Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-059  (Read 286 times)

September 15, 2025, 06:48:19 pm
Read 286 times

RiJiA

கவிதையும் கானமும்-059
« on: September 15, 2025, 06:48:19 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-059


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: September 15, 2025, 07:35:54 pm by RiJiA »

September 16, 2025, 11:20:30 pm
Reply #1

Niharv

Re: கவிதையும் கானமும்-059
« Reply #1 on: September 16, 2025, 11:20:30 pm »
மழை துளிகள் மெதுவாக விழும் இரவில்,
நினைவுகளின் நிழல் தன் கதையை சொல்லும்.

உன் மென்மையான கண்கள் பேசாத மொழியில்,
என் உள்ளத்தை உருக்கும் ஒரு ரகசியம் போல.

சொல்லப்படாத வார்த்தைகள் மௌனமாகவே
என் இதயத்துள் நனைந்த கனவுகளாய்.

ஒரு நிழல் போல மறைந்து நின்றாய் நீ,
என் உயிரின் ஓரத்தில் விரிந்து நிலைக்கின்றாய்.

உன் சிரிப்பு, மறைக்கப்பட்ட புன்னகை,
மழை நதியில் ஒளிரும் ஒற்றை துளி மாதிரி.

மௌனத்தின் இசையில் உரையாடும்
உன் நினைவுகள் என் நெஞ்சில் ஒளிர்கின்றன.

மழைக்காலத்தின் மென்மையான காற்று
நம் ரகசிய அன்பின் வாசல்களை திறக்கின்றது.

ஒரு வஞ்சனை போல மறைந்த உன் வார்த்தை,
என் இதயத்தின் விரக்தியை எழுதிக் கொண்டு வருகிறது.

மழைதுளிகளின் அழகில் நமக்குள் ஒளிரும்
மறைக்கப்பட்ட பாசத்தின் அழகு.

உன் பார்வை மௌனத்தில் புனைந்த
அன்பின் மென்மை மொழியாகக் கருதப்படும்.

மறைந்த அன்பின் நதி போல
என் நினைவுகள் மெதுவாக ஓடுகின்றன.

ஒரு நிழலாய் உன் இசை என் உயிரில்
மௌனத்தின் தனிமையைத் தொட்டு செல்கிறது.

நீ பேசாத இந்த ரகசிய மொழி
என் இதயத்தின் கோணங்களில் எப்போதும் உயிரோடு நிற்கிறது.

மழைமழையில் மறைந்தது காதல்,
என் உள்ளத்தின் ஒரு மென்மையான வெறுமை.

ஒரு காலம் போல் மறைந்து,
மறைக்கப்பட்ட அந்த அன்பின் கவிதை
என் உயிரின் சுவையாக வளரும்…

🌧️🌹

September 17, 2025, 05:51:36 am
Reply #2

iamcvr

Re: கவிதையும் கானமும்-059
« Reply #2 on: September 17, 2025, 05:51:36 am »
காதல் ஓர் மென் உணர்வு - ஆனால் அதன்
வடுக்கள் ஏனோ ஆழமானவை.
உதிர்த்த சொற்கள் உயிரை குத்தி கிழிக்கும்,
இழைத்த பிழைகள் நெஞ்சை அழுத்தி துளைக்கும்,
இனித்த நினைவுகள் இரவை உறுத்தி விழுங்கும்,
காலம் போக காயம் மேலே ஆறினாலும்
உள்ளே வலி துருத்தியே நிற்கும்.

அதீத நீரில் பூக்கள்
அழுகிடாமல் குடை பிடிக்கும் பக்குவம் அண்மையில் தான் வந்ததடி.
அதீத காதலில் உனை தொலைத்து
அஸ்தமித்த எம் உறவின்
அர்த்தம் தொலைத்த பின்பு தானடி
அகம் உணர்ந்தது அப் பக்குவத்தை.

முன்பே உணர்ந்திருக்கலாம் - உன் இழப்பை
முழுதாய் தவிர்த்திருக்கலாம்.
என்னை நானே மாற்றி இருக்கலாம்
என் காதல் உன்னை வதம் செய்யாமல் பார்த்திருக்கலாம்.
துரத்தாமல் உனை நான்
தூரத்தில் இருந்தே ரசித்திருக்கலாம்.

நான்
உன் வாழ்வில்
வராமலே இருந்திருக்கலாம்.

வந்த காயங்கள் சீக்கிரமே ஆறிவிடும்.
உள்ளே துருத்தும் வலிகள் தான் - என்னை
காலம் முழுதும் நின்று கொல்லும்.
கொல்லட்டும்.
உன்னை தொலைத்த என்னை
என் மனம் ஒரு நாளும் மன்னிக்காது.
கொல்லட்டும்.
« Last Edit: September 17, 2025, 05:54:00 am by iamcvr »

September 18, 2025, 06:23:09 pm
Reply #3

Tobi

Re: கவிதையும் கானமும்-059
« Reply #3 on: September 18, 2025, 06:23:09 pm »
பறிக்கப்பட்டதே தூக்கி
எறிய தான் என்றால்🤨
எதற்காக பறிக்க
வேண்டும்...........🥺
சுவாசிக்க வழியில்லாமல்
யாரின் ஆசையால்
பறிபோனது அந்த ரோஜாவின்🌷
உயிர்🫀 வாடி நிற்கும்
ரோஜாவிற்கு வாழ்க்கை😔
இல்லை சாலையோரம்🛣️

ஆம் அது உண்மை என்று நாம் நினைக்கலாம்🧐 ஆனால் அது உண்மை இல்லை🚫
யாரோ ஒருவர் தூக்கி எறியப்பட்ட ரோஜாவின் மீதும் காதல் கொண்டது ரோஜாவினை தாங்கி கொண்டு இருக்கும் நாற்காலி🪑 இருட்டிலும் நீ அழகுதான் என்று உணர்த்தியது விளக்கின் வெளிச்சம்🏮 சிதைந்து போன  இதழை சுத்தம் செய்தது மழை🌧️ ரோஜாவின் பல கவலைகளை மறக்க செய்தது மழையின்🌧️ அழகிய துளிகல்
யேரேனும் நம்மை தூக்கி போட்டுவிட்டு சென்றாலும் தனக்காகவும் ஒரு உயிர் துடிக்கும் என்பதை உணர்த்தியது குடை⛱️