1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-058
« on: September 02, 2025, 09:43:03 pm »
அப்பா – மகள் சந்தோஷமும் சோகமும் பிரிவு
மருத்துவமனை கதவு திறந்த போது
ஒரு அழுகையால் உலகம் நிறைந்தது
அந்த சத்தம் நான் கேட்ட போது
என் உயிரின் புதிய இசை உண்டானது
கைகளில் தாலாட்டும் நேரம் வரவில்லை
ஆனால் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வழிந்தது
இது துயரக் கண்ணீர் அல்ல
இது உடல் முழுதும் பரவிய ஆனந்த கண்ணீராக இருந்தது
அந்த கண்ணீர் மகள் பிறந்த தருணத்தில் தான்
அப்பா என்ற புதிய பெயர் ஆனது
மனசுக்குள் ஒரு வாக்குறுதி கொடுத்தேன்
உணக்காக நான் எப்போதும் நிழலாகவும், சூரியனாகவும் இருப்பேன் என்று
சிறு கால்களில் நீ தடுமாறி நடக்கும்போது,
கையை நீட்டியவன் அப்பா என்னும் நான்
உன் சிரிப்பை பார்த்து
தன் கஷ்டங்களை மறந்து விட்டு உன்னை பார்த்து கொண்டு இருந்தவன் நான்
இன்று நீ வளர்ந்து நிற்கும் போது,
உன் பின்னால் நின்றிருப்பவன் இன்னும் அப்பா என்னும் நான் மட்டும்தான்
மகள் உலகம் காணும் வரை,
அப்பா எப்போதும் காவல் காத்து நிற்க்கும் காவல் காரன் நான்
குழந்தை போல என் கையை பிடித்து கொண்டு
நடந்த அன்பு மகளின் சிறு நடை,
இன்று முதல் மற்றொரு கையைப் பிடித்து நடக்க போவதை நினைத்து
நான் ஆனந்த கண்ணீரில் நனைந்தேன் .
தினம்தோறும் என்னை அப்பா என்று அழைத்த மகளின் ஒலி
திருமண நாள் முதல் அவளது கணவனை
மாமா என்று மாற இதயம் துடிக்கிறது,
ஆனால் முகத்தில் ஒரு புன்னகை மட்டுமே வருகிறது
திருமண விழாவின் சிரிப்பு
உள்ளத்தில் ஆயிரம் நெகிழ்ச்சி.
மகள் புதிய வாழ்க்கைக்கு செல்ல போகிறாள் என்று.
அப்பாவாகிய நான் மகிழ்ச்சில் ஆனந்த கண்ணீர் விடுகிறேன்
ஆனால், அந்தக் கண்ணீரீல் துக்கமில்லை,
ஆனந்தம் கலந்த புனித நீர்.
என் மகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
என்ற அப்பாவின் இறுதி கடவுளின் வேண்டுகோளும் அது தான்.
இப்போது நான் செல்ல நேரம் வந்துவிட்டது,(இறக்கும் நேரம் வந்துவிட்டது)
ஆனால் என் பாசம் எப்போதும் உன் அருகில் இருக்கும்.
என் உருவமும்,நிழல்லும் தெரியாமல் போகலாம்,
ஆனால் என் ஆசீர்வாதம் மற்றும் நினைவுகள் எப்போதும் உன்னைத் தழுவிக் காக்கும் என் அருமை மகளே.
அப்பா போகிறான் என்றாலும்,
அப்பாவின் அன்பு என்றும் உன் இதயத்தில் வாழும்.
இந்த கவிதை அனைத்து மகளுகளுக்கும் சமர்ப்பணம் குறிப்பாக
தோழி தென்றல் மற்றும் GTC உள்ள அனைத்து சிங்கப்பெண்களுக்கும் 🙏💝
இப்படிக்கு உங்கள் மதுரைக்காரன் MDU
மருத்துவமனை கதவு திறந்த போது
ஒரு அழுகையால் உலகம் நிறைந்தது
அந்த சத்தம் நான் கேட்ட போது
என் உயிரின் புதிய இசை உண்டானது
கைகளில் தாலாட்டும் நேரம் வரவில்லை
ஆனால் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வழிந்தது
இது துயரக் கண்ணீர் அல்ல
இது உடல் முழுதும் பரவிய ஆனந்த கண்ணீராக இருந்தது
அந்த கண்ணீர் மகள் பிறந்த தருணத்தில் தான்
அப்பா என்ற புதிய பெயர் ஆனது
மனசுக்குள் ஒரு வாக்குறுதி கொடுத்தேன்
உணக்காக நான் எப்போதும் நிழலாகவும், சூரியனாகவும் இருப்பேன் என்று
சிறு கால்களில் நீ தடுமாறி நடக்கும்போது,
கையை நீட்டியவன் அப்பா என்னும் நான்
உன் சிரிப்பை பார்த்து
தன் கஷ்டங்களை மறந்து விட்டு உன்னை பார்த்து கொண்டு இருந்தவன் நான்
இன்று நீ வளர்ந்து நிற்கும் போது,
உன் பின்னால் நின்றிருப்பவன் இன்னும் அப்பா என்னும் நான் மட்டும்தான்
மகள் உலகம் காணும் வரை,
அப்பா எப்போதும் காவல் காத்து நிற்க்கும் காவல் காரன் நான்
குழந்தை போல என் கையை பிடித்து கொண்டு
நடந்த அன்பு மகளின் சிறு நடை,
இன்று முதல் மற்றொரு கையைப் பிடித்து நடக்க போவதை நினைத்து
நான் ஆனந்த கண்ணீரில் நனைந்தேன் .
தினம்தோறும் என்னை அப்பா என்று அழைத்த மகளின் ஒலி
திருமண நாள் முதல் அவளது கணவனை
மாமா என்று மாற இதயம் துடிக்கிறது,
ஆனால் முகத்தில் ஒரு புன்னகை மட்டுமே வருகிறது
திருமண விழாவின் சிரிப்பு
உள்ளத்தில் ஆயிரம் நெகிழ்ச்சி.
மகள் புதிய வாழ்க்கைக்கு செல்ல போகிறாள் என்று.
அப்பாவாகிய நான் மகிழ்ச்சில் ஆனந்த கண்ணீர் விடுகிறேன்
ஆனால், அந்தக் கண்ணீரீல் துக்கமில்லை,
ஆனந்தம் கலந்த புனித நீர்.
என் மகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
என்ற அப்பாவின் இறுதி கடவுளின் வேண்டுகோளும் அது தான்.
இப்போது நான் செல்ல நேரம் வந்துவிட்டது,(இறக்கும் நேரம் வந்துவிட்டது)
ஆனால் என் பாசம் எப்போதும் உன் அருகில் இருக்கும்.
என் உருவமும்,நிழல்லும் தெரியாமல் போகலாம்,
ஆனால் என் ஆசீர்வாதம் மற்றும் நினைவுகள் எப்போதும் உன்னைத் தழுவிக் காக்கும் என் அருமை மகளே.
அப்பா போகிறான் என்றாலும்,
அப்பாவின் அன்பு என்றும் உன் இதயத்தில் வாழும்.
இந்த கவிதை அனைத்து மகளுகளுக்கும் சமர்ப்பணம் குறிப்பாக
தோழி தென்றல் மற்றும் GTC உள்ள அனைத்து சிங்கப்பெண்களுக்கும் 🙏💝
இப்படிக்கு உங்கள் மதுரைக்காரன் MDU