Advanced Search

Author Topic: AnJaLi Kavithaigal  (Read 34661 times)

March 26, 2019, 10:57:37 am
Read 34661 times

AnJaLi

AnJaLi Kavithaigal
« on: March 26, 2019, 10:57:37 am »
ஊனம் இல்லாமலே
பிச்சை எடுப்பவர்களுக்கும்,
மற்றவரை பார்த்து
பரிகாசம் பேசுவோர்க்கும்
தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.

கொலை செய்து வாழ்பவர்களுக்கும்
கொள்ளை அடித்து வாழ்பவர்களுக்கும்
கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கும்
மதவெறிகொண்ட மதவாதிகளுக்கும்
தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.

பல ஆயிரம் தலைமுறைகளாக
அரும்பாடுபட்டு உருவாக்கித்தந்த
பண்பாட்டையும், கலாசாரத்தையும்
நாகரீகம் என்ற மோகத்தால்
ஒரே ஒரு நுற்றாண்டில்
மின்னலைவிட வேகமாக அழித்துவிட்டோமே
நமக்கெல்லாம் தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.

பேரும், புகழும் கிடைக்குமென்றால்
எதை வேண்டுமானாலும்
விட்டுக்கொடுக்கிறார்கள்,
பணம் கிடைக்குமென்றால்
அந்த பேரையும், புகழையும்
விட்டுக்கொடுக்கும் மனிதர்களுக்கு
தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.-பிறகு
எப்படி உருப்படும் இந்த உலகம்!

March 26, 2019, 10:58:47 am
Reply #1

AnJaLi

AnJaLi Kavithaigal
« Reply #1 on: March 26, 2019, 10:58:47 am »
கண்ணீ­ர் புகைக்கும் கலங்காத கண்கள்
உலகையே சுமக்க தடித்த தோள்
கனைமரம் போன்றே கைகள்
வாள்முனை போல் விரல்கள்
வைர வலிமை கொண்ட இதயம்
தூரத்தின் வலி உணரா கால்கள்
அகிலம் அளந்த அறிவு
ஆழம் அறியும் பார்வை
இவையெல்லாம் ஆசையெனில் அது பேராசை
இவையாவும் என் கனவல்ல ..!
என் ஆசை ஒன்றுதான்
அது நீ மட்டும் அறிந்த உண்மைதான் -என்
கனவு மெய்பட வேண்டும்!

March 26, 2019, 11:01:37 am
Reply #2

AnJaLi

ஹைக்கூ கவிதை
« Reply #2 on: March 26, 2019, 11:01:37 am »
ஊனம்


ஓவியம் வரைகையில்
தூரிகை உடைந்ததோ?
பிரம்மனுக்கு!


--------------------------

ஏழ்மை


பள்ளிக்கூடத்திற்கு
செங்கல் சுமக்கும்
சிறுமி

---------------------------

நவீன பேய்!


நவீன மனுஷனுக்கு
பேய் பிடிச்சிருக்கு
கைபேசி உருவில்

March 26, 2019, 06:42:33 pm
Reply #3

AnJaLi

இமைகளின் சுமை
« Reply #3 on: March 26, 2019, 06:42:33 pm »
இமைகளின் சுமைகளை
இறக்கிக்கொண்டு
இருக்கின்றேன்
முடியவேயில்லை
ஆனால் வடிந்து விட்டது ...!

என் விழிகள்
வறண்டுவிட்டன...?
பாலைவனக்
கானல் நீர் போல்
தூரத்து நம்பிக்கை
துரத்துகிறது...!
வலிகள் தான்
வாழ்க்கைத்துணை ...?!
இடிபாடுகளுக்கிடையில்
இதயம் ...!?
விடியல்கள் மடிந்து
கொண்டு இருக்கின்றன...!?
சுகங்கள்
சொல்லாமலே செல்கிறது
சாவுக்கு வந்ததைப்போல்...!?
உணவு
உறுத்தலாகவே இருக்கிறது ...!?
நினைவு
நடுக்கத்தின் சதுக்கத்தில்
அலைந்து கொண்டிருக்கிறது ...!?
இரவு உணர்வுகளை
கொறித்துக் கொண்டிருக்கிறது
கொஞ்சம் கொஞ்சமாய் ...!?
தவிப்பு
களிப்பில் கூத்தடிக்கிறது ...!?

March 26, 2019, 06:43:14 pm
Reply #4

AnJaLi

நன்றிக் கடன்
« Reply #4 on: March 26, 2019, 06:43:14 pm »
ஒவ்வொரு நாளும்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்
"இறைவா நன்றி"
"இறைவா நன்றி"
என்று

இது எனக்கு
தரப்பட்ட‌
தண்டனையல்ல‌
உனை எனக்குதந்த
அவனுக்கு நான் செய்யும்
நன்றிக்கடன்.

March 26, 2019, 06:44:31 pm
Reply #5

AnJaLi

சுவாசம்
« Reply #5 on: March 26, 2019, 06:44:31 pm »
மனதோடு
மற்போர்
செய்பவனே!

மற்றெல்லாவற்றோடும்
விற்போர்
செய்பவனே!!

நீலவான் போல
நீண்டதும் அல்ல
அலைகடல் போல
ஆழமானதும் அல்ல- என்
நேசம்

அது
உனக்காகவே
உயிரோடு இருக்கும் - என்
உயிரின் சுவாசம்

March 26, 2019, 06:45:24 pm
Reply #6

AnJaLi

நிலவாக
« Reply #6 on: March 26, 2019, 06:45:24 pm »
இரவாக இருந்தாலும்
பரவாயில்லை
இருளாக இருந்தாலும்
பரவாயில்லை

நிலவாக‌
நீ இருக்கும்
வானில் மட்டுமே
நட்சத்திரமாக‌
நான் வருவேன்.

March 26, 2019, 06:46:21 pm
Reply #7

AnJaLi

நேரமில்லை
« Reply #7 on: March 26, 2019, 06:46:21 pm »
நேரமில்லை


உன் பிரிவால்
நான்படும்
வேதனை சகிக்காமல் ‍-‍ அந்த
வானம் அழுகிறது

ஆனால்
உனக்கோ என்னை
நினைத்துப் பார்க்கக்கூட‌
நேரமில்லை என்கிறாய்.

March 26, 2019, 06:48:05 pm
Reply #8

AnJaLi

நேசிக்க மாட்டாயா?
« Reply #8 on: March 26, 2019, 06:48:05 pm »
நேசிக்க மாட்டாயா?

உன்னை - நான்
நேசிக்கும் அளவு
என்னை - நீ
நேசிக்க வேண்டாம்.

நீரை - வேர்
நேசிக்கும் அளவாவது
என்னை - நீ
நேசிக்க மாட்டாயா?

March 26, 2019, 06:50:43 pm
Reply #9

AnJaLi

காதல் கனவு
« Reply #9 on: March 26, 2019, 06:50:43 pm »
காதல் கனவு எல்லாம்
அவன்  அருகில் இருக்கும் வரைதான்..
கனவுகள் யாவும் அவனின் 
இதழ்களாக என் மனதில் தவழ்கின்றன
தெரிந்த அவன்  நினைவுகள்
இனிய தென்றலாக என் மனதில் செல்லுகின்றன.

எதிர்புறம் இருக்கும் அவன்  முகம்
என் தென்மேற்கு பருவக்காற்று
அவன் புன்னகை என் இதயம்
உதடுகளி்ன் ஸ்பரிசம்
என் ஹார்மோன்களின் பரவசம்
என் ஆயிரம் கனவுகள்
அவனின்  ஒரு பார்வைக்கு தவம் கிடைக்கின்றன

March 26, 2019, 06:52:15 pm
Reply #10

AnJaLi

விடை கிடைக்காமல்..
« Reply #10 on: March 26, 2019, 06:52:15 pm »
விடை கிடைக்காமல்..

பல நாள் மௌனம்
உன்னை பார்க்காமல்...
சில நாள் துன்பம்
உன்னை நேசித்ததால்..
விடுகதையான வாழ்க்கை
விடை கிடைக்காமல் நான்..

March 29, 2019, 08:17:05 pm
Reply #11

ரதி

Re: சிந்திக்க தோணவில்லை ...
« Reply #11 on: March 29, 2019, 08:17:05 pm »
பேரும், புகழும் கிடைக்குமென்றால்
எதை வேண்டுமானாலும்
விட்டுக்கொடுக்கிறார்கள்,
பணம் கிடைக்குமென்றால்
அந்த பேரையும், புகழையும்
விட்டுக்கொடுக்கும் மனிதர்களுக்கு
தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.-பிறகு
எப்படி உருப்படும் இந்த உலகம்!



wowwwwwwwwwwwwwwwwwwww super


March 29, 2019, 08:19:17 pm
Reply #12

ரதி

Re: ஹைக்கூ கவிதை
« Reply #12 on: March 29, 2019, 08:19:17 pm »
நவீன மனுஷனுக்கு
பேய் பிடிச்சிருக்கு
கைபேசி உருவில்



;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D pei matuma pissasu sernthu than

March 29, 2019, 08:22:03 pm
Reply #13

ரதி

Re: நன்றிக் கடன்
« Reply #13 on: March 29, 2019, 08:22:03 pm »
nan forum la solren "iraiva nandri"

March 29, 2019, 09:20:32 pm
Reply #14

AnJaLi

Re: சிந்திக்க தோணவில்லை ...
« Reply #14 on: March 29, 2019, 09:20:32 pm »