Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Limat

Pages: [1] 2 3 4
1

கவிதை என்றாலே என் சிந்தையில் வருவது என் அம்முவின் நினைவலைகள் தான் அதுவும் எங்கள் இருவருக்கும் பிடித்த மழை கவிகள் என்றால் சொல்லவா வேண்டும் என் சிந்தனையின் கிறுக்கல்களில் சில வரிகள் நமது கவிதையும் காணமும் நிகழ்ச்சிக்காக அன்பர்கள் அனைவரும் மழையின் சிந்தனையோடு நமது தொகுப்பாளர் Rijia வின் குரல் மழையோடு கொஞ்சம் நனைவோமா....!


மனதோடு மழைக்காலம்.....


வானமகளின் வைரச்சலங்கைகள்
அறுந்து விழுந்தனவோ
மண்ணெங்கும் மழைத்துளிகள்;
உன்னைப் பார்க்கையில்
உயிரனுக்கள் மீண்டூம்
பிறந்தனவோ என்
வானெங்கும் விடிவெள்ளிகள்!!

முதன்முதலாய் என் விழியீர்ப்பு விசைகளில் நீ விழுந்தபோது
கனவுகளின் தேவதை
சிறகுகள் நீங்கி
சேலையில் நிற்கிறதோ!
என வியந்ததாய்
‌ஞாபகம்.
உன்னால் அறியாத
வெட்ககங்கள் பூசிக்கொண்டு
பூமீக்குச் சென்றது என்முகம்.

அந்நிமிடம் தொட்டு அடியேனின்
கடமைகளும் கனவுகளும்
காலத்தோடு உன்னுள் அடங்கின.
செல்போனில் உன் குரல் சினுங்கிட
பொழுதுகள் விடியும்.
உன்னை தூங்க வைத்த பின்தான்
இரவுகள் அடையும்..
இப்படியாய் என் நொடிகள்
ஒவ்வொன்றும் உன்னிடம்
அடைபட்டுகொள்கிறது
ஆனந்தமாய்............

ஓர்நாள்
அடைமழை உதவியுடன்
ஒற்றைக் குடையின்கீழ்
உன் கைப்பிடித்து நடக்கையில்
பச்சை நிற சேலையின்
முந்தானை கொண்டு என்
தலை துடைத்தாய்
அவ்வப்போது.
ஆனந்தம்
உன்னோடு எனக்கும்...
குடைப்பிடித்தாலும் தொடாமல்
விடமாட்டேன் என
உன்னை நனைத்த
மழையை நினைத்து
உள்ளம் வெந்தாலும்
இயற்கையை வென்றவள்
என்னவள் என்ற
பெருமைகள் எனக்குண்டு.
ஏனெனில் உன் சினுங்கலில்
சிலிர்க்கவே சிந்திய
துளிகள் என்னவளின்
அடிமைகள்;

குடையை விட்டு விலகி உன்
நடையழகை பார்த்தபொழுது தான்
எனக்கு புரிந்தது.
ஆம்,
பார்ப்பதற்கு பசுமை.
ஈரமான நந்தவனமும்
மழை சாரலில் சிறிது நனைந்த சேலையோடு
என ரசிக்கையில்
பொய்க் கோபத்தில்
ஜென்மங்கள் தாண்டி
அழைத்துச் சென்றாய்..

மழையோடு ஒதுங்கி
நின்ற பேருந்தில்
ஓரமாய் இடம் பிடித்தோம்
நனைந்தே இருவரும்.
இப்போது பயணம்.
ஓட்டுனரின் கட்டளைக்குப்
படிந்து பேருந்து
பாய்கையில் உயிரோடு
எனக்கு மரணம்.
கண்ணயர்ந்து உன்
தோளில் சாய்கையில்
மீண்டும் ஜனனம்....

அது ஏனோ
விளங்கவில்லை
மழை வந்தால்
மனதுக்கு பிடித்தவள்
என உன்னை
அடையளம் காட்டி
ஏதேதோ
எழுதுகிறேன்.
எழுதிக்கொண்டே வருகையில்
கற்பணையின் எழுத்துகள்
குறைந்து போனது.
கண்தூக்கிப் பார்த்தால்
கணமழை காணாமல்
போயிருந்தது.
ம்ம்ம்ம்.........
இது தான்
மனதோடு மழைக்காலமோ.....?

2

என்னவளின் ஸ்பரிசம்....


அன்பே...
என் கண்ணீர்த் துளிகளுக்கு
பன்னீர் தெளிக்கிறது
உந்தன் மெல்லியப் புன்னகை...
எத்தனை பேர்
என்மீது நடந்தாலும் நான் கரையாகவே இருக்க விரும்புகிறேன்
அலையாக நீ வந்து என்னை முத்தமிட்டு செல்வதால்...
உன்னை முத்தமிடவும்
தயங்குகிறது என் மனசு என் அருவா மீசை
உன் மெல்லிய இதழ்களை காயப்படுத்திவிடுமோ என்பதனால்...
இந்த மழைத்துளிகளின்
மீது எனக்கு பொறாமையாக உள்ளது உன் அழகிய மேனியோடு
ஒட்டி உரசுகிறதே என்பதனால்...
உனக்குத் தாலி கட்டுவதை நிறுத்தி
ஒரு தூளி் கட்டவேண்டும்
உன்னிடம் இன்னும் அந்தக் குழந்தைத் தனம் மாறவேயில்லை....
உன் கூந்தலில் பிரிந்த
ஒற்றை முடியொன்று
என் கவிதைப் புத்தகத்தில் நுழைந்து புதுவாசம் வீசுகிறது...
உன் நடை நளினத்தில்
என் வாலிபம் உடைந்து நொருங்கி ஊசலாடுகிறது....

4

புயலையும் தென்றலாய் வசப்படுத்தும் எமது GTC கவிஞர்களுக்கு எனது சிறு கிறுக்கல்கள் சமர்ப்பனம்....


சிற்பியும் நாங்களே சிலையும் நாங்களே!


மனிதனுக்குள் ஒருவனாக
பூமியிலே பிறக்கிறோம் !
தாய்மொழி குழைத்த பால் குடித்து
தாமாய் இங்கே வளர்கிறோம்!

கற்பனையின் இறக்கை கட்டி
எங்கெங்கோ பறக்கிறோம்!
கண் காணா தேசமெல்லாம்
கால் பதித்து பார்க்கிறோம்!

வானவில்லை கையிலேந்தி
வானத்திலே திரிகிறோம்!
நிலாப்பெண்ணை நினைவிலேந்தி
உலாவொன்று வருகிறோம்!

கடல் அலைகள் கால்கள் தொட
அதையும் கவிதை என்கிறோம்!
காதலின் கரங்கள் பிடித்து
அழகுப் பூக்கள் என்கிறோம்!

சமூகத்தின் அவலம் கண்டு
எழுத்தில் நியாயம் கேட்கிறோம்!
கண்ணீரற்ற அழுகையினால்
காகிதங்கள் நிறைக்கிறோம்!

தாய்மையின் உணர்வுகளை
தனக்குள்ளும் சுமக்கிறோம்!
கவிதையாம் பிள்ளைகளை
தரணிக்காக வளர்க்கிறோம்!

ஊருக்காக கவிதையெழுதி
உள்ளம் பூரிக்கிறோம்!
ஊர் உறங்கும் வேளையிலும்
உணர்வுகொண்டு விழிக்கிறோம்!

மனதில் வந்த ஊனத்திற்கு
மருந்தொன்று அளிக்கிறோம்!
மலரினது மௌனத்திற்கும்
காதல்கொண்டு துடிக்கிறோம்!

பெருமை கண்டு பெருமிதங்கள்
கொள்ளாதவர்களாய் இருக்கிறோம்!
சிறுமை கண்டு பொறுமைகொண்டு
சிரித்துக்கொண்டே மறக்கிறோம்!

வாழ்த்துக்களின் ஏணி கொண்டு
உயரம் ஏறி மகிழ்கிறோம்!
வானத்திலும் பாதை அமைத்து
ஒய்யாரமாய் நடக்கிறோம்!

இருபதின் இளமையோடு
அறுபதிலும் வாழ்வோம்!
இன்பதுன்பம் இரண்டினையும்
ஒன்றை போலப் பார்க்கிறோம்!

உயிரைவிட்ட உடலாய்
இந்தப் பூமியிலே புதைவோம் !
புதைந்த பின்னும் இப்புவியிலே
இன்பக் கவிதைகளாய் வாழ்வோம் !

தமிழ்மொழி எனும் பளிங்கினை
சிந்தனை எனும் சிற்றுளிகொண்டு
கற்பனை துணையுடன் உருகொடுத்து
சமுதாய நோக்குடனே என்றும் நாம்
கவிதைகள் பலபல வடிவமைக்கும்
சிற்பியும் நாமே சிலையும் நாமே !

சீரான எண்ணமுடன் சீர்மாறாமல்
சீர்கெட்ட சமூகமும் திருந்திடவே
சீரான பாதையில் சென்றிடவே
சிதைந்திட்ட நெஞ்சங்கள் சீர்பெற
சிந்தையின் துளிகளால் வடித்திடும்
சிற்பியும் நாமே சிலையும் நாமே !

பாரேப்பார்க்கும்படி பாடல்களை படைப்பவன் கவிஞன் ..!
பரதேசியாக வாழ்ந்தாலும் பார்பாராட்டும்படி
வாழ்பவனே நல்ல மனிதன்..!

என்றும் நட்புடன் நான் உங்கள்


5

கண்ணீரும் பரிசாக...




மோதிக்கொண்ட மழைமேகம்
தூறல் போடும் மண்ணில்...

மலர்ந்த பூவும் உதிர்ந்துவிடும்
ஒருநாள் மண்ணில்...

நம் மனதில் துளிர்விட்ட காதலை
கத்தரிகொண்டு வெட்டியது ஏனோ...

உன்னிடம் எனக்கு உரிமை உண்டென...

உரிமை எடுத்துக்கொண்டேன் உன்னிடம்...

எடுத்து கொண்ட உரிமையே எதிரியாக எனக்கு...

நீ அழுதாள் அழுவதற்கும்
சிரித்தாள் சிரிப்பதற்கும்...

உன் வீட்டு கண்ணாடி
மட்டுமல்ல நானும் இருக்கிறேன்...

உன்வீட்டு கண்ணாடி
உரிமைகூட எனக்கில்லை என்று...

நானும் உணர்ந்தேன் உன்னால்...

உரிமை இருக்கும் இடத்தில்
கோபம் சண்டை உருவெடுக்கும்...

உரிமை இல்லாத இடத்தில் கோபம்
சண்டையும் அமைதிகொள்ளும்...

உன்னோடு வாதாட என்னால் முடியவில்லை...

நானும் உரிமை இல்லாதவனாக
விலகியே இருக்கிறேன் உன்னால்....

நான் இறக்கும் வரை உன்னை மட்டுமே...

காதலித்து கொண்டு இருப்பேன்...

உன்னோடு வாழ துடிக்கும் என் இதயத்தை...

நீ புரிந்து கொண்டது அவ்ளோதானா...

காலம் உனக்கு உணர்த்தும் கண்மணி...

விதியிடம் சொல்லி இருக்கிறேன்...

நம் பந்தம் மறுஜென்மமும் தொடரும் என்று...

உன் முகத்தை பார்க்க வேண்டும்...

இனி எப்போது முடியும் என்னுயிரே...

நான் உன்னுடன் கைகோர்த்து செல்லவும்...

உன்னுடன் தினம் தினம் சிரித்து பேசவும்...

எனக்கு துணையாக இருப்பது கனவுகள்தான்...

கனவு என்பது யாருக்கு பொய்யோ
எனக்கு மட்டும் உண்மை...

எங்கிருந்தோ வந்து அன்பை
தந்து சென்றுவிட்டாய் நீ...

கண்ணீரும் பரிசாக இன்று எனக்கு...

உன் காதோர மச்சத்தை...

தொட்டு தொட்டு பார்க்கும் ஜிமிக்கியும்...

எனக்காக நீ உன் கைகளில் வரைந்த என் பெயரின்  வடுவையும்...

இனி நான் எப்போது
பார்ப்பேன் என்னுயிரே...

உடையுண்ட என் இதயத்தை மீண்டும் மீண்டும் கோர்த்து வைத்து துடிக்க வைக்கிறேன் என்றும் உன் நினைவலைகள் என்னை விட்டு செல்லாதிருக்க....

என்றும் உன் நினைவெனும் கனவுகளுடன் நான்..🌹

6


என் மீதான உங்கள் அன்பு தீர்ந்துவிட்டதோ...


விதியின் விளையாட்டால் ஒற்றை பூ மரமாய் தனித்து நிற்கிறேன்...

நிழலில் இளைப்பாற கிளிகள்
கூட வரவில்லை துணையென...

ஆகாயம் பார்த்த
பூமியாய் வளர்ந்து நிற்க...

இன்னல்கள் ஆயிரம் கண் முன்னே தோன்றி மறைய....

துணையென நான் இருக்கிறேன்
என்று ஒற்றை பொம்மை மட்டுமே என் கையில்....

என் விழியோரம் வழிந்த கண்ணீர்
குளத்தில் பிம்பமொன்று தோன்றியது....

அதில் என் தாய் தந்தையின் கரங்களுக்கு நடுவே நான் நடை பழகிய காட்சி....

அது ஒன்று மட்டுமே இவ்வுலகில் நான் பிறந்ததற்கான சாட்சி....

தென்றல் சில நேரம்
சூறாவளி சில நேரம்...

மாறி மாறி வீசி கொண்டு
இருந்த என் வாழ்வில்...

மேக மோதலில் மின்னி
மறையும் மின்னலை போல...

இன்று என்னைவிட்டு
பிரிந்துவிட்டார்கள் எனது பெற்றோர்கள்..

மேகத்தில் ஒளிந்திருக்கும்
மழைத்துளி போல...

நீங்கள் என்னுடன் என்றும் இருப்பீர்கள்
என்று நம்பினேன்...

நீங்கள் பிரிவது
முன்பே தெரிந்திருந்தால்...

பிறக்கவே
யோசித்திருப்பேன் கொஞ்சம்...

இமைக்கும் விழிகளின்
முன்னே நீங்கள் வராததால்...

நான் உங்களை மறப்பேன்
என்று நினைத்தீர்களோ...

விழிகளின்
பார்வைக்குத்தானே விருந்தில்லை...

உங்கள் நினைவுகள் பதிந்த
என் இதயத்தில் என்றும் விருந்துதான்...

ஆயிரம் கனவுகள்
எனக்கு தந்துவிட்டு...

நீங்கள் பிரிந்து சென்ற
மாயம்தான் என்னவோ...

என்மீதான உங்கள்
அன்பு தீர்ந்துவிட்டதோ...

கன்னத்தின் வழியே
வடிந்து செல்லும்...

என் கண்ணீர் மட்டும்
இன்னும் தீரவில்லை எனக்கு....

என்றும் உங்கள் நட்பின் பிம்பமாய் நான் உங்கள் தமிழ்......

7


நொடிகளாய் நகர்ந்து
நிமிடங்களாய் நிமிர்ந்து
மணிகளாய் மறைந்து
நாட்களாய் கடந்து
வாரங்களாய் சுழன்று
மாதங்களாய் தகர்ந்து
வருடமாய் வருடிச் செல்லும்
புத்தாண்டே நீ வா!!!!!!!
கடந்தது இலையுதிரா யினும்
வருவது வசந்தமாய் இருக்கட்டும்!!!!!!!

என் இனிய GTC உறவுகளுக்கு உங்கள் தமிழின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

8

என் அம்முவின் மனதை அறிந்த நான்
அவளின் மௌன மொழியுடன் எனது கவிதை வரிகளும் சேர்ந்து சமர்பிக்கிறோம் நமது GTC யின் கவிதையும் காணமும் நிகழ்ச்சிற்க்காக..


                           நிலவாகியவனே...


வான கருங்கடலில் நீந்திக்கொண்டிருக்கும்
மேகமீன்கள் ...
அதில்
முத்தென முளைத்திருக்கும் நட்சத்திரத்தை ...
தென்றலோடு கோர்த்து மாலையாக்கினேன்
நிலவே உனக்காக அணிவிக்க...
முழுதாய் முகத்தை கண்டதும்
முழுநிலா கரைய தொடங்கியது...
என்னுள்  தொலைய தொடங்கியது ...

மதியின் மனம் யார் அறிவது?
அதன் தனிமை யார் உணர்வது ?

நிலவுக்கு என் பெயரா.?
எனக்கு நிலவின் பெயரா.?

நிலவுக்கு தனிமை கற்றுக்கொடுத்தது நானா.?
என் காவலன் நிலவா.?
இருவரில் யார் அழகு.?
இருவரின் காத்திருப்பு
யார் வருகைக்கு.?

பகலில் நான் எதிரில்
நிலாவே நீ மறைவில்...
இரவில் நிலவே நீ வானில்
நானோ கனவில்...

என் கோபக்கனலை அணைக்கும் குளிர்தன்மையன் என் மாமனே..

என் தனிமை போக்க நிலவாக என்னுடனே பயணிக்கின்றானோ என் மாமன்..

எனை அழகாக்க தன்னொளியில் என்
மேனியில் நட்சத்திரங்களை பதித்தவன்..

இரவெல்லாம் எனக்காக விழித்திருப்பவன்
என்னறையில் ஊடுருவல் புரிந்த வெண்கதிரோன்..

என் அந்திகாவலன்...
என் ஆருயிர் மாமனே..

9


என்னை அள்ளி சென்றவள்..!



நீல வண்ண  சேலையில்
பளிச்சென்று இருப்பவளே!

பாரபட்சம் பார்க்காமல்
பார்வையால் மனதை
பட்டென்று பறிப்பவளே!

பெண்ணே!

உன் செவ்விதழில்
வானவில் வந்து வசித்து கொள்ள
நினைக்குதடி!

உன் கருவிழியை
கடத்தி கொண்டு போக
நிலவு திட்டம் தீட்டுதடி!

உன் கண்ணக்குழியில்
பதுங்கி கொள்ள
பிரபஞ்சம் உன் பின்னால் சுத்துதடி!

நீ கடந்து போகும் போது
உன் வாசனையை
சுவாசித்து உயிர் வாழ
காற்று கூட காத்துக் கிடக்குதடி!

உன் உள்ளங்கையில்
கைக்குட்டையாய் மடிந்து கொள்ள
மேகங்கள் எல்லாம் தவிக்குதடி!

கண்னே!

தேன் சிந்தும் உன் புன்னகை!
வான் கொஞ்ச நினைக்கும் காரிகை!

அழகியே!
என்னை மறந்து
எழுதுகோல் இல்லாமல்
எழுதிக் கொண்டு இருக்கிறேன்
உனக்கான கவிதை ஒன்றை
இன்னும் முடிந்தபாடில்லை
உன் அழகிற்கு முடிவு என்பதே இல்லை
இனி எழுதுவதற்கு என்னிடம்
வார்த்தைகள் ஏதும் இல்லை!!!

10
Birthday Wishes / Re: Happy Birthday RIJIA ( Coordinator)
« on: February 22, 2025, 05:26:32 am »


மின்காந்த குரலுக்கு சொந்தகாரியே
GTC யின் வானம்பாடியே..!

கானம் பாடித் திரியும்
வண்ணப் பறவையே வானம்பாடி
வானத்தின் நீலம்
உனக்கு இசை மேடை !
கவிதை பாடித் திரியும்
எனக்கு
நமது GTC யே தமிழ் மேடை !

இந்த தமிழ் மேடையில் நமது வானம்படிக்கு
பிறந்தநாள் வாழ்த்து கவி என்னில் தோன்றியது உங்கள் பார்வைக்கு..!

உன்னை ஈன்ற பொழுது உனது பெற்றோர்கள்
பெற்ற பேரானந்தத்தை
GTC யும் பெற்றது உனது நட்பு மலர்ந்தபொழுது..!

நொடிக்கு ஒரு முறை
வெடி சிரிப்பு பூத்திடும் எங்கள் வானம்பாடியே..!
தேடி வந்த தோழமையை
ஜோடி மலராக போற்றி பேரானந்தம் கண்ட எங்கள் வானம்பாடியே..!

இப்படிப்பட்ட இந்த வானம்பாடிக்கு
எப்படிப்பட்ட வாழ்த்து எழுத?
நட்புப்பட்ட சொற்களை நாடி
புலப்பட்டது அர்த்தங்கள் கோடி..!

எங்கள் இனிய தோழியே....!
உனது பிறந்தநாளான இன்று
கோடி அர்த்தங்களும் கூடிய
எங்கள் தூய்மையான அன்பு பூக்கள்
வாழ்க! வாழ்க ! நீடுழி வாழ்க!!
என்று உனை வாழ்த்துகிறது..!



11


Movie : nilavukku en mel ennadi kobam

Song : yedi

Singers : Dhanush & jonita gandhi

Composer : G.V.Prakash

Dedicated to my love Dharshini

Thanks to give a opportunity 🌹

12

கண் மலராய்..!


எந்தன் தூக்கம் மறந்து
உன்னை நினைத்து தூக்கம் வராமல் தவித்து

கண்கள் விழித்து விழித்து
மல்லி பூ பூத்தது போல் கண்கள் பூத்து
செய்ய வேண்டும் ஒரு மாலை
என் கண்களை வைத்து

கண்ணால் செய்த மாலையை அணிய ஆசைப்படுகிறாயோ என் காதலே..!

அதனால் என் தூக்கத்தை கலைக்கிறாயோ என் காதலே..!

தோட்டத்தில் பூக்காத பூக்களை
பூ மார்க்கெட்டில் கிடைக்காத பூக்களாய்

நீ விரும்பி விட்டாய் என்றதனால்

விழித்திருப்பேன் என் கண்கள் பூத்துக் கொண்டிருக்கும் வரை..!

உன் தலையில் அமரும் காலம் வரும் வரை கண் மலராய்..!

13

அறியா வயதில் தாயை இழந்து
பருவ வயதில் தந்தையை இழந்து
தான் யாரென உணரும் வயதில் பாட்டி மற்றும் உடன்பிறவா சகோதரியையும் இழந்து
உறவென சொல்லிக்கொள்ள அண்ணன் இருந்தும் சகோதர பாசம் இன்றி தவித்த பேதையாய் என் முன்னே தோன்றிய என் அம்முவின் சோதனைகளும் அதில் அவள் கண்ட வெற்றியை பற்றியும் நம் கவிதையும் காணமும் நிகழ்ச்சி மூலம் உங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்...


அவளாகியவள்...


சொல்லி கொள்ள சொந்தமின்றி
சொந்த வீட்டில் அகதியாய்
வாழ்ந்தாள் அவள்..

உறக்கம் வேண்டாம் உணவும் வேண்டாம்
தனது தந்தையின் கனவுகளை நிறைவேற்றினால் போதும்
என்றாள் அவள்..

ஏதேனும் செய்ய வேண்டும்..
எப்படியும்
சாதித்தே ஆக வேண்டும்..
சூளுரைத்தாள் அவள்..

பணம் இருந்தும் பரிவு கொள்ள யாரும் இல்லை..
ஊசியாய் குத்துகிறது அன்பின் ஏக்கம்..
துடித்தாள் அவள்..

நித்திரை இன்றி ஒளி இழந்த கண்கள்..
சிவப்பு சாயம் பூச அழுதாள் அவள்..

கனவுகளின் வாயிலில் விசும்பும் தாயின்
முகம் கண்டாள்..
நொடிந்தே போனாள்..

கடல் அலையாய் அவளது இழப்பு வந்து தாக்க.
அலையிலே நுரைத்தெழுந்த சோகத்தோடு
நொறுங்கி போனாள்..

முயன்று தான் பார்த்தாள் மீண்டும் தோற்றாள்..
முயன்று முயன்று வியர்த்து போனாள்..

உடல் சுகமில்லாமல் பல மாதங்களாக தன் நிலை மறந்து மரண படுக்கையில் கிடந்து  மரண தேவனை நெருங்கி
" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"
என்று சிறு புன்முறுவலுடன் மீண்டும் கனவை நோக்கி பயணித்தாள்..

( தோல்வி படிகளை ஏறி மிதித்து சாதித்தாள்
இன்று இரு பள்ளிகளுக்கு தாலாளராக🌹)

அதோ..
அந்த கண்ணுக்கெட்டிய தொலைவில்
சிரித்தபடி நிற்கிறாள்..!!

வெற்றி களிப்பா அது..??
இருக்கலாம்..
தோல்வியோடு அவள் புரிந்த
கோர போர்களின்
முடிவாகவும் இருக்கலாம்..

அதுவரை..
எங்கோ இழுத்து செல்கிறது அவளையும்
அவள் காலங்களையும் அவளாகிய
அவள் கனவுகள்..

14


உன் நினைவு கிளைகளில் என்றும் ஒரு பறவையாய்..!


பறவையாக நானும்மாறி
அந்த வானம்தொட ஆசைக்கொண்டேன்
பூமியெங்கும் நான் பறந்து
புதுக்கவிதைப்பாட ஆசைக்கொண்டேன்

காதல் செய்தால் வானில் பறக்கலாம்
படித்ததோ கேட்டதோ நினைவிலில்லை- ஆனால்
பறக்கும் ஆசையோ எனை விடவில்லை

எங்கிருந்தோ வந்தாளவள்
எனைக்கூட்டிச் சென்றாளவள்
காதல் சிறகை கட்டிவிட்டு
வானம் பறக்கச் செய்தாளவள்-என்
வாழ்க்கை மறக்க செய்தாளவள்

கனவுலகிலும் நனவுலகிலும் நான்
காதல் வானில் பறந்திருந்தேன்
காலை மாலை மறந்திருந்தேன்

என்னடி இது விளையாட்டு?
இதுதான் என் முதல்பாட்டு
உறவுகள் பலர்கூடி என் பாடல்வரிகளை அழிக்க முயற்சித்தனர் பறந்தோடினேன்
என் காதல் சிறகிறண்டை முறிக்க முயற்சித்தனர் பறந்தோடினேன்..!

என்னவளை காணாமல் அவள் வாய் மொழி கேளாமல்  என் இதயத்தில் முளைத்திருந்த காதல் சிறகை விரித்து அவளை தேடி அலைந்த நான் அவளின் மௌன புயலில்
என் சிறகுகள் உதிர்ந்து தள்ளாடியபடி கீழே விழுந்தேன்..!

சிறகுதிர்ந்த பறவையாய் செத்து நான் போகாமல் தினமுமவளை பாடினேன்
சிந்தையால் அவள் நினைவெழுதி
தினமுமவளை தேடினேன்..!

இறக்கும் தருவாயில்
என் இதயம் கேட்கும் உன் உறவை மட்டுமே
இறகிரண்டை இழந்தாலும்
இப்போதும் நான் பறவைதான் என எண்ணி
நிற்கும் தருவாயில் தேவதை போல் வெண்ணிற ஆடையில் அவளை கண்டு மனமுறுகிய வேளையில் அவளின் கையில் வில் அம்பை கண்டு உறைந்து நின்றேன்..!

என்னவளின் காதல் அன்பை சுமந்த என் இதயத்தில் அவள் எய்த அம்பு என் இதயத்தை
துளைத்து அந்த குருதியின் வழியே என் காதலை வெளியேற்ற முயன்றால்..!

என் இதயத்தில் பாய்ந்த அந்த அம்பின் வழியே என் குருதி வழிந்து  ஓடும் நீரில் திசையரியாது சென்றதே தவிற என் காதல் என்றும் என் இதையத்திற்குள்ளே..!

ஆம்..
"சித்திரைக் குயிலாய்"
நித்திரையில்லாமல்
"உன் நினைவு கிளைகளில்"
இப்போதும் நான் பறவையாய்..!



15


புயலின் இன்னொரு கோர முகம்..!



இயற்கை அன்னையின்
இரக்கமில்லா குணம்..!
இளந்தென்றலின்
இன்னொரு முகம்..!

பசியில் உள்ள மலைப்பாம்பாய்
பார்த்ததை எல்லாம் விழுங்கும்..!
பயணம் செல்லும் இடமெல்லாம்
பாவங்களை சம்பாதிக்கும்..!

கடலை நம்பியவனையும்
கழனியை நம்பியவனையும்
கண்ணீரில் குளிப்பாட்டும்
காட்டுமிராண்டி காற்று இது..!

அளவில்லா விடுமுறைகளை
அள்ளி அள்ளி தருவதால்
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
தேவதையாக தெரியும் இது..!

வீட்டில் மரம் வளர்க்க
விரும்பாத உலகத்தில்
காட்டிலும் வளர விடாமல்
காவு வாங்கும் காட்டேறி இது..!

மடிந்து போன மனிதநேயம்
மறுமலர்ச்சி பெற்றிட
பறந்து பறந்து பந்தாடும்
இறைவனின் விளையாட்டு இது..!

Pages: [1] 2 3 4