Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - MDU

Pages: [1] 2 3 ... 13
1
Festival Day Wishes / Re: Happy Birthday Deepavali 2025
« on: October 20, 2025, 10:14:54 am »
Happy Deepavali 2025

2
சங்கீத மேகம் – இது ஓர் சாதாரண நிகழ்ச்சி அல்ல; ஒவ்வொரு வாரமும் சந்தோஷம், இசை மற்றும் சிரிப்புகளால் நிரம்பிய ஒரு சிறப்பு திருவிழா! 🎶😊

ஒவ்வொரு அத்தியாயமும், மென்மையான மெலோடியின் ஒரு தென்றலாக வந்து, மனங்களை மகிழ்வுடன் நிரப்பி, நாள்தோறும் கொண்டிருக்கும் மன அழுத்தங்களை நீக்கும் ஒரு இசைத் தூய்மையான அனுபவமாக மாறுகிறது.

எங்கள் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறோம் – எப்போதும் உற்சாகமாக இருக்கும் GTC FM. குழுவிற்கு – ஆர்ஜே ரிஜியா,தென்றல், நிலா,  த்ரூவ்_ஷா (நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்), COFFEE BOY  மற்றும் மறைமுகமாக உழைக்கும் அனைத்து குழுவினருக்கும் – வாரம் தோறும் இசையின் வண்ணங்களால் எங்கள் நாட்களை அலங்கரிப்பதற்காக!
உங்கள் சேவையால், சாதாரணமான மாலை நேரங்கள் ஒரு ஆழமான இசை அனுபவமாகவும், மறக்க முடியாத நினைவுகளாகவும் மாறுகிறது.
நன்றிகளும், வாழ்த்துகளும்! 🎙️

Movie: Deiva Thiirumagal
SONG:Vizhigalil oru vaanavil Imaigalai thottu pesudhae
Composer: G.V. Prakash Kumar
Singer: Saindhavi
Lyricist: Na Muthukumar

2011-ஆம் ஆண்டு வெளிவந்த “தெய்வத்திருமகள்” திரைப்படம்
இது ஒரு சிறுமியை நேசிக்கும் தந்தையின் பாசத்தைப் பற்றிய படம்.

விக்ரம் நடித்தவர்  மன வளர்ச்சி குறைபாடு உடைய ஒரு தந்தை.
அவருடைய மகள் தான் அவரது உலகம்.
அந்த பாசத்தையும், அவர்களுக்கிடையிலான தூய உறவையும் பாடல்களால் வெளிப்படுத்தியிருக்கிறார்

விழிகளில் ஒரு வானவில்” குழந்தையின் கண்களில் தோன்றும் மகிழ்ச்சி
“இதழ்களில் ஒரு இசை” அவள் சிரிப்பின் இனிமை
“உலகம் அவள் புன்னகை”  தந்தையின் பார்வையில், உலகமே அவள்

இந்த பாடல் “காதல் பாடல்” போல ஒலித்தாலும்,
அது உண்மையில் பாசத்தின் பரிசுத்தமான வடிவம்
ஒரு தந்தையின், தன் மகளுக்கான அளவில்லா அன்பு.

அதனால்தான், யாராக இருந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் போது மனசு மெலிதாகிவிடும்
ஏனென்றால் அதில் காதலும் இல்லை, ஆசையும் இல்லை, தூய அன்பே உள்ளது.

ஜிடிசி  குடும்பத்தில் உள்ள அனைத்து உள்ளங்களுக்கும் சமர்ப்பணம் , இப்படிக்கு  MDU

3
Birthday Wishes / Re: Happy Birthday HICCUP
« on: October 08, 2025, 10:52:56 pm »
Wish you Happy Birthday HICCUP


நட்பு என்ற மரம் நிழலாக
என்றும் உன்னை காக்கட்டும்,
சிரிப்பு என்ற பூ மலர்ந்து
என்றும் உன் முகத்தில் ஒளிரட்டும்.

இன்று உன் பிறந்த நாள்
கனவுகள் அனைத்தும் நனவாய்
வாழ்வின் எல்லா பாதைகளும்
மகிழ்ச்சியால் நிரம்பட்டும்.

உன் உள்ளம் எப்போதும்
வெளிச்சமாய், நம்பிக்கையாய் இருக்க,
நண்பனாக நான்
நீங்காத ஆசிகள் செலுத்துகிறேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பு நண்பனே


MDU

4
Birthday Wishes / Re: Happy Birthday Limat
« on: September 26, 2025, 03:22:34 am »
Wish you Happy Birthday Limat

5
Birthday Wishes / Re: Happy Birthday MARA, ASLAN & LUFFY
« on: September 26, 2025, 03:19:48 am »
Wish You Very Very Happy Birthday MARA, ASLAN & LUFFY

6
Birthday Wishes / Re: Happy Birthday Misty Sky & Mansi
« on: September 25, 2025, 10:43:42 pm »
Wish You Very Very Happy birthday Misty Sky bro & Mansi

7
Birthday Wishes / Re: Happy Birthday PRIYADHARSHINI
« on: September 23, 2025, 06:38:58 pm »
Wish You very very Happy Birthday PRIYADHARSHINI

8
மழை துளிகள் பாடும் ஓர் இசை என் காதில் கேட்டது.
அந்த மழைத்துளிகலின் இசை.
என் மனதில் ஒளிந்து கொண்டு இருக்கும் உன் நினைவுகளின் இசை ஆனது.

மழைத்துளிகளின் நடுவினில் எரியும் அந்த விளக்கின் மென்மையான ஒளி போல.
என் உள்ளமும் உன் பெயரை மட்டுமே சொல்லுகிறது தாலாட்டும் ஓசை போல.

நாற்காலியில் இருக்கும் மலர்களை பார்க்கும் போது.
என் கண்ணீரில் நனைந்த கனவுகள் கண் முன்னே தோண்றுகிறது.

மழைத்துளிகள் வானத்தில் இருந்து விழும் போது
அந்த ரோஜா பூவை
குடை எப்படி  நனையவிடாமல் காக்குன்றதோ
அதை போல.
நான் உன்னை  என் இதயத்தில் வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன்

எத்தனை முறை மழை வந்தாலும்  குடை ரோஜா மலரை காப்பது போல்.
நீ நனைந்து போகாமல் உன்னை.
என் இதயத்தில் வைத்து காத்து கொண்டு இருக்கிறேன்.

நாற்காலி காலியாக இருக்கலாம் இன்று,
ஆனால் அந்த நிமிடங்களை நான் மறக்கவில்லை .

என் நினைவுகளில் எப்போதும் நீயும் நானும்.
இருக்கையில் அருகருகே  இருந்த அந்த தருணத்தை மறக்கவும் இல்லை.

மழை மறைக்கவில்லை என் கண்ணீரை
நிழல் மறைக்கவில்லை என் நினைவுகளை,

கையில் குடை இருந்தும்
இதயம் மட்டும் நனைந்து போகின்றது.

ரோஜா மலர் அழகாய் இருந்தும் மனம் போலவே வாடிப்போனது,
உன் வருகைக்காக காத்திருந்த என் கனவும் கரைந்து போனது
 
மலர்கள் குளிர்ந்து கொண்டிருக்க இதயம் மட்டும் தீயாய் எரிகிறது,
நினைவுகளோ தெருவிளக்கைப் போல இன்னும் நம்மை ஒளி காட்டுகிறது,

ஆனால் அந்த ஒளியில் நான் மட்டும் தான்,
நீ இல்லாமல் அந்த இடத்தில் இருள் மட்டும் என்கூட.

நீ என்னை மறந்து போனாலும் நான் உன்னை நினைக்காமல் இருந்தது இல்லை.

மலர் வாடும் முன்பே நான் புன்னகைப்பேன்
என் பாதை என் நம்பிக்கை நோக்கி
மழையில் ஒளிரும் தெருவிளக்கைப் போல
உன் நினைவுடன் வாழ்க்கையைத் தேடி நடந்து போகிறேன்.


MDU

9
🎶 Sangeetha Megam – not just a program, but a weekly celebration of joy, rhythm and smiles!
Every episode becomes a breeze of melody, filling hearts with laughter and peace – a true stress-buster after a long day. 🌈💫

💐 Our heartfelt gratitude to the ever-energetic GTC FM Team – Thendral, Nila,𝐑𝐉 𝐃𝐇𝐑𝐔𝐕_𝐒𝐇𝐀 the coordinator, the coffee boy and the entire backstage crew – for painting our weeks with colours of music and happiness.
Week after week, you transform ordinary evenings into soulful, unforgettable moments. 🌟💖

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல / அவதாரம்


1995-ம் ஆண்டு வெளியான அவதாரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு அழகான பாடல். இசைஞானி இளையராஜா இசையமைத்த இந்த பாடல், அவரது இசைமீது கொண்ட ஆழ்ந்த உணர்வையும், கலைநயத்தையும் பிரதிபலிக்கிறது


தென்றல் என்பது இயற்கையின் மென்மையான, நிம்மதியான ஒரு பாகம். அது மனதை வருடும் போது ஏற்படும் உணர்வுகளைப் பற்றி பாடல் பேசுகிறது
என்ன வண்ணமோ மனசுல என்பது, அந்த தென்றல் மனதின் மீது ஏற்படுத்தும் மர்மமான, வண்ணமயமான உணர்வுகளை குறிக்கிறது
இது ஒரு காதல் உணர்வின் ஆரம்ப கட்டத்தை, அதில் வரும் மயக்கம், நெகிழ்ச்சி, நிம்மதி ஆகியவற்றை கவிதையாக சொல்லும் வரியாகும்



தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

10
Birthday Wishes / Re: Happy Birthday NIHARV
« on: September 06, 2025, 04:30:17 pm »
Wish You Very Happy Birthday NIHARV

11
அப்பா – மகள் சந்தோஷமும்  சோகமும்  பிரிவு

மருத்துவமனை கதவு திறந்த போது
ஒரு அழுகையால் உலகம் நிறைந்தது
அந்த சத்தம் நான் கேட்ட போது
என் உயிரின் புதிய இசை உண்டானது

கைகளில் தாலாட்டும் நேரம் வரவில்லை
ஆனால் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வழிந்தது
இது துயரக் கண்ணீர் அல்ல
இது உடல் முழுதும் பரவிய ஆனந்த கண்ணீராக இருந்தது

அந்த கண்ணீர் மகள் பிறந்த தருணத்தில் தான்
அப்பா என்ற புதிய பெயர் ஆனது
மனசுக்குள் ஒரு வாக்குறுதி கொடுத்தேன்
உணக்காக  நான் எப்போதும் நிழலாகவும், சூரியனாகவும் இருப்பேன் என்று

சிறு கால்களில் நீ தடுமாறி நடக்கும்போது,
கையை நீட்டியவன் அப்பா என்னும் நான்
உன் சிரிப்பை பார்த்து
தன் கஷ்டங்களை மறந்து விட்டு உன்னை பார்த்து கொண்டு இருந்தவன் நான்

இன்று நீ வளர்ந்து நிற்கும் போது,
உன் பின்னால் நின்றிருப்பவன் இன்னும் அப்பா என்னும் நான் மட்டும்தான்
மகள் உலகம் காணும் வரை,
அப்பா எப்போதும் காவல் காத்து நிற்க்கும் காவல் காரன் நான்

குழந்தை போல என் கையை பிடித்து  கொண்டு
நடந்த அன்பு மகளின் சிறு நடை,
இன்று முதல் மற்றொரு கையைப் பிடித்து நடக்க போவதை நினைத்து
நான்  ஆனந்த கண்ணீரில் நனைந்தேன் .

தினம்தோறும் என்னை அப்பா என்று அழைத்த மகளின் ஒலி
திருமண நாள் முதல் அவளது கணவனை
மாமா என்று மாற இதயம் துடிக்கிறது,
ஆனால் முகத்தில் ஒரு புன்னகை மட்டுமே வருகிறது

திருமண விழாவின் சிரிப்பு
உள்ளத்தில் ஆயிரம் நெகிழ்ச்சி.
மகள் புதிய வாழ்க்கைக்கு செல்ல போகிறாள் என்று.
அப்பாவாகிய நான் மகிழ்ச்சில்  ஆனந்த கண்ணீர் விடுகிறேன்

ஆனால், அந்தக் கண்ணீரீல் துக்கமில்லை,
ஆனந்தம் கலந்த புனித நீர்.
என் மகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
என்ற அப்பாவின் இறுதி கடவுளின் வேண்டுகோளும் அது தான்.

இப்போது நான் செல்ல நேரம் வந்துவிட்டது,(இறக்கும் நேரம் வந்துவிட்டது)
ஆனால் என் பாசம் எப்போதும் உன் அருகில் இருக்கும்.
என் உருவமும்,நிழல்லும் தெரியாமல் போகலாம்,
ஆனால் என் ஆசீர்வாதம் மற்றும் நினைவுகள் எப்போதும் உன்னைத் தழுவிக் காக்கும் என் அருமை மகளே.

அப்பா போகிறான் என்றாலும்,
அப்பாவின் அன்பு என்றும் உன் இதயத்தில் வாழும்.

இந்த கவிதை அனைத்து மகளுகளுக்கும் சமர்ப்பணம் குறிப்பாக
தோழி தென்றல் மற்றும் GTC உள்ள அனைத்து சிங்கப்பெண்களுக்கும் 🙏💝

இப்படிக்கு உங்கள் மதுரைக்காரன் MDU



MDU

12
🎶 Sangeetha Megam Greetings 🎶

Sangeetha Megam was truly a wonderful & fun-filled program.
It entertained everyone and became a perfect stress-buster.
A heartfelt Thank You to the GTC FM Team for presenting such a joyful show!
Special thanks to Thendral, Nila, Coordinator, Coffee Boy  and the entire backend team for their dedication and hard work.

You all made it unforgettable.

Movie: Nenjirukkum Varai
Song :Orumurai piranthen orumurai piranthen Unakena uyirayum naan kodupen Unakena uyirayum naan kodupen
Lyrics : Thamarai

Nan athiga murai ketta paadal ketga ketga oru thani feel. intha song yarellam ethanamurai kettu erukkingannu sollunga parkkalam. kekkathavanga kettuttu sollunga eppadi erunthathunnu

Thamarai eppadithan eluthinargal endru theriyavillai avalavu alagana varigal.


என் கண்ணில் உன்னை
வைத்தே காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உன்னை மறக்க
முயன்றதில்லை தோற்றேன்
நீயே என் இதயமடி நீயே
என் ஜீவனடி

 நெஞ்சுக்குள்ளே
உன்னை வைத்து பூட்டி
விட்டு சாவியை
தொலைத்து விட்டேன்


இப்படிக்கு உங்களின் எம்.டி.யூ MDU

13
Birthday Wishes / Re: Happy Birthday Hansom Hunk
« on: August 21, 2025, 06:42:30 pm »
Wish you Very Happy Birthday Hansom Hunk🎂🎂

14
அவளின் சிரிப்பே அவனுக்கு குடை



மழைத்துளி வீதியில் நீ நடந்த தருணம்,
செம்பருத்தி பூவுகள் கூட உனக்கே குடை ஆனது.

சிரிப்பில் காதல், கண்களில் நம்பிக்கை,
ஆனால் உள்ளம் சொல்லாத சோகத்தின் கதை.

என் நெஞ்சம் உன் அருகே ஓடி வந்தாலும்,
எட்ட முடியாத தூரத்தில் நின்றது என் கனவுக் காதல்.

காதல் தந்த சந்தோஷ  மழைத்துளி
 மேகத்தோடு கலந்தே வாழ்கிறது.

மழை வந்ததும் சாலை பேசுகிறது,
தேவதை செல்லும் பாதையில் குண்டும் குழியும் இருக்கின்றது  என்று

நீ நடந்த பாதை மென்மை போலினும்,
அதன் அடியில் சோகத்தின் குழிகள் மறைந்திருந்தன.

குடை பிடித்த உன் சிரிப்பு வானவில் ஆனாலும்,
கீழே கண்ணீர் துளியும் ஓவியம் ஆனது.

காதல் பாதை எப்போதும் சீராகாது,
குண்டும் குழியும் தான் இருக்கும்.

பாவாடைத் தாவணியில் நீ நடந்த தருணம்,
வானவில் தரையில் இறங்கி ஆடியது போலிருந்தது.

ஒவ்வொரு அடியிலும் காற்றே மலராய் விரிந்தது,
உன் சிரிப்பில் மழைத் துளிகளும் இசை கற்றது.

உன் சிரிப்பு தொட்டவுடன்,
என் உள்ளம் வானவில் ஆகிறது

சாலையின் சத்தம் தன்னையே மறந்து மௌனமாய் நின்றது,
உன் நடையின் ஓசை கவிதையாக என் உள்ளத்தில் நின்றது.



MDU

15
நிழல் கொடுத்து நிம்மதி தரும்,
நிமிடமும் சுவாசம் தரும்.

காலம் கடந்தும் காயாத தோழன்,
காற்றோடு கதை பேசும் சொந்தன்.

கிளையிலே பறவைகள் பாடும்,
கிளர்ந்து மனம் இனிமை காணும்.

மண்ணில் பிறந்து வானை தொட்டு,
மனிதர்க்கு வாழ்க்கை தந்து நிற்கும்.

Pages: [1] 2 3 ... 13