5
« Last post by Shaswath on January 19, 2026, 11:15:26 am »
தொலைவில் நீ,
தொலைந்து போனேன் நான்!
தாக்கும் தூரத்தை நீடிக்கும் பள்ளத்தாக்கதை சிறியதாக்குகிறேன்
உரசும் கல் கிடங்கு நிரம்பி,
கொடுமுடியில் நிமிர்ந்து நிற்கும் மலை
தொந்தரவு செய்தே,
உந்துமுயர்ச்சி எய்தேன்
கற்கள் துள்ளி எழவே,
சரிந்து உருளவே
ஒன்றோடு ஒன்று மோத,
கூச்சலின் இரைச்சல் ஓத,
மோதலின் எல்லை மீறியபடி,
உறியடித்த உடைப்பில் பொங்கும் கனல்
எரிச்சல் மீழாமல் சுடர செய்கிறது…
மல்கும் கண்ணீர் முறையிட முயன்றும்,
சுடரின் தழல் ஓய்வதாக இல்லை…
உன் எல்லையை நெருங்கவே இத்தகைய போராட்டம்,
சுடராக தோன்றி ஒலி படலமாய் விரிகிறது
உருவாக்கியவன் நான் அல்லவோ…
கலைக்க முயல்கிறேன்
எதிர்பக்கத்தை தொலைத்துவிட்டேன்…
போராட்டம் இயலாமல் சோர்வில் தவிக்கிறேன்…
சட்டென்று…!!
அனல் கூட்டும் ஒலி பட்டறை புகுந்த மணல் போன்ற மென்மை என்னை வருடுகிறது!
சுடரின் எரிச்சல் மறைகிறது,
ஒரு குரலின் ஓசை மலர்கிறது…
“அன்பே…நான் தொலைவில் இருக்கிறேன்…ஆம்! ஆனால் உன்னை தொலைக்கவில்லை. நம் இடையில் தழுவும் நினைவுகளின் ஆழம் உன்னை சூழ்கிறது…தொலைந்தது போல உணர்கிறாய்…
கவலை வேண்டாம், அன்பே! 🤗 நம் இடையே அளவிடும் வரை தூரம்…ஆனால் அளவிட முடியாத நெருக்கத்தில் உலாவும் நினைவுகள்! 😊…என்றும் தொடரும்!