Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Limat

Pages: [1] 2 3 4
1

என் அம்முவின் மனதை அறிந்த நான்
அவளின் மௌன மொழியுடன் எனது கவிதை வரிகளும் சேர்ந்து சமர்பிக்கிறோம் நமது GTC யின் கவிதையும் காணமும் நிகழ்ச்சிற்க்காக..


                           நிலவாகியவனே...


வான கருங்கடலில் நீந்திக்கொண்டிருக்கும்
மேகமீன்கள் ...
அதில்
முத்தென முளைத்திருக்கும் நட்சத்திரத்தை ...
தென்றலோடு கோர்த்து மாலையாக்கினேன்
நிலவே உனக்காக அணிவிக்க...
முழுதாய் முகத்தை கண்டதும்
முழுநிலா கரைய தொடங்கியது...
என்னுள்  தொலைய தொடங்கியது ...

மதியின் மனம் யார் அறிவது?
அதன் தனிமை யார் உணர்வது ?

நிலவுக்கு என் பெயரா.?
எனக்கு நிலவின் பெயரா.?

நிலவுக்கு தனிமை கற்றுக்கொடுத்தது நானா.?
என் காவலன் நிலவா.?
இருவரில் யார் அழகு.?
இருவரின் காத்திருப்பு
யார் வருகைக்கு.?

பகலில் நான் எதிரில்
நிலாவே நீ மறைவில்...
இரவில் நிலவே நீ வானில்
நானோ கனவில்...

என் கோபக்கனலை அணைக்கும் குளிர்தன்மையன் என் மாமனே..

என் தனிமை போக்க நிலவாக என்னுடனே பயணிக்கின்றானோ என் மாமன்..

எனை அழகாக்க தன்னொளியில் என்
மேனியில் நட்சத்திரங்களை பதித்தவன்..

இரவெல்லாம் எனக்காக விழித்திருப்பவன்
என்னறையில் ஊடுருவல் புரிந்த வெண்கதிரோன்..

என் அந்திகாவலன்...
என் ஆருயிர் மாமனே..

2


என்னை அள்ளி சென்றவள்..!



நீல வண்ண  சேலையில்
பளிச்சென்று இருப்பவளே!

பாரபட்சம் பார்க்காமல்
பார்வையால் மனதை
பட்டென்று பறிப்பவளே!

பெண்ணே!

உன் செவ்விதழில்
வானவில் வந்து வசித்து கொள்ள
நினைக்குதடி!

உன் கருவிழியை
கடத்தி கொண்டு போக
நிலவு திட்டம் தீட்டுதடி!

உன் கண்ணக்குழியில்
பதுங்கி கொள்ள
பிரபஞ்சம் உன் பின்னால் சுத்துதடி!

நீ கடந்து போகும் போது
உன் வாசனையை
சுவாசித்து உயிர் வாழ
காற்று கூட காத்துக் கிடக்குதடி!

உன் உள்ளங்கையில்
கைக்குட்டையாய் மடிந்து கொள்ள
மேகங்கள் எல்லாம் தவிக்குதடி!

கண்னே!

தேன் சிந்தும் உன் புன்னகை!
வான் கொஞ்ச நினைக்கும் காரிகை!

அழகியே!
என்னை மறந்து
எழுதுகோல் இல்லாமல்
எழுதிக் கொண்டு இருக்கிறேன்
உனக்கான கவிதை ஒன்றை
இன்னும் முடிந்தபாடில்லை
உன் அழகிற்கு முடிவு என்பதே இல்லை
இனி எழுதுவதற்கு என்னிடம்
வார்த்தைகள் ஏதும் இல்லை!!!

3
Birthday Wishes / Re: Happy Birthday RIJIA ( Coordinator)
« on: February 22, 2025, 05:26:32 am »


மின்காந்த குரலுக்கு சொந்தகாரியே
GTC யின் வானம்பாடியே..!

கானம் பாடித் திரியும்
வண்ணப் பறவையே வானம்பாடி
வானத்தின் நீலம்
உனக்கு இசை மேடை !
கவிதை பாடித் திரியும்
எனக்கு
நமது GTC யே தமிழ் மேடை !

இந்த தமிழ் மேடையில் நமது வானம்படிக்கு
பிறந்தநாள் வாழ்த்து கவி என்னில் தோன்றியது உங்கள் பார்வைக்கு..!

உன்னை ஈன்ற பொழுது உனது பெற்றோர்கள்
பெற்ற பேரானந்தத்தை
GTC யும் பெற்றது உனது நட்பு மலர்ந்தபொழுது..!

நொடிக்கு ஒரு முறை
வெடி சிரிப்பு பூத்திடும் எங்கள் வானம்பாடியே..!
தேடி வந்த தோழமையை
ஜோடி மலராக போற்றி பேரானந்தம் கண்ட எங்கள் வானம்பாடியே..!

இப்படிப்பட்ட இந்த வானம்பாடிக்கு
எப்படிப்பட்ட வாழ்த்து எழுத?
நட்புப்பட்ட சொற்களை நாடி
புலப்பட்டது அர்த்தங்கள் கோடி..!

எங்கள் இனிய தோழியே....!
உனது பிறந்தநாளான இன்று
கோடி அர்த்தங்களும் கூடிய
எங்கள் தூய்மையான அன்பு பூக்கள்
வாழ்க! வாழ்க ! நீடுழி வாழ்க!!
என்று உனை வாழ்த்துகிறது..!



4


Movie : nilavukku en mel ennadi kobam

Song : yedi

Singers : Dhanush & jonita gandhi

Composer : G.V.Prakash

Dedicated to my love Dharshini

Thanks to give a opportunity 🌹

5

கண் மலராய்..!


எந்தன் தூக்கம் மறந்து
உன்னை நினைத்து தூக்கம் வராமல் தவித்து

கண்கள் விழித்து விழித்து
மல்லி பூ பூத்தது போல் கண்கள் பூத்து
செய்ய வேண்டும் ஒரு மாலை
என் கண்களை வைத்து

கண்ணால் செய்த மாலையை அணிய ஆசைப்படுகிறாயோ என் காதலே..!

அதனால் என் தூக்கத்தை கலைக்கிறாயோ என் காதலே..!

தோட்டத்தில் பூக்காத பூக்களை
பூ மார்க்கெட்டில் கிடைக்காத பூக்களாய்

நீ விரும்பி விட்டாய் என்றதனால்

விழித்திருப்பேன் என் கண்கள் பூத்துக் கொண்டிருக்கும் வரை..!

உன் தலையில் அமரும் காலம் வரும் வரை கண் மலராய்..!

6

அறியா வயதில் தாயை இழந்து
பருவ வயதில் தந்தையை இழந்து
தான் யாரென உணரும் வயதில் பாட்டி மற்றும் உடன்பிறவா சகோதரியையும் இழந்து
உறவென சொல்லிக்கொள்ள அண்ணன் இருந்தும் சகோதர பாசம் இன்றி தவித்த பேதையாய் என் முன்னே தோன்றிய என் அம்முவின் சோதனைகளும் அதில் அவள் கண்ட வெற்றியை பற்றியும் நம் கவிதையும் காணமும் நிகழ்ச்சி மூலம் உங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்...


அவளாகியவள்...


சொல்லி கொள்ள சொந்தமின்றி
சொந்த வீட்டில் அகதியாய்
வாழ்ந்தாள் அவள்..

உறக்கம் வேண்டாம் உணவும் வேண்டாம்
தனது தந்தையின் கனவுகளை நிறைவேற்றினால் போதும்
என்றாள் அவள்..

ஏதேனும் செய்ய வேண்டும்..
எப்படியும்
சாதித்தே ஆக வேண்டும்..
சூளுரைத்தாள் அவள்..

பணம் இருந்தும் பரிவு கொள்ள யாரும் இல்லை..
ஊசியாய் குத்துகிறது அன்பின் ஏக்கம்..
துடித்தாள் அவள்..

நித்திரை இன்றி ஒளி இழந்த கண்கள்..
சிவப்பு சாயம் பூச அழுதாள் அவள்..

கனவுகளின் வாயிலில் விசும்பும் தாயின்
முகம் கண்டாள்..
நொடிந்தே போனாள்..

கடல் அலையாய் அவளது இழப்பு வந்து தாக்க.
அலையிலே நுரைத்தெழுந்த சோகத்தோடு
நொறுங்கி போனாள்..

முயன்று தான் பார்த்தாள் மீண்டும் தோற்றாள்..
முயன்று முயன்று வியர்த்து போனாள்..

உடல் சுகமில்லாமல் பல மாதங்களாக தன் நிலை மறந்து மரண படுக்கையில் கிடந்து  மரண தேவனை நெருங்கி
" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"
என்று சிறு புன்முறுவலுடன் மீண்டும் கனவை நோக்கி பயணித்தாள்..

( தோல்வி படிகளை ஏறி மிதித்து சாதித்தாள்
இன்று இரு பள்ளிகளுக்கு தாலாளராக🌹)

அதோ..
அந்த கண்ணுக்கெட்டிய தொலைவில்
சிரித்தபடி நிற்கிறாள்..!!

வெற்றி களிப்பா அது..??
இருக்கலாம்..
தோல்வியோடு அவள் புரிந்த
கோர போர்களின்
முடிவாகவும் இருக்கலாம்..

அதுவரை..
எங்கோ இழுத்து செல்கிறது அவளையும்
அவள் காலங்களையும் அவளாகிய
அவள் கனவுகள்..

7


உன் நினைவு கிளைகளில் என்றும் ஒரு பறவையாய்..!


பறவையாக நானும்மாறி
அந்த வானம்தொட ஆசைக்கொண்டேன்
பூமியெங்கும் நான் பறந்து
புதுக்கவிதைப்பாட ஆசைக்கொண்டேன்

காதல் செய்தால் வானில் பறக்கலாம்
படித்ததோ கேட்டதோ நினைவிலில்லை- ஆனால்
பறக்கும் ஆசையோ எனை விடவில்லை

எங்கிருந்தோ வந்தாளவள்
எனைக்கூட்டிச் சென்றாளவள்
காதல் சிறகை கட்டிவிட்டு
வானம் பறக்கச் செய்தாளவள்-என்
வாழ்க்கை மறக்க செய்தாளவள்

கனவுலகிலும் நனவுலகிலும் நான்
காதல் வானில் பறந்திருந்தேன்
காலை மாலை மறந்திருந்தேன்

என்னடி இது விளையாட்டு?
இதுதான் என் முதல்பாட்டு
உறவுகள் பலர்கூடி என் பாடல்வரிகளை அழிக்க முயற்சித்தனர் பறந்தோடினேன்
என் காதல் சிறகிறண்டை முறிக்க முயற்சித்தனர் பறந்தோடினேன்..!

என்னவளை காணாமல் அவள் வாய் மொழி கேளாமல்  என் இதயத்தில் முளைத்திருந்த காதல் சிறகை விரித்து அவளை தேடி அலைந்த நான் அவளின் மௌன புயலில்
என் சிறகுகள் உதிர்ந்து தள்ளாடியபடி கீழே விழுந்தேன்..!

சிறகுதிர்ந்த பறவையாய் செத்து நான் போகாமல் தினமுமவளை பாடினேன்
சிந்தையால் அவள் நினைவெழுதி
தினமுமவளை தேடினேன்..!

இறக்கும் தருவாயில்
என் இதயம் கேட்கும் உன் உறவை மட்டுமே
இறகிரண்டை இழந்தாலும்
இப்போதும் நான் பறவைதான் என எண்ணி
நிற்கும் தருவாயில் தேவதை போல் வெண்ணிற ஆடையில் அவளை கண்டு மனமுறுகிய வேளையில் அவளின் கையில் வில் அம்பை கண்டு உறைந்து நின்றேன்..!

என்னவளின் காதல் அன்பை சுமந்த என் இதயத்தில் அவள் எய்த அம்பு என் இதயத்தை
துளைத்து அந்த குருதியின் வழியே என் காதலை வெளியேற்ற முயன்றால்..!

என் இதயத்தில் பாய்ந்த அந்த அம்பின் வழியே என் குருதி வழிந்து  ஓடும் நீரில் திசையரியாது சென்றதே தவிற என் காதல் என்றும் என் இதையத்திற்குள்ளே..!

ஆம்..
"சித்திரைக் குயிலாய்"
நித்திரையில்லாமல்
"உன் நினைவு கிளைகளில்"
இப்போதும் நான் பறவையாய்..!



8


புயலின் இன்னொரு கோர முகம்..!



இயற்கை அன்னையின்
இரக்கமில்லா குணம்..!
இளந்தென்றலின்
இன்னொரு முகம்..!

பசியில் உள்ள மலைப்பாம்பாய்
பார்த்ததை எல்லாம் விழுங்கும்..!
பயணம் செல்லும் இடமெல்லாம்
பாவங்களை சம்பாதிக்கும்..!

கடலை நம்பியவனையும்
கழனியை நம்பியவனையும்
கண்ணீரில் குளிப்பாட்டும்
காட்டுமிராண்டி காற்று இது..!

அளவில்லா விடுமுறைகளை
அள்ளி அள்ளி தருவதால்
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
தேவதையாக தெரியும் இது..!

வீட்டில் மரம் வளர்க்க
விரும்பாத உலகத்தில்
காட்டிலும் வளர விடாமல்
காவு வாங்கும் காட்டேறி இது..!

மடிந்து போன மனிதநேயம்
மறுமலர்ச்சி பெற்றிட
பறந்து பறந்து பந்தாடும்
இறைவனின் விளையாட்டு இது..!

9


சிறகின்றிப் பறக்கும் பட்டாம் பூச்சியாய்
என் மனம் இங்கு
பறக்க கண்டேன் உன்னால்..!

இது வலியா சுகமா என்று
புரியாமல் புரளுகிறேன்
மூடாத விழிகளுடன்
இரவுகளில் நான்..!

அலை பாயும் நதி நீராய் என் மனம்
உன் கரைசேர
துடிக்கிறது இங்கு..!

உன் விழி பார்க்க காத்திருக்கும்
என் விழிகள் வலிக்கிறது
உனை காணாததால்..!

மெய் சிலிர்க்க வைத்த உன் காதல்
இன்று
புயலென மாறி எனைத் தாக்குகிறது..!

என் நிழல் கூட மறைந்து போகும்
என்றும் மறையாத நிழலாய்
நீ வேண்டும் என் பயணங்களில்..!

10
Birthday Wishes / Re: Happy Birthday Shalini
« on: November 14, 2024, 11:10:16 am »
Many more happy returns of the day💐

11


மழையின் கண்ணீர்..!



 வானிலிருந்து குதித்து வந்தேன்
பூமி குளிர இறங்கி வந்தேன்
ஏரிகுளம் தேடி வந்தேன்
ஓடையாக பொங்கி வந்தேன்
பசுமைப் பரப்பை பார்க்க வந்தேன்
பார் முழுதும் சுற்றி வந்தேன்
சிறார் மகிழ பொழிந்து வந்தேன்
அடுக்கி வைத்த வீடுகள்
ஆக்கிரமிப்பு செய்த மனிதர்கள்
தூர்வாரா ஏரிகள்
துண்டு போட்ட மனிதர்கள்
வாடி நின்றேன்
ஏங்கி நின்றேன்
தேங்கி நின்றேன்
கழிவு நீரில் கலந்தேன்
வீட்டுக்குள் புகுந்தேன்
வசவுகளைச் சுமந்தேன்
சுயநல மனிதர்களால்
சுமையாகிப் போனேன்..!

12

இயர்கை அன்னை குளியல் கொள்ளும் கார்காலம் .,
அவள் மடியில் தவழும் வாடை காற்றில் மண்வாசம்..
பச்சை பசுமை அணிவகுத்த ஊர்கோலம்.,
என் இதழ்ளில் விழுந்த மழை துளியும் கவி பேசும் ...!!!

13

நீர்வீழ்ச்சி


வானில் முட்டி மோதி
உரசிச் செல்லும் மேகக் கூட்டம்,
அது மோகத்தின் தாகத்தில் உச்சி
மலையை முத்தமிடும்.

முத்த மிச்சங்கள் பாற்கடலாய்
உச்சியில் வழிந்து கொட்டும்..!
பொங்கும் உவகையால் பூரிக்கும்
நுரைக்கடல் எங்கும் ஆர்ப்பரிக்கும்
அருவியை நான் பார்க்கிறேன்
அதன் அழகில் என்னை மறக்கிறேன்..!

சுடரின் பட்டுக்கதிர் பட்டு,
சிறு துளிகள் ஒளி வீசும்.
விண்ணுக்கும் மண்ணுக்கும்
வெண் நுரைப் பந்தலாய்,
கண்ணையும் கருத்தையும்
கரைக்கின்ற விந்தையாய்,
நிலம் மோதும் நீரினோசை
சட சட ஒலி பரப்ப
மரமோதும் காற்றோசை
பட பட ஒலி பரப்ப
மரமுகும் சருகுகள்
சர சர சப்தமிட
வானத்தில் வழிந்து வரும் நீரருவி,
ஆனந்த நடை போடும் நம் மனமுருவி.

அருவிநீர் அருகே பனிதரும் காற்றும்
ஆகாயம் முட்டும் கனிதரும் மரமும்
ஓங்கார இரைச்சலிட்டு ஓடிவரும் நீரும்
எங்கும் காணாத எழில் மிகு அழகு
சிந்தையில் என்றும் நீங்காது ..!

14

நீ இல்லாத நான் தனிமரமானேன்..
படைசூழ நண்பர்கள் இல்லை..
உற்றார் உறவினர் சுற்றமென்றுரைக்க யாருமில்லை...
என் சோகமெல்லாம் தலைதூக்கும் உன் நினைவுகளிலே ஆறுதலடைகிறேன்..

உன் நினைவுகளே என் பொக்கிஷமாய்...
நீ என்னருகில் இல்லாவிடிலும் நித்தமொரு படைப்பினையை உன் நினைவுகளிலேயே காண்கிறேனடி...

தனியாளாய் இருந்தாலும் தனித்துவம் வாய்ந்தவனாய் இருக்கிறேனடி உன் நினைவுகளாலேயே...

சாதிக்க வேண்டுமென்ற உத்வேகம் என்னுள் உதயமாகியதற்கு காரணமே உன் நினைவுகளே

என்னைவிட்டு நீ நெடுந்தொலைவில் இருந்தாலும் என் தைரியம் நீயாவாய்...
என் சிந்தனை ஊற்றின் ஆதாரமாவாய்...
உன்னை மறந்தால் நானேதடி...
உண்மையை மறுத்தால் நான் மனிதனில்லையடி...
நாளும் உன் நினைவுகளுடன் நான் வாழ,
மற்ற மனித துணை எனக்கெதுக்கடி???....

என் கவலையெல்லாம் என்னவென்றால்,
நான் இல்லாது நீ சந்தோஷமாக வாழ்கிறாயா? என்பதே...
உன்னை காண வரலாமென்றே நினைப்பேன்...
ஆனால், நீ என்னைக் கண்டுத் துயருற்றால் அதைக் காண என்னால் இயலாதடி....

கடைசிவரை உன் நினைவுகளுடன் மட்டுமே வாழ்வேனடி..
உன்னை எண்ணிய மனதில் வேறு பெண்ணிற்கு இடமில்லையடி....

என்றும் உந்தன் நினைவலையில் நான்

15
Festival Day Wishes / Re: Happy Deepavali 2024
« on: October 31, 2024, 01:41:22 pm »
தித்திக்கும் புன்னகையில்
தீபங்களின் சுடரொளியில்
தீபாவளியை ஒளிரச்செய்வோம்...!

அயாலாருடன் நட்பு கொள்வோம்..
ஆக்கியதை பகிர்ந்து உண்ணுவோம்..
இல்லாதவர்களிடம் உறவு பேணுவோம்..
ஈகையுடன் புத்தாடை வாங்கி கொடுப்போம்..
உழைப்பொருக்கு சிறப்பு ஊதியம் அளிப்போம்..
ஊர் வியாபாரிகளிடம் பொருளை வாங்குவோம்..
எளியவர் வீடுகளில் ஒளியேற்றுவோம்..
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்..
ஐயமில்லா பட்டாசுகள் வெடிப்போம்..
ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்வோம்..
ஓடி ஆடி தீபாவளியை மகிழ்ச்சியாய் கொண்டாடுவோம்..

என்றும் உங்கள் நட்புடன்
     - தமிழ்

Pages: [1] 2 3 4