Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-033  (Read 4912 times)

November 27, 2023, 06:44:57 pm
Read 4912 times

Administrator

கவிதையும் கானமும்-033
« on: November 27, 2023, 06:44:57 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-033


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
[/color
« Last Edit: December 11, 2023, 04:41:07 pm by Administrator »

November 30, 2023, 10:46:26 am
Reply #1

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-033
« Reply #1 on: November 30, 2023, 10:46:26 am »
கற்பணை குடும்பம்


"அன்னையிடம் நீ  அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் "

கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது

அன்னையின் பாசம் தந்தையின் நேசம்

பாசம் இன்று கலப்படமாகிப்போனது

பணம் இருக்கும் வரைதான் இருக்கும் அந்த கலப்படமான பாசம்

அவர்களுக்கு உபயோகம் இருக்கும் வரைதான் இருக்கும் அந்த கலப்படமான விசுவாசம்
 
இந்த விசுவாசம் பாசம் மறந்துவிடும் காலப்போக்கில்

நம்மிடம் ஒன்றும் இல்லையென்றால் புதைத்திடுவார் அவர்களின் காலுக்கு அடியில்

ஆனால் துளிகூட களங்கமில்லாத எதையும் எதிர் பாராத அன்பு

தாயின் அரவணைப்பில் தந்தையின் அக்கரையில் தான் உள்ளது

வெண்சங்கு சுட்டாலும் வெண்மைதரும் அதுபோல

அவர்களை நாம் உதாசீன படுத்தினாலும் ஒரு துளிகூட மாறாத அன்பு பெற்றோரின் அன்பு

அந்த அன்பு பசுவின் மடியில் இருந்து வரும் பாலை விட தூய்மையானது

நீல வானத்தின் எல்லையை விட பெரியது

எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் அதை  ஒரு நொடியில் போக்கிவிடும்

அன்னை மடியும் தந்தையின் அறிவுரையும்

தலை சாய்க்க மடியும் இல்லை அறியுரை கேட்க என்னக்கு பாக்கியமும் இல்லை

உங்கள் கை கைகோர்த்து நடக்கத்தான் ஆசை எனக்கு  அம்மா அப்பா

ஆனால் கடவுளுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை உங்களை அழைத்து சென்றுவிட்டான்

உங்களின் அன்பையும் அறியுரையும் கேட்க ....

உங்கள் இருவரோடும் கைகோர்த்து போக என்னக்கு ஆசை அம்மா என் அப்பா

அதனால் கற்பனையாக வரைத்தேன் சுவரில் ............. கற்பனையோடு வாழ்கிறேன் உங்களோடு

அப்பொழுதும் என்னையே பார்க்கிறாய் அம்மா ஐ லவ் யு மா



ப்ளஸ் உங்க அம்மா அப்பாவை கஷ்டப்படுத்தாதீங்க இல்லாத போதுதான் அவங்க கஷ்டம் தெரியும் ...




நீலவானம்
« Last Edit: November 30, 2023, 10:48:01 am by Passing Clouds »

November 30, 2023, 01:58:38 pm
Reply #2

Limat

Re: கவிதையும் கானமும்-033
« Reply #2 on: November 30, 2023, 01:58:38 pm »
தனிமையில் தவிக்கிறேன்.!

நான் பிறக்க பத்து மாதங்கள் உங்களை தவிக்க வைத்ததாலோ இன்று நான் உங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கி தனிமையில் தவிக்கிறேன்..!
என்னை செல்லமாக தொட்டு தூக்கி உன் நெஞ்சோடு அனைத்து என் துயர் துடைக்க  தாயின் கைவிரல்கள் இன்றி தனிமையில் தவிக்கிறேன்..!
நான் துவலும் போதெல்லாம் என் தலை கோத என் தோலை தட்டி கொடுக்க தந்தையின் விரல்கள் இன்றி தனிமையில் தவிக்கிறேன்..!
என் பசியரிந்து பாலூட்ட தாயின் மார்பும்    நான் துயில் கொள்ள தந்தையின் மார்பும் இன்றி தனிமையில் தவிக்கிறேன்..!
விக்கல் வருகையில் மற்றவர்கள் யாரோ நினைக்கிறார்கள் என்று கூறுகையில் என் வெறுமையை எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..!
என் பிறந்தநாளை  கொண்டாடவில்லை என்றாலும் என் பிறந்தநாள் எதுவென்றே அறிவாமல் தனிமையில் தவிக்கிறேன்..!
உங்கள் வரவை நோக்கி தனிமையில் தவிக்கும் எனக்கு நித்திரையில் வரும் சொப்பனத்திலாவது வருவீர்களா என்று எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..!
என்னை விட்டு தொலை தூரம் சென்ற தாய் தந்தையே உங்களை எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..!
என் மனதின் வேதனைகளும் குறையவில்லை என் கண்ணீரும் நிற்கவில்லை என் மன கவலை போக்க நீங்கள் இல்லாமல் தனிமையில் தவிக்கிறேன்..!
செப்பாய் இருக்க வேண்டிய என் தேடல்கள் மட்டும் தங்கமாய் ஜொலிப்பதை எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..!
போகுமிடம் தங்குமிடம் அனைத்திலும் தனிமையிலே தவிக்கிறேன்..!

என் தனிமையை மறைக்க வரைந்தேன் ஒரு ஓவியம் அதில் என் தாய் என்னை பார்த்து புன்னகைப்பதில் உணர்ந்தேன் அவள் அன்பின் காவியம்..!


என்றும் உங்கள் நட்💐க்களுடன்

November 30, 2023, 07:35:45 pm
Reply #3
Re: கவிதையும் கானமும்-033
« Reply #3 on: November 30, 2023, 07:35:45 pm »
தாயை பிரிந்த கன்றானேன் !
தவித்து தனியாய் நின்றேனே !
என் தலையைக் கோதும் என் தாயின் விரல்கள் எங்கே ?
என் தனிமையை துரத்தும்
என் தந்தை விரல்கள் எங்கே ?

தரணி ஆளப் பிறந்த மகன் நான் தானென்றே !
தவறாது என்னை தலையில் வைத்தாடும்
தந்தையே !
தனியாய் நின்று தவிக்கும் உங்கள்
தலைச்சன் பிள்ளை
நான் தானே !

தறிகெட்டு ஓடியாடும் எனக்காய்
கறி கூட்டு பல சமைத்து
நறி வருது கத சொல்லி
நாலு வாய் சோறு ஊட்டும்
நல்ல தாய் நீதானே !

தேர் பாக்க போகையில
தேம்பி நான் அழுகையில
தேயாத நிலவு நான்தானுன்னு
என்னைத் தேற்றும் தெய்வங்களே !

உங்கள் முன்பிருக்கும் என்னைக்
கண்ணிருந்தும் நீங்கள் காணலையே !
உங்களிடம் வந்து வாய் பேசும் என்னை
நீங்கள் வாய் திறந்து
கூப்பிடலையே !
ஓயாமல் அழுகும் என்னை கண் சாயமல்
காத்து நின்ற காவல் தெய்வங்களே !
அடுப்பு கரியில் நான் வரைந்த
அழகு காவியம் இதுவென்று தெரிந்தும்
உங்கள் கரம் பற்றி
ஊமையாய் நிக்கிறேனே !
இங்கே ஊமையாய் நிக்கிறேனே !

December 01, 2023, 06:59:40 pm
Reply #4

Eagle 13

Re: கவிதையும் கானமும்-033
« Reply #4 on: December 01, 2023, 06:59:40 pm »
இது ஓவியமா இல்லை
மொழியின்றி பேசும் காவியமா?
ஒன்றும் புரியவில்லை?
சுவற்றில் கிறுக்கிய கிறுக்கல்களை
உயிரின் பந்தமாய் நினைத்து
 வியக்கிறாய்!
அந்த நிலையை கடந்து
செல்ல
தெரியமல் தவிக்கிறாய்!
ஏனோ ஒரு சிலருக்கு மட்டும் இப்படி
அமைகிறது  வாழ்க்கை!
அதனால் அவர்கள் மனம் கடந்த
செல்ல முடியாமல் தவிக்கிறது உலகை!

சுவற்றில் அதை தீட்டியது ஒரு சிறுவன்
அல்லது சிறுமியாக கூட இருக்கலாம்!
ஆனால்,
நீயோ?
அதை மனதில் வேதனை தூண்டும்
கிருமியாக நினைத்து தவிக்கிறாய்!
ஒரு ஓவியமே!
ஒரு சிறுவனுக்கு  ஏக்கம், தவிப்பு,
சோகம் மற்றும் தேடல் தருமானால்,
இந்த உலகம் அவனுக்கு என்ன என்ன
தருமோ!
இனியாவது,
நாம் அனைவரும் ஒற்றுமையாய்
இணைந்து வாழ்வோம்!
உலகில் யாரும் தனித்த மனிதன் இல்லை
என்று
குரல் கொடுப்போம்!,
மனிதநேயத்தோடு!.

December 03, 2023, 12:24:39 pm
Reply #5

SweetGirl

Re: கவிதையும் கானமும்-033
« Reply #5 on: December 03, 2023, 12:24:39 pm »
  சில நேரம் கற்பனை கூட காவியமாகும் .....                                       
இந்த ஓவியமே, காவியமும் பாடும்!         
இது யார் தீட்டிய ஓவியமோ?   
உன் மனதில் என்னும் எண்ணங்களை  பூட்டிடுமோ?

 உன் மனதை உலகிற்கே காட்டிடுமோ  காட்டிடுமோ ? ..
 அதை காணும் நபர்களின்  உள்ளங்களை வாட்டிடுமோ?                 

அந்த ஓவியதுடன் நீ செய்வது விந்தையோ ?....                                 
உனக்கு தாய் தந்தை இல்லையோ?
விடியும் பொழுதெல்லாம் உனக்கு பசியின்  தொல்லையோ?
நீ காண்கின்ற பொழுதெல்லாம் வறுமையின் எல்லையோ?
உன் வருத்தத்திற்கு எல்லாம் முடிவே இல்லையோ?

தாய் தந்தை இழந்த பிஞ்சு குழந்தை
உன்  முதல் தனிமை.

நீ யார் என்பதை உணரவும்
உலகத்துக்கு உணர்த்தவும்
உதவியாய் இருக்கும் இந்த முதல் தனிமை.

தாய் தந்தை இழப்பால் தளராதே
இவ்வுலகை வெல்லும் வழியை தேடு.

உன் ஒவ்வொரு நற்செயலிலும்
உன் பெற்றோர் உடன் இருப்பதாய் எண்ணிக்கொள்
அந்த மனவலிமையால் இந்த உலகினை வெல்

நீ வெற்றிகொள்ள இந்த உலகமே இருக்கிறது
 என்ற எண்ணம் கொள்
தலை மகனே கலங்காதே
தனிமை கண்டு வருந்தாதே!!
« Last Edit: December 07, 2023, 03:41:23 pm by SweetGirl »

December 04, 2023, 11:09:25 am
Reply #6

kathija

Re: கவிதையும் கானமும்-033
« Reply #6 on: December 04, 2023, 11:09:25 am »
Hi RiJiA sis❤️❤️ இந்த image kuduthathu ku rompa thanks😍😍rompa blessing ah feel panren intha கவிதை eluthunathuku. நீங்க இந்த pgm super ah kondu poringa athuku congrats💐💐

பிரிவின் தவிப்பு:

தாயின் அன்பு பேச்சில்
தந்தையின் அன்பு கண்டிப்பில்

அன்பாய் அவள் அருகில் வந்தாள்
உணராமல் ஓடினேன் அன்பை தேடி

தந்தையின் உழைப்பால் நான்
நாளும் ராணியாய் உலாவினேன்

அன்பின் இனிமையும் புரியவில்லை
பணத்தின் அருமையும் தெரியவில்லை

அருகில் இருக்கும் போது உணரா
காதலை உணருகிறேன் உங்கள் பிரிவில்

நான் ஒரு ஓரம்
நீங்கள் ஒரு ஓரம்
உணரவைத்தது அன்னை தந்தையின் காதலை

நினைத்த உணவு அனைத்தும் என் முன்னே இருக்க அதை ஊட்டும்
கை என்னோடு இல்லை 😒😒

பணத்தின் ஒரு ஒரு அடியும்
என்னை விழ செய்கிறது

அதை தாங்கிய என் தந்தையின்
கை இல்லமால்

யாரிடமும் காணவில்லை உங்கள் சுய நலமற்ற அன்பை 😒😒

முள் குத்தினால் அழுதேன்
என் தாய் என்னை அணைபாள் என்று 😞😞

இன்று நானே போனால் கூட
கேட்க யாரும் இல்லை என் தாயே

நேரத்தில் தூக்கம் இல்லை
பசித்தும் சாப்பிட மனமில்லை
என்னை தாங்கிய தோளும் இல்லை 😒

காரணம் என் உயிர்கள் அருகில் இல்லை 😔😔😔😔

நீங்கள் கொடுக்கும் போது எடுக்கவில்லை
எடுக்கும் நேரம் நீங்கள் என் அரு‌கி‌ல் இல்லை

உணர்ந்தேன் பிரிவின் ஈரம் 😒😒😒

என் தெய்வங்களின் மடியில் உறங்கும் நாள் திரும்பாதோ😒😒😒

என்று ஏங்குகிறது என் மனம்😞😞

என் இரு தெய்வங்களுக்கும் இந்த கவிதையை அர்ப்பணிக்கிறேன் ♥️♥️♥️ lv u அம்மா அப்பா ☺️☺️♥️ lv u அம்மா அப்பா ☺️☺️

December 09, 2023, 04:27:49 pm
Reply #7

SSAA

Re: கவிதையும் கானமும்-033
« Reply #7 on: December 09, 2023, 04:27:49 pm »
தனிமையின் ஏக்கம்:

என் குரல் கேட்க்கும் முன்னே
என் முகம் பார்க்கும் முன்னே


என்னை நேசித்த தாய் தந்தையே
காலம் கடந்தாலும்
என் மேல் கொண்ட
பாசத்தை உணர்கிறேன்
இன்று தனிமையில்

சிறு வயதில் உன் கை பிடித்து
விளையாடிய நாட்கள்

இல்லை இப்போது
என் அருகில்

பாசம் அன்று வெள்ளிப்பட்டது
முத்தம்மாய்

இன்று தேடினேன் அதை
தனிமையாய்

வார்த்தை ஊமையாகி
கண்ணீர் மொழியானது

பல கடல்கள் தாண்டி இருக்கிறேன்
தனிமையில்

ஏங்குகிறேன்  உன் கை பிடித்து நடக்க
தாய் தந்தை கண்ணீரில் கண்டேன்
பிரிவின் வலியை

சேர்த்து இருக்கும் போது உணரவில்லை
உங்கள் பாசம்

இப்பொழுது வேண்டும் உங்கள் நேசம்


என்றும் உங்கள் நினைவில்
உங்கள் shaa