Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Arrow

Pages: 1 2 3 [4]
46
இணையத்தில் இருந்து
இணைந்த உறவு

அண்ணன் என்றும்
தங்கை என்றும்
நண்பன் என்றும்
பரஸ்பரம்
விளித்து மகிழ்கிறோம்

ஓர் நாள் காணாவிடினும்
ஒவ்வொருவராய் வினாவுகிறோம்
கண்டாயா இவரை என

அடையாளம் மறைத்து
முகமூடியிட்டு தான்
பழகுகிறோம்
எனினும்
நமக்குள்
அன்பு என்றும்
வெளிப்டையானதே

47
உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில்  பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.

தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது.

சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.
ஆனால்
சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை.
சிறிது காலத்தில் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது.

அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது....

அதைப் போல் உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி....அதே மரத்தால் செய்யப்பட்ட  எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்...

மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது... 🙏🙏🙏
#மனிதனோட பல பிரச்சனைக்கு காரணம் #மனஉளைச்சல்  தான்!

48
General Discussion / Re: குறுந்தகவல்!
« on: December 12, 2018, 11:27:38 am »
ஒவ்வொரு கணத்தையையும்
இதுவே கடைசிக்கணம்
என்பதைப்போல வாழுங்கள் ,
யாருக்கும் தெரியாது
இதுவே கடைசியாகவும்
இருக்கலாம்

49
General Discussion / Re: குறுந்தகவல்!
« on: November 28, 2018, 04:49:44 pm »
உங்களுக்கு மதிப்பில்லை
என்று நீங்கள் உணரும்
இடங்களில் மௌனமாக
இருக்க பழகுங்கள்

காலப்போக்கில் உங்கள்
மௌனம் உங்களுக்கான
மதிப்பை அங்கே ஈட்டித்தரும்

50
General Discussion / Re: குறுந்தகவல்!
« on: November 26, 2018, 11:34:51 am »
உரிமை உள்ள இடத்தில் மட்டுமே
நமது எண்ணங்களை
முழுமையாக வெளிப்படுத்த முடியும்

51
முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய சாத்தில் தான் பி6 பி12 அதிகமாக இருக்கிது என் கூறுகின்றனர்  அமெரிக்க மருத்துவர்கள். குறிப்பாக நமது உடலின் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நமது உணவுப்  பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.

பொதுவாக கிராமத்தில் கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து  சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் என எந்த ஒரு காய்ச்சலும் நம்மை அணுகாது. பழைய சாதத்தில் என்ன பயன்  இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

இரவு வேளையில் தண்ணீர் ஊற்றி வைப்பதால் சாதத்தில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள் உருவாகுகிறது. இதனை காலை வேளை உணவாக  எடுத்துக்கொள்வதால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி,  போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.. இந்த பணியோடு நின்றுவிடாமல் நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை சீராக இயங்கச்  செய்கிறது..

உடலை சோர்விலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக இயங்கச்செய்யும். அதற்காக சூடாக தயாரித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிடக்கூடாது. முதல் நாள்  இரவு மீந்த சோற்றை எடுத்து நல்ல தண்ணீர் ஊற்றி முடிவிட வேண்டும். மறுநாள் சாப்பிடும் முன் சாதத்தை நன்கு பிழிந்து மோர் சேர்த்து வெங்காய்  வைத்து சாப்பிடலாம்.

52
உணவிடை நீரை பருகாதே!
கண்ணில் தூசி கசக்காதே!
கத்தி பிடித்து துள்ளாதே!
கழிக்கும் இரண்டை அடக்காதே!
கண்ட இடத்தில் உமிழாதே!
காதை குத்தி குடையாதே!
காெதிக்க காெதிக்க குடிக்காதே!
நகத்தை நீட்டி வளர்க்காதே!
நாக்கை நீட்டிக் குதிக்காதே!
பல்லில் குச்சிக் குத்தாதே!
பசிக்காவிட்டால் புசிக்காதே!
பசித்தால் நேரம் கடத்தாதே!
வயிறு புடைக்க உண்ணாதே!
வாயைத் திறந்து மெல்லாதே!
வில்லின் வடிவில் அமராதே!
வெற்றுத் தரையில் உறங்காதே!

இவைப் பதினாறையும் கடைபிடித்தாலே பாேதும் உடல் ஆராேக்கியத்துடன் வாழ நம் முன்னாேர்களின் எளிய வழிமுறை...!!!

53
கடவுளுக்கும் நமக்கும் இருக்கும் தூரம் என்ன?

முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர் ஆட்சி
புரிந்து வந்தார். ஒரு நாள் அவர் மனதில், “கடவுள்
இருக்கும் இடத்திற்கும், நமக்கும் எவ்வளவு தூரம்
இருக்கும்?” என்ற வினா எழுந்தது. உடனே அரச
சபையை கூட்டி அனைவரிடமும் இதற்கான
விடையை வினவினார் மன்னர்.
-
யாருக்கும் இதற்கான விடை தெரியவில்லை.
இதற்கான விடையைத் தெரிந்து கொள்ள ஊருக்கு
வெளியிலிருந்து ஒரு முனிவர் வரவழைக்கப்பட்டார்.
-
அந்த முனிவரிடம், “கடவுள் எவ்வளவு தூரத்தில்
இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?”
என்று வினவினார் மன்னர்.

அதற்கு அந்த முனிவர், “கடவுள் கூப்பிடுகிற
தூரத்தில் தான் இருக்கிறார்” என்று பதில் அளித்தார்.

“அப்படியானால், கடவுளை அழைத்தால் உடனே
வந்து விடுவார் அல்லவா?” என்று கேட்டார் மன்னர்.
அதற்கு அந்த முனிவர், “எந்த இடத்தில் கடவுள்
இருப்பதாக நீ நினைக்கிறாயோ அதைப் பொறுத்தது”
என்றார்.

“புரியும்படி கூறுங்கள்” என்று அந்த மன்னர் கேட்டுக்
கொண்டார்.

இதற்கு பதில் அளித்த முனிவர், “துரியோதனன்
சபையில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது,
“வைகுண்ட வாசா! காப்பாற்று” என்று கிருஷ்ணரை
அழைத்தாள் திரௌபதி. ஆனால் கிருஷ்ணர் வரவில்லை.

“துவராகை நாயகனே!” என்னை காப்பாற்று என்று
அழைத்தாள் திரௌபதி. அப்போதும் கிருஷ்ணன்
வரவில்லை. “இதயத்தில் இருப்பவனே!” என்று
கடைசியாக அழைத்தாள் திரௌபதி. உடனே பகவான்
கிருஷ்ணர் தோன்றி திரௌபதியின் மானத்தைக்
காத்தார்.

கடவுள் எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்று
நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த நினைப்பிற்கு
தகுந்தவாறு உடனே வந்து கடவுள் அருள் புரிவார்.
எந்த இடத்தில் இருந்தாலும் உங்களின் குரல்
கடவுளுக்கு கேட்கும்.

உள்ளத்தில் கடவுள் இருப்பதாக நினைத்து அழைத்தால்
உடனே வந்து அருள் பாலிப்பார்” என மன்னருக்கு
விளக்கம் அளித்தார் அந்த முனிவர்.


54
காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது.
ஆனால்,
அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.

"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்?
கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.

அதே சமயம்,
அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.
அதைப்பார்த்த சிங்கம்,
"ஏய்........ஜம்போ! உனக்கு என்ன கவலை?

யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.

அதற்கு யானை, "இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்.........."என்றது.

அது கேட்டு சிங்கம் யோசித்தது. "இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே!
அப்படியானால்,
பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!

கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!" என்று அது புரிந்து கொண்டது.

அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது

55
ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன !! 🌳🌳
அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி 🐥 முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க☁ இருப்பதால்  நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.

முதலில் இருந்த மரம் முடியாது என்றது
😣😣😣😣😣😣😣😣

அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது
😌😌😌😌😌😌😌

குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம் 🐣🐤🐥🐦

அன்று பலத்த மழை, ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச்சென்றது .

தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து  குருவி சிரித்து கொண்டே சென்னது  , எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று !!!!

அதற்கு அந்த மரம் கூறிய பதில் :  எனக்குத் தெரியும் நான் வழுவிழந்து விட்டேன்😑 எப்படியும் இந்த மழைக்குத்  தாங்க மாட்டேன் , தண்ணீரில் அடித்துச் செல்லபடுவேன்என்று ,  நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான்
உனக்கு இடம் இல்லை என்றேன் !!!! மன்னித்து விடு என்றது !!!!!! 😢

கருத்து:   உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால்தவறாக நினைக்காதீர்கள் அவர் அவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்!!!

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்...

56
ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள்.

யார் அந்த முதலைகள் 🐊🐊 நிறைந்த குளத்தில் குதித்து குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி 💸💵💸 ரூபாய் பரிசு என்று.

அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒருவன் 🤸🏻‍♂ மட்டும் குளத்தில் குதித்து மறு கரையை🏊🏼 அடைந்தான்.

அவனுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.

உடனே அவன் கூட்டத்தினரை பார்த்து கேட்டான்.... யார்டா என்னை குளத்தில் தள்ளி விட்டது?

கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர்.


அந்த கூட்டத்தில் இருந்த அவன் மனைவி மட்டும் அவனைப் பார்த்து சிரித்தாள்.😎😎


நீதி : ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள் :D :D

57
General Discussion / Short Messages
« on: November 24, 2018, 11:57:56 am »
நீ யாரை சந்திக்க வேண்டும்
என்பதை
காலம் முடிவு செய்கிறது

உன் வாழ்க்கையில் யார்
இருக்க வேண்டும் என்பதை
உன் மனம் முடிவு செய்கிறது

உன்னுடன் யார் இருக்க வேண்டும்
என்பதை உன் நடத்தை
முடிவு செய்கிறது

58
உடலில் தேங்கியுள்ள சளியை விரைவில் வெளியேற்ற உதவும் சில ஆயுர்வேத வழிகள்!
 
சளி பிடித்து விட்டால் சுவாசக்குழாயில் சளித்தேக்கம் அதிகரித்து மூச்சு விடுவதில் சிரமத்தை உணரக்கூடும்.மேலும் இந்த சளி தேக்கத்தை இயற்கையான வழியில் வெளியேற்ற சில வழிகள் உள்ளன.

இப்படி உடலில் தேங்கும் சளியை நம் வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களின் மூலம் வெளியேற்ற என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி பார்ப்போம்.

மஞ்சள்:
மஞ்சளில் உள்ள குர்மின் என்னும் பொருள் பாக்டீரியாக்களை எதிர்க்கும் மற்றும் உடலினுள் உள்ள தொற்றுக்கள் மற்றும் தொண்டை புண்ணை போக்கும்.

1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து,அதை தினமும் 3-4 முறை குடித்து வர சளி தொண்டையில் தேங்குவது குறையும்.

இஞ்சி:
இஞ்சியில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளும் நிறைந்துள்ளன.

1 டம்ளர் நீரீல் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி,அதில் தேன் கலந்து குடித்து வர சளி விரைவில் வெளியேறும்.

ஆவி பிடிப்பது:
சுடு நீரில் ஆவி பிடிப்பதால் ,சளி மற்றும் கபம் தளர்ந்து,சுவாசக் குழாய் சுத்தமாகி சுவாச பிரச்சினைகள் நீங்கி நிம்மதியாக சுவாசிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி,அதில் மூலிகை இலைகளை போட்டு அந்நீரால் தினமும் 3-4 முறை ஆவி பிடித்து வர ,சளி விரைவில் வெளியேறிவிடும்.

தேன் மற்றும் எலுமிச்சை:
தேனில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல்,ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.மேலும் வைட்டமின் சி,நிறைந்த எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஒன்றாக கலந்து,அதை தினமும் மூன்று வேளைகள் குடித்து வர,சளி மற்றும் கபம் பிரச்சினையில் இருந்து உடனே விடுபடலாம்

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் என்றும் அக்கறையுடன்

Pages: 1 2 3 [4]