தொலைவில் இருந்தாலும்
உன்னை நேசிக்கிறேன்…
என்னை நேசிக்க யாரும் இல்லை என்ற
கவலை எனக்கு இல்லை…
ஏனென்றால்,
என் இதயம் நேசிக்கக் கற்றுக்கொண்டது
உன்னை மட்டுமே…
நீ அருகில் இல்லை என்றாலும்,
உன் நினைவுகள்
என் அருகில் இருந்து
என்னுடன் பேசிக்கொண்டே இருக்கின்றன…
உன்னை அடைய முடியாத
இந்த தூரத்தைவிட,
உன்னை மறக்க வேண்டும் என்பதுதான்
எனக்கு அதிகமான வலி…
என் காதலுக்கு
உன் அருகாமை தேவையில்லை…
உன் நினைவு மட்டும் போதும்,
என் இதயம் உயிரோடு இருக்க…
ஒருநாள்
இந்த தூரம் முடிந்தாலும் சரி,
முடியாமல் போனாலும் சரி…
என் காதல் மட்டும்
உன்னை விட்டு விலகாது…
என்னை நேசிக்க யாரும் இல்லையென்றாலும் பரவாயில்லை…
நான் நேசித்த ஒருத்தி நீ என்பதே
என் வாழ்நாள் முழுவதற்குமான
அழகான வலி…