1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-060
« on: October 07, 2025, 10:15:25 am »என் மனதில் இருக்கும் என் அம்முவின் வரிகள் என் வாயிலாக...
மறந்துவிடாத காதல்...
நீ தான் என் உலகம் என்று
வாழும் என்னிடத்தில்...
என் பாசம் எல்லாம் வேஷம் என்கிறாய்...
என் மனதுக்குள் இருக்கும்
உன் மீதான காதல்...
நான் மண்ணில் புதையும்வரை
உன்னுடன் பேசும்...
நீ என்னோடு பேசுவதில்லை என்றாலும்...
உன் நினைவுகள் என்னோடுதான் பேசுகிறது...
அன்று ஆறுதல் சொல்லி
அரவணைக்க நீ இருந்தாய்...
இன்று என்னை அரவணைக்க...
என்னருகில் உன் நினைவுகளும்
என் கண்ணீரும்தான்...
உன் புகைப்படம் பார்த்த
என் நண்பர்கள் கேட்டார்கள்...
நீ யாரென்று...
காய்ந்து போன இந்த மரத்திற்கு நீ
உயிர் கொடுக்கும் வேர் என்று சொன்னேன்...
இன்று மரத்தை கோடாரி கொண்டு
வெட்டி வீழ்த்துவது போல...
உன் வார்த்தை கோடாரியால்
என்னை தினம் கொள்கிறாய்...
என் அன்பை புரிந்துக்கொண்டு
உன் செல்ல தீண்டல்களோடு...
என்னை தீண்ட போவது
எப்போது என்னுயிரே.....
நெஞ்சினில் புதைந்திருக்கும்
உன் நினைவுகள்...
இமைகளை கடந்து
கண்ணீராய் வழிந்தோடுகிறது...
உயிருக்குள் உண்டான வலிகளை...
ஊமையாக அழுது தீர்த்து கொண்டு...
வெளியே சிரிப்பு என்னும் முகத்திரை அணிந்து....
போகர் எழுதிய ஏட்டு
ஓலைகளை நான் படிக்கவில்லை...
படித்திருந்தால் நானோ
கூடுவிட்டு கூடுபாய்ந்து...
நீ தினம் தினம் ரசிக்கும் உன் Royal enfield ஆக மாறியிருப்பேன்...
சிறிய பூவினுள் பெரியக்கனி
ஒளிந்திருப்பது போல...
என் சின்ன இதயத்தில் பேரழகனாக
ஒளிந்திருப்பது நீ தானேடா...
கருவை சுமக்கும் போது பெண்
சுகமான வலியாக சுமப்பாள் என்றார்கள்...
நானோ உன் கருவை சுமக்காமலே
சுகமாக சுமக்கிறேன் உன்னை...
ஏக்கத்தோடு அன்று
உனக்காக காத்திருந்ததிற்கும்...
கண்ணீரோடு இன்று காத்திருப்பதற்கும்
சிறு வித்தியாசம்தான்...
அன்று எனக்காக நீ
இருந்தாய், இன்றும் இருக்கிறாய் ஆனால் விலகி...
என்றும் உனக்காக நான் இருக்கிறேன்...
மறந்துவிடாத காதலை என்னி என்னுடன் நீ வரும் நாளுக்காய் கண்ணீருடன் காத்திருக்கிறேன்.....
மறந்துவிடதே காதலை....
மறந்து போல என்னையும்.......