Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-071  (Read 297 times)

July 13, 2026, 06:26:46 pm
Read 297 times

RiJiA

கவிதையும் கானமும்-071
« on: July 13, 2026, 06:26:46 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-071


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.






மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: July 13, 2026, 07:35:13 pm by RiJiA »

July 14, 2026, 12:55:56 am
Reply #1

Mansi

Re: கவிதையும் கானமும்-071
« Reply #1 on: July 14, 2026, 12:55:56 am »
En Ammama 💖

“Enda pillai… etthanai dharam sonnen? Kekka maatiya?”
Nu solli kaalaila ennai ezhuppuva…

“Mudhala poi mugam kazhuvu… unakku pidicha juice ready pannirukken. Vaa da, kudichidu.”
Nu glassaaa kaiyila kuduthu, naan kudikkura varaikkum pakkathula ninnu paathuttu iruppa.

“Mudhala saapidu da… appuram phone-um velaiyum paaru.”
Nu solli, enakku pidicha saapadu samaichu kaiyala oottuva.

“Saapadu thattu la onnum micham veikkaadha da… ovvoru soru parukkum kadavuloda aasirvaadham.”

“Paathu po da… vizhundhidaadha.”
Naan veettai vittu veliya pona odane, un kannu vaasalai dhaan paathukkittu irukkum.

“Suththi suththi odadha… kai kaal odanjidum.”
Nu thittinalum, andha vaarthai ellam paasathoda dhaan.

“Road cross pannumbodhu rendu pakkamum paathu po da.”

“Kulir la veliya nikkadha… udambu kettudum.”

“Mazhai la nanaiyaadha… kaichchal vandhaa kashtapaduve.”

“Ivlo neram enga poitta? Oru phone pannalaama? Naan bayandhu poitten da!”

“Iravu neram thaniya veliya suththaadha.”

“Thanni kudichiya? Naal muzhuvadhum veliya suththittu irukka.”

“Ozhunga thoongu da… raathiri late-a irukkaadha.”

“Kurumbu pannadha… nee innum enakku chinna pillai dhaan.”

Appo indha vaarthaigal ellam enakku verum thittal maadhiri therinjadhu…

Aana ippo dhaan puriyudhu…

Ovvoru thittalukkulla oru bayam irundhadhu…

“En pillaikku onnum aaga koodaadhu.”

Ovvoru kovathukkulla oru paasam irundhadhu…

“En pillai santhoshama irukkanum.”

Enakku udambu sari illa naal…

Nee en pakkathula irundhu,
“Konjam juice-aavadhu kudida da… appuram thembu varum.”
Nu solli, naan kudikkura varaikkum nagara maatta.

Naanga sirichaa…
Nee adhigama sirippa.

Naanga azhudhaa…
Nee adhigama kavalaipaduva.

Naanga santhoshama irukkanum nu dhaan…
Nee un vaazhkai muzhuvadhum vaazhntha.

Oru naal…

Naanum en annavum serndhu un kitta kettom…

“Ammama… ungalukku enna aasai?”

Nee romba amaidhiyaga sirichuttu sonne…

“Enakku oru thadava India poga aasai da…”

Andha oru vaarthai…

Enga rendu peroda manasula nindru pochu.

Andha nimishathula dhaan…

Naanum en annavum mudivu pannittom…

Indha birthday-ku un aasaiyai nijamaakkanum.

Unakku theriyama…

Ellaa yerpaadum pannittu irukkom.

Un birthdayku…

Unnai surprisea India kootittu porom. 🇮🇳❤️

Un mugathula varum andha sirippu…

Un kannula varum santhosha kanneer…

Adha paakkuradhukkaaga dhaan…

Indha surprise.

Ammama…

Nee engalukku Ammama mattum illa…

Nee enga amma…

Nee enga appa…

Nee enga nanban…

Nee enga ulagam.

Un anbu alakka mudiyadhu…

Un thittal marakka mudiyadhu…

Un sirippu engaloda balam…

Nee eppavum ippadiye sirichitte, aarokkiyama, santhoshama irukkanum.

Naanga rendu perum unnai vaarthaigalal solla mudiyadha alavukku nesikkrom. Indha India payanam un kanavu mattum illa… enga anbin sirandha parisum.

Thank you kg team yalpanam tamil padinga if you can my dear host ….

Written by Mansi



Tamil version

💖 என் அம்மம்மா 💖

“என்டா என் பிள்ளை… எத்தனை தரம் சொன்னேன்? கேக்க மாட்டியா?”
என்று சொல்லி காலையில் என்னை எழுப்புவாய்…

“முதல்ல போய் முகம் கழுவு டா என் பிள்ளை… உனக்கு பிடிச்ச ஜூஸ் ரெடி பண்ணி வச்சிருக்கேன். வா குடிச்சிடு.”
என்று கிளாஸை கையில் கொடுத்து, நான் குடிக்கிற வரைக்கும் பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருப்பாய்.

“முதல்ல சாப்பிடு டா என் பிள்ளை… அப்புறம் போன், வேலை எல்லாம் பாரு.”
என்று சொல்லி, எனக்கு பிடிச்ச சாப்பாட்டை சமைத்து கையால் ஊட்டுவாய்.

“சாப்பாடு தட்டுல எதுவும் மிச்சம் வைக்காத டா என் பிள்ளை… ஒவ்வொரு சோறு பருக்கையும் கடவுளோட ஆசீர்வாதம்.”

“பாத்து போ டா என் பிள்ளை… விழுந்திடாத.”
நான் வீட்டை விட்டு வெளியே போன உடனே, உன் கண்கள் வாசலையே பார்த்துக்கொண்டிருக்கும்.

“சுத்தி சுத்தி ஓடாத டா என் பிள்ளை… கை கால் உடைஞ்சிடும்.”
என்று திட்டினாலும், அந்த வார்த்தைகளுக்குள்ளே முழுக்க முழுக்க பாசம் தான் இருக்கும்.

“ரோடு கிராஸ் பண்ணும்போது ரெண்டு பக்கமும் பார்த்து போ டா என் பிள்ளை.”

“குளிர்ல வெளியே நிக்காத டா என் பிள்ளை… உடம்பு கெட்டுடும்.”

“மழையில நனையாத டா என் பிள்ளை… காய்ச்சல் வந்தா கஷ்டப்படுவ.”

“இவ்வளவு நேரம் எங்க போயிருந்த டா என் பிள்ளை? ஒரு போன் பண்ணலாம்ல… நான் பயந்துட்டேன்.”

“இரவு நேரம் தனியா வெளியே சுத்தாத டா என் பிள்ளை.”

“தண்ணி குடிச்சியா டா என் பிள்ளை? நாள் முழுக்க வெளியே சுத்திட்டு இருக்க.”

“ஒழுங்கா தூங்கு டா என் பிள்ளை… ராத்திரி லேட்டா இருக்காத.”

“குறும்பு பண்ணாத டா என் பிள்ளை… நீ எவ்வளவு பெரியவனா ஆனாலும், எனக்கு நீ இன்னும் சின்ன பிள்ளை தான்.”

அப்போ இந்த வார்த்தைகள் எல்லாம் எனக்கு வெறும் திட்டல் மாதிரி தான் தெரிந்தது…

ஆனா இப்போதான் புரிகிறது…

ஒவ்வொரு திட்டலுக்குள்ளும் ஒரு பயம் இருந்தது…

“என் பிள்ளைக்கு எதுவும் ஆகக்கூடாது.”

ஒவ்வொரு கோபத்துக்குள்ளும் ஒரு அன்பு இருந்தது…

“என் பிள்ளை எப்போதும் சந்தோஷமா இருக்கணும்.”

எனக்கு உடம்பு சரியில்லாத நாட்களில்…

நீ என் பக்கத்துல இருந்து,

“கொஞ்சமாவது ஜூஸ் குடிடா என் பிள்ளை… அப்புறம் தெம்பு வரும்.”

என்று சொல்லி, நான் குடிக்கிற வரைக்கும் நகராமல் இருப்பாய்.

நாங்க சிரிச்சா…

நீ எங்களைவிட அதிகமா சிரிப்பாய்.

நாங்க அழுதா…

எங்களைவிட அதிகமா கவலைப்படுவாய்.

“என் பிள்ளைகள் சந்தோஷமா இருக்கணும்…”

என்ற ஒரே ஆசையோட தான் நீ உன் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்தாய்.

ஒரு நாள்…

நானும் என் அண்ணாவும் சேர்ந்து உன்னிடம் கேட்டோம்…

“அம்மம்மா… உங்களுக்கு என்ன ஆசை?”

நீ அமைதியாக சிரித்துக்கொண்டே சொன்னாய்…

“எனக்கு ஒரு தடவை இந்தியா போக ஆசை டா…”

அந்த ஒரு வார்த்தை…

எங்கள் இரண்டு பேரின் மனசிலும் ஆழமாக பதிந்துவிட்டது.

அந்த நிமிஷத்திலேயே…

நானும் என் அண்ணாவும் முடிவு செய்தோம்…

இந்த பிறந்தநாளுக்கு எங்கள் அம்மம்மாவின் ஆசையை நிஜமாக்கணும்.

உனக்கு தெரியாமல்…

எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.

உன் பிறந்தநாளுக்கு…

உன்னை சர்ப்ரைஸா இந்தியா கூட்டிட்டு போறோம். 🇮🇳❤️

உன் முகத்தில் வரும் அந்த சிரிப்பு…

உன் கண்களில் வரும் அந்த சந்தோஷ கண்ணீர்…

அதை பார்ப்பதற்காகத்தான்…

இந்த சர்ப்ரைஸ்.

அம்மம்மா…

நீ எங்களுக்கு அம்மம்மா மட்டும் இல்லை…

நீ எங்களுக்கு அம்மா…

நீ எங்களுக்கு அப்பா…

நீ எங்களுக்கு நண்பன்…

நீ தான் எங்கள் உலகம்.

உன் அன்பை அளக்க முடியாது…

உன் திட்டலை மறக்க முடியாது…

“என் பிள்ளை…” என்று நீ கூப்பிடும் அந்த ஒரு வார்த்தை… எங்கள் வாழ்க்கையின் அழகான நினைவு.

உன் சிரிப்பு எங்களோட பலம்…

நீ எப்போதும் இப்படியே சிரித்துக்கொண்டு, ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்கணும்.

நாங்க ரெண்டு பேரும் உன் பிள்ளைகள் தான்… எத்தனை வயசானாலும்.

நாங்க ரெண்டு பேரும் உன்னை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நேசிக்கிறோம்.

இந்த இந்தியா பயணம் உன் கனவு மட்டும் இல்லை… உன் இரண்டு பிள்ளைகளின் இதயத்திலிருந்து வரும் அன்பின் மிகப்பெரிய பரிசு. ❤️

Hope Tamil version sound the same thank you
Mansi
« Last Edit: July 14, 2026, 01:26:18 am by Mansi »

July 14, 2026, 01:13:22 am
Reply #2

ChuttiGurl

Re: கவிதையும் கானமும்-071
« Reply #2 on: July 14, 2026, 01:13:22 am »
இந்தக் கவிதையை என் அம்மாவுக்கும், என் அம்மம்மாவுக்கும் (உங்களை மிகவும் நினைக்கிறேன் ❤️), மேலும் இந்த உலகிலுள்ள அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
உங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை. நீங்கள் தான் எங்கள் பலம், எங்கள் அன்பு, எங்கள் வாழ்க்கை. ❤️🌹


❤️ அம்மா ❤️
உயிரின் முதல் துடிப்பு நீ,
உலகின் முதல் அன்பும் நீ.
என் சிரிப்பின் காரணம் நீ,
என் கண்ணீரின் ஆறுதலும் நீ.
விழுந்த போதெல்லாம் கை கொடுத்தாய்,
தோற்ற போதெல்லாம் தைரியம் தந்தாய்.
என் கனவுகளுக்காக உன் கனவுகளை மறந்தாய்,
என் மகிழ்ச்சிக்காக உன் வாழ்க்கையை அர்ப்பணித்தாய்.
உன் அன்புக்கு எல்லை இல்லை,
உன் தியாகத்திற்கு ஈடு இல்லை.
இந்த உலகத்தை முழுவதும் தேடினாலும்,
உன்னைப் போல ஒரு அன்பு கிடைக்காது.
அம்மா...
நீ என் வாழ்க்கையின் வரம்,
என் இதயத்தின் என்றும் அணையாத தீபம்.
உன்னை என்றும் நேசிப்பேன், மதிப்பேன்,
என் மூச்சு இருக்கும் வரை.
என்றும் என் இதயத்தின் ராணி நீதான்.
"அம்மா" என்ற ஒரு வார்த்தையில்,
ஆயிரம் காதல்களும் அடங்கியிருக்கும்.
அவள் சிரிப்பில் என் சந்தோஷம்,
அவள் கண்ணீரில் என் வேதனை.
பசியில் சாப்பாடு கொடுப்பவள்,
பயத்தில் தைரியம் தருபவள்.
தோல்வியில் நம்பிக்கை விதைப்பவள்,
வெற்றியில் சிரித்து மகிழ்பவள்.
என் வலியைச் சொல்லாமல் புரிந்துகொள்வவள்,
என் மௌனத்தை வார்த்தையில்லாமல் கேட்பவள்.
நான் சிரிக்க அவள் வாழ்க்கையையே செலவிட்டவள்,
இந்த உலகத்தின் மிகப்பெரிய தெய்வம் – அம்மா.
அவள் கை பிடித்து நடந்த நாட்கள்,
என் வாழ்க்கையின் அழகான நினைவுகள்.
அவள் ஆசீர்வாதம் இருக்கும் வரை,
எந்த புயலும் என்னை சாய்க்க முடியாது.
அம்மா...
உன்னைப் பற்றி எழுத வார்த்தைகள் போதாது,
உன் அன்பை அளக்க இந்த உலகமே போதாது.
நான் பிறப்பதற்கு முன்பே என்னை நேசித்தவள் நீ,
நான் சிரிப்பதற்காக ஆயிரம் முறை அழுதவள் நீ.
அம்மா...
என் பசியை உணர்ந்து உணவளித்தவள்,
என் வலியை உணர்ந்து கண்ணீர் சிந்தியவள்.
நான் தோற்றபோது நம்பிக்கையாய் நின்றவள்,
நான் வென்றபோது என்னைவிட மகிழ்ந்தவள்.
என் வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றிக்கும்,
பின்னால் இருக்கும் அமைதியான சக்தி நீ.
என் ஒவ்வொரு அடியிலும்,
என்னை வழிநடத்தும் ஒளி நீ.
அம்மா...
உன் அன்பு கடல் போல ஆழமானது,
உன் பாசம் வானம் போல எல்லையில்லாதது.
என் உயிர் இருக்கும் வரை,
உன்னை நேசிப்பேன்... என்றும், என்றென்றும். ❤️
❤️ லவ் யூ அம்மா... ❤️
« Last Edit: July 14, 2026, 01:08:17 pm by ChuttiGurl »
🤓Nan ungal chutti🤓

July 14, 2026, 01:47:30 am
Reply #3

AzhaGi

Re: கவிதையும் கானமும்-071
« Reply #3 on: July 14, 2026, 01:47:30 am »
அம்மாவும் நானும்...

அம்மா,
நீ என்னை கருவில் சுமந்த நொடி முதல் அணைத்துக் கொண்டாய்,
நான் உன்னை உன் இறுதி மூச்சு வரை அணைத்துக் கொண்டேன்...

நான் ஒரு துளி உயிராய் உருவான நொடியிலிருந்து,
அவள் தனக்காக வாழ்வதை நிறுத்தி விட்டாள்,
எனக்காக மட்டும் வாழத் தொடங்கினாள்.
என் ஒவ்வொரு இதயத் துடிப்பிற்கும்,
அவளின் ஆயிரம் வலிகள் துணையாக இருந்தன...

பத்து மாதங்கள்…
தன் உயிரையே பணயம் வைத்து,
என்னை பொக்கிஷமாக சுமந்தாள்.
நான் சிரிக்க வேண்டும் என்பதற்காக,
அவள் எத்தனை முறை அழுதாளோ
அதை யாரும் அறிந்ததில்லை...

என்னை கையில் ஏந்திய நாள் முதல்,
நானே அவளின் உலகமானேன்,
அவளையே அவள் மறந்தாள்.
எனக்காக இரவுகள் முழுவதும் விழித்தாள்.
எனக்காக பசியோடு உறங்கினாள்,
எனக்காக கண்ணீரை மறைத்து சிரித்தாள்,
தனக்குத் தெரியாத உலகத்தையும் கற்றுக்கொண்டாள்,
எனக்குத் தெரிந்த உலகமாக மாற்றிக் கொடுத்தாள்...

“என் மகள் உயர வேண்டும்”
என்ற ஒரே கனவுக்காக,
தன் இளமையையே தியாகம் செய்தாள்,
தன் ஆசைகளை அடக்கம் செய்தாள்,
என் ஆசைகளை உயிராக வளர்த்தாள்.
நான் தோற்ற ஒவ்வொரு முறையும்,
என்னை விட அதிகமாக உடைந்து போனவள் அவள்.
நான் வென்ற ஒவ்வொரு நாளிலும்,
என்னை விட அதிகமாக மகிழ்ந்தவள் அவள்...

நிம்மதி தேடி,
பல முறை அவள் தோளில் சாய்ந்திருக்கிறேன்.
என் கதைகள் அனைத்தையும்,
சலிக்காமல் கேட்ட ஒரே உயிர் அவள் தான்,
என் அம்மா...

என் கண்ணீரின் மொழியை,
வார்த்தையில்லாமல் புரிந்த ஒரே இதயம்,
அம்மாவின் இதயம்...

நான் வாழ்வில் உயர வேண்டும் என்று,
தினமும் இறைவனிடம் வேண்டியவள் அவள்.
இன்று,
நான் உயர்ந்த இடத்தில் நிற்கிறேன்.
ஆனால்,
என்னை அந்த உயரத்திற்கு கொண்டு வந்த அவள்,
என்னை விட்டு உயர்ந்த உலகத்திற்குச் சென்று விட்டாள்.

இப்போது,
அவள் மடியில் தலை வைத்து அழ வேண்டும் என்று தோன்றும்.
ஆனால்,
என் கண்ணீரை துடைக்க,
அவள் கைகள் இல்லை...
“அம்மா” என்று ஒருமுறை அழைக்க வேண்டும் என்று தோன்றும்.
ஆனால்,
அந்த அழைப்புக்கு பதில் சொல்ல,
அவள் குரல் இல்லை...

இன்று என்னிடம் பணம் இருக்கிறது,
புகழ் இருக்கிறது,
வாழ்க்கை இருக்கிறது.
ஆனால்,
அம்மா மட்டும் இல்லை...

அவளுடன் வாழ்ந்த ஒவ்வொரு நினைவும்,
என் இதயத்தில் என்றும் உயிரோடு இருக்கிறது.

சில இரவுகளில், வானத்தைப் பார்த்து பேசுகிறேன்.
“அம்மா… நீ கேட்கிறாயா?” என்று,
பதில் வருவதில்லை.
ஆனால்,
கண்ணீர் மட்டும் பதிலாக வருகிறது...

இறைவா,
எனக்கு இன்னொரு பிறவி கொடுத்தால்.
இந்த முறை,
அவள் என் அம்மாவாக வேண்டாம்,
நான் அவளுக்கு அம்மாவாகப் பிறக்க வேண்டும்...

அவள் செய்த ஒவ்வொரு தியாகத்திற்கும்,
அவள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும்,
அவள் இழந்த ஒவ்வொரு கனவிற்கும்,
நான் ஈடாக வாழ வேண்டும்.
அவளை என் உயிரைவிட மேலாக நேசிக்க வேண்டும்...

அவள் கடைசி மூச்சு வரை,
என் மடியில் சாய்ந்து,
சிரித்துக்கொண்டே வாழ வைக்க வேண்டும்.
ஏனென்றால்,
இந்த உலகத்தில்,
“அம்மாவின் அன்புக்கு ஈடாக எந்த அன்பும் இல்லை…”
“அம்மாவின் தியாகத்திற்கு ஈடாக எந்த தெய்வமும் இல்லை…”
“அம்மா உயிரோடு இருக்கும் வரை தான் நாம் குழந்தைகள்…”

அம்மா மறைந்த பிறகு,
வயது எவ்வளவு இருந்தாலும்,
நாம் அனாதைகள்தான்...

அம்மா,
நான் உன்னை என்று சுமப்பேனோ,
உன்னை என் இறுதி மூச்சு வரை அணைப்பேனோ...

I miss u Amma, I love u Amma...(Я люблю тебя, мама. Я очень по тебе скучаю.)

    இப்படிக்கு
    என்றென்றும் உங்கள் அழகி(MA)
« Last Edit: July 14, 2026, 03:09:48 am by AzhaGi »

July 14, 2026, 02:19:46 pm
Reply #4

Ladybugs

Re: கவிதையும் கானமும்-071
« Reply #4 on: July 14, 2026, 02:19:46 pm »
பாட்டி ❤️ என் முதல் வீடு 🫶🏻

சொர்க்கம் என்பது ஒரு இடம் இல்லை... நம்மைப் புரிந்துகொள்ளும் ஒரு மனிதரின் தோள்தான்.

இந்த உலகத்தில் பல உறவுகள் வந்து போகும்... சிலர் நம்முடன் சில நாட்கள் பயணிப்பார்கள்... சிலர் சில நினைவுகளை மட்டும் விட்டுவிட்டு பிரிந்து போவார்கள்...

ஆனால்... ஒரு உறவு மட்டும்... காலம் கடந்தாலும் மாறாது... அது பாட்டியின் அன்பு.

நான் பிறந்த நாள் முதல்... என் பெயரை விட, என் சிரிப்பை அதிகமாக நேசித்தவள் நீ...

அம்மா கோபப்பட்ட நேரத்தில்... என் பக்கம் நின்று, "சின்ன குழந்தை தானே..." என்று என்னைக் காப்பாற்றியது நீ...

அப்பா கண்டித்த நேரத்தில்... என் கண்ணீரைத் துடைத்து, "ஒரு நாள் நீ பெரிய ஆள் ஆவாய்..." என்று நம்பிக்கை கொடுத்தவளும் நீ...

உன் கை பிடித்து நடந்த அந்த சிறு வயது... இன்றும் என் நெஞ்சில் அழியாத ஓவியம்...

உன் மடியில் படுத்து தூங்கிய இரவுகள்... இன்றும் எனக்கு சொர்க்கத்தை நினைவுபடுத்துகின்றன...

நீ சொன்ன கதை... நீ பாடிய தாலாட்டு... நீ கையால் ஊட்டி வைத்த சோறு... இவை எல்லாம் சாதாரண நினைவுகள் அல்ல... என் வாழ்க்கையின் அழகான பக்கங்கள்...

இன்று நான் வளர்ந்துவிட்டேன்... உன் முடி வெள்ளையாகிவிட்டது... உன் கைகள் நடுங்குகின்றன... உன் நடை மெதுவாகிவிட்டது...

ஆனால்... உன் அன்பு மட்டும்... முதல் நாள் இருந்ததை விட இன்னும் அதிகமாகவே இருக்கிறது...

சிறு வயதில்... நான் பயந்தால், நீ என்னை அணைத்து ஆறுதல் சொன்னாய்...

இன்று... நீ சோர்ந்தால்... உன் பக்கத்தில் உட்கார்ந்து, உன் கையைப் பிடிப்பது... என் கடமை...

காலம் நம் இருவரையும் மாற்றியிருக்கலாம்... ஆனால்... நம் உறவை மாற்ற முடியவில்லை...

இந்தப் படத்தில் நான் பார்ப்பது... ஒரு பாட்டியும் ஒரு பேத்தியும் மட்டும் அல்ல...

ஒரு வாழ்க்கையின் முழு பயணம்...

ஒரு கை... பிறந்த குழந்தையைத் தூக்கி வளர்த்தது...

அதே கையை... இன்று வளர்ந்த பேத்தி பிடித்து, "நீ தனியாக இல்லை..." என்று சொல்கிறது...

சில வார்த்தைகள் பேச வேண்டிய அவசியம் இல்லை...

சில உறவுகள்... மௌனத்திலேயே ஆயிரம் கதைகள் சொல்லிவிடும்...

இந்த அணைப்பு... "உனக்கு நான் இருக்கிறேன்..." என்ற உறுதி...

இந்த சாய்ந்த தோள்... "உன் கஷ்டம் என் கஷ்டம்..." என்ற பாசம்...

இந்த அமைதி... "இதுதான் வீடு..." என்ற உணர்வு...

நாளை... காலம் யாரையும் காத்திருக்காது...

ஒரு நாள்... இந்த பெஞ்ச் காலியாக இருக்கலாம்...

ஆனால்... அந்த இடத்தில் உட்கார்ந்த நினைவுகள்... அந்த சிரிப்புகள்... அந்த கதைகள்... அந்த கை பிடித்த சூடு...

என்றும்... இதயத்தில் வாழும்...

ஏனென்றால்...

பாட்டி என்பது ஒரு உறவு அல்ல...

அவள் ஒரு தாயின் மறு உருவம்...

அவள் ஒரு குடும்பத்தின் வேர்...

அவள் ஒரு வீட்டின் தெய்வம்...

அவள் இருக்கும் வரை நாம் குழந்தைகள்...

அவள் நினைவுகள் இருக்கும் வரை... அவள் நம்முடன்தான்...

"சில அன்புகளுக்கு முடிவு இல்லை...
பாட்டியின் அன்பு... அதில் முதல் இடம்." ❤️

July 14, 2026, 03:07:43 pm
Reply #5
Re: கவிதையும் கானமும்-071
« Reply #5 on: July 14, 2026, 03:07:43 pm »
Azhiyaatha Agaram - Amma

Annai yendra  agaramondril ,
Agilam muluvathum adangiyathey ,
ulagam uravena uraittapin
uyirin uravena irunthaval nee allava,

aruviyaai anbai polinthaval
amuthamaai uyiril kalanthaval,
thunbam thanakena taaanggiyaval,
inbam enakena eeenthaval.

naraittha koonthal naatkal uraikum
nadunggum karanggal thiyaagam uraikum,
sollaathu seitha seigai ellam ,
soll ondril adanggaaa kaaviyanggal.

veedu yendra solluku uyir thanthavaley , 
uravu endra solluku porul thanthavaley,
thaalaattu thantha tendraley ,
thaaanggum nizhalaai nindravaley,

kanneer sinthiyum sirikka katraai,
kaayaam taanggiyum kanivai vithaittai,
un anbuku alave illai \
un aravanaipuku inaiye illai,

kovil thedum theivam yetharkku ,
kodii theivam en thaayin uruvatthil







அழியாத அகரம் – அம்மா

அன்னை என்ற அகரமொன்றில்,
அகிலம் முழுவதும் அடங்கியதே.
உலகம் உறவென உரைத்தபின்,
உயிரின் உறவென இருந்தவள் நீ அல்லவா?

அருவியாய் அன்பைப் பொழிந்தவள்,
அமுதமாய் உயிரில் கலந்தவள்.
துன்பம் தனக்கெனத் தாங்கியவள்,
இன்பம் எனக்கென ஈந்தவள்.

நரைத்த கூந்தல் நாட்கள் உரைக்கும்,
நடுங்கும் கரங்கள் தியாகம் உரைக்கும்.
சொல்லாது செய்த செய்கை எல்லாம்,
சொல் ஒன்றில் அடங்கா காவியங்கள்.

வீடு என்ற சொல்லுக்கு உயிர் தந்தவளே,
உறவு என்ற சொல்லுக்கு பொருள் தந்தவளே.
தாலாட்டு தந்த தென்றலே,
தாங்கும் நிழலாய் நின்றவளே.

கண்ணீர் சிந்தியும் சிரிக்கக் கற்றாய்,
காயம் தாங்கியும் கனிவை விதைத்தாய்.
உன் அன்புக்கு அளவே இல்லை,
உன் அரவணைப்புக்கு இணையே இல்லை.

கோவில் தேடும் தெய்வம் எதற்கு,
கோடி தெய்வம் என் தாயின் உருவத்தில்.


« Last Edit: July 14, 2026, 03:11:46 pm by YaazhVeena »

July 14, 2026, 10:18:14 pm
Reply #6

MDU

Re: கவிதையும் கானமும்-071
« Reply #6 on: July 14, 2026, 10:18:14 pm »

அழகான கவிதைதான் அம்மா


அம்மாவின் கருவறையில் தொடங்கியது மகளின் வாழ்க்கை,
அவள் கைகளில் வளர்ந்தது ஓர் அழகான கவிதை.
மகள் சிரித்தால் அம்மாவின் உலகம் சிரிக்கும்,
மகள் அழுதால் அம்மாவின் இதயம் வலிக்கும்.

முதல் நடை பழக கை கொடுத்தவள் அம்மா,
வாழ்க்கைப் பாதை காட்டி வழிநடத்தியதும் அம்மா.
மகளின் கனவுகளைத் தன் கனவாய் சுமந்தாள்,
அவள் வெற்றிக்காகத் தினமும் மனதில் வேண்டினாள்.

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்,ஆறுதல் தரும் ஒரு தோள் போதும்…
காலம் நம்மை மாற்றலாம் வயது நம்மை வளைக்கலாம்.
ஆனால் கை கோர்த்த நம் அன்பை,
எந்தக் காலமும் பிரிக்க முடியாது.

அம்மா இளமையாக இருந்தபோது,
தன் மகளைப் பொத்திப் பொத்தி வளர்த்தாள்.
அவள் கால்கள் தடுமாறும் போதெல்லாம்,
கை கொடுப்பதோடு தன்னம்பிக்கையும் கொடுத்தாள்

“வாழ்க்கை என்றால். போராட்டம் மகளே,
விழுந்தாலும் எழுந்து நடக்கக் கற்றுக்கொள்” என்றாள்;
எத்தனை துன்பங்கள் வாசல் தேடி வந்தாலும்,
அதைத் தைரியமாய் சமாளிக்கச் சொல்லிக் கொடுத்தாள்.

மகளுக்கு வெறும் தாயாக மட்டும் இல்லாமல்,
மனம் திறந்து பேசும் தோழியாகவும் இருந்தாள்.
அவள் சொல்லும் ஒவ்வொரு கதையையும் கேட்டுத் திருத்தி,
அழகான சிற்பமாய் மகளைச் செதுக்கியவள் தாய்.

இன்று அம்மாவின் கூந்தலில் நரை பூத்தாலும்,
அவள் முகத்தில் காலத்தின் கோடுகள் தெரிந்தாலும்.
அம்மாவைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும்,
மகளின் மனதில் ஒரு புதிய சக்தி பிறக்கிறது.

வயது அம்மாவின் தோற்றத்தை மாற்றலாம்.
ஆனால் மகளுக்குள் வாழும் அவளின் தைரியத்தை மாற்ற முடியாது…
ஏனெனில் ஒவ்வொரு மகளின் உயர்வுக்குப் பின்னாலும்,
அவளைத் தலைநிமிரச் செய்த ஓர் “அம்மா” இருக்கிறாள்!

காலங்கள் ஓட மகளும் வளர்ந்துவிட்டாள்,
அம்மாவின் நரை முடியைக் கண்டு கண் கலங்கிவிட்டாள்.
ஒருநாள் அம்மா கொடுத்த தோளின் ஆறுதலை,
இன்று மகள் திருப்பிக் கொடுக்கிறாள் அன்பினாலே.

அம்மாவின் கையைப் பிடித்து மெதுவாய் நடக்கிறாள்,
அவள் சொன்ன பழைய கதைகளை மீண்டும் ரசிக்கிறாள்.
வயது அம்மாவின் உடலை மட்டும் மாற்றலாம்,
மகளின் அன்பை எந்தக் காலமும் மாற்ற முடியாது.

அன்று மகளுக்கு உலகமே அம்மாவாக இருந்தாள்,
இன்று அம்மாவுக்கு உலகமே மகளாக மாறிவிட்டாள்.
தலைமுறைகள் மாறினாலும் மாறாத ஓர் உறவு,
அம்மா–மகள் அன்பு… வாழ்க்கையின் அழகான வரவு! ❤️

கடைசி வரை நீ என் அருகில் இருந்தால்,
வாழ்க்கையின் கடைசி பக்கமும் அழகான கவிதைதான் அம்மா. ❤️❤️❤️

இப்படிக்கு உங்கள்❤️ MDU❤️
« Last Edit: July 14, 2026, 10:22:42 pm by MDU »