1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-052
« on: March 11, 2025, 08:29:33 am »என் அம்முவின் மனதை அறிந்த நான்
அவளின் மௌன மொழியுடன் எனது கவிதை வரிகளும் சேர்ந்து சமர்பிக்கிறோம் நமது GTC யின் கவிதையும் காணமும் நிகழ்ச்சிற்க்காக..
நிலவாகியவனே...
வான கருங்கடலில் நீந்திக்கொண்டிருக்கும்
மேகமீன்கள் ...
அதில்
முத்தென முளைத்திருக்கும் நட்சத்திரத்தை ...
தென்றலோடு கோர்த்து மாலையாக்கினேன்
நிலவே உனக்காக அணிவிக்க...
முழுதாய் முகத்தை கண்டதும்
முழுநிலா கரைய தொடங்கியது...
என்னுள் தொலைய தொடங்கியது ...
மதியின் மனம் யார் அறிவது?
அதன் தனிமை யார் உணர்வது ?
நிலவுக்கு என் பெயரா.?
எனக்கு நிலவின் பெயரா.?
நிலவுக்கு தனிமை கற்றுக்கொடுத்தது நானா.?
என் காவலன் நிலவா.?
இருவரில் யார் அழகு.?
இருவரின் காத்திருப்பு
யார் வருகைக்கு.?
பகலில் நான் எதிரில்
நிலாவே நீ மறைவில்...
இரவில் நிலவே நீ வானில்
நானோ கனவில்...
என் கோபக்கனலை அணைக்கும் குளிர்தன்மையன் என் மாமனே..
என் தனிமை போக்க நிலவாக என்னுடனே பயணிக்கின்றானோ என் மாமன்..
எனை அழகாக்க தன்னொளியில் என்
மேனியில் நட்சத்திரங்களை பதித்தவன்..
இரவெல்லாம் எனக்காக விழித்திருப்பவன்
என்னறையில் ஊடுருவல் புரிந்த வெண்கதிரோன்..
என் அந்திகாவலன்...
என் ஆருயிர் மாமனே..