See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
|
Birthday Dates Registration - பிறந்தநாள் பதிவுகள்
January - ஜனவரி மாதம் 01- Priya S (Ritika) & SeLeNe(Aara,Samantha) Twinkle new 01- Hello dubaiya 01- Cinderella (suba) 04- Vinothvijay 06- Teddybear 07- Iyal 10- Chaan & Cherry Blossom 12- Aaliya,Srinithi 13- Glass boy 14- Dora & mukesh raja 16- Sivarudran 18- Donmama (Don Always) & Athirai 19- Kayal 23- GH 24- Mr King & Selvam 26- UNAKAAGA NAAN ----------------------------------------------------- February - பிப்ரவரி மாதம் 02- Black knight 04- Biker Boy 06- RESH 07- Butter Biscuit 08- Butterscotch 09- MiThRaN & Arakan 12- Shakthi & Ratheesh & jana 14- Snow White 16- Pearl Queen 17- Maya_kannan 18- Jaanu ma 19- Ruban & Ragu 22- RiJiA 23 -Nani 25- Thakali (Mayakalvan) 26- Peacemaker 28- Pikachuu --------------------------------------- March - மார்ச் மாதம் 01-Rolex_Sir 05- Sudhar, VIP & Athira 06- iamcvr 07- DIMPLE 09- Shaswath 17- Jasvi 18- Crazy King 20- Fire Cracker , Priya Rajesh 21- Jackson 22- Maran 23- Roja 24- Popeye(Raju) 29- Harry Potter --------------------------------------- April- ஏப்ரல் மாதம் 05- Ladybugs 07- Pappu & RDX 08- SiNaMika & Suriya & Avis 03- Bliss 17- KITTY 17- Madhuri 20- CUTE & BarBie Queen(CINDERELLA) 20- Gun (Bullett) 26- Raman 27- TallnHandsome 28- Sakshi (Priyasagi) --------------------------------------- MAY - மே மாதம் 01- Abinesh & Gulu Gulu 02- Eric Roshan 03- A1 PsychO 07- Dimple 07- DEMON 09- Mass 10- Varshu & Butterfly 12- DreaM GirL & Lovsha 12- Smile 12- Aljin 13- Eagle13 & Magizhan 14- Harinika & Shahidm & Moon 15- Ishan & Tobi 16- Meera6 18- Ishaa 19- Guest1 12- Nithyasri 12- Mr Romeo 20- Weirdo & AdiThYa & IThaYa ThiRuDaN 21- Deepa 22- sahana saral 23- Rudraa 24- MathiFR 25- Kanmani 27- Riyana 27- Vinoth94 29- SweetHeart , DaisY --------------------------------------- June - ஜூன் மாதம் 03- StrawBerry & Toffee 04- Anu Sri & Sweety 04- PriyaManavale 06- Appu kutty & Aleem & Dan_Bilzerian 08- Lenin 09- Aruna & MDU 09- Nivas saran 12- Vinish (Atman) 11- MrMaddy 18- Arjun 20- Lusy Lusy 21- Nalina 24- Thor 25- Stark 29- SAURON --------------------------------------------------- July ஜூலை மாதம் 02- Aaran 03- Janu 07- Dhiya 09- JPriya 10- Illiyana 12- Megha CHOCOLATY QUEEN 12- Yash 14- Nanna 15- Ssaa (shaa) 16- Adheeran_JD 17- Vedha & Rithu (Miss Muffet) & Charvi 20- Srinisha(CHUTTYGURL) 22- KiRaN_WoLfY 24- Ayesha 24- Shinchan 24- Kiara24 26- MR_LOCAL 27- Dikshi 28- Helena/Mithra (Meera) AVATAR 29- Nandhini (ANANTHI) & Joy 30- Kitkat & Pranav ------------------------------------------------- August - ஆகஸ்ட் மாதம் 01-RamGwr 01- Kattathora & Reena 03- Zoya & PaatsuBalu 05- Pandaa 07- Waterfall 09- SHREYA & Mehshu 10- Thendral & ponniyin selvan 11- Cherry 12- Chocky 15- Ice Boy & RED GIANT 17- Theconqueror 18- innocent Boy2 19- Seetha 21- Handsome Hunk 23- Akshaya 23- Mist & Hazel 25- Vettukizzi & wolfgirl 27- StayPositive 28- Anita 28- Mithraa 30- Heartkiller 31- RajuRaju ---------------------------------------------- September - செப்டம்பர் மாதம் 01- Akshitha 01- kakashi 04- SuNsHiNe(Sarayu) & iniya 06- KIlLivAlavAn 10- Nirmalniru 11- SweetGirl 13- Candy boy 17- Amuthan-MFT & Handy 20- Vijayarajan 21- Sathiz007 22- Mr_Black 23- Dharshini 24- Aslan,,Kurő,,,Little Vayadi,,,,Mara 25- Misty Sky 26- Limat 30- Neethu ----------------------------------------------------- October - அக்டோபர் மாதம் 02- PATRICK 06- Bhuvi 08- Hiccup 07- Sky_blue 09- Aadhi 11-Deva 13- Nikita,,BesTFrienD 13- Yashna (Malar) 13- VICKY 15- Viki143 (VarnanV) 18- Maya 26- Vijay3 & Smile-y 28- TrueVenom 31- Santhosh ------------------------------------------------------- November - நவம்பர் மாதம் 01- JodhA 02- Semmozhi 04- Black Forest 05- Laksha 07- Mellisai (Sunray) 12- CottoN CandY 13- VaanMugilan 14- UniverseLife & Shalini 15- SILENT GIRL 18- Vinoth Vijay 18- Sembaruthi 19- karthiik & Day Maker (White Heart) 19- Jamine Jazz 20- Hasan 22- Nacthara 23- Plato 24- Karthick Sri 25- Octavian 27- Shree 28- Mouse & Elsa 29- Manoj 30- Yazhini ------------------------------------------------------------ December - டிசம்பர் மாதம் 01- Sindu,,NillA,,Shivani 04- Wings 07- Aeiou 08- Zaaysha 09- Rhiya 10- Vedhika 11- Lovely 12- Kashmira 17-Nisha & Mehan 18- Deepu rocks 19- DHRUV_SHA 21- Killer 23- Madhu (MIRROR) & choco venkat & Devil Boy 24- Sanjana 27- Jacksparrow27 31- Black Sun & Fluffles March 19, 2019, 09:37:59 pm |
1 |
Program Feedback -பின்னூட்டங்கள் ( GTC 1.ANNIVERSARY SPECIAL PROGRAMS)
![]() ![]() ![]() ![]()
January 16, 2023, 05:39:14 am |
1 |
|
தமிழின் கவி
மணமணக்கும் மல்லிகைக்கும் மயங்காதவன் நான் நீ மாமா வென்று அழைக்கையில் மயங்கி விட்டேன் உன்னை காணாத வரை இன்பத்தையே அறியாதவன் நான் நீ மாமா வென்று அழைக்கையில் பல கோடி இன்பமடைகிறேன் மனக்கவலையால் மறத்துப்போன என் உள்ளத்திற்கு மாமா வென்று நீ அழைக்கையில் மருந்தாய் ஆறுதல் அளிக்கிறதடி நான் தோல்வியினால் துவண்டு விழும் போதெல்லாம் மாமா வென்று நீ அழைக்கும் மந்திரமே மனதில் வந்து ஆயிரம் யானை பலத்தை கொடுத்து எழுந்து அனைத்திலும் என்னை வெற்றி பெற செய்கிறதடி உன் தித்திக்கும் தேன் குரலால் மாமா வென்று நீ என்னை அழைக்கும் தாரக மந்திரம் போதும்மடி எனக்கு மரணத்தை வென்று மகிழ்வுடன் என்றும் உன்னுடன் நான் வாழ என் அம்மு தர்ஷினியே..!! October 21, 2024, 07:31:51 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-060
என் மனதில் இருக்கும் என் அம்முவின் வரிகள் என் வாயிலாக... மறந்துவிடாத காதல்... நீ தான் என் உலகம் என்று வாழும் என்னிடத்தில்... என் பாசம் எல்லாம் வேஷம் என்கிறாய்... என் மனதுக்குள் இருக்கும் உன் மீதான காதல்... நான் மண்ணில் புதையும்வரை உன்னுடன் பேசும்... நீ என்னோடு பேசுவதில்லை என்றாலும்... உன் நினைவுகள் என்னோடுதான் பேசுகிறது... அன்று ஆறுதல் சொல்லி அரவணைக்க நீ இருந்தாய்... இன்று என்னை அரவணைக்க... என்னருகில் உன் நினைவுகளும் என் கண்ணீரும்தான்... உன் புகைப்படம் பார்த்த என் நண்பர்கள் கேட்டார்கள்... நீ யாரென்று... காய்ந்து போன இந்த மரத்திற்கு நீ உயிர் கொடுக்கும் வேர் என்று சொன்னேன்... இன்று மரத்தை கோடாரி கொண்டு வெட்டி வீழ்த்துவது போல... உன் வார்த்தை கோடாரியால் என்னை தினம் கொள்கிறாய்... என் அன்பை புரிந்துக்கொண்டு உன் செல்ல தீண்டல்களோடு... என்னை தீண்ட போவது எப்போது என்னுயிரே..... நெஞ்சினில் புதைந்திருக்கும் உன் நினைவுகள்... இமைகளை கடந்து கண்ணீராய் வழிந்தோடுகிறது... உயிருக்குள் உண்டான வலிகளை... ஊமையாக அழுது தீர்த்து கொண்டு... வெளியே சிரிப்பு என்னும் முகத்திரை அணிந்து.... போகர் எழுதிய ஏட்டு ஓலைகளை நான் படிக்கவில்லை... படித்திருந்தால் நானோ கூடுவிட்டு கூடுபாய்ந்து... நீ தினம் தினம் ரசிக்கும் உன் Royal enfield ஆக மாறியிருப்பேன்... சிறிய பூவினுள் பெரியக்கனி ஒளிந்திருப்பது போல... என் சின்ன இதயத்தில் பேரழகனாக ஒளிந்திருப்பது நீ தானேடா... கருவை சுமக்கும் போது பெண் சுகமான வலியாக சுமப்பாள் என்றார்கள்... நானோ உன் கருவை சுமக்காமலே சுகமாக சுமக்கிறேன் உன்னை... ஏக்கத்தோடு அன்று உனக்காக காத்திருந்ததிற்கும்... கண்ணீரோடு இன்று காத்திருப்பதற்கும் சிறு வித்தியாசம்தான்... அன்று எனக்காக நீ இருந்தாய், இன்றும் இருக்கிறாய் ஆனால் விலகி... என்றும் உனக்காக நான் இருக்கிறேன்... மறந்துவிடாத காதலை என்னி என்னுடன் நீ வரும் நாளுக்காய் கண்ணீருடன் காத்திருக்கிறேன்..... மறந்துவிடதே காதலை.... மறந்து போல என்னையும்....... October 07, 2025, 10:15:25 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-060
ஆண் பிள்ளையோ அழுவானோ எனில் — அவனும் மனதின் ஆழத்தில் ஒரு குழந்தைதான் அல்லவா? அவனின் முகத்தில் கல்லாய் தோன்றும் அமைதி, அதன் அடியில் ஒலிக்கும் நிசப்தக் கண்ணீர். அவனோ சிரிக்கச் செய்வான்— ஆனால் அவனின் சிரிப்பு, வலி மறைக்கும் முகமூடி மட்டுமே. அடர்ந்த தாடியினுள், மீசையின் மடல்களில், அன்பு கேட்கும் குழந்தை இதயம். அவன் “பரவாயில்லை” என்று சொல்வான் — ஆனால் அந்த சொல்லுக்குள் தாங்கும் சத்தம் யாருக்கும் கேட்காது. அவனின் தோளில் சுமை நிறைய, அவனின் கைகளில் வலிமை நிறைய, ஆனால் அந்த வலிமையினுள் கூட ஒரு தளர்ந்த சுவாசம் இருக்கிறது. அவன் அழுவான் — யாரும் பார்க்காத போது மட்டுமே. அவனின் கண்ணீருக்கு சாட்சி — சுவர், நிழல், அல்லது அவனின் சொந்த இதயம். ஆண் பிள்ளையோ அழுவானோ? ஆம் — அவன் அழுவான். ஆனால் அவன் கண்ணீர், வெளி விழும் மழை அல்ல; உள்ளம் தழுவும் மௌனம். October 07, 2025, 11:41:50 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-060
முகதிரை கொண்ட என் கண்மணியே என்னவளை நான் கண்டுகொண்டேன் சிரித்த முகக்தின் பின்னே சிதறிய இதயம் .. அன்பான அவளிடம் நான் பேசும்முன்னே அவளின் மழலை பருவத்தின் இரணங்களறியேன்... கல்லும் கசிந்துருகும் என் அன்பானவளின் அரவணைப்பில் .... ஆனாலும் அவளறியால் பெற்றவரின் உடன்பிறந்தோரின் அரவணைப்பு.. உருண்டு ஓடும் நாட்களில் உலகின் வேகத்தில் அவள் பலரை கடந்தாலும் உதட்டோர புன்சிரிப்பில் மூடி மறைத்தால் மனம் கொண்ட வலிகளை... ஆனாலும் அவள் யாருக்கும் மறுக்கவில்லை அன்பைகொடுப்பதில்.. நான் சிரிக்க மறந்தாலும் என்னை சிரிக்க வைப்பாள்.. கவலையில் மூழ்கி போனால் என்னை மீட்டெடுப்பால் தாய்போல என்னவளின் இனிய இயல்பதுவாம்... நான் கோவத்தில் இருந்தாலும் அவள் வெறுப்பை உமிழ்ந்ததில்லை... மழைக்காலம் வெயிலை அறியுமோ...? அவளின் சிறு பிராயமுதல் அவளுணர்ந்த வெறுப்பும் மறுப்பும் கரைகாணயியலாது...! நண்பர்கள் உறவினர்கள் அறியாத அவளின் மறுமுகம் நான் கண்டுகொண்டேன் .. என்னவளோ அத்தருணமுதல் என் சேயாகி போனல்.. சிலநேரம் குறும்புக்காரி சிலநேரம் கோவக்காரி சிலநேரம் வழிகாட்டி சிலநேரம் கண்டிப்பான அன்னை சிலநேரம் தோழியாக சிலநேரம் துணையாக எவ்வாறு இருப்பினும் என்னவள் என்னிடத்தில் சிறந்தவளே... அவள்காட்டாத அம்முகத்தின் அனைத்திலும் நான் இருந்து அன்பினில் திளைத்திடச்செய்வேன்.. இவ்வுலகில் அவளின் மறுமுகம் மகிழ்ச்சியில் இருக்க இறைவனை வேண்டுவேன்.. இவ்வுலகமும் இவ்வுலகின் நேரமும் காணாது, காணாது...... அவளின் ஆயுட்காலம் கடந்த பின்பும் நித்திய ஆன்மாவாக அவளை அரவணைத்து கொள்வேன் என்றும் என்னுடன்..... (P˛) October 07, 2025, 11:05:57 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-060
சிறுவயதில் சிங்கம், புலி, கரடி, குரங்கு, முயல் என அழகழகாய் முகமூடிகள் அம்மாவிடம் கெஞ்சிக்கூத்தாடி வாங்கிய ஞாபகம் இருக்கிறது. இப்போது வளர்ந்துவிட்டேன்; சந்தோசமாய் இருப்பதாய் காட்டிக்கொள்ளத்தான் முகமூடி தேவைப்படுகிறது. உலக மேடையின் திரைச்சீலை மெல்லத்திறக்கிறது. என் பாத்திரத்தின் பணி எவரோ கைப்பொம்மையாக இயங்கத்தொடங்குகின்றது. வெளுக்கப்பட்ட முகத்தோடும் வரையப்பட்ட சிரிப்போடும் பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டிய பாவி நான். ஒப்பனைக்குள் ஓர் முகம் உண்டு, உண்மையான உணர்வுண்டு, கதைக்கு அது தேவையில்லையென்று ஒதுக்கி இயக்குகின்றார்கள். சிரிக்கிறேன். சுற்றியும் பலர் முகமூடியோடு திரிகிறார்கள். சகமனிதர் உணர்வுகள் புரியாமல் நடக்கும் மனித முகமூடியிட்ட மிருகங்கள் சிலர் நயவஞ்சக நாவொடும், செயலோடும் நல்லவர் என முகமூடியிட்டு சிலர்; தோளோடு தோள் நின்று தோழமை முகமூடியோடு துரோகிகள் சிலர், மனித முகமூடிகள் நடுவே மனிதர்களை தேடி நான். உண்மையாய் யாரும் அன்பு காட்ட மாட்டார்களா என ஏங்கி பரிவு காட்ட மாட்டார்களா என தேங்கி நடக்கும் நாடகத்தை வெளி நின்று பார்ப்பதா? உள்நின்று பார்ப்பதா எனக் குழம்பி நிற்கிறேன். மண்ணினுள் போய் முடியும் கதைக்கு மண் மேல் எத்தனை போட்டிகள், பொறாமைகள். இருக்கும் சிறு காலத்தையேனும் மனிதத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழ்ந்து விட முடியாதா? கைகள் நடுங்குகின்றன. இரும்புக்கவசத்தின் தொடுதல் நீங்கி அன்போடு என்னைத்தொட யாருமில்லையா என மனம் வெதும்புகின்றது. எனை மூடிய கவசத்தை கழட்டி விட ஏங்குகிறேன் - இருந்தும் வேசத்திற்குள் இருந்து வெளிவர மனம் ஏனோ பயப்படுகிறது. என் மேல் கட்டமைக்கப்பட்ட விம்பம் என்னைப்பார்த்து சிரிக்கிறது. உண்மைக்கு பெறுமதி இல்லை எனச்சொல்லி சிரிக்கிறது? இத்தனை கஸ்டங்களோடும் கடவுளை இறைஞ்சி என்னைப்போல் எத்தனை உயிர் மன்றாடி மாண்டிருக்கும்? அவனும் கடவுள் என முகமூடியிட்ட கயவன் போலும். October 08, 2025, 04:27:45 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-060
அவள் புன்னகையின் பின்னால் 🌸 முகத்தில் புன்னகை மலர்கிறது, உலகம் அதை ஏற்றுக்கொள்கிறது. அவள் சிரிக்கிறாள், அவள் கண்கள் ஜொலிக்கின்றன, ஆனால் யாரும் கேட்கவில்லை அவள் அழுகையை. அந்த புன்னகையின் பின்னால் மறைந்திருக்கும், உறங்காத இரவுகள், சொல்லாத வேதனைகள். போதாதவளாக உணரும் அச்சமும், இழந்த அன்பின் எரியும் நெஞ்சமும். மனதை உடைத்தவர்கள், ஆன்மாவை காயப்படுத்தினர், அவள் அமைதியில் அனைத்தையும் மறைத்தாள். முகமூடி அணிந்து அமைதியாக, “எனக்கு பரவாயில்லை” என்று நடித்தாள். அவள் கண்கள் மட்டும் உண்மை சொன்னது, மௌனத்தில் இரத்தம் வடிந்தது. உலகம் பார்க்கும் புன்னகை மாயை, உள்ளம் மட்டும் தாங்கும் காயம். உலகம் நேசிக்கும் வெளிச்ச முகங்கள், உடைந்த உள்ளங்கள் யாரும் காண்பதில்லை. அதனால் அவள் தினமும் சிரிக்கிறாள், தன் துயரை மௌனத்தில் மறைக்கிறாள். அவள் முகமூடி பொய்யல்ல, அது அவளின் தற்காப்புக் கவசம். குளிர்ந்த கனவுகள், மங்கிய நேசம், அவற்றின் நிழலில் அவள் வாழ்கிறாள். ஒவ்வொரு விடியலும், புதிய சிரிப்பை தீட்டுகிறாள், உண்மையை மறைத்து, வாழ்வை தாங்குகிறாள். உலகம் அவள் துன்பம் காணவில்லை, ஆனால் அவள் இன்னும் நிமிர்ந்து நிற்கிறாள். காயப்பட்டும், அவள் ஒளி தாங்குகிறாள், மௌனத்தில் ஒரு சக்தி உருவாகிறது. ஒருநாளும் அவளுக்கு முகமூடி தேவையில்லை, அவள் புன்னகை உண்மையாக மலரும் நாளில் — அவள் இதயம் மீண்டும் மலரும், அவள் ஆன்மா சிறகை விரிக்கும் October 08, 2025, 07:52:25 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-060
English version I wear a smile, bright and wide, To hide the storm I keep inside. The world sees laughter, soft and sweet, But never hears my heart’s retreat. Behind these eyes, the silence cries, Echoes of pain the light denies. I speak in jokes, I dance, I sing, Yet grief still clings a ghostly wing. Each tear I shed is veiled by grace, A painted joy upon my face. They think I’m strong, they call me kind, But they don’t see what haunts my mind. If only someone looked more deep, Past the mask my soul must keep, They’d find a heart both torn and true, Still hoping love will see it through. Until that day, I’ll play my part Perhaps the masks are what we need, To guard the wounds that softly bleed. For every soul must learn to cope, With pain disguised, yet fed by hope🌏💫❤️😊 Tamil version முகமூடி நகை மலர்த்தேன் முகமெனும் மேடையில், உள்ளம் புயலால் உலுக்கும் வேளையில். உலகம் சிரிப்பை கேட்டிடும் இனிமையால், இதயம் ஓய்வை அறியாது — நிசப்தமாய் துயிலும் துயரத்தில். கண் கடலில் ஒளிந்திருக்கும் மௌனமோ, ஒளி மறைக்கும் வேதனை ஓசையோ. நகை பேசுவேன், நடனம் ஆடுவேன், பாடுவேன், ஆனாலும் துயரம் நிழலென என்னைச் சுற்றிவரும். ஒவ்வோர் கண்ணீரும் அருளின் ஆடை போர்த்தி, முகத்தில் வரையப்பட்ட மகிழ்ச்சி போலிருக்கும். அவர்கள் சொல்வர் — “வலிமையான், கருணையான்” என, ஆனால் என் மனம் தாங்கும் பீடம் யாரும் அறியார். யாரேனும் ஆழ்ந்து பார்ப்பாராயின், ஆத்மா மறைக்கும் முகமூடியைத் தாண்டி, காயம் பெற்றும் நேர்மையான இதயமொன்றைக் காண்பர், அன்பு வந்து ஆற்றிடும் நாளை ஏங்கும் அது. அந்த நாள் வரும்வரை, என் வேடமாடுவேன், வெளிச்சம் பாயும் மேடையில், நிழல் எனக்குள் நிமிரும். ஏனோ, இம்முகமூடிகளே நமக்கு ஆவசியம்— மெதுவாய் ரத்தமூறும் காயங்களை காக்க. ஒவ்வோர் உயிரும் கற்றிடவேண்டும் தாங்கும் கலையை, வலி மறைந்தும், நம்பிக்கையால் உயிர்க்கும் நெஞ்சுடன். 🌍✨ Thank you 🙏 to translator October 09, 2025, 04:22:09 pm |
1 |
|
Happy Birthday Vedhika
GLOBAL TAMIL CHAT Team Conveys Birthday (10 Dec 2025) Wishes To Our Lovable Friend VEDHIKA Wishes Her All The Very Best & Good Luck👍 December 10, 2025, 06:58:24 am |
1 |