5
« Last post by MDU on August 12, 2026, 04:47:29 am »
நான் தனியே நின்றாலும்
என் நிழலாய் நீ வருகிறாய்…
நான் செல்லும் பாதையெல்லாம்
உன் தடத்தைத் தேடுகிறேன்…
விடியாத இரவிலும்
விழித்தே உனை நினைக்கிறேன்,
விண்மீன்கள் மறைந்தாலும்
உன் விழிகளைத் தேடுகிறேன்…
மழைத்துளி மண்ணைத் தொடுவது போல
மெதுவாக என் மனதைத் தொட்டாயே,
மலர்கொடியை மரம் அணைப்பது போல
என் உயிரோடு நீ கலந்தாயே…
என் இதயத்தின் கதவைத் திறந்ததும்
உன் பெயர்தான் உள்ளே ஒலிக்குதடி,
என் மூச்சுக்குள்ளே கலந்து விட்டாய்
உன்னை எப்படி பிரிப்பதடி…
நான் தூங்கும் கனவிலும் நீ,
நான் விழிக்கும் நினைவிலும் நீ,
என் நாளின் தொடக்கமும் நீ,
என் இரவின் முடிவும் நீ…
என்னை காதலித்ததற்காக
உன்னை நான் குறை சொல்ல மாட்டேன்,
ஆனால் இப்படி என்னை காதலித்து
என் உயிரையே எடுத்துச் சென்றாயே…!
ஏனடி… ஏனடி…MB
இத்தனை அழகான வன்முறை?
காதல் என்ற பெயரில்
என் இதயத்தை கொள்ளையடித்தாயே… ❤️
நூறு பிறவிகள் கிடைத்தாலும்
ஒரே ஒரு ஆசைதான் எனக்கு—
ஒவ்வொரு பிறவியிலும்
மீண்டும்… மீண்டும்… MB
உன்னை காதலிக்க வேண்டும்…! ❤️