Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Limat

Pages: [1] 2 3 ... 6
1



அந்தி மழை பெய்யும் வேளையில்
நீ பேருந்தின் ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்து மழியினை ரசிக்க
நானோ உன் அழகில் மயங்கி
நாணம் எனும் குடை தாங்கி உன்னை ரசிக்கையில் என்னுள்ளே பிறந்த சில வரிகள் என்றும் என் அம்முவிற்காக..!

பூக்கள் பூப்பது  வாழ்வதற்கு அன்றோ..!
வானம் இருள்வது நிலவுக்கன்றோ..!
சூரியன் உதிப்பது பூமிக்கன்றோ..!
மேகம் கருப்பது மழைக்கன்றோ..!

சகியே!
நான் இருப்பதுஉனக்கன்றோ..!
நீ இருப்பது என் மனதில் அன்றோ..!

சொல்லடி பெண்ணே!
உன் கருவிழி பார்வையில்
என்னை பார்ப்பது
மழலைப் பார்வையா.?
இல்லை
நான் தான் மழலையா.?

மலரே!
நீ தலை குனிவது
உன் இதயத்தை பறிகொடுத்த வெட்கத்திலா.?
இல்லை
என் இதயத்தை சிறை எடுத்த களிப்பிலா.?

என்னை பார்த்து
நீ வெட்கத்தில் புன்னகைக்க
என் ஜீவனே சிவக்குதடி.!
மறுமுறை நீ வீசிய
மின்னல் பார்வையில்,
என் இதயம் நொறுங்குதடி.!
உறைந்தேன் ! நின்ற இடத்திலே!

ஆகா பெண்ணே!
நீ தலைகுனிந்தது
நம் மனப்போரில் எனை வீழ்த்தவா.?
என்றெனில்
பேதையே!
உன்னை முதல்முறை பார்த்த கணமே
நான் நிராயுதபாணி ஆனேன்.!
இதை அறிந்தும்
ஏன் மனப்போர் விடுக்கிறாய்..?

உயிரே!
உன்னை பார்த்த அன்றே
நான் சரணடைந்தேன்
உன் கால் கொலுசில்.!
கோழையாய் அல்ல..!!
உன் மனம் கவர்ந்த வேந்தனாய்..!!!
இப்படிக்கு
என் மனதை இழந்து
உன் மனதை ஆளும் உன்னுடைய மாமன்..!

2
ஒரு கவிதை எழுத ஆசை...



உன் கார் குழலின் கருப்பு மை தனை
கொஞ்சம் கடன் வாங்கி ..
உன் கருப்பு பொட்டு
தனை தலைப்பாய் இட்டு..
உன் கண்கள் இரண்டை கொண்டு
உலகை கண்டு .....
உன் மூக்கின் நுனியில்
மூச்சு தனை கடன் வாங்கி....
உன் செவ்விதழின்
வரிகளை வசனமாக்கி....
உன் வெண் சங்கு கழுத்து தனை
வெள்ளை காகிதமாக்கி.....
உன் கன்னம் இரண்டில்
வண்ணம் குழைத்து....
உன் மார்பின் மீது
கொஞ்சம் உறங்கி....
உன் கைகள் இரண்டை
பிடித்து கொண்டு
பத்து விரலில்
முளைத்த குட்டி நகங்களைப் பற்றி ....
உன் பிஞ்சு பாதம்
நடக்க
பூமி புனிதம் அடையும் இரகசியத்தை ....
அந்த வருணபகவான் அளித்த மழையெனும் பரிசில் நீ கையில் குடையுடனும் அந்த செல்ல சிரிப்பில்
பல வெள்ளை மனதை
கொள்ளை கொண்ட அழகை கண்டு ...
குட்டி தேவதையே உன்னை பற்றி
ஒரு கவி எழுத கோடி ஆசைக் கண்மணியே....

கால் முளைத்த வண்ணத்துப் பூச்சிகள்
மனதுக்குள் தேன் குடிக்குது...

சின்னஞ்சிறிய இதயத்திற்குள்ளே
சிறகடித்துப் பறக்குது.

இறகு இல்லா வான்பறவைகள்
மழலையாய் இங்கு வந்ததோ?
இதயம் கவரும்
மனம் கொத்திப்பறவைகள்
நம்மையும் கவர வந்ததோ?

குட்டி குட்டி சேட்டைகளில் தான்
எத்தனையோ அழகு இருக்கு.
நீ செய்யும் குறும்பிலே தான்
எல்லையில்லா அன்பும் இருக்கு.

மானிடப் பிறவியில்
மகிழ்ச்சியை மட்டுமே
தந்திடும் பருவம் இதுதானே!

மகிழ்ச்சி தேனை அள்ளிப் பருகிட
மனமும் ஏங்குது தானே!

ஆதவனும் உன்னுடன் போட்டியிட்டு
ஓய்ந்தே போகிறான் மாலையில்.
நீ உறங்கிய பின்னே சந்திரனும்
மெதுவாய் வந்து போகிறான்.

உந்தன் முகத்தில் காணும் சிரிப்பில்
கடவுளும் அடிமை தான்.
நீ சொல்வதை செய்ய என்னை மாற்றிடும்
நீயும் கடவுள் தான்.

பிஞ்சு இதயத்திற்குள் நஞ்சு சேராது
நாமும் காத்திடுவோம்.
மழலையோடு சேர்ந்து மகிழ்ச்சியை
நாளும் பகிர்ந்திடுவோம்......

என்றும் உங்கள் நட்பில்

3

நீ கொடுத்த காப்பியின் மனத்தையும் அதில் வரும் ஆவியில் என் இதயமும் ஆவியாய் போகிறதே மாமா என்று நீ அழைத்த நொடியினில் என்னை மறந்து உன் அழகை ரசித்த அந்த நொடியில் என் நெஞ்சில் தோன்றிய சில வரிகள்

மணமணக்கும் மல்லிகைக்கும் மயங்காதவன் நான்

நீ மாமா மாமா வென்று அழைக்கையில் மயங்கி விட்டேன்

இதுவரை இன்பத்தையே அறியாதவன் நான்

நீ மாமா மாமா வென்று அழைக்கையில் பல கோடி இன்பமடைகிறேன்

மனக்கவலையால் மறத்துப்போன என் உள்ளத்திற்கு

மாமா மாமா வென்று நீ அழைக்கையில் மருந்தாய் ஆறுதல் அளிக்கிறதடி

நான் தோல்வியினால் துவண்டு விழும் போதெல்லாம்

மாமா மாமா வென்று நீ அழைக்கும் மந்திரமே மனதில் வந்து ஆயிரம் யானை பலத்தை கொடுத்து எழுந்து அனைத்திலும் என்னை வெற்றி பெற செய்கிறதடி

உன் தித்திக்கும் தேன் குரலால் மாமா மாமா மாமா வென்று நீ என்னை அழைக்கும் தாரக மந்திரம் போதும்மடி எனக்கு
மரணத்தை வென்று மகிழ்வுடன் என்றும் நான் வாழ!!!

எப்போது நீ அழகு???
நிம்மதி நான் தேடி
உன்மடி சாயும்போது
என் தலை நீ கோதி
ஆறுதல் சொல்கையில்
அடி பெண்ணே நீ அழகு...

ஆயிரம் முறை முயன்று
சில முறை நான் தோற்று
தேம்பி அழும் நிலை கொண்டு
உன் தோள் நான் சாய
ஆறுதல் சொல்லும் போது
அடி பெண்ணே நீ அழகு...

அன்பாய் உன் குறு நகையும்
அம்மாவின் நினைவு சொல்லும்
உன் அன்படி ஆயிரம் வேண்டும்
எப்போதும் நீ வேண்டும்...
என்று நீ உணர்ந்து எனக்காக
நான் இருக்கிறேன் என்ற
நம்பிக்கையும் நீயும்
எப்போதும் அடி பெண்ணே
எந்நாளும் எனக்கழகு...

4

கற்பனைகள் இன்றி கவிதைகள் இல்லை
என் அம்மு இன்றி எனக்கு கற்பனைகளே இல்லை
அப்படிப்பட்ட கற்பனைகளில் சில கிருக்கல்களை சிதருகிறேன்....



அவளும் தமிழும்


பல்வேறு மொழிகள் பேசலாம்
வெவ்வேறு பழக்கவழக்கங்கள் இருந்தாலும்
ஒரே மொழி பேசும் பெண்மை

மௌன மொழி பேசுவாள்
தமிழைப் போன்று புலமையாவாள்

அழகு விழியில் பேசுவாள்
தமிழைப் போன்று நாணுவாள்

புன்சிரிப்போடு பேசுவாள்
தமிழைப் போன்று புன்னகைப்பாள்

வண்ணமயிலாக ஆடுவாள்
தமிழைப் போன்று வர்ணம் பூசியவள்

புள்ளிமானாக துள்ளிகுத்திப்பாள்
தமிழைப் போன்று புள்ளியிட்டு கோலமிடுபவள்

அல்லி விழியுடையாள்
தமிழைப் போன்று கூர்மையானவள்

முல்லை பார்வையினால்
தமிழைப் போன்று குணமுடையவள்

கொள்ளைப்போகும் நெஞ்சம்
தமிழைப் போன்று கவிதையானால்

வானமகள் நாணுவாள்
தமிழைப் போன்று மென்மையானவள்

நிலவைப் போன்றவள்
தமிழைப் போன்று வெண்மையானவள்

கதிரவனைப் போன்றவள்
தமிழைப் போன்று பிரகாசமானவள்

கமல விழியாள்
தமிழைப் போன்று படர்ந்திருப்பாள்

அன்பு கொண்டவள்
தமிழைப் போன்று அன்பானவள்

பண்பு கொண்டவள்
தமிழைப் போன்று பண்பானவள்..

 அந்த மழலை காதல் சின்னஞ்சிறு வயதில் அந்தி மாலை பொழுதில் என்னவளுடன் கை கோர்த்த அந்த அழகிய நினைவுகள் மட்டுமே இன்று என்னோடு...

வெற்றிக்கு விருந்தளிக்கும் நாம்
தோல்விக்கு மருந்தளிக்க மறக்கிறோம்...

பேசாமல் நகர்வதும் பேசிவிட்டு செல்வதும்
பாசத்தின் வெளிப்பாடு
அன்பிற்கு இல்லை எந்நாளும் பாகுபாடு

அமைதி அடைந்த பிறகு மனம்
ஆசுவாசம் கொள்கிறது முடிவில்...

வாழ்வை சுவாரஸ்யமாக்க
வெற்றிடமின்றி நிரப்பி வையுங்கள்
தங்களின் விலை மதிப்பில்லா அன்பினால்.....

5
முகம் மறந்தேன்!
என்னை முழுவதும் மறந்தேன்!
இமைக்கும் ஒவ்வொரு வினாடியும் உந்தன் முகம்தானடி!
உன் வழிப் பாதை யாவும்
பூக்கள் தூவிக் காத்திருந்தேன்!
உன் விழிப் பார்வையில்
என்னை நான் தொலைத்தேன்!
என்னவளே!
எனக்கானவளே!
ஏக்கத்ததோடு காத்திருக்கிறேன்!
உன் அன்பில் நனையக் காத்திருக்கிறேனடி!
என் உயிரும், உள்ளமும் நீதானடி!
புன்னகைப் பூவே!
உந்தன் கரம் பிடிக்கும் நாளை எண்ணி
என் நாட்களும் நகருதடி!

நீ  நிலவை தலையனையாக
வைத்து உறங்கும் வேளையில்
நான் உந்தன் நினைவுகளை
தலையனையாக வைத்து
உறங்குவேன்!,

நீ விடியலை காண
ஏங்கும் வேளையில் நான்
உந்தன் விழியினை காண
ஏங்குவேன்!!,

நாம்  ஒருபோதும் நேரில்
 பார்த்தது இல்லை!
 இருந்தும் ஒவ்வொரு நாளும் நம்மை காண செய்த தொடுதிரை ஒருபோதும் நம்மை வெறுத்து பார்த்தது இல்லை..!

நாம் கண்களால் இதுவரை கண்டது இல்லை!
ஆனால் நாம் உணர்வுகளால் ஒருநொடி
கூட பிரிந்து இருந்தது இல்லை,

நீயும் நானும்
அன்பால் அறைநொடி
இனைந்து இருந்தது இல்லை!
இருந்தும் இருக்கின்றோம்
அயுள்வரை இணையாமல்..

பூக்களின் இதழ்களைவிட
மென்மையானவள் நீ .......!
தென்றலும் தேனும் சேர்ந்து
பெண்மையானவள் நீ......!

உந்தன் முகம் பார்த்தால்......!
என் உயிர் பூக்கும்......!
நீ புன்னகைத்தால்......!
புயல் தோற்கும்......!

என் எண்ணங்களின்
வண்ணமாகி போன
என் அம்மு .......

என் ஆசை வாசலின்
அழகான கோலம் ஆவாள்......!
என் கனவு புத்தகத்தின்
புதுக்கவிதை ஆவாள்.....!
என் உணர்வு பூக்களின்
வாசம் ஆவாள்.......!

என் இரவுகளின் நிலவாகி போன .......!
என் அம்மு ......!

என் விழி தோட்டத்தில் பூத்த
ஒற்றை ரோஜா ஆனால்......!
என் உயிர் வீதியின் ஒளிவிளக்கு ஆனால் .......!

என்னை எப்பொழுதும் பிரதிபலிக்கும்
என் காலக்கண்ணாடி ஆவாள்......!
நான் எபோழுதும் சுவாசிக்கும்
இதய பூங்காற்று ஆவாள்.......!

சுகமோ துக்கமோ.......!

என் அம்முவின்  மடிமெத்தையில்
தலைசாய்த்து படுக்கும்பொழுது..........!
அவள் விரல்வைத்து என் தலை கோதும்

அந்த தருணங்களில்.........!

உலகம் மறந்திருந்தாலும்......!
உலகம் முடிந்திருந்தாலும்.......!
ஏன் ! நானே இறந்திருந்தாலும் .......!
"சம்மதமே"...........!


6


ஒரு முடிவினில் ஒரு ஆரம்பம் அதுவே இயற்கையின் நியதி ...
ஏனோ என் வாழ்வில் அது எதிர்மறையே நான் இருக்கும் பொழுதே என்னவளின் காதல் வேறு ஒருவனிடம்...
சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல்
திசையின்றி பறக்கும் எந்தன் கவி வரிகள்...

உன்னை காண நொடிகள் யாதும்
என் இமைகளின் ஓரம் ஈரப்பதம் ஆகும்

ஆழ்ந்து கிடக்கிறாய் ஆழமாய்
என் விழிகளுக்குள்ளே

என்னை அழவைத்துப் பார்க்கிறாய்
உன் அடர்ந்த பிரிவாலே

தோய்ந்து போய் உள்ளது உள்ளம்
நீ நீண்ட துலைவிலே நிற்கிறாய்

அடியெடுத்து உன் அருகே வர முயற்ச்சித்தேன்
ஏனோ நீ மறைந்துக் கொண்டிருக்கிறாய்
என் விழிகளுக்கு தென் படாமல்

ஓய்ந்து போனேன் தேடி தேடி
உடைந்து போனேன் உன்னை நாடி நாடி
விழுந்து போகிறேன் மண்ணில் ஓடி
கலங்கரை விளக்கமாக நான் மாறி

உன் நினைவின் பிம்பமானது என் ஈரமான விழிகளிள்....

தொடுதிரை முன்  விழியசைத்து
 காலம் விரையம் செய்து விழிகள் பேசிட
காதலில் விரல்கள் கோர்த்திட,
வினாக்களின் நடுவே நான்...
 பாவை நீயோ விளையாட்டாய் என்னை
விட்டுச் சென்றிட  பாவம் நான்..
விரல்களில் பேனாவுடன்,
விளையாத தாடியுடன் 
உயிரற்ற விதியுடன்,
விலையற்ற உடலுடன் காலத்தின்,
விபரீத ஆசையினால்
வீணாகிப் போனேனே..!
 
வலைதள பக்கத்தில் உனது மனநிலை கண்டேன்...
நீ என்னை காதலித்தது உண்மை
தற்போது உனது அன்பு வேறு ஒருவரின் மீது திசைமாறியதும் உண்மை...
நாம் சுதந்திர பறவைகளாக சுற்றி திரிந்த அந்த இனிமையான நாட்கள்
பசுமரத்து ஆணி போல் அந்த நிகழ்வுகள் ஆழமாக என் மனதில் பதிந்து விட்டது
பரஸ்பரம் நாம் வழங்கிய நம்பிக்கை வாக்குறுதிகள் அனைத்தும்
படுகொலை செய்யப்பட்டது.
என் மனம் ரனம் ஆகிவிட்டது.
என் இதயம் வெடித்து சிதறிவிட்டது.
என் வாழ்க்கையில் தென்றல் நீ என்று நினைத்தேன்
இன்று சுனாமியாய் தாக்கிவிட்டாயே!
எந்த தைரியத்தில் உனது  மனநிலை பதிவின் மூலம் வெளிப்படுத்தினாய்..
நான் ஏமாளி என்று நினைத்து தானே
அல்லது கோமாளி என்று நினைத்தாயோ!
காதல் என்ன உனக்கு விளையாட்டு பொருளாக ஆகிவிட்டதா!
உன்னை மண்ணிக்க என் மனம் மறுக்கிறது
இவ்வளவு ஆகிவிட்ட பிறகு
நிச்சயம் உன் வாழ்வில் குறுக்கிடமாட்டேன்
எங்கிருந்தாலும் வாழ்க என்று கூற நான் ஒன்றும் தியாகியும் இல்லை
காதல் தோல்வியில்
மது அருந்தி தாடி வளர்த்த தேவதாசும் இல்லை.
உன்னிடம் ஒரே ஒரு கேள்வி
நாகரீகம் கருதி
'மண்ணித்து விடு' என்ற ஒற்றை சொல் கூட நீ சொல்லவில்லையே.
ஏன்.... ஏன்....
உன்னை பொருத்தமட்டில் வாழ்க்கை ஒரு விளையாட்டு
என்னை பொருத்தவரை வாழ்க்கை ஒரு தவம்.
இதில் இருந்து மீள சில காலம் ஆகும்
என் இதயம் மட்டும் இரும்பால் ஆணதா என்ன... சொல்...
ரத்தத்தாலும், சதையாலும் செய்த சாதாரண மனிதன் தானே
கண்ணீர் என் கண்களில் அருவியன கொட்டுகிறது துடைத்து கொண்டேன்.

என் உயிர் நாடி நீ என்று உரைத்த உன்னவனுக்காகவும் என் இதய துடிப்பு நீ என்று உரைத்த உன்னிடத்திலும்
வம்பு செய்யமாட்டேன்
இந்த கடிதமே பரிசாக ஏற்றுக்கொள்
தளர்ந்தது உடல் மட்டுமே
மனம் தளராமல் இருக்க முயற்சிக்கும்
உன் முன்னாள் மாமன்.....



8

வானமும் வசப்படுமே
வறுமை விலகிடவே..!
தானமும் செய்திடவே
தரணியில் நிலைப்போமே..!

கானம் ஒலித்திடும்
காற்றேறிய மூங்கிலாக..!
மனம் உறுதியானல்
மறுவாழ்வு நிதர்சனமே..!

சினமில்லா புன்னகையே
சிறந்திட வாழியாக..!
தனம் சேரும்
தினம் இடையின்றியே..!

ஞானம் உரமாக
ஞாயிறும் உன்பக்கம்..!
சனனம் வீழ்வதற்கல்ல
சாதித்து வாழ்ந்திடவே..!

சுணக்கமற்ற உழைப்பால்
சுகபோகம் தருமே..!
இனக்காமக இணைந்திட
இமயமாகும் எதிர்காலமே..!

பத்து வித வாயுவிலும்
உயிர் காக்க பிராணனாய் சுவாசமுண்டு..!
கோடி வகை உறவுகளிலும்
நீ வாழ காரணமாய் என் நேசமுண்டு...

உன் உடலது நிமிர்ந்து நிற்க
இரு நூற்று ஆறும் எலும்புகளுண்டு..!
நீ சமூகத்தில் நிமிர்ந்துநிற்க
உறுதியான உன் சொற்களுண்டு...

உயிர்ப்புடன் ஊனிருக்க
இரத்த ஓட்ட பாய்ச்சலுண்டு..!
உயரங்கள் பல நீ தாண்ட
சிந்தை முழுதும் உனதெண்ண ஓட்ட வீச்சுமுண்டு...

வெற்றிக்கனி நீ பறிக்க
உன் சரிபாதி நானுன்டு..!
மண்ணையும் பொன்னாக்கும்
பெண் உனைப்போல் யாருண்டு?

வரும் 2026 புத்தாண்டு உனதாகவே
நீ நினைக்கும் அனைத்தும் சாதித்து பலநூறாண்டு வாழ்ந்திடவே..!
இந்த மாமனுடைய ஆசையும் அரவணைப்பும் என்றும் உன்னுடனே என் உயிரின் உயிரான என் அம்முவிற்காக என்றும் உன் நினைவுகளுடன் நான்..!
வாழ்க வளமுடன்........

9
வேங்குழலில் இழைந்தாயடி....!


வெண்பாவில் கவிதையின் அழகு மிளிரும்
பெண் என்பாவால் உன்னழகை நான்
மிளிரச் செய்வேன் என் கவி வரிகளால்....

நதிக்கு நெளிவு அழகு
நிலவுக்குப் பிறை அழகு
கன்னத்தில் உன் குழிவு அழகு
கவிதைக்கு என் தமிழ் அழகு !
இந்த தமிழின் கவி வரிகளுக்கு அவன் அம்முவே அழகு!

அழகிய‌ நிலவை அருகில் கண்டேன் இன்று..
விளக்கின் ஒளியை உள்வாங்கி பிரகாசித்த அவள் முகத்தை என் கையில் ஏந்தி..

நீல வானத்தில்...!!!!
வெண்ணிற வான்மேகத்தின் உன் விழிகளும்...!!!

மலைச் சாரலுக்கு
முன் அந்தியில் தோன்றும்
கார்மேகத்தின் உன் கண் இமைகளும்...!!!

அதில்

சட்ரென மின்னலைப் போன்ற ஒளிவிசும்
உன் பார்வையும்
எப்பொழுதும் இயற்கையின் அழகுதான்...!!!

தாமரைக்கு போட்டியாய் நீரில் நிற்கும்
உன்னைக் கண்டதும்
தாமரைகள் தற்கொலை செய்தனவோ
செத்தமீனாய் மிதக்கிறதே...

எதிர்பாராத என் வாழ்வில்
எதிரே நீ தோன்றினாய்!

கண்களால் உன்னை கண்ட நொடியே
கண்மணிகளில் விழுந்தேன்...!

நிமிர்ந்து பார்க்க நேரமின்றி
நிழல் அதில்
நிலை மாறி விழுந்தேன்...!

சிரித்த நேரமே சிந்திக்க நேரமின்றி
சின்ன சிரிப்பில் விழுந்தேன்...!

அழகிய உன் முகம் அது
அங்கும் இங்கும் ஆட!
அசைய மறந்து ஆசையில் விழுந்தேன்...!

ஒருபுறம் ஒதுங்கிய கூந்தலில்
மறுபுறம் பார்க்க மனமின்றி
மயங்கி விழுந்தேன்...!

கட்டிய கைகளைக் கண்டு கண் விழிக்க முடியாமல் கறைந்து நின்றேனடி!
உயிரே
உன்னைக் கண்ட நொடியில்...!
சிலை அழகின் கலை மகளே
உனை படைத்து !

பிரம்மனும் தற்பெருமை
கொண்டானோ...!!!!

சிலையென வடிக்க தான்
நினைத்தான்!

சிந்தையில் உதிர்த்ததால்
உயிர் தந்து பூமியில்
விதைத்தானோ...!!!!

உயிர் கொண்ட ரோஜாவே
உனை அன்றி வேறொன்றும்
அழகாகதோன்றவில்லை இப்பூமியிலே...

உந்தன் இதழ்களில் ஒட்டிய சிவந்த சாயத்தின் வாசத்தை கேட்டுப்பார்
அது உன் மேல் நான்கொண்ட
காதலை சொல்லும்...

உந்தன் விழிகளில் குளிர்ச்சி காற்றை அள்ளி பூசும் கண்மையை கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்...

உன் வெட்டிய கூந்தலோடு உறவாடும் ஜன்னலோர காற்றை கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்...

உன் பாதங்களின் அழகை கூட்டும்
மருதாணியின் ஈரத்தை கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்

உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் வீட்டு வெள்ளை நாய்குட்டியை
கேட்டுப்பார் அது என் காதலை சொல்லும்

ஏன் இவ்வளவு ஒரே ஒருமுறை என்
இதயத்துடிப்பை கேட்டுப்பார்
அது உன் பேரையே
சொல்லி துதிக்கும்...

தினமும் அவளுக்காக நான் காத்திருந்த நிமிடங்கள் என் அகராதியில் யுகங்கள்...

அவள் பார்வை என்மீது பட்டபோதெல்லாம் என் வாலிபம் உல்லாச
ஊஞ்சலாடியது...

அவள் என்பேரை
உச்சரிக்கும்போதெல்லாம் எனக்கு
மீண்டும் ஒருமுறை
இறந்து பிறக்க தோன்றுகிறது...

நான் அவளின் பெயரை
உச்சரிக்கும் போதெல்லாம்
என் மனதில் தேனருவி பாய்கிறது...

வண்ணம் தீட்டிய அவளின்
இதழின் கோடுகளில் சிக்கிய
என் இதயம் வழிதவறிய
ஆடுப்போல் அலைகிறது...

அவளின் புன்னகையில் மயங்கி என் இளமையும் மழலை பேசுகிறது...

அவளின் மௌனத்தை கண்டால் கடலலையும் ஊமையாகிவிடும்...

முன் யோசனையோடு எல்லாம்
படைத்தான் இறைவன்..
முக்கிய உறுப்பாய் கண்ணை
படைத்தான்..
படைத்தவன் அறிந்த என்னவளின்
ரகசியம் பற்றி கவலையில்லாது
படைப்பானவன் நான் படைக்க முனைந்தேன் எனக்கேற்றபடி...

படைத்தவனுக்கு அடுத்தபடி

வார்த்தைகள் என் படைப்பில் மொழியானது

மொழியில் உள்ள அழகு என்ற வார்த்தை

மொழிகள் அனைத்தையும் ஆராதித்தது

கண்ணை கவரும் அனைத்தும்
அழகு என்ற விதியானது

காதலுக்கும் அழகு என்ற
வார்த்தை அடிப்படையானது

இவையனைத்தும் கண்ணால் காண்பது

கண்ணால் காணாத அழகும் உள்ளது

அது மனதால் மட்டும் உணர்ந்துக்
கொள்வது

அழகு என்ற வார்த்தை சுகமானது

அது ரசிப்பவர்களின் சொத்தானது..,

போவதாய் சொல்லி விட்டு
உடனே போய் இருக்கலாம் !
இப்போது பார் !
நீ மெதுவாய் நடந்து போகும்
அழகை பார்த்து !

இன்னொரு "கவிதை " எழுத
வேண்டியதாய் போயிற்று !

அவளை கடந்துப்போகும் நொடியில்
என் ஐம்புலனும் மயங்க கண்டேன்...

அவள் கண்கள் பார்த்து நின்றேன்
என் உயிரை அள்ளிச்சென்றாள்...

அவள் உறவை நாடிச்சென்றேன்
என் இரவை இறவல் கேட்டாள்...

அவள் நெஞ்சில் ஒலிந்துக்கொண்டேன்
என் உயிரில் கலந்துக்கொண்டாள்...

அவளின் அடர்ந்த கூந்தலில்
என் இரவை பதுக்கிவைத்தேன்...

அவள் மடிக்கு ஏங்கிய என் மனதை
துடிக்க வைத்து துதிக்க வைத்தாள்...

என் தனிமைக்கு துணையாக
அவளின் நினைவை அனுப்பி வைத்தாள்

அவள் நினைவும் என் நினைவும்
உரசிக்கொண்டு பூக்கள் பூத்தன..


10

பரவாயில்லை பிரிந்து போ

பரவாயில்லை பிரிந்து போ
இனி என் போல் யாரும் உனக்கு
'அன்பு செய்ய போவதில்லை'.
பரவாயில்லை பிரிந்து போ
இனி என் போல் யாரும் உன்னை
'சகித்துக்கொள்ள போவதில்லை'
பரவாயில்லை பிரிந்து போ
இனி என் போல் யாரும் உன்
'கண்ணீரை துடைக்க போவதில்லை'

பரவாயில்லை பிரிந்து போ
இனி என் போல் யாரும் உனக்காக
'காத்திருக்க போவதுமில்லை'
பரவாயில்லை பிரிந்து போ
இனி என் போல் யாரும் உன்னை
'காதலிக்க போவதுமில்லை'

பரவாயில்லை பிரிந்து போ
நான் செய்த பாவமே..!

11
This week I choosen this song
Song Name : Enna aanalum enaku
Album Name : My life full damage
Music : Dhinesh dhanush
Lyrics : Dhinesh dhanush
Singers : Dhinesh dhanush

Favorite lines:

Thappunu edhuvum Illa
Sogamlam irukku Ulla
Irunthu sonnadhilla
Ennoda sogatha
Veliya nadichathilla
Nambikkai irukku ulla
Yevanum olungu illa
Freeya udura MACHAN

I dedicate this song to the best person who lost me and i am grateful for there presences in my life.


Thank you

12

பிரியா நினைவுகள்


வான்காற்று கிழக்கிலிருந்து தூர்வார..

மழை மேகம் தரை நனைக்க..

எறும்புகள் சாலைகளில் வரிசையிட்டு கோலமிடுகிறது அதில்..,

செம்மயிர்க்கொன்றை பூக்களின் ஒப்பனை...

ஊர்க்குருவிகளின் இசை கூடிய நடனம்

இவையல்லாது முன் முற்றத்தில் ஒற்றை கால் காக்கையின் கரைசல்

மார்கழி திங்களன்று ஒரு திங்கள் மறைந்திருக்கும் "திங்கள்"

இவை அனைத்தும் உன் வருகை நோக்கிய இசையோ ? சொல்?

காற்றாக வருகிறாயா?
கார்முகிலாக வருகிறாயா ?
மதியாக வருகிறாயா?
மலரில் மணமாக வருகிறாயா?
மண் வாசமாக வருகிறாயா?
மழலையர் சிரிப்பிலா?

எப்படி ஆயினும் சரி
ஒன்றை மட்டும் உணர்வின்றி நம் நினைவுகளை உரமிட்டு சொல்கிறேன் !
ஒரு முறை வந்தால் போதும்....
மீனாக உன்னை வைத்து
 நீராக நான் இருப்பேன் .......

ஆனால் விதியோ,

மீன் வடிவ கண்களில் கண்ணீர் கடலாக நிலைத்திருக்கிறாய் !!

13

இது என்னோட வானவில்🌈


எதாவது வரைந்து கொடு
நான் கலரடிக்கிறேன்",
என்றாள் ஒரு மழலை..
மெனக்கெட்டு ஒன்று முதல் ஏழு வரை
விரல்விட்டு எண்ணிப்பார்த்து
வரைந்து கொடுக்க
சிறிது நேரத்தில் அந்த மழலை
 வண்ணம் தீட்டிய வானவில்
காகிதத்தில் மினுமினுத்தது
ஒரே சிகப்பு நிறத்தில்..
"வானவில்லுக்கு ஏழு வண்ணம் தெரியுமில்ல?",
 என்று நான் கேட்க,
"இது என்னோட வானவில்
இப்படித்தான் இருக்கும்",
என்று புன்னகையுடன் பதிலளித்தால்
அந்த மழலை....

14

என் மனதில் இருக்கும் என் அம்முவின் வரிகள் என் வாயிலாக...


மறந்துவிடாத காதல்...


நீ தான் என் உலகம் என்று
வாழும் என்னிடத்தில்...

என் பாசம் எல்லாம் வேஷம் என்கிறாய்...

என் மனதுக்குள் இருக்கும்
உன் மீதான காதல்...

நான் மண்ணில் புதையும்வரை
உன்னுடன் பேசும்...

நீ என்னோடு பேசுவதில்லை என்றாலும்...

உன் நினைவுகள் என்னோடுதான் பேசுகிறது...

அன்று ஆறுதல் சொல்லி
அரவணைக்க நீ இருந்தாய்...

இன்று என்னை அரவணைக்க...

என்னருகில் உன் நினைவுகளும்
என் கண்ணீரும்தான்...

உன் புகைப்படம் பார்த்த
என் நண்பர்கள் கேட்டார்கள்...

நீ யாரென்று...

காய்ந்து போன இந்த மரத்திற்கு நீ
உயிர் கொடுக்கும் வேர் என்று சொன்னேன்...

இன்று மரத்தை கோடாரி கொண்டு
வெட்டி வீழ்த்துவது போல...

உன் வார்த்தை கோடாரியால்
என்னை தினம் கொள்கிறாய்...

என் அன்பை புரிந்துக்கொண்டு
உன் செல்ல தீண்டல்களோடு...

என்னை தீண்ட போவது
எப்போது என்னுயிரே.....

நெஞ்சினில் புதைந்திருக்கும்
உன் நினைவுகள்...

இமைகளை கடந்து
கண்ணீராய் வழிந்தோடுகிறது...

உயிருக்குள் உண்டான வலிகளை...

ஊமையாக அழுது தீர்த்து கொண்டு...

வெளியே சிரிப்பு என்னும் முகத்திரை அணிந்து....

போகர் எழுதிய ஏட்டு
ஓலைகளை நான் படிக்கவில்லை...

படித்திருந்தால் நானோ
கூடுவிட்டு கூடுபாய்ந்து...

நீ தினம் தினம் ரசிக்கும் உன் Royal enfield ஆக மாறியிருப்பேன்...

சிறிய பூவினுள் பெரியக்கனி
ஒளிந்திருப்பது போல...

என் சின்ன இதயத்தில் பேரழகனாக
ஒளிந்திருப்பது நீ தானேடா...

கருவை சுமக்கும் போது பெண்
சுகமான வலியாக சுமப்பாள் என்றார்கள்...

நானோ உன் கருவை சுமக்காமலே
சுகமாக சுமக்கிறேன் உன்னை...

ஏக்கத்தோடு அன்று
உனக்காக காத்திருந்ததிற்கும்...

கண்ணீரோடு இன்று காத்திருப்பதற்கும்
சிறு வித்தியாசம்தான்...

அன்று எனக்காக நீ
இருந்தாய், இன்றும் இருக்கிறாய் ஆனால் விலகி...

என்றும் உனக்காக நான் இருக்கிறேன்...

மறந்துவிடாத காதலை என்னி என்னுடன் நீ வரும் நாளுக்காய் கண்ணீருடன் காத்திருக்கிறேன்.....

மறந்துவிடதே காதலை....
மறந்து போல என்னையும்.......

15
Birthday Wishes / Re: Happy Birthday Limat
« on: September 26, 2025, 03:41:34 pm »
Tq so much ammu😘🥺

Pages: [1] 2 3 ... 6