1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-061
« on: December 16, 2025, 09:02:47 pm »
உன் விழிகளில் விழுந்த என் பார்வை.
உயிரின் மொழி பேசத் தொடங்கியது.
கன்னம் தொடும் அந்த மென்மையான கை.
காலமெல்லாம் எனக்கு காவலானது.
ஒரு நொடிப் பார்வையில்
ஆயிரம் கனவுகள் விதைத்தாய்,
உன் மௌன சிரிப்பில்
என் காதல் கரை புரண்டு ஓடியது.
உன் கன்னத்தில் என் விரல்கள் பதித்த அந்த நொடியில்,
உலகமே நின்றுவிட்டது போல இருந்தது
பேசாத உன் கண்களில்
என் வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்க ஆசைப்பட்டேன்.
உன் மூச்சின் சூட்டில் என் உயிர் , உயிர் பெற்றது,
என் பெயரை விட நீ அழைத்த ஒரு பார்வைதான் எனக்கு அடையாளமானது.
நீ அருகில் இருந்தால் போதும் என் கவலை எல்லாம் மறந்து
நான் உன் காதலன் ஆகி விடுகிறேன்.
ஒரு காலத்தில் உன் கைகள் என் முகத்தைத் தாங்கின,
இன்று அதே நினைவுகள் என் கண்ணீரைத் தாங்குகின்றன.
உன் முகத்தை தாங்கிய என் கை,
இன்று உன் நினைவுகளை கூட
தாங்க முடியாமல் நடுங்குகிறது.
நீ பார்த்த அந்த பார்வை இன்னும் உயிருடன்,
ஆனால் நீ இல்லை.அணைத்த அந்த கைப்பிடிப்பு மட்டும்
என் மனதை விட மறுக்கிறது.
நீ பார்த்த அந்த பார்வை
இன்னும் என் மனதில் உறைந்து கிடக்கிறது,
ஆனால் நீ இல்லை என்பதே என் உயிரின் தினசரி மரணம்
என்றென்றும், என்று சொன்ன அந்த வார்த்தைகள்
இன்று காற்றிலும் இல்லை நினைவிலும் இல்லை
ஆனால் அதை நம்பிய என் இதயம் மட்டும்
இன்னும் அன்றே நின்று துடிக்கிறது.
என் விரல்கள் தொட்ட உன் முகத்தை,
மீண்டும் ஒரு முறை கூடதொட்டுவிட முடியாமல் போன நாளிலிருந்து…
இரண்டு கைகள் இருந்தும் எல்லாவற்றையும் இழந்தவன் போல
நான் வாழ கற்றுக்கொண்டேன்.
அழ முடியாத வலியோடு
ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன்,
நான் உயிரோடு இருப்பது
நீ திரும்ப வருவாய் என்பதற்காக அல்ல
நீ விட்டுச் சென்ற காதல் பார்வை,
கடைசி மூச்சு வரை
நான் உணர வேண்டும் என்பதற்காகத்தான்
என்னை உயிரோடு விட்டுச் சென்றதோ.
அந்த ஒரு பார்வையின் நினைவே
என் வாழ்க்கை முழுக்க வலியாகவும் வாழ்க்கையாகவும் மாறிவிட்டது.
உயிரின் மொழி பேசத் தொடங்கியது.
கன்னம் தொடும் அந்த மென்மையான கை.
காலமெல்லாம் எனக்கு காவலானது.
ஒரு நொடிப் பார்வையில்
ஆயிரம் கனவுகள் விதைத்தாய்,
உன் மௌன சிரிப்பில்
என் காதல் கரை புரண்டு ஓடியது.
உன் கன்னத்தில் என் விரல்கள் பதித்த அந்த நொடியில்,
உலகமே நின்றுவிட்டது போல இருந்தது
பேசாத உன் கண்களில்
என் வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்க ஆசைப்பட்டேன்.
உன் மூச்சின் சூட்டில் என் உயிர் , உயிர் பெற்றது,
என் பெயரை விட நீ அழைத்த ஒரு பார்வைதான் எனக்கு அடையாளமானது.
நீ அருகில் இருந்தால் போதும் என் கவலை எல்லாம் மறந்து
நான் உன் காதலன் ஆகி விடுகிறேன்.
ஒரு காலத்தில் உன் கைகள் என் முகத்தைத் தாங்கின,
இன்று அதே நினைவுகள் என் கண்ணீரைத் தாங்குகின்றன.
உன் முகத்தை தாங்கிய என் கை,
இன்று உன் நினைவுகளை கூட
தாங்க முடியாமல் நடுங்குகிறது.
நீ பார்த்த அந்த பார்வை இன்னும் உயிருடன்,
ஆனால் நீ இல்லை.அணைத்த அந்த கைப்பிடிப்பு மட்டும்
என் மனதை விட மறுக்கிறது.
நீ பார்த்த அந்த பார்வை
இன்னும் என் மனதில் உறைந்து கிடக்கிறது,
ஆனால் நீ இல்லை என்பதே என் உயிரின் தினசரி மரணம்
என்றென்றும், என்று சொன்ன அந்த வார்த்தைகள்
இன்று காற்றிலும் இல்லை நினைவிலும் இல்லை
ஆனால் அதை நம்பிய என் இதயம் மட்டும்
இன்னும் அன்றே நின்று துடிக்கிறது.
என் விரல்கள் தொட்ட உன் முகத்தை,
மீண்டும் ஒரு முறை கூடதொட்டுவிட முடியாமல் போன நாளிலிருந்து…
இரண்டு கைகள் இருந்தும் எல்லாவற்றையும் இழந்தவன் போல
நான் வாழ கற்றுக்கொண்டேன்.
அழ முடியாத வலியோடு
ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன்,
நான் உயிரோடு இருப்பது
நீ திரும்ப வருவாய் என்பதற்காக அல்ல
நீ விட்டுச் சென்ற காதல் பார்வை,
கடைசி மூச்சு வரை
நான் உணர வேண்டும் என்பதற்காகத்தான்
என்னை உயிரோடு விட்டுச் சென்றதோ.
அந்த ஒரு பார்வையின் நினைவே
என் வாழ்க்கை முழுக்க வலியாகவும் வாழ்க்கையாகவும் மாறிவிட்டது.


