37
« on: October 17, 2023, 02:57:18 pm »
இதய துடிப்பின் ராகம்
பெண்ணே உணர்வுகளில் உள்ளடக்கியது தான் மனிதனின் வாழ்கை
உன்னோடு எனக்கு இருக்கும் உணர்வை பற்றியதுதான் இந்த கவிதை
உன்னை கண்ட நாளில் தோன்றிய உணர்வு அது அன்பா ? காதலா ? என்று புரியாத உணர்வு
உணர்வை எனது இதயத்தின் துடிப்பில் உணர்கிறேன் பெண்ணே
ராகங்கள் பதினாறும் உள்ளாகியது இதயத்தின் துடிப்பு
உன்னை காணும்போது பார்த்த ஆனந்தத்தில் எனது இதயம் துடிப்பது ஆனந்த ராகத்தில்
உன்னை காணாமல் இருக்கும்போது துடிப்பது சோக ராகத்தில்
இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்கை பெண்ணே ,
ஆனால் துன்பம் நீ என்றால் இன்பமாக அதையும் ஏற்றுக்கொள்கிறது எனது இதயம்
தூரத்தில் நின்று ஏன் இடைவெளியை உருவாக்குகிறாய்
அருகில் வா பெண்ணே எனது இதயத்தில் கை வைத்து கேள்
லப் டப் லப் டப் என்று துடித்த இதயம் உனது பெயரை அல்லவா
முணுமுணுத்து துடிக்கிறது இப்பொழுது புரிகின்றது பெண்ணே
எனது இதயத்துடிப்பின் ராகம் நீ என்று !!!
நீல வானம்