41
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-054
« Last post by Neelavaanam on May 21, 2025, 07:38:13 pm »நாவினாற் சுட்ட வடு
உலகம் முழுவதும் பரவி இருப்பது காதல்
காதல் இல்லாத மனிதன் இல்லை, காதல் இல்லாத விலங்குகளும் இல்லை
இதயத்தின் பரிமாற்றம் காதல், உணர்ச்சிகளின் புரிதல் காதல்
விட்டுக்கொடுத்து வாழ்வது காதல், உறவின் முறையை வலுவாக்குவது காதல்
இன்றுவரை காதலின் சின்னமாக இருப்பது இதயம்தான் 🧡
அந்த இதயம் நொறுங்குவதற்குக் காரணமும் காதல்தான் 💔
பிடித்த பெண் வேண்டாம் என்றதும் அதன் வேதனை இதயத்தை அல்லவா சென்றடைகிறது அதன் வேதனை இதயத்தை அல்லவா சென்றடைகிறது...
நண்பனிடம் நெடுநாள் பழகிப் பிரியும்போது ஏற்படும் வேதனையைத் இந்த லேசான இதயம் எப்படித் தாங்கிக்கொள்கிறது...
நம்மைத் தாலாட்டிச் சீராட்டிக் கடினப்பட்டு வளர்க்கும் பெற்றோர்களின் பிரிவினை இந்த இதயம் இன்னும் துடித்துக்கொண்டே இருக்கிறதே ஆச்சரியம்தான்!
சகோதர சகோதரிகளாகப் பல வருடம் ஒன்றாக வாழ்ந்து திருமணத்தின்போது நம்வீட்டுத் தேவதை நம்மைவிட்டுச்செல்லும்போது வரும் துயரத்தை இ ந்தச் சின்ன இதயம் எப்படித் தாங்குகிறது!
வேறுபட்ட மனிதர்களைச் சந்திக்கிறோம், இனம் மதம் மொழிகள் தாண்டி அனைவரையும் ஒன்று சேர்ப்பது இதயத்தின் உள்ள காதல்தான்
ஏன் நமது GTC யில் கூட அண்ணனாகத் தங்கையாக நண்பர்களாகப் பழகி வருவதற்குக் காரணம்கூட இந்த மென்மையான இதயத்தில் இருக்கும் காதல்தான்
ஒருநாள் காணவில்லை என்றாலும் ஏன் வரவில்லை என்று துடிக்கும் இதயம்...
இந்த இதயம் நொறுங்குவதற்கு முக்கியக் காரணம் அளவுகடந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு...
காதல் தெரியாதவர்களிடம் இதை எதிர்பார்த்து இதயத்தை நாமே உடைக்கிறோம்..
காதலில் இதயங்கள் பரிமாற்றம் நடக்கும். காதல் உடைந்தால் இதயங்களில் மாற்றம் ஏற்படும்
கூரான ஆயுதத்தால் இதயத்தைக் கிழித்தால் கூட அதைச் சரிசெய்ய மருத்துவர்கள் உள்ளனர் இந்த உலகத்தில்
மருத்துவரால் கூட குணப்படுத்த முடியாத இதயத்தின் காயம் மனிதனின் சொல். மருத்துவரால் கூட குணப்படுத்த முடியாத இதயத்தின் காயம் மனிதனின் சொல்.
என்ன ஒரு அதிசயம், சிறிய நாக்கிற்கு எத்துணை வலிமை
இதயத்தை அல்லவா தாக்குகின்றது
சிந்திப்போம், நமது இதயத்தின் காதலைச் சிறகடித்துப் பறக்கவிடுவோம்
நமது சொல்லினைக் கட்டுப்படுத்திப் பிறரின் இதயத்தைப் பலவீனப்படுத்தாமல் பார்த்துக்கொள்வோம்
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு."
இதைப் புரிந்து நடந்தால் நண்பா நண்பி புகைப்படத்தில் பார்ப்பதுபோல
இதயத்திற்குக் காயமும் ஏற்படாது, கட்டும் தேவைப்படாது.
நீலவானம்
உலகம் முழுவதும் பரவி இருப்பது காதல்
காதல் இல்லாத மனிதன் இல்லை, காதல் இல்லாத விலங்குகளும் இல்லை
இதயத்தின் பரிமாற்றம் காதல், உணர்ச்சிகளின் புரிதல் காதல்
விட்டுக்கொடுத்து வாழ்வது காதல், உறவின் முறையை வலுவாக்குவது காதல்
இன்றுவரை காதலின் சின்னமாக இருப்பது இதயம்தான் 🧡
அந்த இதயம் நொறுங்குவதற்குக் காரணமும் காதல்தான் 💔
பிடித்த பெண் வேண்டாம் என்றதும் அதன் வேதனை இதயத்தை அல்லவா சென்றடைகிறது அதன் வேதனை இதயத்தை அல்லவா சென்றடைகிறது...
நண்பனிடம் நெடுநாள் பழகிப் பிரியும்போது ஏற்படும் வேதனையைத் இந்த லேசான இதயம் எப்படித் தாங்கிக்கொள்கிறது...
நம்மைத் தாலாட்டிச் சீராட்டிக் கடினப்பட்டு வளர்க்கும் பெற்றோர்களின் பிரிவினை இந்த இதயம் இன்னும் துடித்துக்கொண்டே இருக்கிறதே ஆச்சரியம்தான்!
சகோதர சகோதரிகளாகப் பல வருடம் ஒன்றாக வாழ்ந்து திருமணத்தின்போது நம்வீட்டுத் தேவதை நம்மைவிட்டுச்செல்லும்போது வரும் துயரத்தை இ ந்தச் சின்ன இதயம் எப்படித் தாங்குகிறது!
வேறுபட்ட மனிதர்களைச் சந்திக்கிறோம், இனம் மதம் மொழிகள் தாண்டி அனைவரையும் ஒன்று சேர்ப்பது இதயத்தின் உள்ள காதல்தான்
ஏன் நமது GTC யில் கூட அண்ணனாகத் தங்கையாக நண்பர்களாகப் பழகி வருவதற்குக் காரணம்கூட இந்த மென்மையான இதயத்தில் இருக்கும் காதல்தான்
ஒருநாள் காணவில்லை என்றாலும் ஏன் வரவில்லை என்று துடிக்கும் இதயம்...
இந்த இதயம் நொறுங்குவதற்கு முக்கியக் காரணம் அளவுகடந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு...
காதல் தெரியாதவர்களிடம் இதை எதிர்பார்த்து இதயத்தை நாமே உடைக்கிறோம்..
காதலில் இதயங்கள் பரிமாற்றம் நடக்கும். காதல் உடைந்தால் இதயங்களில் மாற்றம் ஏற்படும்
கூரான ஆயுதத்தால் இதயத்தைக் கிழித்தால் கூட அதைச் சரிசெய்ய மருத்துவர்கள் உள்ளனர் இந்த உலகத்தில்
மருத்துவரால் கூட குணப்படுத்த முடியாத இதயத்தின் காயம் மனிதனின் சொல். மருத்துவரால் கூட குணப்படுத்த முடியாத இதயத்தின் காயம் மனிதனின் சொல்.
என்ன ஒரு அதிசயம், சிறிய நாக்கிற்கு எத்துணை வலிமை
இதயத்தை அல்லவா தாக்குகின்றது
சிந்திப்போம், நமது இதயத்தின் காதலைச் சிறகடித்துப் பறக்கவிடுவோம்
நமது சொல்லினைக் கட்டுப்படுத்திப் பிறரின் இதயத்தைப் பலவீனப்படுத்தாமல் பார்த்துக்கொள்வோம்
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு."
இதைப் புரிந்து நடந்தால் நண்பா நண்பி புகைப்படத்தில் பார்ப்பதுபோல
இதயத்திற்குக் காயமும் ஏற்படாது, கட்டும் தேவைப்படாது.
நீலவானம்