12
« on: November 28, 2022, 11:54:21 pm »
என் பள்ளி நாட்களின் நினைவுகள்,
நான் வகுப்பில் இருந்ததாக ஞாபகம் நேற்று தான் தெரிகிறது,
இப்போது ஆண்டுகள் கடந்துவிட்டன..
கடந்த வருடங்களை திரும்பிப் பார்த்தால்,
மகிழ்ச்சியான நேரங்களில் சோகமும் இருந்தன,
பள்ளி முற்றத்தில் விளையாடிய தருணங்கள் மலர்ந்த காலைப் பூ போல.
இந்த நினைவுகள் என்னைத் தொடர வைக்கின்றன..
மனதில் கள்ளம்கபட மில்லாத நாட்கள்
கவலைகள் துன்பங்கள் இல்லாத நாட்கள்,
எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காத நாட்கள்,
எவருக்கும் எதற்கும் அஞ்சிடாத நாட்கள்,
சிறகில்லாமல் வானத்தில் பறந்தோம்,
விளையாட்டாய் எதையும் நினைத்தோம்..
அன்று நீ என் கண்களுக்கு வெறும் கட்டிடமாக தெரிந்தாய்,
இன்றோ நான் உன்னை கோபுரம் என உணருகிறேன்..
என் பள்ளி பருவத்தை நினைவு படுத்திய RJ RIJIAவிற்கும் மற்றும் KG குழுவினருக்கும் நன்றி