Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Limat

Pages: [1] 2 3 ... 5
1

என் மனதில் இருக்கும் என் அம்முவின் வரிகள் என் வாயிலாக...


மறந்துவிடாத காதல்...


நீ தான் என் உலகம் என்று
வாழும் என்னிடத்தில்...

என் பாசம் எல்லாம் வேஷம் என்கிறாய்...

என் மனதுக்குள் இருக்கும்
உன் மீதான காதல்...

நான் மண்ணில் புதையும்வரை
உன்னுடன் பேசும்...

நீ என்னோடு பேசுவதில்லை என்றாலும்...

உன் நினைவுகள் என்னோடுதான் பேசுகிறது...

அன்று ஆறுதல் சொல்லி
அரவணைக்க நீ இருந்தாய்...

இன்று என்னை அரவணைக்க...

என்னருகில் உன் நினைவுகளும்
என் கண்ணீரும்தான்...

உன் புகைப்படம் பார்த்த
என் நண்பர்கள் கேட்டார்கள்...

நீ யாரென்று...

காய்ந்து போன இந்த மரத்திற்கு நீ
உயிர் கொடுக்கும் வேர் என்று சொன்னேன்...

இன்று மரத்தை கோடாரி கொண்டு
வெட்டி வீழ்த்துவது போல...

உன் வார்த்தை கோடாரியால்
என்னை தினம் கொள்கிறாய்...

என் அன்பை புரிந்துக்கொண்டு
உன் செல்ல தீண்டல்களோடு...

என்னை தீண்ட போவது
எப்போது என்னுயிரே.....

நெஞ்சினில் புதைந்திருக்கும்
உன் நினைவுகள்...

இமைகளை கடந்து
கண்ணீராய் வழிந்தோடுகிறது...

உயிருக்குள் உண்டான வலிகளை...

ஊமையாக அழுது தீர்த்து கொண்டு...

வெளியே சிரிப்பு என்னும் முகத்திரை அணிந்து....

போகர் எழுதிய ஏட்டு
ஓலைகளை நான் படிக்கவில்லை...

படித்திருந்தால் நானோ
கூடுவிட்டு கூடுபாய்ந்து...

நீ தினம் தினம் ரசிக்கும் உன் Royal enfield ஆக மாறியிருப்பேன்...

சிறிய பூவினுள் பெரியக்கனி
ஒளிந்திருப்பது போல...

என் சின்ன இதயத்தில் பேரழகனாக
ஒளிந்திருப்பது நீ தானேடா...

கருவை சுமக்கும் போது பெண்
சுகமான வலியாக சுமப்பாள் என்றார்கள்...

நானோ உன் கருவை சுமக்காமலே
சுகமாக சுமக்கிறேன் உன்னை...

ஏக்கத்தோடு அன்று
உனக்காக காத்திருந்ததிற்கும்...

கண்ணீரோடு இன்று காத்திருப்பதற்கும்
சிறு வித்தியாசம்தான்...

அன்று எனக்காக நீ
இருந்தாய், இன்றும் இருக்கிறாய் ஆனால் விலகி...

என்றும் உனக்காக நான் இருக்கிறேன்...

மறந்துவிடாத காதலை என்னி என்னுடன் நீ வரும் நாளுக்காய் கண்ணீருடன் காத்திருக்கிறேன்.....

மறந்துவிடதே காதலை....
மறந்து போல என்னையும்.......

2
Birthday Wishes / Re: Happy Birthday Limat
« on: September 26, 2025, 03:41:34 pm »
Tq so much ammu😘🥺

3

ஏனிந்த தாமதம்? சொல்லாயோ சம்மதம்?


தாவணி பெண்ணே !
வருவதற்கு தாமதமாவது ஏனோ?
உன் அப்பா வந்து தடுத்தாரோ?
உன் தாய் என்னைப் பழித்தாரோ?
ஏனிந்த தாமதம்?
எப்போது ஏறி வருவாய் என் வீட்டுபடி?

வாசலோரம் விழிவைத்தே
காலநேரம் காணாமலே
கோலமயில் நீ வருவதற்கே
காத்திருக்கின்றேன்.....
நீயோ என்ன செய்து கொண்டிருக்கிறாயோ?
யார் உன்னை மறித்தாரோ?
நான் கெட்டவன் என்றுரைத்தாரோ?
ஏனிந்த தயக்கம்?
முன்னே ஏறிய கால்கள் தடுமாறியதோ?

சேலை சோலையே!
 எப்போது சாலையில் வருவாயோ?
உன்னோடு கைகோர்த்து
வாழ்நாள் முழுவதும் நான் போக
நீ வர வேண்டும் என்னோடு....
நெஞ்சம் துடிக்கிறது..
உன் நினைவில்
பஞ்சமில்லாமல் நாளும் கடக்க,
வருத்தம் தரும் உன் தாமதம்,
திருத்துகிறது  உன்னை மேலும்
நேசிக்கத் தோன்றுகிறது;
உன் தாமதக் காரணத்தை யோசித்து, யோசித்து
பசியும் மறந்து விட்டது.
ஏனிந்த தாமதம்?
என்னை காண வரும் பாதையும் மறந்து போனதோ?

சாலைத் தென்றலே! உன்னைக் காணாத
சாலையெங்கும் வெறுமையாகுதே!
பயணிக்கும் போது வேதனை அடைகிறேனே!
பயணிப்பது எங்கே என்றறியாமலே!
கால்களும் நடக்குதே கூடவே வரையரையின்றி
காலமும் நகற்கிறதே!
நரைமுடி தெரிகிறதே!
ஏனிந்த தாமதம்?
எல்லாம் மறந்தாயோ?
நினைவை இழந்தாயோ?

மலைத்தேனே! உன்னை பருக விழைந்தேனே!
கலைத்தேனே! காதல் தேன் கூட்டால் கவிழ்ந்தேனே!
பிழைத்தேனே! உன் நினைவில் சுவைத்தேனே!
களைத்தேனே! உன்னை காணாது மனம் சளைத்தேனே!
தேனமுதே! அருகே வா!
ஏனிந்த தாமதம்? சொல்லாயோ சம்மதம்?

4
Birthday Wishes / Re: Happy Birthday PRIYADHARSHINI
« on: September 23, 2025, 07:29:51 am »

அணுஅணுவாய் அனுதினமும் என்னை ஆட்சி செய்யும் அழகியே.....
தவமின்றி கிடைத்தவள் நீ....
தேடுதல் இன்றி வந்த வரம் நீ...
 என் வாழ்க்கையின் பெரும் பொக்கிஷம் நீ...
என் உயிர் உள்ளவரை உன்னை தொடர்ந்து நேசிப்பேன்...
உலகின் ஏழு அதிசயங்களை கண்டதில்லை ஒருபோதும்...
 எனினும் கவலைப்பட்டதில்லை ஏழு அதிசயங்களின் மறு உருவமான நீ என்னுடன் கைகோர்த்து நடப்பதால்...
வாழ்க்கையில் துன்பமோ இன்பமோ எது நேர்ந்தாலும் என்றும் என்னை விட்டு நீங்காத உயிரிலும் மேலான என் அம்முவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....

நான் நானாகவே என்னும் உனது மனநிலையில் உறுதியோடு நின்று மென்மேலும் உன் வாழ்வில் உயர இந்த மாமனின் வாழ்த்துக்கள் ....

என்றென்றும் உன் நினைவில் நான்...!

6
Am yours Tamizh and i request a song
Kaatrin viral from Aghathiyaa

My favorite lines are

காதலி என்பவள் கட்டில் அல்ல
கை தட்டி சிரிக்கும் பொம்மை அல்ல
நெஞ்சுக்குள் வருவாள் மெல்ல மெல்ல
உயிரே இவள் என்று சொல்ல சொல்ல

நீ யாரோ எவளோ அல்ல
நான் ஏழெட்டு வரிகளில் சொல்ல
நீ அலையோ மழையோ அல்ல
நான் ஆயிரம் விரல்களில் அல்ல

7

கால் முளைத்த மலர்களெல்லாம்
தோட்டங்களில் நடமாடுகின்றன ...!
மனிதப்பிறவிக்கு மகளாய் வரம் வாங்கி !


என் மகளுக்காக.....


உன்னை கையில் ஏந்தி கொஞ்சுகையில் என் நினைவலைகளில் சில சிதறல்கள் இதோ.. 

எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ நீ
எனக்கு மகளாக பிறந்தாய்...
ஒரு கோடி வண்ணத்து பூச்சியின் வண்ணங்களை
அழகு முகத்தில் கொண்டாய்....
உந்தன் இலவம் பஞ்சு பாதம்
உதைக்க எந்தன் கர்வம் போகும்,
முகத்தில் அம்மாவின் அழகை கொண்டாயே அம்மா....
 எந்தன் அம்மா
கனவில் காணாத புதையல் தந்தானே
பிரம்மா அந்த பிரம்மா.....
எல்லை காணாத பறவையின் சிறகில்
ஏறிப்பறப்பாயே வாழ்விலே
வாழ்வில் நீ காணும் வெற்றிகள் என்ன
வானம் கூட எல்லை இல்லையே
பூமித்தாயே நிலவைபோலே உன்னை சுற்றி..
என் வாழ்கையே
நிலத்தில் நீ வாழ உரங்கள் போலாவேன்
செடியே மல்லி செடியே
நீ பூக்கும் நேரத்தில் மஞ்சள் நீராட்டி
மகிழ்வேன் நானும் மகிழ்வேன்....
பூக்கள் நீ சூடி பாக்கள் நான் பாடி
உந்தன் திருமணம் நடக்குமே
இறைவனே உந்தன் திருமணம் கண்டு
வியந்துபோகும் படி செய்வேனே
உன்னை பிரியும் அந்த நேரம்
நெஞ்சில் இடியுடன் மழையுந்தான்..

என் உயிரினில் ஊடுருவிக் கண் சிமிட்டும் கடவுளவள்...
என் ஆனந்த ஆணணுக்களின் ஆர்ப்பரிப்பவள்
எந்தன் ஜீவனின் ஜீவன் ஈன்றெடுத்த ஜனனமவள்....
என் அன்னையின் அன்பை நீக்கமற புகட்டியவள்....
அவள் -
விரல்பட்ட விடம் இனித்து
குரல்கேட்ட விடம் கனிந்து
இதழ்பட்ட விடம் கரைந்து
என் இதய நரம்புகளை யாழென மீட்டுபவள்....

காமத்தில் கலவாத என் கண்ணின் முத்தம் - என் கண்மணியின் முத்தம்...
செல்ல மகள் உதிர்க்கும் தருணம்
சில்லிட்டுத் தெறிக்கும் உன் அன்னையின் இரத்தம்...

பொன்மகளவள் புன்னகையின் வெளிச்சப் பூவை
இரவல் வாங்கிட இளமதியோடு இன்னபிற
கோள்களும் தவம் கிடக்கும் தத்ரூபம்...

எந்தன் வாழ்வியக் கண்ணீரின் காயங்கள்
ஆற்றிடும் அதிசயம்
அவள் மார்புதைக்கும் பாத ஸ்பரிசத்தினால்...

அவள் வரும்வரை நேரம் போகவில்லை
வந்தபின் நேரம் போதவில்லை - அவள்
இன்னிசை மழலை மொழி கேட்டு களித்திட...

தென்பாண்டித் தெம்மாங்கும் யாசகம் கோரும் - மழலையவள்
உச்சரிக்கும் பைந்தமிழின் சங்கீதத்தில்........
எடுத்துக்காட்டு உவமையணி ஏங்கி நிற்கும்
எழில் பதுமையவளின் சேட்டைகளை எடுத்தாள்வதற்கு...
ஆக,
தமிழன்றி வேறெந்த மொழியும் இலக்கணம்
சமைக்க வில்லை..
ஆம் இந்த தமிழின் கவி வரிகளும் கூடவே...
தாரகையவள் உலவும் அழகியலில் ....

இங்ஙனம் வாழ்க்கையின் வழியில்
வந்தவள் வாழ்க்கையாகி போகிறாள் - அந்திமத்தின்
நிறைவேறாத ஆசைகளின் முற்பகுதியில்
வாழ்ந்துவிட்டு பிற்பகுதியில் விட்டு பிரிந்து செல்லும்
என் மகளுக்காக........

9

கவிதை என்றாலே என் சிந்தையில் வருவது என் அம்முவின் நினைவலைகள் தான் அதுவும் எங்கள் இருவருக்கும் பிடித்த மழை கவிகள் என்றால் சொல்லவா வேண்டும் என் சிந்தனையின் கிறுக்கல்களில் சில வரிகள் நமது கவிதையும் காணமும் நிகழ்ச்சிக்காக அன்பர்கள் அனைவரும் மழையின் சிந்தனையோடு நமது தொகுப்பாளர் Rijia வின் குரல் மழையோடு கொஞ்சம் நனைவோமா....!


மனதோடு மழைக்காலம்.....


வானமகளின் வைரச்சலங்கைகள்
அறுந்து விழுந்தனவோ
மண்ணெங்கும் மழைத்துளிகள்;
உன்னைப் பார்க்கையில்
உயிரனுக்கள் மீண்டூம்
பிறந்தனவோ என்
வானெங்கும் விடிவெள்ளிகள்!!

முதன்முதலாய் என் விழியீர்ப்பு விசைகளில் நீ விழுந்தபோது
கனவுகளின் தேவதை
சிறகுகள் நீங்கி
சேலையில் நிற்கிறதோ!
என வியந்ததாய்
‌ஞாபகம்.
உன்னால் அறியாத
வெட்ககங்கள் பூசிக்கொண்டு
பூமீக்குச் சென்றது என்முகம்.

அந்நிமிடம் தொட்டு அடியேனின்
கடமைகளும் கனவுகளும்
காலத்தோடு உன்னுள் அடங்கின.
செல்போனில் உன் குரல் சினுங்கிட
பொழுதுகள் விடியும்.
உன்னை தூங்க வைத்த பின்தான்
இரவுகள் அடையும்..
இப்படியாய் என் நொடிகள்
ஒவ்வொன்றும் உன்னிடம்
அடைபட்டுகொள்கிறது
ஆனந்தமாய்............

ஓர்நாள்
அடைமழை உதவியுடன்
ஒற்றைக் குடையின்கீழ்
உன் கைப்பிடித்து நடக்கையில்
பச்சை நிற சேலையின்
முந்தானை கொண்டு என்
தலை துடைத்தாய்
அவ்வப்போது.
ஆனந்தம்
உன்னோடு எனக்கும்...
குடைப்பிடித்தாலும் தொடாமல்
விடமாட்டேன் என
உன்னை நனைத்த
மழையை நினைத்து
உள்ளம் வெந்தாலும்
இயற்கையை வென்றவள்
என்னவள் என்ற
பெருமைகள் எனக்குண்டு.
ஏனெனில் உன் சினுங்கலில்
சிலிர்க்கவே சிந்திய
துளிகள் என்னவளின்
அடிமைகள்;

குடையை விட்டு விலகி உன்
நடையழகை பார்த்தபொழுது தான்
எனக்கு புரிந்தது.
ஆம்,
பார்ப்பதற்கு பசுமை.
ஈரமான நந்தவனமும்
மழை சாரலில் சிறிது நனைந்த சேலையோடு
என ரசிக்கையில்
பொய்க் கோபத்தில்
ஜென்மங்கள் தாண்டி
அழைத்துச் சென்றாய்..

மழையோடு ஒதுங்கி
நின்ற பேருந்தில்
ஓரமாய் இடம் பிடித்தோம்
நனைந்தே இருவரும்.
இப்போது பயணம்.
ஓட்டுனரின் கட்டளைக்குப்
படிந்து பேருந்து
பாய்கையில் உயிரோடு
எனக்கு மரணம்.
கண்ணயர்ந்து உன்
தோளில் சாய்கையில்
மீண்டும் ஜனனம்....

அது ஏனோ
விளங்கவில்லை
மழை வந்தால்
மனதுக்கு பிடித்தவள்
என உன்னை
அடையளம் காட்டி
ஏதேதோ
எழுதுகிறேன்.
எழுதிக்கொண்டே வருகையில்
கற்பணையின் எழுத்துகள்
குறைந்து போனது.
கண்தூக்கிப் பார்த்தால்
கணமழை காணாமல்
போயிருந்தது.
ம்ம்ம்ம்.........
இது தான்
மனதோடு மழைக்காலமோ.....?

10

என்னவளின் ஸ்பரிசம்....


அன்பே...
என் கண்ணீர்த் துளிகளுக்கு
பன்னீர் தெளிக்கிறது
உந்தன் மெல்லியப் புன்னகை...
எத்தனை பேர்
என்மீது நடந்தாலும் நான் கரையாகவே இருக்க விரும்புகிறேன்
அலையாக நீ வந்து என்னை முத்தமிட்டு செல்வதால்...
உன்னை முத்தமிடவும்
தயங்குகிறது என் மனசு என் அருவா மீசை
உன் மெல்லிய இதழ்களை காயப்படுத்திவிடுமோ என்பதனால்...
இந்த மழைத்துளிகளின்
மீது எனக்கு பொறாமையாக உள்ளது உன் அழகிய மேனியோடு
ஒட்டி உரசுகிறதே என்பதனால்...
உனக்குத் தாலி கட்டுவதை நிறுத்தி
ஒரு தூளி் கட்டவேண்டும்
உன்னிடம் இன்னும் அந்தக் குழந்தைத் தனம் மாறவேயில்லை....
உன் கூந்தலில் பிரிந்த
ஒற்றை முடியொன்று
என் கவிதைப் புத்தகத்தில் நுழைந்து புதுவாசம் வீசுகிறது...
உன் நடை நளினத்தில்
என் வாலிபம் உடைந்து நொருங்கி ஊசலாடுகிறது....

12

புயலையும் தென்றலாய் வசப்படுத்தும் எமது GTC கவிஞர்களுக்கு எனது சிறு கிறுக்கல்கள் சமர்ப்பனம்....


சிற்பியும் நாங்களே சிலையும் நாங்களே!


மனிதனுக்குள் ஒருவனாக
பூமியிலே பிறக்கிறோம் !
தாய்மொழி குழைத்த பால் குடித்து
தாமாய் இங்கே வளர்கிறோம்!

கற்பனையின் இறக்கை கட்டி
எங்கெங்கோ பறக்கிறோம்!
கண் காணா தேசமெல்லாம்
கால் பதித்து பார்க்கிறோம்!

வானவில்லை கையிலேந்தி
வானத்திலே திரிகிறோம்!
நிலாப்பெண்ணை நினைவிலேந்தி
உலாவொன்று வருகிறோம்!

கடல் அலைகள் கால்கள் தொட
அதையும் கவிதை என்கிறோம்!
காதலின் கரங்கள் பிடித்து
அழகுப் பூக்கள் என்கிறோம்!

சமூகத்தின் அவலம் கண்டு
எழுத்தில் நியாயம் கேட்கிறோம்!
கண்ணீரற்ற அழுகையினால்
காகிதங்கள் நிறைக்கிறோம்!

தாய்மையின் உணர்வுகளை
தனக்குள்ளும் சுமக்கிறோம்!
கவிதையாம் பிள்ளைகளை
தரணிக்காக வளர்க்கிறோம்!

ஊருக்காக கவிதையெழுதி
உள்ளம் பூரிக்கிறோம்!
ஊர் உறங்கும் வேளையிலும்
உணர்வுகொண்டு விழிக்கிறோம்!

மனதில் வந்த ஊனத்திற்கு
மருந்தொன்று அளிக்கிறோம்!
மலரினது மௌனத்திற்கும்
காதல்கொண்டு துடிக்கிறோம்!

பெருமை கண்டு பெருமிதங்கள்
கொள்ளாதவர்களாய் இருக்கிறோம்!
சிறுமை கண்டு பொறுமைகொண்டு
சிரித்துக்கொண்டே மறக்கிறோம்!

வாழ்த்துக்களின் ஏணி கொண்டு
உயரம் ஏறி மகிழ்கிறோம்!
வானத்திலும் பாதை அமைத்து
ஒய்யாரமாய் நடக்கிறோம்!

இருபதின் இளமையோடு
அறுபதிலும் வாழ்வோம்!
இன்பதுன்பம் இரண்டினையும்
ஒன்றை போலப் பார்க்கிறோம்!

உயிரைவிட்ட உடலாய்
இந்தப் பூமியிலே புதைவோம் !
புதைந்த பின்னும் இப்புவியிலே
இன்பக் கவிதைகளாய் வாழ்வோம் !

தமிழ்மொழி எனும் பளிங்கினை
சிந்தனை எனும் சிற்றுளிகொண்டு
கற்பனை துணையுடன் உருகொடுத்து
சமுதாய நோக்குடனே என்றும் நாம்
கவிதைகள் பலபல வடிவமைக்கும்
சிற்பியும் நாமே சிலையும் நாமே !

சீரான எண்ணமுடன் சீர்மாறாமல்
சீர்கெட்ட சமூகமும் திருந்திடவே
சீரான பாதையில் சென்றிடவே
சிதைந்திட்ட நெஞ்சங்கள் சீர்பெற
சிந்தையின் துளிகளால் வடித்திடும்
சிற்பியும் நாமே சிலையும் நாமே !

பாரேப்பார்க்கும்படி பாடல்களை படைப்பவன் கவிஞன் ..!
பரதேசியாக வாழ்ந்தாலும் பார்பாராட்டும்படி
வாழ்பவனே நல்ல மனிதன்..!

என்றும் நட்புடன் நான் உங்கள்


13

கண்ணீரும் பரிசாக...




மோதிக்கொண்ட மழைமேகம்
தூறல் போடும் மண்ணில்...

மலர்ந்த பூவும் உதிர்ந்துவிடும்
ஒருநாள் மண்ணில்...

நம் மனதில் துளிர்விட்ட காதலை
கத்தரிகொண்டு வெட்டியது ஏனோ...

உன்னிடம் எனக்கு உரிமை உண்டென...

உரிமை எடுத்துக்கொண்டேன் உன்னிடம்...

எடுத்து கொண்ட உரிமையே எதிரியாக எனக்கு...

நீ அழுதாள் அழுவதற்கும்
சிரித்தாள் சிரிப்பதற்கும்...

உன் வீட்டு கண்ணாடி
மட்டுமல்ல நானும் இருக்கிறேன்...

உன்வீட்டு கண்ணாடி
உரிமைகூட எனக்கில்லை என்று...

நானும் உணர்ந்தேன் உன்னால்...

உரிமை இருக்கும் இடத்தில்
கோபம் சண்டை உருவெடுக்கும்...

உரிமை இல்லாத இடத்தில் கோபம்
சண்டையும் அமைதிகொள்ளும்...

உன்னோடு வாதாட என்னால் முடியவில்லை...

நானும் உரிமை இல்லாதவனாக
விலகியே இருக்கிறேன் உன்னால்....

நான் இறக்கும் வரை உன்னை மட்டுமே...

காதலித்து கொண்டு இருப்பேன்...

உன்னோடு வாழ துடிக்கும் என் இதயத்தை...

நீ புரிந்து கொண்டது அவ்ளோதானா...

காலம் உனக்கு உணர்த்தும் கண்மணி...

விதியிடம் சொல்லி இருக்கிறேன்...

நம் பந்தம் மறுஜென்மமும் தொடரும் என்று...

உன் முகத்தை பார்க்க வேண்டும்...

இனி எப்போது முடியும் என்னுயிரே...

நான் உன்னுடன் கைகோர்த்து செல்லவும்...

உன்னுடன் தினம் தினம் சிரித்து பேசவும்...

எனக்கு துணையாக இருப்பது கனவுகள்தான்...

கனவு என்பது யாருக்கு பொய்யோ
எனக்கு மட்டும் உண்மை...

எங்கிருந்தோ வந்து அன்பை
தந்து சென்றுவிட்டாய் நீ...

கண்ணீரும் பரிசாக இன்று எனக்கு...

உன் காதோர மச்சத்தை...

தொட்டு தொட்டு பார்க்கும் ஜிமிக்கியும்...

எனக்காக நீ உன் கைகளில் வரைந்த என் பெயரின்  வடுவையும்...

இனி நான் எப்போது
பார்ப்பேன் என்னுயிரே...

உடையுண்ட என் இதயத்தை மீண்டும் மீண்டும் கோர்த்து வைத்து துடிக்க வைக்கிறேன் என்றும் உன் நினைவலைகள் என்னை விட்டு செல்லாதிருக்க....

என்றும் உன் நினைவெனும் கனவுகளுடன் நான்..🌹

14


என் மீதான உங்கள் அன்பு தீர்ந்துவிட்டதோ...


விதியின் விளையாட்டால் ஒற்றை பூ மரமாய் தனித்து நிற்கிறேன்...

நிழலில் இளைப்பாற கிளிகள்
கூட வரவில்லை துணையென...

ஆகாயம் பார்த்த
பூமியாய் வளர்ந்து நிற்க...

இன்னல்கள் ஆயிரம் கண் முன்னே தோன்றி மறைய....

துணையென நான் இருக்கிறேன்
என்று ஒற்றை பொம்மை மட்டுமே என் கையில்....

என் விழியோரம் வழிந்த கண்ணீர்
குளத்தில் பிம்பமொன்று தோன்றியது....

அதில் என் தாய் தந்தையின் கரங்களுக்கு நடுவே நான் நடை பழகிய காட்சி....

அது ஒன்று மட்டுமே இவ்வுலகில் நான் பிறந்ததற்கான சாட்சி....

தென்றல் சில நேரம்
சூறாவளி சில நேரம்...

மாறி மாறி வீசி கொண்டு
இருந்த என் வாழ்வில்...

மேக மோதலில் மின்னி
மறையும் மின்னலை போல...

இன்று என்னைவிட்டு
பிரிந்துவிட்டார்கள் எனது பெற்றோர்கள்..

மேகத்தில் ஒளிந்திருக்கும்
மழைத்துளி போல...

நீங்கள் என்னுடன் என்றும் இருப்பீர்கள்
என்று நம்பினேன்...

நீங்கள் பிரிவது
முன்பே தெரிந்திருந்தால்...

பிறக்கவே
யோசித்திருப்பேன் கொஞ்சம்...

இமைக்கும் விழிகளின்
முன்னே நீங்கள் வராததால்...

நான் உங்களை மறப்பேன்
என்று நினைத்தீர்களோ...

விழிகளின்
பார்வைக்குத்தானே விருந்தில்லை...

உங்கள் நினைவுகள் பதிந்த
என் இதயத்தில் என்றும் விருந்துதான்...

ஆயிரம் கனவுகள்
எனக்கு தந்துவிட்டு...

நீங்கள் பிரிந்து சென்ற
மாயம்தான் என்னவோ...

என்மீதான உங்கள்
அன்பு தீர்ந்துவிட்டதோ...

கன்னத்தின் வழியே
வடிந்து செல்லும்...

என் கண்ணீர் மட்டும்
இன்னும் தீரவில்லை எனக்கு....

என்றும் உங்கள் நட்பின் பிம்பமாய் நான் உங்கள் தமிழ்......

15


நொடிகளாய் நகர்ந்து
நிமிடங்களாய் நிமிர்ந்து
மணிகளாய் மறைந்து
நாட்களாய் கடந்து
வாரங்களாய் சுழன்று
மாதங்களாய் தகர்ந்து
வருடமாய் வருடிச் செல்லும்
புத்தாண்டே நீ வா!!!!!!!
கடந்தது இலையுதிரா யினும்
வருவது வசந்தமாய் இருக்கட்டும்!!!!!!!

என் இனிய GTC உறவுகளுக்கு உங்கள் தமிழின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Pages: [1] 2 3 ... 5