Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-042 *கருமேக கூரையில்...
இளைப்பாறிடும்
வெண்மதி வெளிச்சத்தில்...
கோர்த்திட்ட கைகள் வேர்த்திட...
எதை காட்ட இந்த
நடை பயணமடா!!!!
*அலை அலையாய்
அலைந்தேன்
உன் இதய கரை
தொட்டிடவே
என காட்டிடவா????
*பகலின் வெம்மையை
மறக்கச் செய்யும்
இரவின் மென்குளிர்
நீயடி
என காட்டிடவா????
*நீள ஆள அகலம்
அற்ற என் காதலும்
இக்கடல் போன்றதே
என காட்டிடவா????
தெரியவில்லையடா....
*கனவுகளை நிறைத்திட்ட
இதயத்தோடும்....
*வார்த்தைகளை கசியவிடும்
கண்களோடும்....
*மௌன மொழி பேசிடும்
இதழ்களோடும்...
*நமக்கான இக்குளிர் இரவில்
வேண்டுவதெல்லாம்
ஒன்றே தான்....
*நொடிகளை விழுங்கி
விடிய காத்திருக்கும்
இவ்விரவு
விடியாமல் நீளட்டும்.....

May 08, 2024, 01:14:20 pm
4