1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-052
« Last post by Isha003 on March 18, 2025, 09:19:26 pm »என்னவனே !
என் இனிய காதலனே !
ஒரு தசாப்த காதலை சில வரிகளில் சொல்ல துணிந்தேன் !
சார் இல் அறிமுகம் ஆகி
என் அத்தனையும் ஆன அழகனே !
நிலவின் துணையோடு நாம் செய்த நடை பயணங்கள்
அர்த்தமின்றி நாம் செய்த தர்க்கங்களை எனக்கு
இன்னும் மிச்சமின்றி நினைவூட்டுகிறது !
ஒரு முழு நிலா நாளில்
திடீரென நீ உரைத்த காதலை
உணர முடியாமல் அடைந்த திகைப்பை இந்த நிலா எனக்கு நினைவூட்டுகிறது!
என்ன பேச என தெரியாமல்
மொட்டை மாடியில் நிலவின் துணையோடு உன் இருப்பை உணர்ந்த நிமிடங்கள் எனக்கு இன்னும் சிலிர்ப்பூட்டுகிறது!
பேசாமலே நிலவை பார்த்து ரசித்த மௌனங்கள் கொள்ளை அழகானது !
எப்படி இத்தனை காதல் என யோசிக்க யோசிக்க ஒன்றும் புரியவில்லை எனக்கு!
கரம் கோர்த்த நாளில் மூன்றாம் பிறை என இருந்த காதல்
எப்போது முழு நிலவாய் முழுமை பெற்றது என இன்னும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன் !
தாயென நீ தாங்கிய தருணங்களில் கொஞ்சம் !
தந்தை என அரவணைத்த அணைப்பில் கொஞ்சம் என நான் நினைக்க ?
என் மொத்தமும் நீயென எப்போது ஆனாய் குமரனே!
சிறு வயதில் சிறு காயத்துக்கும் கூட அம்மாவிடம் சொல்லி ஆறுதல் தேடும் என்னை!
எப்போது மாற்றினாய் என் பெரு வலியிலும் உன் ஒற்றை பார்வை கூறும் சமாதானத்துக்கு !
ஒவ்வொரு சண்டையிலும் தேய்பிறை நிலவென உன்னை நான் நினைக்க !
என்றும் மாறா முழு நிலவென நீ எப்போதும் துணை நிற்கிறாய் என்னுடன்!
உயர்வும் தாழ்வும் வலியும் இன்பமும்
வாழ்வின் தவிர்க்க இயலாத அம்சங்கள் என்று
நம் காதலுக்கு சாட்சியான
நிலவின் தேய்வும் வளர்பிறையும்
எனக்கு பாடமாக உணர்த்த !
பௌர்ணமி நிலவை காணும் கணமெல்லாம் என் வாழ்நாள் பௌர்ணமியான உன்னை கண்டு மகிழ்கிறேன் !
என் இனிய காதலனே !
ஒரு தசாப்த காதலை சில வரிகளில் சொல்ல துணிந்தேன் !
சார் இல் அறிமுகம் ஆகி
என் அத்தனையும் ஆன அழகனே !
நிலவின் துணையோடு நாம் செய்த நடை பயணங்கள்
அர்த்தமின்றி நாம் செய்த தர்க்கங்களை எனக்கு
இன்னும் மிச்சமின்றி நினைவூட்டுகிறது !
ஒரு முழு நிலா நாளில்
திடீரென நீ உரைத்த காதலை
உணர முடியாமல் அடைந்த திகைப்பை இந்த நிலா எனக்கு நினைவூட்டுகிறது!
என்ன பேச என தெரியாமல்
மொட்டை மாடியில் நிலவின் துணையோடு உன் இருப்பை உணர்ந்த நிமிடங்கள் எனக்கு இன்னும் சிலிர்ப்பூட்டுகிறது!
பேசாமலே நிலவை பார்த்து ரசித்த மௌனங்கள் கொள்ளை அழகானது !
எப்படி இத்தனை காதல் என யோசிக்க யோசிக்க ஒன்றும் புரியவில்லை எனக்கு!
கரம் கோர்த்த நாளில் மூன்றாம் பிறை என இருந்த காதல்
எப்போது முழு நிலவாய் முழுமை பெற்றது என இன்னும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன் !
தாயென நீ தாங்கிய தருணங்களில் கொஞ்சம் !
தந்தை என அரவணைத்த அணைப்பில் கொஞ்சம் என நான் நினைக்க ?
என் மொத்தமும் நீயென எப்போது ஆனாய் குமரனே!
சிறு வயதில் சிறு காயத்துக்கும் கூட அம்மாவிடம் சொல்லி ஆறுதல் தேடும் என்னை!
எப்போது மாற்றினாய் என் பெரு வலியிலும் உன் ஒற்றை பார்வை கூறும் சமாதானத்துக்கு !
ஒவ்வொரு சண்டையிலும் தேய்பிறை நிலவென உன்னை நான் நினைக்க !
என்றும் மாறா முழு நிலவென நீ எப்போதும் துணை நிற்கிறாய் என்னுடன்!
உயர்வும் தாழ்வும் வலியும் இன்பமும்
வாழ்வின் தவிர்க்க இயலாத அம்சங்கள் என்று
நம் காதலுக்கு சாட்சியான
நிலவின் தேய்வும் வளர்பிறையும்
எனக்கு பாடமாக உணர்த்த !
பௌர்ணமி நிலவை காணும் கணமெல்லாம் என் வாழ்நாள் பௌர்ணமியான உன்னை கண்டு மகிழ்கிறேன் !