1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-049
« on: October 15, 2024, 09:24:11 pm »
என் உயிரில் கலந்த இசையே...!
என் தனிமையின் துள்ளல் உன் இசை
என் தனிமையின் ஒரே தோழன் உன் இசை
என் தனிமையின் கண்ணீர்கட்டிகளை கரைக்கும் வெப்பம் உன் இசை
என் தனிமையில் அன்னையின் ஸ்பரிசம் உன் இசை
என் தனிமையின் இளமை ரகசியம் உன் இசை
என் தனிமையின் எதிரிகளை கொன்றது உன் இசை...
என் தனிமையின் நிசப்த பசிக்கு விருந்து உன் இசை..!
உருகிப்போன என் தனிமை மெழுகுவர்த்தி மீண்டும் உருப்பெறுகிறது உன் இசையால்
தோல்வியைத்தான் தினமும் சந்திக்கிறது உன் இசை..!
என் தனிமையை சலிப்படைய செய்யும் முயற்சியில்....
விடிந்துவிட்டது ..காற்றின் ஒற்றை காதலனே
நான் உன்னை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
மீண்டும் உன் இசையுடன் தனித்திருக்க காத்திருக்கிறது என் தனிமை….
என் தனிமையின் துள்ளல் உன் இசை
என் தனிமையின் ஒரே தோழன் உன் இசை
என் தனிமையின் கண்ணீர்கட்டிகளை கரைக்கும் வெப்பம் உன் இசை
என் தனிமையில் அன்னையின் ஸ்பரிசம் உன் இசை
என் தனிமையின் இளமை ரகசியம் உன் இசை
என் தனிமையின் எதிரிகளை கொன்றது உன் இசை...
என் தனிமையின் நிசப்த பசிக்கு விருந்து உன் இசை..!
உருகிப்போன என் தனிமை மெழுகுவர்த்தி மீண்டும் உருப்பெறுகிறது உன் இசையால்
தோல்வியைத்தான் தினமும் சந்திக்கிறது உன் இசை..!
என் தனிமையை சலிப்படைய செய்யும் முயற்சியில்....
விடிந்துவிட்டது ..காற்றின் ஒற்றை காதலனே
நான் உன்னை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
மீண்டும் உன் இசையுடன் தனித்திருக்க காத்திருக்கிறது என் தனிமை….