See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: கவிதையும் கானமும்-042
*கருமேக கூரையில்... இளைப்பாறிடும் வெண்மதி வெளிச்சத்தில்... கோர்த்திட்ட கைகள் வேர்த்திட... எதை காட்ட இந்த நடை பயணமடா!!!! *அலை அலையாய் அலைந்தேன் உன் இதய கரை தொட்டிடவே என காட்டிடவா? *பகலின் வெம்மையை மறக்கச் செய்யும் இரவின் மென்குளிர் நீயடி என காட்டிடவா? *நீள ஆள அகலம் அற்ற என் காதலும் இக்கடல் போன்றதே என காட்டிடவா? தெரியவில்லையடா.... *கனவுகளை நிறைத்திட்ட இதயத்தோடும்.... *வார்த்தைகளை கசியவிடும் கண்களோடும்.... *மௌன மொழி பேசிடும் இதழ்களோடும்... *நமக்கான இக்குளிர் இரவில் வேண்டுவதெல்லாம் ஒன்றே தான்.... *நொடிகளை விழுங்கி விடிய காத்திருக்கும் இவ்விரவு விடியாமல் நீளட்டும்..... May 08, 2024, 01:14:20 pm |
4 |