Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Limat

Pages: [1] 2 3 ... 5
2

வானமும் வசப்படுமே
வறுமை விலகிடவே..!
தானமும் செய்திடவே
தரணியில் நிலைப்போமே..!

கானம் ஒலித்திடும்
காற்றேறிய மூங்கிலாக..!
மனம் உறுதியானல்
மறுவாழ்வு நிதர்சனமே..!

சினமில்லா புன்னகையே
சிறந்திட வாழியாக..!
தனம் சேரும்
தினம் இடையின்றியே..!

ஞானம் உரமாக
ஞாயிறும் உன்பக்கம்..!
சனனம் வீழ்வதற்கல்ல
சாதித்து வாழ்ந்திடவே..!

சுணக்கமற்ற உழைப்பால்
சுகபோகம் தருமே..!
இனக்காமக இணைந்திட
இமயமாகும் எதிர்காலமே..!

பத்து வித வாயுவிலும்
உயிர் காக்க பிராணனாய் சுவாசமுண்டு..!
கோடி வகை உறவுகளிலும்
நீ வாழ காரணமாய் என் நேசமுண்டு...

உன் உடலது நிமிர்ந்து நிற்க
இரு நூற்று ஆறும் எலும்புகளுண்டு..!
நீ சமூகத்தில் நிமிர்ந்துநிற்க
உறுதியான உன் சொற்களுண்டு...

உயிர்ப்புடன் ஊனிருக்க
இரத்த ஓட்ட பாய்ச்சலுண்டு..!
உயரங்கள் பல நீ தாண்ட
சிந்தை முழுதும் உனதெண்ண ஓட்ட வீச்சுமுண்டு...

வெற்றிக்கனி நீ பறிக்க
உன் சரிபாதி நானுன்டு..!
மண்ணையும் பொன்னாக்கும்
பெண் உனைப்போல் யாருண்டு?

வரும் 2026 புத்தாண்டு உனதாகவே
நீ நினைக்கும் அனைத்தும் சாதித்து பலநூறாண்டு வாழ்ந்திடவே..!
இந்த மாமனுடைய ஆசையும் அரவணைப்பும் என்றும் உன்னுடனே என் உயிரின் உயிரான என் அம்முவிற்காக என்றும் உன் நினைவுகளுடன் நான்..!
வாழ்க வளமுடன்........

3
வேங்குழலில் இழைந்தாயடி....!


வெண்பாவில் கவிதையின் அழகு மிளிரும்
பெண் என்பாவால் உன்னழகை நான்
மிளிரச் செய்வேன் என் கவி வரிகளால்....

நதிக்கு நெளிவு அழகு
நிலவுக்குப் பிறை அழகு
கன்னத்தில் உன் குழிவு அழகு
கவிதைக்கு என் தமிழ் அழகு !
இந்த தமிழின் கவி வரிகளுக்கு அவன் அம்முவே அழகு!

அழகிய‌ நிலவை அருகில் கண்டேன் இன்று..
விளக்கின் ஒளியை உள்வாங்கி பிரகாசித்த அவள் முகத்தை என் கையில் ஏந்தி..

நீல வானத்தில்...!!!!
வெண்ணிற வான்மேகத்தின் உன் விழிகளும்...!!!

மலைச் சாரலுக்கு
முன் அந்தியில் தோன்றும்
கார்மேகத்தின் உன் கண் இமைகளும்...!!!

அதில்

சட்ரென மின்னலைப் போன்ற ஒளிவிசும்
உன் பார்வையும்
எப்பொழுதும் இயற்கையின் அழகுதான்...!!!

தாமரைக்கு போட்டியாய் நீரில் நிற்கும்
உன்னைக் கண்டதும்
தாமரைகள் தற்கொலை செய்தனவோ
செத்தமீனாய் மிதக்கிறதே...

எதிர்பாராத என் வாழ்வில்
எதிரே நீ தோன்றினாய்!

கண்களால் உன்னை கண்ட நொடியே
கண்மணிகளில் விழுந்தேன்...!

நிமிர்ந்து பார்க்க நேரமின்றி
நிழல் அதில்
நிலை மாறி விழுந்தேன்...!

சிரித்த நேரமே சிந்திக்க நேரமின்றி
சின்ன சிரிப்பில் விழுந்தேன்...!

அழகிய உன் முகம் அது
அங்கும் இங்கும் ஆட!
அசைய மறந்து ஆசையில் விழுந்தேன்...!

ஒருபுறம் ஒதுங்கிய கூந்தலில்
மறுபுறம் பார்க்க மனமின்றி
மயங்கி விழுந்தேன்...!

கட்டிய கைகளைக் கண்டு கண் விழிக்க முடியாமல் கறைந்து நின்றேனடி!
உயிரே
உன்னைக் கண்ட நொடியில்...!
சிலை அழகின் கலை மகளே
உனை படைத்து !

பிரம்மனும் தற்பெருமை
கொண்டானோ...!!!!

சிலையென வடிக்க தான்
நினைத்தான்!

சிந்தையில் உதிர்த்ததால்
உயிர் தந்து பூமியில்
விதைத்தானோ...!!!!

உயிர் கொண்ட ரோஜாவே
உனை அன்றி வேறொன்றும்
அழகாகதோன்றவில்லை இப்பூமியிலே...

உந்தன் இதழ்களில் ஒட்டிய சிவந்த சாயத்தின் வாசத்தை கேட்டுப்பார்
அது உன் மேல் நான்கொண்ட
காதலை சொல்லும்...

உந்தன் விழிகளில் குளிர்ச்சி காற்றை அள்ளி பூசும் கண்மையை கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்...

உன் வெட்டிய கூந்தலோடு உறவாடும் ஜன்னலோர காற்றை கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்...

உன் பாதங்களின் அழகை கூட்டும்
மருதாணியின் ஈரத்தை கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்

உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் வீட்டு வெள்ளை நாய்குட்டியை
கேட்டுப்பார் அது என் காதலை சொல்லும்

ஏன் இவ்வளவு ஒரே ஒருமுறை என்
இதயத்துடிப்பை கேட்டுப்பார்
அது உன் பேரையே
சொல்லி துதிக்கும்...

தினமும் அவளுக்காக நான் காத்திருந்த நிமிடங்கள் என் அகராதியில் யுகங்கள்...

அவள் பார்வை என்மீது பட்டபோதெல்லாம் என் வாலிபம் உல்லாச
ஊஞ்சலாடியது...

அவள் என்பேரை
உச்சரிக்கும்போதெல்லாம் எனக்கு
மீண்டும் ஒருமுறை
இறந்து பிறக்க தோன்றுகிறது...

நான் அவளின் பெயரை
உச்சரிக்கும் போதெல்லாம்
என் மனதில் தேனருவி பாய்கிறது...

வண்ணம் தீட்டிய அவளின்
இதழின் கோடுகளில் சிக்கிய
என் இதயம் வழிதவறிய
ஆடுப்போல் அலைகிறது...

அவளின் புன்னகையில் மயங்கி என் இளமையும் மழலை பேசுகிறது...

அவளின் மௌனத்தை கண்டால் கடலலையும் ஊமையாகிவிடும்...

முன் யோசனையோடு எல்லாம்
படைத்தான் இறைவன்..
முக்கிய உறுப்பாய் கண்ணை
படைத்தான்..
படைத்தவன் அறிந்த என்னவளின்
ரகசியம் பற்றி கவலையில்லாது
படைப்பானவன் நான் படைக்க முனைந்தேன் எனக்கேற்றபடி...

படைத்தவனுக்கு அடுத்தபடி

வார்த்தைகள் என் படைப்பில் மொழியானது

மொழியில் உள்ள அழகு என்ற வார்த்தை

மொழிகள் அனைத்தையும் ஆராதித்தது

கண்ணை கவரும் அனைத்தும்
அழகு என்ற விதியானது

காதலுக்கும் அழகு என்ற
வார்த்தை அடிப்படையானது

இவையனைத்தும் கண்ணால் காண்பது

கண்ணால் காணாத அழகும் உள்ளது

அது மனதால் மட்டும் உணர்ந்துக்
கொள்வது

அழகு என்ற வார்த்தை சுகமானது

அது ரசிப்பவர்களின் சொத்தானது..,

போவதாய் சொல்லி விட்டு
உடனே போய் இருக்கலாம் !
இப்போது பார் !
நீ மெதுவாய் நடந்து போகும்
அழகை பார்த்து !

இன்னொரு "கவிதை " எழுத
வேண்டியதாய் போயிற்று !

அவளை கடந்துப்போகும் நொடியில்
என் ஐம்புலனும் மயங்க கண்டேன்...

அவள் கண்கள் பார்த்து நின்றேன்
என் உயிரை அள்ளிச்சென்றாள்...

அவள் உறவை நாடிச்சென்றேன்
என் இரவை இறவல் கேட்டாள்...

அவள் நெஞ்சில் ஒலிந்துக்கொண்டேன்
என் உயிரில் கலந்துக்கொண்டாள்...

அவளின் அடர்ந்த கூந்தலில்
என் இரவை பதுக்கிவைத்தேன்...

அவள் மடிக்கு ஏங்கிய என் மனதை
துடிக்க வைத்து துதிக்க வைத்தாள்...

என் தனிமைக்கு துணையாக
அவளின் நினைவை அனுப்பி வைத்தாள்

அவள் நினைவும் என் நினைவும்
உரசிக்கொண்டு பூக்கள் பூத்தன..


4

பரவாயில்லை பிரிந்து போ

பரவாயில்லை பிரிந்து போ
இனி என் போல் யாரும் உனக்கு
'அன்பு செய்ய போவதில்லை'.
பரவாயில்லை பிரிந்து போ
இனி என் போல் யாரும் உன்னை
'சகித்துக்கொள்ள போவதில்லை'
பரவாயில்லை பிரிந்து போ
இனி என் போல் யாரும் உன்
'கண்ணீரை துடைக்க போவதில்லை'

பரவாயில்லை பிரிந்து போ
இனி என் போல் யாரும் உனக்காக
'காத்திருக்க போவதுமில்லை'
பரவாயில்லை பிரிந்து போ
இனி என் போல் யாரும் உன்னை
'காதலிக்க போவதுமில்லை'

பரவாயில்லை பிரிந்து போ
நான் செய்த பாவமே..!

5
This week I choosen this song
Song Name : Enna aanalum enaku
Album Name : My life full damage
Music : Dhinesh dhanush
Lyrics : Dhinesh dhanush
Singers : Dhinesh dhanush

Favorite lines:

Thappunu edhuvum Illa
Sogamlam irukku Ulla
Irunthu sonnadhilla
Ennoda sogatha
Veliya nadichathilla
Nambikkai irukku ulla
Yevanum olungu illa
Freeya udura MACHAN

I dedicate this song to the best person who lost me and i am grateful for there presences in my life.


Thank you

6

பிரியா நினைவுகள்


வான்காற்று கிழக்கிலிருந்து தூர்வார..

மழை மேகம் தரை நனைக்க..

எறும்புகள் சாலைகளில் வரிசையிட்டு கோலமிடுகிறது அதில்..,

செம்மயிர்க்கொன்றை பூக்களின் ஒப்பனை...

ஊர்க்குருவிகளின் இசை கூடிய நடனம்

இவையல்லாது முன் முற்றத்தில் ஒற்றை கால் காக்கையின் கரைசல்

மார்கழி திங்களன்று ஒரு திங்கள் மறைந்திருக்கும் "திங்கள்"

இவை அனைத்தும் உன் வருகை நோக்கிய இசையோ ? சொல்?

காற்றாக வருகிறாயா?
கார்முகிலாக வருகிறாயா ?
மதியாக வருகிறாயா?
மலரில் மணமாக வருகிறாயா?
மண் வாசமாக வருகிறாயா?
மழலையர் சிரிப்பிலா?

எப்படி ஆயினும் சரி
ஒன்றை மட்டும் உணர்வின்றி நம் நினைவுகளை உரமிட்டு சொல்கிறேன் !
ஒரு முறை வந்தால் போதும்....
மீனாக உன்னை வைத்து
 நீராக நான் இருப்பேன் .......

ஆனால் விதியோ,

மீன் வடிவ கண்களில் கண்ணீர் கடலாக நிலைத்திருக்கிறாய் !!

7

இது என்னோட வானவில்🌈


எதாவது வரைந்து கொடு
நான் கலரடிக்கிறேன்",
என்றாள் ஒரு மழலை..
மெனக்கெட்டு ஒன்று முதல் ஏழு வரை
விரல்விட்டு எண்ணிப்பார்த்து
வரைந்து கொடுக்க
சிறிது நேரத்தில் அந்த மழலை
 வண்ணம் தீட்டிய வானவில்
காகிதத்தில் மினுமினுத்தது
ஒரே சிகப்பு நிறத்தில்..
"வானவில்லுக்கு ஏழு வண்ணம் தெரியுமில்ல?",
 என்று நான் கேட்க,
"இது என்னோட வானவில்
இப்படித்தான் இருக்கும்",
என்று புன்னகையுடன் பதிலளித்தால்
அந்த மழலை....

8

என் மனதில் இருக்கும் என் அம்முவின் வரிகள் என் வாயிலாக...


மறந்துவிடாத காதல்...


நீ தான் என் உலகம் என்று
வாழும் என்னிடத்தில்...

என் பாசம் எல்லாம் வேஷம் என்கிறாய்...

என் மனதுக்குள் இருக்கும்
உன் மீதான காதல்...

நான் மண்ணில் புதையும்வரை
உன்னுடன் பேசும்...

நீ என்னோடு பேசுவதில்லை என்றாலும்...

உன் நினைவுகள் என்னோடுதான் பேசுகிறது...

அன்று ஆறுதல் சொல்லி
அரவணைக்க நீ இருந்தாய்...

இன்று என்னை அரவணைக்க...

என்னருகில் உன் நினைவுகளும்
என் கண்ணீரும்தான்...

உன் புகைப்படம் பார்த்த
என் நண்பர்கள் கேட்டார்கள்...

நீ யாரென்று...

காய்ந்து போன இந்த மரத்திற்கு நீ
உயிர் கொடுக்கும் வேர் என்று சொன்னேன்...

இன்று மரத்தை கோடாரி கொண்டு
வெட்டி வீழ்த்துவது போல...

உன் வார்த்தை கோடாரியால்
என்னை தினம் கொள்கிறாய்...

என் அன்பை புரிந்துக்கொண்டு
உன் செல்ல தீண்டல்களோடு...

என்னை தீண்ட போவது
எப்போது என்னுயிரே.....

நெஞ்சினில் புதைந்திருக்கும்
உன் நினைவுகள்...

இமைகளை கடந்து
கண்ணீராய் வழிந்தோடுகிறது...

உயிருக்குள் உண்டான வலிகளை...

ஊமையாக அழுது தீர்த்து கொண்டு...

வெளியே சிரிப்பு என்னும் முகத்திரை அணிந்து....

போகர் எழுதிய ஏட்டு
ஓலைகளை நான் படிக்கவில்லை...

படித்திருந்தால் நானோ
கூடுவிட்டு கூடுபாய்ந்து...

நீ தினம் தினம் ரசிக்கும் உன் Royal enfield ஆக மாறியிருப்பேன்...

சிறிய பூவினுள் பெரியக்கனி
ஒளிந்திருப்பது போல...

என் சின்ன இதயத்தில் பேரழகனாக
ஒளிந்திருப்பது நீ தானேடா...

கருவை சுமக்கும் போது பெண்
சுகமான வலியாக சுமப்பாள் என்றார்கள்...

நானோ உன் கருவை சுமக்காமலே
சுகமாக சுமக்கிறேன் உன்னை...

ஏக்கத்தோடு அன்று
உனக்காக காத்திருந்ததிற்கும்...

கண்ணீரோடு இன்று காத்திருப்பதற்கும்
சிறு வித்தியாசம்தான்...

அன்று எனக்காக நீ
இருந்தாய், இன்றும் இருக்கிறாய் ஆனால் விலகி...

என்றும் உனக்காக நான் இருக்கிறேன்...

மறந்துவிடாத காதலை என்னி என்னுடன் நீ வரும் நாளுக்காய் கண்ணீருடன் காத்திருக்கிறேன்.....

மறந்துவிடதே காதலை....
மறந்து போல என்னையும்.......

9
Birthday Wishes / Re: Happy Birthday Limat
« on: September 26, 2025, 03:41:34 pm »
Tq so much ammu😘🥺

10

ஏனிந்த தாமதம்? சொல்லாயோ சம்மதம்?


தாவணி பெண்ணே !
வருவதற்கு தாமதமாவது ஏனோ?
உன் அப்பா வந்து தடுத்தாரோ?
உன் தாய் என்னைப் பழித்தாரோ?
ஏனிந்த தாமதம்?
எப்போது ஏறி வருவாய் என் வீட்டுபடி?

வாசலோரம் விழிவைத்தே
காலநேரம் காணாமலே
கோலமயில் நீ வருவதற்கே
காத்திருக்கின்றேன்.....
நீயோ என்ன செய்து கொண்டிருக்கிறாயோ?
யார் உன்னை மறித்தாரோ?
நான் கெட்டவன் என்றுரைத்தாரோ?
ஏனிந்த தயக்கம்?
முன்னே ஏறிய கால்கள் தடுமாறியதோ?

சேலை சோலையே!
 எப்போது சாலையில் வருவாயோ?
உன்னோடு கைகோர்த்து
வாழ்நாள் முழுவதும் நான் போக
நீ வர வேண்டும் என்னோடு....
நெஞ்சம் துடிக்கிறது..
உன் நினைவில்
பஞ்சமில்லாமல் நாளும் கடக்க,
வருத்தம் தரும் உன் தாமதம்,
திருத்துகிறது  உன்னை மேலும்
நேசிக்கத் தோன்றுகிறது;
உன் தாமதக் காரணத்தை யோசித்து, யோசித்து
பசியும் மறந்து விட்டது.
ஏனிந்த தாமதம்?
என்னை காண வரும் பாதையும் மறந்து போனதோ?

சாலைத் தென்றலே! உன்னைக் காணாத
சாலையெங்கும் வெறுமையாகுதே!
பயணிக்கும் போது வேதனை அடைகிறேனே!
பயணிப்பது எங்கே என்றறியாமலே!
கால்களும் நடக்குதே கூடவே வரையரையின்றி
காலமும் நகற்கிறதே!
நரைமுடி தெரிகிறதே!
ஏனிந்த தாமதம்?
எல்லாம் மறந்தாயோ?
நினைவை இழந்தாயோ?

மலைத்தேனே! உன்னை பருக விழைந்தேனே!
கலைத்தேனே! காதல் தேன் கூட்டால் கவிழ்ந்தேனே!
பிழைத்தேனே! உன் நினைவில் சுவைத்தேனே!
களைத்தேனே! உன்னை காணாது மனம் சளைத்தேனே!
தேனமுதே! அருகே வா!
ஏனிந்த தாமதம்? சொல்லாயோ சம்மதம்?

11
Birthday Wishes / Re: Happy Birthday PRIYADHARSHINI
« on: September 23, 2025, 07:29:51 am »

அணுஅணுவாய் அனுதினமும் என்னை ஆட்சி செய்யும் அழகியே.....
தவமின்றி கிடைத்தவள் நீ....
தேடுதல் இன்றி வந்த வரம் நீ...
 என் வாழ்க்கையின் பெரும் பொக்கிஷம் நீ...
என் உயிர் உள்ளவரை உன்னை தொடர்ந்து நேசிப்பேன்...
உலகின் ஏழு அதிசயங்களை கண்டதில்லை ஒருபோதும்...
 எனினும் கவலைப்பட்டதில்லை ஏழு அதிசயங்களின் மறு உருவமான நீ என்னுடன் கைகோர்த்து நடப்பதால்...
வாழ்க்கையில் துன்பமோ இன்பமோ எது நேர்ந்தாலும் என்றும் என்னை விட்டு நீங்காத உயிரிலும் மேலான என் அம்முவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....

நான் நானாகவே என்னும் உனது மனநிலையில் உறுதியோடு நின்று மென்மேலும் உன் வாழ்வில் உயர இந்த மாமனின் வாழ்த்துக்கள் ....

என்றென்றும் உன் நினைவில் நான்...!

13
Am yours Tamizh and i request a song
Kaatrin viral from Aghathiyaa

My favorite lines are

காதலி என்பவள் கட்டில் அல்ல
கை தட்டி சிரிக்கும் பொம்மை அல்ல
நெஞ்சுக்குள் வருவாள் மெல்ல மெல்ல
உயிரே இவள் என்று சொல்ல சொல்ல

நீ யாரோ எவளோ அல்ல
நான் ஏழெட்டு வரிகளில் சொல்ல
நீ அலையோ மழையோ அல்ல
நான் ஆயிரம் விரல்களில் அல்ல

14

கால் முளைத்த மலர்களெல்லாம்
தோட்டங்களில் நடமாடுகின்றன ...!
மனிதப்பிறவிக்கு மகளாய் வரம் வாங்கி !


என் மகளுக்காக.....


உன்னை கையில் ஏந்தி கொஞ்சுகையில் என் நினைவலைகளில் சில சிதறல்கள் இதோ.. 

எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ நீ
எனக்கு மகளாக பிறந்தாய்...
ஒரு கோடி வண்ணத்து பூச்சியின் வண்ணங்களை
அழகு முகத்தில் கொண்டாய்....
உந்தன் இலவம் பஞ்சு பாதம்
உதைக்க எந்தன் கர்வம் போகும்,
முகத்தில் அம்மாவின் அழகை கொண்டாயே அம்மா....
 எந்தன் அம்மா
கனவில் காணாத புதையல் தந்தானே
பிரம்மா அந்த பிரம்மா.....
எல்லை காணாத பறவையின் சிறகில்
ஏறிப்பறப்பாயே வாழ்விலே
வாழ்வில் நீ காணும் வெற்றிகள் என்ன
வானம் கூட எல்லை இல்லையே
பூமித்தாயே நிலவைபோலே உன்னை சுற்றி..
என் வாழ்கையே
நிலத்தில் நீ வாழ உரங்கள் போலாவேன்
செடியே மல்லி செடியே
நீ பூக்கும் நேரத்தில் மஞ்சள் நீராட்டி
மகிழ்வேன் நானும் மகிழ்வேன்....
பூக்கள் நீ சூடி பாக்கள் நான் பாடி
உந்தன் திருமணம் நடக்குமே
இறைவனே உந்தன் திருமணம் கண்டு
வியந்துபோகும் படி செய்வேனே
உன்னை பிரியும் அந்த நேரம்
நெஞ்சில் இடியுடன் மழையுந்தான்..

என் உயிரினில் ஊடுருவிக் கண் சிமிட்டும் கடவுளவள்...
என் ஆனந்த ஆணணுக்களின் ஆர்ப்பரிப்பவள்
எந்தன் ஜீவனின் ஜீவன் ஈன்றெடுத்த ஜனனமவள்....
என் அன்னையின் அன்பை நீக்கமற புகட்டியவள்....
அவள் -
விரல்பட்ட விடம் இனித்து
குரல்கேட்ட விடம் கனிந்து
இதழ்பட்ட விடம் கரைந்து
என் இதய நரம்புகளை யாழென மீட்டுபவள்....

காமத்தில் கலவாத என் கண்ணின் முத்தம் - என் கண்மணியின் முத்தம்...
செல்ல மகள் உதிர்க்கும் தருணம்
சில்லிட்டுத் தெறிக்கும் உன் அன்னையின் இரத்தம்...

பொன்மகளவள் புன்னகையின் வெளிச்சப் பூவை
இரவல் வாங்கிட இளமதியோடு இன்னபிற
கோள்களும் தவம் கிடக்கும் தத்ரூபம்...

எந்தன் வாழ்வியக் கண்ணீரின் காயங்கள்
ஆற்றிடும் அதிசயம்
அவள் மார்புதைக்கும் பாத ஸ்பரிசத்தினால்...

அவள் வரும்வரை நேரம் போகவில்லை
வந்தபின் நேரம் போதவில்லை - அவள்
இன்னிசை மழலை மொழி கேட்டு களித்திட...

தென்பாண்டித் தெம்மாங்கும் யாசகம் கோரும் - மழலையவள்
உச்சரிக்கும் பைந்தமிழின் சங்கீதத்தில்........
எடுத்துக்காட்டு உவமையணி ஏங்கி நிற்கும்
எழில் பதுமையவளின் சேட்டைகளை எடுத்தாள்வதற்கு...
ஆக,
தமிழன்றி வேறெந்த மொழியும் இலக்கணம்
சமைக்க வில்லை..
ஆம் இந்த தமிழின் கவி வரிகளும் கூடவே...
தாரகையவள் உலவும் அழகியலில் ....

இங்ஙனம் வாழ்க்கையின் வழியில்
வந்தவள் வாழ்க்கையாகி போகிறாள் - அந்திமத்தின்
நிறைவேறாத ஆசைகளின் முற்பகுதியில்
வாழ்ந்துவிட்டு பிற்பகுதியில் விட்டு பிரிந்து செல்லும்
என் மகளுக்காக........

Pages: [1] 2 3 ... 5