Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-046  (Read 2043 times)

August 20, 2024, 04:24:31 pm
Read 2043 times

RiJiA

கவிதையும் கானமும்-046
« on: August 20, 2024, 04:24:31 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-046


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: September 09, 2024, 06:19:12 pm by RiJiA »

August 21, 2024, 11:16:17 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-046
« Reply #1 on: August 21, 2024, 11:16:17 am »
சொல்லாத காதல்

வாழ்க்கை என்னும் பயணத்தில் தொடரும் ஒவ்வொரு உறவும் ஒருநாள் முடிவு பெறும்
-- அதிலும்
சில முடிவை சொல்லாத உறவு
இறுதி வரை உடன் வரும்!
அதுபோன்ற ஒரு சொல்லாத காதலை பற்றி எந்தன் பார்வையில்...


பார்த்த நாள்முதலாய் பரவசமென்று
எதையும் காணவில்லை
பழகும் நாட்களில் தான்
படிக்கத் தொடங்கினேன்
உன் பார்வைகளை.....

உன் பார்வை வரிகள் ஒவ்வொன்றும் என்மீது படும் வேளையில் ஒவ்வொறு முறையும்
ஒருவித தாக்குதலுக்கு பலியானேன்..,

எத்திசையில் நீ திரும்பி பார்த்தாலும்
என்னை நோக்குவதை போல்
என்னவென்று தெரியாமலே
என்னை இழக்கத் தொடங்கினேன்..,

சூரியனின் நேர்க்கோட்டில் சந்திக்கும்
நிலவாக நீயும்  நானும் தனி கிரகத்தில்
தினம் தினம் நின்றோம்..,

நிற்கும் நாட்களிலெல்லாம் இருவருக்கும் இடையே வார்த்தைகள் பரிமாரிக்கொள்ளவில்லை
ஆனாலூம் கண்களின் வழியே
பல மொழிகள் வழிந்தோடியது!

திங்கள் முதல் வெள்ளி வரை
நாட்கள் கழிவது தெரியாமல் உன்னிடத்தில்
நான் முழுவதுமாக மூழ்கிக்கொண்டிருந்தேன்
"வெள்ளி நிலவே"
உன் விழிகள் என்னிடம்
விடை பெற்றுச் செல்லும்
விடுமுறை நாட்களையெல்லாம்
வெறுத்து நின்று பார்த்தேன்...

ஞாயிறு அது முடியும்போதும்
தொடரும் திங்களோடும்
உன் ஞாபகமோடும் திசைகள் எல்லாம்
நான் சுற்றி திரிந்தேன் உன் வருகைக்காக....

தினம் தினம் உரிமைகள் உன்னிடம் அதிகரிக்க அதனை அறியாத
என் உள்ளம் உனக்கென்று
முழுவதுமாக என்னை மாற்றியது!!

உள்ளம் முழுமையாக மாறும் வேளையில் தான் உயிரே உனக்கும் எனக்கும்
ஊடல் தோன்ற வேண்டுமா

பார்வை வரிகளை கண்டு
பைத்தியமானவன் அதிலிருந்து
மீண்டு வர வைத்தியம் தெரியாமல்
வாயடைத்து நின்றேன்...

"எதிர் பாராமல் வாழ்வில் சந்தித்தேன்
எதிர் பாராமல் காதலித்தேன்
எதிர் பாராமல் காதலித்தது
என் தவறா ? -- இல்லை அதனை
ஏற்க முடியாதது உன் தவறா" என
உன்னிடம் உண்மைகளை
கேட்க வந்தவன் ! உறைந்து போய் நின்றேன்
உன் நிழலாக வேறொருவன் இருப்பதை கண்டு!!

"உதடுகளை திறந்து உள்ளம் புரிந்து சொல்லும் காதலெல்லாம் சொர்கத்தில் சேரும்!
சொல்லப்படாத எந்தன் காதல் எந்த பிரிவை சேரும்"

எந்த பிரிவிலும் சேர்க்க முடியாத
என் காதலும் சேரமுடியாமல்
பிரியும் நேரம் வந்தது...

அன்பின் ஆசைகள் பொங்கி வந்த நாளொன்றில்
எனக்கான உரிமைகளும்
உனக்கில்லை என்றாள்!

முதல் முறை உதிரங்கள் கொதித்தது
உயிரில் நீ கலந்த பின்பு
உரிமையில் எல்லைகள்
எனக்கு தெரியவில்லை...

எதைவும் தெரியும் முன்பே
பிறிந்திருக்க வேண்டிய
நேரம் வந்தது.....

தனிமையின் தீயில்
தவிக்க நான் ஆளானேன்...

நொடியிலும் நிமிடத்திலும் மாறி மாறி
என் மனம் மரணம் அடைந்தது....

நாள்காட்டிகள் எல்லாம்
நான் படும் வேதனையில்
பயணம் செய்ய வந்தது...

மீண்டும் சந்திக்கும் நாளை எண்ணி6
"மரணதீயில் மறைந்து கிடந்தவன்"
மறுபிறவி எடுக்க ஜனனம் தோன்றியது!
ஜன்னலின் ஓரம்
அந்த நிலவினைக் காண
ஜென்மங்களை கடந்து வருவேன்!!

காதல் நோயால் சூழப்பட்டவன்
உன் கண்கள் தீண்டும்
ஒவ்வொரு தீண்டலிலும்
விடுபட்டு வெளியே வந்தேன்....

கண்ணியத்தை காத்து வந்த
காதலையும் காலத்தையும்
நாம் புரிந்து கொண்டதால் -- இன்று
பிரிந்து நிற்கிறோமா ??
இல்லை
நாம் இருவரும் பிரிந்து நிற்பதால்
நான் புரிந்துகொண்டேனா ?? என
புரியாமல் புலம்புகிறேன்! பூவே
இந்த புதிரான உலகில்!!

தெற்கில் நீயும்
வடக்கில் நானுமாக திசைகளில்
காவலில் நின்றோம்...

காவலாக காத்து கிடப்பதில்
என்ன பயன் ???
எதற்கும் தான் எனக்கு
காரணங்கள் தெரியவில்லையே!!!!!!

காதல் வந்த போது
காதலென்று அதனை அறிந்துகொள்ள
அறிகுறிகள் ஆயிரம் கிடைக்கின்றது!
ஆனால் பிரிகின்ற போது ஏனோ
கண்ணீர் வடிக்கின்றது!!

நீயாக நிறைந்து கிடந்த உயிரெல்லாம் இன்று
தீயாக எரிந்து கொண்டிருக்கின்றது!

வட்டமிட்ட என் வாழ்வில்
 திட்டமிட்டவள் எங்கே என்று அது
தேடித்தவிக்கின்றது!!

இன்பங்களை துறந்து வாழும்
இந்த வாழ்வில்
இன்றும் ஒயவில்லை ஓவியமே உன் பிம்பம்...

வண்ணமற்ற என் இளமையில்
வரையாத உன் உருவம்
என்னை கறையானாக
அறித்துக்கொண்டிருக்கின்றது...

பக்குவம் வந்தாலும்
பகுத்தறிவு வந்தாலும்
பித்தனாக அலைகின்றேன்...

தேடலின் நோக்கம் தெரியாதவன்
"தேவதையே உன்னைத் தேடி"
தெருக்களின் விமர்சனங்களுக்கு
விடையளிக்க வழியின்றி
வாயடைத்து போனேன்....

பாதைகள் நீண்டு கிடந்தது
பாதங்கள் நடக்க தொடங்கியது
"உறங்க நேரமின்றி"
நடந்து கொண்டிருந்தவன் வயதில்
இருள் சூழுமென்று
இதயம் நினைக்க மறந்துவிட்டது!!

நினைக்க மறந்து நின்ற
அந்த வேளையிலும்
மறந்தும் உன்னை மீண்டும் மீண்டும்
நினைத்தேன்.....

உன் நினைவொன்று இருந்தால் போதுமே....

மலரின் மணமாக மணம் வீசுவேன் என்று
எண்ணம் கொண்டு உன் நினைவொன்றில்
"வார்த்தைகளாக வளம் வந்து
சுமைகள் பல வென்று"
சுற்றி இருந்தவர்களையெல்லாம்
இருள் சூழாமல்
என்னை பார்க்க வைத்தேன்....

இருளில் மூழ்கி கிடந்தவனுக்கு
முழுவதுமாக ஒளியினை கொடுத்து
அவ்வொளியால் உலகில்
உதயமாகும் முன்னே உயிரே
நீ ஒதுங்கி போன உண்மையை
ஒருபோதும் உணர முடியாமல் தவித்தேன்!!

உண்மையை உணர முடியாமல்
போன பின்பு
என் வாழ்வில் ஒளியேற்றுவது?
யாறென்று இவ்வுலகம் கேட்டால்
எப்படி நான் பதிலளிப்பேன்?????

வருடங்கள் சந்திப்பில் உன் காதல்
வேறொருவர் மீது இருக்கும்  போது
காலங்களுக்கு எப்படி நான்
பதிலளிப்பேன்??????

இருளில் கிடந்த என் வாழ்விற்கு வெளிச்சத்தை கொடுத்தவளே!!!
இந்த சமுகம் கேட்கும் கேள்விகளுக்கு
எப்படி நான் பதிலளிப்பேன்?????

இதழை பிரிக்காமல்
மறைத்துக்கொள்ளும் மலரின்
தேன்துளிகள் ஒருபோதும்
தேனிக்களுக்கு கிடைப்பதில்லை!
 அதுபோல சொல்லப்படாத காதலெல்லாம்
சுகம் பெறாத சோகத்தையே சாரும்!!
அதில்
இன்று முதல்
சொல்லப்படாத
என் காதலும் சேரும்...!!!!

என்றென்றும் உங்கள்
« Last Edit: August 22, 2024, 04:34:38 pm by Limat »

August 23, 2024, 02:47:43 pm
Reply #2

Shree

Re: கவிதையும் கானமும்-046
« Reply #2 on: August 23, 2024, 02:47:43 pm »

மழை மேகமாய் உருமாறவா...



பூவினை மெல்ல வருடிச்செல்லும் காற்றை போல
      மிகவும் மெல்லிய உரையாடலில் எழுந்த ஓர் உன்னத உறவு 

இயல்பான நிலையில் வார்த்தைகள் அதன் இனிமையை இயற்ற
      வார்த்தைகளின் மென்மை, மெல்லிய சூழல் ஒன்றை உருவாக்கியது
      அச்சூழலில் உருகிய எண்ணம், அதன் நேசத்தொடு பின்னிக்கொண்டது.

பின்னியது எண்ணம் மட்டுமே என்று நினைத்த மாயத்தில்
      நிகழ்ந்த உரிமைகளின் பரிமாற்றம் உணர்த்தியது  - தொலைத்த என் மனதினை.
      தொலைந்த பொழுதில் வினவிய மனம், வினாக்களுக்கு இரையானது
      வினாக்கள் விடையில்லாமல் தவித்த போதும், மனமோ தவிப்பே இன்றி என்னை உன்னோடு இன்னும் ஆழமாய் செதுக்கியது.

ஆழம் பெருகிய வண்ணம், மனம் உள்ளூர கரைய தொடங்கியது
     கரைந்தவாரே உன்னில் இருக்கும் -  உன் அன்பை, பார்த்து ரசித்தது

ரசித்தவை ஏனோ சிறு சிறு இடர் ஈட்ட, மகிழ்வோடு ஏற்றது
      அச்சிறு இடர்களை ஏற்றவாறே புன்னகை அணிந்து கடக்க நேர்ந்தாலும்
      என்னில் உள்புகுந்த உன்னை விட்டு பிரிய மனமில்லாமல் உரைந்தே போனது

உரைந்தது நான் ஆயினும் கண்கள் ஏனோ உன்னை மட்டும் தேடியது
      கண்ணோடு காண இயலாமல் மொழியோடு மட்டுமே இணைகிறோம் ஆயின்
      மொழி வழியில் கவிதையாய் உருமாறி உரைகிறேன் உன்னில் நானாய்

உன்னோடு சேர துடிக்கும் என் மனதை
      பசுமை நிறைந்த சோலையில் பூக்கும் பூவின் மீது விழ, எண்ணி தவிக்கும் மழை துளி வழியே
நானும் ஓர் மழை மேகமாய் உருமாறவா 🌿🌧️💚

« Last Edit: August 28, 2024, 04:25:51 pm by Shree »
ஶ்ரீ

August 27, 2024, 11:49:45 am
Reply #3

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-046
« Reply #3 on: August 27, 2024, 11:49:45 am »
என் இனியவளே

உன்னோடு பேசிய நாட்கள் உன்னோடு பேசிய பொழுதுகள்
இனி கிடைக்குமா கண்மணியே ....

கதிரவன் வரும் முன் , கதிரவனைப்போல வருவாள்
வாசலில் கோலம்போட என்னவள் ....

அவளை காண்பதற்காவே காலையில் கண்விழிப்பேன்
ரீங்காரத்தை இதயத்தில் வைத்தேன் ....

அவளது அழகில் மயங்கியது எனது உள்ளம் அவள்
கோலம் வாசலில் மட்டும் போடவில்லை .....

எனது இதயத்திலும் போட்டுவிட்டால்
கோலத்தின் புள்ளிகளோடு ஆரம்பித்த காதல் …..

காதல் மலர்ந்த தருணம்.. அவளை நேசிக்க தொடங்கினேன்
சுவாசிக்க விரும்பினேன் வாழ்நாள் முழுவதும் …..

அவள் போகும் பாதியில் அவளின் கால்தடங்களில்
எனது கால்தடத்தையும் பதித்தேன்  ஒன்றாக பயணிக்க …..

மின்சாரம் பாய்ததுபோல இருந்தது அவள் என்னை பார்த்த பார்வை
அன்றே நினைத்தேன் அவள் தான்  எனது சம்சாரம்  என்று …..

இதயத்தில் மலர்ந்த காதலை சொல்ல துணிந்தேன்
மலரை கையில் ஏந்தியபடி சென்றேன் என் தேவதை காண …..

நான் அன்று கண்ட காட்சி இதயத்தில் அம்பை எய்ததுபோல்
அவள் அவளுக்கு பிடித்தவனுடன் ….. நான் தனிமையில்

மலர்ந்த மொட்டு கருகியது போல எனது காதல் கருகியது
அன்று உணர்ந்தேன் இதயத்தின் வலியை கண்கள் புரிந்துகொள்ளும் என்று ….

எனது மனதின் நிலைமை தண்ணீரில் இருக்கும் மீனை
தரையில் போட்டதுபோல் துள்ளியது …..


அன்று நான் மறைத்தது மலரை மட்டும் அல்ல
எனது மனதையும் தான் … புதைத்தேன் காதலை என் இனியவளுக்காக …..


நீலவானம்



August 28, 2024, 11:34:45 am
Reply #4

Thendral

Re: கவிதையும் கானமும்-046
« Reply #4 on: August 28, 2024, 11:34:45 am »
❣️❣️ சொல்லாத என் காதல்❣️❣️

காதலின் ஆழம் அறியவில்லை
என்னுள் காதல் பூக்கும் வரை
ஒரு தலை காதலின் பாரம்
மனம் இங்கு தாங்குவதில்லை.

ஒவ்வொரு முறையும் துடிக்க மறுக்கும்
இதயத்தை கையில் ஏந்தி சுமக்கிறேன்
என்றாவது ஒரு நாள் அது துடிப்பது
உனக்காக என்று உறைக்கவே .

எப்படியும் சொல்லிவிடும் உறுதியுடன்
சென்றவள் நின்றேன் சிலையாகிறேன்
என்னுள்ளே ஆயிரம் உறையாடல்கள்
அவன் முன்னாள் ஊமையாகிறேன்.

எழுதிசெல்லும் விதியின் கையோ
மறந்து போனதே என் எழுத்தை என்கிறேன்
வலி மறந்த இதயத்தின்
மொழி அறிய மௌனமாகிறேன்.

முயன்று எடுத்த முயற்ச்சியுடன்
சோலையில் உனைக்கண்டு விக்கி நிற்கிறேன்
என்னவன் ஆகி இருக்க வேண்டிய நீ
உன் அவளுடன் உன்னைக் காண்கிறேன்.

இந்த முறையும் துடிக்க மறுக்கும் இதயத்தை
கையில் ஏந்தி சுமக்கிறேன்
தோற்று நான் ஒதுங்கி நிற்கையில்
யுகமாய் கடக்கும் உன் நினைவுகள்....

என் காதல் என்னுள்ளே கானல் நீராய்....
உன் காதல் அவளுடன் கல்யாண தேராய்....வாழ்க பல்லாண்டு !!!

      நேசமிகு
❣️தென்றல்❣️
« Last Edit: August 28, 2024, 05:27:55 pm by Thendral »

August 29, 2024, 04:56:37 pm
Reply #5
Re: கவிதையும் கானமும்-046
« Reply #5 on: August 29, 2024, 04:56:37 pm »
ஆள மயக்குதடி 
உன் சிரிப்புல - என்
ஆவி துடிக்குதடி !

இந்த பாவி மனசுல
தாவிக் குதிச்சு வந்து நின்னவ நீ தானடி !

சொல்லி போனாயடி என்னுள்ளே
உன் வார்த்தைகள் பல சொல்லி போனாயடி !

பாதியில வந்த பந்தம் நீயடி - இப்ப
பாத மறந்து போனதென்ன சொல்லடி !

புன்னகை செய்தவளும் நீதானடி - இன்று
புறக்கணித்தவளும் நீதானடி !

கதை பேசியவளும் நீதானடி - இன்று
கத்தி வீசியவளும் நீதானடி !

கனவில் வந்தவளும் நீதானடி - கடைசியில்
கனவாய் போனவளும் நீதானடி !

கன்னி உந்தன் கள்ளச்சிரிப்ப
காதலுன்னு நான் நினைச்சேன் ! எனக்குள்ளே
கண்டபடி நான் சிரிச்சேன் !

அனுதினம் உன்னோட நான் பேச எனக்குள்ளே
அடிக்கடி  ஒத்திகை நான் பார்த்தேன்!

கடிகார நொடி முள்ளாய் கடந்துக்கொண்டே இருந்தேன்
என் காதலை உன்னிடம் சொல்ல நகர்ந்து கொண்டே இருந்தேன்!

காதல் சொல்ல
ஆவலோடு நான்?
கைகள் கோர்த்து அவனோடு நீ !

உனக்காக வந்தேன் சிவருத்ரன் - ஆனால்
உன்னருகே வேறொருத்தன் !

 நான்
கண்ட காட்சி என் கண்ணுக்குள்ளே அனலாச்சி
என் காதலின் கடைசி மூச்சியும் நின்னாச்சி !

உன் காதல் அவனோடு
  - கடைசியில்
என் கையில் திருவோடு !

மங்கை உனக்காக கொண்டு வந்த மலரை
மறைத்துக் கொண்டேன்
என் மனதோடு !

எழுதி முடித்த என் டைரியில் எழுதாமல்விட்ட பக்கங்கள் நீ !
கிழிக்க மனமின்றி கிறுக்கிக் கொண்டே இருக்கிறேன்
ஒரு தலை காதலோடு கவிதைகளை !

மறக்காமல் வந்துவிடு
மறு ஜென்மத்தில் உன்னை தந்ததுவிடு !

August 29, 2024, 09:45:20 pm
Reply #6
Re: கவிதையும் கானமும்-046
« Reply #6 on: August 29, 2024, 09:45:20 pm »
அன்று..கனவுதேவதைக் கதைகளின் மீது நம்பிக்கையற்ற ஒருவனாய் நான்..

அக்கதையின் கருவிற்கு உயிர்க்கொடுக்க வந்தவளாய் நீ.. ஏன் வந்தாய்?

அவள்..பௌர்ணமியின் வெண்-வட்ட நிலவொளிப் பிரகாசத்தையே மங்கவைக்கக்கூடிய முகஜூவாலை..

பூமியின் காந்தயீர்ப்பு விசையை விஞ்சிய விழியீர்ப்பு விசை...

கப்பல் கரைசேர உதவுமாம் கலங்கரைவிளக்கம்..

நான் அவள் மனம்சேர விளக்கமாய்  ஜொலிக்கும் அவள் மூக்குத்தி..

சிகரத்தின் இடையே பசுமைப் பள்ளதாக்குகளாய் அவள் கன்னங்குழி.. அதில் அவ்வப்போது தற்கொலைசெய்து முக்தியடையும் என் பார்வைகள்..

பட்டைத்தீட்டிய கோஹினூர் வைரமாய் கடைவாயோரம் அச் சிங்கப்பல்..

 கோதுமை நிறமேனியைப் பொருந்திய "நெற்களஞ்சியத்தின்"என் கனவு தேவதையே...   

அன்று... கல்லூரியில் ஒற்றைக் காகித ரோஜாவின் பரிமாற்றத்தில் நம் நட்பு..

பரிணாமமடைந்து தொடர..,
வகுப்பில் புத்தகப் பரிமாற்றிப் படிப்பு..

மாலை அடுமனையில் இரு கோப்பை தேநீருடன் உன் அக்கறைப் பேச்சு சர்க்கரைத் தித்திப்பு..

உன் விடுதிவரை உன்னுடன் நான் கைகோராமல் மனம்கோர்த்து நடந்து செல்லும் நிமிடம் என்னுள்ளே பூரிப்பு..

ஸ்மார்ட்போன் இல்லாததால் ஹார்ட்போனாய் என் நோக்கியாவில் உன்னை நோக்கிய என் முகநூல் உரையாடலில் நேசிப்பு..

இவை இன்று நினைத்தாலும் என் உள் நெஞ்சில் பூக்கும் மத்தாப்பு..

அன்று.. அக்காகித ரோஜா., காதல் ரோஜாவாய் என்னுள் உயிர்த்து மலர., சொல்லவந்த காதல் சொல்லா ஆசையுடன் செல்லாக்காசாய் என்னுள் சிதரிய அத்தருணம்..

நாளை நாளை என்று தள்ளிப்போட்ட மனம்..

காதல் ரோஜாவின் தண்டை என் மன ஊன்றுகோளாக்கி., தைரியத்துடன் அக்கணம்..

அடுமனை நோக்கிய என் பயணம்..

நம் நாற்காலியில் நீ உன் தேநீர்க் கோப்பையோடு கண்ணில் காதலோடு எதிரே உன் கண்ணாலனோடு பார்த்த நொடி இன்பமரணம்..

 காதல் ரோஜா காகித ரோஜாவாகவே இருந்திருக்கலாம் என்று யோசித்த மனம்..

 ஏன் எனக்கு இந்த நிலை வரணும்..

ஹாஹாஹா.. இதுவே என்னை போன்று பல இதயம் முரளிகளின் சொல்லபடாத ஒரு தலைக்காதல்களின் வலி கலந்த சிறப்பு...

     - இதயம் 💔 முரளியாய் உங்கள்

                 ✍️ H❤️U❤️N❤️K ✍️
« Last Edit: September 03, 2024, 10:35:10 pm by handsome hunk »

September 07, 2024, 07:33:35 pm
Reply #7

Misty Sky

Re: கவிதையும் கானமும்-046
« Reply #7 on: September 07, 2024, 07:33:35 pm »
"எதிர்பார்ப்பது என் தவறா??
இல்லை, என் ஏக்கங்களை அறியாமல் இருப்பது அவள் தவறா??
"ஏற்றுக்கொள்ள முடியாமல் ஏங்கிக் கொண்டிருப்பது என் தவறா??
"இல்லை, எண்ணங்களை எடுத்துரைக்க தெரியாமல் இருப்பது அவள் தவறா??
"ஏக்கங்களை கட்டுப்படுத்தவா??
"இல்லை உணர்ச்சிகளை கொட்டித் தீர்க்கவா??
"சொல்லத் தெரியாத நிலையில் நானும்!!!
"சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் அவளும்!!!
"தினமும் இப்படித் தான் நகர்கிறது ரனம் மிகுந்த எனது நாட்கள்!!!

"புத்தம்புது ஓவியமாய்
பொன்னிற காவியமாய்
கண்ணில் தென்பட்டவள்
என்னில் தேவதையானவள்"

"முதன்முறை நான் உன்னைப் பார்த்த போது
எனக்குள் ஏதோ செய்தது"
"அது விண்ணில் என்னைப் பறக்கச் செய்தது"
"அது என்னையே என்னை மறக்கச் செய்தது"
"எல்லாமே எனக்குள் புதிதானது என்னுள் சுகமானது!!!
"எல்லாமே எனக்குள் புதிதானது என்னுள் சுகமானது!!!

"வார்த்தைகளைத் தொலைத்து போர் புரிந்தேன் உள்ளுக்குள்
மௌனங்களைக் கலைத்து உன்னிடம் பேச என் மனம் சில நொடிகள் தவித்தது"
"என் மனம் சில நொடிகள் தவித்தது"

"உலகத்தைப் புதிதாய் உருமாற்றியவள் நீயடி!!!
"உலகத்தைப் புதிதாய் உருமாற்றியவள் நீயடி!!!
"என் உலகமே நீயென உன்னுள் தொலைந்து மாறிப்போனேன் நானடி!!!
"என் உலகமே நீயென உன்னுள் தொலைந்து மாறிப்போனேன் நானடி!!!

"முதல்முறை உன் முகம் கண்ட உணர்வு வியந்தேன், ரசித்தேன், பிரமித்தேன் ரகசியமாய் உன்னை ரசித்தே சுவாசிக்கிறேன்!!!
"ரகசியமாய் உன்னை ரசித்தே சுவாசிக்கிறேன்!!!

"கொட்டும் மழையில் அவளுடன் கைகோர்த்து நடக்க ஆசை!!!
"முழு பவுர்ணமி நிலவில் கடற்கரையில் அவளுடன் தோள் சாய்ந்து கதை பேசி, மடி சாய்ந்து உறங்க ஆசை!!!

"பெண்ணே உன் புன்னகையே போதுமென்று தூரமாய் இருந்து ரசித்து என் உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது எந்தன் ஒருதலை காதல் இன்றும் உயிருடன்!!!

"என் காதலை அவள் எப்படி மறுத்து வாழ்கின்றாளோ அதைவிட அதிகமாய் அவளின் நினைவுகளை சேர்த்து சேமித்து திரிகின்றது எந்தன் ஒருதலை காதல் இன்றும் உணர்வுடன்!!!

"தண்ணீரே இல்லாத பாலைவனம் போல என்னுடன் அவள் இல்லாது இருந்தாலும் என் இதயம் அவளின் நினைவுகளை சுமந்துகொண்டு தான் இருக்கிறது எந்தன் ஒருதலை காதல் இன்றும் அழகுடன்!!!

"நாட்கள் அதிவேகத்தில் நகர்கின்றது ஆனால் நானோ இன்னும் அப்படியே நிற்கின்றேன் அவள் என்னை விட்டு சென்ற இடத்தில் என்றும் அவளின் நினைவுகளோடு!!!

"பெண்ணே உன் நினைவுகளை
என் கண்ணீர் துளி விட்டு அழிக்க முயற்ச்சிக்கிறேன்.... ஆனால் என் கண்ணீர் துளியிலும் கூட உன் நினைவுகள் மட்டுமே மீண்டும் மீண்டும் வந்து செல்கிறதே தவிர, பெண்ணே உன் நினைவுகளை மட்டும் என் மனதில் இருந்து என்னால் அழிக்க முடியவில்லை!!!

"அவள் எனக்கு இல்லை என்று உறுதியாக தெரிந்த பிறகும் இன்னும் உயிரோடு வாழ்கிறேன்.... அவளோடு கழித்த அந்த மகிழ்ச்சியான நாட்களை என் நெஞ்சில் சுமந்து கொண்டே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் எந்தன் சுகமான அந்த ஒருதலை காதலோடு!!!

"பெண்ணே இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சரி...
"எப்போதும் என் காதல் தொடருமடி"
"எப்போதும் என் காதல் தொடருமடி"
"எப்போதும் நீ எனக்கு அழகு தேவதையடி"
"எப்போதும் நீ எனக்கு அழகு தேவதையடி"
"பெண்ணே உன்னை நேசிக்குமளவிற்கு வேறு யாரையும் நான் நேசித்ததுமில்லை, யோசித்ததுமில்லை"

"அப்போது இருந்த என் ஒருதலைக் காதல் இன்று இருத்தலைக் காதலாக மாறிப்போனது வியந்தேன், பிரமித்தேன், மெய்சிலிர்த்தேன்!!!
"நான் புதிதாக பிறந்ததைப் போல உணர்கிறேன்"
"நான் புதிதாக பிறந்ததைப் போல உணர்கிறேன்"
"காதல் மிகவும் மென்மையானது"
"காதல் மிகவும் மென்மையானது"
"சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!

இப்படிக்கு
உன் அன்பிற்குரியவன் MISTY SKY 💙💙

« Last Edit: September 08, 2024, 11:13:01 am by Misty Sky »