச்சியா ? இல்லை தனிமனிதனின் அலட்சியமா ?

அல்லது விவசாயத்தின் தாழ்ச்சியா ?

பழையகாலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவந்த நாம்

இப்போதைய நிலைமையை எண்ணி பார்ப்போம் ?

மனிதர்களுக்கே இந்த நிலை என்றல் காளைக்குக் வெறும் கேள்விக்குறிதான் ?

ஜல்லிக்கட்டு தடை என்றதும் போராடினார்கள் மக்கள்

தமிழனின் மரபு அழியக் கூடாது என்பதற்காகத் தான்  அந்தப் போராட்டம்

அனால் நாம் முந்தய கால பண்பாட்டை மறந்து அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் !

கூட்டுக்குடும்பமாக இன்று எத்துனை குடும்பங்கள் வாழ்த்துக்கொண்டிருக்கின்ற

அழிந்துபோன காளைகளின் வகைகள்போல நாமும் நமது பண்பாட்டை அழித்துக்கொண்டிருக்கிறோம்

சிந்திப்போம் அன்பெனும் சிறகை விரிப்போம் எஞ்சியுள்ள காளைகளைக் காப்பது போல

நாமும் நமது குடும்பங்களோடு ஒன்றிணைத்து வாழ்வோம் விலைமதிக்க முடியாத நேரத்தை

அவர்களுக்காக ஓதுக்குவோம் சந்தோசமாக வாழ்வோம்!!!

தைத்திருநாளில்  வெறும் பொங்கல் சமைத்து உண்ணாமல்

அன்பின் விருந்து படைப்போம் தமிழரின் பண்பாட்டைக் காப்போம்


"கூடிவாழ்ந்தால் கோடிநன்மை "



நீலவானம்



11
குழந்தை தொழிலாளி

விளையாட்டு மைதானத்தில்  துள்ளித்திரியும் குழைந்தைகள்

வானத்தில் பறந்துவிளையாடும் வண்ணத்துப்பூச்சிககளை போல

குழந்தையின் மழலை மொழி காதில் தேன் பாய்வது போல

குழந்தையின் புண்முக சிரிப்பு பூத்து குலுங்கும் வண்ண பூக்கள்போல

குழந்தையின் குறும்புத்தனம் முக்கனியின் சுவையைப் போல

ஆனால் இவையெல்லாம் வேலை செல்லும் குழந்தைக்குக் கிடைக்காது போல !!

அன்னை கர்பதில் கன்னட சொர்கம் அன்னையின்  அரவணைப்பில் கண்ட இன்பம்

பாதம் வலிக்கும் என்று தோளில் தாங்கிய தந்தையின் நேசம்

இவை அனைத்தும் கடலில் மூழ்கின கப்பலைப் போலக் குழந்தை தொழிலாளருக்கு !!!

புத்தகம் சுமந்தது செல்லும் வயதில் நீ சுமப்பதோ குடும்பத்தின் பாரம்

நீ சுமைதாங்கி என்று கடவுள் நினைத்தானோ ?

தந்தையின் அலட்சியமோ தாயின் கஷ்டமோ இல்லை சமுதாயத்தின் அக்கறையின்மையோ

இவை அனைத்தும் புரியாத வயதில் அழுக்கான ஆடை கொண்டு போகிராயோ  பூச்செண்டு !

நீயும் பறக்கத்தானே ஆசைப்படுகிறாய் பட்டத்தைப் போல

நீயும் ஆடத்தானே ஆசைப்படுகிறாய் ஊஞ்சலைப் போல

நீயும் விளையாடத்தானே ஆசைப்படுகிறாய் மற்றவர்களைப் போல

அனைத்து ஆசையும் நிராசையாய்  போனதே காற்றிழந்த பலூனைப் போல!

குழந்தை தினத்தைக் கொண்டாட வேண்டிய நீ தொழிலாளர் தினத்தை அல்லவா கொண்டாடுகிறாய்!

நீ சுத்தியலினால் ஆணியை  அடிக்கிறாய்

ஆனால் காயம் அடைந்தது என்னவோ எனது இதயம்

நானும் சமுதாயத்தில் ஒருவன் தானே !!!

 
நீலவானம்

12
தாங்குவேன் உன்னை வாழ்நாளெல்லாம்


நீ மயில்போலச் சலங்கை கட்டிக்கொண்டு ஆடும்போது

உன்னை வியந்து பார்க்கிறேன் எனது இமைகள் மூடாமல்

பெண்ணே உனது காலில் கட்ட அந்தச் சலங்கை

எத்துனை  ஜென்மம்  தவம் செய்ததோ

மயில் தொகை வெறித்து ஆடுவது அழகு

அதைவிட உனது நடனம் பேரழகு

குயிலின் சந்தம் இனிமையானது

அதைவிட உனது சலங்கையின் ஒலி மிக இனிமையானது

ஜல் ஜல் ஜல் எனும் உனது சலங்கையின் ஓசை

கைபேசியின் ரீங்காரத்தை போல எனது இதயத்தில் ஒளித்து கொண்டே இருக்கிறது

நீ தக்க திமிதா  என்று ஆடும்போது உனது  கண்களின் அசைவில்

மயங்கிப் பூக்களும் ஆடுகின்றன பெண்ணே

உனது  கண்ணசைவில் மயங்கியது

பூக்களை மட்டும் அல்ல நானும்தான்

இயற்கை கூட உனது நடனத்தைப் பார்த்து

மழை பூக்கள் தூவுகின்றது


பெண்ணே  அதில் நீ நனைந்து  ஒரு துளி உனது பாதத்தில் கண்டது சொர்கம்

அந்தச் சொரக்த்தை தாங்க வருகின்றது எனது கைகள்

இன்று மட்டும் அல்ல வாழ்நாளெல்லாம் !!!



நீல வானம்

13
கற்பணை குடும்பம்


"அன்னையிடம் நீ  அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் "

கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது

அன்னையின் பாசம் தந்தையின் நேசம்

பாசம் இன்று கலப்படமாகிப்போனது

பணம் இருக்கும் வரைதான் இருக்கும் அந்த கலப்படமான பாசம்

அவர்களுக்கு உபயோகம் இருக்கும் வரைதான் இருக்கும் அந்த கலப்படமான விசுவாசம்
 
இந்த விசுவாசம் பாசம் மறந்துவிடும் காலப்போக்கில்

நம்மிடம் ஒன்றும் இல்லையென்றால் புதைத்திடுவார் அவர்களின் காலுக்கு அடியில்

ஆனால் துளிகூட களங்கமில்லாத எதையும் எதிர் பாராத அன்பு

தாயின் அரவணைப்பில் தந்தையின் அக்கரையில் தான் உள்ளது

வெண்சங்கு சுட்டாலும் வெண்மைதரும் அதுபோல

அவர்களை நாம் உதாசீன படுத்தினாலும் ஒரு துளிகூட மாறாத அன்பு பெற்றோரின் அன்பு

அந்த அன்பு பசுவின் மடியில் இருந்து வரும் பாலை விட தூய்மையானது

நீல வானத்தின் எல்லையை விட பெரியது

எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் அதை  ஒரு நொடியில் போக்கிவிடும்

அன்னை மடியும் தந்தையின் அறிவுரையும்

தலை சாய்க்க மடியும் இல்லை அறியுரை கேட்க என்னக்கு பாக்கியமும் இல்லை

உங்கள் கை கைகோர்த்து நடக்கத்தான் ஆசை எனக்கு  அம்மா அப்பா

ஆனால் கடவுளுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை உங்களை அழைத்து சென்றுவிட்டான்

உங்களின் அன்பையும் அறியுரையும் கேட்க ....

உங்கள் இருவரோடும் கைகோர்த்து போக என்னக்கு ஆசை அம்மா என் அப்பா

அதனால் கற்பனையாக வரைத்தேன் சுவரில் ............. கற்பனையோடு வாழ்கிறேன் உங்களோடு

அப்பொழுதும் என்னையே பார்க்கிறாய் அம்மா ஐ லவ் யு மா



ப்ளஸ் உங்க அம்மா அப்பாவை கஷ்டப்படுத்தாதீங்க இல்லாத போதுதான் அவங்க கஷ்டம் தெரியும் ...




நீலவானம்

14
Birthday Wishes / Re: Happy Birthday VaanMugil
« on: November 23, 2023, 10:11:16 am »
happy birthday

15
Birthday Wishes / Re: Happy Birthday Nachathra
« on: November 22, 2023, 12:15:03 pm »
Happy birthday 🎈🎁

Pages: [1] 2 3 4