Advanced Search

Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
Festival Day Wishes / Eid Mubarak (Eid-Ul-Adha) 2025
« Last post by RiJiA on Today at 10:04:31 am »
GLOBAL TAMIL CHAT Team Conveys Eid Mubarak To All Friends Around The World❣

☪️🕌 As the crescent moon shines bright, may it bring peace, prosperity, and happiness to all. Wishing everyone a blessed Eid-ul-Fitr filled with love, joy, and peace. May Allah bless abundantly today and always.  ☪️ 🕌


3
Birthday Wishes / Re: Happy Birthday ALEEM & GOD_PARTICLE
« Last post by iamcvr on June 06, 2025, 11:25:48 pm »
b]
🎉🎂 Happy Birthday God_Particle 🎂🎉
Wishing you all the happiness in the world on your journey ahead!



Be Happy Keep Smiling Always!
4
Birthday Wishes / Re: Happy Birthday ALEEM & GOD_PARTICLE
« Last post by iamcvr on June 06, 2025, 11:22:07 pm »
b]
🎉🎂 Happy Birthday Aleem 🎂🎉
Wishing you all the happiness in the world on your journey ahead!



Be Happy Keep Smiling Always!
7
கல்லறை நிலவில் ஒரு காதல் கதை

அந்த இரவினிலே...
முழு நிலவு குளிர் கொண்டு நின்றது,
அதன் ஒளி ஒரு உறைந்த பெருமூச்சு போலிருந்தது.
மரணம்கூட அங்கே வியப்பில் ஆழ்ந்திருந்தது.

பழைய, மறக்கப்பட்ட ஆலயத்தின் அருகே,
கல்லறைகள் அமைதியாய் வரிசையாய் நின்றன.
ஒவ்வொன்றின் உள்ளும் ஒரு கதை ஒளிந்திருந்தது,
ஒரு காலத்தில் அழுத காதலின் நினைவு.

மெல்லிய காற்றினில் ஏதோ அசைந்தது...
அவள் வந்தாள்.
வெள்ளாடை பூண்டு,
அவளின் மௌனம் அவள் இதயம்போல் துயரமாய் இருந்தது.
அவளின் நிழலைக் கண்டு நிலவுகூட அஞ்சியது.

"நீதானா அது?" ஒரு குரல் கேட்டது -
அவள் வாயிலிருந்து அல்ல,
பூமியின் கீழிருந்து.
அவன் அவளுடன் எடுத்துச் சென்ற காதல்,
இப்பொழுது பனிபோல் அவளைத் தொடர்ந்தது.

அவள் மண்ணில் கால் வைத்ததும்,
பூமி குளிரால் உறைந்தது.
அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும்,
கல்லறைகளுக்குச் சொல்லும் ஒரு துயரப் பிரியாவிடை போலிருந்தது.

அவள் வெறும் ஆவியல்ல...
ஒரு ரணமான காயம்.
துரோகிக்கப்பட்டு, தொலைந்த காதலின்,
வலிமிகுந்த நினைவவள்.

"எனக்காக திரும்பி வருவேன் என்றான்..."
"ஆனால், ஒரு கல்லின் பெயராகவே அவன் திரும்ப வந்தான்."
அவளின் வார்த்தைகளும், சுவாசம்
இப்பொழுது இரவின் குளிர்ந்த காற்றாய் மிதக்கின்றன.

பறவைகள்கூட அவளுக்கு மேலே பறக்கவில்லை.
மரக்கிளைகள்கூட அவளை மென்மையாகத் தொட்டன, பழைய நினைவுகள்போல்.
ஒரு காலத்தில் 'இறைவன் வீடு' என அழைக்கப்பட்ட அந்த ஆலயம்,
இப்பொழுது பாவம்போல உணர்ந்த ஒரு காதலைப் பார்த்தது.

ஒவ்வொரு இரவும்,
நிலவு அவளுக்காக இன்னும் காத்திருக்கிறது.
அவர்களின் ஆன்மாக்கள் மீண்டும் சந்திக்காவிடினும்,
அவர்களின் நிழல்கள்கூட காதலிக்க ஒரு வழியைக் கண்டன.

அவள் பேசுவதில்லை...
அவள் அழுவதில்லை...
ஆனால், அவள் இன்னும் அங்கேயே இருக்கிறாள் -
தொலைந்த ஒவ்வொரு காதலின்,
அமைதியான அலறல் போல.
8

பயணங்களில் என்றுமே பாதுகாப்பாய் உணர்ந்ததில்லை -
என்றுமே பயம் என் சக பயணி 
எதிர்பாராமல் ஒருநாள் எம்மிருவரையும் ஒரு வாகனம்
உள் இழுத்துக்கொண்டது.
உள்ளே ஐவரை கண்டேன்.

என் சக பயணி அவள் என்னை முந்திக்கொண்டு அவர்களிடம் கெஞ்சினாள்.
ஏன் என்னை கடத்தினீங்க? என்னை எதுவும் செஞ்சிடாதீங்க . . . அண்ணா . . ஐயோ . .
அவளின் குரல் அவர்களால் மெளனிக்க வைக்கப்பட்டது.

போராடிப்பார்க்க மனம் சொல்லியது,
அதற்குள் என்னை கைகளிலும் கால்களிலுமாக ஒவ்வொருவர் பிடித்துக்கொள்ள
துகிலுரிக்க தொடங்கினார்கள்.
உதறிப்பார்த்தேன்; உதைந்து பார்த்தேன்;
முடியவில்லை, இறுக்கிப்பிடித்துக்கொண்டார்கள்.

முழுதாய் நிர்வாணமாக்கிவிட்டு இறுக்கத்தை தளர்த்தினார்கள்,
இயலுமென்றால் தப்பித்துக்கொள்ளச்சொன்னார்கள்,
இப்படியே தப்பித்தால், வசைச்சொற்களாலும்,
வசதிக்கேற்ப மாற்றப்பட்ட கதைகளாலும்,
இச்சமூகமே என்னை வன்புணரும் Leaked videos ஆக. 

இயலாமையில் அங்கேயே இறக்கத்தொடங்கிவிட்டேன்,
மீண்டும் பிடிகள் இறுக்கமாக்கப்பட,
அணுவணுவாய் இரையாகி
அசைவற்றும் இரைமீட்டப்பட்டு
முழுதாய் இறந்து முடிக்க மூன்று நாட்கள் ஆனது.
என் குரல் எவரிற்கும் கேட்கவில்லை, எவரையும் இரங்க வைக்கவுமில்லை.
 
உயிர் ஊசலாடும் உருச்சிதைக்கப்பட்ட உடலாய் தெருவில் எறியப்பட்டுக்கிடந்தேன்.

இப்போது மண்ணிற்குள் நான் - எனை பெற்றவர்கள் 
கதறி அழுவதை மட்டுமே மங்கலாக பார்க்க முடிந்தது.
என் ஆசைகள், கனவுகள், அத்தனையும் அஸ்தமித்தது மட்டும் தெளிவாக தெரிந்தது.
நன்றாய் படித்து முடித்து, நல்ல வேலையோடு அத்தனைக்கும் காரணமான பெற்றவர்களை நன்றாய் பார்த்துக்கொண்டு,
காதலித்து, மனம் பொருந்தி, திருமணம் கண்டு, பிள்ளைகளோடும் வாழ
அனைவரையும் போலவே ஆசைகள் எனக்கும் இருந்தது.
அவை மண்ணோடு மண்ணாகின. 

என்னோடு சேர்த்து என் கனவுகளும் கல்லறைகளாய் நிற்க
என்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை மட்டும் இம் மண் எப்படி சந்தோசமாய் வைத்திருக்கிறது?

தினமும் எனைப்போலவே பல ஆயிரக்கணக்கில் கல்லறைகள் முளைக்கின்றனர்.

நான் ஏன் என்றுமே உயிராய் பார்க்கப்படவில்லை?
அன்று வரை உடலாய், இன்று வெற்று கல்லறையாய்.
கல்லின் ஈரம் யார் உணர்வார்?

இவர்கள் யாரும் பெண்களோடு பிறக்கவில்லையா? இல்லை இவர்களோடு பிறந்தவர்கள்
மட்டும் தான் பெண்கள், ஏனையோர் காம-இச்சை தீர்க்கும் வெற்றுடலைகளா?
இவர்களையும் பெண் தானே பெற்றிருப்பாள்; அவள்
ஏன் எதையுமே இவர்களுக்கு  சொல்லிக்கொடுக்கவில்லை?

பயம் என் சக பயணி, பயம் ஊற்றித்தான் இவ்வுலகம் என்னை வளர்த்தது.
பாடசாலை, வேலை, ஏன் பக்கத்துக்கடைக்கு கூட அவள் கூடவே வரவைக்கப்பட்டாள்.
இன்று என்னாலும் அவள் பல மடங்காகி என் சக பெண்களோடு பயணித்துக்கொண்டிருப்பாள்.

என்று தான் அவள் எங்களை விட்டு நீங்குவாள்?
சட்டம் திறம்பட செயற்பட, சட்டத்தோடு மக்கள் மனமும் தூர்வாரப்பட,
தம் வீட்டு பெண்களுக்கு ஒரு நியாயம் வெளியாருக்கு இன்னொரு நியாயம் என நினைக்கும் ஆண்கள் மனம் மாற,
அனுமதியின்றி எங்களை நெருங்கவே அவர்கள் மனம் சங்கடப்பட, அன்று தான் அவள் எங்களை விட்டு நீங்குவாள்.

என்ன தான் செய்யலாம் எங்களை சீரளிப்பவர்களுக்கு?
எங்களை இழந்த எம் குடும்பத்தின் கைகளிலேயே கொடுத்து விடலாம்.
அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும் என சட்டம் இயற்றி விடுங்கள்.

நடக்கும் கொடூரக்கொலைகளோடு மொத்தமாய் குறையும் இச்செயல்கள் எல்லாம்.

அனைவரையும் போலவே ஆசைகள் எனக்கும் இருந்தது.
அவை மண்ணோடு மண்ணாகின. 
கடைசி ஆசையேனும் யாரும் கேட்டு நிறைவேற்றுவார்களா?
தெரியவில்லை, இருந்தாலும் கேட்கிறேன்.
மக்களே, அரசாங்கமே எனக்கு நடந்ததை போல்
இனி யாருக்கும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
9
"இருண்ட இரவின் மௌனக் குரல்"
"மூடுபனி படர்ந்த பாதையில்,
நிலவொளி தவழும் மயானத்தில்,
நிசப்தம் சூழ்ந்த இரவில்,
கல்லறைகள் வரிசை கட்டி நிற்க,
காலம் உறைந்ததோர் தோற்றமங்கே"
காலம் உறைந்ததோர் தோற்றமங்கே"

"இருண்ட வானில் வெள்ளித் தட்டுபோல் முழுமதி ஒளிர்ந்திடுதே"
"வானில் கருமை படர்ந்த இருளில் முழு நிலவின் இடையே மேகக் கூட்டங்கள் மெல்ல மெல்ல நகர்ந்திடுதே"
"வானில் வட்டமிடும் வௌவால்கள்"
"வெளவால்களின் சிறகசைக்கும் சத்தம் இரவின் அமைதியை கிழித்திடுதே"
"கல்வெட்டுக்கள் சொல்லும் கதைகள்
காலம் கடந்தும் வாழ்ந்திடுதே"
"அடர்ந்த மரங்களின் கிளைகளும் நிழலில் ஆடுகிறதே"
"பழைய தேவாலயத்தின் கோபுரம்,
கோதிக் கட்டிடக் கலையின் பெருமை
அழிந்த காலத்தின் மர்மமாய் உயர்ந்து நிற்கிறதே"
"கண்களில் மர்மம் மிளிர்ந்திடுதே"
"தனிமையில் அமானுஷ்ய குரல் கேட்கிறதே"
"இதயத்தில் ஓர் அச்சம் பரவுகிறதே"
"இருளின் ஆழத்தில் மறைந்திருக்கும், அறியாத ரகசியங்கள் என்னவோ??"

"கல்லறைக் கற்களின் மீது காலத்தின் சுவடுகள் பதிந்திருக்க"
"கல்லறைத் தோட்டத்தின் நிசப்தத்தில் மரணத்தின் மௌனம் பரவியிருக்க"
"மறைந்த உயிர்களின் கதைகள்
பெருங்கூச்சலாய் காற்றில் ஒலித்திருக்க"
"வெண்புடவை உடுத்திய ஓரு உருவம்
மெல்ல மெல்ல அசைந்து நடக்க"
"நிழல் போல மிதக்கும் அந்த உருவத்தை பார்ப்பவர் நெஞ்சில் ஒரு அச்சம் விதைக்க"
"அந்த அச்சத்தால் மனதிற்குள் ஒரு பதட்டம் முளைக்க"
"அடர்ந்த மரங்கள் கிளைகளை விரித்து மரணத்தின் தழுவலைக் காட்டுமங்கே"
"எந்த சோகத்தின் விளைவோ இது??"
"எந்த உயிரின் துயரமோ அது??"


"ஓலமாய் கதறி அழும் ஆன்மா"
"மூடுபனி மெல்லியதாக தவழும் இரவில், ஒரு மெல்லிய சலசலப்புடன் அது மிதக்கிறதோ??"
"வாழ்வின் ஒளியை இழந்த நொடியில், யாருமின்றி அது வெறுமையில் அலைகிறதோ??"
"உடல் அது மண்ணில் புதைந்தாலும்,
உயிர் அது காற்றினில் கலந்தாலும்,
அந்த ஆன்மா நிம்மதி இல்லாமல், கண்ணீர்த் துளிகளோடு காற்றோடு காற்றாக இந்தத் தனிமையில் அது எதையோ தேடுகிறதோ??"
"அந்த ஆன்மாவின் ஆசைகளும், கனவுகளும் இந்தக் கல்லறைக்குள்லேயே அது புதைந்ததோ??"
"அந்த ஆன்மாவின் நிறைவேறா ஏக்கங்கள் கடந்த கால நினைவுகளில் மோதி அது அழுகிறதோ??"
"அந்த ஆன்மாவின் பாசங்களும், சொந்தங்களும், பந்தங்களும் அனைத்தும் பறிபோனதோ??"

"அந்த ஆன்மாவின் கல்லறைக் கல்லும் பேசாத மௌனம், அதன் கதையின் மீதியைச் சொல்லாமல் போனதே"
"அன்பு, பாசம், காதல் அனைத்தும் வெறும் தூசி படர்ந்த நினைவுகளாய் மாறிப் போனதே"
"இன்று இந்த இருண்ட உலகினில்
அந்த ஆன்மா ஒரு சாபமாய் அலைகிறதே"
"பிரிவின் வலி ஒரு கடலெனப் பெருக,
அதன் ஆழத்தில், பெரும் சோகத்தில் அந்த ஆன்மா  மூழ்குகிறதே"

"அவளின் இதயமும் துடித்தது ஒரு காலத்தில் அன்பிற்காக, பாசத்திற்காக ஏங்கியது"
"இன்று அது வெறும் வெற்றிடம்,
வலியும் வேதனையும் மட்டுமே மிஞ்சியது"
"ஒரு காலத்தில் அவளும் பூமியில் உயிர்த்துடிப்புடன் வாழ்ந்தவள்
சிரித்தாள், பேசினாள், காதலும் கொண்டாள்"
"பல கனவுகளுடன் ஒரு பெண்ணாக இருந்தவள்"
"இன்று அவளின் உடல் மண்ணோடு மறைய, நினைவுகளின் சுமையோடு அலைகிறாள்"
"வெண்மையான ஆடை அவளின் அடையாளம்"
"இங்கே அவளின் அழுகையின் துயரத்தைக் கேட்கவும் யாருமில்லை"
"இங்கே அவளிற்கு ஆறுதல் சொல்லவும் யாருமில்லை"
"மின்மினிப் பூச்சியாய் அவளின் ஆசைகள், இருளில் ஒரு வெளிச்சம் தேடுகின்றன"
"ஆனால் அவளின் பாதையோ இருளிலேயே தொடர்கின்றன"
"அவளின் உறவுகளைத் தேடி அவளின் ஆன்மா அலைகிறது"
"ஒருமுறை அவர்களைத் கட்டித் தழுவ வேண்டுமென்று"
"ஒருமுறை பாசத்தை மீண்டும் உணர வேண்டுமென்று"

"இது கடவுள் எழுதி வைத்த விதியோ,
அல்லது இது சூழ்ச்சியால் நேர்ந்த சதியோ"
"இந்தக் கல்லறைத் தோட்டம் அவளின் வீடு, மௌனம் அவளின் மொழி, தனிமை அவளின் துணை"
"அமைதி தேடி அலைகிறாள், விடியலின் ஒளியில் கரைந்திட,
இந்த இருளின் பிடியிலிருந்து விடுபட"
"வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் மரணத்தின் அழியாத சாம்ராஜ்யம், ஒரு துளி கண்ணீருடன் அவளின் மனம் இங்கே அமைதி தேடுகிறதே"

"அவள் ஒரு இறந்த ஆன்மா,
வாழ்வும், மரணமும் அவளின் கதை,
முடிவற்ற இந்தத் தேடலில் அவளின் ஆன்மா சாந்தியை தேடுகிறது"
"இதயத்தில் ஓர் நடுக்கம் பிறக்க,
நினைவுகளின் சுவடுகளைத் தேடும்,
ஓர் ஆன்மாவின் தவிப்பு இதுவோ??"
"மீண்டும் ஒரு நாள் மறுஜென்மம் பெறுவாளோ??"
"அல்லது முடிவில்லா இந்தப் பயணத்தில் இப்படியே மீட்சி தேடி அலைவாளோ??"
"இந்த உலகமே ஒரு நாடக மேடை,
அதில் அவளொரு வேதனையான ஓவியமாய்"
"அவளின் கதை கண்ணீரில் எழுதப்பட்டது, முடிவே இல்லாத ஒரு சோகத்தின் காவியமாய்"

"வலிகளுடன் என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு,
உங்கள் அன்பிற்குரியவன் MISTY SKY 💜💜
10
Birthday Wishes / Happy Birthday ALEEM & GOD_PARTICLE
« Last post by RiJiA on June 05, 2025, 11:50:12 pm »
GLOBAL TAMIL CHAT
Team Conveys Birthday Wishes To Our Lovable Friends

🎆 ALEEM & GOD_PARTICLE'🎆
(06 Jun 2025)


🎊Happy Happy Birthday🎊


🥳Wishes Them All The Very Best & Good Luck🥳



Pages: [1] 2 3 ... 10