2
« Last post by Sivarudran on March 26, 2024, 11:44:55 am »
நானே நீ தானே
நீயே நான் தானே !
நம் தந்தையின் விந்தில் முந்தியவன் நீ
நம் தாயின் கருவறையில் முதலில் தூங்கியவன் நீ
அம்மாவின் அமுதத்தையும் அன்பையும் முதலில் பகிர்ந்தவன் நீ
தாயின் அரவணைப்பில் முதலில் ஆழ்ந்தவனும் நீ
தந்தையின் விரல் பிடித்து தத்தி தத்தி நடந்தவனும் நீ
உனது சாயல்கள் அனைத்தையும் எனக்கென தந்தவன் நீ
நீயும் நானும் வேறல்ல
இருவரும் ஓர் உயிர் என்றே எனக்கு உறைத்தவன் நீ
நீ கற்ற மொத்த வித்தைகளின் மிச்சம் மீதியை எனக்கென சொல்லித் தந்தவன் நீ
அம்மா என்று அழைத்த வாயாலும்
அப்பா என்று அழைத்த வாயாலும்
அண்ணா என்று அதிகமாய் அழைக்க அழகாய் பழகித்தந்தவன் நீதானே !
அன்னநடை நான் நடக்க
அண்ணன் நீயே அழகாய் கைப்பிடித்து
நடக்க வைத்தாயே !
நீ கடித்த எச்சில் மிட்டாயை
எனக்காய் உன் சட்டை பையில் சேமித்து வைத்து எடுத்து வந்து தந்தாயே !
அச்சு அசலாய் அப்பனை போல் நீ என் றும்
அச்சு அசலாய் அண்ணனைப் போல் நான் என்றும் ஆகிவிட்டேன்
உன் அறிவில் பாதி தந்தை என்றும்
என் அறிவில் பாதி நீ என்றும் சொல்லும்படி
நீயே நானாக இங்கு நாளெல்லாம் நமதாக
அண்ணன் தம்பியாய் அரவணைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
-ஆம்
வாழ்வை அரவணைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.