Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Arrow

Pages: [1]
1
சிறுசிறு கதவுகள்
செய்யாக்காகதவுகள்
திறக்க, அடைக்க
சத்தம் செய்யா கதவுகள்

அது என்ன ?


2
<a href="https://www.youtube.com/v/AJtDXIazrMo" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://www.youtube.com/v/AJtDXIazrMo</a>

3
இணையத்தில் இருந்து
இணைந்த உறவு

அண்ணன் என்றும்
தங்கை என்றும்
நண்பன் என்றும்
பரஸ்பரம்
விளித்து மகிழ்கிறோம்

ஓர் நாள் காணாவிடினும்
ஒவ்வொருவராய் வினாவுகிறோம்
கண்டாயா இவரை என

அடையாளம் மறைத்து
முகமூடியிட்டு தான்
பழகுகிறோம்
எனினும்
நமக்குள்
அன்பு என்றும்
வெளிப்டையானதே

4
உணவிடை நீரை பருகாதே!
கண்ணில் தூசி கசக்காதே!
கத்தி பிடித்து துள்ளாதே!
கழிக்கும் இரண்டை அடக்காதே!
கண்ட இடத்தில் உமிழாதே!
காதை குத்தி குடையாதே!
காெதிக்க காெதிக்க குடிக்காதே!
நகத்தை நீட்டி வளர்க்காதே!
நாக்கை நீட்டிக் குதிக்காதே!
பல்லில் குச்சிக் குத்தாதே!
பசிக்காவிட்டால் புசிக்காதே!
பசித்தால் நேரம் கடத்தாதே!
வயிறு புடைக்க உண்ணாதே!
வாயைத் திறந்து மெல்லாதே!
வில்லின் வடிவில் அமராதே!
வெற்றுத் தரையில் உறங்காதே!

இவைப் பதினாறையும் கடைபிடித்தாலே பாேதும் உடல் ஆராேக்கியத்துடன் வாழ நம் முன்னாேர்களின் எளிய வழிமுறை...!!!

5
ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள்.

யார் அந்த முதலைகள் 🐊🐊 நிறைந்த குளத்தில் குதித்து குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி 💸💵💸 ரூபாய் பரிசு என்று.

அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒருவன் 🤸🏻‍♂ மட்டும் குளத்தில் குதித்து மறு கரையை🏊🏼 அடைந்தான்.

அவனுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.

உடனே அவன் கூட்டத்தினரை பார்த்து கேட்டான்.... யார்டா என்னை குளத்தில் தள்ளி விட்டது?

கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர்.


அந்த கூட்டத்தில் இருந்த அவன் மனைவி மட்டும் அவனைப் பார்த்து சிரித்தாள்.😎😎


நீதி : ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள் :D :D

6
General Discussion / Short Messages
« on: November 24, 2018, 11:57:56 am »
நீ யாரை சந்திக்க வேண்டும்
என்பதை
காலம் முடிவு செய்கிறது

உன் வாழ்க்கையில் யார்
இருக்க வேண்டும் என்பதை
உன் மனம் முடிவு செய்கிறது

உன்னுடன் யார் இருக்க வேண்டும்
என்பதை உன் நடத்தை
முடிவு செய்கிறது

7
உடலில் தேங்கியுள்ள சளியை விரைவில் வெளியேற்ற உதவும் சில ஆயுர்வேத வழிகள்!
 
சளி பிடித்து விட்டால் சுவாசக்குழாயில் சளித்தேக்கம் அதிகரித்து மூச்சு விடுவதில் சிரமத்தை உணரக்கூடும்.மேலும் இந்த சளி தேக்கத்தை இயற்கையான வழியில் வெளியேற்ற சில வழிகள் உள்ளன.

இப்படி உடலில் தேங்கும் சளியை நம் வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களின் மூலம் வெளியேற்ற என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி பார்ப்போம்.

மஞ்சள்:
மஞ்சளில் உள்ள குர்மின் என்னும் பொருள் பாக்டீரியாக்களை எதிர்க்கும் மற்றும் உடலினுள் உள்ள தொற்றுக்கள் மற்றும் தொண்டை புண்ணை போக்கும்.

1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து,அதை தினமும் 3-4 முறை குடித்து வர சளி தொண்டையில் தேங்குவது குறையும்.

இஞ்சி:
இஞ்சியில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளும் நிறைந்துள்ளன.

1 டம்ளர் நீரீல் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி,அதில் தேன் கலந்து குடித்து வர சளி விரைவில் வெளியேறும்.

ஆவி பிடிப்பது:
சுடு நீரில் ஆவி பிடிப்பதால் ,சளி மற்றும் கபம் தளர்ந்து,சுவாசக் குழாய் சுத்தமாகி சுவாச பிரச்சினைகள் நீங்கி நிம்மதியாக சுவாசிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி,அதில் மூலிகை இலைகளை போட்டு அந்நீரால் தினமும் 3-4 முறை ஆவி பிடித்து வர ,சளி விரைவில் வெளியேறிவிடும்.

தேன் மற்றும் எலுமிச்சை:
தேனில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல்,ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.மேலும் வைட்டமின் சி,நிறைந்த எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஒன்றாக கலந்து,அதை தினமும் மூன்று வேளைகள் குடித்து வர,சளி மற்றும் கபம் பிரச்சினையில் இருந்து உடனே விடுபடலாம்

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் என்றும் அக்கறையுடன்

Pages: [1]