யாருமற்ற இருண்ட அறையில் துவண்டு கிடக்கும் சூரியன் நான் !
இருள் சூழ்ந்த அறையில் ஒளிராமல் ஓய்ந்து ஒளிர்த்துக் கொள்ளும் ஒளிப் பந்து நான் !
இருளையே எரித்துவிடும் ஒளிப்பிழம்பு நானென்று தெரியாமல் இருண்ட அறையின் நடுவே அமர்ந்து இருக்கும் அக்னி தேவன் நான் !
எனக்கு நானே ஒளியாக இருந்த போதிலும் எகிரி குதிக்க வழி தேடியே பல நேரங்களில் இருண்டு போகிறேன் நான் !
என்னால் அறை முழுவதும் வெளிச்சமாகிய போதும் எனக்கு நானே இருளாகிப் போகிறேன் இங்கே !
வழித்தேடி விழி துவண்ட போதே இருண்ட அறையில் இருந்து என் ஒளிக் கதிர்கள் பாய்ந்து வெளிச் செல்ல பூட்டின் சிறுவழி இடம் தரவே இங்கு ஒளிரும் சாவியாகவே நான் !
|