Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-058  (Read 204 times)

September 01, 2025, 06:06:11 pm
Read 204 times

RiJiA

கவிதையும் கானமும்-058
« on: September 01, 2025, 06:06:11 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-058


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: September 01, 2025, 07:38:32 pm by RiJiA »

September 02, 2025, 06:29:16 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-058
« Reply #1 on: September 02, 2025, 06:29:16 am »

கால் முளைத்த மலர்களெல்லாம்
தோட்டங்களில் நடமாடுகின்றன ...!
மனிதப்பிறவிக்கு மகளாய் வரம் வாங்கி !


என் மகளுக்காக.....


உன்னை கையில் ஏந்தி கொஞ்சுகையில் என் நினைவலைகளில் சில சிதறல்கள் இதோ.. 

எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ நீ
எனக்கு மகளாக பிறந்தாய்...
ஒரு கோடி வண்ணத்து பூச்சியின் வண்ணங்களை
அழகு முகத்தில் கொண்டாய்....
உந்தன் இலவம் பஞ்சு பாதம்
உதைக்க எந்தன் கர்வம் போகும்,
முகத்தில் அம்மாவின் அழகை கொண்டாயே அம்மா....
 எந்தன் அம்மா
கனவில் காணாத புதையல் தந்தானே
பிரம்மா அந்த பிரம்மா.....
எல்லை காணாத பறவையின் சிறகில்
ஏறிப்பறப்பாயே வாழ்விலே
வாழ்வில் நீ காணும் வெற்றிகள் என்ன
வானம் கூட எல்லை இல்லையே
பூமித்தாயே நிலவைபோலே உன்னை சுற்றி..
என் வாழ்கையே
நிலத்தில் நீ வாழ உரங்கள் போலாவேன்
செடியே மல்லி செடியே
நீ பூக்கும் நேரத்தில் மஞ்சள் நீராட்டி
மகிழ்வேன் நானும் மகிழ்வேன்....
பூக்கள் நீ சூடி பாக்கள் நான் பாடி
உந்தன் திருமணம் நடக்குமே
இறைவனே உந்தன் திருமணம் கண்டு
வியந்துபோகும் படி செய்வேனே
உன்னை பிரியும் அந்த நேரம்
நெஞ்சில் இடியுடன் மழையுந்தான்..

என் உயிரினில் ஊடுருவிக் கண் சிமிட்டும் கடவுளவள்...
என் ஆனந்த ஆணணுக்களின் ஆர்ப்பரிப்பவள்
எந்தன் ஜீவனின் ஜீவன் ஈன்றெடுத்த ஜனனமவள்....
என் அன்னையின் அன்பை நீக்கமற புகட்டியவள்....
அவள் -
விரல்பட்ட விடம் இனித்து
குரல்கேட்ட விடம் கனிந்து
இதழ்பட்ட விடம் கரைந்து
என் இதய நரம்புகளை யாழென மீட்டுபவள்....

காமத்தில் கலவாத என் கண்ணின் முத்தம் - என் கண்மணியின் முத்தம்...
செல்ல மகள் உதிர்க்கும் தருணம்
சில்லிட்டுத் தெறிக்கும் உன் அன்னையின் இரத்தம்...

பொன்மகளவள் புன்னகையின் வெளிச்சப் பூவை
இரவல் வாங்கிட இளமதியோடு இன்னபிற
கோள்களும் தவம் கிடக்கும் தத்ரூபம்...

எந்தன் வாழ்வியக் கண்ணீரின் காயங்கள்
ஆற்றிடும் அதிசயம்
அவள் மார்புதைக்கும் பாத ஸ்பரிசத்தினால்...

அவள் வரும்வரை நேரம் போகவில்லை
வந்தபின் நேரம் போதவில்லை - அவள்
இன்னிசை மழலை மொழி கேட்டு களித்திட...

தென்பாண்டித் தெம்மாங்கும் யாசகம் கோரும் - மழலையவள்
உச்சரிக்கும் பைந்தமிழின் சங்கீதத்தில்........
எடுத்துக்காட்டு உவமையணி ஏங்கி நிற்கும்
எழில் பதுமையவளின் சேட்டைகளை எடுத்தாள்வதற்கு...
ஆக,
தமிழன்றி வேறெந்த மொழியும் இலக்கணம்
சமைக்க வில்லை..
ஆம் இந்த தமிழின் கவி வரிகளும் கூடவே...
தாரகையவள் உலவும் அழகியலில் ....

இங்ஙனம் வாழ்க்கையின் வழியில்
வந்தவள் வாழ்க்கையாகி போகிறாள் - அந்திமத்தின்
நிறைவேறாத ஆசைகளின் முற்பகுதியில்
வாழ்ந்துவிட்டு பிற்பகுதியில் விட்டு பிரிந்து செல்லும்
என் மகளுக்காக........
« Last Edit: September 02, 2025, 06:14:12 pm by Limat »

September 02, 2025, 07:44:01 am
Reply #2

Niharv

Re: கவிதையும் கானமும்-058
« Reply #2 on: September 02, 2025, 07:44:01 am »
🌿 அப்பா – சொல்லப்படாத பாசம் 🌿

வானத்தில் பறக்க வைக்க கைகளால் தூக்கும்,
தான் தரையில் குனிந்து நிற்கும் உறவு – அப்பா.

சிரிக்க சூரியனைத் தேவை இல்லை,
அவனது மகளின் சிரிப்பே போதும்.

தனக்கான கனவுகளை நிழலில் புதைத்து,
பிள்ளையின் கனவுகளை வெளிச்சத்தில் மலர வைப்பான்.

பலருக்கு கடைசி வரை புரியாத புதிர்,
அவரது வாழ்க்கையே – அப்பா.

அவன் பேசாமல் பாடம் கற்பிக்கிறான்,
அவன் பார்வையிலே எச்சரிக்கை மறைந்திருக்கிறது.

மகளின் கண்ணீரால் உருகும் இதயம்,
மகளின் சிரிப்பால் துடிக்கும் உயிர்.

தாய்க்கு பின் துணை இருக்கலாம்,
ஆனால் அப்பாவின் இடம் யாராலும் நிரப்ப முடியாது.

அவருக்கு நிகர் அவர் தான்,
அவரது தியாகத்துக்கு அளவே இல்லை.

ஆயிரம் புன்னகைகள் பூத்தாலும்,
அப்பாவுடன் பகிரும் புன்னகை தான் சிறந்தது.

தன் வாழ்நாளையே போராடி,
பிள்ளையின் வாழ்வை கட்டியமைக்கும் கரங்கள் – அப்பா.

சுயநல உலகத்தில் சுயநலமற்ற,
அரிய உறவு அவர் தான்.

அப்பாவை இழந்தவர்களுக்கே உணர்வு வரும்,
உலகம் எவ்வளவு பாதுகாப்பற்றது என்று.

அம்மாவின் பிரசவ தழும்புகள் போலவே,
அப்பாவின் உழைப்பில் பிறந்த காயங்கள்.

மௌனத்தில் மறைத்த கனவுகள்,
பிள்ளையின் கண்களில் மலர வைக்கின்றன.

அவனது சிரிப்பு சில நேரங்களில் போலி,
ஆனால் அதன் காரணம் பிள்ளையின் கண்ணீரை மறைப்பதே.

வாழ்க்கை எத்தனை சிரமம் வந்தாலும்,
பிள்ளையை விட்டு கொடுக்காத ஒரே உறவு – அப்பா.

அவன் உழைப்பால் வீடு நிறையும்,
அவன் நிழலில் பாசம் பெருகும்.

அவன் வார்த்தைகள் கடினமாய் கேட்டாலும்,
அவன் இதயம் எப்போதும் மென்மை கொண்டது.

பாதையில் நிழலாய் பின்தொடரும் காவலன்,
சுவாசத்தில் வாழும் பாசம் – அப்பா

 என் முதல் ஹீரோ நீ தான்,
❤️ என் வாழ்வின் பாதுகாப்பு நீ தான்,
❤️ என் இதயத்தின் என்றும் நிலையான அன்பு – அப்பா, உன்னை நேசிக்கிறேன்!

September 02, 2025, 07:33:08 pm
Reply #3
Re: கவிதையும் கானமும்-058
« Reply #3 on: September 02, 2025, 07:33:08 pm »
தந்தை
மண்ணில் உதிக்கும்
போது தாய் பெற்றெடுப்பால்
தினமும் நம்மை சுமப்பவர் தந்தை...
தனது வாழ்கை தம் குடும்பத்திற்கு
தத்தம் செய்தவர் தந்தை..
வாழ்கை இப்படித்தான்
என்று வழிகாட்டும் வழிகாட்டி அவர்..
ஆயிரம் ஆயிரம் பிரச்னை வந்தாலும்
அஞ்சாது எதிர்கொள்ள கற்றுதந்த ஆசான் அவர்..
தம்பிள்ளைக்கொன்று எனில்
தம் கண்ணில் உதிரம் வடிப்பவர்
கலங்காதே நான் உன்னுடன்
இருக்க எதையும் எதிர்கொள்
என்று ஆளுமை கற்பித்த குரு ..
உயர்விலும் தாழ்விலும்
தன்நிலைமாறதே என்றுரைப்பவர்
திருவிழாவில் தெய்வம் காண தம்
தோழில் சுமந்தார்
நான் அன்று பார்த்தது
தெய்வமன்று
என்னை சுமந்ததே அந்த தெய்வம் தான்...
கடினமாக நடந்து கொள்வதால்
தந்தையை வெறுப்பாக பார்கும்
நாம் தந்தையாகும் போது உணர்வோம்
அவர் செய்த நன்மை யாதென..
தந்தை பெண் பிள்ளைகளின்
கதாநாயகன் ..
தந்தை ஆண்பிள்ளைக்கு
அடையாளம் ...
கோடி தெய்வங்கள் நிகரில்லை
எம் தந்தைக்கு ..
அவரின் மகிழ்ச்சி புகழ் பணம்
யாதிலும் இல்லை
தம் பிள்ளைகளின் மடியில்
அவர் துயில் கொள்ளும் தருணத்தில்
வார்தைகளில் அடங்காத மகிழ்ச்சி ...
தனக்கென யாதும் கோராத
தன்னிகரில்லா நிஜ கர்ணன்
தந்தை...
குழந்தை பருவத்தில் குருவாக
குமார பருவத்தில் தோழனாகா
என்றும் என் முன் மாதிரி எம் தந்தை...
வார்த்தைகளில் சொல்ல வரிகள் காணதே
வணங்குகிறேன் உம்மை
எம் தந்தையே எம் தந்தையே...💕💕💕💕❤️😍🥰😘

September 02, 2025, 08:08:27 pm
Reply #4

Mansi

Re: கவிதையும் கானமும்-058
« Reply #4 on: September 02, 2025, 08:08:27 pm »
You gave your life, your strength, your care,
A thousand burdens you chose to bear.
For every dream I hold today,
You paved the long and tireless way.

Your hands grew rough, your nights were long,
But in your love, I grew strong.
Each step I take, each goal I see,
Is built on all you gave to me.

Though you are gone, I feel you near,
Your gentle voice still calms my fear.
In every success, in all I do,
I know my victory belongs to you.

Watch me from heaven and guide me still,
Shape my path with your silent will.
A father’s love will never depart,
For you live forever inside my heart.

I love you DADA ….what was my last wish will be in my life again is look after you more gracefully more responsibly more …….. I LOVE  YOU 


My Tamil version hope it’s give the same feel what I personally feel

 நீ வாழ்வை தந்தாய், உன் வலிமையையும், உன் அன்பையும், ஆயிரம் சுமைகளைத் தாங்கினாய் நிம்மதியுடன். இன்று நான் கனவுகள் காணும் ஒவ்வொரு நாளிலும், நீ விதைத்த பாதையே என் வெற்றிப் பயணமென.

உன் கைகள் கடினமாயின, உன் இரவுகள் தூக்கமின்றி, ஆனால் உன் அன்பில் நான் வலுவாகினேன். நான் எடுக்கும் ஒவ்வொரு படியும், காணும் ஒவ்வொரு இலக்கும், நீ தந்த அர்ப்பணிப்பின் மேல் கட்டப்பட்டது.

நீ இல்லையெனினும், உன் நிழல் அருகில்தான், உன் மென்மையான குரல் இன்றும் என் பயத்தை அமைதிப்படுத்துகிறது. என் வெற்றியிலெல்லாம், என் செயலில் முழுவதும், உன் வெற்றியே எனக்கு உரியது என உணர்கிறேன்.

வானத்தில் இருந்து என்னைக் காப்பாற்றி வழிநடத்து, உன் மௌனத்தால் என் பாதையை வடிவமைத்து. தந்தையின் அன்பு ஒருபோதும் மறையாது, என் இதயத்தில் என்றென்றும் நீ வாழ்வாய்.

அப்பா… என் கடைசி விருப்பம் என்னவெனில், நீ மீண்டும் என் வாழ்க்கையில் வருவாயெனில், உன்னை மேலும் அன்புடன் கவனித்திருப்பேன், மேலும் பொறுப்புடன், மேலும் கருணையுடன்… நான் உன்னை நேசிக்கிறேன் அப்பா ❤️  I love you dada …….

Thank you for my Tamil translator……




« Last Edit: September 03, 2025, 07:23:42 pm by Mansi »

September 02, 2025, 09:00:06 pm
Reply #5

Thendral

Re: கவிதையும் கானமும்-058
« Reply #5 on: September 02, 2025, 09:00:06 pm »
என் இதய கருவறையில் ...என் அப்பா !!

அப்பா- என் முதற் கடவுள்         
                என் முதல் தோழன்
                என் முதல் நாயகன்

என்னை விதைத்த நீ எங்கே?
என்னை செதுக்கிய நீ எங்கே ?

என்னுள் அவர் அணுவை சொல்லாக்கி
என்னுள் அவர் அறிவை சுவை சேர்த்து
என்னுள் அவர் ஆற்றலை கருத்தாக்கி
என்னுடன் அவர் வாழ்ந்த காலமதை கருவாக்கி
என்னுள் வற்றிய என் கண்ணீரை மையாக்கி
இதோ மற்றுமொரு மெனக்கெடல்...
என் தந்தைக்காக !!

அவர் விட்டு சென்ற நொடி முதல்
விளங்கவில்லையே வாழ்க்கை ...ஏன்??
அவரின் இறுதி நாட்களின் தாக்கம் சற்றும்
குறையவில்லையே... ஏன்??
அவரின் ஸ்பரிசம் வேண்டி காற்றில்
தேடுகிறேன்.. ஏன்??
என்னுள் எத்தனை முறை கேட்டும் விளங்காத
ஒரே கேள்வி ...ஏன்??

அப்பா ...நினைவுகள் வலிகளாய் நெஞ்சை உலுக்க
நானும் நீங்களுமாய் இருந்த நாம்!! ...எங்கே நீங்கள்??
 நானும் கண்ணீருமாய் ஆகிப் போன வேளையில்
வற்றியதே கண்ணீரும் ..ஏன் ??

நான் மட்டுமே என்றான பொழுதில்
நீங்களுமில்லை... கண்ணீருக்கும் இரக்கமில்லை ....!!!

உங்களின் இறுதிப் பயணத்தில் உங்களுடனே
நான் தொலைத்த என் ஒளி ..எங்கே??
 இருளிலேயே இன்றும்... நான் !!
இனி என்றும்... நான்!!

திரும்பி வர முடியாத தூரத்திற்கு- தெரிந்திருந்தும்
என்னைவிட்டு சென்றதேன்??
 தாள முடியாத துயரத்தில்- அறிந்திருந்தும்
 என்னை ஆழ்த்திவிட்டு போனதேன்??
 இன்றும் கடினமான நாடிகளில் உங்களையே
தேடிடும் என்னை பிரிந்து போனதேன் ??
தட்டுத் தடுமாறி வலியாற வழியின்றி
என் சொற்களோ தூரம்தான் சென்றதேன்??

இறைவனை கண்டதில்லை
தாயின் ஸ்பரிசம் அறிந்ததில்லை!!!

சிவனாய் என் ஐய்யனாய் என்றுமே நீ !!!
அறிவாய் ஆற்றலாய் ஒளியாய் என்றுமே நீ !!
உயிராய் உருவாய் உணர்வாய் ..என்றென்றுமே நீ!!

வாழும் கலை கற்றுத்தந்த என் குருவே !!
வாழ்க்கையின் சுவாசமாய் ஆன என் தயையே !!
உனை இழந்த காலம் தொட்டு ஒளியிழந்த
 இவ்வுலகில் தொலைந்து.. மீண்டு ...தொலைகிறேன்...!!

என்னை தூக்கிக்   கொஞ்சிய உன் கரங்கள் எங்கே??
 என்னை  தாங்கிப் பிடித்த உன் தோள்கள் எங்கே??
 என்னை செதுக்கி உயர்வு தந்த நீ எங்கே ??

ஈராண்டு காலமாய் அல்லும்பகலும் அயராமல்
உம்மையே தேடும் இந்த கண்களும்
உமக்காகவே ஏங்கும் இந்த இதயமும் ...
ஒருமுறையேனும் உம் குரலும் கேட்க...
ஒருமுறையேனும் உம் உருவம் காண..
பலமுறை மன்றாடுகிறேன்... என் இறையே...!!

 ஒன்று என்னை அவர் இடம் சேர்த்துவிடு...
இல்லையேல் அவரை என்னிடம் திரும்ப தந்துவிடு...
 இவ்வுலகத்தில் அவருக்கு இடமில்லை என்றாலும் ...
என் இதயக்கருவறையில் சுமக்கும் வரம் கொடு...

அதுவரை இந்தத் 💖தென்றலின்💖 தேடல்... மன்றாடல் ...தொடரும் ...!!!
« Last Edit: September 02, 2025, 10:36:58 pm by Thendral »

September 02, 2025, 09:22:37 pm
Reply #6

Shaswath

Re: கவிதையும் கானமும்-058
« Reply #6 on: September 02, 2025, 09:22:37 pm »
பத்து மாதங்கள் சுமக்கும் தாயின் இன்பச்சுமையை மார்பின் சிகை கொண்டு தாங்குவாய் என்றால் மிகை ஆகாது,

என் கால்கள் தரையை வருட விடாமலே நடை பழக்குகிறாய்,
மண்ணில் விழுந்து தோல் சரிந்தால் மனம் ஒடைந்து சரிய அமர்வாய்

வீட்டின் வாசப்படியை உன் நிழல் வருட,
என் விரிந்த கண்களின் மயத்தில் ஒன்றுக்கூடும் ஒளி விளக்கின் ஈரம் சொல்லும்…நீ யார் என்று

என்ன நிகழ்ந்தும் அவர் கண்ணீர் சிந்த நான் கண்டதில்லை,
கண்டெடுத்த முத்தானவள் நான், என் சிரிப்பில் மகிழ்ந்து சிரகடிக்கவே, அழுக தோண்றவில்லை என்று சொல்வாய்

உலகை சுற்றி வலம் வர ஆசை இல்லை,
உன்னை சுற்றி வரும் சிறுமியாகவே இருப்பதில் நிம்மதி

கையோடு அள்ளி என்னை வானை நோக்கி எறிவாய்,
அச்சத்தில் மிதந்து நிற்பேன்,
விழுந்து விடுவேனோ என்று எண்ணி அல்ல,
தாங்கி பிடிப்பது எப்பொழுதும் உந்தன் கரங்கள்ஆகவே இருக்க வேண்டும் என்று

September 02, 2025, 09:43:03 pm
Reply #7

MDU

Re: கவிதையும் கானமும்-058
« Reply #7 on: September 02, 2025, 09:43:03 pm »
அப்பா – மகள் சந்தோஷமும்  சோகமும்  பிரிவு

மருத்துவமனை கதவு திறந்த போது
ஒரு அழுகையால் உலகம் நிறைந்தது
அந்த சத்தம் நான் கேட்ட போது
என் உயிரின் புதிய இசை உண்டானது

கைகளில் தாலாட்டும் நேரம் வரவில்லை
ஆனால் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வழிந்தது
இது துயரக் கண்ணீர் அல்ல
இது உடல் முழுதும் பரவிய ஆனந்த கண்ணீராக இருந்தது

அந்த கண்ணீர் மகள் பிறந்த தருணத்தில் தான்
அப்பா என்ற புதிய பெயர் ஆனது
மனசுக்குள் ஒரு வாக்குறுதி கொடுத்தேன்
உணக்காக  நான் எப்போதும் நிழலாகவும், சூரியனாகவும் இருப்பேன் என்று

சிறு கால்களில் நீ தடுமாறி நடக்கும்போது,
கையை நீட்டியவன் அப்பா என்னும் நான்
உன் சிரிப்பை பார்த்து
தன் கஷ்டங்களை மறந்து விட்டு உன்னை பார்த்து கொண்டு இருந்தவன் நான்

இன்று நீ வளர்ந்து நிற்கும் போது,
உன் பின்னால் நின்றிருப்பவன் இன்னும் அப்பா என்னும் நான் மட்டும்தான்
மகள் உலகம் காணும் வரை,
அப்பா எப்போதும் காவல் காத்து நிற்க்கும் காவல் காரன் நான்

குழந்தை போல என் கையை பிடித்து  கொண்டு
நடந்த அன்பு மகளின் சிறு நடை,
இன்று முதல் மற்றொரு கையைப் பிடித்து நடக்க போவதை நினைத்து
நான்  ஆனந்த கண்ணீரில் நனைந்தேன் .

தினம்தோறும் என்னை அப்பா என்று அழைத்த மகளின் ஒலி
திருமண நாள் முதல் அவளது கணவனை
மாமா என்று மாற இதயம் துடிக்கிறது,
ஆனால் முகத்தில் ஒரு புன்னகை மட்டுமே வருகிறது

திருமண விழாவின் சிரிப்பு
உள்ளத்தில் ஆயிரம் நெகிழ்ச்சி.
மகள் புதிய வாழ்க்கைக்கு செல்ல போகிறாள் என்று.
அப்பாவாகிய நான் மகிழ்ச்சில்  ஆனந்த கண்ணீர் விடுகிறேன்

ஆனால், அந்தக் கண்ணீரீல் துக்கமில்லை,
ஆனந்தம் கலந்த புனித நீர்.
என் மகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
என்ற அப்பாவின் இறுதி கடவுளின் வேண்டுகோளும் அது தான்.

இப்போது நான் செல்ல நேரம் வந்துவிட்டது,(இறக்கும் நேரம் வந்துவிட்டது)
ஆனால் என் பாசம் எப்போதும் உன் அருகில் இருக்கும்.
என் உருவமும்,நிழல்லும் தெரியாமல் போகலாம்,
ஆனால் என் ஆசீர்வாதம் மற்றும் நினைவுகள் எப்போதும் உன்னைத் தழுவிக் காக்கும் என் அருமை மகளே.

அப்பா போகிறான் என்றாலும்,
அப்பாவின் அன்பு என்றும் உன் இதயத்தில் வாழும்.

இந்த கவிதை அனைத்து மகளுகளுக்கும் சமர்ப்பணம் குறிப்பாக
தோழி தென்றல் மற்றும் GTC உள்ள அனைத்து சிங்கப்பெண்களுக்கும் 🙏💝

இப்படிக்கு உங்கள் மதுரைக்காரன் MDU



MDU
« Last Edit: September 03, 2025, 05:17:47 pm by MDU »

September 02, 2025, 10:12:37 pm
Reply #8

Wings

Re: கவிதையும் கானமும்-058
« Reply #8 on: September 02, 2025, 10:12:37 pm »
என் முதல் நாயகன், எந்நாளும் என் அரசன்

என் முதல் நாயகன், எந்நாளும் அரசன்,
உன் அன்பில் என் இதயம் பாடும் இனிய பாடல்.
புராணக் கதைகள் இல்லை, பொன் முடி இல்லை,
ஆனால் நீ, என் அப்பா, என் கையை
முதன் முதலில் பிடித்தவன் நீயே.

குழந்தையாய் இருளுக்கு நான் அஞ்சிய நேரம்,
உன் பாடல் ஒளியாய் என் பயம் தீர்த்தது ஏராளம்.
கோட்டை போல் நீ நின்றாய், உயரமாய், வலிமையாய்,
என் அடி தடுமாறாமல் காத்தவன் நீயே நிஜமாய்.

தேர்வில் தோல்வி, மதிப்பெண்கள் குறைந்தபோது,
கண்ணீர் வடித்தேன், ஆனால் நீ நம்பிக்கை தந்தாய் மெதுவாய்.
என் விருப்ப உணவுடன் அருகில் அமர்ந்து,
“மகளே, தோல்வி ஒரு படிப்பினை, வெற்றி வரும்,” என்றாய் நீ மகிழ்ந்து.

மூவுருளி சவாரி முதல் கனவு துரத்தல்கள் வரை,
என் உலகை மாய உலகமாக மாற்றினாய் நீ மென்மையாய்.
பிறந்தநாள் வந்தால், பரிசும் மகிழ்ச்சியும் கொண்டு,
உன் புன்னகை என் தருணங்களை இனிமையாக்கியது அன்று.

“பெண்ணை மிகுதியாய் செல்லமாக்காதே,” என்றார் மக்கள்,
நீ சிரித்து, “என் இதயம் இவள்,” என்றாய் மகிழ்ச்சியுடன் அக்கணம்.
உன் கண்ணில் நான் எப்போதும் ஒரு நட்சத்திரம்,
எங்கிருந்தாலும் உன் இளவரசி நான் என்றும்.

பள்ளி முடிந்து, நீ காத்திருந்தாய் மணிக்கணக்காய்,
வெயிலிலும் மழையிலும், பொறுமையுடன் நின்றாய் அருமையாய்.
கல்லூரித் தேர்வில், தேர்வறை அருகில் நீ நின்றது,
உன் மௌன பிரார்த்தனை என் பயத்தை அகற்றியது மெதுவாய்.

வேலை தொடங்கியபோது, வீட்டு வாசலில் காத்திருந்தாய்,
பெருமையுடன் கண்கள் பேச, “ஏன் தாமதம்?” எனக் கேட்டாய்.
“எப்படி இருந்தது உன் நாள், என் செல்வமே?” என்று,
உன் கேள்வியில் அன்பு புன்னகையாய் பூத்தது மகிழ்ச்சியாக.

நோயில் உடல் தளர்ந்தாலும், உன் இதயம் வலிமையானது,
எனக்காக எப்போதும் பேசியது அன்பு மட்டுமே மென்மையானது.
வலி உன்னைத் தடுக்கவில்லை, உன் கவனம் குறையவில்லை,
நீ என் வழிகாட்டி, என் ஒளி, என் வாழ்வின் வலிமை.

நான் உன்னைப் புண்படுத்தியிருக்கலாம், தவறு செய்திருக்கலாம்,
கடின வார்த்தைகள் பேசி, உன் மனம் நோகடித்திருக்கலாம்.
ஆனால் உன் அன்பு அசையவில்லை, ஒரு நொடியும் தளரவில்லை,
என் அப்பா, உன் அன்பு என்றும் உறுதியானது மட்டுமே.

பண்டிகைகளில் நீ வீட்டை ஒளிரச் செய்தாய் பிரகாசமாய்,
பண்புகளை, நிற்கும் வலிமையை, அன்பைப் போதித்தாய் அழகாய்.
வாழ்க்கையின் அழைப்புக்கு பதில் சொல்ல கற்றுத் தந்தாய்,
என் அப்பா, உன் பாடங்கள் என் இதயத்தில் என்றும் நிலையாய்.

இப்போது தொலைந்து, வானம் மங்கிய நேரங்களில்,
உன் குரல் கேட்கிறது, வழி காட்டுகிறது மென்மையாக.
ஒவ்வொரு மகளின் அப்பாவும் அவளின் அரசன்,
நீயே என் எல்லாம், எந்நாளும்.

என்றென்றும் என் நாயகன், யாரும் ஒப்பிட முடியாதவன்,
உன் அன்பு, எல்லா பிரார்த்தனைகளையும் தாண்டியது.
என் இதயத்தில் உன் சிம்மாசனம் என்றும் நிலைத்திருக்கும்,
என் முதல் அரசன், என்றென்றும், எந்நாளும்.