Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1]
Post info No. of Likes
கவிதையும் கானமும்-030 உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-030


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

August 21, 2023, 09:55:14 pm
1
Re: கவிதையும் கானமும்-031 கருப்பு  வெள்ளை  கவிதையடி... 
உன் ஒன்றை  விழியில்  தெரியுதடி...

மறு  விழி  காண  என்  இருவிழி  துடித்தது...
அதை  இலை  கொண்டு ஏனோ  மறைத்தது....

அன்று  மொழியில் பேசிச்சென்றாள்..
இன்று  விழியால்  பேசிக்கொன்றாள்...

இலை  கொண்டு  மூடினாள் 
பின்னழகை....
எதைக்  கண்டு  தேடுவேன் பெண்ணழகை...

விழி தரும் செய்திதான்  என்னவோ?
றெக்கையின்றி பறக்கிறேன்,, நான்
என்ன  செய்வேன்  அய்யகோ!!!

அவள்   மொழி  கேட்டு  நானும்  கவிஞன்  ஆனேன்...
அவள்   மொழி  கேட்டு  நானும்  கவிஞன்  ஆனேன்...
அவள்  விழி  பார்த்து மதிமயங்கிப் போனேன்...

ஓட்டுமொத்த  காதலையும்  ஒன்றை  விழியில் காட்டினாள்...
இன்னும்  என்னடா  வேண்டும்  என்று  அவள்  இதய அறைக்குள் 
என்னை  வைத்து  பூட்டினாள்....

விரல்  இடையே   நடனமாடியது  என் 
பேனா...
அவள்  விழி  பேசிய மெளன  மொழியில்  தடுமாறி  போனவன்  நானா...

ஒரு  விழி  கண்டு கொண்டேன்   இப்போது...
அவள் மறு விழி  காண்பது  எப்போது?

இன்னும்  இன்னும்  சொல்ல  மனம்   ஏங்குது...
அடுப்படியில்  பூனையும் வந்து 
தூங்குது...

பசி  மயக்கம்  கண்ணை  கட்டுது...
போய்ட்டு   வந்து  சொல்லவா  மிச்சம்  விட்டது...
போய்ட்டு   வந்து  சொல்லவா  மிச்சம்  விட்டது...🤭

September 18, 2023, 01:19:33 pm
1
Re: கவிதையும் கானமும்-035 கருகும் மலர்கள்...!

மலரும்முன் மண்ணில் வீழ்ந்தாயே,
கனியும்முன் பிஞ்சில் வெம்பினாயே,
அழுவதற்கு கூட நேரம் இல்லமால்,
அரைவயிரை நிறைக்க ஓடுகின்றாயே,
உன் நிலை கண்டு என் உள்ளம் உறைகின்றதே..!

காலை கதிரவன் ஒளி வீசும் முன்னே ;
வெட வெடத்த நடை பயணமாய் ,
பெற்றோரின் துயர் துடைக்க ,
கையெல்லாம் மையாய் இருக்க வேண்டிய பருவத்தில் ,
ஐயோ !!
செத்த பிணத்தின் அருவருப்பு
போதுமடா சாமி அவர்கள் நிலை .
அதை பார்க்க என் இமை இடம் கொடுக்கவில்லை ..!
கருவறையின் சுகம் மட்டும் கண்டாய் வாழ்வில்
கல்லறைக்கூட கலங்கும் - உன் காய்ச்சிய கை கண்டு.......

நெருப்பில் சுட்ட இரும்பாய் தினம் தினம் அகதியாய்
கனவுகள் பல சுமந்து......
கார்மேக கண்களில் கண்ணீரை சுமந்து
செம்பட்டை முடியுடன் வீதியில் உன்னை பார்க்கையில் மனம் பதபதக்கின்றது என்ன பிறப்பிதுவென்று..!
செங்கற்கள் இடையில் சிக்கிய செந்தாமரையாய் ~ வழிந்து ஓடும் உன் குருதி அதில் சிவந்த செங்கற்கள் உன் வறுமையை பேசும்..!
அய்யன் பட்ட கடன் தீர்க்க அடகு வைத்தாய் உன் இளமையை தியாகியாய் நீ சிந்தும் இரத்தம் பறைசாற்றும் உன் அன்னையின் துயரை..!
நீ ஒட்டிய சுவரொட்டிகள் அனைத்தும் வேதனையில் கிழிந்தது உன் நிலை காண்கையில்..!
ஒரு கையில் பொம்மையுடன்
மற்றொரு கையில் புத்தகத்தோடு
வீட்டில் மகிழ்ச்சியாய் இருக்கும்
குழந்தையை ஏக்கத்தோடு உன் கண்கள் பார்க்கின்ற வலி நிறைந்த பார்வையை கண்டு மனம் உடைகின்றது..!
பசி வயிற்றை வாட்டி எடுக்க
பிச்சை எடுக்க மனம் தடுக்க
கொஞ்சம் வயிற்றை நிறைக்க நீ படும் துயர்கள் அனைத்தும் கனவாக கரைய மனிதம் காப்போம் குழந்தை தொழிலாளி இல்லா சமூகம் உருவாக்குவோம்..!🤝

என்றும் GTC நட்💐களுடன் நான் உங்கள்

December 19, 2023, 10:06:12 am
1
Re: கவிதையும் கானமும்-035 ஆசபட்டேன் ஆசப்பட்டேன்
பள்ளி செல்ல ஆசபட்டேன் !
அம்மா கை புடிச்சு
ஆசை நடை நடந்து பள்ளி போக ஆசைப்பட்டேனே !
அப்பா சைக்கிளில் அசைந்து அசைந்து பள்ளி போக ஆசைப்பட்டேனே!
தலைமகன் எந்தன் தலையில் உச்சிவகுந்தெடுத்து
ஊர்வலம் போகும் தேர் போல அலங்காரித்து
அழகு சீருடை தான் அணிவித்து.
சீக்கிரமாய் என்னை பள்ளி கிளப்பும் -என்
சிரித்த முகத் தாயே !
வருந்துகிறேன்  நம் நிலை கண்டு .
கஷ்டமில்லாம நாம வாழ
இஷ்டம் இல்லாம இரும்பு பட்டறைக்கு வேலைக்கு போறேனே !
என் கூட்டு பிள்ளைங்க
எகிரி குதிச்சு விளையாடயிலே  - அத
எட்ட நின்னு பார்க்கும் என் மனசு .
விட்டுட்டு போக தோணுது பாதியிலேயே
நான் பார்க்கும் வேலையை விட்டுட்டு போக தோணுதே !
வழியில வாத்தியாரை பார்க்கும்போது வணக்கம் சொல்லி
வாரேன் உங்களோடு பள்ளிக்குன்னு வாய் சொல்ல துடிக்குதே !
வறுமையின் கொடுமை நினைவுக்கு வரவே
வாய் மூடிய பதுமையாய் வந்துடுவேன் பட்டறை வேலைக்கு !
படிக்க இஷ்டப்பட்டு துடிக்கும் இதயம் இரும்பு அடிப்பதா ?
சுழன்று விளையாடும் வயதில் சுத்தியல் பிடிப்பதா ?

சுமைகளை சுகம் எனத் தாங்கும் வயதில்லை எனக்கு - ஆம்
சுகங்களை சுமையில்லாமல் தாங்கும் வயதே எனக்கு.
உள்ளுக்குள் ஊஞ்சலாடுது வயசு !
வீட்டுக்குள் வறுமையால்
திண்டாடுது மனசு !

நித்தமும் சுத்தியல் பிடிக்கும் நினைவுகள்
நெஞ்சுக்குள்ளே படபடக்குதே !
பென்சில் பிடிக்கும்  ஆர்வங்கள் என்னுள்ளே
 பேரின்பம் கொள்ளுதே !
கையெல்லாம் காய்ச்சு போச்சு
கை நாட்டு நானென்றாச்சு ‌-
சமூகமே
விழி இழந்த - என் வாழ்க்கைக்கு
வழிகாட்ட வாருங்கள் !
வலி சுமக்கும் என் கரங்களுக்கு
விடை கொடுக்க வாருங்கள் !

December 21, 2023, 01:37:51 pm
1
Re: கவிதையும் கானமும்-035   வாடிய மொட்டு
கார்த்திக் ஶ்ரீ

வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று
எண்ணினேன்,
ஆனால் விதி
உன் வாழ்வில் விளையாடியது..!


கரும்பலகை எந்தும் கைகளில்,
கற்களை உடைகின்றாய்,
கரைந்தது என் கல் நெஞ்சம்..! 


சிரித்துமகிழ வேண்டிய வயதில்,
சில்லரைக்கு அலைந்து,
சிரகோடிந்த பறவை ஆணாய்..!   


கண்டேன் மகிழ்ச்சியை
குதித்து குஷியானேன்
பட்டாம்-பூச்சி பிடித்தேன்
பட்டம் விட்டேன்
புத்தாடை போட்டேன்
பள்ளி சென்றேன்
பட்டம் பெற்றேன்
நீரில் நீச்சலடிதேன்
ஆடினேன் பாடினேன்
கண்விழித்தேன் யாவும்
கணவாய் கலைந்தது..!


கை எந்தினாய் கல் உடைத்தாய்
பிஞ்சுக்கைகள் காய்த்தது

அறியா பருவத்தில்
வாழ்வின் கொடுமையை அறிந்தாய்,
கள்நெஞ்சக்காரண்னடா கடவுள்.

யார் காரணம்?
நாமும் ஒரு காரணமோ?
குற்ற உணர்ச்சியில் குறுகினேன்னடா
நான்...!
 


நன்றி.

December 23, 2023, 07:59:48 pm
1
Re: கவிதையும் கானமும்-035 வாழ்தலை/ பிழைத்தலை
மையால் எழுதும் மாணவரிடையே
சிலர் வியர்வையால் எழுதுகிறார்கள்;
சில நேரங்களில் இரத்தத்தாலும்.

ஒருத்தி விளக்குத் திரி சுத்துகிறாள்;
ஒளி அவள் வாழ்வில் இல்லை.
இன்னொருத்தி மாலை கட்டி விற்கிறாள்;
காரில் வந்து மாலை வாங்கி
சாமி சேரும் மலர் போல செழிப்பில் இல்லை அவள் வாழ்க்கை.
ஒருவன் கட்டடவேலை செய்கிறான்;
அவன் அஸ்திவாரமே நிலையாயில்லை.
இன்னொருவன் சப்பாத்து தைத்து கொடுக்கிறான்;
வழக்கறிஞர், வைத்தியர், பொறியியலாளர், தொழிலதிபர்கள் என
அத்தனை பேருக்கும் தைத்து கொடுக்கிறான்.
அவனுடைய சப்பாத்தில் நின்று அவன் நிலையை பார்த்து
"உன்னுடைய கனவென்ன" என்று யாரும் கேட்க மாட்டார்களா என ஏங்கத்தான் செய்கிறான்.

இத்தனையும் கடந்து;
கண்மூடி கடக்கிறது உலகமும் கடவுளும்.
கனவுகள் எல்லாருக்கும் பொதுவானதில்லையா?
கடவுளை போல் கண்மூடி இராமல்
மனிதனாய் இருந்து பார்ப்போம்; கண் திறந்து பார்க்க,
கசக்கிறது நிஜ உலகம்.
முடியுமானால்
கனவுகளிற்கு கை கொடுப்போம்;
காலத்தின் ஓர் வழிகாட்டியாய்.

வாழ்க்கை என்பது ஒரு முறை..,
உதவும் கரங்கள் கொடுப்போம் பல முறை..!


― சி. வி. ஆர்.

December 28, 2023, 10:25:36 am
1