1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-061
« Last post by Shruthi on December 17, 2025, 11:22:28 pm »கூட்டிட்டு போ....!!!
காத்திருப்பது ஒரு சுகம் என்றால்..
உன் கண்களை பார்த்திருப்பதும் கூட ஒரு வரமே...
உன் கண்களை பார்த்திருப்பதும் கூட ஒரு வரமே..
என் வீட்டு கண்ணாடி கூட என்னை இவ்வளவு அழகாக காட்டியது இல்லை..
உன் கருவிழியில் என் கவிதை பிறக்கிறது...
ஒற்றை பார்வை பார்த்தாயடா...மதி மயங்கி போனேனடா...
உன் இரு விழி ஊஞ்சலில் நான் குடியேற வந்தேன்...
வாடகை கேட்டால் என்னை பரிசாக தந்தேன்...
விழிவழி பார்ப்பது அனைத்துமே இவ்வுலகில் அழகுதான்....
அதைவிட உனக்குள் என்னை பார்ப்பது பேரழகு.....
உன் இதயம் உலரும் வார்த்தைகள்...உன் விழிவழி உதிர்த்தது,
நான் உனக்கானவள் என்று..!!!!
உன் விழிவழி உதிர்த்தது நான் உனக்கானவள் என்று..!!!!
காலம் நேரம் பாராமல் உன்னை மட்டுமே தேடும் இந்த மனதை,
எதை சொல்லி நான் அமைதி கொள்வேன்...
எதை சொல்லி நான் அமைதி கொள்வேன்...
இரு கண்களுக்கு இடையில் இருக்கும் தூரம்..அவை பேசும் மொழிதான் என்னவோ...
போ...கூட்டிட்டு போ...
எங்கையாவது, அந்த வானம் ஆகாயம் தாண்டி கூட்டிட்டு போ....
கன்னம் தொட்ட உன் கைகள்...
என்னை கரம் பிடிப்பது எப்போது....
வாழ்கை பிடிச்சதோ பிடிக்கலையோ
என்று சொல்ல தெரியல, ஆனால் உன்னோடு வாழ தோன்றுது தற்போது....
போ...கூட்டிட்டு போ...!!!!
காத்திருப்பது ஒரு சுகம் என்றால்..
உன் கண்களை பார்த்திருப்பதும் கூட ஒரு வரமே...
உன் கண்களை பார்த்திருப்பதும் கூட ஒரு வரமே..
என் வீட்டு கண்ணாடி கூட என்னை இவ்வளவு அழகாக காட்டியது இல்லை..
உன் கருவிழியில் என் கவிதை பிறக்கிறது...
ஒற்றை பார்வை பார்த்தாயடா...மதி மயங்கி போனேனடா...
உன் இரு விழி ஊஞ்சலில் நான் குடியேற வந்தேன்...
வாடகை கேட்டால் என்னை பரிசாக தந்தேன்...
விழிவழி பார்ப்பது அனைத்துமே இவ்வுலகில் அழகுதான்....
அதைவிட உனக்குள் என்னை பார்ப்பது பேரழகு.....
உன் இதயம் உலரும் வார்த்தைகள்...உன் விழிவழி உதிர்த்தது,
நான் உனக்கானவள் என்று..!!!!
உன் விழிவழி உதிர்த்தது நான் உனக்கானவள் என்று..!!!!
காலம் நேரம் பாராமல் உன்னை மட்டுமே தேடும் இந்த மனதை,
எதை சொல்லி நான் அமைதி கொள்வேன்...
எதை சொல்லி நான் அமைதி கொள்வேன்...
இரு கண்களுக்கு இடையில் இருக்கும் தூரம்..அவை பேசும் மொழிதான் என்னவோ...
போ...கூட்டிட்டு போ...
எங்கையாவது, அந்த வானம் ஆகாயம் தாண்டி கூட்டிட்டு போ....
கன்னம் தொட்ட உன் கைகள்...
என்னை கரம் பிடிப்பது எப்போது....
வாழ்கை பிடிச்சதோ பிடிக்கலையோ
என்று சொல்ல தெரியல, ஆனால் உன்னோடு வாழ தோன்றுது தற்போது....
போ...கூட்டிட்டு போ...!!!!

Recent Posts