29
« on: May 31, 2019, 03:15:22 pm »
பேசுவாயோ என
ஏங்கினேன்
முதல் முறை
அதற்காய் காத்திருப்பதும்
சுகமாயிற்று
மெல்ல மெல்ல
பேச தொடங்கி
பேசுவதே வேலை
என ஆயிற்று நமக்குள்
யார் கண் பட்டதோ
யார் காரணமோ
நானறியேன்
மௌனமாய்
மாயமானாய்
அனலில் இட்ட
புழுவாய்
தவித்துக்கொண்டிருக்கிறது
என் மனம்
வசைபாடி சென்றிருந்தாளேனும்
வலித்திருக்காது இவ்வளவு
தினம் தினம் துடிக்கிறேன்
இருந்தும்
பேசுவாயோ என
ஏங்கினேன்
இன்னொருமுறை