1959
« on: August 24, 2022, 02:00:00 pm »
கவிதையா?
எனக்கு எழுத தெரியாதே என்று நான் சொன்னேன்....
முயற்சி செய்யலாமே என்று என்னவன் சொன்னான்....
நான் முயற்சி செய்தேன் எண்ணம்படி....
எழுதியது என் பேனா உள்ளபடி....
நீ என் கரம் பிடித்த பின்....
என் மஞ்சள் முகத்தை தொட்டு பார்த்தேன்..
என் நெற்றியை குங்கும் சொந்தம் கொண்டாடியது....
மெட்டி என் கால் விரல்களை
பற்றிக்கொண்டது....
மாங்கல்யம் என் நெஞ்சில்
குடியேறியது....
கண்ணாடி வளையல் கைகளில் முத்தமிட..
நாணனத்தில் கால் கொலுசு
சத்தமிட....
மலர்கள் தூவி வரவேற்க
சொந்தங்கள் நம்மை ஆசிர்வதிக்க...
அன்று நான் .... இன்று நாம்....
மொத்ததில்...
திருமணம் நம் வாழ்க்கையில் நறுமணம்..
ஒரு கணம் கூட விலகாமல் இருபது ஒரு வரம்....
எழுதி விட்டேன் என்று சொல்ல என் பேனா....
நன்றி சொல்லி விடைப்பெற்றேன் ஒரு
பெண்ணா....